Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.
  • advertisement_alt
  • advertisement_alt
  • advertisement_alt

கொழும்பில் புலிகள் கைது: மஹிந்தரின் புத்தாண்டு புரளி

Featured Replies

  • கருத்துக்கள உறவுகள்

Mahinda-fats-cat-150x150.jpg

மஹிந்த இராஜபக்‌ஷவிற்கும் அவரது அரசிற்கும் புலிகள் பற்றி பேசாதுவிட்டால் ஆட்சியை கொண்டு நடத்த முடியாது என்பதனை அடிக்கடி நினைவூட்டிக்கொண்டே இருப்பார்கள். இன்று புத்தாண்டு புரளியாக மஹிந்த அரசு ஒரு செய்தியினை வெளியிட்டிருந்தார்கள். அதாவது சிறிலங்கா ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ உட்பட முக்கிய பிரமுகர்கள் பதினான்கு பேரைக் கொலை செய்யச் சதித் திட்டம் தீட்டியவரும் பலரைக் கொலை செய்தவருமான தமிழீழ விடுதலைப் புலிகளின் புலனாய்வுப் பிரிவின் கொழும்புப் பிராந்திய பொறுப்பாளர் உட்பட ஐவர் சிறிலங்கா பயங்கரவாத தடுப்புப் பிரிவினரால் கைது செய்யப்பட்டுள்ளனர் எனச் செய்திகள் வெளிவந்துள்ளன. கைது செய்யப்பட்ட போது புலிகளின் புலனாய்வுப் பிரிவின் கொழும்புப் பிராந்திய பொறுப்பாளர் சயனைட் அருந்தினார் என்றும் எனினும் அவர் உடனடியாக வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுக் காப்பாற்றப்பட்டார் எனவும் அந்தச் செய்திகள் மேலும் தெரிவிக்கின்றன.

சிறிலங்கா ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ, மற்றும் முன்னாள் இராணுவத் தளபதி சரத் பொன்சேகா உட்பட முக்கியஸ்தர்கள் பதினான்கு பேரைக் கொலை செய்ய இவர் சதித்திட்டம் தீட்டியிருந்தார். படுகொலை செய்யப்பட்ட முன்னாள் அமைச்சர் ஜெயராஜ் பெர்ணான்டோபுள்ளே, குண்டுத் தாக்குதலில் காயமடைந்த முன்னாள் அமைச்சர் மஹிந்த விஜயசேகர ஆகியோர் மீதான தாக்குதலுக்கும் இவரே முன்னின்று சதித்திட்டம் தீட்டினார் என்றும் அந்தச் செய்தியில் தெரிவிக்கப்பட்டுள்ளதுடன் இவ்வாறு கைது செய்யப்பட்டவர்களில் சிறிலங்கா பொலிஸ் சேவையைச் சேர்ந்த முன்னாள் உயரதிகாரி ஒருவர் உள்ளடங்குகிறார் என்றும் கூறியுள்ளது.

இவர்கள் அனைவரும் கொழும்பு, தெமட்டகொடைப் பிரதேசத்தில் வைத்துக் கைது செய்யப்பட்டுள்ளனர். இவர்கள் மீது பயங்கரவாததத் தடைச் சட்டத்தின் கீழ் விரைவில் வழக்குத் தாக்கல் செய்யப்படவுள்ளது. என்றும் அந்தச் செய்தியில் மேலும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

http://lankacnews.com/sinhala/news/40371/ ஆனால் ஜனாதிபதியை கொலை செய்ய முயற்சித்தார்கள், சரத் பொன்சேகாவை கொலை செய்ய முயர்சித்தார்கள்.ஜெயராஜ் பெனாண்டோ பிள்ளையை கொலை செய்தார்கள் என 2008 ஆம் ஆண்டில் இருந்து இதுவரை பலரை கைது செய்துள்ளார்கள் விசாரணையும் நடந்துவருகின்றது. ஆனால் யார்? எவர்? என்ன பெயர்? என்ற விபரங்களை மட்டும் வெளியிடமாட்டார்கள். புலிகளை பயங்கரவாதிகளாக சித்தரிக்க உள்ள நாட்டுப்பொய்களை எல்லாம் கூறும் அரசாங்கம் மேற்படி பிடிபட்டவர்களை சட்டத்தின் முன் நிறுத்தப்போவதாக கூறும் அரசாங்கம் ஏன் அவர்களின் விபரங்களை வெளியிடவில்லை?

http://www.tamilthai...ewsite/?p=2283#

  • கருத்துக்கள உறவுகள்

நீங்கள் இப்படி மகிந்த மேல பொய் சொல்லுறார் என்று சொல்லுறீங்கள்.. அவரே அறிவித்த புலிகள் அழிந்தனர் என்பதை எங்கட அறிவிலி அண்ணை இல்ல.. அது உண்மை தான் என்று அடிச்சுச் சொல்லுறார்..! சயனைட் அடிச்சது.. புலிதான்.. புடிச்சதும் புலிதான்.. என்று அறிவிலி அண்ணை கூட நிண்டிட்டு வந்து வேற சொல்லுறார். அந்த வகையில் மிச்சம் உள்ள புலிகளும்.. இந்திய றோ சொன்ன கணக்கா.. ஒருங்கிணைய வாய்ப்புள்ளதால்.. சரணடைந்த மிச்சாக்கள விடச் சொல்வது தற்கொலைக்கு சமன்.. ஒரு குட்டி இராணுவ முகாமை அகற்றுவது நாட்டின் பாதுகாப்பிற்கு அச்சுறுத்தல்.. என்று நாளைக்கு கோத்தா சொல்லுவார். அதனையும் எங்கட யாழ் கள அறிவிலி அண்ண வந்து உறுதிப்படுத்துவார். இதெல்லாம் எதனால.. அறிவிலி அண்ண சொல்லுறார்.. இதெல்லாம் மகிந்தருக்கு இருக்கும் போராளிகள் மேல உள்ள அலாதி விசுவாசத்தால தானாம். நாங்கள் வாயைப் பொத்திக்கிட்டு இருந்தாலே போதுமாம். மகிந்த போராளிகளை காப்பாராம்...! :rolleyes::o:icon_idea:

Edited by nedukkalapoovan

நீங்கள் இப்படி மகிந்த மேல பொய் சொல்லுறார் என்று சொல்லுறீங்கள்.. அவரே அறிவித்த புலிகள் அழிந்தனர் என்பதை எங்கட அறிவிலி அண்ணை இல்ல.. அது உண்மை தான் என்று அடிச்சுச் சொல்லுறார்..! சயனைட் அடிச்சது.. புலிதான்.. புடிச்சதும் புலிதான்.. என்று அறிவிலி அண்ணை கூட நிண்டிட்டு வந்து வேற சொல்லுறார். அந்த வகையில் மிச்சம் உள்ள புலிகளும்.. இந்திய றோ சொன்ன கணக்கா.. ஒருங்கிணைய வாய்ப்புள்ளதால்.. சரணடைந்த மிச்சாக்கள விடச் சொல்வது தற்கொலைக்கு சமன்.. ஒரு குட்டி இராணுவ முகாமை அகற்றுவது நாட்டின் பாதுகாப்பிற்கு அச்சுறுத்தல்.. என்று நாளைக்கு கோத்தா சொல்லுவார். அதனையும் எங்கட யாழ் கள அறிவிலி அண்ண வந்து உறுதிப்படுத்துவார். இதெல்லாம் எதனால.. அறிவிலி அண்ண சொல்லுறார்.. இதெல்லாம் மகிந்தருக்கு இருக்கும் போராளிகள் மேல உள்ள அலாதி விசுவாசத்தால தானாம். நாங்கள் வாயைப் பொத்திக்கிட்டு இருந்தாலே போதுமாம். மகிந்த போராளிகளை காப்பாராம்...! :rolleyes::o:icon_idea:

ரொம்ப குழம்பி போயிருக்கிங்களா சகோதரம்?

கோவம் கோவமா வருதா?

கவலையே வேணாம்!

புலத்துல இருக்குற நாங்களும் ........... முள்ளிவாய்க்ல அழிந்துபோன புலிகளும்தான் ,,, எல்லாமே புலிகள்னு இல்ல ... சாக்கிரட்ட்டீசுங்களா!

இடை நடுவில எவர் உதவியும் இல்லாம, அல்லாடிகிட்டு செத்துபோற , அந்த அப்பாவி ஜீவன்களை பத்தி எவனுக்கு கவலை வரும்?

அவன் அப்டி மாட்டிகிட்டு செத்தாலும்,, அதெல்லாம் நிஜமா இருக்காதுன்னு சொல்ல ஒரு ஈர மனசுவேணும்! நிஜமா அது எங்கிட்ட இல்ல!!

நானு யூத்னு சொல்ல ஒரு துணிவு வேணும்....

அது உங்க கிட்ட ஓவரா இருக்கு!

யாழ்ல உள்ள அண்ணா அக்காங்களுக்கு நிஜமாவே தெரியும் , நெடுக்கு ஆசைபட்டாலும், இனி அவர் வயசுக்கு பொண்ணு கெடைகாதுன்னு! :)

இப்படி மகிந்த கூட்டம் சொல்லுவது மூலம் ஒன்று தெளிவாகின்றது: அவர் மீது அழுத்தங்கள் அதிகரித்து செல்லுகின்றன.

  • கருத்துக்கள உறவுகள்

ரொம்ப குழம்பி போயிருக்கிங்களா சகோதரம்?

கோவம் கோவமா வருதா?

கவலையே வேணாம்!

புலத்துல இருக்குற நாங்களும் ........... முள்ளிவாய்க்ல அழிந்துபோன புலிகளும்தான் ,,, எல்லாமே புலிகள்னு இல்ல ... சாக்கிரட்ட்டீசுங்களா!

இடை நடுவில எவர் உதவியும் இல்லாம, அல்லாடிகிட்டு செத்துபோற , அந்த அப்பாவி ஜீவன்களை பத்தி எவனுக்கு கவலை வரும்?

அவன் அப்டி மாட்டிகிட்டு செத்தாலும்,, அதெல்லாம் நிஜமா இருக்காதுன்னு சொல்ல ஒரு ஈர மனசுவேணும்! நிஜமா அது எங்கிட்ட இல்ல!!

நானு யூத்னு சொல்ல ஒரு துணிவு வேணும்....

அது உங்க கிட்ட ஓவரா இருக்கு!

யாழ்ல உள்ள அண்ணா அக்காங்களுக்கு நிஜமாவே தெரியும் , நெடுக்கு ஆசைபட்டாலும், இனி அவர் வயசுக்கு பொண்ணு கெடைகாதுன்னு! :)

எதுக்கு சம்பந்தம் சம்பந்தமில்லாம உளறிக்கிட்டு இருக்கீங்க அண்ணாச்சி. ஏதும் பெளர்ணமி.. ஆமாவாசையின்னா நீங்க இப்படித் தானோ..??! :):lol::icon_idea:

  • கருத்துக்கள உறவுகள்

சிங்களம் இன்னும் புலிகளை வைத்து பூச்சாண்டி காட்டலாம் என மனப்பால் குடிப்பது அவர்களிடம் புழுகுவதற்கு எதுவும் இல்லை என்பதையே காட்டுகிறது.

இந்த சிங்களவன் புலியை காட்டியே உலகத்தை ஏமாத்த பார்க்கிறான் உலகமும் ஏமாந்தது போல் நடிக்குது

தலைஅவர் இப்போ உயிரோடு இருந்து(?) மீண்டும் மக்கள் முன் தோன்றுவாறாக இருந்தால் அவமானப்பட்டு வாழ்க்கை வெறுத்து போராட்டத்தை விட்டு ஓதுங்கி போய்டுவார்.................

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.