Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

இந்தியச் சினிமாக்களின் தமிழ் உணர்வு

Featured Replies

(நவம்பர் மாதத் தொடக்கத்தில் அகரம் சஞ்சிகைக்காக எழுதப்பட்டது)

பெரும் ஆர்ப்பாட்டத்தோடு வெளிவந்த „ஏழாம் அறிவு' திரைப்படம் ரசிகர்களின் எதிர்பார்ப்பை பூர்த்தி செய்யவில்லை என்று சொல்லப்படுகிறது. ரமணா, கஜனி என்று வெற்றப்படங்களைத் தந்த ஏஆர் முரகதாசின் இயக்கத்தில் சூர்யாவின் நடிப்பில் வெளியாகி இருக்கின்ற படம் இது.

படம் வெளிவருவதற்கு முன்பு செய்யப்பட்ட விளம்பரத்தால் படம் குறித்த எதிர்பார்ப்பு உச்சத்தில் இருந்தது. தமிழ்நாட்டில் இருந்த சீனாவிற்கு சென்று பல கலைகளையும் தத்துவங்களையும் பரப்பிய போதி தர்மனை அடிப்படையாகக் கொண்ட ஒரு படம் என்பதும் „ஏழாம் அறிவு' பற்றிய எதிர்பார்ப்புக்கு காரணமாக இருந்தது.

ஆயினும் திரைக்கதையில் ஏற்பட்ட தொய்வு ரசிகனுக்கு பெருத்த ஏமாற்றத்தை கொடுத்து விட்டது. அதே வேளை „ஏழாம் அறிவு' திரைப்படத்தில் தமிழ் உணர்வு சார்ந்து வரும் வசனங்களுக்கு பலத்த கைதட்டல் திரையரங்குகளில் கிடைக்கின்றது. கூடவே தமிழ் உணர்வு வியாபாரமாக ஆக்கப்படுகிறது என்கின்ற விமர்சனமும் சேர்ந்தே வருகிறது.

உண்மையில் ஆழமாகப் பார்ப்போமாக இருந்தால் „ஏழாம் அறிவு' செய்திருப்பது பெருத்த மோசடியாகத் தெரியும். „போதி தர்மன்' தமிழனா என்பது பற்றி சர்ச்சைகள் இருக்கின்றன. போதி தர்மனை தமிழன் என்று நிறுவுவதற்கு போதுமான ஆதாரங்கள் இல்லை என்பதுதான் உண்மை.

போதி தர்மன் ஒரு பல்லவ மன்னனின் மகன் என்று கருதப்படுகின்றான். இதில் பிரச்சனை என்னவென்றால் பல்லவர்கள் தமிழர்களா என்பது பற்றி பெருத்த கேள்வி இருக்கின்றது. பல்லவர்கள் வடமொழியை போற்றிப் பாதுகாத்து ஆட்சி செய்தவர்கள். வடக்கிலே இருந்து வந்தவர்கள் என்றும், பாரசீகத்தில் இருந்து வந்தவர்கள் என்றும், யாழ்ப்பாணத்தில் இருந்து சென்றவர்கள் என்றும், தெலுங்கு நாட்டை சேர்ந்தவர்கள் என்றும் பலவாறு பலர் வாதிடுவார்கள்.

பல்லவர்களை தமிழர்கள் என்று சொல்கின்ற வராலாற்று ஆசிரியர்களும் இருக்கத்தான் செய்கிறார்கள்.

ஆனால் பல்லவர்கள் உண்மையில் யார் என்பது இன்னமும் சரியாக நிறுவப்படவில்லை. பல்லவ மன்னன் ஒருவருடைய மகன்தான் போதிதர்மனா என்பது பற்றியும் பல கேள்விகள் இருக்கின்றன.

போதிதர்மன்தான் குங்பூவை பரப்பினான என்பதிலும் பல மாற்றுக் கருத்துகள் இருக்கின்றன.

இப்படி நிறையக் கேள்விகள் இருக்கின்ற பொழுது ஏஆர் முரகதாஸ் எந்தக் கவலையும் இல்லாமல் போதிதர்மனை தமிழன் என்று சொல்லிவிட்டு படத்தி ஆரம்பிக்கின்றார். பின்பு இந்தியாவை அழிக்க வருகின்ற சீன வில்லனை தமிழ் கதாநாயகன் தமிழ் தேசிய வசனங்களைப் பேசிக் கொண்டு எப்படி அழித்து எப்படி இந்தியாவைக் காக்கின்றான் என்று படத்தைக் கொண்டு போகின்றார்.

படத்தின் மிகப் பெரும் மோசடியே இதில்தான் இருக்கின்றது. தமிழ் தேசியத்தை அழித்த இந்தியாவை காப்பாற்றுகின்ற கதையைச் சொல்லுகின்ற படத்தில் தமிழ் உணர்வு வசனங்களை இணைத்து வியாபாரம் செய்கின்ற கைங்கர்யம் இதற்குள் அடங்கியிருக்கிறது.

முன்பு விஜயகாந்த் தன்னுடைய படங்களில் அடிக்கடி „தமிள், தமிள்' என்று வசனம் பேசுவார். இப்படி „தமிள்' உணர்வை வளர்த்து வந்த விஜயகாந்த் முதலில் வீரப்பனைப் பிடித்து, பதவி உயர்வு பெற்று பாகிஸ்தான் தீவிரவாதிகளை பிடிக்கப் போனார்.

அதன் பிறகு விஜயகாந்த் படங்களில் „தமிள்' இல்லாமல் போனது. அந்த இடத்தில் „இந்தியா' வந்து குந்திக் கொண்டது. என்றாலும் தேவைப்பட்டால் தமிளும் இலவச இணைப்பாக இடையிடையே வரும்.

பாகிஸ்தான் தீவிரவாதிகளையும் இந்தியாவைச் சேர்ந்த முஸ்லீம் தீவிரவாதிகளையும் பல படங்களில் விஜயகாந்த், அர்ஜுன், சரத்குமார், உன்னைப் போல் ஒருவனில் கமல், வேலாயுதத்தில் விஜய்.. இப்படி நிறையப் பேர் சேர்ந்து அழித்துக் கொண்டிருப்பதால், ஏஆர் முரகதாஸ் ஏதாவது புதிதாகச் செய்ய வேண்டும் என்பதற்காக சீனத் தீவிரவாதியை தன்னுடைய படத்தில் கொண்டு வந்திருக்கிறார்.

இந்தியாவில் இஸ்லாமியத் தீவிரவாதிகள் மட்டும் குண்டு வைப்பது இல்லை. இந்துத் தீவிரவாதிகளும் பயங்கரவாதச் செயல்களில் ஈடுபடுகிறார்கள். குஜராத் போன்ற தேசங்களில் பெரும் இனப் படுகொலைகளை நிகழ்த்தியிருக்கிறார்கள். பல குண்டு வெடிப்புக்களை நடத்தியிருக்கிறார்கள்.

ஆனால் இதுவரை எந்தக் கதாநாயகனுக்கும் இயக்குனருக்கும் இந்துத் தீவிரவாதிகளை அழித்து மக்களைக் காப்பது போன்று படம் எடுக்கத் தெரியவில்லை. தீவிரவாதிகள் என்றால் அவர்கள் தொப்பியும் தாடியுமாகத்தான் இருப்பார்கள் என்கின்ற நச்சுக் கருத்தை ஊட்ட மட்டும்தான் தெரிகிறது.

பாகிஸ்தான், சீன தீவிரவாதிகளை விடுவோம். சிங்களக் கடற்படையை அடித்து விரட்டி தமிழ் மீனவர்களை காக்கின்ற கதாநாயகனை இவர்களால் திரையில் காட்ட முடியுமா? சிறிலங்காவிற்கு உதவுகின்ற இந்தியாவை எதிர்க்கின்ற வசனங்களை வைக்க முடியுமா?

எதைக் காட்ட வேண்டும், எதைக் காட்டக் கூடாது என்பதில் எல்லோரும் தெளிவாக இருக்கிறார்கள்.

„ஏழாம் அறிவு' திரைப்படத்தில் தமிழன் பெருமை, வீரம், மொழி பற்றி நிறைய வசனங்கள் வருகின்றன. இந்தத் திரைப்படம் தெலுங்கிலும் வெளியிடப்படுகிறது. தமிழ் உணர்வு சார்ந்த வசனங்கள் தெலுங்கில் எப்படி மொழிமாற்றம் செய்யப்பட்டிருக்கும். சில வசனங்கள் தமிழ் என்பதற்கு பதிலாக தெலுங்கு என்று மாற்றப்பட்டிருக்கும். சில வசனங்களில் „தமிழன்' என்பது „.இந்தியன்' என்று மாறியிருக்கும். சில காட்சிகள் இல்லாமல் வெளியிடப்பட்டிருக்கும்.

நல்ல வேளை சிங்களத்தில் இந்தத் திரைப்படம் வெளியிடப்படவில்லை என்று ஆறதல் பட்டுக் கொள்ள வேண்டியதுதான்.

இன்றைக்கு பல தமிழ் இயக்குனர்கள் தமிழ் உணர்வோடும், ஈழத் தமிழர்களின்பால் அன்போடும், ஆதரவோடும் இருக்கின்றார்கள் என்பது உண்மைதான். ஏஆர் முரகதாஸும் தமிழ் இனத்தின் மீது பற்று நிரம்பியவரே. ஆயினும் இந்திய தேசியத்தை வளர்த்துக் கொண்டே தமிழ் தேசியத்தை போற்றுவதும் முரணானது என்கின்ற உண்மையை உணர மறுப்பவர்களாக இருக்கின்றார்கள்.

சத்தியராஜ் அண்மையில் நடந்த ஒரு விழாவில் ஒரு கருத்தை சொன்னார். மக்கள் தமிழினத்தை ஆதரிக்கின்ற படங்களை விரும்புகிறார்கள். ஆகவே அப்படியான படங்கள் தொடர்ந்து வரும் என்றார். அதற்கு உதாரணமாக அவர் சிலுக்கு சுமிதாவை காட்டியிருந்தார்.

உண்மையில் அவர் இப்படியான இயக்குனர்களை கிண்டல் அடிப்பதற்கு சொன்னாரா, அல்லது இந்த மாற்றத்தை வரவேற்றுப் பேசினாரா என்று தெரியவில்லை.

சிலுக்கு சுமிதா ஒரு சிறந்த உதாரணம்தான். ஒரு காலத்தில் அனைத்துப் படங்களிலும் அவர் இருந்தார். படத்தின் கதை எப்படியிருந்தாலும், ஏதோ ஒரு காட்சியில் சிலுக்கை கொண்டு வந்து விடுவார்கள். அவர் வருகின்ற அந்த ஐந்து நிமிடங்கள் படத்தின் வியாபாரத்திற்கு தேவையாக இருந்தது.

மிகவும் நடிப்புத் திறமை மிக்க சிலுக்கு வியாபாரத்திற்காக ஊறகாயாகப் பயன்படுத்தப்பட்டார்.

மற்றையபடி அவர் துன்பங்களில் உழன்று கடைசியில் தற்கொலை செய்யவேண்டிய நிலைக்குத் தள்ளப்பட்டார். அவருடைய மரண வீட்டிற்கு சென்ற திரையுலகைச் சேர்ந்தவர்கள் வெகு குறைவு.

இன்றைக்கு தமிழ் உணர்வு வியாபாரத்திற்கு மட்டும் திரைப்படங்களில் பயன்படுத்தப்பட்டால், நாளை சிலுக்கின் முடிவே தமிழுக்கும் நிகழும்.

  • கருத்துக்கள உறவுகள்

அத்துடன் முக்கியமாக தமிழினப் படுகொலைக்கு துணை போன காங்கிரசு அரசு கூட்டணியில் இருந்த கலைஞரின் பேரன் தயாரித்த படம்.

போதிதர்மன் தமிழரோ தெலுங்கரோ அல்லது பல்லவரோ எவரோ, ஏழாம் அறிவை பயன்படுத்தி அவரை இப்போது இந்தியராக்கியாச்சு.

  • கருத்துக்கள உறவுகள்

போதி தர்மன் ஒரு பல்லவ மன்னனின் மகன் என்று கருதப்படுகின்றான். இதில் பிரச்சனை என்னவென்றால் பல்லவர்கள் தமிழர்களா என்பது பற்றி பெருத்த கேள்வி இருக்கின்றது. பல்லவர்கள் வடமொழியை போற்றிப் பாதுகாத்து ஆட்சி செய்தவர்கள். வடக்கிலே இருந்து வந்தவர்கள் என்றும், பாரசீகத்தில் இருந்து வந்தவர்கள் என்றும், யாழ்ப்பாணத்தில் இருந்து சென்றவர்கள் என்றும், தெலுங்கு நாட்டை சேர்ந்தவர்கள் என்றும் பலவாறு பலர் வாதிடுவார்கள்.

போதிவர்மனின் டி.என்.ஏ இல்லாமல் இப்படத்தை எடுத்து இருக்கக்கூடாது. இப்படியான படங்கள் எடுப்பதற்கு டி.என்.ஏ எடுக்கப்பட்டு நிரூபிக்கப்பட்ட பின்னர் தான் எடுக்க வேண்டும்.

உதாரணத்துக்கு ராஜராஜ சோழனின் படத்தை எடுப்பது எனில் எப்படி எடுப்பது? .

அமெரிக்க வரலாறு பற்றி ஆயிரத்துக்கும் மேற்பட்ட புத்தகங்கள் ஆயிரம் விதமாக கூறுகின்றன.அப்படி இருக்கும் போது அமெரிக்க வரலாறு படமாக்கப்படவில்லையா??

ஆயினும் திரைக்கதையில் ஏற்பட்ட தொய்வு ரசிகனுக்கு பெருத்த ஏமாற்றத்தை கொடுத்து விட்டது. அதே வேளை „ஏழாம் அறிவு' திரைப்படத்தில் தமிழ் உணர்வு சார்ந்து வரும் வசனங்களுக்கு பலத்த கைதட்டல் திரையரங்குகளில் கிடைக்கின்றது. கூடவே தமிழ் உணர்வு வியாபாரமாக ஆக்கப்படுகிறது என்கின்ற விமர்சனமும் சேர்ந்தே வருகிறது.

இலங்கையில் தடை செய்யப்பட்ட படம் எப்படி வியாபார ரீதியாக வெற்றி பெற்றதாக கொள்ளலாம்.இலங்கையில் வெளியிட்ட சிடிகளில் கூட குறிப்பிட்ட வசனங்கள் துண்டிக்கப்பட்டுள்ளதாம்.

கூடவே தமிழ் உணர்வு வியாபாரமாக ஆக்கப்படுகிறது என்கின்ற விமர்சனமும் சேர்ந்தே வருகிறது.

இதை சொல்லி யாழ்களத்தில் நிறையவே வாங்கி கட்டியுள்ளேன்.

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.