Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

திருடன் கையில் தேள் கொட்டினால் என்ன செய்யலாம்..?

Featured Replies

திருடன் கையில் தேள் கொட்டினால் என்ன செய்யலாம்..?

சிறீலங்காவுக்கு எதிராக சர்வதேச சமுதாயம் அமெரிக்கா தலைமையில் திசை திரும்பியிருக்கிறது. ஜெனீவாவில் சிறீலங்கா மீது சுமத்தப்படக் கூடிய குற்றச்சாட்டில் இந்தியாவின் பாத்திரம் என்ன.. இதுதான் இப்போது எழுந்துள்ள கேள்வி.

இந்த விவகாரத்தில் இந்தியா சிறீலங்காவை ஆதரித்தால்..

உலக அரங்கில் போர்க் குற்றவாளிகளை ஆதரிக்கும் சீனா – ரஸ்யாவோடு இந்தியாவும் உலக அரங்கில் களங்கப்பட்டு நிற்க நேரும்.

சிரியாவுக்கு எதிராக மேலை நாடுகள் பக்கம் நின்றதுபோல இந்த விடயத்திலும் இந்தியாவும் நின்றால் சிறீலங்கா நேரடியாக சீனாவின் கால்களில் குப்புற விழுந்து இந்தியாவின் நேரடி வில்லனாக மாறும்.

இரண்டுங் கெட்டானாக நடுவு நிலை வகித்தாலும் ஆபத்துவரும், காரணம் சிறீலங்காவை முதல் தடவையாக இந்தியா ஆதரிக்காமல் இருந்துள்ளது என்ற விவகாரம் வெளியாகும்.

அப்போது இந்தியா, மேலை நாடுகளையும் இழந்து, சிறீலங்காவையும் இழந்து தனியாக நிற்கும்.

திருடன் கையில் தேள் கொட்டினால் என்ன செய்யலாம்..? இதுதான் இந்தியாவின் இன்றைய அவலமான நிலை.

இதற்குள் டில்லிக்கு போயுள்ளது சிங்கள அரசின் குழு..

ஐ.நா. மனித உரிமைகள் பேரவையின் 19ஆவது கூட்டத்தொடர் எதிர்வரும் 27ஆம் திகதி ஆரம்பமாகவுள்ள நிலையில், அந்த மாநாட்டில் இந்தியாவின் ஆதரவைப் பெற்றுக்கொள்ளும் நோக்கில் இலங்கை அரசு இராஜதந்திர மட்டத்திலான காய் நகர்த்தல்களை என்றுமில்லாதவாறு முன்னெடுத்து வருகின்றது என நம்பகரமாகத் தெரியவருகிறது.

ஜெனிவா மாநாட்டில் இலங்கை விவகாரம் குறித்து எவ்வாறானதொரு வகிபாகத்தை வகிப்பது தொடர்பில் இந்தியா ஆழமாகப் பரிசீலித்துவரும் தற்போதைய பரபரப்பான சூழ்நிலையில், கொழும்பு அரசு தனது உயர்மட்ட இராஜதந்திரிகள் அடங்கிய குழுவொன்றை டில்லிக்கு அனுப்பி வைத்துள்ளது என்றும் அறியமுடிகின்றது.

டில்லியில் நிலைகொண்டுள்ள இலங்கை இராஜதந்திரிகள் பட்டாளம் அந்நாட்டின் வெளிவிவகார அமைச்சின் முக்கிய அதிகாரிகளைச் சந்தித்து ஜெனிவா விவகாரம் தொடர்பில் கலந்துரையாடியுள்ளது என இராஜதந்திர மட்டத்திலான தகவல்கள் தெரிவித்தன.

இலங்கைக்கு எதிரான பிரேரணையை ஆதரிப்போம் என அறிவித்துள்ள அமெரிக்காவின் இராஜதந்திரிகள் இலங்கை, இந்தியா ஆகிய நாடுகளுக்கு விஜயம் செய்து நாடு திரும்பியுள்ள நிலையில், இரு நாட்டு இராஜதந்திரிகளும் சந்தித்துப் பேசுவதானது முக்கியத்துவம் வாய்ந்ததாகக் கருதப்படுகின்றது.

அதேவேளை, இலங்கை விவகாரம் தொடர்பில் பாரதத்துடன் வொஷிங்டன் பலமுறை கலந்துரையாடியுள்ளமை இங்கு சுட்டிக்காட்டத்தக்கதொன்றாகும். அண்மையில், இந்தியத் தூதுவர் நிரூபமா ராவ் மற்றும் அமெரிக்க வெளிவிவகார அமைச்சர் ஹிலாரி கிளிண்டன் ஆகியோர் சந்தித்து அது விடயம் தொடர்பில் பேச்சு நடத்தியமையும் குறிப்பிடத்தக்கது.

ஜெனிவா மாநாட்டில் இலங்கைக்கு எதிராக பிரேரணை வரும் பட்சத்தில் எவ்வாறானதொரு நிலைப்பாட்டை அது விடயம் தொடர்பில் எடுப்பது என்பது குறித்து இந்திய அரசின் இராஜதந்திரிகள் குழுவொன்று தற்போது தீவிரமாகப் பரிசீலித்து வருகின்றது என்றும், அந்தப் பரிசீலனையை தனக்குச் சாதகமான முறையில் மாற்றியமைக்கும் முயற்சியில் இலங்கை ஈடுபட்டுள்ளது என்றும் அரசியல் நிபுணர்கள் கூறுகின்றனர்.

அதேவேளை, 19ஆவது மனித உரிமைகள் கூட்டத் தொடரின்போது இலங்கைக்கு இந்தியா பக்கபலமாக இருந்தது. இந்தியா இம்முறை எவ்வாறானதொரு தீர்மானத்தை இலங்கை விவகாரம் தொடர்பில் எடுக்கும் என்பது அரசியல் வட்டாரத்தில் புரியாத புதிராகவே உள்ளது என்றும் ஆய்வாளர்கள் விமர்சித்துள்ளனர்.

http://www.alaikal.com/news/?p=97496

  • கருத்துக்கள உறவுகள்

தனது நிலையைத் தற்காத்துக்கொள்ள ஒரே ஒரு வழி இருக்கிறது..! அமெரிக்கா பக்கம் நின்று சிங்களத்துக்கு எதிரான நிலையை எடுப்பது..! சிங்களம் சீனாவின் பக்கம் செல்லாதவாறு நாடு பிளவுபடுத்தப்படும் என எச்சரிப்பது..! :D

  • கருத்துக்கள உறவுகள்

இந்தியாவின் நிலை திரிசங்கு நிலைதான்.இந்தியாவுக்கு நடுநிலை வகித்தல் அல்லது அமெரிக்கா பக்கம் சார்தல் எனும் தெரிவுகள் உண்டு.அயல் நாடு என்ற வகையில் இந்தியாவுக்கு கௌரவ குறைச்சலை கொடுக்கும்.அமெரிக்கா ,மேற்கு நாடுகளுடன் அணி சேருவது தான் சாத்தியமானது.

ரஸ்யா, சீனா,பாகிஸ்தான் போன்ற நாடுகளுடன் தற்போதைய உலக அரசியல் நிலையில் இந்தியா அணி சேரும் என நினைக்கவில்லை.

  • கருத்துக்கள உறவுகள்

இந்த நிலையை இப்படியும் சொல்லலாமா ......?மெல்லவும் முடியாமல் விழுங்கவும் முடியாமல் இருப்பது போன்றதொரு நிலைபாடுதான் இந்தியாவின் நிலைப்பாடும்

  • கருத்துக்கள உறவுகள்

அமுசடக்கி மாதிரி இருந்து ஜெனிவா கூட்டத்தில் இலங்கை சார்பா ஒரு அறிக்கை வாசிப்பார்கள் என நினைக்கிறேன்..! பிறகு கொல்லைப் புறத்தில கதைச்சு தீர்மானத்தை தோற்கப் பண்ணுவார்கள்..! ஆனால் வெளியே அவர்கள் முகம் தெரியாதமாதிரி பார்த்துக்கொள்வார்கள்..! :rolleyes:

  • கருத்துக்கள உறவுகள்

ஐரோப்பா, அமெரிக்க நாடுகள் ஈரானின் பொருளாதார தடை விடயத்தில் கறாராக இருக்கும் நிலையில் இந்தியாவின் ஈரானுடனான உறவு இவர்களின் கொல்லைப்புற அறிக்கையின் முகத்திரையை கிழிக்கலாம்.ஏற்கனவே தமிழர் விடயத்தில் இந்தியாவின் இரட்டை வேடத்தை நோர்வே வெளியுலகுக்கு கூறியது நினைவிருக்கலாம்.

  • தொடங்கியவர்

இனவெறி பிடித்த டெல்லி ஆட்சியாளர்களுக்கு தம்மை தவிர அதற்கு அப்பால் சிந்திக்கும் வல்லமை இல்லை. தன்னையும் மீறி அமேரிக்கா இந்தப்பிரதேசத்தில் முடிவுகளை எடுக்க டெல்லியே வழிசமைக்கின்றது.

தனது நிலையைத் தற்காத்துக்கொள்ள ஒரே ஒரு வழி இருக்கிறது..! அமெரிக்கா பக்கம் நின்று சிங்களத்துக்கு எதிரான நிலையை எடுப்பது..! சிங்களம் சீனாவின் பக்கம் செல்லாதவாறு நாடு பிளவுபடுத்தப்படும் என எச்சரிப்பது..! :D

என்ற கருத்து சரியானதுபோல் தெரிகிறது. எனது தனிப்பட்ட கருத்து என்னவெனில் 'இது ஒரு ஜெனிவா நாடகம்'. பொறுத்திருந்து

பார்க்கவேண்டும். உலகத்தமிழர் பேரவைத்தலைவர் இம்மானுவேல் அடிகளார் சென்னையிலிருந்து திருப்பி அனுப்பப்பட்டது;

நாம் தமிழர் கட்சித்தலைவர் சீமான் அமெரிக்காவிலிருந்து திருப்பி அனுப்பப்பட்டது. இந்த ஒருங்கிணைந்த செயற்பாட்டின்

செய்தியை நாம் புரிந்துகொள்ளவேண்டும்.

சீனனும் சிங்களவனையும் விட சிங்களவனும் மலையாளியும் சேர்ந்து ஏதாவது செய்து விடுவார்கள்.

ஈரானைக் கைவிடுகிறேன் இலங்கையை கை வீடு என்று ஒரு சொல் இந்தியா சொன்னால் அமெரிக்கா விட்டுவிடும்.

இஸ்ரேலின் பாதுகாப்பை விட இந்த உலகத்தில் வேறு இனமக்களை பற்றி அமெரிக்கா யோசிக்காது.

சில நேரம் ஈரானை அடிச்சு பிடித்த பின் மீண்டும் தூசிதட்டப்படலாம்.

  • தொடங்கியவர்

சீனனும் சிங்களவனையும் விட சிங்களவனும் மலையாளியும் சேர்ந்து ஏதாவது செய்து விடுவார்கள்.

ஈரானைக் கைவிடுகிறேன் இலங்கையை கை வீடு என்று ஒரு சொல் இந்தியா சொன்னால் அமெரிக்கா விட்டுவிடும்.

இஸ்ரேலின் பாதுகாப்பை விட இந்த உலகத்தில் வேறு இனமக்களை பற்றி அமெரிக்கா யோசிக்காது.

சில நேரம் ஈரானை அடிச்சு பிடித்த பின் மீண்டும் தூசிதட்டப்படலாம்.

'ஈரானைக் கைவிடுகிறேன் இலங்கையை கை வீடு என்று ஒரு சொல் இந்தியா சொன்னால் அமெரிக்கா விட்டுவிடும்.' - இதில் இந்தியா கதாநாயகன்//கதாநாயகி அல்ல.

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.