Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

பாதுகாப்பு ரீதியாக சிறிலங்காவை சார்ந்திருக்கிறது இந்தியா – எஸ்.எம்.கிருஸ்ணா

Featured Replies

  • கருத்துக்கள உறவுகள்

krishna-IFM.jpg

இந்தியா பாதுகாப்பு ரீதியாக சிறிலங்காவில் தங்கியுள்ளதாக இந்திய வெளிவிவகார அமைச்சர் எஸ்.எம்.கிருஸ்ணா, புதுடெல்லியில் இருந்து வெளியாகும் Business Standard இதழுக்கு வழங்கியுள்ள செவ்வி ஒன்றில் தெரிவித்துள்ளார்.

“சிறிலங்காவுடனான உறவுகள் முன்னேற்றமடைந்துள்ளன. ஆனால் அவர்கள் எப்போதும், விடுதலைப் புலிகளின் கொள்கையை பிரபாகரன் உயர்ந்த நிலைக்கு கொண்டு சென்றபோது கூட நன்றாக இருந்தனர்.

சிறிலங்காவுடன் இருதரப்பு உறவுகளைப் பேணிக் கொள்வதற்காக இந்திய அரசாங்கம் எந்தக் குழுவுக்கும் நேரடியாகவோ மறைமுகமாகவே உதவி வழங்கவில்லை.

பாதுகாப்பு ரீதியாக, நாங்கள் சிறிலங்காவில் தங்கியுள்ளோம். அங்கு பாதுகாப்புப் பற்றிய பாரிய கவலைகள் உள்ளன. அவை இந்தியப் பெருங்கடலில் இரு நாடுகளையும் பாதிக்கக் கூடியவை.

நாங்கள் தொடர்ந்தும் சிறிலங்காவை வலப்புறமாக வைத்துப் பார்க்கவே விரும்புகிறோம்.

சிறிலங்காவில் இடம்பெயர்ந்த மக்களின் புனர்வாழ்வுக்கு இந்தியா தொடர்ந்து உதவிகளை வழங்கும்.

நான் ஜனவரி 16ம் நாள் கொழும்புக்குச் செல்லவுள்ளேன்.

இரு நாடுகளுக்கும் இடையிலான உறவுகளைப் பலப்படுத்திக் கொள்வதற்கு இந்தியப் பயணத்தைப் பயன்படுத்திக் கொள்ளக் காத்திருக்கிறேன்.

எமது அயல்நாடுகளுடன் இருதரப்பு உறவுகளைப் பலப்படுத்திக் கொள்வது குறித்து நாங்கள் கரிசனை கொண்டிருக்கிறோம்.

மூன்றாவது நாடு (சீனா) ஒன்றுடனான அவர்களின் உறவுகள் கவலையளிக்கக் கூடியவை தான். ஆனால் எமது நலனை அவர்கள் மீது திணிக்க முடியாது.

அயல் நாடுகள் ஏனைய நாடுகளுடன் கொண்டுள்ள உறவுகளின் அணுகுமுறையை நாங்கள் மதிக்கிறோம்.

ஆனால் அவர்களுடனான எமது உறவுகளை நல்லெண்ணம் மற்றும் நல்ல அயலுறவுகளின் அடிப்படையில் வைத்துக் கொள்வதற்கு விரும்புகிறோம்.“ என்றும் அவர் மேலும் கூறியுள்ளார்.

http://www.puthinapp...?20120102105297

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

இந்தியா தனது பலவீனத்தை முதல்முறையாக மறைமுகமாக ஒத்தக்கொண்டுள்ளது. தமிழர்களை அழித்து சிங்களவனுக்கு அடிமையாகிவிட்டது. துப்பபக்கியை திராகத்தூக்கமுடியாமலும், காலில் விழமுடியாமலும் துவண்டுகொண்டுஇருக்கின்றார்கள். ஆனாலும் சதித்திட்டம் தீட்டுவதில் வல்லமை படைத்த இவர்களிடம் இலங்கை அரசு விழிப்புடன்; இருக்கவேண்டும். கமைததுக்கதைத்துக் காலில் விழுந்தே சதிசெய்யும் கூட்டம்.

நேரடிப்போரில் குதிக்கமாட்டார்கள். வீரப்பனிடம் கூடச் சதிதான் செய்தார்கள். பிரபாகரனிடம் அதேதான். ஒரு அரசுடன் நேரடிப்போரில் ஈடுபடமாட்டார்கள்என்பதற்கு இது இரண்டு சான்றுகளும் அதிகம் தான்

  • கருத்துக்கள உறவுகள்

புலிகளை அழிக்க முற்பட்டால் அவர்கள் காட்டுக்குள் ஓடி ஒளிந்துவிடுவார்கள் என்று எதிர்பார்த்தார்கள்..! :rolleyes:

  • கருத்துக்கள உறவுகள்

இலங்கை விவகாரத்தில் இந்தியாவின் பங்களிப்பு குறித்தான மக்களின் மன நிலை!- குரோனிக்கல் பத்திரிகை.

resize_20120102065526.jpg

வன்னியில் இறுதிக்கட்ட போரின் போது இடம்பெற்ற போர்க்குற்றங்கள், மனித உரிமை மீறல்கள் குறித்து சர்வதேச விசாரணை நடத்தப்படவேண்டும் என்ற கோரிக்கைக்கு இந்தியா அழுத்தம் கொடுக்கவில்லையென்ற விரக்தி இலங்கையில் தமிழர்களிடையே ஏற்பட்டுள்ளதென இந்திய ''டெக்கான் குரோனிக்கல்'' பத்திரிகை தெரிவித்திருக்கிறது.

டெக்கான் குரோனிக்கல் பத்திரிகையின் செய்தியாளர் பகவான் சிங் இலங்கையில் மேற்கொண்ட விஜயத்தை அடுத்து வரைந்திருக்கும் வடக்கு நிலவரம் சம்பந்தமான கட்டுரை ஒன்றிலேயே இவ்வாறு தெரிவிக்கப்பட்டுள்ளது.

வடக்கில் கிளிநொச்சி மற்றும் யாழ்ப்பாணம் ஆகிய பகுதிகளுக்குச் சென்ற மேற்படி செய்தியாளர் அங்குள்ள மக்களின் உணர்வுகளைப் பதிவு செய்துள்ளார்.

மீள்குடியேற்றம், இராணுவப் பிரசன்னம் உட்பட்ட பல விடயங்கள் குறித்து மக்களிடம் கேட்டறிந்த கருத்துகளையும் அவர் தனது கட்டுரையில் உள்ளடக்கியுள்ளார்.

இலங்கை விவகாரத்தில் இந்தியாவின் பங்களிப்பு குறித்தான மக்களின் மன நிலையையும் அவர் கட்டுரையில் பதிவுசெய்துள்ளார்.

அதில் அவர் மேலும் குறிப்பிட்டுள்ளதாவது:

இறுதிக்கட்ட ஈழப்போரின் போது இடம்பெற்ற போர்க்குற்றங்கள் தொடர்பாக சர்வதேச விசாரணை நடத்தப்பட வேண்டும் என்ற கோரிக்கைக்கு இந்தியா அழுத்தங் கொடுக்கவில்லை என்ற விரக்தி தமிழர்களிடையே ஏற்பட்டுள்ளது.

அத்துடன், புலம்பெயர்ந்த தமிழர்கள் மத்தியிலும் இந்தியாவின் அசமந்தப்போக்கு அதிருப்தியையும், ஆத்திரத்தையும் கிளறிவிட்டுள்ளது என்ற தகவல் வெளியாகியுள்ளது.

இது தொடர்பாக இலங்கை ஜனாதிபதி மஹிந்த ராஜபக்சவிற்கு கடுமையான அழுத்தம் கொடுத்தால், அவர் இந்தியாவைக் கைகழுவி விட்டு, சீனாவின் குடைக்குள் புகுந்துகொள்வார் என இந்தியா கவலை கொண்டுள்ளது.

அதேவேளை, ராஜபக்ச சீனாவின் மடியிலேயே அமர்ந்தவாறு உள்ளார் என கொழும்பிலுள்ள சிரேஷ்ட இந்திய அதிகாரி ஒருவர் குறிப்பிடுகிறார்.

இந்த சிரேஷ்ட இந்திய அதிகாரி நீண்ட காலமாக இலங்கை அமைச்சு மட்ட விவகாரங்களைக் கையாண்டு வருபவர் என்பது குறிப்பிடத்தக்கது.

http://www.thedipaar...ws.php?id=39201

Edited by nunavilan

  • கருத்துக்கள உறவுகள்

அழுத்தம் குடுக்காட்டிலும் பரவாயில்லை..! நந்திமாதிரி குறுக்கை நிக்குது..! :unsure:

இந்தியாவிற்கு ஆப்பிழுத்த குரங்கின் நிலைமை. சீனா சைக்கிள் காப்பில் கப்பலையே ஒட்டிவிட்டது. சீனா, புலி - அரசுடனான பேச்சுவார்ததை நேரங்களைப் பாவித்து கத்தியின்றி இரத்தமின்றி காந்தீய வழியில் 'checkmate '.

தமிழர் தரப்பும் கிடைக்கும் துருப்புக்களைப் பாவித்து இனத்தின் இருப்பிற்காக செயல்பட வேண்டும்.

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

இலங்கை இந்தியாவின் பிடியில் இருந்து நழுவி சீனாவின் பிடிக்குல் செல்லுகிறது என்பதே இவரது தகவல்.

இந்தியா எப்போதும் தமிழனை தனது எதிரியாகவே பார்த்து வருகின்றது இதை புரியாத சிலர் இந்தியா எதையோ பெற்று தரும் என்று கனவுகான்கின்றார்கள்

சீனாவின் கை மேலும் மேலும் ஓங்க வேண்டும்.

கிருஷ்ணா இப்படிச் சொல்வதற்கும் மாலைதீவு ஜனாதிபதி சொன்ன விடயத்திற்கும் நெருங்கிய தொடர்பு இருப்பது போல் தோன்றுகிறது.

இது வரையில் இவரது பேச்சுக்கள் இலங்கையை அச்சுறுத்தும் வகையிலிருந்து வந்தன. காங்கிரசிலிருந்தும் இலங்கையுடன் சிநேகிதமில்லாத உறவை வைத்திருந்தவர் என்றால் இவரை குறிப்பிட்டிருக்கலாம். இப்போது இலங்கையிற்கு போய் சோனியாவுக்காக சில சில அலுவல்களைக் கையாளவேண்டியிருக்கிறது. குரலில் பயமும் நடுக்கமும் கலந்த தொனி வரத்தொடங்கிருக்கிறது. மலையாளிகள் கையாளக் கஸ்டப்பட்ட இலங்கையை இவரால் கனவிலும் நினைக்க முடியாது. இது கீனா ரபானிக்கு கைகொடுப்பது போல இலகுவான விடையம் இல்லை

dfsdfsd.jpg.crop_display.jpg

Edited by மல்லையூரான்

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.