செய்தி திரட்டி
விநோதச் செய்திகள் | உடனடி, உறுதிப்படுத்தப்படாத செய்திகள்
செய்தி திரட்டி பகுதியில் விநோதச் செய்திகள், உடனடி, உறுதிப்படுத்தப்படாத செய்திகள் இணைக்கப்படலாம்.
உறுதிப்படுத்தப்படாத செய்திகள், விநோதச் செய்திகள் இணைக்கப்படலாம். எனினும் வக்கிரமான பாலியல் செய்திகள், பாலுணர்வைத் தூண்டும் மஞ்சள் பத்திரிகைச் செய்திகள் தவிர்க்கப்படல் வேண்டும்.
7085 topics in this forum
-
அன்பின் உச்சம்! : வவுனியாவில் நிகழ்ந்த சோகச் சம்பவம் கடும் சுகயீனமடைந்த கணவரை வைத்தியசாலைக்கு கொண்டுச் செல்ல ஆயத்தமான போது, கணவருக்கு சுகயீனம் என்பதை தாங்கிக்கொள்ளாத மனைவி, அதே இடத்தில் விழுந்து உயிர்விட்டதோடு வைத்தியசாலைக்கு கொண்டுச் செல்லப்பட்ட கணவரும் உயிரிழந்த பரிதாபச் சம்பவம் வவுனியாவில் பதிவாகியுள்ளது. வவுனியா மகாரம்பக்குளம் அண்ணாநகர் பகுதியில் வசித்து வந்த பொன்னையா இராஜகோபால் மற்றும் இராஜகோபால் நாகம்மா ஆகிய இருவருமே இவ்வாறு உயிரிழந்துள்ளனர். சம்பவம் தொடர்பில் தெரியவருவதாவது, நேற்று இரவு கணவருக்கு சுகயீனம் காரணமாக வைத்திய சாலைக்கு கொண்டுச் செல்ல ஆயத்தமான போது கணவருக்கு சுகயீனம் என்பதை தாங்கிக்கொள்ளாத மனைவி அதே …
-
- 3 replies
- 367 views
-
-
வசதியாகத்தான் இருக்கிறது மகனே… நீ கொண்டு வந்து சேர்த்த முதியோர் இல்லம் ...பொறுப்பாய் என்னை ஒப்படைத்து விட்டு சலனமின்றி நீ வெளியேறிய போது, முன்பு நானும் இது போல் உன்னை வகுப்பறையில் விட்டு விட்டு என் முதுகுக்குப் பின்னால் நீ கதறக் கதறக் கண்ணீரை மறைத்தபடி புறப்பட்ட காட்சி ஞாபகத்தில் எழுகிறது! முதல் தரமிக்க இந்த இல்லத்தை தேடித் திரிந்து நீ தேர்ந்தெடுத்ததை அறிகையில்கூட அன்று உனக்காக நானும் பொருத்தமான பள்ளி எதுவென்றே ஓடி அலைந்ததை ஒப்பீடு செய்கிறேன்! இதுவரையில் ஒருமுறையேனும் என் முகம் பார்க்க நீ வராமல் போனாலும் என் பராமரிப்பிற்கான மாதத் தொகையை மறக்காமல் அனுப்பி வைப்பதற்காக மனம் மகிழ்ச்சியடைகிறது நீ விடுதியில் …
-
- 10 replies
- 1.6k views
-
-
தமிழால் இணைவோம் அன்றே சொன்னார்... .................................. "நான் இந்தியா முழுவதும் பயனம் செய்தேன்.அங்கு ஒரு பிச்சைக்காரனையோ,திருடனையோ பார்க்க முடியவில்லை. செல்வ வளம் அங்கு கொட்டிக் கிடைக்கிறது.உயர்ந்த நீதி நெறிகள்,ஒழுக்கம் நிறைந்த மக்கள் காணப்படுகின்றனர். நாம் அந்த நாட்டை ஒருபோதும் வெற்றி கொள்ள முடியாது என நினைக்கின்றேன். அவர்கள் ஆன்மீகம்,பண்பாடு என்ற பாரம்பரியம் உள்ளவர்கள். அந்த நாட்டின் இந்த முதுகெலும்பை உடைக்காமல் நம்மால் ஒன்றும் செய்ய முடியாது. எனவே அவர்களது பழைய புராதனக் கல்வி முறையையும்,பண்பாட்டையும் அடியோடு அகற்ற வேண்டுமென்று நான் முன் மொழிகிறேன். அந்நிய மொழி என்று கருதாமல் நம்முடைய ஆங்கிலமே அவர்களது மொழியைவிட சிறந்தது என…
-
- 1 reply
- 523 views
-
-
கடந்த பதினைந்து வருடங்களாக யாழ்ப்பாணத்து மக்கள் கொழும்பிலிருந்து யாழ்ப்பாணத்திற்கு ஒரு புகையிரதப் பாதையை அமைத்து எங்களது தேவைகளைப் பூர்த்தி செய்வதற்காகத் தலைநகருக்கு செல்வதற்கு வசதி செய்யும்படி அரசாங்கத்தை மன்றாடிக் கொண்டிருக்கின்றனர். ஆனால் அரசாங்க மந்திரிகள் அனுராதபுரம் மட்டுமே புகையிரத சேவையைத் திறப்பதற்கு கட்டளையிட்டுள்ளனர். அனுராதபுரம் மட்டுமே புகையிரத சேவை திறக்கப்பட்டால் தமிழராகிய எம்மால் என்ன செய்ய முடியும்? மேலும் இலங்கையை நிர்வகித்த முன்னாள் தேசாதிபதி ஒருவர் ஒரு தடவை இந்தத் தமிழர் ஏன்தான் கொழும்புக்கு வரவேண்டும் என வினவியதாகச் சொல்லப்படுகிறது. இலங்கை அரசாங்கம் இந்த அளவுக்குத் தமிழரை வெறுத்தால் ஏன் எம்மை இந்திய அரசாங்கத்தின் நிர்வாகத்தின் கீழ் கொண்டு வருவதற்கு ஒழ…
-
- 0 replies
- 417 views
-
-
ஐக்கிய அரபு இராச்சியத்தின் அபுதாபியில் நடைபெற்ற ‘Big Ticket’ அதிர்ஷ்டலாப லொத்தர் சீட்டிழுப்பில், இலங்கையர் ஒருவர் 20 மில்லியன் திர்ஹம் (சுமார் 176 கோடி) பரிசுத்தொகையை வென்றுள்ளார். ‘Big Ticket’ அதிர்ஷ்டலாப லொத்தர் சீட்டிழுப்பு அண்மையில் நடத்தப்பட்டதுடன் இதில் இலங்கையை சேர்ந்த துரைலிங்கம் பிரபாகர் பரிசுக்குரியவரானார். 16 வருடங்களுக்கு முன்னர் ஐக்கிய அரபு இராச்சியத்திற்கு சென்றுள்ள அவர், டுபாயிலுள்ள நிறுவனமொன்றில் பணியாற்றுகின்றார். கடந்த 5 வருடங்களாக வெற்றியை எதிர்பார்த்து லொத்தர் சீட்டுகளை வாங்கிவந்த துரைலிங்கம் பிரபாகர், இந்த வெற்றிக்குரிய லொத்தர் சீட்டை கடந்த ஒகஸ்ட் மாதம் ஒன்லைன் ஊடாக பெற்றுக்கொண்டுள்ளார். இந்த வெற்றி தொடர்பில் பிரபாகரின் நண்பரிடம் வ…
-
- 2 replies
- 761 views
- 1 follower
-
-
The tree holds a total of 181 diamonds, pearls, emeralds, sapphires and other precious stones. http://www.timeslive.co.za/world/article822308.ece/Hotel-decks-halls-with-boughs-of-jewels http://www.youtube.com/watch?v=wMGz629bcpU
-
- 2 replies
- 1.1k views
-
-
கூடுவிட்டு கூடு பாயும் அதிசய சித்தர்கள் பலர் இன்னும் வாழ்வதாக மக்கள் நம்பிக்கை கொண்டுள்ள இடங்களில் ஒன்றுதான் நாமக்கல் மாவட்டத்தில் உள்ள கொல்லிமலை. கடையேழு வள்ளல்களில் ஒருவரான வல்வில் ஓரி ஆட்சி செய்த வளமான மலை நாடு. கடல் மட்டத்தில் இருந்து 1200 மீட்டர் உயரத்தில் 250 சதுர கிலோமீட்டர் பரப்பளவும் கொண்ட மூலிகை பூமி. இங்கு 20ஆயிரத்திற்கும் மேற்பட்ட மலைவாழ் மக்கள் வசிக்கிறார்கள். வளமான 16 மலை நாடுகளை உள்ளடக்கிய 200க்கும் மேற்பட்ட கிராமங்களை கொண்டதுமான இம்மலை நாட்டிலும் நவநாகரீக புதிய கலாச்சாரங்கள் மூக்கை நுழைத்தாலும் இரண்டு விஷயங்களை அதற்கு விட்டுக்கொடுக்காமல் பழமை காத்து வருகிறார்கள். ஆயிரக்கணக்கில் உள்ள ஆபூர்வ மூலிகைகளை காப்பாற்றி அழியாது பாதுகாத்து வருகிறார்கள். தினை, கே…
-
- 0 replies
- 5.7k views
-
-
அபூர்வ வழக்கு: ரயில்வேயுடன் 20 ரூபாய்க்காக 22 ஆண்டு சட்டப் போராட்டம் நடத்தியவருக்கு கிடைத்தது என்ன தெரியுமா? செரிலன் மொல்லன் பிபிசி நியூஸ், மும்பை 9 மணி நேரங்களுக்கு முன்னர் படக்குறிப்பு, சதுர்வேதி, இந்த வழக்கு தொடர்பான 120 நீதிமன்ற விசாரணைகளில் பங்கெடுத்துள்ளார் ரயில் டிக்கெட்டுக்கு 20 ரூபாய் அதிகமாக வசூலித்ததற்காக 22 ஆண்டுகள் சட்டப் போராட்டம் நடத்தி வெற்றி பெற்றவருக்கு என்ன கிடைத்தது தெரியுமா? 1999ஆம் ஆண்டில், துங்கநாத் சதுர்வேதி என்ற வழக்கறிஞர் வாங்கிய இரண்டு டிக்கெட்டுகளுக்கு 20 ரூபாய் கூடுதலாக வசூலிக்கப்பட்டது. உத்தர பிரதேசத்தில் உள்ள மதுர…
-
- 0 replies
- 149 views
- 1 follower
-
-
அப்துல் கலாம் இறப்பில் இந்திய “ரோ” ஆ….ஆ…?? இலங்கை புலனாய்வா…? வெளிவரும் புது வெடிப்பு..! July 31, 201510:29 pm முன் நாள் இந்திய ஜாதிபதியும் , அணு ஆராட்சியாளருமான அப்துல் கலாம் கடந்த மாதம் இலங்கை சென்று வந்த விடயம் அனைவரும் அறிந்ததே. இலங்கையின் ஆட்சி அமெரிக்கா சார்பானதும் கூட இன் நிலையில் திடீரென ஏற்பட்ட மாரடைப்பு காரணமாக அப்துல் கலாம் அவர்கள் உடனே உயிரிழந்தது பெரும் சந்தேகங்களை தோற்றுவித்துள்ளதாக , ரஷ்யாவை தளமாகக் கொண்டு இயங்கும் புலனாய்வு ஊடகம் ஒன்று இன்று செய்தி வெளியிட்டுள்ளது. பொதுவாக மாரடைப்பு வருவதற்கு காரணம் , இதயத்திற்குச் செல்லும் குழாய்களில் கொலஸ்ரோல் படிந்து அவரை திடீரென அடைபடுவதே. இந்தியாவின் முன் நாள் ஜனாதிபதி என்ற வகையில் , அவருக்கு அன் நாட்டில் பெரும் …
-
- 0 replies
- 365 views
-
-
அண்மையில் நிகழ்ந்த ஜி 20 மாநாட்டில் உலகத் தலைவர்களுக்கு வைக்கப்பட்ட நாடுகளை குறிப்பிடும் பலகையில்.. மோடிக்கு பாரத் (BHARAT) என்று குறிப்பிட்டு நாட்டுப் பலகை வைக்கப்பட்டிருக்கிறது. அப்ப மோடி ஹிந்தியாவின் சார்ப்பாக ஜி20 இல் கலந்து கொள்ளவில்லையா..??! அல்லது ஹிந்தியாவை மோடி பெயரளவில் ஒழித்துக்கட்டி விட்டாரா..??! https://www.bbc.co.uk/news/world-asia-india-66763836
-
- 1 reply
- 291 views
-
-
யாழ்.கொக்குவில் கலட்டி சந்திப் பகுதியில் இராணுவத்தினர் நிலைகொண்டிருந்த முகாம் காணியினுள் இராணுவத்தினரால் புத்தர் கோவில் நீண்டகாலமாக அமைக்கப்பட்டிருந்தமை தற்போது அம்பலமாகியிருக்கின்றது. இது குறித்து மேலும் தெரியவருவதாவது, சமாதான காலப் பகுதியில் பல்கலைக்கழக மாணவர்களைக் கண்காணிப்பதற்காக யாழ்.பல்கலைக்கழக விடுதிகளை அண்மித்த குறித்த பகுதியில் இராணுவத்தினரால் நிரந்தர முகாம் அமைக்கப்பட்டிருந்தது. அதன் அருகாக இராணுவத்தினரால் அமைக்கப்பட்ட அப்பக்கடை பல்கலைக்கழக மாணவர்களால் அடித்துச் சேதமாக்கப்பட்டிருந்தமையும் தெரிந்ததே. இந் நிலையில் சில நாட்களுக்கு முன்னர் குறித்த இராணுவ முகாமின் ஒருபகுதிக்காணியில் இருந்து இராணுவத்தினர் வெளியேறியிருக்கின்றனர். இராணுவத்தினர் வெளியேறியதை அ…
-
- 0 replies
- 339 views
-
-
படித்தவையில் பிடித்தவை அப்பப்பா, நான் அப்பன் அல்லடா! காதலியை இன்னொருவர் தள்ளி கொண்டு போய் விட்ட சோகத்தில் தண்ணி மேல் தண்ணி போட்டு கொண்டிருந்த அந்த வேல்ஸ்காரருக்கு ஆறுதல் சொல்ல வந்தார் அந்தப் புதிய பெண். பப்பில் (Pub) முதல் சந்திப்பு. ஒரு மாதம் ஓடி விட்டது. ஒருவாறு சோகம் குறைந்து புது மாப்பிளை போல வலம் வந்த நம்மாளுக்கு மீண்டும் சோதனை. புதிய பெண்ணும், வேறு ஒருவர் கிடைத்து, விலகி விட, சரி போகுது போ, ஒரு மாதம் சும்மா ஜாலியா போச்சுது, அது போதும் என நம்ம வேல்ஸ்காரரும் பிழைப்பினைப் பார்க்கப் போய் விட்டார். சரி. சனியன் அத்துடன் விட்டால் பரவாயில்லை. திடீரென ஒருநாள், அந்த பெண் அவரிடம் வந்து, 'அத்தான், உங்கள் பிள்ளை என் வயிற்றில்' என்று சொன்னால் எப்படி இருந்திரு…
-
- 10 replies
- 1.6k views
-
-
அப்பல்லோவில் பரபரப்பு : பூலோகத்தை காக்க வந்த அவதாரமும் வைத்தியசாலையில் அனுமதி.! கடந்த ஒரு மாத காலமாக சென்னை அப்பல்லோ வைத்தியசாலை பெரும் பரபரப்புடன் காணப்படுகிறது. தமிழக முதல்வர் ஜெயலலிதா அங்கு அனுமதிக்கப்பட்டுள்ளதால், பொலிஸ் பாதுகாப்பும், தொண்டர்கள், கட்சியினர், தலைவர்கள் என ஒரே பரபரப்புடனேயே நகர்கிறது. இந்நிலையில் இன்னொரு பரபரப்பு மனிதரும் அங்கு அனுமதிக்கப்பட்டுள்ளதால் அப்பல்லோ களைகட்டுகிறது. கடவுள் விஷ்னுவின் பத்தாவது அவதாரம் நான் தான், பூலோகத்தை காக்க வந்த அவதாரம் நான் என கூறி பரபரப்பை ஏற்படுத்திய விஜயகுமாரும் அப்பல்லோவில் அனுமதிக்கப்பட்டுளார். ஆந்திர மாநிலத்தை சேர்ந்த விஜயகுமார் கல்கி பகவான் ஆசிரமம் என்ற பெயரில் பல்…
-
- 3 replies
- 403 views
-
-
இனப்பிரச்சினைக்கு பாராளுமன்றத்தினுடாக தீர்வு காணமுடியும் என பிரதி அமைச்சர் வி.முரளிதரன் கூறும் கருத்துக்கு நான் உடன்படுகின்றேன் பேச்சுவார்த்தை மூலம் பிரச்சினைக்குத் தீர்வு காண முடியும் என்ற நம்பிக்கை எனக்கு உள்ளது. இதனை எனது அனுபவத்தினுடாகக் கூறுகின்றேன். 15 வருடத்திற்கு மேல் போராட்டத்தில் ஈடுபட்ட நான் ஆயுதப் போராட்டத்தில் நம்பிக்கையிழந்து அரசியல் ஊடாக பிரச்சினையைத் தீர்த்துக் கொள்ளலாம் எனத் தீர்மானித்து, ஐனநாயக அரசியலுக்குள் நுழைந்தேன். 1950 ஆண்டு முதல் அரசியல் பேச்சின் ஊடாக பிரச்சினை தீர்க்கப்படவில்லை என்பதால் 30 வருடத்தின் பின்னர் ஆயதமேந்திப் போராட ஆரம்பித்தோம் அதிலும் எட்டாத நிலையில் தற்போது மூன்றாம் கட்டத்திற்கு வந்துள்ளோம். -இதனைத் தெரிவித்திருப்பது டக்ளஸ் தேவ…
-
- 0 replies
- 522 views
-
-
அப்பாவின் உயிரை காத்த ஐந்து வயது சிறுவன். மேற்கு பிரான்சில், மாரடைப்பினால் மயங்கிவிழுந்த தனது தந்தையை காப்பாற்றுவதற்காக, ஐந்து வயது சிறுவன் ஒருவன், இரவு நேரத்தில், மழையில் நனைந்துகொண்டே நீண்டதூரம் சைக்கிளில் சென்றுள்ளான். அப்பாவின் உயிரை காத்த ஐந்து வயது சிறுவன் கெவின் என்ற அந்த சிறுவன், பல கிலோமீட்டர் தள்ளியுள்ள சான் பியே கோ என்ற சிறிய கிராமத்தில் வேலை செய்யும் அவனது தாயாரை அழைக்க முயன்றுள்ளான். வாகன ஓட்டுனர் ஒருவர், அந்த சிறுவனைக் கண்டு, அவசர உதவிச் சேவையை அழைத்துள்ளார். அவர்கள் அந்த சிறுவனின் வீட்டை தேடிப்பிடித்து, மாரடைப்பால் மயக்கமுற்ற அவனது தந்தையை மருத்துவமனையில் அனுமதித்தனர். அந்த சிறுவனின் முயற்சியால் அவனது தந்தை உயிர் பிழைத…
-
- 2 replies
- 629 views
-
-
தெஹிவளை மிருகக் காட்சிசாலையின் ஊர்வன பிரிவிலுள்ள பெண் அனகொண்டா ஒன்று ஆண் அனகொண்டா ஒன்றினை விழுங்கியுள்ளது. இந்தச் சம்பவம் கடந்த புதன்கிழமை இடம்பெற்றுள்ளது. இரு அனகொண்டாக்களுக்குமிடையில் இடம்பெற்ற மோதலின் போதே ஆண் அனகொண்டாவை பெண் அனகொண்டா விழுங்கி உள்ளதாக மிருகக் காட்சிசாலை வட்டாரங்கள் தெரிவித்தன. பத்து அடி நீளமான இந்த பெண் அனெகொண்டாவால் ஒன்பது அடி நீளமான ஆண் அனகொண்டாவே விழுங்கப்பட்டுள்ளது. குறித்த அனகொண்டாக்களை வேறாகப் பிரித்து வைக்குமாறு பலமுறை மிருகக்காட்சிசாலை அதிகாரிகளுக்கு தெரிவித்த போதிலும் கூட அது கவனத்தில் எடுக்கப்படவில்லையென வைத்தியர்கள் தெரிவித்துள்ளனர். 2004 ஆம் ஆண்டு மிருகக் காட்சிசாலைக்கு கொண்டு வரப்பட்ட இந்த ஜோடி மூலம் பல அனகொண்டா குட்டிகள் கிடைக்கப…
-
- 14 replies
- 1.3k views
-
-
[size=3] நியூயார்க்: தனது கணவரே தனது உண்மையான தந்தை என்று தெரிய வந்தால் உங்களுக்கு எப்படி இருக்கும்... அப்படி ஒரு அதிர்ச்சி அமெரிக்கப் பெண் ஒருவருக்கு ஏற்பட்டுள்ளது.[/size][size=3] இந்த அதிசய சம்பவம் ஒஹியோ மகாணத்தில் உள்ள டோலிஸ் டவுனில் நிகழ்ந்துள்ளது.[/size][size=3] வெலரி ஸ்புரில் என்ற 60 வயதான பெண்ணிற்கு தன்னுடைய பிறப்பு குறித்த சந்தேகம் நீண்ட காலமாக இருந்து வந்தது. காரணம், அவருடைய குடும்பத்தார் குறித்து அவருக்குப் பெரும் குழப்பம் ஏற்பட்டதே. இந்த நிலையில் அவரது குடும்பத்தைச் சேர்ந்த ஒருவர், வெலரியிடம் சில உண்மைகளைக் கூறியுள்ளார். அது அவரை மேலும் குழப்பியது.[/size][size=3] உனது தந்தை மற்றும் தாய் குறித்து சில மர்மங்கள் உள்ளன என்று அவர் கூறியது அவரை மேலும் அதிர்ச்…
-
- 14 replies
- 1.2k views
-
-
இங்கிலாந்தில் ஃபெராரி, லம்போர்கினி உள்ளிட்ட கார்களை வைத்திருக்கும் கோடீஸ்வரர்களுக்கான ஒரு பிரத்யேக இணையதளத்தை உருவாக்கியுள்ளார் கோடீஸ்வரர் ஒருவர். இந்த இணையதளத்தின் அரும் பணி என்ன தெரியுமா? காஸ்ட்லி கார் வைத்திருந்தும், டேட்டிங் செல்ல சரியான பெண்கள் கிடைக்காமல் அல்லாடுபவர்களுக்காகத்தான் இந்த வெப்சைட்டை இந்திய வம்சாவளி புண்ணியவான் ஒருவர் திறந்துள்ளார். லம்போர்கினி, ஃபெராரி இருந்தாலும் என்ன பிரயோஜனம்... சிக்கல்களை ஸ்லைடரில் காணுங்கள். அந்த புண்ணியவான் யார்? இந்த இணையதளத்தை திறந்து புண்ணியம் கட்டிக்கொண்டிருப்பது இங்கிலாந்தில் வசிக்கும் இந்திய வம்சா வளி கோடீஸ்வரர் சங்கீத் சேகராம். இந்த இணையதளத்தை சங்கீத் திறக்க என்ன காரணம் தெரியுமா? விரக்தியில் முளைத்த வெப்சைட் கையில் க…
-
- 0 replies
- 572 views
-
-
அமிதாப் பச்சன் மற்றும் சாருக் கானை கௌரவிக்க விசேட தபால் தலையொன்றை வெளியிட அரசாங்கம் தீர்மானம்? 06 May 10 01:25 am (BST) http://www.globaltamilnews.net/tamil_news1.php?nid=24014&cat=1 இலங்கைக்கு விஜயம் செய்யவுள்ள பிரபல இந்தித் திரைப்பட நடிகர்களான அமிதாப் பச்சன் மற்றும் சாருக் கான் ஆகியோரை கௌரவிக்கும் வகையில் விசேட தபால் தலையொன்றை வெளியிட அரசாங்கம் தீர்மானித்துள்ளது. இந்திய நடிகர்கள் இருவருக்கு இலங்கையில் தபால் தலையொன்றை வெளியிடப்படுவது இதுவே முதன்முறையாகும். ஜூன் மாதம் முதல் வாரத்தில் இந்த நடிகர்கள் இலங்கைக்கு விஜயம் செய்யவுள்ளனர். இலங்கையில் நடைபெறவுள்ள இந்திய சர்வதேச திரைப்பட விழாவில் கலந்துகொள்வதற்காக அவர்கள் அங்கு செல்லவுள்ளனர். எனினும் இந…
-
- 1 reply
- 448 views
-
-
அமுக்கிய அம்மாவும் மறைத்த மகளும் வெல்லம்பிட்டிய பொலிஸ் பிரிவுக்குட்பட்ட ஐடிஎச் பகுதியில் உள்ள புடைவைக்கடைக்கு சென்றிருந்த அம்மாவும் மகளும் அவர்களுக்கு உதவியாகச் சென்றிருந்த மற்றொரு பெண்ணுடன் இணைந்து, சாரிகளை மிகவும் இலாவகமாக மறைத்து களவெடுத்துச்செல்வது, அக்கடையில் பொருத்தப்பட்டிருந்த சி.சி.ரி.வி கமெராவில் பதியப்பட்டுள்ளது. அந்த வீடியோக் காட்சியை வெடியிட்டுள்ள வெல்லம்பிட்டிய பொலிஸார், இவ்விருவரும் நீண்ட நாட்களாக இவ்வாறான திருட்டுச் சம்பவங்களில் ஈடுபடுகின்றமை விசாரணைகளிலிருந்து தெரியவந்துள்ளது என்றும் தெரிவித்தனர். - See more at: http://www.tamilmirror.lk/179125/அம-க-க-ய-அம-ம-வ-ம-மற-த-த-மகள-ம-#s…
-
- 4 replies
- 869 views
-
-
அமெரிக்காவில் 37 வயது தாயும், 20 வயது மகளும் ஒரே தினத்தில் சில நிமிட இடைவெளியில் குழந்தைகளை பிரசவித்த சம்பவம் ஒன்று இடம்பெற்றுள்ளது. புளோரிடா மாநிலத்தைச் சேர்ந்த அஞ்ஜெலா பட்ரம் என்ற தாயும் தெரனிஷா பில்லப்ஸ் என்ற மகளுமே இவ்வாறு ஒரே தினத்தில் குழந்தைகளை பிரசவித்துள்ளனர். தம்பா பொது மருத்துவமனையில் அஞ்ஜெலா பெண் குழந்தையை பிரசவித்து 34 நிமிடங்களில் தெரனிஷா ஆண் குழந்தையை பிரசவித்துள்ளார். அஞ்ஜெலாவின் குழந்தைக்கு ராய எனவும் தெரனிஷாவின் குழந்தைக்கு ஜெரி மிசோட் எனவும் பெயர்கள் சூட்டப்பட்டுள்ளன. தமது பிரசவங்கள் குறைந்த நாட்கள் வித்தியாசத்தில் இடம்பெறவுள்ளதை முன்கூட்டியே அறிந்திருந்த போதும், ஒரே தினத்தில் சில நிமிட வித்த…
-
- 5 replies
- 442 views
-
-
-
- 1 reply
- 624 views
- 1 follower
-
-
'இப்போதும் விடுதலைப் புலிகளே போராடுகின்றார்கள். முன்னர் போர்க்களத்தில் நின்று தமிழீழ விடுதலைக்காகப் போராடினார்கள். இப்போது, தங்களை சிங்கள தேசத்தின் இன அழிப்புக்குத் தங்களை இரையாக்கிவிட்டு, அதன் சாட்சிகளாக இருந்து போராடுகின்றார்கள்' என்று புலம்பெயர்ந்து வாழும் பெண் விடுதலைப் புலி ஒருவர் தெரிவித்திருந்தார். அதுவே உண்மை என்பதைத் தமிழ் மக்களும் நன்றாகவே புரிந்துகொண்டுள்ளார்கள். ஐ.நா. மன்றத்தின் ஆணைக் குழுவுக்கும், சனல் 4 தொலைக்காட்சிக்கும் ஈழப் போரில் தம்மை உருக்கிக்கொண்ட விடுதலைப் புலிகளும், அவர்களது மக்களுமே மௌன சாட்சிகளாக உள்ளார்கள். சிங்கள தேசத்தின் கொடூரங்களை உலகின் மனச்சாட்சிவரை கொண்டு சென்றது அவர்களது விம்பங்களும், ஒளிப் பேழைகளும். ஐ.நா. மனித உரிமைகள் மையத்தின் கத…
-
- 0 replies
- 321 views
-
-
இன்றைய உலகம் செல்போனுக்குள் சுருங்கிவிட்டது என்று கூறிவிடலாம். அந்த அளவுக்கு அனைத்து வசதிகளும் செல்போனில் கிடைக்கும்படி செய்யப்பட்டுள்ளன. தற்போது இது இன்னும் ஒருபடி மேலே சென்று கொசுவை விரட்டக் கூட அப்ளிகேஷன் வந்துவிட்டது. தற்போது விற்பனையாகி வரும் பல்வேறு கொசு விரட்டிகளாலும் கொசுக் களை கட்டுப்படுத்த முடிவதில்லை என்று நம்மில் பலர் குறைபட்டு கொள்வதை கேட்கிறோம். தற்போது அதற்கு முடிவு கட்டப்பட்டுள்ளது. அமெரிக்க நிறுவனம் தயாரித்துள்ள இந்த புதிய கொசு விரட்டி எனப்படும் புதிய அப்ளிகேஷனை ஸ்மார்ட்போனில் டவுன்லோடு செய்து அதனை இயக்கினால், அதில் இருந்து வெளியாகும் உயர் அதிர்வெண் கொண்ட சப்த அலைகள் கொசுக்களை ஓட ஓட விரட்டி விடும். கொசுக்களுக்கு பிடிக்காத இந்த அல்ட்ரா சவுண்டால…
-
- 3 replies
- 553 views
-
-
[size=4]அமெரிக்க உள்நாட்டுப் பாதுகாப்புத் துறையின் ஆள் இல்லாத விமானத்தை டெக்சாஸ் பல்கலைக்கழக ஆய்வு மாணவர்கள் கடத்தினர்.அந்த விமானத்தை பாதுகாப்புத் துறை அதிகாரிகள் இயக்கிக் கொண்டிருந்தபோதே அவர்களின் கட்டுப்பாட்டில் இருந்து விமானத்தை மாணவர்கள் பறித்து, தங்கள் கட்டுப்பாட்டின் கீழ் கொண்டு வந்துள்ளனர்.[/size] [size=4]டெக்சாஸ் பல்கலைக்கழக வளாகத்தில் மாணவர்கள் தாங்கள் உருவாக்கிய நவீன தொழில்நுட்பத்தை இந்தவகையில் பரிசோதித்துக் காட்டினர். விமானத்தை தங்கள் கட்டுப்பாட்டுக் கொண்டு வர மாணவர்கள் பயன்படுத்திய தொழில்நுட்பம் மிகவும் கடினமானதல்ல. 1000 டாலர்கள் செலவிட்டால் அதற்கான கருவியை வடிவமைத்துவிட முடியும் என்பது குறிப்பிடத்தக்கது.[/size] [size=4]http://www.s…
-
- 0 replies
- 443 views
-