Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

அறிவியல் தொழில்நுட்பம்

அறிவியல் | ஆய்வுகள் | விண்வெளி | தொழில்நுட்பத் தகவல்கள் | ஆலோசனைகள் | உதவிகள்

பதிவாளர் கவனத்திற்கு!

அறிவியல் தொழில்நுட்பம் பகுதியில் அறிவியல், விண்வெளி ஆய்வுகள், வேகமாக மாறிவரும் தொழில் நுட்பங்கள் பற்றிய தரமான பதிவுகள்,  அவசியமான செய்திகள், ஆலோசனைகள், உதவிகோரல்கள் இணைக்கப்படலாம்.

எனினும் தகவல் தொடர்பாடல் தொழில் நுட்பம், கணிணி, திறன் கருவிகள் தொழில் நுட்பம் போன்றவை பொருத்தமான பகுதிகளில் இணைக்கப்படுதல் வேண்டும்.

அத்துடன் அளவுக்கதிகமாக  பதிவுகள் இணைப்பதையும், பல தலைப்புக்கள் திறப்பதையும் தவிர்க்கவேண்டும்.

  1. பூமியின் மேற்பரப்பிலிருந்து சுமார் 250 மைல் தொலைவிலுள்ள சர்வதேச விண்வெளி ஆய்வு நிலையத்திலிருக்கும் விண்வெளிவீரரொருவர் பூமியின் மேற்பரப்பை படமெடுத்து அனுப்பியுள்ளார். தற்போது டுவிட்டரில் பகிரப்பட்டுள்ள இப்படங்கள் மிகுந்த வரவேற்பைப் பெற்றுள்ளன. கனேடிய விண்வெளி வீரரான கிறிஸ் ஹெட்பீல்ட் தனது மகனுக்கு இப் படங்களை அனுப்பியுள்ளார். அவரது உத்தியோகபூர்வ டுவிட்டர் கணக்கினை பராமரிக்கும் மகன் இப்புகைப்படங்களை வெளியிட்டுள்ளார். http://www.virakesari.lk/article/technology.php?vid=136

  2. இன்று கணினி வைத்திருப்பவர்கள் என்று இல்லாமல் அனைவருக்கும் இருக்கும் ஒரு பெரிய சிக்கல் என்ன வென்றால் சி.டி தாங்க சி.டி யில் நாம் நம்முடைய போடோக்களிலிருந்து, பிறந்தநாள் நிகழ்சிகள், திருமண நிகழ்சிகள், நமது தனிப்பட்ட விஷயங்கள் அவரைக்கும் பதிவு பண்ணி பாதுகாத்து வருகிறோம். ஆனால், இதிலும் ஒரு பெரிய சிக்கல் வந்து விடும். அதுதான் சி.டி.கள் மோசமாகி போவது அதாவது சி.டி களில் சிக்கல் ஏற்பட்டு விடும் உராய்வு, தூசு படித்தல் போன்ற பல காரணங்களால் சி.டியில் இருக்கும் தகவல்களை நாம் பெற முடியாத சூழல் ஏற்படும் போது தான் நாம் அதிகமாக பாதிக்கப்படிகிறோம். நாம் ஆசை ஆசையாக சேமித்து வைத்த வீடியோக்கள். அனைத்தும் வீணாகி போகும் போது அதனால் நாம் அடையும் பாதிப்பு மிக மிக அதிகம். இப்படி ப…

  3. http://www.youtube.com/watch?feature=player_embedded&v=vOFT6lTvKcE Science in Classical Tamil - அறிவியல் தமிழ் - Dr.T S Subbaraman - TEDx Salem

    • 0 replies
    • 578 views
  4. பட மூலாதாரம்,GETTY IMAGES படக்குறிப்பு, ‘யூ.எஃப்.ஓ’ என முதன்முதலில் அழைத்தது அமெரிக்க விமானப்படை தான். 4 மணி நேரங்களுக்கு முன்னர் இன்று (ஜூலை 2) உலக யூ.எஃப்.ஓ (UFO) தினம். ‘யூ.எஃப்.ஓ’ எனப்படும் பறக்கும் தட்டுக்கள் எப்போதுமே சர்ச்சைகளையும், சுவாரஸ்யத்தையும் ஒரு சேர கொண்டவை. ‘யூ.எஃப்.ஓ’ என்றால் என்ன? அவை உண்மையிலேயே இருக்கின்றனவா? அறிவியல் அவற்றைப்பற்றி என்ன சொல்கிறது? இக்கட்டுரையில் பார்க்கலாம். ‘யூ.எஃப்.ஓ’ - பெயர் எப்படி வந்தது? அடையாளம் காணப்படாத பறக்கும் பொருட்கள் என்பதன் ஆங்கிலப் பிரயோகமான Unidentified Flying Object என்பதன் சுருக்கம் தான் U.F.O. தமிழில் இ…

  5. நிக்கொலா ரெஸ்லா: 20ம் நூற்றாண்டைக் கண்டுபிடித்தவன் by vithai Tesla எனப் பெரிடப்பட்ட மின்சாரக் கார் வீதிகளில் திரிய ஆரம்பித்திருக்கிறது. அமெரிக்காவில் 2003 இல் ஆரம்பிக்கப்பட்ட Tesla Motors நிறுவனம் 2008 இல் தனது முதல் -தனி மின்சாரத்தில் இயங்கும்- காரை பாவனைக்கு கொணர்ந்தது. “ரெஸ்லாவின் தூரநோக்கும் புத்திக்கூர்மையும் இன்றி இன்றைய எமது மின்சாரக் கார் சாத்தியமில்லை” என அந்த நிறுவனம் தமது இணையத்தளத்தில் குறிப்பிட்டிருக்கிறது. யார் இந்த ரெஸ்லா? மின்சாரத்தைக் கண்டுபிடித்தவர் யார், வானொலியைக் கண்டுபிடித்தவர் யார் என்றெல்லாம் பாடசாலையில் மனனமாகத் தீத்தப்பட்ட அறிதலோடு ஒரு பொதுமனிதஜீவியாக நாம் வாழ்ந்துகொண்டிருக்கிறோம். 19ம் நூற்றாண்டில் தொடங்கி 20 ம் நூற்றாண்டுக…

  6. உலக அளவில் கடந்த வாரம் வெளியான சில முக்கிய தொழில்நுட்ப செய்திகளைத் தொகுத்து வழங்குகிறது பிபிசி தமிழின் இந்த பிரத்யேக வாராந்திர தொழில்நுட்ப தொடர். மணிக்கு 1,223 கி.மீ வேகத்தில் செல்லும் ஹைப்பர்லூப் வாகனம் தயாரிப்பு மின்காந்த உந்துவிசையை அடிப்படையாக கொண்டு செயல்படும் தனது வாகனத்தின் வடிவமைப்பை ஹைப்பர்லூப்டிடி (Hyperloop Transportation Technologies) நிறுவனம் வெளியிட்டுள்ளது. அதிகரிக்கும் நெரிசல், மாசு, செலவு போன்றவற்றின் காரணமாக போக்குவரத்து என்பது எரிச்சல் மிக்கதாகவும், நேரத்தை கரைப்பதாகவும் மாறிவரும் சூழ்நிலையில் பேருந்து, கார், ரயில், விமானம் போன்றவற்றிற்கு அடுத்து மின்காந்த உந்துவிசையை அடிப்படையாக கொண்ட அடுத்த தலைமுறைக்கான போக்குவரத்து வாகனத்தை உருவாக்கும…

    • 1 reply
    • 577 views
  7. இணையத்திற்கான பூட்டை எத்தனை பாதுகாப்பாக தயார் செய்தாலும் அதற்கான கள்ளச்சாவியை தங்களால் தயார் செய்துவிட முடியும் என்று ஹேக்கர்கள் மீண்டும் ஒரு முறை நிரூபித்துள்ளனர். ஐரோப்பாவை சேர்ந்த நட்சத்திர ஹேக்கர் ஒருவர், எவருடைய கைரேகையையும் நகலெடுக்க முடியும் என காண்பித்து திகைக்க வைத்திருக்கிறார். இணைய உலகில் இமெயிலும் துவங்கி வங்கிச்சேவை வரை எல்லாவற்றுக்கும் பாஸ்வேர்ட் முறையே பூட்டுச்சாவியாக பயன்படுத்தப்படுகிறது. ஆனால் பாஸ்வேர்ட் முழுவதும் பாதுகாப்பானது அல்ல என்பதை ஹேக்கர்கள் பலமுறை பலவிதங்களில் நிரூபித்து வருகின்றனர். இதற்கு மாற்று மருந்தாக கடினமான பாஸ்வேர்டுகளை உருவாக்குவது, இரண்டு அடுக்கு பாதுகாப்பு வழங்குவது என பலவித முயற்சிகள் மேற்கொளப்பட்டு வருகின்றன. ஆனால் எல்லாவற்றி…

  8. நாய்வாலாட்டுவது அதன் உணர்வுகளை காட்டும் செயல் நாய் வாலை ஆட்டுவது ஏன்? மனிதரைப் பார்த்து நாய் வாலை ஆட்டினால், அது நம்மை நட்புடன் எதிர்கொள்கிறது என்று அர்த்தம். ஆனால், நாய் வாலை ஆட்டுவது வெறுமனே நட்பைத் தெரிவிப்பதற்காக மாத்திரம் அல்லவாம். அது வாலை எப்படி ஆட்டுகிறது என்பதைப் பொறுத்தும் அதன் உணர்வுகள் வேறுபடுகின்றனவாம். குறிப்பாக இன்னுமொரு நாயைப் பார்த்து, ஒரு நாய் வாலை ஆட்டுவதன் மூலம் தனது உணர்வுகளை வெளிப்படுத்துமாம், அதாவது, வாலை வலது புறமாக ஆட்டினால், அது நட்பு என்றும் இன்னுமொரு நாயைப் பார்த்து அது இடது புறமாக ஆட்டினால், அது வெறுப்புடன் அதனை பார்க்கிறது என்றும் அர்த்தமாம். மனிதனின் மூளையை எடுத்துக்கொண்டால், அதன் வலது மற்றும் இடது பகுதிகள் வெவ்வேறான உணர்வுகளுக்கு ப…

  9. என்செலாடஸ் மேற்பரப்பில் வரிவரியாக உள்ள பிளவுகளில் இருந்து நீராவி பீய்ச்சியடிக்கப்படுகிறது சனிக்கிரகத்தை சுற்றும் துணைக்கோள்களில் ஒன்றான என்செலாடஸில் உறைபனி மூடிய அதன் மேற்பரப்புக்கு கீழே திரவ நீர்நிலை ஒன்று இருப்பதற்கான புதிய ஆதாரங்கள் தற்போது கிடைத்துள்ளன. இந்த குட்டிக் கிரகத்தின் தென் துருவத்தில் வரிவரியாகத் தோன்றும் ஒரு இடத்தில் இருந்து உறைபனியாலான துகள்கள் போலத் தோன்றிய பொருட்கள் பீய்ச்சியடித்ததை விஞ்ஞானிகள் கண்ட காலம்தொட்டே அவர்கள் இது தொடர்பில் உற்சாகம் அடைந்திருந்தனர். அமெரிக்க விண்வெளி ஆராய்ச்சி நிறுவனமான நாஸாவின் கஸ்ஸினி என்ற விண்கலம் இந்த துணைக்கோளின் மேலே பறந்து செல்கையில் அது சேகரித்த தகவல்களை தற்போது ஆராய்ந்துள்ள விஞ்ஞானிகள் இந்த துணைக்கோளில் திரவ நீர…

    • 0 replies
    • 575 views
  10. 20 நொடிகளில் உலகை அதிரவைத்த இந்தியா... மணிக்கு 7,000 கிமீ வேகத்தில் செல்லும் ஏவுகணை...

  11. மனிதன் மூளையில் ஏற்படும் பாதிப்பை சரிபடுத்துவது என்பது விஞ்ஞானிகளுக்கும் மருத்துவர்களுக்கும் ஒரு பெரிய சவாலாக இருந்து வருகின்றது.தற்போது கண்டறியப்பட்ட ஓர் புதிய கண்டுபிடிப்பு இதற்கு சிறந்த தீர்வாக அமையும் என்று விஞ்ஞானிகள் கருதுகின்றனர்.மூளையில் உள்ள செல்கள் பாதிக்கப்படும் போது அதற்கு பதிலாக புதிய செல்களை உருவாக்கி அதில் பொருத்தினால் பாதிப்பை சரி செய்து விடலாம். ஆனால் இதுவரை மூளை செல்களை எப்படி உருவாக்க முடியும் என்பதை கண்டு பிடிக்க இயலாத நிலையில் விஞ்ஞானிகள் இருந்தனர்.இதற்கிடையில் இந்தியாவை சேர்ந்த தமிழக இயற்பியல் விஞ்ஞானி சர் சி.வி. ராமன். இவர் 80 ஆண்டுகளுக்கு முன்பு கண்டுபிடித்த ராமன் விளைவு மிக பிரபலமானது. இதற்காக இவருக்கு நோபல் பரிசு வழங்கப்பட்டது. மனிதனின் மூளையி…

  12. விண்வெளியில் கடந்த 30 வருட சாதனைகளும் வேதனைகளும்

  13. பட மூலாதாரம்,CARGILL படக்குறிப்பு, புதிய தொழில்நுட்ப முறையிலான சோதனை ஓட்டத்தில் Pyxis Ocean சரக்கு கப்பல். கட்டுரை தகவல் எழுதியவர், டாம் சிங்கிள்டன் பதவி, பிபிசி செய்தியாளர் 25 ஆகஸ்ட் 2023 காற்றை எரிசக்தியாக பயன்படுத்தி படகுகளை இயக்குவது பழமையான கடல்சார் தொழில்நுட்பங்களில் ஒன்று. ஆனால் இந்தத் தொழில்நுட்பம் தற்போது புதிய பரிமாணத்தை எட்ட உள்ளது. பிரிட்டனில் புதிய தொழில்நுட்பத்தில் வடிவமைக்கப்பட்ட சரக்கு கப்பல், தனது முதல் சோதனை பயணத்தை தொடங்கி உள்ளது. காற்று எரிசக்தி மூலம் இக்கப்பல் இயக்கப்படுவதே இந்த பயணத்தின் தனிச்சிறப்பு. இந்தக் கப்பலை வாடகை…

  14. கூகிள் மற்றும் நாசா இணைந்து எதிர்கால செயற்கை நுண்ணறிவை உருவாக்க தொடங்குகிறது Feb 13, 2014 Paranthaman அறிவியல் செய்திகள் 0 கூகிள் மற்றும் நாசா ஆகிய இரண்டு நிறுவனங்களும் இணைந்து துளிம கணினிகளைப் (quantum computers) பயன்படுத்தி எதிர்கால செயற்கை நுண்ணறிவை (artificial intelligence) உருவாக்கும் முயற்சியில் ஈடுபடுகிறது. இதற்காக அவை ஒரு ஆய்வகத்தை அமைக்க திட்டமிட்டுள்ளது. கலிபோர்னியாவில் உள்ள நாசாவின் அமெஸ் ஆய்வு மையம் (Ames Research Centre) என்னும் இடத்தில் புதிதாக ஒரு துளிம எதிர்கால நுண்ணறிவு பயிற்சிக்கூடம் (Quantum Artificial Intelligence Lab) ஒன்றை அமைக்கவிருக்கிறார்கள். டி-அலை கட்டகங்களிலிருந்து (D-Wave Systems) தற்போது துளிம கணினியை முதல் நோக்கமாக கொண்டு அந்த ஆய்வகம…

  15. பட மூலாதாரம்,GETTY IMAGES படக்குறிப்பு, வெங்கி ராமகிருஷ்ணனுக்கு 2009 ஆம் ஆண்டு வேதியியலுக்கான நோபல் பரிசு வழங்கப்பட்டது. கட்டுரை தகவல் எழுதியவர், கார்லோஸ் செரானோ பதவி, பிபிசி நியூஸ் 28 ஜனவரி 2024 முதுமை அடைவதும், இறப்பதும் உலகில் உள்ள ஒவ்வொரு உயிரினமும் சந்திக்கும் நிலை. பலர் மரணத்திற்கு பயப்படுகிறார்கள். ஆனால் நாம் ஒவ்வொருவரும் ஏன் வயதாகி இறக்க வேண்டும்? வயதாவதை நிறுத்த முடியுமா அல்லது மரணத்தைத் தவிர்க்க முடியுமா? இந்தியாவைச் சேர்ந்த தமிழ் வம்சாவளி மூலக்கூறு உயிரியலாளரான வெங்கி ராமகிருஷ்ணன் தனது முழு வாழ்க்கையையும் இந்தக் கேள்விகளுக்கு பதிலளிப்பதற்காகவே செலவிட்டிருக்கிறார். ராமகிருஷ்ணன்…

  16. ஸ்மார்ட்ஃபோன் வைத்துள்ள மக்கள் அந்தத் தொலைத்தொடர்பு சாதனத்துடன் உணர்வுபூர்வமான உறவைக் கொண்டிருப்பதாக, லாக்பரோ பல்கலைக்கழகமும், ஐஸ்லாந்து பல்கலைக்கழகமும் இணைந்து நடத்திய ஆய்வின் முடிவில் தெரியவந்துள்ளது. ஆப்பிள் ஐ-போன் போன்ற ஸ்மார்ட் ஃபோன்கள், பயனாளிகளின் கையில் ஒரு கணிப்பொறியையே தந்துவிட்டன. தொலை பேசுவது, குறுஞ்செய்தி அனுப்புவது தவிர்த்து, இப்போதைய ஸ்மார்ட் ஃபோன்கள் உடனடி இணைய வசதி, சமூக ஊடகங்களில் தொடர்பு, மின்னஞ்சல் கணக்குகள், வீடியோக்கள், இசைத் தரவுகள் மற்றும் எண்ணற்ற அலைபேசி சார்ந்த செயலிகளைத் தன்னுள் அடக்கி வைத்திருக்கின்றன. “தெளிந்த குளம் போலிருக்கும் மனிதனின் குணங்களில் ஸ்மார்ட் ஃபோன்கள் சிற்றலைகளை உருவாக்குகின்றன. ஒவ்வொரு முறையும் இவற்றின் பயன்பாடு…

  17. ஊக்கி | தொழில்நுட்பத் துறைக்கு வடக்கின் மாற்று வழி! 4 வளரும் வடக்கு -3 ஜெகன் அருளையா ஜெகன் அருளையா டிசம்பர் 2019 இல் புதிய அரசு பதவியேற்றதும் 64,000 வேலையற்ற பட்டதாரிகளுக்கு வேலைகள் வழங்கப்படுமென அமைச்சரொருவர் அறிவித்திருந்தார். இருந்தும் இலங்கை அவ்வப்போது பல்லாயிரக்கணக்கான புதிய பட்டதாரிகளை உருவாக்கிக்கொண்டேயிருக்கிறது. அத்தனை பேரும் அரச சேவைக்குள்ளேதான் நுழைய விரும்புகின்றனர். அரச சேவைகள் ஏற்கெனவே இப்படியானவர்களினால் வீங்கிப்போயிருக்கிறது. அதிகாரிகள் அதிகரிப்பதனால் அதிகாரத்துவமும் (bureaucracy) அதிகரிக்கிறது. அதிக அதிகாரத்துவம் முன்ன்னேற்றத்தைத் தாமதப்படுத்துகிறது. இவ்வேளையில் இலங்கைக்கு மேலும் பட்டதாரிகள் தேவைதானா? …

  18. சிவந்த நிலாவை இன்று காணலாம் செவ்வாய்க்கிழமை, 15 ஏப்ரல் 2014 13:17 சந்திர கிரகணம் இன்று நடைபெறவுள்ள நிலையில், சந்திரன் தற்போதைய நிறத்தில் இருந்து மாறி பிரகாசமான ஆரஞ்சு (செம்மஞ்சள்) நிறத்தில் தெரியும் என்று அமெரிக்காவின் டெக்சாஸ் பல்கலைக்கழகத்தின் மெக்டொனால்ட் ஆய்வகத்தை சேர்ந்த விஞ்ஞானிகள் தகவல் வெளியிட்டுள்ளனர். இந்த கிரகணம் இன்று நள்ளிரவில் 1 மணி 58 நிமிடத்தில் ஏற்பட தொடங்கும். பின்னர் 1 மணி நேரம் சென்றபின் நிலவு முழுவதுமாக மறைந்து சந்திர கிரகணம் ஏற்படும். இந்த நேரத்தில் நிலவு ஆரஞ்சு, சிவப்பு அல்லது பிரவுன் நிறத்தில் காணப்படும். இந்த கிரகணம் 3 மணிநேரம் தொடர்ந்து நீடித்து அதிகாலை 5 மணி 33 நிமிடங்கள் வரை இருக்கும் எனவும் விஞ்ஞானிகள் குறிப்பிட்டுள்ளனர். வளிமண்டலத்தி…

  19. தர்க்கரீதியாக யோசித்துச் சரியான பதிலைக் கண்டுபிடிக்க வேண்டியது சைக்கோமெட்ரிக் தேர்வுகளில் ஒருவகை. இதை ‘லாஜிகல் ரீசனிங்’ என்று குறிப்பிடுவார்கள். இதற்கு உங்களுக்கு உடனடியாகவும் விடை தெரிய வேண்டும். விதவிதமாகவும் யோசிக்க வேண்டி இருக்கும். கீழே உள்ளவற்றில் எது மற்றவற்றிலிருந்து வித்தியாசமாகப்படுகிறது? ஏப்ரல், செப்டம்பர், தை, டிசம்பர். இந்தக் கேள்விக்கான விடை உங்களுக்குப் பார்த்தவுட​னேயே தெரிந்துவிடும். தை என்பது தமிழ் மாதம். மற்ற​வையெல்லாம் ஆங்கில மாதங்கள். எனவே ‘தை’ என்பதுதான் விடை. ஆனால் தர்க்கம் என்பது சில சமயம் பலவிதக் கிளைகளாகப் பிரியும். கேள்வி கீழ்க்கண்டதுபோல் இருந்தால், எதை மற்றவற்றிலிருந்து தனிமைப் படுத்துவீர்கள்? யாஹூ, கூகோல், மில்லியன், கோடி இந்தக் …

    • 1 reply
    • 572 views
  20. பார்த்தீனியம் செடியைக் கட்டுப்படுத்தி உரமாகப் பயன்படுத்தும் முறைகள் குறித்து மேல்புறம் வட்டார வேளாண் விரிவாக்க மைய உதவி இயக்குநர் என். தமிழ்குமார் தெரிவித்துள்ளார். இதுகுறித்து அவர் வெளியிட்ட செய்திக்குறிப்பு: பார்த்தீனியம் நச்சுக் களைச் செடி நன்கு உயரமாக வளர்ந்து ஆழமாக பரவும் வேர்களைக் கொண்டது. இதன் இலைகள் கேரட் இலைகளைப்போல இருக்கும். செடிகளின் நுனிப்பகுதியில் ஏராளமான வெள்ளை நிறப் பூக்கள் கொத்துக்கொத்தாக இருக்கும். ஒவ்வொரு பூவிலும் ஏராளமான விதைகள் இருக்கும். விதைகள் காற்று, நீர் மூலம் பரவி முளைவிடும். இவை மழைக்காலத்தில் நன்கு வளர்ந்துவிடும். பொதுவாக சாலையோரங்கள், புறம்போக்கு நிலங்கள், தண்டவாளப் பகுதி, ஆற்றங்கரையோரம், கழிவுநீர் வாருகால், விளைநிலங்களில் அதிகம் காணப்ப…

    • 0 replies
    • 572 views
  21. செவ்வாய் கிரகத்தில் நன்னீர் ஏரி இருந்தற்கான அடையாளம் கண்டுபிடிக்கப்பட்டுள்ளதாக அமெரிக்கா விஞ்ஞானிகள் தெரிவித்துள்ளனர். செவ்வாய் கிரகத்தில் கல்லில் நடத்திய ஆய்வில் இந்த தகவல் உறுதியாகியுள்ளது. அமெரிக்காவின் கியுரீயாசிட்டி விண்கலம் செவ்வாய் கிரகத்தில் இருந்த ஒரு மலையில் இருந்து துளையிட்டு எடுத்த கல்லில் பல ஆயிரம் ஆண்டுகளுக்கு முன் நன்னீர் ஏரி இருந்தற்கான படிமங்கள் கிடைத்துள்ளது என்று அமெரிக்காவின் கலிபோர்னியா தொழில்நுட்ப விஞ்ஞானி ஜான் குரோசிங்கர் கூறியுள்ளார். இதன் மூலம் செவ்வாய் கிரகத்தில் உயிரினங்கள் வசிப்பதற்கான சாத்திய கூறுகள் அதிகரித்துள்ளதாக அவர் தெரிவித்தார். http://www.seithy.com/breifNews.php?newsID=98741&category=WorldNews&language=tamil

  22. இந்தியாவின் தேயிலை உற்பத்தி 2013-14-ம் நிதி ஆண்டில் 8 சதவீதம் அதிகரித்து 122.44 கோடி கிலோவாக உயர்ந்துள்ளது. அசாம் மற்றும் மேற்கு வங்கத்தில் தேயிலை விளைச்சல் அதிகரித்ததே உற்பத்தி உயர்வுக்கு முக்கியக் காரணமாகும். 2012-13-ம் நிதி ஆண்டில் தேயிலை உற்பத்தி 113.50 கோடி கிலோவாக இருந்தது என்று தேயிலை வாரியம் வெளியிட்ட குறிப்பு தெரிவிக்கிறது. மேற்கு வங்கம் மற்றும் அசாம் மாநிலத்தில் மட்டும் தேயிலை உற்பத்தி 6.52 சதவீதம் உயர்ந்துள்ளது. இவ்விரு மாநிலங்களில் உற்பத்தியான தேயிலை அளவு 98 கோடி கிலோவாகும். முந்தைய ஆண்டு இவ்விரு மாநிலங்களின் உற்பத்தி 92 கோடி கிலோவாக இருந்தது. இந்தியாவில் தேயிலை உற்பத்தியில் அசாம் மற்றும் மேற்கு வங்க மாநிலத்தின் பங்களிப்பு 80 சதவீத அளவுக்கு உள்ளது. http…

  23. அப்பள அளவில் மொபைல் டிஜிட்டல் உல­கத்தைப் பொறுத்­த­வரை, எந்­த­வொரு பொருளும் அது கண்­டு­ பி­டிக்­கப்­பட்­ட­போது இருந்­த­தை­விட, அளவு மற்றும் வச­தி­களில் அதன்பின் பல்­வேறு மாற்­றங்கள் ஏற்­ப­டு­வது வழக்கம். மொபைல் போன், தொலைக்­காட்சி உள்­ளிட்ட பல பொருட்­களை இதற்கு உதா­ர­ண­மாகச் சொல்­லலாம். முன்­னொரு காலத்தில் டேபிள் முழு­வ­தையும் அடைத்­துக்­கொண்­டி­ருந்த தொலைக்­காட்­சியின் அளவு, தற்­போது சில அங்குல தடிமன் கொண்­ட­தாக மாறி­யி­ருக்­கி­றது. காலப்­போக்கில் வோல்­பேப்­ப­ரைப்­போல சுவரில் ஒட்­டிக்­கொள்ளும் வகையில் தொலைக்­காட்­சியின் அளவு மாறி­னாலும் ஆச்­சர்­யப்­ப­டு­வ­தற்­கில்லை. அளவில் சிறி­ய­தா­கவும், பயன்கள் அதி­க­மா­ன­தா­கவும் கொண்­ட­தாக ஒரு பொரு…

  24. இன்றைக்கு இயற்கை வேளாண் உலகில் மண்புழு வளர்ப்பு பற்றிய பல சர்ச்சைகள் வந்துகொண்டிருக்கின்றன. சிலர் மண்புழுவை ஏன் வளர்க்க வேண்டும்? அவைதாம் மண்ணிலேயே இருக்கின்றனவே என்றும், வெளிநாட்டு புழுக்கள் நமக்கு எதற்கு (கலப்பின மாடுகளைப் போல) என்று கூறுபவர்களும் உள்ளனர். பொதுவாக மண்புழுக்களில் இரண்டு பிரிவுகள் உள்ளன. ஒன்று, மண்ணின் மேல்புறத்தில் சாணத்தை உண்டு, தம்மைப் பெருக்கிக்கொள்ளும் சாணப்புழுக்கள். இவை ஏராளமான கழிவை உண்ணும் திறன் பெற்றவை. வெளிநாடுகளில் இருந்து இறக்குமதியானவை என்று கருதப்படுபவை. இவற்றில் இரண்டு இனங்களை நமது பண்ணையாளர்கள் பெரிதும் பயன்படுத்துகின்றனர். ஒன்று Eisenia fetida , மற்றொன்று Eudrilus eugeniae. இந்த இரண்டும் வெளிநாட்டு புழுக்கள் என்று சொல்லப்பட்டால…

    • 0 replies
    • 570 views
  25. உங்களது கணணி மொனிட்டரில் குறிப்புகளை எழுதி வைப்பதற்கு விண்டோஸ் 7 இயங்குதளம் புதிய கூடுதல் வசதியை தருகிறது. இதற்கு பெரும்பாலும் அனைவரும் வேறு சில மென்பொருட்களையே பயன்படுத்தி வந்தனர். தற்போது உங்களது கணணியிலேயே ஸ்டிக்கி நோட்ஸ்(sticky notes) வசதி கிடைப்பதால் எளிதாக இதனைப் பயன்படுத்தலாம். கணணியில் அப்ளிகேஷன் புரோகிராம்களில் இயங்கிக் கொண்டே, தொலைபேசியில் பேசுவது, இணையத்தில் தேடல் மேற்கொள்ளுதல், பேக்ஸ்(fax) அனுப்புவது போன்ற பணிகளை மேற்கொள்பவர்களுக்கு இந்த வசதி மிகவும் பயனுள்ளதாக இருக்கும். மிகப் பெரிய அளவில் இது ஒரு வசதி இல்லை என்றாலும் இதனை ஒருமுறை பயன்படுத்தியவர்கள், பெரும்பாலும் இதனை நாடுகின்றனர் என்பதே இதன் சிறப்பு. இங்கு இந்த ஸ்டிக்கி நோட்ஸ் குறித்து பா…

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.