செய்தி திரட்டி
விநோதச் செய்திகள் | உடனடி, உறுதிப்படுத்தப்படாத செய்திகள்
செய்தி திரட்டி பகுதியில் விநோதச் செய்திகள், உடனடி, உறுதிப்படுத்தப்படாத செய்திகள் இணைக்கப்படலாம்.
உறுதிப்படுத்தப்படாத செய்திகள், விநோதச் செய்திகள் இணைக்கப்படலாம். எனினும் வக்கிரமான பாலியல் செய்திகள், பாலுணர்வைத் தூண்டும் மஞ்சள் பத்திரிகைச் செய்திகள் தவிர்க்கப்படல் வேண்டும்.
7088 topics in this forum
-
மாவீரன் நெப்போலியன் மனைவியின் மோதிரம் திருட்டு! மாவீரன் நெப்போலியன் மனைவியின் மோதிரம் ஒன்று திருடப்பட்டுள்ளது. பரிஸின் ஆறாம் வட்டாரத்தில் இந்த திருட்டு சம்பவம் இடம்பெற்றுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர். மூன்றாம் நெப்போலியனான Jean-Christophe Napoleon Bonaparte இன் மனைவி பேரரசி யூஜெனீ (Empress Eugenie) இன் மோதிரமே இவ்வாறு திருடப்பட்டுள்ளது. குறித்த மோதிரம் 40 கரட் இரத்தினங்களால் செய்யப்பட்டது எனவும், இதன் இன்றைய மதிப்பு சுமார் ஒரு மில்லியன் யூரோக்களுக்கும் அதிகம் என தெரிவிக்கப்பட்டுள்ளது. இதுகுறித்து வழக்கு பதிவு செய்துள்ள பொலிஸார், விசாரணைகளை ஆரம்பித்துள்ளனர். http://athavannews.com/மாவீரன்-நெப்போலியன்-மனைவ/
-
- 2 replies
- 767 views
-
-
அந்தக்காலங்களில் எந்த வேலைகளை செய்வதாக இருந்தாலும் நூறு வீதம் மனித சக்தியைப்பயன்படுத்தியே மேற்கொள்ளப்பட்டன. ஆனால் இன்றைய காலகட்டத்தை கொஞ்சம் கற்பனை பண்ணிப்பாருங்கள். எமது வேலைகளில் எத்தனை வேலைகளை நாம் சுயமாக செய்கிறோம். எமது அன்றாட அத்தியாவசிய கடமைகளை செய்வதற்கு கூடி அடுத்தவர்களையும் அடுத்தவற்றையும் நாடவேண்டிய ஒரு உலகத்துக்குள்ளே நாமாவே வந்து விழுந்து விட்டோம். இதெற்கெல்லாம் காரணம் இன்றை அதியுயர் தொழில்நுட்ப வளர்ச்சிதான். இதுதான் காலத்தின் கட்டாயம் என்ற நிலையில் நாம் வாழ்ந்து கொண்டிருக்கிறோம். எமது வேலைகளை இலகுவாக்க அனைத்திற்கும் இயந்திரம். பெண்களின் வீட்டு வேலைகளை செய்வதற்கு கூட இயந்திரம். துணி துவைக்க துப்பரவு செய்ய நீர் ஊற்ற இவைற்றையெல்லாம் விட.. சமையலுக்கு கூடி இயந…
-
- 2 replies
- 1.4k views
-
-
சிறிலங்கா அதிபர் மகிந்த ராஜபக்சவுக்கு எதிரான வழக்கு அமெரிக்க நீதிமன்றத்தால் தள்ளுபடி செய்யப்பட்டதற்கு எதிராக கொலம்பியா மாவட்ட மேல்முறையீட்டு நீதிமன்றத்தில் முறையிடப்பட்டுள்ளது. சிறிலங்காப் படையினரால் கொல்லப்பட்டவர்களின் குடும்பத்தினரான காசிப்பிளை மனோகரன், கலைச்செல்வன், ஜெயக்குமார் ஐயாத்துரை ஆகியோரின் சார்பில், சட்டவாளர் புரூஸ் பெயன் – சிறிலங்கா அதிபர் மகிந்த ராஜபக்சவுக்கு எதிராக கொலம்பியா மாவட்ட நீதிமன்றத்தில் நட்டஈடு வழக்குத் தொடுத்திருந்தார். ஆனால், சிறிலங்கா அதிபருக்கு இராஜதந்திர விலக்குரிமை உள்ளதாக அமெரிக்க இராஜாங்கத் திணைக்களம் பரிந்துரைத்ததன் அடிப்படையில், இந்த வழக்கை தம்மால் விசாரிக்க முடியாதிருப்பதாக கூறி, கொலம்பியா மாவட்ட நீதிபதி கொலீன் கொல்லர் கொட்டெலி கட…
-
- 0 replies
- 381 views
-
-
பட மூலாதாரம்,GETTY IMAGES படக்குறிப்பு, சித்தரிப்புப் படம் முக்கிய நாளிதழ்கள் மற்றும் ஊடக இணையதளங்களில் இன்று (ஜனவரி 16) வெளியான செய்திகள் சிலவற்றைத் தொகுத்து இங்கே வழங்கியுள்ளோம். கேரள மாநிலத்தில் 350 கிராம் மட்டுமே எடையுள்ள ஆண் குழந்தை பிறந்ததாக, 'தினத்தந்தி' நாளிதழ் செய்தி வெளியிட்டுள்ளது. அக்குழந்தையை மருத்துவர்கள் காப்பாற்றியுள்ளனர். தெற்கு ஆசியாவிலேயே குறைந்த எடையுடன் பிறந்த குழந்தையாக அந்த குழந்தை பார்க்கப்படுவதாக அச்செய்தி குறிப்பிடுகிறது. "கேரள மாநிலம் எர்ணாகுளத்தில் உள்ள ஒரு மருத்துவமனையில் பிரசவத்துக்காக சேர்க்கப்பட்ட சஷிஷா என்ற பெண்ணுக்கு 23 வாரத்தில் ஆண் குழந்தை பிறந்தது. அதன் எடை 350 கிராம் மட்டுமே இருந்தது. …
-
- 0 replies
- 217 views
- 1 follower
-
-
உலக நாடுகளில் முதல் பத்து மகிழ்வான நாடுகள்: 1. Denmark > Life satisfaction score: 7.8 > Employment rate: 73% (6th highest) > Self-reported good health: 71% (17th highest) > Employees working long hours: 1.92% (4th lowest) > Disposable income: $23,213 (15th lowest) > Educational attainment: 76% (18th lowest) > Life expectancy: 79.3 (11th lowest) 2. Norway > Life satisfaction score: 7.6 > Employment rate: 75% (4th highest) > Self-reported good health: 80% (8th highest) > Employees working long hours: 2.66% (5th lowest) > Disposable income: $30,465 (3rd highest) > Educational attainment: 81% (t…
-
- 1 reply
- 653 views
-
-
கத்தார் தலைநகரில் வீதியில் உலாவிய புலியினால் பரபரப்பு 2016-03-11 10:02:29 கத்தார் தலைநகர் தோஹாவிலுள்ள பரபரப்பான வீதியொன்றில் புலியொன்று நடமாடியதால் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்ட சம்பவம் கடந்த செவ்வாய்க்கிழமை இடம்பெற்றது. நபர் ஒருவரினால் வளர்க்கப்பட்ட இப் புலி தனது வசிப்பிடத்திலிருந்து தப்பிச்சென்று வீதியில் உலாவியதாக தெரிவிக்கப்படுகிறது. இப் புலி வீதியில் நடமாடும் காட்சிகள் அடங்கிய வீடியோ ஒளிப்பதிவுகள் இணையத்தளங்களில் வெளியாகி பரபரப்பை ஏற்படுத்தின. அதையடுத்த…
-
- 3 replies
- 434 views
-
-
விமான விபத்தில் உயிரிழந்த முன்னாள் குஜராத் முதல்வரின் தனிப்பட்ட வாகனங்கள் அனைத்திலும் 1206 என்ற எண்ணே இருந்தது. அதை அவர் தனது அதிர்ஷ்ட எண்ணாக நம்பினார். ஆனால் விதியும் அதே எண்ணைத் தேர்ந்தெடுத்தது. அகமதாபாத் விமான விபத்தில் குஜராத் முன்னாள் முதலமைச்சர் விஜய் ரூபானி காலமானார். லண்டனில் உள்ள தனது மகனை காண அகமதாபாத்தில் இருந்து விமானத்தில் சென்ற குஜராத் முன்னாள் முதலமைச்சர் விஜய் ரூபானி உயிரிழந்ததாக மத்திய அமைச்சர் சி.ஆர். பாட்டீல் தெரிவித்துள்ளார். இதனிடையே, விஜய் ரூபானி விமான நிலையத்திற்கு செல்லும் கடைசி நிமிடக் காட்சிகள் வெளியாகியுள்ளன. இதற்கிடையே, விஜய் ரூபானி மரணத்தில் எதிர்பாரா மற்றுமொரு சோகம் நிகழ்ந்திருக்கிறது. அது அவரின் இறப்புத் தேதி. விஜய் ரூபானி 1206 என்ற எண் தனது…
-
- 0 replies
- 124 views
-
-
இங்கிலாந்தில் பல்பொருள் அங்காடி ஊழியர் ஒருவர், தனது சகோதரிக்கு ட்ரோன் மூலமாக டாய்லெட் பேப்பர் அனுப்பிய வீடியோ சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது. கொரோனா பரவலை தடுக்க பொதுமக்கள் நேரடி தொடர்பை தவிர்க்குமாறு வலியுறுத்தப்பட்டு வருகிறது. இதை நகைச்சுவையாக கையாளும் வகையில் நார்தாம்ப்டன்ஷையரில்(Northamptonshire) பீட் பார்மர் என்பவர், 2 தெரு தள்ளி வசித்து வரும் தனது சகோதரிக்கு அவர் கேட்ட டாய்லெட் பேப்பரை ட்ரோன் மூலம் அனுப்பி வைத்தார். https://www.polimernews.com/dnews/105482/சகோதரிக்கு-ட்ரோன்-மூலம்டாய்லெட்-பேப்பர்-அனுப்பிவைத்த-நபர்
-
- 1 reply
- 425 views
-
-
ஒரு மாத கைக்குழந்தையுடன் அலுவலகத்தில் வேலை செய்யும் பெண் அதிகாரி ஆந்திரப் பிரதேசத்தில் பணி புரியும் பெண் ஐஏஎஸ் அதிகாரி ஒருவர் பிறந்த ஒரு மாத கைக்குழந்தையுடன் பணிக்கு திரும்பியுள்ளார். நாடு முழுவதும் மருத்துவர்கள், சுகாதார ஊழியர்கள் என அனைவரும் நேரம் காலம் பார்க்காமல் பணியாற்றி வருகின்றனர். இந்தக் காலகட்டத்தில் அரசு மிகத் தீவிரமாகத் தொற்று பரவாமல் இருக்க பல்வேறு நடவடிக்கைகளை எடுத்து வருகிறது. இந்நிலையில் ஆந்திரப் பிரதேசத்தில் உள்ள ஒரு பெண் ஐஏஎஸ் அதிகாரி பிறந்து ஒரு மாதமே ஆன குழந்தையுடன் தனது பணிக்குத் திரும்பியுள்ளார். விசாகப்பட்டினம் பெருநகர மாநகராட்சி ஆணையர் ஸ்ரீஜனா கும்மாளா, 2013 இல் ஐஏஎஸ் அதிகாரியாகப் பதவியேற்றவர். இவர் தற்போது கைக்குழந்தையுடன் அந்த …
-
- 3 replies
- 473 views
-
-
இந்தியாவின் பெங்களூரைச் சேர்ந்த கல்லூரியொன்றின் பணிப்பாளரொருவர் தன்னை விட சுமார் 35 வருடங்கள் வயது குறைந்த மாணவியை திருமணம் செய்த சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. பேராசிரியரான அவரது வயது 64 எனவும் , மாணவியின் வயது 27 எனவும் தெரிவிக்கப்படுகின்றது. இத்திருமணம் கடந்த சில மாதங்களுக்கு முன்னர் இடம்பெற்றுள்ளது. கடும் எதிர்ப்புக்கு மத்தியில் இது இடம்பெற்றுள்ளது. இந்நிலையில் தமது மகள் , திருமணப் பதிவாளர் அலுவலகத்துக்கு , திருமணச் சான்றிதழை பெற வருவதனை அறிந்த பெற்றோர் மற்றும் உறவினர்கள் அங்கு கூடியுள்ளனர். இதனைத் தொடர்ந்து அங்கு பெரும் பரபரப்பு ஏற்பட்டுள்ளது. ஜோடிகள் மீது தாக்குதலும் நடந்துள்ளது. www.hirunews.lk/.
-
- 16 replies
- 843 views
- 1 follower
-
-
கேள்வி: தமிழ் ஈழ விடுதலைப் புலிகளின் வீழ்ச்சிக்குப் பிறகு புகலிடத்தில் புதிது புதிதாக அமைப்புக்கள் தொடங்கப்படுகின்றன.இது பற்றி உங்கள் அபிப்பிராயம் என்ன? -தவராசா தோற்றம் பெறும் இவ்வாறான அமைப்புக்கள் தொடர்பாக பேசுவதானால் அது நீண்ட உரையாடல் ஆகிவிடும். எனினும் குறிப்பாக சில விடயங்களை கூறமுடியும். தொடங்கப்படும் ஒவ்வொரு அமைப்புக்களும் ஒடுக்கப்பட்ட மக்களின் விடுதலை வேண்டி ; அமைக்கப்படுவதாக நான் நினைக்கவில்லை. தனிநபர்களின் அடையாள விருப்புக்களின் தனிப்பட்ட நலன்சார்ந்த தேவைகளின் அடிப்படையிலேயே தனிநபர்களினால், அவர்களின் நலன் சார்ந்து இயங்கும் சில நபர்களையும் கூட்டிணைத்து இவை தொடங்கப்படுகின்றன. அதற்கு அப்பால் இதனுடைய பெறுமதிகள் எதுவமில்லை. உண்மையிலேயே ஒடுக்கப்பட்ட எமது மக்களின…
-
- 12 replies
- 1.8k views
-
-
இரண்டாம் உலகப் போரின் போது அடால்ப் ஹிட்லரின் உணவு பரிசோதகராக இருந்த பெண், அரை நூற்றாண்டை கடந்த நிலையில் தனது அனுபவத்தை பகிர்ந்து கொண்டுள்ளார். சில மாதங்களுக்கு முன்பு தனது 95வது பிறந்த நாளைக் கொண்டாடிய மார்கோட் வெல்க், இதுவரை தனது கணவரிடம் கூட பகிர்ந்து கொள்ளாத பல ரகசியங்களை தற்போது வெளி உலகுக்கு தெரிவித்துள்ளார். இரண்டாம் உலகப் போர் நடந்து கொண்டிருந்த போது, ஜெர்மனின் சர்வாதிகாரியாக இருந்த அடால்ப் ஹிட்லரின் உணவுப் பரிசோதகராக 15 இளம் பெண்கள் பணியாற்றினர். அதில் தானும் ஒருவர் என்று கூறியுள்ளார் மார்கோட் வெல்க். எனக்கு அப்போது 20 வயது இருக்கும். இரண்டாம் உலகப் போரின் போது, தற்போது போலந்து என்று அழைக்கப்படும் பகுதியில் மிக அதிக பாதுகாவலர்களுக்கு மத்தியில்தான் ந…
-
- 0 replies
- 1.4k views
-
-
யாழ்ப்பாணத்தில் உயிருடன் வாழந்து கொண்டிருக்கும் ஒருவர் தன்னுடைய மரணக் கொடுப்பனவை வழங்குமாறு விண்ணப்பித்துள்ள சுவாரஸ்யமான சம்பவமொன்று நடைபெற்றுள்ளது. யாழ். மாவட்ட சிகை ஒப்பனையாளர் சங்கம் அங்கத்தவர்கள் மரணித்தால் 10 ஆயிரம் ரூபா வழங்கி வருகிறது. இதில் அங்கம் வகிக்கும் கொக்குவிலைச் சேர்ந்த ஒருவர் அவ் விதம் சங்க நிர்வாகத்திடம் விண்ணப்பித்து இருக்கிறார். விண்ணப்பித்ததுடன் நின்று விடாமல் அடிக்கடி சங்கத்துக்குப் போய் நெருக்கடி கொடுத்து வருவதாகவும் தெரிவிக்கப்பட்டது. இதனால் அவருக்கு மரணத்தின் பின்பாக வழங்கப்பட வேண்டிய மரணக் கொடுப்பனவை சங்கம் முன்னதாகவே வழங்கி விடவும் தீர்மானித்திருப்பதாகவும் தெரிய வருகிறது. http://www.virakesari.lk/article/local.php?vid=5949
-
- 2 replies
- 245 views
-
-
இலங்கையில் முதல் முறையாக... ஒரே பிரசவத்தில், ஆறு குழந்தைகளைப் பெற்றெடுத்த தாய்! இலங்கையில் முதல் முறையாக பெண்ணொருவர் ஒரே தடவையில் ஆறு குழந்தைகளைப் பிரசவித்துள்ளார். கொழும்பில் உள்ள தனியார் வைத்தியசாலை ஒன்றில் இன்று (வியாழக்கிழமை) அவர் குழந்தைகளைப் பிரசவித்துள்ளார். அங்கொடை பிரதேசத்தைச் சேர்ந்த 31 வயதான தாய் ஒருவரே, இவ்வாறு ஒரே தடவையில் ஆறு குழந்தைகளைப் பிரசவித்துள்ளதாகவும் தாயும் குழந்தைகளும் நலமாகவுள்ளதாக வைத்தியசாலைத் தகவல்கள் தெரிவிக்கின்றன. மேலும் அவருக்கு 3 ஆண் குழந்தைகளும் 3 பெண் குழந்தைகளும் பிறந்துள்ளன என்பது குறிப்பிடத்தக்கது. https://athavannews.com/2021/1245983
-
- 1 reply
- 641 views
-
-
மட்டக்களப்பு நகர பார் வீதியில் வீட்டில் இருந்த பெண் ஒருவரை துண்டம் துண்டமாக வெட்டி கொலை செய்ததுடன், அவரின் கழுத்தில் இருந்த தங்க நகைகளையும் தோட்டுடன் காதை வெட்டி எடுத்து பையிலி்ட்டு கொண்டு செல்ல முட்பட்ட குறித்த வீட்டில் பணிபுரிந்த பணிப்பெண்ணையும் அவரது தந்தையையும், அங்கிருந்த பொதுமக்கள் மடக்கிப்பிடித்து பொலிசாரிடம் ஒப்படைத்த சம்பவம் இன்று திங்கட்கிழமை (20) மாலை 4 மணிக்கு இடம்பெற்றுள்ளது. மட்டக்களப்பு பார் வீதியைச் சேர்ந்த 47 வயதுடைய செல்வராஜா தயாவதி என்பவரே இவ்வாறு கொலை செய்யப்பட்டுள்ளார். இது குறித்து மேலும் தெரியவருவதாவது, குறித்த வீட்டில் உயிரிழந்தவர் அவருடைய கணவர் மகள் ஆகிய மூவரும் வாழ்ந்து வருகின்ற நிலையில் சம்பவ தினமான இ…
-
- 12 replies
- 967 views
-
-
பொம்மையையும் விட்டுவைக்காத ஆண் பார்வையாளர்கள்! கண்காட்சிக்கு வைக்கப்பட்டிருந்த பாலியல் பொம்மையை பார்வையாளர்கள் அளவுக்கதிகமாக ‘துன்புறுத்தியதால்’ பொம்மை பழுதான சம்பவம் தொழில்நுட்பக் கண்காட்சியொன்றில் இடம்பெற்றுள்ளது. மூவாயிரம் ஸ்டேர்லிங் பவுண்கள் பெறுமதியான ‘சமந்தா’ என்ற இந்த பொம்மை, பாலியல் செயற்பாடுகளுக்காகத் தயாரிக்கப்பட்டது. இந்த பொம்மையின் உடல் அவயவங்களைத் தொட்டால், தொடும் இடத்துக்கேற்ப குரல்வழி பிரதிபலிப்பை ஏற்படுத்தும். இந்த பொம்மை அவுஸ்திரியாவில் நடைபெற்றுவரும் கலை இலத்திரனியல் திருவிழாவில் பார்வைக்காக வைக்கப்பட்டிருந்தது. இதன்போது, சமந்தாவைக் கண்டு ஆச்சரியப்பட்ட பார்வையாளர்கள் - குறிப்பாக ஆண்கள் - பொம்மையின் உடல் பாகங்களை…
-
- 9 replies
- 1.6k views
-
-
நித்தியானந்தா வீடியோ போலியானது : நடிகை ரஞ்சிதா பெங்களூரு, ஜுலை.24, 2010 நித்தியானந்தாவுடன் தாம் இருப்பது போன்று சில தொலைக்காட்சிகளில் ஒளிபரப்பப்பட்ட வீடியோ காட்சிகள், போலியாக சித்தரிக்கப்பட்டவை என்று நடிகை ரஞ்சிதா தெரிவித்துள்ளார். கர்நாடக உயர் நீதிமன்றத்தில் நித்தியானந்தா தாக்கல் செய்த மனு ஒன்றில், தன் மீது பதிவு செய்யப்பட்ட வழக்கைத் தள்ளுபடி செய்ய வேண்டும் என்று கோரியிருந்தார். அந்த மனு மீதான விசாரணை வெள்ளிக்கிழமை நடந்தது. அப்போது, சி.ஐ.டி. போலீஸார் தரப்பில் ஒரு மனு தாக்கல் செய்யப்பட்டது. அதில், நடிகை ரஞ்சிதாவின் வாக்குமூலம் இணைக்கப்பட்டிருந்தது. அந்த வாக்குமூலத்தில், நித்தியானந்தாவுடன் தாம் தவறான உறவு எதுவும் வைத்துக் கொள்ளவில்லை என்றும், அது த…
-
- 2 replies
- 1.4k views
-
-
ஒன்பது வயதே ஆன சீனச் சிறுமி ஆண் குழந்தை பெற்றெடுத்திருக்கிறாள். ஒன்பது வயதே ஆன சீனச் சிறுமி ஆண் குழந்தை பெற்றெடுத்திருக்கிறாள். பெரு நாட்டைச் சேர்ந்த ஒரு சிறுமி தான் மிகச் சிறிய வயதில் குழந்தை பெற்றவள் என்று சாதனை குறிப்புகள் கூறும் நிலையில் சீனச் சிறுமியின் பிரசவம் அங்கே பரபரப்பை கிளப்பியிருக்கிறது. சீனாவில் உள்ள ஜிலின் மாகாணத்தில் இருக்கிறது சாங்சுன் மருத்துவமனை. ஜனவரி 25 ஆம் தேதி மாலை இந்த மருத்துவமனை வளாகத்தில் திடீர் பரபரப்பு ஏற்பட்டது. இதன் மகப்பேறு பிரிவில் ஒன்பது வயதான ஒரு சிறுமி 8.5 மாத கர்ப்பத்துடன் அனுமதிக்கப்பட்டாள். ஜனவரி 27 ஆம் தேதி செய்யப்பட்ட சிசேரியன் பிரசவத்தில் கிட்டத்தட்ட 3 கிலோ எடை உள்ள அழகான ஆண் குழந்தையை அந்தச் சிறும…
-
- 0 replies
- 645 views
-
-
பாடசாலைக்கு செல்ல மறுத்த தனது 7 வயது மகளை மரத்தில் கட்டி வைத்து முசுறுகளை அவர் மீது கொட்டிய 29 வயதான மூன்று பிள்ளைகளின் தந்தையை மாதம்பே பொலிஸார் கைது செய்துள்ளனர். அச்சிறுமியை தடியொன்றினால் அடித்த அடையாளங்களும் இருப்பதாக தெரிவித்த பொலிஸார் அவரை வைத்தியசாலையில் அனுமதித்துள்ளதாகவும் தெரிவித்தனர். http://tamil.dailymirror.lk/2010-07-14-09-13-23/108594-2014-04-29-07-56-22.html
-
- 8 replies
- 728 views
-
-
இணையத்தில் தேட வேண்டுமா , உதவியாளருக்கு கடிதம் எழுதுவதற்கான வாக்கியங்கள் கூற வேண்டுமா மனதில் நினைத்தால் மட்டும் போதும். என்ன நினைக்கின்றீர்கள் என்பதை மூளையை படிப்பதன் மூலம் கண்டுபிடித்து செய்து கொடுத்து விடுமாம் கணினிகள். கணினி தொழில்நுட்பத்தின் அதிமேதாவியான இன்டெல் நிருவனத்தை சேர்ந்த பொறியாளர்கள் இது போன்றதொரு பணித்திட்டத்தில் இறங்கியுள்ளனர். இனிமேல் மௌஸ், கீபோர்ட் வைத்து நீங்கள் வேலை செய்ய வேண்டாம். கற்பனை மட்டும் செய்யுங்கள் போதும் எங்கள் கணினி அனைத்தையும் செய்து கொடுக்கும் என்கின்றனர் இந்த பணித்திட்டத்தில் ஈடுபட்டுள்ளோர். இதற்காக கணினியை பயன்படுத்துவோரின் மூளையைப் பற்றிய விபரமான வரைபடக் குறிப்பு ஒன்றை உருவாக்கி மனிதன் என்ன நினைக்கும் போது எந்த வகையான மாற்றம்…
-
- 2 replies
- 600 views
-
-
மகிந்த - விஜய் நம்பியார் ஒரு கற்பனை உரையாடல்! [saturday, 2011-04-23 02:58:08] நம்பியார்: ஹலோ! மகிந்த இருக்கிறாரா? நான் ஐ.நா செயலாளர் நாயகத்தின் ஆலோசகர் நம்பியார் கதைக்கிறன்.. ராஜபக்ச: ஹலோ! நான்தான் மகிந்த.. எப்படியிருக்கிறியள்.. நம்பியார்: நல்லாயிருக்கிறம்.. உங்களுக்கு எனது புதுவருட வாழ்த்துக்கள்! ராஜபக்ச: என்னுடைய புதுவருடக் கொண்டாட்டத்தைத்தான் கெடுத்துப் போட்டியளே? நம்பியார்: என்ன நிபுணர் குழு அறிக்கையை வாசித்திட்டியள்போல.. ராஜபக்ச: பேப்பரிலை பார்த்தனான். நம்பியார்: என்ன! உங்களுக்கு அனுப்பினதை நீங்கள் பேப்பருக்குக் கொடுத்திட்டு, அதிலை வந்ததைதான் வாசித்தீர்களோ? ராஜபக்ச: ஆமாம். வங்கியில் கொள்ளையடிப்பவர்கள். காசை எண்ணிப் பார்ப்பதி…
-
- 2 replies
- 1k views
-
-
அழகி பட்டத்தை வென்ற திருநங்கை மிஸ் நெதர்லாந்து பட்டத்தை இம்முறை நெதர்லாந்து அழகி ரிக்கி வலேரி கோல் வென்றுள்ளார். ரிக்கி ; ஒரு திருநங்கை மாடல் என்பதால் இந்த கிரீடம் தனித்துவமானது. 22 வயதான ரிக்கி வலேரி, நெதர்லாந்து அழகி பட்டத்தை வென்ற நாட்டின் முதல் திருநங்கை என்ற பெருமையைப் பெற்றுள்ளார். இந்த வெற்றியின் மூலம் இந்த ஆண்டுக்கான உலக அழகி போட்டிக்கு அவர் தகுதி பெற்றுள்ளதாகவும், உலக அழகி பட்டத்தை வென்றால், அந்த மகுடத்தை கைப்பற்றும் முதல் திருநங்கை என்ற பெருமையை பெறுவார் என்றும் வெளிநாட்டு ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன. இந்த வெற்றியை பெருவதற்கு திருநங்கையாக பல சவால்களை சந்திக்க வேண்டியிருந்தது என அவர் தெரிவித்துள்ளார். https://at…
-
- 0 replies
- 247 views
-
-
வாழ்க்கைச் செலவு குறைந்த நாடுகளின் பட்டியலில் இலங்கை 7 ஆவது இடத்தில் உள்ளது. 139 நாடுகளில் மேற்கொள்ளப்பட்ட ஆய்வுகளின் அடிப்படையில் இணையத்தளமொன்றினால் இந்த பட்டியல் வௌியிடப்பட்டுள்ளது. வாழ்க்கைச் செலவு மிகவும் குறைந்த நாடாக பாகிஸ்தான் குறிப்பிடப்பட்டுள்ளது. இந்தப் பட்டியலில் இந்தியா மூன்றாம் இடத்தில் உள்ளது. வாழ்கைச் செலவு மிகவும் அதிகரித்த நாடாக சுவிட்ஸர்லாந்து பதிவாகியுள்ளது. https://thinakkural.lk/article/265691
-
- 0 replies
- 309 views
- 1 follower
-
-
காத்தான்குடியில் இருந்து ஒரு Satellite 🛰️ தயாரித்து விண்ணுக்கு அனுப்பினால் எப்படி இருக்கும்? நெனச்சு பாக்ககுரதுக்கே ரொம்ப திரிலிங்கா இருக்கு இல்ல ? என்ன சொல்றீங்க? இது சாத்தியமா? (வெங்காயம், பச்ச கொச்சிக்கா பிரச்சினை வேற போயிகிட்டு இருக்கு எண்டு நீங்க நினைக்கிறத கொஞ்சம் கட்டுப்படுத்தி போட்டு தொடர்ந்து வாசிங்க ) ஆம், இது சாத்தியமே! வாங்க செல்றன். சாட்டிலைட் 🛰️, ராக்கெட் 🚀 என்றாலே நமக்கு ஞாபகம் வருவது அமேரிக்காவின் NASA நிறுவனம்தான். ஆனால் அண்மையில் ஈலோன் மாஸ்க்கின் SpaceX நிறுவனம், Russia, China மற்றும் இந்தியாவின் ISRO நிறுவனமும் தனது புதிய சாதனைகளை நிகழ்த்தி வருகிறது. நான் இங்கே பேச முன…
-
-
- 3 replies
- 469 views
-
-
புறாவை கைது செய்து சிறையில் அடைத்த பொலிசார்! (வீடியோ இணைப்பு) [ ஞாயிற்றுக்கிழமை, 31 மே 2015, 06:04.30 AM GMT +05:30 ] பாகிஸ்தான் தீவிரவாத அமைப்பினர் காஷ்மீரில் உளவு பார்க்க புறாவினை அனுப்பிய சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. பஞ்சாப் மாநிலத்தின் மேற்குப் பகுதியில் உள்ள பதன் கோட் அருகில் ரமேஷ் சந்திரா என்பவர் வீட்டுத் தோட்டத்தில் நேற்று முன்தினம் மாலை, ஒரு புறா வந்து இறங்கியுள்ளது. அந்த புறாவின் இறகுகளில் எழுத்துக்கள் இருப்பதை ரமேஷ்சந்திரா பார்த்து சந்தேகம் அடைந்துள்ளார். உடனே இது தொடர்பாக அவர் அக்கம்பக்கத்தில் வசிப்பவர்களுக்கு தகவல் அளித்ததால் அந்தக் கிராமத்தில் பரபரப்பு ஏற்பட்டது. பின்னர் பதன்கோட் பொலிசார் ரமேஷ்சந்திரா வீட்டுக்…
-
- 0 replies
- 226 views
-