Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

எமது உரிமைக்கான போரில் இந்தியாவை ஒது(டு)க்கிவிடுவதே எங்கள் உரிமையைப் பெற்றெடுக்கச் சிறந்த வழி

Featured Replies

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

எமது உரிமைக்கான போரில் இந்தியாவை ஒது(டு)க்கிவிடுவதே எங்கள் உரிமையைப் பெற்றெடுக்கச் சிறந்த வழி

ஆண்டாண்டு காலமாக ஈழத்தமிழர்கள் இந்தியா எங்களைக் காப்பாற்றும் எங்களுக்கு நன்மையே செய்யும் என்று நம்பவைத்த இந்தியாவை இறுதிவரை நம்பி முள்ளிவாய்க்கால் வரை 100.000 உயிருக்குமேல் நாங்கள் பறிகொடுத்துள்ளோம் என்றால் அது நாங்கள் வைத்த நம்பிக்கையின் நம்பகமல்லாத்தன்மை தான். இந்தியாவுடனும்;; இலங்கையுடனும் இருந்த தமிழர் பிரச்சனை இன்று சர்வதேச ரீதியில் ஒரு பிரச்சனையாகக் கொண்டு வந்து தந்தவர்கள் புலிகள் தான். தேசியத் தலைவ்h ஓரிடத்தில் இயக்கத்தடன் இணைந்து போரட வந்த போராளியைக்கேட்டதாகச் சொல்கின்றார்கள். தமிழீழம் எந்தககாலஅளவில பெற்றுக்கொள்வோம் என்று நினைக்கின்றீர் என்று சொல்லும் பார்க்கலாம்" அதற்கு அந்த புதியவர் 'போறபோக்கில் 10. 15 வருடத்தில் பெற்றுக்கொள்வோம்" என்று பதிலளித்தானாம். அதற்கு தேசியத்தலைவர் சொன்ன பதில் 'போராவேண்டியதும் முன்னெடுத்துச் செல்வதும் எங்கள் கடமை. ஆனால் அது எப்போது கிடைக்கும் என்பதை நாங்கள் தீர்மானிக்கமுடியாது, எங்கள் காலத்திலும் கிடைக்கலாம் அல்லது கிடைக்காமல் 40 - 400 வருடங்கள் ஆனாலும் ஆகலாம். ஆனால் நாம் எடுத்த இலக்கை நோக்கி நகர்ந்து கொண்டே இருக்கவேண்டும். அதற்கு நீங்கள் தளராமல் போராட வேண்டும் அதுதான் எங்கள் கடமை." என்று பதிலளித்தாராம்.

அது போல புலிகள் தங்கள் குறி;த்த இலக்கை நோக்கியே பயணித்தார்கள். சரண் என்ற பேச்சுக்கே இடமில்லாமல் ஆயுதத்தை மௌனித்து, போரட்டத்தைப் புலம் பெயர் தமிழர்கள் கையிலே ஒப்படைக்கின்றேன் என்றும் சொன்னார். அதே போல இன்று இந்தியாவிற்கு அப்பால் ஈழத்தமிழின போராட்டமென்பது பரந்துவிட்டது. இதை சரியான வழியில் கையாளவேண்டியது புலம் பெயர் தமிழரின் கடமை. இந்தியாவை மீறி நாங்கள் உரிமைகளைப் பெற்றுக்கொள்ள சர்வதேசத்தை இறுகப்பிடித்துக்கொள்ளவேண்டும். தமிழனின் இலக்கு முள்ளிவாய்க்காலுடன் முடியவில்லை. அது தன் பாதையில் பயணித்துக்கொண்டே இருக்கின்றது.

தன்னாட்டு மக்களுடன் போர் செய்து தன்மக்களையே கொன்று ஒருபுறம் மக்கள் அவலப்பட போர் வெற்றி கொண்டாடிய சிங்களம். எல்லோரும் ஒரு தாய்மக்கள் என்று கொக்கரித்துக்கொண்டிருக்கின்றது. போரில் வெற்றியென்றாலும் அதைக்கொண்டாடும் தகமை இலங்கைக்கு இல்லை. ஏனெனில் எல்லோரும் ஒரு சகட்டு மக்கள் தானே. இங்கேயே சிங்களம் தன்னயறியாமல் தமிழர்கள் இன்னொரு தேசம் என்று பறைசாற்றிவிட்டது. பறைசாற்றிக் கொண்டிருக்கின்றது.

சிங்களம் தமிழர்களை ஏமாற்றியது போல் சர்வதேசத்தையும் ஏமாற்றிக்காலம் கடத்தலாம் அந்தக்காலத்தில் சிறுகச் சிறுகத்தமிழர்களைக் கொன்று இல்லாதாக்கிவிடலாம் என்ற தப்புக்கணக்குப்போடுகின்றது. புலம் பொயர் தமிழர்களை மறந்துவிட்டார்கள். ஆனாலும் சர்வதேசம் சிங்களத்தின் பொய்மையைப்புரிந்து கொண்டுவிட்டது. இந்தியாவின் உள்நோக்கங்களையும் புரிந்துவிட்டார்கள். தமிழருக்கு ஒரு விடியல் தேவை என்பது வெளிஉலகில் முடிவாகிவிட்டது. அதைச் சரியான பாதையில் எடுத்துச் செல்வதென்பது புலம் பொயர் தமிழர் அமைப்புகளின் கைகளில் தங்கியுள்ளது.

இதை தான் காலம் கடந்த ஞானம் என்று கூறுவார்கள்..

40,400,4000,40,000 வருடங்கள் கூட எடுக்கலாம் என்று சொன்னா மாதிரிதான் நினைவு.இதைதான் தீர்க்க தரிசனம் என்பது .

இந்தியாவிற்கு தூரமாக அத்திலாந்து சமுத்திரத்திற்கு அருகில் தமிழிழத்தை இழுத்து கொண்டுவந்துவிட்டமேன்றால் பின்னர் இந்தியா தலையிடாது .இதுதான் இப்போ புலம் பெயர்ந்தவர்கள் செய்யவேண்டியது.தலைவர் போராட்டத்தை இவர்களிடம் தானே கொடுத்துவிட்டு போனவர் .

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

போராட்டம் உண்மையில் இந்தியாவின் கையில் இருந்து அமெரிக்காவுக்கு போய் விட்டது

. இனி இந்தியா நினைத்தாலும் முடியாது அமெரிக்க நினைத்துதான் இனி ஆசியாவில் நடக்கும். இந்தியா ஒத்து ஓடினால் லாபம். இல்லாவிடில் ஒட்டு மொத்த நாட்டம் இந்தியாவிற்குத்தான்.

Edited by சித்தன்

போராட்டம் உண்மையில் இந்தியாவின் கையில் இருந்து அமெரிக்காவுக்கு போய் விட்டது

. இனி இந்தியா நினைத்தாலும் முடியாது அமெரிக்க நினைத்துதான் இனி ஆசியாவில் நடக்கும். இந்தியா ஒத்து ஓடினால் லாபம். இல்லாவிடில் ஒட்டு மொத்த நாட்டம் இந்தியாவிற்குத்தான்.

இதுதான் இப்போதைய யதார்த்தம்.

  • கருத்துக்கள உறவுகள்

உண்மைதான் சித்தன்

ஆனால் தமிழர்கள் எல்லோரும் தமிழ் நாடு உட்பட இதை பயன்படுத்த கடினமாக உழைக்கவேண்டும்.

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.