Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.
  • advertisement_alt
  • advertisement_alt
  • advertisement_alt

மாவீரர் தினம் - தமிழர்களைக் குழப்ப இலங்கை சதியா?

Featured Replies

  • கருத்துக்கள உறவுகள்

18.jpg 01.12.11 மற்றவை

லங்கையில்விடுதலைப் புலிகளின் பின்னடைவுக்குப் பிறகு மாவீரர் தினம் முக்கியத்துவம் வாய்ந்த ஒன்றாக மாறிவிட்டது. வரும் 27-ம் தேதி மாவீரர் தினம் வரு வதையொட்டி அதை சீர்குலைக்க இலங்கை அரசு சதித் திட்டம் தீட்டி வருவதாக, வெளிநாட்டுத் தமிழர்கள் பதறுகிறார்கள்.

மாவீரர் நாளில், போர்க்களத்தில் உயிர்நீத்தவர்கள் மற்றும் வீரத் தியாகம் புரிந்த புலிகளுக்கு சிறப்பான முறையில் அஞ்சலி செலுத்தப்படுகிறது. இந்த மாவீரர் தினத்தில் ம ட்டுமே விடுதலைப்புலிகள் தலைவர் பிரபாகரன் உரை நிகழ்த்துவது வழக்கம். கடந்த ஆண்டு பிரபாகரனின் உரை இல்லாத போதும், வழக்கத்தை விட அதிக எழுச்சியுடன் உலகெங்கும் மாவீரர் தினம் கொண்டாடப்பட்டது.

கனடாவில் உள்ள ரையர்சன் பல்கலைக்கழக மாணவர்கள் கடந்த வாரம் மாவீரர் தின வார விழாவைத் தொடங்கினர். கனடா தேசியக்கொடி ஏற்றலுடன் அந்த நிகழ்வு ஆரம்பிக்கப்பட்டது. அதனைத் தொடர்ந்து தமிழீழ தேசியக்கொடி ஏற்றுதல், ஈகைச்சுடர் ஏற்றல், மலர்வணக்கம் ஆகியவை இடம் பெற்றன. நிகழ்வின் இறுதியாக “தலைவனின் வழியில் தமிழீழம் அடைவோம்’’ என்ற உறுதிமொழி எடுக்கப்பட்டது. இதே போல் கனடாவில் உள்ள யார்க் பல்கலைக்கழகம் உள்ளிட்ட பல்வேறு பல் கலைக்கழகங்கள் மற்றும் கல்லூரிகளில் மாவீரர் வார நிகழ்ச்சிகள் நடந்தேறின.

லண்டனிலும் மாவீரர் வார நிகழ்ச்சிகள் இளைஞர்களால் எழுச்சியுடன் முன்னெடுக்கப் படுகின்றன. “எமது பூமியில், எமது மாவீரர்களின் கல்லறைகளை இடித்துத் தரைமட்டமாக்கினாலும், அவர்கள் மீது எமது மக்கள் வைத்திருக்கும் அளப்பரிய உணர்வுகளை எவராலும் சிதைத்து விட முடியாது. எங்கெல்லாம் எங்களுக்குத் தடை உள்ளதோ, அங்கெல்லாம் தடை உடைத்து எம் காவல் தெய்வங்களான மாவீரர்களைப் போற்றி வழிபடுவோம்’’ என இளைஞர்கள் முழக்கமிட்டனர்.

அதுபோல ஈழப்போராட்டத்தில் ஈடுபட்டு உயிர்நீத்தவர்கள் குடும்பத்தினரை கௌரவிக்கும் நிகழ்வு லண்டனில் நான்கு இடங்களில் கடந்த 20-ம் தேதி நடந்தது. ஈழப்போரில் உயிர் நீத்தவர்களின் பெற்றோர் தங்களது பிள்ளைகளைப் பற்றிய நினைவுகளை இந்த நிகழ்வில் பகிர்ந்து கொண்டனர். உயிர் நீத்தவர்களின் பெற்றோர், உறவினர்கள் ‘மாவீரர் நாள் சிறப்பு சின்னம்’ அணிவிக்கப்பட்டு கௌரவிக்கப்பட்டனர்.

கனடா, டென்மார்க், இத்தாலி, நார்வே என தமிழர்கள் வாழும் எல்லா நாடுகளிலும் வரும் 27-ம் தேதி மாவீரர் நாள் தொடர்பான அறிவிப்புகள் வெளியாகி வருகின்றன. பல்வேறு நாடுகளில் மாவீரர் தின நிகழ்வுகள் விரிவாக நடைபெறுவதற்கான அறிவிப்புகளும் விளம்பரங்களும் வெளியாகி வருகின்றன.

மாவீரர் தினத்தின் வீரியம் அதிகரித்து வருவதை இலங்கை அரசால் தாங்கிக் கொள்ள முடியவில்லை. ‘ஆபரேஷன் டிரஸ்ட்’ என்ற சதி நடவடிக்கையை இலங்கை அரசு மேற்கொண்டு வருவதாக தமிழீழ ஆதரவாளர்கள் குற்றம் சாட்டியுள்ளனர். அது என்ன ஆபரேஷன் டிரஸ்ட்? வெளிநாட்டில் வாழும் புலம்பெயர்ந்த தமிழர்கள் சிலரிடம் பேசினோம்.

google_protectAndRun("render_ads.js::google_render_ad", google_handleError, google_render_ad);

‘‘ஒரு காலத்தில் பிரபல உளவு அமைப்பாக இருந்த கே.ஜீ.பி. புலம்பெயர்ந்த தன் மக்களை அழிக்க மேற்கொண்ட நடவடிக்கைதான் ‘ஆபரேஷன் டிரஸ்ட்’. புலம்பெயர் தமிழர்கள் தமிழ் தேசியத்தின் மீது வெறியாக இருக்கிறார்கள். இதுதான் அவர்களின் மிகப் பெரிய பலமாகவும், பலவீனமாகவும் இருக்கிறது. இவர்களை விட அதிகமாக ‘தமிழ் தேசியம்’ பேசுபவர்களால் இவர்களை எளிதாக ஏமாற்றிவிட முடியும். இதைத் தெரிந்து கொண்டு புலம் பெயர்ந்த தமிழர்களிடையே பிரிவினையை உருவாக்க இலங்கை அரசு திட்டமிட்டுள்ளது. இதற்காக இவர்கள் மத்தியில் தமிழர்களையே உளவாளியாக அனுப்பியிருக்கிறது இலங்கை அரசு.

உதாரணமாக, இலங்கை ராணுவத்தினரால் கைது செய்யப்பட்டதாகவும், விடுதலைப் புலிகள் இயக்கத்தில் இருந்தவர்களாகவும் தங்களை கூறிக்கொள்ளும் சிலர் ஐரோப்பாவில் அரசியல் செய்ய ஆரம்பித்திருக்கிறார்கள். இப்படிப் பேசுவோரில் பெரும்பாலானோர் இலங்கை சர்வதேச விமான நிலையம் வழியாக வெளியேறியவர்கள். எப்படி இலங்கைப் படையினரின் கண்களில் மண்ணைத் தூவிவிட்டு இலங்கையின் ஒரே சர்வதேச விமான நிலையம் வழியாக ஐரோப்பிய நாடுகளுக்கு வர முடிந்தது?

இந்த நிலையில்தான் இவர்கள் இலங்கை அரசால் உளவு நடவடிக்கைக்காக அனுப்பப்பட்டவர்களா என்றும் சிந்திக்க வேண்டும். மேலும் ஐரோப்பிய நாடுகளில் ராஜபக்ஷேவுக்கு எதிராக ஆர்ப்பாட்டங்கள் நடந்தபோது இவர்கள் அதில் பங்கேற்காமல் ஒதுங்கியே நின்றதையும் கவனத்தில் கொள்ள வேண்டும். இவர்கள் மூலம் மாவீரர் தினத்தை குலைக்கும் நடவடிக்கைகளை இலங்கை அரசு தொடங்கி விட்டது. புலம்பெயர் தமிழர்கள் சற்று ஆழமாகச் சிந்திக்க வேண்டிய தருணம் இது. இல் லாவிட்டால், இலங்கை அரசின் சதிக்கு பலியாகி விடுவோம்’’ என்று ஆவேசப்பட்டார்.

தமிழீழ விடுதலைப் புலிகளின் ஊடகப் பிரிவைச் சேர்ந்த ஆ. அன்பரசன் சமீபத்தில் அறிக்கை ஒன்றை வெளியிட்டார். அதில், “முள்ளிவாய்க்கால் பேரழிவிற்குப் பின்னர் பாதிக்கப்பட்ட எமது மக்களையும், போராளிகள், மாவீரர் குடும்பங்களையும் பராமரிக்கும் பெரும் பொறுப்பு ‘அனைத்துலகத் தொடர்பகம்’ வசம் இருந்தது. ஆனால் அங்கு பொறுப்பு வகித்த சிலரின் தவறுகளாலும் மெத்தனத்தாலும் அக்கட்டமைப்பு செயலற்ற நிலைக்குத் தள்ளப்பட்டுள்ளது.

அனைத்துலகத் தொடர்பக நிர்வாகத்தின் கீழ் இயங்கி வந்த ஊடகங்கள் சிலவற்றின் போக்கும் எமது போராட்டத்தை மழுங்கடிக்கும் வகையில் அமைந்தன. தமிழீழ விடு தலைப் போராட்டத்தின் அச்சாணியாகவும், ஆன்மாவாகவும் இருந்த மாவீரர் நாளையும் கொச்சைப்படுத்தியதன் மூலம் இவர்கள் மிகப்பெரும் தவறைச் செய்துள்ளனர்.

சிங்களப் பேரினவாத அரசு எமது காவல் தெய்வங்களின் கல்லறைகளைச் சிதைத்ததற்கு ஒப்பான இழிசெயலை இந்தக் குழப்பவாதிகள் செய்துள்ளார்கள்’’ என அறிக்கையில் குறிப்பிட்டுள்ளார்.

இலங்கை அரசு தனது சதித்திட்டம் மூலம், தமிழர்களைக் குழப்பும் வேலையை அதுவும் தமிழர்கள் மூலமே செய்யத் துவங்கி விட்டது என்பதைத்தான் அன்பரசனின் அறிக்கையும் தெரிவிக்கிறது.

ப.திருமலை

-குமுதம் ரிப்போட்டர்

எவ்வாறு பல குற்றங்களை செய்த கருணாவை வைத்து ஆயுத ரீதியாக புலிகளை பலவீனப்படுத்த சிங்களம் முயன்றதோ அவ்வாறே இப்பொழுது அனைத்துலக தொடர்புகளை கொண்டிருந்த கே.பி. திட்டமிடப்பட்டு பயன்படுத்தப்படுகிறார்.

இந்த வருடத்திற்கான மாவீரர் தினம் முடிந்துவிட்டது, ஆனால் அடுத்த வருடம் வரை எதிரி ஓய்வு எடுத்தவண்ணம் இருக்கமாட்டான். ஏதாவது சதி திட்டங்களை தீட்டியவண்ணம் இருப்பான்.

அவதானமாக இருக்கும் அதேவேளை, அவன் மீது சர்வதேச போர்குற்ற, தொடரும் மனித உரிமை மீறல் பற்றிய அழுத்தங்களை அதிகரிப்பதும் தாயக மக்களை பொருளாதார ரீதியாக கையை தூக்கிவிடுவதுமே எமது கடமையாக இருக்கட்டும்.

  • கருத்துக்கள உறவுகள்

பொது வாக்கெடுப்பு ஒன்றின் மூலம் தமிழ் மக்கள் பிரிந்து செல்ல ஒரு சுதந்திரமான வாக்கெடுப்பை நடாத்த உலக சக்திகளை இலங்கை அரசுக்கு உந்துதலை கொடுக்க வேண்ட வேண்டும்.

மாவீரரை நேசிப்பவர்கள், விடுதலையை நேசிப்பவவர்கள் இதைச் செய்வார்களா? சிந்தித்துப் பாருங்கள். மாவீரர்தின விளம்பரங்கள் கிழிக்கப்பட்டுள்ளது. தலைவரின் படங்கள், மாவீரர்களின் படங்கள், மாவீரர்பதாதைகள் ஆகியவை எரிப்பது அரசாங்க சாப்பான ஊடகத்துக்கு ஆதரவவு வழங்குவுது. இதில் இருந்து என்னத்தை உணரலாம்?

குழப்பங்களால் எமது தமிழ் மக்களிடையே நம்பிக்கையீனங்கள் துளிர்விட்டுக் கொண்டிருப்பது உண்மைதான். ஒருமித்த செயற்பாடுகளால்தான் இவற்றைத் தடுக்கலாம்.

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.