Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.
  • advertisement_alt
  • advertisement_alt
  • advertisement_alt

இலங்கைப் போர்க்குற்றம் - சுயாதீனமான விசாரணை தேவை அன்றேல் இலங்கை தூதர் வெளியேற்றப்படுவார் - ஆஸ்திரேலிய செனட்டர் லீ ரைனான் - மொழியாக்கம் ஈழதேசம்..!

Featured Replies

  • கருத்துக்கள உறவுகள்

lee%20rasghan.jpg

புதிய காணொளியை வெளியிட்ட சனால் - 4 ன் புதிய ஆதாரங்கள் குறித்து ஆஸ்திரேலிய அரசின் செனட்டர் லீ ரைனான் செய்தியாளர்களிடம் கூறியவை,இலங்கையின் போர்க்குற்றம் குறித்து பிரிட்டன் தொலைக்காட்சி வெளியிட்ட 54 நிமிட மனித உரிமை மீறல் காட்சிகள் ஆஸ்திரேலிய அரசை உலுக்கி உள்ளது. விடுதலைப் புலிகளின் தலைவர் வே.பிரபாகரன் அவர்களின் புதல்வன் 12 வயது சிறுவன் பாலச்சந்திரன் மற்றும் உதவியாளர்கள் நால்வரும் சரணடைந்த வேளை, இலங்கை இராணுவத்தினால் ஆடை களையப்பட்டு, கைகள் கட்டப்பட்டு சுட்டுக் கொன்ற காட்சிகள் போர்க்குற்ற ஆவணமாக காட்டப்பட்டுள்ளன. மேலும் இந்தக் காட்சிகளை புதிய போர்க்குற்ற ஆவணங்களாக எடுத்துக் கொள்ளப்பட்டுள்ளன என்றார் லீ. மேலும் கூறுகையில், சமீபத்தில் வெளியிட்ட போர்க்குற்றம் இரண்டாவது பாகம் என்ற ஆவணத்தில்,

ஐ.நா.வின் உணவு வழங்கும் குழுவினர் மீதும் குண்டுகளை வீசி, கொன்றும் வலுக்கட்டாயமாக வெளியேற்றி இருக்கிறார்கள், அதோடு பாதுகாக்கப்பட்ட பாதுகாப்பு வலையம் என்று அறிவித்த பகுதிகளில் கொத்துக் குண்டுகளை வீசி அந்த வளையத்தில் இருந்த மக்களை அழித்துள்ளார்கள். இந்த செயல்களை செய்தவர்கள் அனைவரும் அதாவது போர்க்குற்றங்களை அரங்கேற்றியவர்கள் அனைவரும் இன்று இலங்கை அரசின் மிக உயர்ந்த பதவியில் அமர்ப்பட்டுள்ளனர் என்றார் லீ.

ஆஸ்திரேலியாவில் உள்ள இலங்கை தூதர் டி.எஸ்.ஜி.சமரசிங்கே கூறியது போல இலங்கை அரசே நடத்திய L L R C யின் விசாரணை அறிக்கை போதுமானதாக இல்லை அதாவது நேர்மையற்றவையாக உள்ளன. தற்பொழுது உலகில் இவர்கள் கூறுகின்ற இந்த அறிக்கை பொய்களையும் புனை சுருட்டுக்களையும் உள்ளடக்கியதாகவே உள்ளன. இந்த தருணத்தில் ஆஸ்திரேலியாவின் ஜில்லார்ட் அரசு உலக அரங்கிற்கு அழைப்பு விட வேண்டும், ஐ.நா.வின் நிபுணர் குழு, அம்னெஸ்டி இன்டர்நேஷனல், இன்டர்நேஷனல் கிரைசிஸ் குழு மற்றும் மனித உரிமை கண்காணிப்பு குழு போன்றவைகளை கொண்டு நேர்மையான சுதந்திரமான விசாரணை நடத்திட வேண்டிய தருணம் இது என்று கூறுகிறார் செனட்டர் லீ ரைனான்.

ஆஸ்திரேலியா அரசு உறுதியாக ஆதரிக்க வேண்டும் அமெரிக்க அரசு கொண்டு வரும் இலங்கைக்கு எதிரான தீர்மானத்தை, இந்த வார இறுதியில் நடைபெறும் மனித உரிமை அமைப்பில் கொண்டு வரப்படும் இந்த தீர்மானம் குறித்த ஆதரவு ஆஸ்திரேலியா அரசின் கடமைகளில் ஒன்று மேலும் சுயாதீனமான விசாரணைக்கு ஆதரவு வழங்குவதன் மூலம் வலியுறுத்துவதின் மூலம் அடுத்த கட்டத்திற்கு நகர்த்த முடியும்.

செனட்டர் லீ ரைனான் உறுதிபட கூறி வருகிறார் ஆஸ்திரேலிய பிரதமர் ஜில்லார்ட் இலங்கை அரசிடம் கூற வேண்டும் இவ்வாறு, இலங்கை அரசை கூப்பிட்டு அய்யா, உங்கள் தூதரை திரும்ப அழைத்துக் கொள்ளுங்கள், சுதந்திரமான நேர்மையான சர்வதேச விசாரணைக் குழு போர்க்குற்றங்கள் மற்றும் மனித உரிமைகள் குறித்து முழு விசாரணை அறிக்கை அளிக்கும் வரையில் உங்கள் தூதரை திரும்ப அழைத்துக் கொள்ளுங்கள் என்று கூற வேண்டும் என்று ஆஸ்திரேலியா பிரதமர் கூற வேண்டும் என்கிறார் லீ. இலங்கை அரசு இந்த உடன்பாட்டுக்கு, கோரிக்கையை ஏற்கவில்லையெனில் ஆஸ்திரேலியாவில் உள்ள இலங்கை தூதர் அட்மிரல் டி.எஸ்.ஜி.சமரசிங்கே அவர்களை உடனே வெளியேற்ற வேண்டும் என்று கூறியுள்ளார் செனட்டர் லீ ரைனான். ஆக ஈழதேசத்தில் கூறிவந்த கருத்துக்களை தற்பொழுது பல அறிஞர் பெரு மக்கள் கூற ஆரம்பித்து விட்டார்கள்.

லீ ரைனான்,

மொழியாக்கம் ஈழதேசம் இணையத்திற்காக சங்கிலிக்கறுப்பு

http://www.eeladhesa...lle-nachrichten

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

சிறி லங்கன் எண்டு சொல்லடா, தலை குனிந்து நில்லடா. 

  • கருத்துக்கள உறவுகள்

நல்லதொரு செய்தி

எல்லா நாடுகளும் இதை செய்ய முயலுமாயின் சிங்களம் ஆட்டம் காணலாம்

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

இதை தொடர்ந்து ஏனைய நாடுகளும் இவ்வாறன நல்லதொரு முடிவுக்கு வருவார்கள் என நம்புவோம்.

  • கருத்துக்கள உறவுகள்

எனக்கு என்னவோ இந்த சிறிலங்கா கிரிகட் டீமை வைத்தே அவுஸ்ரேலியங்களை கவுத்துபோடுவாங்களோ தெரியவில்லை...எதுக்கும் பொறுத்திருந்து பார்ப்போம்.....

அம்மையாருக்கு நன்றிகள்.

இந்த ஆதரவுடன் செனட் சபையில் இருந்து அவுஸின் பாராளுமன்ற ஆதரவை பெறவேண்டும். அவர்களிடம் தான், அங்குதான் உண்மையான அரசியல் பலம் உள்ளது.

நன்றிகள்.

ஏனையவர்களையும் இவ்வாறு சிந்திக்க தூண்டுவதற்கு இவர் முதல் படி போட்டுள்ளார். இதனை பாராளுமன்றம் ஏற்று அதனை நடைமுறைப்படுத்தின் ஏனைய நாடுகளும் இதனை பின்பற்ற தொடங்கும்.

சகல நாடுகளிலும் சிங்களப் பயங்கரவாதிகள் வெளியேற்றப்பட வேண்டும்.

தமிழினப் படுகொலைகளை மேற்கொண்ட சிங்களப் பயங்கரவாதிகளுக்கு தொடர்ந்து ஆதரவாக இருக்கும் இந்தியக் காட்டுமிராண்டி ஜனநாயகவாதிகள் மீதும் நடவடிக்கைகள் எடுக்க வேண்டும்.

உலகில் மிக கீழ்த்தர கலாச்சரத்தைக் கொண்ட, மனித பண்புகள் அற்ற இந்தியக் காட்டுமிராண்டிகள் ஐ. நா. சபையில் உறுப்பினராக இருக்கும் தகுதியையும் நீக்கவேண்டும்.

இவைகளெல்லாம் வெளிச்சம் போட்டுக் காட்டிநிற்கும் சனல் 4 ற்கு வாழ்த்துகள். தகவல்கள் எவ்வாறு பெறப்படுகின்றது என்பதைவிட அதைச் சரியான இடங்களில் சேர்ப்பிப்பது ஊடகங்களின் தனித்தன்மை. அந்த வகையில் இன்றைய சந்தர்ப்பத்தில் அந்த ஊடகமே பெருமைக்குரியது.

ஆட்சியாளர்கள், எந்தக் கோணங்களில் சிந்தித்தாலும் அவர்களை இந்த ஆவணப்படங்கள் அசையவிடாமல் பிடித்துக் கொண்டிருக்கிறது. இறுதியில் ஆட்சியாளர்கள்தான் இதற்கான நடவடிக்கைகளை எடுக்க வேண்டுமெனவும் முடிவு சொல்லியுள்ளது.

இதன் வெளிப்படைதான் இந்த அறிக்கையும். நீதியின் பக்கம் மட்டுமல்ல கவனிப்பாரில்லாத ஒரு இனத்தின் அவாக்களையும் இவர்கள் சார்ந்து நிற்றல் வேண்டும் என்பதே அனைத்துத் தமிழரின் விருப்பம்.

  • கருத்துக்கள உறவுகள்

பசுமைக்கட்சியின் செனட்டர் லீ ரைனான் தொடர்ச்சியாக பாராளுமன்றத்தில் ஈழத்தமிழரகளுக்கு ஆதரவாகக் குரல் கொடுத்து வருபவர். குறிப்பாக முன்பு பொதுநலவாய நாடுகளில் இருந்து சிறிலங்கா நிற்கப்படவேண்டும், சிறிலங்காவுக்கு எதிராகப் பொருளாதாரத் தடை விதிக்க வேண்டும் எனப் பாராளுமன்றத்தில் பிரேரணை கொண்டு வந்தார். ஆனால் ஆளும் தொழிற்கட்சியும், எதிர்க்கட்சி லிபரல் கட்சியும் எதிர்த்து வாக்களித்து பிரேரணை தோற்கடிக்கப்பட்டது.

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.