Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

காங்கிரசின் தமிழக தலைவராக ஞானதேசிகன் நியமனம். தங்கபாலுவின் பதவி பறிப்பு

Featured Replies

  • கருத்துக்கள உறவுகள்

01.jpg 20.11.11 கவர் ஸ்டோரி

ட்டசபைத் தேர்தலில் காங்கிரஸ் படுதோல்வி அடைந்த பிறகு தமிழக காங்கிரஸ் தலைவர் தங்கபாலு பதவியை ராஜினாமா செய்தார். இருந்தாலும் அவரை விடுவிக்காமல் கட்சித் தலைமை தாமதித்து வந்தது. தங்கபாலுவை வெளியேற்றியே ஆக வேண்டும் என்று இளங்கோவன் தீவிரம் காட்டி வந்தார்.

உள்ளாட்சித் தேர்தலிலும் காங்கிரஸ் கட்சி படுதோல்வி அடைந்ததால், தங்கபாலுவுக்கு எதிராக அனைத்து கோஷ்டிகளும் போர்க்கொடி உயர்த்தின. இந்நிலையில், புதிய தலைவரை நியமிப்பது குறித்து காங்கிரஸ் கட்சியின் டெல்லித் தலைமை தீவிரமாக ஆலோசிக்கத் தொடங்கியது.

புதிய தலைவர் பதவிக்கு பலரது பெயர்களும் அடிபட்டது. இந்நிலையில், யாரும் எதிர்பார்க்காத நிலையில், ஜி.கே.வாசன் கோஷ்டியைச் சேர்ந்த ஞானதேசிகனை காங்கிரஸ் கட்சியின் புதிய தலைவராக சோனியா நியமித்தார். இவர், அ.தி.மு.க. அனுதாபி என்பதால், வரும் நாடாளுமன்றத் தேர்தலில் அ.தி.மு.க.வுடன்தான் கூட்டணி அமையும் என்று காங்கிரஸ் தொண்டர்கள் உற்சாகமாக உள்ளனர்.

பல சவால்களைச் சந்திக்க இருக்கும் புதிய தலைவரான ஞானதேசிகனை நேரில் சந்தித்தோம்.

தமிழக காங்கிரஸ் கட்சியின் தலைவராக பொறுப்பேற்றுள்ள நீங்கள் கோஷ்டிப் பூசலை எப்படி சமாளிக்கப் போகிறீர்கள்?

‘‘பிற கட்சிகளை விட காங்கிரஸ் கட்சியில் ஜனநாயகமும், சுதந்திரமும் அதிகம். அதனால், சிறிய பிரச்னை என்றால்கூட அது வெளியே தெரிந்து விடுகின்றது. எல்லோரையும் ஒருங்கிணைத்துப் பணியாற்ற முடியும் என்ற நம்பிக்கை எனக்கு உள்ளது.’’

‘சோ.பா. தலைவராகவும், இளங்கோவன் செயல் தலைவராகவும் இருந்த காலகட்டத்தில்தான் தமிழக காங்கிரஸில் நிர்வாகிகள் நியமிக்கப்பட்டனர். அதன்பிறகு புதிய நிர்வாகிகள் நியமிக்கப்படவில்லையே?

google_protectAndRun("render_ads.js::google_render_ad", google_handleError, google_render_ad);

‘‘கண்டிப்பாகபுதிய நிர்வாகிகள் நியமிக்கப்படுவார்கள். நான் தலைவராகப் பொறுப்பேற்ற பின்பு, சோனியாகாந்தி, ராகுல்காந்தியைச் சந்தித்து ஆலோசித்து புதிய நிர்வாகிகள் நியமிப்பதுதான் எனது முதல் பணியாக இருக்கும்.’’

தமிழகத்தில் காங்கிரஸ் கட்சிக்கு 12 சதவிகித வாக்கு வங்கி இருப்பதாகச் சொல்லப்பட்டது. ஆனால், உள்ளாட்சித் தேர்தலில் 5 சதவிகிதமாகக் குறைந்துவிட்டதே?

‘‘கடந்த 1977 மற்றும் 1989-ம் ஆண்டு நடந்த தேர்தல்களில் காங்கிரஸ் கட்சி தனித்துப் போட்டியிட்டபோது, வாக்கு வங்கி என சராசரியாக 20 சதவிகிதம் இருந்தது. உள்ளட்சித் தேர்தல் முடிவுகளின் அடிப்படையில் கட்சியின் வாக்கு வங்கியைக் கணக்கிட முடியாது.

சரியாக திட்டமிடப்படாததாலும், வேட்பாளர் தேர்வில் குளறுபடிகள் நடந்ததாலும், பல இடங்களில் அறிவிக்கப்பட்ட வேட்பாளரை எதிர்த்து காங்கிரஸ் தொண்டர்கள் சுயேச்சையாக போட்டியிட்டு வெற்றி பெற்றுள்ளனர். இதெல்லாம் கணக்கில் வராது. எனவே, தமிழகத்தில் காங்கிரஸ் கட்சிதான் 3-வது பெரிய கட்சி. இதனை வரக்கூடிய நாடாளுமன்றத் தேர்தலில் நிரூபிப்போம்.’’

கட்சியை வலுப்படுத்த புதிய செயல்திட்டம் ஏதும் வைத்துள்ளீர்களா?

‘‘என்னிடத்தில் நிறைய திட்டங்கள் இருக்கிறது.. இருப்பினும், கட்சியின் வளர்ச்சிக்காக என்ன செய்யலாம் என அனைத்து தலைவர்களையும் அழைத்து ஆலோசித்து முடிவு எடுத்து செயல்படுத்தப்படும்.’’

ஸ்பெக்ட்ரம் வழக்கில் தி.மு.க.வின் குற்றச்சாட்டு காங்கிரஸ் கட்சிப் பக்கம் திரும்பியுள்ளதால், காங்கிரஸைப் பாதிக்காதா?

‘‘காங்கிரஸ் கட்சிக்கும் ஸ்பெக்ட்ரம் ஊழலுக்கும் எந்தவித சம்பந்தமும் இல்லை. அலைக்கற்றை ஒதுக்கீட்டை ஏல முறையில் விட வேண்டும் என்றுதான் மத்திய அமைச்சர் சிதம்பரமும் அவரது செயலாளர் சுப்பாராவும் கடிதம் எழுதியுள்ளனர். அதைத்தான் பிரதமர் மன்மோகன் சிங்கும் கூறியுள்ளார். எனவே, தி.மு.க.வினரின் பொய்யான கு ற்றச்சாட்டுகள் காங்கிரஸ் கட்சியைப் பாதிக்காது. ஸ்பெக்ட்ரம் ஊழல் முழுக்க முழுக்க தி.மு.க.வையே சாரும்.’’

வரும் நாடாளுமன்றத் தேர்தலில் அ.தி.மு.க.வுடன் கூட்டணி அமைக்க முன்னோட்டமாகத் தான் உங்களை தலைவராக நியமித்து இருப்பதாகக் கூறப்படுகின்றதே?

‘‘நான் யாரையும் ஆதரிப்பதும் இல்லை. எனக்கு எதிரியும் இல்லை.’’

தலைவராக வருபவர்கள் ஏதாவது ஒரு கோஷ்டியைச் சேர்ந்தவராக இருப்பார்கள்? அல்லது தலைவரான பிறகு தனியாக ஒரு கோஷ்டியை உருவாக்கிக் கொள்வார்கள். நீங்கள் எப்படி?

‘‘நான் 1967-ல் காமராஜரால் காங்கிரஸ் கட்சியில் இணைந்தேன். மூப்பனார் எனக்கு அரசியல் முகவரி கொடுத்தார். ஜி.கே.வாசன் ஆசியும், ஆதரவும் எனக்கு உள்ளது. மற்றபடி, எனக்கென்று எந்த கோஷ்டியும் இல்லை. உருவாக்கவும் மாட்டேன்.’’

காங்கிரஸ் ஈழத் தமிழர்களுக்கு எதிரான கட்சி என்று ஏற்பட்டுள்ள இமேஜை எப்படி சமாளிக்கப் போகிறீர்கள்?

‘‘இந்திராகாந்தி காலத்தில் இருந்து ஈழத் தமிழர்களுக்கு காங்கிரஸ் கட்சி உதவியளித்து வருகின்றது. மத்திய அரசு செய்து வரும் உதவியை மறைத்துவிட்டு, தவறான கு ற்றச்சாட்டுகளை சிலர் பரப்பி வருகின்றனர். அவர்கள் எங்கிருந்தோ வரும் பணத்திற்காக, ஈழத் தமிழர்களுக்காக குரல் கொடுப்பதாக நடிப்பது அங்குள்ள மக்களுக்கு எவ்வித பலனையும் ஏற்படுத்தாது’’ என்று முடித்துக் கொண்டார் ஞானதேசிகன்.

கோஷ்டிகளை ஒருங்கிணைப்பார்!

தமிழக காங்கிரஸ் தலைவராகத் தேர்ந்தெடுக்கப்பட்டுள்ள ஞானதேசிகன் விருதுநகர் மாவட்டம் ஸ்ரீவில்லிபுத்தூரில் 1949-ம் ஆண்டு ஷனவரி 20-ம் தேதி பிறந்தார். பூர்வீகம் ஸ்ரீவில்லிபுத்தூராக இருந்தாலும் திண்டுக்கல் மாவட்டம் வத்தலக்குண்டில் வசித்தார். இவரது தந்தை பெயர் சிவகுருநாதன், தாயார் மீனாட்சிஅம்மாள். மனைவி திலகவதியும், 2 மகன்களும் உள்ளனர். இவரது குடும்பம் சட்டத்துறையைச் சேர்ந்தது. தந்தை சிவகுருநாதன் மாவட்ட நீதிபதியாகவும், பெரியப்பா சோமசுந்தரம் சென்னை ஐகோர்ட் நீதிபதியாகவும் பணியாற்றியுள்ளனர்.

சென்னை லயோலா கல்லு£ரியில் பட்டப் படிப்பையும், அம்பேத்கர் அரசு சட்டக்கல்லூரியில் சட்டப்படிப்பையும் முடித்தார். சென்னை உயர்நீதிமன்றத்தில் வழக்கறிஞராகப் பணியாற்றி வருகிறார்.

காமராஷர் தலைமையில் கட்சியில் சேர்ந்தாலும், ஜி.கே.மூப்பனாரால் அரசியல் முகவரி பெற்றார். சட்டப்பிரிவு மாநிலத் தலைவர், மாநில செய்தித் தொடர்பாளர் உள்ளிட்ட பொறுப்புகளை வகித்துள்ளார். 1996-ல் காங்கிரஸ் கட்சியில் இருந்து ஜி.கே. மூப்பனார் விலகி த.மா.கா. ஆரம்பித்த போது, அவருடன் இருந்தார். பின்பு ஜி.கே.வாசன் தலைமையில் த.மா.கா. காங்கிரஸில் இணைந்தபோதும் சரி அன்றைய நாளில் இருந்து இன்று வரையும் வாசன் ஆதரவாளராகவே இருந்து வருகிறார். 2001 முதல் ராஜ்யசபா எம்.பி.யாக இருக்கிறார்.

நாடாளுமன்றத்தில், பாதுகாப்பு, நிதி, உள்துறை, தொழிலாளர் நலன், ரசாயனம் மற்றும் உரம் ஆகிய துறைகளுக்கான நிலைக்குழு உறுப்பினராக செயல்பட்டுள்ளார்.

2001-ல் ராஜ்ய சபா எம்.பி. பதவிக்கு யார் வேட்பாளர் என்பதில் ஷெயந்தி நடராஷனுக்கும், ஞானதேசிகனுக்கும் போட்டி நிலவிய போது, யாரும் எதிர்பார்க்காத வகையில் ஞானதேசிகனை வேட்பாளராக அறிவித்தார் மூப்பனார்.

கர்நாடக மாநில காங்கிரஸ் தேர்தல் பொறுப்பாளராகப் பணியாற்றியபோது, அங்குள்ள அனைத்து கோஷ்டிகளையும் அரவணைத்து பதவிகளைப் பகிர்ந்து அளித்து கட்சித் தேர்தலையும் வெற்றிகரமாக நடத்தி முடித்துள்ளார். எனவே, தமிழகத்தில் உள்ள கோஷ்டிகளையும் ஒருங்கிணைத்து வழிநடத்துவார் என்ற நம்பிக்கையில் இவருக்கு தலைவர் பதவி வழங்கப்பட்டுள்ளது.

படங்கள்: ஞானமணி

இரா.முருகேசன்

- -குமுதம் ரிப்போட்டர்

புதிய தலைவர் பதவிக்கு பலரது பெயர்களும் அடிபட்டது. இந்நிலையில், யாரும் எதிர்பார்க்காத நிலையில், ஜி.கே.வாசன் கோஷ்டியைச் சேர்ந்த ஞானதேசிகனை காங்கிரஸ் கட்சியின் புதிய தலைவராக சோனியா நியமித்தார். இவர், அ.தி.மு.க. அனுதாபி என்பதால், வரும் நாடாளுமன்றத் தேர்தலில் அ.தி.மு.க.வுடன்தான் கூட்டணி அமையும் என்று காங்கிரஸ் தொண்டர்கள் உற்சாகமாக உள்ளனர்.

தமிழக உறவுகள் இந்த கட்சியை ஒரு காலத்திலும் தலையெடுக்க விடக்கூடாது.

  • கருத்துக்கள உறவுகள்

தங்கபாலுவை விட ஞானதேசிகன் ஈழத்தமிழர் மேல் அதிக காழ்ப்புணர்ச்சி கொண்டவர்.

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

தமிழ்சிறி - ஞானதேசிகனா அல்லது ஞானசேகரனா இருவரும் வேறு ஆக்கள் என நினைக்கிறேன்.

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

ஒரு தகர டப்பாவிடம் இருந்து இன்னொரு கறள் பிடித்த டப்பாவிடம் பதவி கொடுக்கப்பட்டுள்ளது.

இந்த தேர்தலுடன் காங்கிரசுக்கு இன்னும் தமிழ் நாட்டில் சரிவை ஏற்படுத்த வேண்டும்.

தமிழின படுகொலையாளர்களான காங்கிரஸ் கும்பலில் இருக்கும் தமிழர்கள் அனைவருமே மானம், ரோஷம், சொரணையற்ற ஜென்மங்களே!

  • கருத்துக்கள உறவுகள்

தமிழ்சிறி - ஞானதேசிகனா அல்லது ஞானசேகரனா இருவரும் வேறு ஆக்கள் என நினைக்கிறேன்.

கந்தப்பு, ஞானசேகரன் என்பதே சரி.

பெயர்க்குளப்பம் ஏற்பட்டு விட்டது.

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.