Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

தமிழகத்தில் மாவீரர் தின அனுஷ்டிப்புக்கு ஜெ.அரசு தடை.

Featured Replies

  • கருத்துக்கள உறவுகள்

எங்களுடைய வாக்கை வாங்கி ஆட்சி அமைத்து, எங்களையே முடக்குவது என்பது எவ்வளவு கொடுமை: சீமான்

65905.jpg

19 11 2011 முதல் இனம் காக்க உயிர்த்தியாகம் செய்த மாவீரர்களை போற்றும் வகையில் தமிழர் எழுச்சி வார நிகழ்வை ஒரு வாரத்திருக்கு நாம் தமிழர் கட்சி ஏற்பாடு செய்து இருந்தது, இதன் முதற்கட்டமாக 19 11 2011 அன்று வில்லிவாக்கத்தில் நடைபெற இருந்த பொது கூட்ட அனுமதியை திடீரென ரத்து செய்தது தமிழக காவல்துறை.

அது மட்டுமல்லாமல் டிசம்பர் 6ம் தேதி வரை நாம் தமிழர் நடத்தும் எந்த கூட்டத்திற்கும் அனுமதி வழங்கப்படவில்லை, தடை செய்யப்பட்ட இயக்கத்தை பற்றி பிரச்சாரம் செய்வது சட்டம் ஒழுங்கை சீர்குலைக்கும் என காவல்துறை காரணம் கூறியும் பல்வேறு காரணங்களை கூறியும் நாம் தமிழர் எழுச்சி வார நிகழ்வுகளுக்கு அனுமதி மறுக்கப்பட்டது. இருப்பினும் உள்ளரங்கங்களின் அந்நிகழ்வுகள் நடைபெற்று வருகிறது.

அதன் ஒரு பகுதியாக 25.11.2011 அன்று சென்னை அம்பத்தூரில் உள்ள ‘ஆஸ்ஸி’ பள்ளி மைதானத்தில் நடந்த நாம் தமிழர் குடும்ப விழாவில் நாம் தமிழர் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் பேசினார்.

அவர் பேசுகையில்,

என்ன உங்கள் பிரச்சனை. சீமானை பேசவிட்டால் விடுதலைப்புலிகளை ஆதரிச்சுப் பேசுவான். சீமானை பேசவிட்டால் தடை செய்யப்பட்ட இயக்கத்தை பற்றி பேசுவான். உன்னை யார் தடை செய்ய சொன்னது. தடையை நீக்கு என்கிறோம். நாங்கள் ஆதரித்து பேச வேண்டும் தடையை நீக்கு என்கிறோம். முதலில் அதை புரிந்துகொள்ளுங்கள்.

ஒரு பொது வாக்கெடுப்பை இந்த நாட்டில் இந்த அரசுகள் செய்யுமா. விடுதலைப்புலிகள் இயக்கத்திற்கு தடை தேவையா இல்லையா. ஒரு வாக்கெடுப்பை நடத்துமா. 100க்கு 99 விழுக்காடு விடுதலைப்புலிகள் மீதான தடை தேவையில்லை என்று மக்கள் வாக்கு செலுத்துவார்கள். நீங்கள் எல்லாவற்றையும் எங்களுக்குள் திணிக்கிறீர்கள்.

விடுதலைப்புலிகளை பிறந்ததிலிருந்து ஆதரிச்சு பேசுகிறேன். என் ஆத்தா பேசுறாள். என் அப்பன் பேசுறான். என்னுடன் பிறந்தவன் அத்தனைப் பேரும் பேசுறான். என் உயிர் தமிழ்ச் சொந்தங்கள் அத்தனை பேரும் பேசுறான். அனுமதி கொடுக்கவில்லை என்றால் ஆதரிச்சு பேசிட மாட்டேனா. பிரபாகரன் பிறந்த நாளை ரோட்டில் கொண்டாடவில்லை. ஒவ்வொரு தமிழனும் வீட்டில் கொண்டாடிக்கொண்டிருக்கிறான்.

உங்களுக்கு என்ன தெரியும், பிரபாகரனை யார் என்று தெரியுமா? என்ன தெரியும். மாவீரர் தினம் கொண்டாடிவிடுவார்கள். சுவரொட்டி ஒட்டக் கூடாது. மாவீரர் தினம் கொண்டாட அனுமதியில்லை. ஏன். என் இனத்தின் மானத்தையும், என் இனத்தையும் காப்பாத்த செத்தான்ல்ல அதுக்காக கொண்டாடிவிடக் கூடாது. என் நாடு. என் பூமி. மானத் தமிழர்கள் வாழுகிற பூமி. என் இனத்தின் மானத்தை காக்க செத்தவனுக்கு நான் நன்றி சொல்லக்கூட இந்த மண்ணில் உரிமை இல்லை.

இத்தனை கூட்டங்கள் நாங்கள் நடத்தியிருக்கிறோம். 21 ஆண்டுகளாக விடுதலைப்புலிகள் இயக்கத்தை ஆதரித்து, பல்வேறு தலைவர்கள், பல்வேறு கட்சிகள் பேசியிருக்கிறார்கள். அதனால் இந்த மண்ணில் நடந்த ஏதாவது ஒரு அசம்பாவிதத்தை நீங்க சொல்லுங்க. பிறகு இந்த கூட்டத்துக்கு தடை போடுங்கள். ஒன்றை நீங்கள் புரிந்துகொள்ள வேண்டும். உங்களுடைய சட்டம், உங்களுடைய செயல்பாடுகளை முடக்கும். என்னுடைய பேச்சை நீங்கள் தடை செய்யலாம். ஆனால் என்னுடைய உணர்வையும், என்னுடைய கனவையும் எந்த சட்டமும் தடை செய்ய முடியாது. அதை நீங்க புரிந்து கொள்ள வேண்டும்.

நீங்கள் ஒவ்வொரு தடைவையும் இதை செய்துக்கொண்டிருக்கிறீர்கள். நாங்கள் ஒவ்வொரு தடைவையும் பணிந்து பணிந்து போவோம் என்று எதிர்பார்த்துக்கிட்டு இருக்கீங்க. இதுவெல்லாôம் சாத்தியமில்ல. குறைந்தபட்சமாவது ஒரு கட்டுப்பாடுகளை போட்டாவது கூட்டம் நடத்த அனுமதிச்சிருக்க வேண்டும்.

இது உண்மையிலேயே ஜனநாயக நாடா. அமெரிக்காவில் தடை இருக்கிறது. ஆஸ்திரேலியாவில் தடை இருக்கிறது. பிரான்சில் தடை இருக்கிறது. கனடாவில் தடை இருக்கிறது. ஜெர்மனில் தடை இருக்கிறது. ஆனால் எல்லா நாடுகளிலும் தலைவர் பிறந்த நாளும், மாவீரர் தினமும் எழுச்சியாக் கொண்டாட அந்த நாடுகள் அனுமதிக்கிறது. ஏன். அந்த நாடுகள் கருத்து சுதந்திரம் உள்ள நாடு. இந்தியா கருத்து சுதந்திரமற்ற ஒரு சர்வாதிகார நாடு.

இதில் தமிழர்களுக்கென்று ஒரு அரசு இருக்கிறது. எந்த தமிழனும் தமிழராக இருக்கக்கூடாதுன்னு சொல்றத்துக்கு ஒரு அரசு இருக்கிறது. இதைவிட ஒரு கேவலம். இதைவிட ஒரு இழிநிலை எதுவுமே இருக்க முடியாது. இந்த மண்ணின் மகன், ஒரு தமிழன் தன்னை தமிழன் என்று சொல்வதே தேசத் துரோக குற்றம் என்று சொன்னால் இதைவிட கொடுமை எங்கே இருக்கிறது. எங்களுடைய வாக்கை வாங்கி அதில் வலிமையைப் பெற்று ஆட்சியை அமைத்து, அதிகாரங்களை பெற்றுக்கொண்டு, எங்களிடமே அதைக்காட்டி, எங்களை நசுக்குவது, எங்களையே முடக்குவது என்பது எவ்வளவு கொடுமையானது. இவ்வாறு பேசினார்.

===================================================================

மாவீரர்கள் தினத்தை முன்னிட்டு ரத்ததானம் முகாம் ஏற்பாடு: போலீஸ் தடையால் உணர்வாளர்கள் அதிர்ச்சி

தஞ்சை மாவட்டம் பேராவூரணியில் தமிழின உணர்வாளர்கள் கூட்டமைப்பு சார்பில் மாவீரர்கள் தினத்தை முன்னிட்டு இன்று பேராவூரணி கிழக்கு தொடக்கப்பள்ளியில் ரத்ததான முகாம் மற்றும் அன்னதானம், மாலையில் அண்ணா சிலை நினைவேந்தல் பொதுக்கூட்டம் போன்றவை ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது.

இன்று காலை 9 மணி முதல் ரத்ததானம் கொடுப்பதற்காக நூற்றுக்கும் மேற்பட்ட தமிழின உணர்வாளர்கள் பேராவூரணி கிழக்குப் பள்ளியில் குவிந்துவிடடனர். ஆனால் அங்கு சென்ற பேராவூரணி காவல்துறையினர் மாவீரர் தினமான இன்று ரத்ததானம் நடத்தக்கூடாது என்று தடை விதித்துள்ளனர்.

மேலும், அன்னதானம் மற்றும் நினைவேந்தல் பொதுக்கூட்டத்திற்கும் தடை விதிக்கப்பட்டுள்ளது. ரத்ததானம் முகாமை தடை செய்திருப்பது உணர்வாளர்கள் மற்றும் பொதுமக்கள் இடையே அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

நன்றி நக்கீரன்.

============================================

தமிழகத்தில் போலீஸ் தடை

தமிழகத்தில் பல இடங்களில் பிரபாகரன் பிறந்த நாளைக் கொண்டாட சீமான், கொளத்தூர்மணி உள்ளிட்ட தமிழ் உணர்வாளர்கள் ஏற்பாடு செய்திருந்த நிகழ்ச்சிகளுக்கு போலீஸ் அனுமதி மறுக்கப்பட்டது.

நாமக்கல்லில் சீமானின் கூட்டத்துக்கு அனுமதி மறுக்கப்பட்டதால், ஒரு திருமண மண்டபத்தில் வைத்து அவர் பேசினார்.

நன்றி:தற்ஸ்தமிழ்

Edited by nedukkalapoovan

- அம்மா தனது ஆட்சியை பாதுகாக்க என எண்ணி தானே ஆப்பு வைக்கின்றா

- மாவீரர் தினத்தை நினைவுகூராதவனையும், அதை அனுட்டிக்க வைக்கும் இந்த தடை

  • கருத்துக்கள உறவுகள்

ஜெயலலிதாவின் அராஜகம் எல்லை மீறுகிறது .

எழுதியது Suresh Kumar Labels: அரசியல், சர்வாதிகாரம், தமிழகம், தமிழ் ஈழம், மாவீரர் நாள் எழுதிய நேரம் Sunday, November 27, 2011

இன்று இலங்கை தமிழர் பாதுகாப்பு இயக்கம் சார்பில் தி.நகரில் நடக்க இருந்த மாவீரர் நாள் பொதுக் கூட்டம் அதிமுக அரசின் அராஜகத்தால் நிறுத்தப் பட்டுள்ளது. காவல் துறை அனுமதியோடு நடக்கவிருந்த பொதுக்கூட்டத்தை ஆதிமுக அரசு தடை செய்திருக்கிறது. இந்த மாவீரர் நிகழ்வில் வைகோ சிறப்புரை வழங்க இருந்தார்.

இந்நிலையில் மதியம் முதலே கூட்ட ஏற்பாடுகளை செய்து வந்த மதிமுக தென் சென்னை மாவட்ட செயலாளர் வேளச்சேரி மணிமாறன் உட்பட நூற்றுக்கு மேற்பட்டோரை கைது செய்திருக்கிறது காவல் துறை. மக்களாட்சியில் அவரவர் கருத்தை சொல்ல உரிமை இருக்கும் போது ஜனநாயக ரீதியாக பொதுக் கூட்டம் நடத்த ஜெயலலிதா தலைமையிலான அரசு அனுமதிக்கவில்லை என்றால் இதை விட காட்டு மிராண்டி தனம் வேறு என்ன இருக்க முடியும்.

379473_258963884153346_100001192080488_649315_886446567_n.jpg

பூனை கண்ணை மூடி கொண்டு பால் குடிக்குமாம் அப்படி குடிக்கும் பூனை நினைக்கும் நம்மை யாரும் பார்க்க வில்லை என்று. அப்படி தான் இருக்கிறது அதிமுக அரசின் நடவடிக்கைகள் மாவீரர் நிகழ்வை நடத்த விடாமல் இருந்தால் மாவீரர்களை யாரும் நினைவு கூற மாட்டார்கள் என்று ஒரு வேளை ஜெயா நினைக்கலாம்.

ஆண்டுதோறும் உலக தமிழர்களின் ஒப்பற்ற தினமான நவம்பர் 27 யார் தடுத்தாலும் தமிழ் ஈழ விடுதலைக்காக உயிரை கொடுத்த எங்கள் உள்ளத்தில் குடி கொண்டிருக்கும் மாவீரர்களை நினைக்காமல் இருக்க முடியாது.

ஒவ்வெரு முறை ஆட்சிக்கு மாறி மாறி வரும் கட்சிகளால் தமிழினத்திற்கு எதிராக தான் செயல் படுகிறார்கள். கடந்த முறை தமிழ் ஈழத்தில் ஒரு லட்சத்திற்கும் மேற்பட்ட தமிழர்கள் இந்தியா துணையோடு கொலை செய்ய பட்ட பொது தமிழின தலைவர் என்று சொல்லும் கருணாநிதியால் கொலைக்கு துணை போக தான் முடிந்தது. தமிழ் உணர்வாளர்களை சிறையில் அடிப்பதை கருணாநிதியும் ஜெயலலிதாவும் மாறி மாறி செய்து வருகின்றனர்.

maaviraar_vaiko.jpg

தமிழகத்தை கருணாநிதியும் ஜெயலலிதாவும் மாறி மாறி ஆட்சி அமைப்பது தான் தமிழகத்திற்கு சாபக்கேடு. தமிழர்களின் உரிமைக்கு பேச முடியவில்லை . ஜெயலலிதா இதையெல்லாம் ஜெயித்து வந்தால் செய்வார் என்பது வைகோவை எப்போது கூட்டணியிலிருந்து நீக்கினாரோ அப்போதே தெரிந்து விட்டது தான். அன்றிலிருந்தே இதே ஜெயா திருந்த வில்லை என்பதை சொல்லியிருக்கிறோம். ஆனால் என்ன செய்வது கருணாநிதி என்னும் விச பாம்பை விரட்ட இன்னொரு விச பாம்பிற்கு மக்கள் வாய்ப்பு கொடுத்தனர். ஆனால் பாம்பின் விஷம் இப்போது வெளியேறுகிறது.

photo89.jpg

மாற்றம் ஓன்று உருவாக வேண்டும் கருணாநிதி ஜெயலலிதாவுக்கு எதிராக ஓட்டு மொத்த தமிழ் உணர்வாளர்கள் ஒரே கொள்கை கொண்ட கட்சியினர் ஓன்று பட்டு நிற்க வேண்டும். மாற்று அணிக்கான தலைமை நேர்மையாகவும் கொள்கை உறுதி கொண்டவராகவும் இருக்க வேண்டும்.

leader_20081127002.jpg

தமிழருவி மணியன் சொன்னதை போல் மாற்று அரசியலுக்கான துவக்கம் இன்றே துவங்கட்டும். இந்த மாவீரர் நாளில் தமிழின விடுதலைக்காக உயிரை விட்ட மாவீரர்களுக்கு நாம் செய்யும் கடமையாக மாற்று அரசியல் துவங்கட்டும்.

ஓன்று பட்டு ஜெயாவின் அராஜக ஆட்சியை எதிர்ப்போம்.......

தமிழ் விடுதலைக்கு தங்கள் உயிரை கொடுத்த மாவீரர்களுக்கு வீர வணக்கங்கள் !

button="hori"; lang="ta"; submit_url ="http://www.sureshkumar.info/2011/11/blog-post_5712.html"

http://www.sureshkumar.info/2011/11/blog-post_5712.html

  • கருத்துக்கள உறவுகள்

கருணாநிதி, காங்கிரசுக்கு நடந்த கதியை அம்மா இலகுவில் மறந்து விடமாட்டார்.மறந்தால் அதோ கதி தான்.

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.