Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

பிரிட்டனில் குடியேற விரும்புவோர்க்கு வருமான கீழ் வரம்பு 31 ஆயிரம் பவுண்டுகள்

Featured Replies

பிரிட்டனுக்குள் குடியேறும் ஆட்களின் எண்ணிக்கையை குறைக்கும் நோக்கில் அந்நாட்டின் தற்போதைய அரசாங்கம் கொண்டுவரவுள்ள திட்டங்கள் பற்றி அது கோடிகாட்டியுள்ளது.

பிரிட்டனில் வசிக்க விரும்பும் குடியேறிகளுக்கும், அல்லது வெளிநாட்டிலிருந்து வாழ்க்கைத் துணையை தேர்ந்தெடுக்க விரும்பும் பிரிட்டிஷ் பிரஜைகளுக்கும் குறைந்தபட்ச வருமான வரம்பு ஒன்றை நிர்ணயிப்பது பற்றி பரிசீலித்துவருவதை அரசாங்கம் தற்போது உறுதிசெய்துள்ளது.

குறைந்தபட்சமாக 31 ஆயிரம் பவுண்டுகள் வருட வருமானம் இருப்பவர்களால்தான் பிரிட்டனில் தமது மனைவி மக்களுடன் குடியேற முடியும், இந்த வருமானம் இருக்கக்கூடிய பிரிட்டிஷ் பிரஜை ஒருவர்தான் ஐரோப்பிய ஒன்றியத்துக்கு வெளியில் பிறந்த தனது வாழ்க்கைத் துணையை பிரிட்டனுக்குள் கொண்டுவர முடியும் என நிபந்தனை விதிப்பது பற்றி திட்டமிட்டுவருவதாக குடிவரவு அமைச்சர் டேமியன் கிரீன் தெரிவித்துள்ளார்.

பிரிட்டிஷ் சமூகத்திற்கு கூடுதலான மதிப்பையும், பலன்களையும் கொண்டுவரும் விதமானோரை மட்டும் நாட்டில் குடியேற விடுவது என்ற அடிப்படையில் அரசாங்கம் கைகொள்ள இருக்கின்ற புதிய அணுகுமுறையின் அங்கமாக இந்த மாற்றங்கள் மேற்கொள்ளப்படவிருப்பதாக கிரீன் கூறினார்.

பிரிட்டனுக்குள் புதிதாகக் குடியேற வருவோரின் வருடாந்த எண்ணிக்கையை லட்சங்கள் கணக்கிலிருந்து ஆயிரங்கள் கணக்கிற்கு குறைப்பது என்பதில் தீவிரமாக இருப்பதாக அரசாங்கம் கூறுகிறது.

குடிவரவு விஷயத்தில் அரசாங்கம் கடைப்பிடிக்கவுள்ள புதிய அணுகுமுறை பற்றி கோடிகாட்டிய பிரிட்டிஷ் குடிவரவுத் துறை அமைச்சர் டேமியன் கிரீன், பிரிட்டனுக்குள் வருவோரின் எண்ணிக்கை என்ற விஷயத்தில் மட்டும் கவனத்தைச் செலுத்துவதற்கு மாறாக எப்படிப்பட்ட தகுதி உடையவர்கள் நாட்டுக்குள் வருகிறார்கள் என்பதை ஆராய்ந்து ஆட்களை தேர்ந்தெடுத்து பின்னர் குடியேற அனுமதிப்பதற்கு வகை செய்ய அரசாங்கம் விரும்புவதாக குறிப்பிட்டார்.

“வெளிநாட்டிலிருந்து ஒருவர் வேலைபார்ப்பதற்கெனவோ, படிப்பதற்கெனவோ அல்லது மணம் முடித்தவருடன் வாழ்வதற்கெனவோ பிரிட்டனுக்குள் வரும்போது, பிரிட்டிஷ் சமூகத்திற்கு ஆக்கப்பூர்வமான பங்களிப்பு செய்யும் தகுதி அவரிடம் இருக்கிறததா, பிரிட்டனில் வாழ்க்கைத் தரத்தை முன்னேற்றும் தகுதி அவருக்கு இருக்கிறதா என்பதை பரிசோதித்த பின்னர்தான் அனுமதி வழங்க முடியும் என்ற உரிமை பிரிட்டனுக்கு உள்ளது.” என்றார் அமைச்சர் கிரீன்.

ஐரோப்பிய ஒன்றியத்துக்கு வெளியில் உள்ள நாடுகளில் இருந்து பிரிட்டனுக்கு வந்து படிக்கவோ வேலை பார்க்கவோ விரும்பும் ஆட்களுக்கு கூடுதலான நிபந்தனைகளை விதிக்கும் நடவடிக்கைகளை இந்த அரசாங்கம் ஏற்கனவே அறிமுகப்படுத்தியுள்ளது.

ஆனால் அதனையும் தாண்டி, குறைந்த வருமானம் உள்ள பிரிட்டிஷ் பிரஜைகள் வெளிநாட்டில் பிறந்தவர்களை தங்கள் வாழ்க்கைத் துணையாகக் கொண்டு சேர்ந்து வாழ்வதற்காக அவர்களை பிரிட்டனுக்குள் அழைத்து வருவதென்பதைத் தடுப்பது பற்றி அரசாங்கம் பரிசீலிப்பது சர்ச்சைக்குரிய ஒன்றாக அமைந்துள்ளது.

அரசாங்கத்தின் இந்த யோசனை இறுதிசெய்யப்படும் பட்சத்தில் நிச்சயம் அதற்கு சட்டரீதியான சவால்கள் எழும் என்று தெரிகிறது.

ஆனால் பிரிட்டனுக்குள் குடியேற விரும்புவோரில் யார் யாரை அனுமதிப்பது என்பதை தேர்ந்தெடுக்கிற ஓர் நிலையில் அரசாங்கம் இருக்க வேண்டும் என்பதற்கு பிரிட்டிஷ் வாக்காளர்கள் மத்தியில் மிகுந்த வரவேற்பு இருப்பதாகத் தெரிகிறது.

ஏனென்றால் பிரிட்டனுக்குள் வருவோரின் எண்ணிக்கை அதிகமாக குறைக்கப்பட வேண்டும் என்பதையே இந்நாட்டில் பலர் விரும்புவதாக கருத்துக் கணிப்புகள் காட்டுகின்றன.

நன்றி – பிபிசி

  • கருத்துக்கள உறவுகள்

உரிய பகுதியில் பதியப்பட்டு உள்ளது .

  • கருத்துக்கள உறவுகள்

ஒரு பக்கம் அகதிகளாக

மறுபக்கம் கல்விக்காக

இன்னொரு பக்கம் குடும்ப இணைவுகள் என

எல்லாப் பக்கத்தாலும் மக்கள் அங்கு குடியேற விரும்புகின்றார்கள்.

பிரித்தானிய அரசும் அதக் கட்டுப்படுத்தச் சட்டங்களைக் கொண்டு வருகின்றது.

ஆனாலும் வருபவர்களில் அனேகமானோர் சொந்த நாடுகளில் அரசியல், வேலையில்லாத் திண்டாட்டம்,ஆயுததாரிகளின் அட்டகாசம் போன்ற பிரச்சனைகள் இருப்பதாலேயே

மேற்குலக நகரங்களை நோக்கிப் படையெடுக்கின்றனர்.

மேற்குலக நாடுகள் புரிந்தும் புரியாத மாதிரி நடிக்கின்றது

  • கருத்துக்கள உறவுகள்

மேலைநாடுகளில் வரி கட்டும் மிடில் கிளாஸ் மாதவன்கள் குறைந்து பலர் பணக்காரர்களாகவும், மீதமுள்ளோர் ஏழைகளாகவும் போய்விட்டனர்..! வரி கட்ட ஆள் தேவை..! அதனால்தான் அடக்கி வாசிக்கிறார்கள்.! நாம்தான் நன்றாக உழைத்து வரி கட்டுவோமே..!! :D

உலகில் மரணம் நிரந்தமானது. மேற்குலத்தில், அதனுடன் வரியும் நிரந்தமானது ^_^

வணக்கம்! வாங்கோ!

ஜனநாயக வேடம் போட்டு, தமிழினப் படுகொலைகளை நிகழ்த்தி

* 260,000 இற்கு மேற்பட்ட அப்பாவி தமிழர்கள் படுகொலை செய்யப்படக்,

* 170,000 இற்கு மேற்பட்ட தமிழர் ஊனமுற / கடுங்காயமடையக்,

* 150,000 இற்கு மேற்பட்ட தமிழர் வீடுகள் தரை மட்டமாகக்,

* 1,500,000 இற்கு மேற்பட்ட தமிழர் புலம் பெயரக்,

* 800,000 இற்கு மேற்பட்ட தமிழர் இடம்பெயரக்,

* 90 பில்லியன் அமெரிக்க டாலர் இற்கு மேற்பட்ட மதிப்புள்ள தமிழரின் சொத்துக்கள் அழிக்கப்படக்

* 146,000 இற்கு மேற்பட்ட தமிழர் காணாமல் போவதற்குக்,

காரணமாக இருந்த சிங்கள, வட இந்திய, மலையாள பயங்கரவாதிகள் அனைவரும் கூண்டோடு அழிந்து, உலகில் உண்மையான மனிதத்துவம், சாந்தி, சமாதானம், அகிம்சை, நீதி நிலைக்க உங்கள் பங்களிப்பு அவசியம்.

  • தொடங்கியவர்

வாங்கோ வாங்கோ ஓடிவாங்கோ.... ஆராவிற்கு பின்னாலை எல்லாரும் ஓடிவாங்கோ.... அடுத்த பிரபாகரன் வந்திட்டார் ஓடிவாங்கோ.

தமிழர் தாம் இப்போ கட்டியிருக்கிற கோமண துண்டையும் கழற்றி கட்டி கொடிபிடித்து நிர்வாணமாக வாரீர். நிர்வாணமாய் நின்றாலும் பறவாயில்லை கொடிபிடித்தால் சரி. ஓடிவாங்கோ..... ஓடிவாங்கோ...............

தமிழர்கள் கௌரவத்துடன் வாழவேண்டுமென்பது உண்மைதான். அதற்காக இப்போ எல்லாம் இழந்து கோமண துண்டுடன் நிற்கும் தமிழனை துண்டை கழற்றி நிர்வாணமாய் நின்று கொடிபிடிக்க சொல்லுறியளோ????????

பங்களிப்பு என்று காசை கேட்கிறியளோ,,,,, இஇஇஇஇ.... ஈஈஈஈ..... சுவிசிலை லோன் எடுத்து கொடுத்த காசுகடனையே அடைக்க முடியாமல் நடுத் தெருவிலை நான் நிக்கிறன். ஆனா காசு வேண்டினவன் BMW காரிலை திரியிறான்....ம்....

  • கருத்துக்கள உறவுகள்

வாங்கோ வாங்கோ ஓடிவாங்கோ.... ஆராவிற்கு பின்னாலை எல்லாரும் ஓடிவாங்கோ.... அடுத்த பிரபாகரன் வந்திட்டார் ஓடிவாங்கோ.

தமிழர் தாம் இப்போ கட்டியிருக்கிற கோமண துண்டையும் கழற்றி கட்டி கொடிபிடித்து நிர்வாணமாக வாரீர். நிர்வாணமாய் நின்றாலும் பறவாயில்லை கொடிபிடித்தால் சரி. ஓடிவாங்கோ..... ஓடிவாங்கோ...............

தமிழர்கள் கௌரவத்துடன் வாழவேண்டுமென்பது உண்மைதான். அதற்காக இப்போ எல்லாம் இழந்து கோமண துண்டுடன் நிற்கும் தமிழனை துண்டை கழற்றி நிர்வாணமாய் நின்று கொடிபிடிக்க சொல்லுறியளோ????????

பங்களிப்பு என்று காசை கேட்கிறியளோ,,,,, இஇஇஇஇ.... ஈஈஈஈ..... சுவிசிலை லோன் எடுத்து கொடுத்த காசுகடனையே அடைக்க முடியாமல் நடுத் தெருவிலை நான் நிக்கிறன். ஆனா காசு வேண்டினவன் BMW காரிலை திரியிறான்....ம்....

இவரின்ட‌ லொகேச‌ன் இந்தியாவாம்,சுவிசில் லோன் எடுத்துக் கொடுத்தவராம்...புழுகலுக்கும்,அலம்பலுக்கும் இப்ப யாழ் தான் கிடைச்சிருக்குப் போல...போய் வேலையைப் பாருமய்யா :lol:

  • தொடங்கியவர்

அறமுகம் இந்தியாவில் இருப்பிடம் சுவிஸ். அதில்லை தங்கச்சி எண்டை பெயர் லொ.கேசன் இல்லை. இளங்கதிர் தங்கச்சி தெளிவாய் இருக்கோ. அமைவிடம் அல்லது இருப்பிடம். இப்ப தெளிஞ்சிருக்குமே....

  • கருத்துக்கள உறவுகள்

அறமுகம் இந்தியாவில் இருப்பிடம் சுவிஸ். அதில்லை தங்கச்சி எண்டை பெயர் லொ.கேசன் இல்லை. இளங்கதிர் தங்கச்சி தெளிவாய் இருக்கோ. அமைவிடம் அல்லது இருப்பிடம். இப்ப தெளிஞ்சிருக்குமே....

நீங்கள் புலியால் பலமாக பாதிக்கப் பட்டு உள்ளீர்கள் போல இருக்குது...உங்களுக்கு எனது ஆழ்ந்த அனுதாபங்கள்...உங்களுக்கு என்ன பிர‌ச்ச‌னை?...எதனால் புலிகள் மீது வெறுப்பேற்பட்டது என அர்ஜீன் அண்ணா ஆர‌ம்பித்த திரியில் போய் எழுதினால் எல்லோரும் உங்கள் நிலைமையை புரிந்து கொள்ள முடியும்.

  • தொடங்கியவர்

ரதி அக்கா....

ஆகா..ஆகா....ஆகாகாகாகா......... நல்லாய் இறால் போடுறியள். சுறா மாட்டும்.... நெத்தலி மாட்டாது வலையிலை................

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.