Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.
  • advertisement_alt
  • advertisement_alt
  • advertisement_alt

இலங்கை விவகாரத்தில் மத்திய அரசின் முடிவு; ஜெயலலிதாவின் கோபம் அதிகரிப்பு மேனனை சந்திக்க மறுப்பு

Featured Replies

jayas.jpg

ஜெனிவாவில் இலங்கை அரசுக்கு எதிராக அமெரிக்கா கொண்டுவந்திருக்கும் பிரேரணை தொடர்பில் கலந்தாலோசிப்பதற்கு நேரம் ஒதுக்குமாறு இந்திய தேசியப் பாதுகாப்பு ஆலோசகர் சிவ்சங்கர் மேனன் விடுத்த அவசர வேண்டுகோளை தமிழக முதலமைச்சர் செல்வி ஜெயலலிதா நேற்றுத் திட்டவட்டமாக நிராகரித்துவிட்டார்.

இலங்கை அரசுக்கு எதிரான பிரேரணையை ஆதரிக்குமாறு தமிழ்நாட்டில் ஏகோபித்த குரலில் அரசியல் கட்சிகள் வலியுறுத்திவரும் தற்போதைய சூழ்நிலையில், சிவ்சங்கர் மேனனை சந்திக்க ஜெயலலிதா மறுத்திருப்பது மத்திய காங்கிரஸ் அரசுக்குப் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியிருக்கிறது.

"ஜெயலலிதாவை சந்திப்பதற்குச் சிவ்சங்கர் மேனன் இரண்டு தடவைகள் சந்தர்ப்பம் கேட்டார். அவர் அவசரமாக சென்னை வருவதற்கும் ஏற்பாடானது. ஆனால், மத்திய அரசின் அமைச்சர்களுடனோ, உயர்மட்ட அதிகாரிகளுடனோ நேரடிப்பேச்சு நடத்துவதை முதல்வர் விரும்பவில்லை" என்று தமிழக அரசின் மூத்த அமைச்சர் ஒருவர் நேற்றிரவு உதயனிடம் தெரிவித்தார்.

"ஜெனிவாவில் இலங்கை விவகாரம் குறித்தும், அது தொடர்பான தமிழக மக்களின் உணர்வுகள் பற்றியும் விளக்கி அம்மா (ஜெயலலிதா) இரண்டு கடிதங்களை பிரதமர் மன்மோகனுக்கு அனுப்பினார். அந்த இரண்டு கடிதங்களுக்கும் உரிய பதில் அனுப்பப்படவில்லை. அவற்றை கிஞ்சித்தும் மத்திய அரசு கவனிக்கவில்லை. இந்த நிலையில், அதிகாரிகளைச் சந்திப்பது அர்த்தமற்ற செயல். இதனால்தான் மேனனின் கோரிக்கையை நிராகரித்தார் முதல்வர்" என்றும் அவர் குறிப்பிட்டார்.

இதற்கிடையில் தமிழக முதலமைச்சரின் இந்த நிராகரிப்பால் அதிர்ச்சியடைந்துள்ள மத்திய அரசு, மூத்த அமைச்சர் ஒருவரை தமிழ்நாட்டுக்கு அனுப்புவது குறித்து தீவிரமாக ஆராய்ந்ததாக அறியமுடிகின்றது.

http://184.107.230.1...850905216578789

  • கருத்துக்கள உறவுகள்

இனியும் மத்திய அரசை நம்பிக்கொண்டிராமல் தமிழ்நாடு அரசு ஐநா மனித உரிமைகள் பேரவைக்கு ஏழுகோடித் தமிழர்களின் சார்பில் உத்தியோக பூர்வமாகத் தங்கள் நிலைப்பாட்டைத் தெரிவித்துக் கடிதமெழுத வேண்டும்.

இந்திய சட்ட வரைபுகளுக்கு இணங்க அதி உச்ச எதிர்ப்பு நடடிக்கைகளை மேற்கொள்ளவேண்டும் மாநில அரசு.

கடிதம் எழுதுவது, பார்க்க மறுப்பது எல்லாம் புளித்துப்போன கண்துடைப்பு நடவடிக்கைகள் மட்டுமே. எந்த மாற்றத்தையும் தரப்போவதில்லை.

423343_358821277492003_100000924015023_1041050_1954622412_n.jpg
  • கருத்துக்கள உறவுகள்

மங்காத்தா.....

தமிழினப்படுகொலைப் பங்காளி இந்திய மத்திய அரசு. தமிழினப்படுகொலையை மூடி மறைக்கப் பார்த்தது, இப்போது ஐ.நா. வில் அதை தோற்கடிக்கப்பார்க்கிறது.

  • கருத்துக்கள உறவுகள்

கொக்கென்று (கருணாநிதி) நினைத்தாயா .....??? :lol::icon_idea: :icon_idea:

மலையாள ஓநாய் மேனனை சந்திக்க மறுத்த முதலமைச்சருக்கு நன்றிகள்.

  • கருத்துக்கள உறவுகள்

தமிழ்நாடு அரசு இந்திய சட்டவரைபுகளுக்குள் நிற்கவேண்டுமானால் மத்திய அரசுக்கெதிராக எதையும் செய்ய முடியாது. தமிழரின் தார்மீக ஜனநாயக, உரிமைகபை; பாவித்து சர்வதேசத்துடனும், ஐநா போன்ற நிறுவனங்களுடனும் தன்னிச்சையாகத் தொடர்புகளைப் பேணமுயலுதல் மத்திய அரசுக்கு அதிர்ச்சியை ஏற்படுத்தும் நடவடிக்கையாகும். நிலைமையின் ஆபத்தையுணர்ந்து மத்திய அரசு மாநில அரசின் குரலுக்குச் செவிசாய்க்க முற்படலாம்.

மேனனை சந்திக்க மறுத்தது சிறப்பானது,பாராட்டவேண்டியது. எனினும் இவற்றிற்கு அப்பால்சென்று சட்டமன்றத்தீர்மானம், வேறு காத்திரமான

நடவடிக்கைகள் மூலமாக தமிழகத்தின் உச்சவெறுப்பைக் காட்டவேண்டும். ஒன்றுபட்டு தமிழ்நாடு நிற்பதால் துணிந்து முதலமைச்சர் அவ்வாறு

செயற்படலாம்.உண்மையான கொதிப்பும் விருப்பமும் இருப்பின் 'வழிகளும்' இருக்கின்றன .

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.