Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

சனல் 4 பிரச்சாரத்தை அமுக்குவது -சர்வேதேச அழுத்தங்களை குறைப்பது புலம்பெயர் தமிழர்களை மகிழ்விப்பது

Featured Replies

அடுத்த சில தினங்களில் வெளியிடப்பட உள்ள கற்றுக்கொண்ட பாடங்கள் மற்றும் நல்லிணக்க ஆணைக்கழுவின் அறிக்கையில், பிரித்தானியாவின் செனல் 4 தொலைக்காட்சி ஒளிப்பரப்பிய இலங்கையின் கொலைக்களம் விவரணப்படத்தில் காணப்படும் இலங்கை இராணுவத்தினரை கைதுசெய்து, சட்டத்திற்கு முன் நிறுத்துமாறு பரிந்துரை ஒன்று அடங்கியுள்ளதாக நம்பதகுந்த தரப்புத் தகவல்கள் தெரிவிக்கின்றன.

அத்துடன் உலக தமிழர் பேரவை 2010 ஆம் ஆண்டு டிசம்பர் மாதம் சர்வதேச ஊடகங்களுக்கு வழங்கிய விடுதலைப்புலிகள் அமைப்பின் தளபதிகளில் ஒருவரான கேர்ணல் ரமேஷிடம் விசாரணை நடத்தும் விடியோ படத்தில் உள்ள இராணுவத்தினரை அடையாளம் கண்டு, அவர்களையும் கைதுசெய்து, சட்டத்திற்கு முன் நிறுத்துமாறும் ஆணைக்குழு பரிந்துரை செய்ய உள்ளது.

பாதுகாப்பு செயலாளர் கோத்தபாய ராஜபக்ஷ மற்றும் ஜனாதிபதி மகிந்த ராஜபக்ஷ ஆகியோரை சர்வதேச சட்டத்திற்கு முன், பிரிவாதிகளாக குறிப்பிட்டு சட்ட நடவடிக்கை எடுப்பதை தடுப்பதற்காக நல்லிணக்க ஆணைக்குழு இவ்வாறு மேஜர் தரம் முதல் சுமார் 100 இராணுவத்தினரை கைதுசெய்வதற்கான பரிந்துரைகளை செய்ய உள்ளதாக கூறப்படுகிறது. 2009 ஆம் ஆண்டு மே மாதம் இலங்கையின் சிவில் யுத்தத்தின் இறுதிக்கட்டத்தில், நடத்த மனித படுகொலை சம்பந்தமான விடயத்தில், தனிப்பட்ட ரீதியில் பொறுப்பு கூறுவதில் இருந்து தப்பிப்பதற்கான வழிமுறையாக நல்லிணக்க ஆணைக்குழு இந்த பரிந்துரைகளை செய்ய உள்ள தெரியவந்துள்ளது.

இலங்கையின் நல்லிணக்க ஆணைக்குழுவின் முழு சர்வதேச சமூகமும் எதிர்பார்த்து, அது குறித்து கூடிய கவனம் செலுத்தி வரும் நிலையில், அந்த அறிக்கை அரசாங்கத்திற்கு சார்பான தளர்வான ஒன்றாக இருக்குமாயின் இலங்கை ஜனாதிபதி, பாதுகாப்புச் செயலாளர் உயர் இராணுவ அதிகாரிகள், அரச உயர் அதிகாரிகள் வெளிநாடுகளுக்கு செல்ல தடைவிதிக்கப்படும் என்ற சந்தேகம் காரணமாக, முற்போற்க்கான நடவடிக்கை எனக் கருதி, தனது இறுதி அறிக்கையில் இவ்வாறான பரிந்துரைகளை செய்ய உள்ளது.

ஆணைக்குழுவின் அறிக்கையின் பரிந்துரைகளை அமுல்படுத்தும் வகையில், அதற்கு தேவையான திட்டங்களை வகுப்பதற்காக பாதுகாப்புஅமைச்சின் புலனாய்வு ஆலோசகர் கபில ஹெந்தாவித்தாரனவின் கண்காணிப்பின் கீழ் விசேட குழுவொன்றை நியமித்து, சம்பந்தப்பட்ட இராணுவத்தினரை கைதுசெய்வதற்காக நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.

இவ்வாறு கைதுசெய்யப்படும் இராணுவத்தினர் மீது மனித உரிமைகளை மீறியமை தொடர்பில் பொறுப்புக் கூறவேண்டும் குற்றம்சுமத்தப்பட உள்ளதுடன், அவர்களுக்கு எதிராக இலங்கை சட்டத்தின் கீழ் வழக்கு தொடரப்பட உள்ளது. இந்த நடவடிக்கைகள் மூலம் செனல் 4 தொலைக்காட்சி இலங்கைக்கு எதிராக முன்னெடுத்து வரும் பிரசாரங்களை ஒரளவுக்கேனும் கட்டுப்படுத்தலாம் என அரசாங்கம் எதிர்பார்த்துள்ளது.

அதேவேளை காணாமல் போன நபர்கள் தொடர்பாக முறைப்பாடுகளை செய்தவர்களுக்கு இழப்பீடு வழங்குதல், அல்லது காணாமல் போன நபருக்காக இலவசமாக வீடொன்றை வழங்குவது தொடர்பிலும் ஆணைக்குழு பரிந்துரைகளை செய்யவுள்ளதுடன், காணாமல் போனவர்கள் தொடர்பாக தொடர்ந்தும் விசாரணை நடத்த வேண்டும் எனவும் பரிந்துரை செய்யவுள்ளது.

பயங்கரவாதிகளின் பிடியில் இருந்து மக்களை மீட்டமை குறித்து, இலங்கை படையினருக்கு நன்றி தெரிவித்துள்ள ஆணைக்குழு, இதன் மூலம் போர் மனநிலையில், இருப்போரை மேலும் தம்வசப்படுத்தாலம் என கருதியுள்ளது.

இந்த நிலையில், கைதுசெய்யப்பட உள்ள இராணுவத்தினர் மற்றும் அவர்களது குடும்ப உறவினர்களின் மன தைரியம் சிதையும் என்பதால், மூன்றாம் தரப்பினர் ஊடாக அவர்களையும், அவர்களின் குடும்பங்களை அரசாங்கம், பராமரிக்கும் என தெரியப்படுத்தப்பட்டுள்ளது.

ஆணைக்குழுவின் பரிந்துரையின் கீழ் கைதுசெய்யப்பட உள்ள அனைத்து இராணுவத்தினருக்கும் தலா ஒரு வீடு இலவசமாக வழங்கப்பட உள்ளது. அத்துடன் கைதுசெய்யப்படும் இராணுவத்தினருக்கு ஜனாதிபதி இரண்டு வருடங்களுக்குள் பொதுமன்னிப்பு வழங்குவார் என ஜனாதிபதியின் செயலகம் ஊடாக உறவினர்களுக்கு ஏற்கனவே அறிவிக்கப்பட்டுள்ளது.

இதனை தவிர தற்போது ரகசியமான முகாம்களில் வைக்கப்பட்டுள்ள விடுதலைப்புலிகளின் உறுப்பினர்களுக்கு எதிராக பகிரங்க நீதிமன்றத்தில் வழக்கு தாக்கல் செய்ய வேண்டும் எனவும் நல்லிணக்க ஆணைக்குழு பரிந்துரைக்க உள்ளது. ஜனாதிபதி ஊடாக இவர்களில் ஒரு பகுதியினருக்கு பொதுமன்னிப்பு வழங்க வேண்டும் எனவும் ஆணைக்குழு பரிந்துரைக்க உள்ளது. வெளிநாடுகளில் உள்ள புலம்பெயர் தமிழர்களை மகிழ்விக்க இதன் மூலம் நல்லிணக்க ஆணைக்குழு எதிர்பார்த்துள்ளது.

எதிர்க்கட்சியினரின் பெருபாலானவர்களை தமக்கு தேவையான வகையில் அடக்கி வரும், ஜனாதிபதிக்கு, புலம்பெயர் தமிழர்களே பெரும் தலைவலியாக இருந்து வருகின்றனர்.

அதேவேளை நல்லிணக்க ஆணைக்குழுவின் அறிக்கையில் அரசாங்கத்திற்கும் குற்றச்சாட்டுகள் முன்வைக்கப்பட்ட உள்ளதுடன், ஜனாதிபதி அந்த தவறை ஏற்றுக்கொள்ள தயாராக உள்ளதுடன், இதன் மூலம் தாமும், தமது அரசாங்கமும் பாடங்களை கற்றுக்கொண்டதாக வெளிகாட்ட உள்ளதாகவும் கூறப்படுகிறது.

அத்துடன் ஆணைக்குழுவின் அறிக்கையில், எந்த இடத்திலும், வைத்தியசாலைகள் மீது தாக்குதல் நடத்தப்பட்டதாவோ, பாதுகாப்பு வலயங்களில் இருந்த பொதுமக்கள் மீது நடத்தப்பட்ட தாக்குதல்கள் குறித்தோ எதுவும் குறிப்பிடப்பட மாட்டாது. அதேபோல், அத்தியவசிய பொருட்கள் மற்றும் மருந்து என்பவற்றை அனுப்புவதை அரசாங்கம், வேண்டுமென்றே தவிர்த்து வந்தமை தொடர்பில், நல்லிணக்க ஆணைக்குழு மௌனித்துள்ளது.

http://www.globaltamilnews.net/GTMNEditorial/tabid/71/articleType/ArticleView/articleId/70286/language/ta-IN/article.aspx

  • கருத்துக்கள உறவுகள்

சனல் 4 காண்பித்த காணொளிகளில் இருக்கும் ராணுவத்தினரை சட்டத்துக்கு (?) முன்னிறுத்துவது சரி..! :unsure: ஆனால் அந்தக் காணொளிகளே போலியானவை என்று அரசாங்கமே பிரச்சாரம் செய்ததே..! :rolleyes:

நியூட்டனின் மூன்றாம் விதிப்படி ஒரு இடத்தில் 'அமுக்கினால்' இன்னொரு இடத்தில் 'பொத்துக்கொண்டு' வரும் :D

இவை எல்லாவற்றிற்கும் சேர்ந்தால்தான் நோர்வேயின் ஆய்வறிக்கை.

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

அங்கொன்றும் இவர்களால் அமுக்கி கமுக்க முடியாது.

ஸ்ரீ லங்கா கில்லிங் பீல்ட் ரெண்டு வந்து சொட்டைத்தலையன் பீரிசிண்ட புழுகலை கிளீன் போல்ட் ஆக்க போகுது.

சிங்களவன் சும்மா சவுண்ட் விடுறான்.

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.