Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

முக நூலில் பார்த்தது

Featured Replies

முன்பு ஒரு முறை தேசியத்தலைவர் பிரபாகரனின் சகோதரர் திரு மனோகரன் (டென்மார்க்கில் வசிக்கிறார்) அவர்களுடன் உரையாடிக்கொண்டிருந்தபோது ஒரு தகவலை குறிப்பிட்டார். தலைவர் அவர்கள் பிறந்தது வல்வெட்டித்துறையில்தான். ஆனால் பார்வதியம்மாள் கருவுற்றது அநுராதபுரத்தில். கருவற்றிருந்த காலத்தில் பார்வதியம்மா தினமும் மாலையில் சிங்கள ஆட்சியாளர்களுக்கு சிம்மசொப்னமாக விளங்கிய எல்லாள மன்னனின் சமாதியின் கீழ் இளைப்பாறுவாராம். அங்கு வருகிற சிங்களப்பெண்கள் "என்ன எல்லாளன் மீண்டும் உனது வயிற்றில் பிறக்க வேண்டும் என்று இங்கு வந்து தினமும் குந்தியிருக்கிறியா?" என்று கேட்பார்களாம். இறுதியாக ஒரு நாள் சில புத்த பிக்குகள் "இந்த பெண்ணை இனி சமாதிக்கு அருகில் விடாதீர்கள். எல்லாளன் மீண்டும் பிறந்து சிங்களவர்களை பழிவாங்குவான் என்று ஐதீகம் இருக்கிறது. கருத்தரித்த இந்த பெண் தினமும் இந்த இடத்தில் இருக்ககூடாது" என்று பார்வதியம்மா அங்கு செல்வதை தடுத்தார்களாம். ஆச்சரியமான தகவலாக அது இருந்தது. பின்பு நடந்தது உலகறிந்த வரலாறுதானே.. இதை ஏன் இங்கு குறிப்பிடுகிறேன் என்றால் வன்னியிலுள்ள ஒரு நண்பர் இன்று பேசும்போது ஒரு கர்ப்பிணி தமிழ்பெண் அழிக்கப்பட்ட மாவிரர் துயிலுமில்லத்திற்கு அண்மையாக வெறித்து பார்த்துக்ககொண்டிருப்பதை தான் அடிக்கடி காண்பதாக குறிப்பிட்டார். மீண்டும் "வரலாறு" கருக்கொண்டுவிட்டது. வரலாறு என்பது அதன்போக்கில் எழுதப்படும் என்பது ஒரு இயங்கியல்விதி.

  • கருத்துக்கள உறவுகள்

உண்மையாக இருக்கலாம், கிளியவன்!

மகாபாரதத்தில், சுபத்திரையின் வயிற்றில் அபிமன்யு கருக்கொண்ட நேரம்!

அருச்சுனன் 'சக்கர வியூகத்தை' உடைக்கும் விதத்தை சுபத்திரைக்கு விளக்குகிறான்!

உடைத்து உள்ளே போவது வரையும் கேட்டுக்கொண்டிருந்த சுபத்திரை, வெளியே வரும் விதம், கூறப்படுகையில் அசதியால் தூங்கி விடுகிறாள்!

அதே போல போர்க்களத்தில், சக்கர வியூகத்தை உடைத்து உள்நுழைந்த அபிமன்யு, வெளியே வரத் தெரியாமல், கர்ணனால் கொல்லப் படுகிறான்!

இது ஒரு கதை என்றபோதும், உங்கள் கருத்துக்கு வலுவூட்டுவதால், இங்கே பதிந்துள்ளேன்!

  • கருத்துக்கள உறவுகள்

இப்படியே சொல்லிச் சொல்லி நாங்கள் எல்லாம் எங்கள் வாழ்க்கையை வளப்படுத்த.. நாடு நாடா எலிகளாக பதிங்கிக் கொள்வோம். இன்னொரு எல்லாளன் வரும் வரை விடுதலையை கிடப்பில் போடுவோம்..! எங்கள் வரலாற்றை அடுத்தவன் எழுத அனுமதிப்போம்..!

ஐயா.. பிறந்து வாழ்ந்து கொண்டிருக்கிற எல்லா தமிழனும்.. ஒவ்வொரு எல்லாளனா.. பிரபாகரனா செயற்பட்டால்.. இன்னொரு எல்லாளனையோ.. பிரபாகரனையோ தேடிக் கொண்டிருக்கத் தேவையில்லையே..! அதற்கு வழி இருக்கோன்னு.. பாருங்க.. செயற்படுங்க. அதன் மூலமே தமிழ் கர்ப்பிணிகள்.. துயிலும் இல்லங்களை வெறித்துக் கொண்டு நிற்கும்.. நிலை போக்கி.. சுதந்திர தேசத்தின் தென்றலை சுவாசிக்கச் செய்து.. அவர்களின் சிசுக்களுக்கு நல்ல.. சுதந்திர வாழ்வை சமர்ப்பிக்க வழி செய்ய முடியும்..! :icon_idea:

Edited by nedukkalapoovan

  • கருத்துக்கள உறவுகள்

நெடுக்கர், இந்தப் பதிவில் யாரும் எல்லாளனைத் தேடியதை நான் காணவில்லை!

கருக்கொண்ட ஒரு தாயின் மனநிலை, ஒரு குழந்தையின் மனநிலை வளர்ச்சியைப் பாதிப்பது பற்றியே, கிளியவன் எழுதியிருக்கின்றார் என நான் நினைக்கின்றேன்!

மாவீரர் இல்லத்தை வெறித்துப் பார்க்கும், அந்தத் தாயின் மன நிலைக்கும், 'வரலாறு கருக்கொள்வதற்கும்' இடையில் ஆழ்ந்த கருத்தொன்று புதைந்துள்ளது!

  • கருத்துக்கள உறவுகள்

நெடுக்கர், இந்தப் பதிவில் யாரும் எல்லாளனைத் தேடியதை நான் காணவில்லை!

கருக்கொண்ட ஒரு தாயின் மனநிலை, ஒரு குழந்தையின் மனநிலை வளர்ச்சியைப் பாதிப்பது பற்றியே, கிளியவன் எழுதியிருக்கின்றார் என நான் நினைக்கின்றேன்!

மாவீரர் இல்லத்தை வெறித்துப் பார்க்கும், அந்தத் தாயின் மன நிலைக்கும், 'வரலாறு கருக்கொள்வதற்கும்' இடையில் ஆழ்ந்த கருத்தொன்று புதைந்துள்ளது!

தாயின் மன நிலை குழந்தையின் வளர்ச்சியில் தாக்கத்தைச் செலுத்தும் என்பது ஆய்வுகள் ரீதியிலும் கூட சொல்லப்படுகின்ற ஒரு செய்தி தான்.

பார்வதி அம்மா எல்லாளனைத் தேடிச் சென்றதும்.. இந்த தமிழ் பெண்மணி.. மாவீரர் துயிலும் இல்லம் தேடிச் செல்வதும்.. அவர்களின் எண்ணங்களில் ஒரு வெற்றிடம் தோன்றி இருந்ததையே காட்டுகிறது..! அந்த வெற்றிடத்தை நிரப்பும் தேவையை இந்தப் பெண்மணிகள் கொண்டிருந்திருக்கின்றனர். இந்த நிலையை ஜேசுவைப் பெற்ற மேரியும் கொண்டிருந்ததை வரலாற்று நூல்களில் படிக்கிறோம்..!

அந்த பெண்மணிகள் உணர்ந்த.. அந்த வெற்றிடத்துக்கு.. அதே காலத்தில் வாழும் நாமும் ஓர் காரணம் என்பதை உணர மறுப்பதாக எனக்கு தெரிகிறது. அதை நிரப்ப மனிதர்கள் முன்வராமையும்.. இந்த ஏக்கங்களுக்கான தோற்றுவாயாக இருக்கலாம் இல்லையா..??! நான் அந்த வகையில் இச்செய்தியைப் பார்க்கிறேன்..! வரலாற்றை காலம் எழுத காத்திருப்பதை விட நாம் காலத்தோடு இணைந்து எழுதுவதே சிறப்பு..! :icon_idea:

Edited by nedukkalapoovan

  • கருத்துக்கள உறவுகள்

பிரபாகரன்கள் உருவாகுவார்கள். அதற்கான தேவை அங்கு இருக்கிறது என்ற கிளியவனின் தேடுதல் நியாயமானதே.

அத்துடன் அப்படி ஒருவர் வரும்வரை நாம் பொறுத்திருக்க தேவையில்லை பொறுத்திருக்கமுடியாது. நாம் எம்மை அவசரமாக பாதுகாக்கவேண்டிய தேவையிருக்கிறது. அதற்காக தற்போதே உழைத்தாகவேண்டும் என்ற நெடுக்கின் ஆதங்கமும் ஏற்றுக்கொள்ளக்கூடியதே. :icon_idea:

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.