Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

நாடுகடந்த தமிழீழ அரசாங்கத்தின் உத்தியோகபூர்வ மூன்றாவது அமர்வு!

Featured Replies

நாடுகடந்த தமிழீழ அரசாங்கத்தின் உத்தியோகபூர்வ மூன்றாவது அமர்வு!

நாடுகடந்த தமிழீழ அரசாங்கத்தின் உத்தியோகபூர்வ மூன்றாவது அமர்வு!

3rd%202.pngநாடுகடந்த தமிழீழ அரசாங்கத்தின் உத்தியோகபூர்வமான மூன்றாவது பாராளுமன்ற அமர்வு டிச-14 புதன்கிழமை அமெரிக்காவில் தொடங்கவுள்ளது.

நான்கு நாள் அமர்வாக இடம்பெறவுள்ள இந்தப பாராளுமன்ற கூட்டத் தொடரில் சுதந்திர தமிழீழ விடுதலைப் போராட்டத்துக்கான பல்வேறு விடயங்கள் கலந்தாய்வு செய்யபட இருப்தோடு நா.த.அரசாங்கத்தின் நேசநாட்டு பிரதிநிதிகள் பலரும் இதில் கலந்து கொள்ளவுள்ளனர்.

பல்வேறுவழிகளிலும் சிறப்பினைப் பெற்றுள்ள இந்த பாராளுமன்ற அமர்வு குறித்து நாடுகடந்த தமிழீழ அரசாங்கத்தின் பிரதமர் அலுவலகம் வெளியிட்டுள்ள உத்தியோகபூர்வ ஊடக அறிக்கையின் முழுவிபரம் :

நாடுகடந்த தமிழீழ அரசாங்கத்தின் உத்தியோகபூர்வமான மூன்றாவது அமர்வானது, டிசம்பர்-14 புதன்கிழமை முதல் டிசம்பர்-17 சனிக்கிழமை வரை அமெரிக்க-நியூ யோர்க் மாநிலத்தின் (Buffalo) பவலோ நகரத்தில் இடம்பெறவுள்ளது. மக்கள் பிரதிநிதிகளின் தெரிவுக்கமைய, கனேடிய ரொறன்ரோ நகரத்தின் எல்லையில் உள்ள பவலோ நகரமே இந்த அமர்வுக்காக தெரிவு செய்யப்பட்டது.

நாடுகடந்த தமிழீழ அரசாங்கத்தின் அரசியல் அமைப்பு தயாரிக்கப்பட்டு, உறுதிசெய்யப்பட்ட முதல் இரு அமர்வுகளின் பின்னர் இடம்பெறும் இந்த மூன்றாம் அமர்வானது பல்வேறு வழிகளிலும் முக்கியமுள்ளதாக அமையப்பெறுகின்றது.

எமது அரசாங்கத்தின் புதிய உறுப்பினர்களின் தெரிவினைத் தொடர்ந்து, ஒரு முழுமையான அவையாகக் கூடுகின்ற இந்த பாராளுமன்ற அமர்வின் போது, வரப்போகும் 2012ம் ஆண்டில், சுதந்திர தமிழீழப் போராட்டத்தை முன்னிறுத்தி, உலக அரங்கில் பல்வேறு முனைகளிலும் மேற்கொள்ளப்பட வேண்டிய முயற்சிகள் குறித்து ஆராயப்படவுள்ளது.

ஐக்கிய நாடுகளி சபையின் மனித உரிமைக் கூட்டத் தொடர் பற்றியும், தமிழர் தாயகத்தில் தொடர்ச்சியாக மேற்கொள்ளப்பட்டு வரும் வன்முறைகள், காணமல்போதல், சிங்களக் குடியேற்றங்கள் போன்ற பல்வேறு அநீதிகளை, உலகத்தின் கண்களின் முன் வெளிக் கொண்டுவரவேண்டிய பணி மேலோங்கியுள்ள நிலையில், அனைத்துலக சமூகத்தின் சிறிலங்கா பற்றிய நிலைப்பாட்டினையும், அதனையொட்டிய போராட்ட முயற்சிகள் குறித்தும் இந்த பாராளுமன்ற அமர்வில் கலந்தாய்வு செய்யப்படவுள்ளது.

நாடுகடந்த தமிழீழ அரசாங்கத்தின் நேசநாட்டுப் பிரதிநிதிகளும், அரசியல் பிரமுகர்களும் மற்றும் ஆய்வாளர்களும் சிறப்பு விருந்தினர்களாக கலந்து கொள்ளவுள்ளனர். அத்தோடு, நாடுகடந்த தமிழீழ அரசாங்கத்தின் மதியுரைக்குழுவும், இன ஒழிப்புத் தொடர்பாக ஆய்வு செய்வதற்கென அமைக்கப்பட்ட நிபுணர் குழுவும் சமவேளையில் கூடவுள்ளன.

அரசவையின் கூட்டத் தொடரானது இணையவழியாக, நிகழ நிகழ நேரஞ்சல் செய்யப்படவுள்ளது என்பதனையும் அறியத்தருகின்றோம்.

இவ்வாறு நா.த.அரசாங்கத்தின் பிரதமர் அலுவல உத்தியோகபூர்வ ஊடக அறிக்கையில்

தெரிவிக்கப்பட்டுள்ளது.

நாதம் ஊடக சேவை http://www.tgte.org/home

3rd%20sitting.jpg

  • கருத்துக்கள உறவுகள்

நன்றி தகவலுக்கு

பிரான்சிலிருந்து உள்த்துறை அமைச்சர் பாலச்சந்திரன் அவர்கள் ஏற்கனவே அங்கு சென்றுள்ளார்.

புறப்படுமுன் அவரைச்சந்தித்தேன்.

எனது அடுத்த விடுமுறை நாடுகடந்த தமிழிழத்திற்குத்தான்.

விசா எங்கு எடுப்பது ,ரிக்கெட் எப்படி போடுவது என விபரம் தெரிந்தவர்கள் யாரும் இருந்தால் அறிய தரவும்

எனது அடுத்த விடுமுறை நாடுகடந்த தமிழிழத்திற்குத்தான்.

விசா எங்கு எடுப்பது ,ரிக்கெட் எப்படி போடுவது என விபரம் தெரிந்தவர்கள் யாரும் இருந்தால் அறிய தரவும்

http://www.tgte.org/contact

  • கருத்துக்கள உறவுகள்

இதையும் பாருங்கோ! உங்களுக்கு ஒரு காலத்தில பிடித்த "நாடு கடந்த தீவு" இதுவல்லோ? :rolleyes:

http://maldives.visahq.com/

  • கருத்துக்கள உறவுகள்

இதையும் பாருங்கோ! உங்களுக்கு ஒரு காலத்தில பிடித்த "நாடு கடந்த தீவு" இதுவல்லோ? :rolleyes:

http://maldives.visahq.com/

சீ சீ

அந்தப்பழம் புளிக்கும்.........

  • கருத்துக்கள உறவுகள்

அந்தக்காலத்தில புங்குடுதீவைச் சேர்ந்த ஒரு குடும்பம் எமது வீட்டுக்கு அருகில் இருந்தது அது யாரெனில் மருதானையில கள்ளக்கூப்பன் அடித்து பொலீசில மாட்டுப்பட்ட ஆனந்தா அச்சகத்துக்கு தொடர்புடைய குடும்பம் அதில ரன்சன் என்பவர் யாழ் மத்திய கல்லூரியில் கல்விபயின்றவர் பள்ளிக்கூடம் போனதவிட அருகில் இருக்கும் சினிமாக் கொட்டகையை ஆக்கிரமிப்பதுதான் வேலை. தவறுதலாக தம்பி புளட்டோட சேர்ந்திட்டார் சோத்துப்பாசல் அதுஇது எண்டு அடிபட்டு முடிந்து. ஒருவழியாய் சுவிஸ் வந்துசேர்ந்துவிட்டார் பின்பு இங்கும் தனது வால்குணத்தைக்காட்டி இப்போது உள்ளுக்குள்ள எண்டு கேள்வி அவருக்கு சுவிஸ் அபிமானிகள் வைத்த பெயர் "புலிக்குட்டி"

  • கருத்துக்கள உறவுகள்

எனது ஊருக்கு ஒரு கரும்புள்ளி

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.