Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.
  • advertisement_alt
  • advertisement_alt
  • advertisement_alt

பொன்சேகாவை விடுவிக்க வேண்டும் - அமெரிக்க சிறிலங்காவுக்கு எச்சரிக்கை!!

Featured Replies

சிறையில் அடைக்கப்பட்டுள்ள சிறிலங்காவின் முன்னாள் இராணுவத்தளபதி சரத் பொன்சேகாவை விடுவிக்கா விட்டால், ஜெனிவாவில் உள்ள ஐ.நா மனிதஉரிமைகள் பேரவையில் சிறிலங்காவுக்கு எதிரான நகர்வுகள் முன்னெடுக்கப்படும் என்று அமெரிக்கா எச்சரித்துள்ளதாக கொழும்பு ஆங்கில நாளிதழ் ஒன்று தகவல் வெளியிட்டுள்ளது.

அதிபர் தேர்தலில் தோல்வியுற்ற முன்னாள் இராணுவத் தளபதியான சரத் பொன்சேகா ஒரு அரசியல் கைதி என்றும் அவரை உடனடியாக விடுவிக்குமாறும் சிறிலங்கா அரசுக்கு அமெரிக்கா அழுத்தம் கொடுத்துள்ளது.

வெள்ளைக்கொடி வழக்கு முடிந்த பின்னர், சிறிலங்கா சுதந்திரக் கட்சியைப் பிரதிநிதித்துவம் செய்யும் உயர்மட்ட அமைச்சர் ஒருவருடனான சந்திப்பின் போது அமெரிக்க இராஜதந்திரி ஒருவர் இந்த எச்சரிக்கையை விடுத்துள்ளதாக அதிகார வட்டாரங்கள் தகவல் வெளியிட்டுள்ளன.

அமெரிக்கா நடத்திய ஆய்வு ஒன்றில், சிறிலங்காவைச் சேர்ந்த பெரும்பாலானோர் சரத் பொன்சேகா விடுவிக்கப்பட வேண்டும் என்று விரும்புவதாக தெரியவந்துள்ளது என்றும் அந்த இராஜதந்திரி கூறியுள்ளார்.

சரத் பொன்சேகாவுக்கு சிறிலங்கா அரசு பொதுமன்னிப்பு அளிக்க வேண்டும் என்றும் இல்லையேல் இந்த விவகாரத்தை அமெரிக்கா, ஜெனிவாவில் உள்ள ஐ.நா மனிதஉரிமைகள் பேரவையில் எழுப்பும் என்றும் அமெரிக்க இராஜதந்திரி எச்சரித்துள்ளார்.

முன்னதாக சிறிலங்கா அமைச்சரை கொழும்புக்கான அமெரிக்கத் தூதுவர் பற்றிசியா புற்ரெனிசே சந்திக்கத் திட்டமிட்டிருந்தார்.

ஆனால் கடைசிநேரத்தில் அவர் தனது மனதை மாற்றிக் கொண்டு வெறொரு பிரதிநிதியை சந்திக்க வைத்துள்ளார். அவரே சிறிலங்கா அமைச்சருக்கு கடுமையான அழுத்தங்களை கொடுத்துள்ளார்.

  • கருத்துக்கள உறவுகள்

சிங்களத்தை இணைக்கும் சிங்கள இனவாதம் இம்முறை தொடர் சர்ச்சையாகி வருகின்றது.

மகிந்த குடும்பத்தை பொறுத்தவரையில் இது ஒரு, அதாவது பொன்சேகா, தொண்டைக்குள் சிக்கிய முள் போன்ற பிரச்சனை.

முள்ளை வெளியே எடுத்தாலும் பிரச்சனை. முள்ளை விழுங்கினாலும் பிரச்சனை.

இந்த செய்தி வழமைபோல் ஆங்கில மூலத்திலிருந்து வேறுபட்டதாக இருக்கிறது. ஆங்கிலமூலம் இந்த கட்டளை நேரடியாக அரசாங்க அமைச்சின் அறிவுறுத்தலினால் மேல் கொள்ளபட்டதா என்ற சந்தேகத்தை எழுப்புகிறது. அப்படியாயின் தூதுவர் எப்படி ஒரு முக்கியமான, மற்றைய நாட்டின் இறைமையில் தலையிடுவது போன்ற ஒரு விடயத்தை சர்வ சாதரணமாக ஒரு கீழ்த்தர அதிகாரிக்கு கைகளுவியிருக்க முடியும்?

மேலும் ஆங்கில மூலத்தில் அந்த அதிகாரி கூட்டமைப்பை யாழ்ப்பாணத்து தீவிரவாதிகள் நெருகடிபடுத்துவதாயும், அதை ஆமோதித்த சம்பந்தபட்ட மந்திரி அவர்கள் தீவிரவாதிகள் அல்ல பயங்கரவதிகள் என்று திருத்தியதாகவும் கூறப்பட்டுள்ளது. இங்கே பயங்கரவாதி/தீவிரவாதியாக வர்ணிக்கப்பட்டவர் கூட்டமைபை பகிரங்கமாக அறிவுறித்திய இளைபாறிய நீதிபதி என்பது அனுமானம். நீதிபதியின் சந்தேகங்களுக்கு வாக்கு கொடுப்பதுபோன்று சம்பந்தர் கூட்டமைப்பு கொள்கைகளில் இருந்த்து விலகாமல்த்தான் அமெரிக்கவில் பேச்சு வார்த்தைகளில் ஈடுபட்டதாக கூறினார். ஆனால் அதேநேரம் சம்பந்தர் தமது அமெரிக்காவிடமான பேச்சுவார்த்தைகளின் போது தான் திருப்தி அடைந்ததாகவும் கூறினார்.

சம்பந்தர் தனது நிலைபாடுகளை அமெரிக்கா எற்று கொள்வதாக ஒரு நம்பிகையை தமிழ் மக்களுக்கு கொடுத்துவிட்டு, நீதிபதி தமிழ்மக்களின் அபிலாசைகளை பிரதிபலிப்பதாக எற்று கொண்டபின்னர், அமெரிக்கா நீதிபதி பயங்கரவாதி என்ற கருத்தை ஏற்றுகொண்டால் இங்கே திரிகோணங்களின் பக்கங்கள் இணந்து முக்கோணத்தை ஆக்க தவறுவது வெளிப்படை. இந்த கேள்விக்கு விடையை தேடும் முயற்சியில் இந்த சம்பவங்களின் சங்கிலித்தொடரில் மிகபலவீனமான முடிச்சை தேடினால் அது பற்றீசியா புட்னீஸ் ஏன் இறுதிநேரத்தில் தனது கடமையை கை களுவினா என்ற கேள்வியில் போய் முடியும்.

எதற்கும் தமிழ் மக்கள் சிந்திய இரதத்திலிருந்தெழும் போர்குற்றசாட்டை பயன்படுத்தி சிறைகளில் வாடும் ஊர் பேர் தெரியாத அப்பாவிகளை தமிழர்களை வெளிக்கொணர முயலாததும் ஆனால் அதேநேரம் அந்த இரத்தம் சிந்தலின் முக்கிய சூத்திரதாரிகளில் ஒருவரான பொன்சேக்காவை அதை பயன்படுத்தி மன்னிக்க பண்ணமுயல்வதும், எப்படி ராசபக்சாக்கள் போர்குற்றங்களை கட்டளையிட்டு செய்வித்துவிட்டு, சிறு அதிகாரிகளை பகடைவைத்து தம்மைதான் காப்பாற்றிகொள்ள முயல்கிறார்களோ அதற்கு இணையானது. அமெரிக்காவின் இந்த பலியெடுபட்ட தமிழ்மக்களின் உணர்வை மிதிப்பது போன்ற நடத்தை திரும்பவும் பிளேக் அமெரிக்கவை தமிழ மக்களுக்கு எதிராக தூண்டும் முயற்சியா என எண்ணத்தூண்டுகிறது

Edited by மல்லையூரான்

சரத் பொன்சேகா விவகாரம் – மழுப்புகிறது அமெரிக்கா [ சனிக்கிழமை, 26 நவம்பர் 2011, 00:15 GMT ] [ கார்வண்ணன் ]

FONSEKA_IN_JAIL.jpgசிறையில் அடைக்கப்பட்டுள்ள சிறிலங்காவின் முன்னாள் இராணுவத் தளபதி சரத் பொன்சேகாவை விடுதலை செய்யுமாறு அமெரிக்கா கோரியதாக வெளியான தகவல்களை கொழும்பிலுள்ள அமெரிக்கத் தூதரகம் நிராகரித்துள்ளது.

சரத் பொன்சேகாவை விடுதலை செய்யாது போனால் ஜெனிவாவில் ஐ.நா மனிதஉரிமைகள் பேரவைக் கூட்டத்தொடரில் சிறிலங்காவுக்கு எதிரான நகர்வுகளை மேற்கொள்ளப் போவதாக அமெரிக்கா எச்சரித்ததாக கொழும்பு ஆங்கில நாளிதழ் ஒன்று நேற்று தகவல் வெளியிட்டிருந்தது.

சிறிலங்காவின் உயர்மட்ட அமைச்சர் ஒருவருக்கும், அமெரிக்க இராஜதந்திரி ஒருவருக்கும் இடையிலான சந்திப்பின் போதே அமெரிக்கத் தரப்பில் இவ்வாறு அழுத்தம் கொடுக்கப்பட்டதாகவும் அந்தச் செய்தியில் கூறப்பட்டிருந்தது.

இதுதொடர்பாக கொழும்பிலுள்ள அமெரிக்கத் தூதரகப் பேச்சாளரிடம் தொடர்பு கொண்டு ‘இந்து‘ நாளிதழ், கேள்வி எழுப்பியிருந்தது.

இந்தக் கேள்விக்கு மின்னஞ்சல் மூலம் பதிலளித்துள்ள கொழும்பிலுள்ள அமெரிக்கத் தூதரகப் பேச்சாளர், “சிறிலங்கா அமைச்சருக்கு இடையிலான கலந்துரையாடல் பற்றிய அறிக்கை சரியானதல்ல“ என்று குறிப்பிட்டுள்ளார்.

இந்த மின்னஞ்சல் பதிலில் சரத் பொன்சேகாவை விடுவிக்குமாறு அமெரிக்கா கோரவில்லை என்று குறிப்பிடப்படாததுடன், கொழும்பு நாளிதழ் செய்திக்கு அமெரிக்கத் தூதரகம் அதிகாரபூர்வமான மறுப்பு அறிக்கை எதையும் வெளியிடவில்லை என்பதும் குறிப்பிடத்தக்கது

http://www.puthinappalakai.com/view.php?20111126105102

  • கருத்துக்கள உறவுகள்

சரத் பொன்சேகாவை விடுதலை செய்யுமாறு அமெரிக்கா அழுத்தம்?:

25 நவம்பர் 2011

lg-share-en.gif

தமிழில் குளோபல் தமிழ்ச்செய்திகள் :

US%20Flig_CI.jpg

முன்னாள் இராணுவத் தளபதி சரத் பொன்சேகாவை விடுதலை செய்யுமாறு அமெரிக்கா இலங்கைக்கு அழுத்தங்களை பிரயோகித்து வருவதாகத் தெரிவிக்கப்படுகிறது.

சரத் பொன்சேகா விடுதலை செய்யப்படாவிட்டால், ஐக்கிய நாடுகளின் மனித உரிமைப் பேரவை இலங்கைக்கு எதிராக நடவடிக்கை எடுக்கக் கூடும் என அமெரிக்கா எச்சரிக்கை விடுத்துள்ளது.

முன்னாள் இராணுவத் தளபதி சரத் பொன்சேகா ஓர் அரசியல் கைதி என அமெரிக்கா அடையாளப்படுத்தியுள்ளது.

வெள்ளைக் கொடி வழக்கு விசாரணையின் இறுதியில் சரத் பொன்சேகாவிற்கு மூன்றாண்டு கால சிறைத்தண்டனை விதிக்கப்பட்டது.

அமெரிக்க உயர் இராஜதந்திரி ஒருவருக்கும், ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியின் சிரேஸ்ட அமைச்சர் ஒருவருக்கும் இடையிலான சந்திப்பின் போது அமெரிக்கா இந்த எச்சரிக்கையை விடுத்துள்ளது.

அமெரிக்கா நடத்திய கருத்துக் கணிப்பின் மூலம் பெரும்பான்மையான இலங்கையர்கள் சரத் பொன்சேகா விடுதலை செய்யப்பட வேண்டுமென விரும்புவதாகக் குறிப்பிடப்பட்டுள்ளது.

சரத் பொன்சேகாவிற்கு பொதுமன்னிப்பு வழங்க அரசாங்கம் நடவடிக்கை எடுக்குமா என அமெரிக்க ராஜதந்திரி கேள்வி எழுப்பியுள்ளார்.

மன்னிப்பு வழங்கப்படாத பட்சத்தில் ஜெனீவாவில் உள்ள ஐக்கிய நாடுகள் மனித உரிமைப் பேரவையில் சரத் பொன்சேகா விவகாரம் குறித்து கேள்வி எழுப்ப நேரிடும் என அவர் தெரிவித்துள்ளார்.

அமைச்சருடன் அமெரிக்கத் தூதுவர் பெட்ரிசியா புட்டீனா பேச்சுவார்த்தை நடத்த உத்தேசித்திருந்ததாகவும், இறுதி நேரத்தில் தூதரக அதிகாரி ஒருவர் இந்தப் பேச்சுவார்தையில் கலந்து கொண்டதாகவும் தெரிவிக்கப்படுகிறது.

அரசாங்கத்துடன் நடத்தப்படும் பேச்சுவார்த்தைகள் குறித்து தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு பாராளுமன்ற உறுப்பினர்கள் திருப்தி அடையவில்லை என அமெரிக்க தூதரக அதிகாரி சுட்டிக்காட்டியுள்ளார்.

தமிழ்த் தேசியக் கூட்டமைப்பினர் வெளிநாடுகளில் வாழும் புலி உறுப்பினர்களின் அழுத்தங்களுக்கு உட்பட்டுள்ளதாக அமைச்சர் குறிப்பிட்டுள்ளார்.

இதேவேளை, யாழ்ப்பாண வாழ் கடும்போக்குடையவர்களும் கூட்டமைப்பின் மீது அழுத்தங்களை பிரயோகித்து வருவதாக தூதரக அதிகாரி தெரிவித்துள்ளார்.

இவர்கள் கடும்போக்குவாதிகள் அல்ல எனவும் தீவிரவாதிகள் எனவும் அமைச்சர் சுட்டிக்காட்டியுள்ளார்.

http://globaltamilnews.net/GTMNEditorial/tabid/71/articleType/ArticleView/articleId/70579/language/ta-IN/article.aspx

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.