Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

டொராண்டோவில் இன்று

Featured Replies

  • தொடங்கியவர்

[size=1]

[size=4]விரைவில் வாகனத்தை டொராண்டோ மாநகர நகரபிதா யார் மீதோ இடிக்கப்போகின்றார். [/size][/size]

[size=1]

[size=4]இந்த டொராண்டோ மாநகர நகரபிதா தனக்கென ஒரு வாகன ஓட்டுனரை வைக்காமல் தான் ஒரு வரிப்பணத்தை சேமிப்பவன் என காட்ட முயலுகின்றார். ஆனால் அவர் தான் அளித்த தேர்தல் உறுதி மொழியின்படி இன்னும், குறிப்பாக முகாமைத்துவ செலவுகளை, குறைக்கவில்லை. [/size][/size]

  • Replies 427
  • Views 47.8k
  • Created
  • Last Reply
  • தொடங்கியவர்

[size=4]ஜாக் லேய்ட்டன் மறைந்து ஓராண்டு பூர்த்தி[/size]

[size=4]கனடிய எதிர்க்கட்சி தலைவராக இருந்து கடந்த வருடம் மறைந்த ஜாக் லேய்ட்டன் ஓராண்டு பூர்த்தி இன்று.[/size]

[size=4]இதையொட்டி கட்சிபேதங்களை மறந்து கனடா இவரை நினைவு கூருகின்றது.[/size]

[size=4]கனேடிய மற்றும் உலக உறவுகளும் கூட ஒரு நல்ல நண்பனை இழந்து ஒரு வருட[/size][size=4]ம் ஆகிவிட்டது.[/size]

[size=4]http://www.montrealgazette.com/news/national/Hundreds+pack+Parliament+Hill+Layton+memorial/7128376/story.html[/size]

IMG_2968-660x439.jpg

  • தொடங்கியவர்

[size=5]கனடாவில் தனிப்பட்ட நபர் ஒருவருக்கு உள்ள கடன் 26000CAD [/size][size=1]

[size=4]இதில் வீட்டு அடைமானம் இல்லை [/size][/size][size=1]

[size=4]பெருமளவு கடன் வாகத்திற்கு 18881[/size][/size][size=1]

[size=4]கடன் மட்டை கடன் 3500[/size][/size]

[size=1]

[size=4]பலரும் கடனை கட்டினாலும் இவர்கள் ஒரு ஆபத்தான நிலையில் அதாவது வேலையை இழந்தால் எவ்வாறு கட்டுவார்கள்?, என்ற நிலையில் உள்ளனர். [/size][/size]

[size=1]

http://www.moneyville.ca/article/1245843--average-canadian-owes-26-000-excluding-mortgage[/size]

  • தொடங்கியவர்

tamil_mirror_short_story.jpg

  • தொடங்கியவர்

[size=5]ஒன்றாரியோவில் [size=6]West Nile [/size]வைரஸ் காரணமாக 82 பேர் நோயுற்றார்கள்[/size]

[size=5][size=4]ஒன்றாரியோ மாகாணத்தில் கடந்த செவ்வாய்க்கிழமை வரை, 82 பேர் West Nile வைரஸ் தொற்றுக்கு உட்பட்டுள்ளதாக மாகாண பொதுச் சுகாதார அதிகாரிகள் தெரிவித்தார்கள்.

ஒன்றாரியோவில், மாகாணத்தின் தென் பகுதியில்தான் இதுவரை West Nile பரவியுள்ளது. நுளம்புகள் மூலமாக அந்த நோய் பரவுகிறது.

குபெக், அல்பேட்டா, மனிரோபா, சஸ்கெச்சுவான் ஆகிய மாகாணங்களிலும் West Nile வைரஸ் பரவியுள்ளபோதிலும், மிக அதிக பாதிப்பு ஒன்றாரியோவில்தான் ஏற்பட்டுள்ளது.

கனடாவில் இந்த ஆண்டு, West Nile காரணமாக யாரும் உயிரிழக்கவில்லை.

ஒன்றாரியோவில் 2002 ஆம் ஆண்டு அதிகளவாக 394 பேர் நோய்த்தொற்றுக்கு உட்பட்டு, 19 பேர் உயிரிழந்தமை குறிப்பிடத்தக்கது[/size].

[size=3]http://thamilfm.com/thamilfm/NewClients/NewsDetail.aspx?ID=12710[/size][/size]

  • தொடங்கியவர்

"வீடு நெடும் தூரம்" நூல் பெட்டகம் கனடா வந்தடைவதில்

தாமதம் ஏற்படுவதால் நிகழ்வு பிற்போடப்படுகிறது. அடுத்த மாதம் நிகழ்வு நடைபெறும். அனைவருக்கும் நிகழ்வுத் தேதியை அறிவிப்போம். நன்றி!

[size=3]

[size=4][size=4]அ.இரவி எழுதிய "பாலைகள் நூறு" (சிறுகதைத் தொகுப்பு), "வீடு நெடும் தூரம்" (அரசியல் புதினம்) ஆகிய நூல்களின் அறிமுக நிகழ்வு[/size][/size][/size]

[size=4]

அ.இரவி எழுதிய "பாலைகள் நூறு" (சிறுகதைத் தொகுப்பு), "வீடு நெடும் தூரம்" (அரசியல் புதினம்) ஆகிய நூல்களின் அறிமுக நிகழ்வு எதிர்வரும் [/size]

[size=4]செப்ரம்பர் மாதம் 15 ஆம் தேதி [/size]

[size=4]சனிக் கிழமை "சண் சிற்றி" பிளாசாவில் அமைந்துள்ள கனடா சபரிமலை ஐயப்பன் ஆலய மண்டபத்தில் நடைபெறவுள்ளது. [/size]

[size=4]எழுத்தாளர் அ.இரவி நிகழ்வுக்கு இலண்டனில் இருந்து வருகை தரவுள்ளார். [/size]

[size=4]அரசியல், கலை, இலக்கிய ஆர்வலர்கள் அனைவரையும் நிகழ்வுக்கு வருகை தருமாறு அழைக்கின்றோம். ஏற்கனவே ஒரு தடவை பிற்போடப்பட்ட இந் நிகழ்ச்சி இம் முறை தவறாது நடைபெறும் என்பதையும் தெரிவித்துக் கொள்ள விரும்புகின்றோம்[/size]

கனேடிய மண்ணில் ரி.வி.ஐ தொலைக்காட்சி வழங்கும் மாபெரும் இன்னிசைக் கொண்டாட்டம்!

[size=4]

கனடாவின் ரி.வி.ஐ தொலைக்காட்சி அதன் ஏழாவது வருட நிறைவை முன்னிட்டு மாபெரும் இன்னிசைக் கொண்டாட்ட நிகழ்வுக்கு ஏற்பாடு செய்துள்ளது.[/size][size=4]

வருகின்ற (செப்டெம்பர் 01 ,02 ) சனி ஞாயிறு தினங்களில் காலை 11 மணி முதல் இரவு 11 மணி வரை இந்த இசைச் சங்கமத்துக்கு சிறப்பான ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளது.[/size][size=4]

முற்றிலும் மாறுபட்ட வகையில் ஐரோப்பிய, ஆசிய மற்றும் வட அமெரிக்க இசைக் கலைஞர்கள் இணைந்து கலக்கும் இத்தகைய இசை நிகழ்வு கனேடிய தமிழ் மக்களுக்கு புதிது.[/size][size=4]

முற்றிலும் இலவசமாக வழங்கப்படும் இசைக் கொண்டாட்டத்துக்கு கனேடியத் தமிழ் மக்கள் திரண்டு வருவார்கள் என்று எதிர்பார்க்கப்படுகிறது.[/size]

[size=4]

securedownload-600x389.jpg[/size]

  • கருத்துக்கள உறவுகள்

[size=5]மக்கள் வெள்ளத்தில் கரைபுரண்ட இளைய கலைஞர்கள் தேர்வு விழா: - camera_icon.jpeg[/size]

CMR2012-events-150.jpg

[size=4]ரொறன்ரோவில் 2009ம் ஆண்டின் பின்னரான காலப்பகுதியில் பெருந்திரளான மக்கள் கலந்து சிறப்பித்த சமூக நிகழ்வாக கடந்த சனிக்கிழமை இடம்பெற்ற சி.எம்.ஆர் நட்சத்திர தேடல் இடம்பெற்றது. தென்னாசிய சமூகத்திலிருந்து இளைய கலைஞர்களைத் தேர்வு செய்யும் நிகழ்வாக இது இடம்பெற்றது.[/size]

[size=4]மார்க்கம் பேர் திறந்தவெளியரங்கில் இடம்பெற்ற இந் நிகழ்வில் கலந்து கொண்ட மக்கள் எண்ணிக்கை கட்டுப்படுத்த முடியாத அளவிற்கு இருந்தது என்பதோ மேற்படி திறந்தவெளியரங்கிற்கான வாகன தரிப்பிடங்கள் அனைத்தும் நிரம்பி மக்கள் தெருவோரங்களில் வாகனங்களை நிறுத்தியதால் அப் பிரதேச வாகனப் போக்குவரத்தும் நெருக்கடிக்குள்ளானது.[/size]

[size=4]சமூகக் கண்ணோட்டத்துடன் தமிழ்த் சமுதாய ஒன்றிணைவிற்காக இலவசமாகவே நடத்தப்பட்ட இந்த நிகழ்வில் தமிழகத்திலிருந்து வந்திருந்த கலைஞர்களுடன் ரொறன்ரோக் கலைஞர்களும் இணைந்து வழங்கிய இரவு இன்னிசை நிகழ்வில் 50 ஆயிரத்திற்கும் மேற்பட்ட மக்கள் கலந்து கொண்டது புலம்பெயர்ந்த தமிழ் மக்கள் வளர்ந்து வரும் இளம் கலைஞர்களிற்கு வழங்கும் ஆதரவினை எடுத்துக் காட்டியது.[/size]

[size=4]ரொறன்ரோ நகரிற்கே கட்டியம் கூறும் வகையில் புதுவகையான விளம்பர அறிவித்தல்கள் மூலம் மக்களைச் சென்றடைந்த இந்த நிகழ்விற்காக ரொறன்ரோ பெருந்தெருக்களில் அமைந்திருந்த விளம்பரப் பலகைகளும் முதன்முறையாகப் பயன்படுத்தப்பட்டன.[/size]

[size=4]கனடிய தமிழ் மக்களின் இதயநாதமாக கடந்த பல வருடங்களாக இயங்கிவரும் கனடியப் பல்கலாச்சார வானொலி புலம்பெயர்ந்த கலைஞர்களையும் மக்களையும் மேம்படுத்தும் செயற்பாடுகளை தன்னலமற்ற முறையில் தொடர்ந்தும் செய்து வருகிறது.[/size]

[size=4]-ரொறன்ரோ செய்தியாளர்-[/size]

[size=4]

CMR2012-events-001.jpg[/size]

[size=4]

CMR2012-events-002.jpg[/size]

[size=4]

CMR2012-events-003.jpg[/size]

[size=4]

CMR2012-events-004.jpg[/size]

[size=4]

CMR2012-events-005.jpg[/size]

[size=4]http://www.seithy.com/breifNews.php?newsID=66083&category=TamilNews&language=tamil[/size]

[size=4]

தலையில் 2020 ஊசிகளை ஏற்றி கின்னஸ் உலகசாதனையை நிலைநாட்டிய கனடா வாழ் ஈழத்தமிழரான சிவநாயகம் மோகனதாஸ் மீண்டும் அந்த சாதனையை முறியடித்து புதிய உலக சாதனையைப் படைக்கவுள்ளார்.[/size][size=4]

புற்று நோயாளிகளுக்கு நிதியைத் திரட்டும் சமூக சேவை நோக்கோடு 3000 ஊசிகளை தலையில் ஏற்றும் நேரடி நிகழ்வு (02-09-2012) கனேடிய நேரம் அதிகாலை இரண்டு மணியளவில் ஆரம்பமாகியுள்ளது.[/size][size=4]

48 மணி நேரம் இடம்பெறும் இந்த உலகசாதனை நிகழ்வு கனடாவின் ரொறன்ரோ பிரதேசத்தின் 7200, Markham Rd, UNIT 2A, (Markham & Denison) என்ற முகவரியில் உள்ள Pleasant Banquet Hall இல் இடம்பெற்று வருகின்றது.[/size][size=4]

தன்னை வருத்தி பிறருக்கு உதவுகின்ற இந்த சாதனைத் தமிழனின் நிகழ்வை வெளி உலகுக்கு கொண்டு வர சர்வதேச மீடியாக்கள் காத்திருக்கின்றன.[/size][size=4]

guniss.gif[/size][size=4]

[/size]
  • கருத்துக்கள உறவுகள்

இந் நிகழ்வை பார்க்கும் போதே... மயிர் கூச்செறிகின்றது.

சிவநாயகம் மோகனதாஸ் அவர்களின் நல்ல நோக்க‌த்திற்காக... இச் சாதனை முயற்சியில், வெற்றி பெற வாழ்த்துகின்றேன்.

  • தொடங்கியவர்

[size=5]புதிய இடத்தில் கனேடிய தமிழர் பேரவை - CTC [/size]

[size=5]-------------------------------------------------------------[/size]

[size=5]Hello everyone,[/size]

[size=3]

[size=5]You are invited to come and celebrate our new office:[/size][/size]

[size=3]

[size=5]When: Friday, September 7, 2012[/size][/size][size=3]

[size=5]Time: 6:30 pm to 9:00 pm[/size][/size][size=3]

[size=5]Where: New CTC Head office - 10 Milner Business Court, Suite 513[/size][/size][size=3]

[size=5](Markham Road & Milner), Scarborough, ON M1B 3C6[/size][/size][size=3]

[size=5]Tel: 416-240-0078[/size][/size]

[size=3]

[size=5]Hope to see you all,[/size][/size]

[size=3]

[size=5]Raj Thavaratnasingham[/size][/size][size=3]

[size=5]for the board of Directors[/size][/size][size=3]

[size=5]CTC[/size][/size]

  • தொடங்கியவர்

[size=5]ஒன்றாரியோவின் இரண்டு சட்டசபைத் தொகுதிகளில் இன்று இடைத் தேர்தல் வாக்களிப்பு![/size]

[size=4]ஒன்றாரியோவின் கிச்சினர் - வோட்டர்லூ (Kitchener—Waterloo) மற்றும் வோன் தொகுதிகளில் இன்றைய தினம் இடைத்தேர்தல் நடைபெறுகிறது.[/size]

[size=4]இந்த இரண்டு தொகுதிகளிலும், ஆளும் லிபரல் கட்சி வெற்றி பெற்றால், மாகாணத்தின் சிறுபான்மை லிபரல் அரசு பெரும்பான்மை அரசாக மாறுமென்பதால், அந்தத் தேர்தல்கள் முக்கியத்துவம் பெறுகின்றன.

நீண்டகாலமாக லிபரல் கட்சியின் வசம் இருந்து வந்த வோன் தொகுதியில் அந்தக் கட்சி வெற்றி பெறுமென ஏனைய கட்சியினர் ஏற்றுக் கொள்வதாக ரொறன்றோ ஸ்ரார் ஏடு குறிப்பிடுகிறது.

கிச்சினர் - வோட்;டர்லூ தொகுதியில் என்டீபீ வேட்பாளர், 42 சதவீத ஆதரவைப் பெற்று முன்னணியில் உள்ளதாகவும், லிபரல் மற்றும் புறோகிறசிவ் கொன்சவேற்றிவ் வேட்பாளர்கள் ஒவ்வொன்றும் 26 சதவீத ஆதரவைப் பெற்றுள்ளதாகவும் அண்மையில் வெளியான கருத்துக் கணிப்பொன்று காட்டுகிறது.[/size]

http://thamilfm.com/thamilfm/NewClients/NewsDetail.aspx?ID=12743

  • கருத்துக்கள உறவுகள்

படித்து முடித்துவிட்டு $27.000 கடனோடு வாழ்க்கை தொடங்கும் கனேடிய மாணவர்கள்.

கனடாவில் சராசரி வருமான உயர்வையும், விலைவாசி உயர்வையும் விட கல்விக் கட்டணம் மூன்று மடங்கு அதிகரித்துள்ளது தற்போது தெரியவந்துள்ளது.

கடந்த 1990ஆம் ஆண்டு முதல் கட்டாயக் கல்விக் கட்டணம் 6.2 சதவிகிதம் ஆண்டொன்றுக்கு உயர்ந்து வருகிறது. ஆனால் பணவீக்கம் 2 சதவிகிதம் என்ற அளவு தான் உள்ளது என்று கொள்கை மாற்றங்களுக்கான கனடா மையம் தனது அறிக்கையில் தெரிவித்துள்ளது.

கனடா பல்கலைக்கழகங்களில் தற்போது சராசரியாக ஒரு வருடத்துக்குரிய கல்விக் கட்டணம் 6186 டொலராகும். இக்கட்டணத்தில் உணவு, புத்தகம் மற்றும் விடுதிச் செலவு சேர்க்கப்படவில்லை.

இடதுசாரிச் சிந்தனையாளர்கள் இக்கல்விக் கட்டணம் வரும் நான்காண்டுகளில் 7330 டொலராக உயரக்கூடும் என்று கருதுகின்றனர்.

நியுஃபவுண்ட்லாண்ட், லேப்ரடார் போன்ற குறைந்த கட்டணச் செலவுடைய மாநிலங்களில் 2861 டொலர் ஆகவும், கியூபெக்கில் 3278 டொலராகவும், ஒண்டோரியோ, ஆல்பெர்ட்டா மாநிலங்களிலும் முறையே 7513 மற்றும் 7330 டொலராகவும் இருக்கும்.

எதிர்வரும் நான்காண்டுகளில் நியுஃபவுண்ட்லாண்டில் குறைந்த கட்டணமாக 2893 டொலரும், ஒண்டோரியோவில் அதிகக் கட்டணமாக 9231 டொலரும் வசூலிக்கப்படலாம்.

கட்டண உயர்வு குறித்த அறிக்கையை தயாரித்தவர்களில் ஒருவரான எரிக்கா சேகர், நடுத்தர குடும்பங்களை கல்விக் கட்டண சுமை அழுத்துகிறது. அரசும் கட்டணத்தைக் குறைக்காமல் கடனை உயர்த்தியும் திருப்பிச் செலுத்தும் முறைகளை எளிமைப்படுத்தியும் தருகிறது.

மேலும் படித்து முடித்துவிட்டு ஒருவர் வேலைக்குப் போகும் போது சராசரியாக 27000 டொலர் கடனோடு தனது வாழ்க்கையைத் தொடங்குகிறார் என்றார்.

http://www.thedipaar.com/news/news.php?id=51969

  • கருத்துக்கள உறவுகள்

ஈழத்தில் இருக்க முடியாமல் அகதிகளாக வரும் தமிழர்களை எதிரியாக பார்க்கும் கனடா!

கனடா முன்னர் இங்கு அகதிகளாக வந்த வெளிநாட்டவர்களை வரவேற்பதில் உலக நாடுகளுக்கு ஒரு முன்மாதிரியான நாடாக விளங்கியது.

உலக நாடுகள் பல, தங்கள் நாடுகளின் அகதிகள் தொடர்பான நடைமுறைகளை அமுல் செய்வதற்கு கனடாவின் வழிகளைப் பின்பற்றின. ஆனால் தற்போதை கொன்சர்வேர்ட்டிவ் அரசாங்கமும் அதன் குடிவரவு மற்றும் பிரஜாவுரிமைகள் அமைச்சர் ஜெய்சன் கென்னியும் கனடாவிற்கு வரும் அகதிகளை கனடாவின் எதிரிகளாகவே பார்க்கின்றார்கள்.

அதுவும் குறிப்பாக இலங்கை போன்ற ஆசிய நாடுகளிலிருந்த வரும் அகதிகளை சிறைகளில் அடைக்கும் சட்டங்களையும் பாராளுமன்றத்தில் சமர்ப்பித்து அதை சட்டமாக்கவும் முயலுகின்றார்கள்.

இதேவேளை குறிப்பிட்ட சில நாடுகளிலிருந்து வரும் அகதிகளை மட்டுமே கடனா ஏற்றுக்கொள்ள வேண்டும் என்ற கட்டுப்பாட்டையும் அமுல் செய்வதில் அமைச்சர் ஜெய்சன் கென்னி மிகவும் கண்டிப்பாக உள்ளார்.

தனி ஒரு மனிதனான அவர் எவ்வாறு அகதிகள் தொடர்பான சட்டங்களை தனது சொந்த விருப்பத்தின் படி செய்ய முடியும் என்றே லிபரல் கட்சியினராகிய நாங்கள் கேட்கின்றோம். என நேற்று மாலை கனடாவின் ரொரென்ரொ நகரில் உள்ள மண்டபம் ஒன்றில் நடைபெற்ற கருத்தரங்கொன்றில் லிபரல் கட்சியின் வினிப்பெக் தொகுதியின் பாராளுமன்ற உறுப்பினரும் லிபரல் கட்சியின் குடிவரவு தொடர்பான விவகாரங்களுக்கான பாராளுமன்ற பேச்சாளருமான கெவின் லெமொறொக்ஸ் தெரிவித்தார்.

“Defending our Immigration System” என்னும் தலைப்பில் நடைபெற்ற மேற்படி கருத்தரங்கில் ஸ்காபுறோ அஜின்கோர்ட் தொகுதியின் பாராளுமன்ற உறுப்பினரும் லிபரல் கட்சியின் பல்கலாசார விவகாரங்களுக்கான |பேச்சாளருமான ஜிம் கரிஜியானிஸ் மற்றும் குடிவரவு துறை சார்ந்த சட்டத்தரணி திருமதி அஞ்சலா ஆகியோரும் உரையாற்றினார்கள்.

அங்கு உரையாற்றிய பாராளுமன்ற உறுப்பினர் கெவின் தொடர்ந்து தெரிவிக்கையில்,

“தற்போதைய கொன்சர்வேர்ட்டிவ் அரசாங்கம் அதன் பிரதமர் ஸ்ரீபன் கார்ப்பரும், கனடா வரும் அகதிகளுக்கும், வெளிநாட்டிலிருந்து வரும் புதிய குடிவரவாளர்களுக்கும் பல பாதகமாக நடந்த கொள்கின்றனர்.

குறிப்பாக அரசாங்கத்தின் குடிவரவு அமைச்சர் ஜெய்சன் கென்னி தனது சொந்தக் கருத்துக்களின் படி செயற்பட்டு வருகின்றார். அவரது சி-31 என்னும் புதிய சட்டமானது எதிர்காலத்தில் கனடாவிற்கு வரும் அகதிகளை மிகவும் மோசமாக பாதிக்கவுள்ளது.

அவரது எண்ணத்தின் படி கனடாவிற்கு வரும் அகதிகளை அவர் எதிரிகளாகவே பார்க்கின்றார். அவரைப் போலவே கனடிய மக்களும் அகதிகளை எதிரிகளாகவே பார்க்க வேண்டும் என்று வற்புறுத்துகின்றார்.

அத்துடன் அகதிகள் விவகாரம் மிகவும் மோசமான நிலைக்கு தள்ளப்பட்டுள்ள இந்த அரசாங்கத்தின் காலத்தில் கனடாவிற்கு குடிவரவாளர்களாக வந்து மூன்று வருடங்களில் கனடிய பிரஜாவுரிமை பெற வேண்டிய ஒரு லட்சத்திற்கும் அதிகமான மக்கள் அரசாங்கத்தின் மந்தமான செயற்பாடு காரணமாக மேலும் இரண்டு அல்லது மூன்று ஆண்டுகள் காத்திருக்க வேண்டியுள்ளது.

அரசாங்கத்தின் இந்த செயலானது குடிவரவு அமைச்சர் மீது எமக்கு நம்பிக்கையின்மையை ஏற்படுத்துகின்றது. இந்த நாட்டுக்கு வந்து கனடாவிற்கு விசுவாசமாக உழைத்துவரும் வெளிநாட்டவர்களை தாமதமாக குடியுரிமை பெறவைக்கும் சதி என்றே எமது கட்சி கருதுகின்றது. ஏனென்றால் முன்னைய காலத்தில் புதிய குடிவரவாளர்கள் கொன்சர்வேர்ட்டிவ் கட்சிக்கு தங்கள் ஆதரவை வழங்கவில்லை என்றார்.

அங்கு உரையாற்றிய பாராளுமன்ற உறுப்பினர் ஜிம் கரிஜியானிஸ் தனது பேச்சின் போது பின்வருமாறு தெரிவித்துள்ளார்.

“கனடாவின் குயடிவரவு அமைச்சர் ஜெய்சன் கென்னியிடம் நாம் பல தடவைகள் நேரடியாவே கேட்டோம். குடிவரவு சட்டங்களில் எதாவது மாற்றங்கள் செய்யும்போது எதிர்க்கட்சியினராக எங்களிடமோ அல்லது அகதிகள் விவகாரங்கள் தொடர்பாக பணியாற்றிவரும் அமைப்புக்களிடமோ ஆலோசனைகளைப் பெற்று சட்டங்களை வரையும் படி கேட்டோம்.

ஆனால் “யெஸ்” என்று தலையை ஆட்டியபடி அவர் போய்விடுவார். ஆனால் அடுத்து வரும் நாட்களில் அவர் மிகவும் மோசமான சட்டங்களை அறிவித்து கனடாவிற்கு வரும் அகதிகளை பயமுறுத்தும் வகையில் நடந்து கொள்வார்.

அமைச்சர் ஜெய்சன் கென்னி அகதிகளை மட்டும் பாதிப்படையச் செய்யவில்லை. கனடாவில் குடியுரிமை பெற்றும் தங்கள் பிறந்த நாட்டில் உள்ள தமது தாய் தந்தையரை கனடாவிற்கு அழைப்பதிலும் கடுமையான சட்டங்களை அமுல் செய்யவுள்ளார்.

எனவே நாம் அனைவரும் ஒன்று சேர்ந்து நமது எதிர்காலத்தை பாதி;க்கும் வகையில் குடிவரவுச் சட்டங்களை அமுல் செய்யும் கொன்சர்வேட்டிவ் அரசாங்கத்தை எதிர்க்க வேண்டும். அல்லது பதிவியிலிருந்து விலக்க வேண்டும் என தெரிவித்துள்ளார்.

http://www.thedipaar.com/news/news.php?id=51966

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

ஈழத்தில் இருக்க முடியாமல் அகதிகளாக வரும் தமிழர்களை எதிரியாக பார்க்கும் கனடா!

84ல்லை அண்ணன் அகதியாய் கனடாவுக்கு வந்தார்....உழைச்சார்...சின்ன வீட்டை கோபுரமாக்கினார்......சிற்ரிசன் எடுத்தார்.....ஊருக்கு போனார்....பெத்ததுகளையும்...கூடப்பிறந்ததுகளையும் பார்த்தார்....திரும்பி கனடாவுக்கு வந்தார்...அதுவும் ஒரு பிரச்சனையுமில்லாமல்...ஏனெண்டால் சிங்கம் கனடா சிற்ரிசனெல்லோ?வந்து கொஞ்ச நாளையாலை...தனக்குப்புடிச்ச சிங்காரியை ஸ்பொன்சர் பண்ணி கூப்பிட்டு தாலிகட்டி எல்லாத்தையும் முடிச்சு...இரண்டு பிள்ளையளுக்கு முதலாளி ஆகீட்டார்.....இப்பதான் கதை தொடங்குது கண்டியளோ!!!!!ஊரிலை இருக்கிற உடன்பிறப்புகள் தாங்களும் கனடாவுக்கு வரோணுமெண்டு அண்ணனோடை அடம்புடிக்க வெளிக்கிட......அண்ணையும் அண்ணியும் வாயைவயித்தை கட்டி ஒருத்தனை வெளியிலை எடுத்து விட்டினம்....வந்தவனும்...நாயக்கர் ரேஞ்சிலை பந்தா காட்ட கனடாபொலிசும் இவரை வந்த வேகத்திலை உள்ளுக்கு தள்ள.......அண்ணனும் பட்டகடனோடை இன்னொரு உடன் பிறப்பை வெளியிலை எடுத்து விட்டார்.......இப்ப வந்தவன் வலு விசயகாரன் கண்டியளோ.....அடக்கொடுக்கமாய் அண்ணன் காட்டிய வழியில் வேலைக்கு ஒழுங்கு...குடி வெறியில்லை....எடுக்குற சம்பளத்தை அப்பிடியே என்பலப்புக்கை மடிப்பு குலையாமல் வைச்சு எடுப்பான்......கோயில் குளத்திலையும் ஒரு குறையுமில்லை.....அப்பிடி ஒரு தங்கப்பவுண்......இப்பிடி நாலஞ்சு மாதங்கள் ஓட.....சிங்கனுக்கும் தன்ரை சிங்கியை வெளியிலை எடுக்கோணுமெண்டு ஆசை வந்துட்டுது....இவரும் வாயைவயித்தை கட்டி சிங்கியை வெளியிலை எடுத்தாச்சு... ----? --- ---- -----!!!! --- ---- --இப்ப இரண்டு பேரும் கனடா சிற்ரிசன் கண்டியளோ....டட்டாங்ங்ங்ங்..................இப்ப இரண்டு பேரும் கனடாவிலை பதிவுத்திருமணம் செய்யினமாம்.........செய்தாச்செல்லோ......இனி எங்கடை முறைப்படி கலியாணம் ஊரிலைதான்.....ஏனெண்டால் எங்கடை ஊரிலை கலியாணம் செய்யுமாப்போலை வருமே?அதோடை எங்கடை சொந்தம் முழுக்க ஊரிலைதானே இருக்கினம்.....இதுக்கு மிஞ்சி என்னாலை எழுதேலாமல்க்கிடக்கு வயித்தை பிரட்டுது

அ.இரவி எழுதிய "பாலைகள் நூறு" (சிறுகதைத் தொகுப்பு), "வீடு நெடும் தூரம்" (அரசியல் புதினம்) ஆகிய நூல்களின் அறிமுக நிகழ்வு

அ.இரவி எழுதிய "பாலைகள் நூறு" (சிறுகதைத் தொகுப்பு), "வீடு நெடும் தூரம்" (அரசியல் புதினம்) ஆகிய நூல்களின் அறிமுக நிகழ்வு எதிர்வரும்

செப்ரம்பர் மாதம் 15 ஆம் தேதி

சனிக் கிழமை "சண் சிற்றி" பிளாசாவில் அமைந்துள்ள கனடா சபரிமலை ஐயப்பன் ஆலய மண்டபத்தில் நடைபெறவுள்ளது.

எழுத்தாளர் அ.இரவி நிகழ்வுக்கு இலண்டனில் இருந்து வருகை தரவுள்ளார்.

அரசியல், கலை, இலக்கிய ஆர்வலர்கள் அனைவரையும் நிகழ்வுக்கு வருகை தருமாறு அழைக்கின்றோம். ஏற்கனவே ஒரு தடவை பிற்போடப்பட்ட இந் நிகழ்ச்சி இம் முறை தவறாது நடைபெறும் என்பதையும் தெரிவித்துக் கொள்ள விரும்புகின்றோம்

எத்தனை மணிக்கு நடைபெறுகின்றது?

  • தொடங்கியவர்

எத்தனை மணிக்கு நடைபெறுகின்றது?

[size=4]காலம் -: 15.09.2012 , சனிக்கிழமை , மாலை 5.30 மணி[/size]

=====================

[size=6]தரம் 2-11க்கான தமிழ், பொது அறிவு, கணித போட்டிப் பரீட்சை[/size]

[size=5] Date: 2012-09-15 at 9:00 am[/size][size=3]

[size=5]Address: Scarborough Civic Centre, 150 Borough Drive, Scarborough, ON Canada

தரம் 2-1க்கான தமிழ், பொது அறிவு, கணித போட்டிப் பரீட்சை

Phone: 416.421.6469, 416.230.5506[/size]

[/size]

[size=6]Scarborough Rouge River Community BBQ by Rathika Sitsabaiesan, MP[/size]

[size=3]

[size=5]Date: 2012-09-15 at 11:00 am[/size][/size][size=3]

[size=5]Address: Neilson Park (North side by the Gazebo), Scarborough, ON Canada[/size][/size]

[size=5]I invite you all to come and celebrate the end of summer at my Annual MP BBQ. There will be lots of fun to be had by all. I hope to see you all there. MP Rathika Sitsabaiesan (Scarborough-Rouge River)

Contact:

Name: Rathika Sitsabaiesan

Phone: 416.298.4224

Email: Rathika.Sitsabaiesan@parl.gc.ca[/size]

  • தொடங்கியவர்

[size=4]ரீரீசீ நிலக்கீழ் தொடரூந்து மோதிப் பணியாளர் ஒருவர் உயிரிழந்தார்.[/size]

[size=4]ரீரீசீ நிலக்கீழ் தொடரூந்து மோதியதன் காரணமாக, ரீரீசீ பணியாளர் ஒருவர் உயிரிழந்து, மற்றொருவர் காயமடைந்தார்.

யோர்க்டேலின்; (Yorkdale) அருகில், நிலத்தின் மேலான தொடரூந்துப் பாதையில், பணியாளர்களையும், கருவிகளையும் தொடரூந்துப் பாதையின் பல்வேறு இடங்களுக்கும் எடுத்துச் செல்லும் தொடரூந்து மோதியதால் உயிரிழப்பு ஏற்பட்டது.

அதனையடுத்து, Downsview மற்றும் லோறன்ஸ் வெஸ்ட் நிலையங்களுக்கு இடையில் தொடரூந்து சேவை நிறுத்தப்பட்டது. அந்தப் பகுதியில் பேருந்துகள் பணியில் ஈடுபடுத்தப்படும். Downsview வில் உள்ள தொடரூந்துச் சாலையில் இருந்து தொடரூந்துகளை வெளியே கொண்டு செல்வதில் நிலவும் சிரமம் காரணமாக, Yonge - University - Spadina தொடருந்துப் பாதையில் மட்டுப்படுத்தப்பட்ட அளவு சேவைதான் இடம்பெறுமென தெரிவிக்கப்பட்டது.

http://thamilfm.com/thamilfm/NewClients/NewsDetail.aspx?ID=12789[/size]

[size=5]XL Foods மாட்டிறைச்சிகளை உட்கொள்ள வேனாடாம் " - கனடிய உணவு பாதுகாப்பு அமைப்பு மக்களிடம் வேண்டுகோள்[/size]

நிறுவனம் தயாரிப்பில் விற்கப்பட்டு வரும் பல வகையான மாட்டிறைச்சிகளில் இ கோலி நச்சுக்கிருமி அச்சம் ஏற்பட்டுள்ளதால் இந்த வகையான மாட்டிறைச்சி உணவுகளை வாங்கி உண்ண வேண்டாம் என கனடிய உணவு பாதுகாப்பு அமைப்பு மக்களை எச்சரித்துள்ளது. கனடிய உணவு பாதுகாப்பு அமைப்பின் எச்சரிக்கையை தொடர்ந்து தங்கள் நிறுவனத் தயாரிப்புக்களை மீளப்பெற்றுக் கொள்வதாய் XL Foods நிறுவனம் அறிவித்துள்ளது.

ஒன்ரோறியோவில் கனடிய உணவு பாதுகாப்பு அமைப்பினால் தடை செய்யப்பட்டுள்ள மாட்டிறைச்சி வகைகள் :

cowmeet.jpg

இ-கோலி என்பது ஒரு உயிர்கொல்லி பாக்டீரியா. காஸ்ட்ரோகுன்டஸ்டைனல் டிராக்டில் இருக்கும் ஒரு ரக பாக்டீரியா. ஆனால் இந்த கிருமி உற்பத்தி செய்யும் ஒரு வித நச்சு காரணமாக உடலில் பெரும் பாதிப்பு ஏற்படும். சுத்திகரிக்கப்படாத தண்ணீர், தரமற்ற உணவு ஆகியனவற்றை உண்பதால் இந்நோய் தாக்கக்கூடும்.

  • தொடங்கியவர்

[size=4]ரொறன்றோவின் றெக்ஸ்டேல் பகுதியில் இன்று அதிகாலை இரண்டு பேர் சுட்டுக் கொல்லப்பட்டார்கள்.

Finch Avenue West and Martin Grove Road பகுதியில் உள்ள ஜேம்ஸ்ரவுன் கிறெஸன்டின்(Jamestown Crescent) வீடுகளின் பின்புறத்தில் உள்ள ஒழுங்கைப் பகுதியில் துப்பாக்கிப் பிரயோகம் இடம்பெற்றதாக காவல்துறைக்கு அறிவிக்கப்பட்டதைத் தொடர்ந்து அங்கு சென்ற காவல்துறையினர், இரண்டு உடல்களைக் கண்டெடுத்தார்கள்.

இன்று அதிகாலை ஒன்று முப்பதளவில் இந்தச் சம்பவம் இடம்பெற்றது.[/size]

[size=4]உயிரிழந்த இரண்டு பேரும் தலையில் சுடப்பட்டு உயிரிழந்தார்கள்.[/size]

http://thamilfm.com/thamilfm/NewClients/NewsDetail.aspx?ID=12821

  • தொடங்கியவர்

[size=4]வாகனத்தால் மோதப்பட்டு உயிரிழந்த எரிபொருள் விற்பனை நிலைய பணியாளர் திருடப்பட்ட எரிபொருளுக்கு தாம் பணம் செலுத்தவேண்டுமென தெரிவித்திருந்தாரென தெரியவந்துள்ளது.[/size]

[size=4]திருடப்பட்ட எரிபொருளுக்கு தாம் பணம் செலுத்தவேண்டுமென கடந்த சனிக்கிழமை வாகனம் ஒன்றால் மோதப்பட்டு உயிரிழந்த எரிபொருள் நிரப்பு நிலைய பணியாளர் கூறினாரென தெரிவிக்கப்படும் நிலையில், அந்த விடயம் குறித்து குற்றவியல் விசாரணை நடத்தப்படவேண்டுமென ஒன்றாரியோ தொழிற்சங்கங்களின் சம்மேளனம் கேட்டுள்ளது.

ரொறன்றோ எரிபொருள் நிரப்பு நிலையமொன்றில் கடந்த சனிக்கிழமை எரிபொருள் நிரப்பிவிட்டுப் பணம் செலுத்தாது சென்ற வாகனம் ஒன்றைத் தடுக்க முற்பட்ட ஜயேஷ் பிரஜாபதி என்பவர் உயிரிழந்தார்.

திருடப்படும் எரிபொருளுக்குத் தாம் பணம் செலுத்தவேண்டுமெனவும், கடந்த சில மாதங்களில் தமக்கு பெருமளவு நட்டம் ஏற்பட்டதெனவும் அவர் மனைவிடமும், உறவினர்கள் மற்றும் நண்பர்களிடமும் கூறியிருந்தாரென செய்தி வெளியாகியுள்ளது.

அப்படியான நடைமுறை சட்டத்திற்கு முரணானதெனவும், விசாரணை நடத்துவது குறித்து ஆராய்வதாகவும் மாகாண தொழில் அமைச்சுத் தெரிவித்தது.

அத்தகைய நடைமுறை இருக்கவில்லையென, எரிபொருள் நிரப்பு நிலைய உரிமையாளர் தெரிவித்தார். அத்தகைய நடைமுறை பொறுத்துக் கொள்ளப்படாதென ஷெல் நிறுவனம் குறிப்பிட்டது. முழுமையான விசாரணையொன்றை நடத்தவதாக அந்த நிறுவனம் தெரிவித்தது.

திருடப்பட்ட எரிபொருளுக்குப் பணம் செலுத்தவேண்டுமென பலவந்தப்படுத்தப்படும் எரிபொருள் நிரப்பு நிலைய பணியாளர்கள் அனாமதேயமாக அது குறித்து முறையிடுவதற்கு தொலைபேசி இலக்கம் ஒன்றை ஒன்றாரியோ தொழிலாளர் சங்கங்களின் சம்மேளனம் அறிவித்துள்ளது.

http://thamilfm.com/thamilfm/NewClients/NewsDetail.aspx?ID=12828[/size]

f648f3c64decac77da7b895f7e23.jpg

http://www.thestar.com/news/gta/crime/article/1258729--friends-family-say-attendant-who-died-in-gas-and-dash-incident-told-them-he-had-to-pay-for-stolen-fuel

  • கருத்துக்கள உறவுகள்

கவலையான செய்தி...இன்று கோயிலுக்கு சென்று இருந்த வேளையில் நிறையப் பேர் இந்த விடையம் பற்றித் தான் பேசிக் கொண்டு இருந்தது காதில் விழுந்தது...ஏற்கனவே இப்படியான பிரச்சனைகள் நேர்ந்தால் அறிவிப்பதற்கு என்று தொலைபேசி இலக்கம் இருக்கிறது என்றால் ஏன் இப்படி ஒரு சம்பவம் நிகழ்ந்தது.

  • தொடங்கியவர்

எம்மவர்களும் கூட இப்படியான வேலை செய்பவர்கள் உண்டு. பலரும் தாம் பணம் கட்ட வேண்டும் என்ற காரணத்தால், இந்த திருடர்களை பிடிக்க எண்ணுவதுண்டு. அது சில வேளைகளில் உயிரையும் கொண்டு சென்று விடும்.

  • தொடங்கியவர்

[size=4]கனேடிய சட்டத்தின் படி, பணம் கொடுக்காமல் ஒருவர் 'ஓடினால்' வேலைசெய்பவரிடம் அதை அறவிடமுடியாது (வானொலியில் கேட்டது). [/size]

[size=4]ஆனால் இதை யாரும் அமுல்படுத்துவதும் இல்லை பலருக்கும் இந்த 'உரிமை' தெரிவதும் இல்லை (புதிய வரவாளர்கள்) [/size]

  • கருத்துக்கள உறவுகள்

என்ன நடந்தாலும் சட்டத்தைக் கையில் எடுக்கக் கூடாது.. இழப்புகளுக்கு தொழிலாளர்களிடம் அறவிடுவது சட்டப்படி குற்றம்..!

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.