Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.
  • advertisement_alt
  • advertisement_alt
  • advertisement_alt

திருகோணமலை கடற்படைசிப்பாய் பாலியல் துஷ்பிரயோகம்- அவரின் ஆணுறுப்பை அறுத்த பெண்!

Featured Replies

  • கருத்துக்கள உறவுகள்

திருகோணமலை கடற்படைசிப்பாய் பாலியல் துஷ்பிரயோகம்- அவரின் ஆணுறுப்பை அறுத்த பெண்!

)

resize_20120310070059.jpg
தனது வீட்டில் தனிமையில் இருந்த குடும்பப் பெண்ணொருவரை சிறிலங்கா கடற்படையை சேர்ந்த ஒருவர் பாலியல் துஷ்பிரயோகம் செய்ய முயற்சித்த போது அவரின் ஆணுறுப்பை அப்பெண் அறுத்து எடுத்துள்ளார்.

இச்சம்பவம் நேற்றுமுன்தினம் திருகோணமலை மாவட்டத்தில் உள்ள கந்தளாய் தம்புழுகமுவ பகுதியில் இடம்பெற்றுள்ளது.

ஆணுறுப்பை பறிகொடுத்த கடற்படை வீரர்(?) திருகோணமலை கடற்படை தளத்தில் பணியாற்றுபவராவார்.

இரத்தம் ஓட ஓட கந்தளாய் வைத்தியசாலையின் ஏழாவது வார்டில் அனுமதிக்கப்பட்டுள்ள 22 வயதான இந்த கடற்படை வீரர் பொலிஸ் பாதுகாப்புடன் சிகிச்சை பெற்று வருகிறார்.

இந்த பெண்ணின் கணவர் வேலைக்குச் சென்றிருந்த போது பின் கதவால் உள்நுழைந்து இந்தப் பெண்மீது பாலியல் துஷ்பிரயோகம் மேற்கொள்ள முயற்சித்த போதே மேசையில் இருந்த கத்தியை எடுத்து இவரது ஆணுறுப்பைஅந்தக் குடும்பம் பெண் வெட்டியுள்ளார்.

இதனையடுத்து அங்கிருந்து தப்பிச் சென்ற கடற்படை வீரர் குறித்து பொலிஸ் அவசர சேவைக்கு தகவல் வழங்கி விட்டு கந்தளாய் வைத்தியசாலைக்கு ஓடிச்சென்றுள்ளார்.

பொலிஸார் அப்பெண்ணிடம் விசாரணை நடத்தியதுடன் அறுத்து வைத்திருந்த ஆணுறுப்பையும் அப்பெண்ணிடம் பெற்றுக்கொண்டனர். இதன் பின்னர் பாலியல் பலாத்கார குற்றச்சாட்டில் கடற்படை வீரரை பொலிஸார் கைது செய்தனர்.

http://www.thedipaar.com/news/news.php?id=42503
  • கருத்துக்கள உறவுகள்

மிகவும் நல்ல செய்தி சர்வதேசப் பெண்கள் நாள் கடந்த இரு தினங்கட்கு முன்புதான் வந்தது. இச்செய்தி, யாழ் மாநகர முதல்வர் அவர்கட்கும் யாழ் அரச அதிபர் அவர்கட்கும் சமர்ப்பணம். இதேபோன்று தமிழ் பெண்கள் எல்லோரும் கையில் கூரிய கத்தியை வைத்திருக்கும்படியும் புலம்பெயர் தமிழர்கள் சார்பில் கேட்டுக்கொள்கிறேன். தவிர புலம்பெயர் தேசத்தில் வாழ்கின்ற தமிழ்ப் பெண்களும் இதேபோன்ற நெருக்கடிகளை எதிர்கொள்கிறார்கள், அவர்கட்கும் எனது ஆலோசனை பொருந்தும். சிலவேளை தமிழர்கள் இனிமேல் கத்தி வைத்திருப்பதும் சட்டக்குற்றமாகக் கருத இடமுண்டு.

  • கருத்துக்கள உறவுகள்

இந்தச் செய்தியை யாராவது தாமிரா குணநாயகத்துக்கு சமர்ப்பிக்க விரும்பினால் அதற்கு நான் பொறுப்பல்ல.

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

தமிழச்சிகள் வீரத்திற்கு பெயர் போனவர்கள். 

  • கருத்துக்கள உறவுகள்

இந்த இடத்தில் சிங்கள குடும்பங்களே அதிகம்

  • கருத்துக்கள உறவுகள்

அந்த இடம் தம்பலகமுவ இல்லை, தம்பலகாமம் எனும் சுத்தமான தமிழ்க் கிராமம். சிங்களவர்களால் தமிழர்கள் அடித்துத் துரத்தப்பட்டு இன்று சிங்களக் குடியேற்றமாக மாற்றப்பட்டிருக்கிறது. சிங்களவன் திட்டமிட்டே பெயர்களை சிங்கள மயமாக்குகிறான் என்றால் நாங்களும் அதற்குத் துணை போகலாமா??

தம்பலகாமம் என்றொரு தமிழ் ஊர் இருந்தது கூடத் தெரியாமலிருக்கும் செய்தியாளர்களும் ஊடகவியலாளர்களும் எமக்குக் கிடைத்தது சாபக்கேடுதான்.

ஆம் அது தம்பலகாமம் என்ற தமிழ்க்கிராமந்தான். இன்றும் அங்கு தமிழ்க்குடும்பங்கள்தான் வாழ்கின்றனர். தம்பலகாமத்தின் மேற்குப்பகுதிதான் சிங்களவர்கள் குடியேற்றப்பட்டுனளார்கள்.

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.