Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

பொங்கு தமிழ்

தமிழ் | தமிழர் | தேசியம் | வரலாறு | பண்பாடு

பதிவாளர் கவனத்திற்கு!

பொங்கு தமிழ் பகுதியில் தமிழ், தமிழர், தேசியம், வரலாறு, பண்பாடு சம்பந்தமான பதிவுகள் இணைக்கப்படலாம்.

தமிழர்களின் பண்பாடு, கலாச்சாரம், தேசியம், வரலாறு சம்பந்தமான அவசியமானதும், நம்பகத்தன்மை உள்ளதுமான தகவல்கள் மாத்திரம் இணைக்கப்படல் வேண்டும்.

  1. இக்கல்வெட்டு யாழ்ப்பாண இராச்சிய மன்னனாகிய சிங்கையாரியனைப் பற்றிக் குறிப்பிடும் தமிழ் கல்வெட்டு ஆக எமது வரலாற்றிலே அளப்பரிய பங்கை வகிக்கின்றது. நல்லூர் இராசதானியின் கிழக்கு எல்லையாகிய நாயன்மார்கட்டுக் கிராமத்திலுள்ள அரசடிப்பிள்ளையார் ஆலயத்திற்கு முன்னால் உள்ள திருக்குளம் ஆழமாக்கிய போது இக்கல்வெட்டுக் கண்டு பிடிக்கப்பட்டு பின்பு ஆலயத்தில் நீண்டகாலம் வைக்கப்பட்டிருந்தது. இக்கல்வெட்டு பின்னர் யாழ்ப்பாணப் பல்கலைக்கழக வரலாற்றுத்துறைச் சிரேஷ்ட விரிவுரையாளர் செ. கிருஷ்ணராசாவினது முயற்சியால் யாழ்ப்பாணப் பல்கலைக்கழக நூதன சாலைக்குக் கொண்டு செல்லப்பட்டு அங்கு வைக்கப்பட்டுள்ளது. 2 அடி நீளமும், 1.5 அடி அகலமும் கொண்ட இக்கல்வெட்டில் ஐந்து வரிகள் உள்ளன. இதனை வாசித்தோர் கலி 3925 இல் தீர்த…

  2. பண்பாட்டில் சிறந்து விளங்கிய நம் தமிழர்கள், தாம் வளர்த்த விலங்கினங்களுக்கும் நடுகல் எழுப்பி வழிபட்டது உண்மையில் வியப்பைத் தரக்கூடியதுதான். நடுகல் ஆதியில் நம் வழிபாட்டு முறைகள் நடுகல்லில் இருந்தே தோன்றின என்கிறது வரலாறு. பிரமாண்டக் கோயில்களோ, வழிபாட்டு முறைகளோ இல்லாத நாள்களில் முதன்முதலாக நன்றியின் பொருட்டோ, அச்சத்தின் பொருட்டோ எழுப்பப்பட்ட நடுகற்களே வழிபாட்டுக்கு உரியவைகளாக இருந்தன. நடுகல், கந்து எனும் கல்தூண் எனத் தொடங்கிய வழிபாடுகள் மெல்ல மெல்ல அச்சமூட்டிய அணங்கு எனும் பேய், வேல், வாள் என நீண்டன. பிறகு மன்னர்கள் காலத்தில் சிலைகளாக முன்னேறிப் பல தெய்வ வடிவங்களும் உண்டா…

  3. நாலும் இரண்டும் உணர்த்தும் வாழ்வியல் அறம்.! முன்னுரை அறம் என்னும் சொல்லிற்கு ‘அறுத்துச் செல்வம்’, ‘ஊழியை உண்டாக்குவது’ என்று பொருள் கூறுவர். மனித இனத்தின் நலத்திற்காகவும் முன்னேற்றத்திற்காகவும் மனித சமுதாயம் வரையறுத்துக் கொண்ட ஒழுக்கநெறி ‘அறம்’ எனப்படும். அறம் என்பதை வாழ்க்கை நெறி என்றும் கூறலாம். அதாவது, மனித வாழ்க்கையைச் செம்மையுடையதாகவும், அமைதியுடையதாகவும், பயனுடையதாகவும் அமைவதற்கு ஆன்றோர்கள் காட்டிய அன்றாட வாழ்க்கையில் பின்பற்ற வேண்டிய முறைகளே அறம் ஆகும். இத்தகைய சிறப்புப் பெற்ற அறத்தைப் பற்றி நாலடியாரும் திருக்குறளும் கூறியுள்ள செய்திகளை ஆய்வதே இக்கட்டுரையின் நோக்கமாகும். அறம் என்பது... அறம் செய்து வாழ வேண்டும் என்று நாலடியார் கூறுகையில், …

  4. நியூஸிலாந்து நாட்டின் அருங்காட்சியகத்தில் வைக்கப்பட்டிருக்கும் தமிழ் மணி.! நியூஸிலாந்து நாட்டில் வெங்கேரி என்னுமிடத்திடத்தருகே கண்டெடுக்கப்பட்டு தற்சமையம் நியூஸிலாந்து தலைநகர் வெலிங்டன் அருங்காட்சியத்தை அலங்கரித்துக் கொண்டிருக்கும் ‘கப்பல்மணி’ தமிழர்களின் கடல் கடந்த வணிபத்திற்கு சான்றாக மட்டும் இல்லாமல், நியூஸிலாந்து நாட்டின் வரலாற்றில் ஒரு முக்கிய தொன்மையானப் பொருளாகவே இது் கருதப்படுகின்றது. இங்கிலாந்திலிருந்து நியூஸிலாந்திற்கு அனுப்பப்பட்ட சமயப்பரப்புக் குழுவில் இடம் பெற்ற வில்லியம் கோல்ன்ஸோ எனும் பாதிரியாரால் கண்டுபிடிக்கப் பட்ட இந்த வெண்கல மணியின் வாய் விழிம்பில் ‘முகைதீன் வக்குசுடைய கப்பல் உடைய மணி’ என்று மணியைச் சுற்றிலும் பொறிக்கப் பட்டுள்ளது. இம்மணி…

  5. நீங்கள் என்ன தவறு செய்கிறீர்களோ..அதே வடிவில் உங்களுக்கு தண்டனை கிடைக்கும் [ வெள்ளிக்கிழமை, 06 மார்ச் 2015, 06:55.08 AM GMT +05:30 ] இந்து சமய புராணங்களில் ஒன்றான கருடபுராணத்தில், ஒருவர் என்ன தவறு செய்கிறார்களே, அதே வடிவில் அவர்களுக்கு கிடைக்கும் என்று கூறப்படுகிறது. அதாவது, உடலால் செய்தவற்றை உடலாலும், மனதால் செய்தவற்றை மனதாலும் அனுபவிக்க வேண்டிவரும். இந்த கருடபுராணத்தில் விஷ்ணுவும், பறவைகளின் அரசன் (கருடன்) உரையாடுவார்கள். இந்த கருடபுராணத்தில் வழங்கப்படும் தண்டனைகள்; தாமிஸிர நரகம் பிறருக்குச் சொந்தமான மற்றவர் மனைவியை விரும்புவதும் அபகரிப்பதும் பாவச்செயலாகும். அதே போல் பிறரது குழந்தையை அபகரிப்பது மகாபாவமாகும். பிறரது பொருளை ஏமா…

    • 0 replies
    • 1.6k views
  6. வணக்கம் எம் வேர்களே, எங்களின் மூலாதாரங்களே – எம் அன்பிற்குரிய தாய்த் தமிழக உறவுகளே! உங்கள் ஈகத்தை, நீங்கள் எமக்காய் ஆற்றி வரும் விடுதலைப் பணியை போற்றி மகிழ்கிறோம். பெருமையோடு பேசுகிறோம் – ஆனால் உங்களுக்கு கைம்மாறாய் ஏதும் செய்ய இயலாது வெட்கித் தலை குனிகிறோம்! தமிழனாய் பிறந்தோம் என்று ஓர் காலத்தில் பெருமை கொண்டிருந்தோம்! இன்று எம்மை வழி நடத்த தலைமை ஏதும் அற்ற நிலையில் தனித்துப் போய் திசைக்கு ஒன்றாய் சிதறிக் கிடந்து மனதுள் வெதும்பி அழுகின்றோம். என் செய்வோம் நாம்? நீங்கள் இருக்கிறீர்கள் எனும் துணிவில் வாழ்கிறோம்! எம் நிலையை எண்ணியெண்ணி கண்ணீர் வடிக்கின்றோம்! ஒட்டு மொத்த தமிழகமே மாணவர் சக்தியின் வடிவாய் எழுச்சி கொண்டிருக்கிறது. நாமோ எம…

    • 0 replies
    • 1.4k views
  7. Source : http://subavee-blog.blogspot.com/ கம்பரின் காப்பியத்தில், ஆரண்ய காண்டத்திலே இடம் பெற்றுள்ள சூர்ப்பனகைப் படலம், கரன் வதைப்படலம், மாரீசன் வதைப்படலம் ஆகிய மூன்று படலங்களையும் படித்தால் பல உண்மைகள் நமக்கு விளங்கும். இலக்குவனால் அமைக்கப்பெற்ற பர்ணசாலையின் வெளிப்புறத்தில், இராமர் ஓய்வெடுத்துக் கொண்டிருக்கிறார். தூங்கியும்,தூங்காமலும் அரிதுயில் கொண்டுள்ளதாக அதனைக் கூறுவர். அப்போது தன் கணவன் வித்யுத்சிகுவனைப் போரில் இழந்து, கைம்பெண்ணாய்க் காட்டில் அலைந்து கொண்டிருக்கும் சூர்ப்பனகை அங்கு வருகிறாள். இராமரைக் கண்டு, அவர் அழகில் மயங்குகிறாள். தன்னுடைய அரக்க உருவத்தை, மந்திரத்தால் அழகிய உருவாக மாற்றிக் கொண்டு,இராமரை நெருங்குகிறாள். அவள் எப்படி நடந்து வந்தாள் என்பதைக்…

  8. நீராடல் குறித்த சங்ககாலக் குறிப்புகள் நீராடல் : உடல் தூய்மைக்கு உதவும் இன்றியமையாத நற்பழக்கம் ‘நீராடல்’. ‘கூழானாலும் குளித்துக் குடி’ எனும் மூதுரை நீராடலின் இன்றியமையாமையை வலியுறுத்தும். அதிலும் ஆறு, கடல் அருவிகளில் நீராடல் என்பது இயற்கையோடு ஒன்றிய நீராடல் எனலாம். மேனாடுகளில் வெப்பக் குளியல் (Sun Bath). ஆவிக்குளியல் (Steam Bath), மூலிகைக் குளியல் (Herbal Bath) என்று பல்வேறு வகைக் குளியல்கள் நலவாழ்வு நோக்கில் உருவானவை. எண்ணெய் நீராடல், அருவி நீராடல், கடல் நீராடல் ஆகியவை இரத்த ஓட்டத்திற்குப் பெரிதும் உதவுகின்றன என்னும் உண்மையை அறிவியலார் இன்று உணர்ந்து வருகின்றனர். இந்த நற்பழக்கம் பழந்தமிழர் வாழ்வில் இயல்பாகவே இணைந்திருப்பதைப் பின்வரும் சங்க இலக்கியச் சான்று…

  9. கடந்த சிலநாட்களுக்கு முன் பத்திரிகைச் செய்தியில் ஒரு விடையம் கோடிட்டுக் காட்டப்பட்டது.தமிழர் தாயகப்பகுதியில் படையினரும், அரசு நிர்வாகமும் பொதுசனக் கணக்கெடுப்பு நடாத்தப்பட்டது அனைவரும் அறிந்ததே. நான் தொலைபேசியில் எனது நெருங்கிய உறவனர் ஒருவரிடம் கதைத்தபொழுது சில விடையங்களை மிகவும் மனவருத்தத்துடன் குறிப்பிட்டார். பொதுசனக் கணக்கெடுப்பின் பொழுது பின்வரும் விடையங்களை மறக்காது கேட்டு குறிப்பெடுப்பதாக. 1. குடும்ப அங்கத்தவர் எண்ணிக்கை. 2. 1982ம் ஆண்டிற்குப் பின்பு மரணமானவர்களின் விபரம், மரணமானாதன் காரணம். 3. காணாமல் போனவர்களின் விபரம். 4. வெளிநாட்டில் வசிக்கும் அங்கத்தவர்களது விபரம். இதை மேலோட்டமாக பரர்கும்பொழுது பெரியவிடயமாகத் தெரியாது. ஆனால், கூர்ந்து ப…

    • 1 reply
    • 1.3k views
  10. “நும்நாடு யாதென்றால் தமிழ்நாடு என்றல்” – இளம்பூரணர் 1967-69 யாண்டுகளில் 'சென்னை மாகாணம்' என்று அதற்குமுன் வழங்கிய பெயரைத் தமிழ்நாடு என்று மாற்றப் பெயர்சூட்ட முனைந்த பொழுது சான்றுகள் தேடியபொழுது சிலப்பதிகாரத்தில் காட்டினதாகச் சொல்லுவார்கள். சிலப்பதிகாரத்திலே “இமிழ்கடல் வேலியைத் தமிழ்நாடாக்கிய இது நீ கருதினையாயின்” (சிலப்பதிகாரம் : வஞ்சிக் காண்டம்) என்று சொல்கிறது. ஆனால் சிலப்பதிகாரத்தில் மட்டுமேயன்றி மற்ற பழைய உரைகாரர்களில் ஒருவரும் தமிழ்நாடு என்ற சொல்லை வழங்குகின்றார். அது சிலப்பதிகாரத்தின் வழக்கை விட இன்னும் தேற்றமானது. அதைக் காண்போம். தொல்காப்பியத்தின் பழைய உரைகாரர்களுள் முந்தியவர் இளம்பூரணர் (கிபி 11-ஆம் நூற்றாண்டு). செப்பும் வினாவும் வழுவாது வருதற்கு “நு…

  11. நூற்றாண்டுகளாய் தொடரும் தமிழ்ப் புத்தாண்டு சர்ச்சை! கல்தோன்றி மண்தோன்றா காலத்தேவாளோடு முன்தோன்றிய மூத்தக்குடி- எங்கள்குடி தமிழ்குடி என்று பெருமிதம் பேசுகின்ற தமிழினம் இன்று வரை தமக்கான புத்தாண்டு எது என்பதை தேடிக் கொண்டிருப்பது வரலாற்று சோகம்தான்! தை மாதம் முதல் நாளே தமிழர் புத்தாண்டு என்று ஒரு தரப்பும் சித்திரை முதல் நாளே தமிழர் புத்தாண்டு என்று மற்றொரு தரப்பும் இன்றளவும் வாதிட்டு வருகின்றனர். இதில் கருணாநிதிதான் தை புத்தாண்டு என்று அறிவித்தார்... ஜெயலலிதாதான் அதை மாற்றி சித்திரை புத்தாண்டு என அறிவித்தார் என சமூக வளைதளங்களில் குழாயடிச் சண்டை நடத்துவோரும் உண்டு.. இது ஒன்றும் இந்தக் காலத்து 'அரசியல்' இல்லை. இது நூற்றாண்டுகளாகத் தொடர்கின்ற ஒரு இனத்துக்கான அடையாள …

  12. நூல் மதிப்புரை ஈழக்கதவுகள் 2002 அக்டோபர் திங்களில் யாழ் நகரில் நடைபெற்ற "மானுடத்தின் தமிழ்க்கடல்" மாநாட்டுக்குச் சென்று வந்த சூரிய தீபன் நமக்கு ஈழக் கதவுகளைத் திறந்துவிட்டிருக்கிறார். இது ஒரு பயண நூல் அல்ல. தமிழீழத்தின் ஐம்பதாண்டுக் கால வரலாற்றைப் பதிவு செய்யும் வரலாற்று நூல்கூட அல்ல. தமிழீழ மக்களின் தணியாத விடுதலை வேட்கையையும் வீர உணர்வுகளையும் வடித்துத் தரும் வீர காவியம் என்று குறிப்பிடுவதே சரியாக இருக்கும். வியத்நாமிலும் கியூபாவிலும், பாலஸ்தீனத்திலும் நடைபெற்ற கொடுமைகளை எதிர்த்துக்குரல் கொடுத்தவர்கள் கூப்பிடு தூரத்தில் நடைபெறும் கொடுமைகளைக் கண்டும் காணாமல் இருக்கும் அவலத்தை நூலின் முன்னுரையில் சுட்டிக்காட்டும் சூரிய தீபன் உலகம் ஆதிக்கக்காரர்களை மாவீ…

  13. நூல் மதிப்புரை: தி. அழகிரிசாமி எழுதிய - படகுப் பயணமும் பட்டினிப் போராட்டமும் மனித நேயத்தின் தியாக வரலாறு பேரா. அ. அய்யாசாமி சிங்களப் பேரினவாத அரசு மூர்க் கத்தனமாக இனப்படுகொலையில் ஈடு படுவது உலகறிந்த இரகசியம் இராணு வத்தை அனுப்பித் தமிழர் குடும்பங்களை ஆண், பெண், குழந்தைகள் என்ற வேறு பாடு பார்க்காமல் கொத்துக் கொத்தாக மானபங்கப் படுத்துவதும் கொலை செய்து குவிப்பதும் இலங்கைத் தீவில் அன்றாட நடவடிக்கைகளாகிவிட்டன. இது போதாதென்று கொழும்புவிலிருந்து யாழ்ப்பாணம் செல்லும் ஒரே ஒரு பாதை யையும் அடைத்து யாழ்ப்பாணத்தையே சிறைக்கூடமாக்கியிருக்கிறது சிங்கள அரசு. யாரும், எந்தப் பொருளும் உள்ளே செல்லவோ வெளியே வரவோ முடியாது. உணவில்லை, மருந்தில்லை, பசியால் அழும் குழந்தைக்கு…

  14. Started by இளங்கோ,

    நெருப்பு எனது தோழி ஒருத்தியின் கதை இது. (சந்தேகம் வேண்டாம் ஈழத்து தமிழ்ப் பெண்தான்) அவாவுக்கு ஆண்களைக் கண்டால் பிடிக்காது. அதற்கான காரணம் எனக்குத் தெரியவில்லை. பொதுவாக ஆண்கள் மீது பெண்களுக்கு ஏற்படும் மையல் அவாவுக்கு பிரான்ஸ் நாட்டு பெண் ஓருத்தியின் மிது ஏற்பட்டது. நாளடைவில் இருவரும் ஒன்றாக வசிக்கத் தொடங்கிவிட்டார்கள். அவாவை சென்றமுறை பிரான்சுக்கு நான் சென்றபோது தற்செயலாக சந்தித்தேன். தனது வீட்டில் எல்லோரும் காறித்துப்பினார்கள் என்றும் தன்னைக் கண்டபடி கண்மண் தெரியாமல் அடித்தார்கள் என்றும் கூறினா. அதன்பின், சட்டத்தின் உதவியுடன் தனும் அந்தப் பெண்ணும் மகிழ்ச்சியாக குடும்பம் நடத்துவாதாகக் கூறினா. இருப்பினும் தமிழ்ச் சமூகத்திலிருந்து தன்னை விலக்கி வைத்தது தனக்கு கவலை…

  15. சுயநிர்ணய உரிமை முதலாளித்துவ வளர்ச்சி என்பது தேசத்தினை உருவாக்கிக் கொள்கின்றது. அவ்வாறு உருவாக முயற்சி கொள்ளும் ஒரு தேசிய இனம் தனது இருப்பை உறுதிப்படுத்தும் பொருட்டு சட்டரீதியான அங்கீகாரம்கோருவதாகும். அப்படி சமாதான முறையில் நடைபெறாவிடின் பலாத்காரமாக நிறைவேற்ற முயல்கின்றனர்.சுயநிர்ணய உரிமை என்பது தன்னுடைய தலைவிதியை தானே தீர்மானித்துக் கொள்வதாகும். தன்னுடைய இருப்பை அச்சுறுத்தும் நிலையில் இருந்து தன்னை பாதுகாத்துக் கொள்வதாகவும் இருக்கின்றது. முதலாளித்துவ வளர்ச்சியில் தன் ஒரு தேசிய இனத்தில் தேவையை அடிப்படையாக தீர்மானிக்கப்படுகின்றது. ‘‘தேசங்களின்சுயநிர்ணய உரிமை என்பது அரசியல் வழியில் சுதந்திரம் பெறும் உரிமையை ஒடுக்கும் தேசத்திலிருந்து அரசியல்வழியில் சுதந்திரமாகப்…

  16. பகுத்தறிவு என்றால் என்ன என்ற கேள்வி இந்தத் தளத்தில் சில இடங்களில் கேட்கப்படுகிறது. பதில் மிகவும் சுலபமானது பகுத்து அறிவதுதான் பகுத்தறிவு. இது நல்லது, இது கெட்டது என்று சொந்தப் புத்தியில் பகுத்து அறிவதுதான் பகுத்தறிவு. இது கல், இதற்கு பாலை ஊற்றினால், எமக்கு எந்த நன்மையும் கிடைக்காது என்று பகுத்து அறிய வேண்டும். கடவுள் அனைத்தும் அறிந்தவர் என்றால், அவர் தமிழையும் அறிந்திருப்பார் என்பதை பகுத்து அறிய வேண்டும். பிறப்பின் மூலம் மனிதருக்கு பிரிவை உருவாக்குகின்ற எவையுமே நல்லவைகள் அல்ல என்பதை அறிய வேண்டும். தந்தை பெரியாரோ, கிருஸ்ணரோ சொன்னால், அதை அப்படியே ஏற்றுக் கொள்ளாது, ஆராய்ந்து அறிந்து ஏற்றுக் கொள்ள வேண்டும். இப்படி மிக இலகுவாக யாருக்குமே இருக்கக்கூட…

    • 12 replies
    • 23.6k views
  17. http://sivasinnapodi1955.blogspot.com/2007/03/blog-post.html

    • 6 replies
    • 1.8k views
  18. பொதுவாகவே, பெரியாரிஸ்ருக்கள் எனத் தம்மை அடையாளப் படுத்திக் கொள்வோரிடம் நல்ல பழக்கவழக்கங்கள் மீதான ஈடுபாடு நிறையவே உள்ளது. இப்பழக்கவழக்கங்களைத் தத்தமது வாழ்வில் கடைப்பிடிக்க வேண்டும் என்ற இதயசுத்தியான ஆசையும் இவர்களிடத்தில் உள்ளது. பொதுப்பட இந்தச் சாராரிடம் என்னைக் கவர்ந்த விடயங்கள் என சிலவற்றைக் கூறுவதானால், ஒரு விவாத்தில் இறங்குன் விவாதப்பொருள் தொடர்பில் சற்றேனும் தம்மைத் தயார் படுத்திக் கொள்ளல், தரவுகளைக் கடினமாக முயன்று திரட்டிக் கொள்ளல், தங்களது கொள்கையில் ஈடுபாட்டுடனும் உறுதியுடனும் குறைந்தபட்சம் பொது இடங்களிலேனும் நடந்து கொள்ளல், தமது பார்வையில் மக்களிற்குத் தீங்கு என்று தாம் நினைப்பனவற்றை, பொது நலத்திற்கு மேலால்--இன்னமும் சொல்வதானால் சில அர்ப்பணிப்புக்ளையும் செய்து…

    • 3 replies
    • 1.3k views
  19. மரபு வழித் தமிழ்த் தேசியத் தக்கார் அவையம் – 2016 5-ஆம் பதிவு நாள்: 24.02.2016 பெருந்தச்சு நிழல் நாள்காட்டியின்படி, இவ்வாண்டின் மூன்றாவது முழுநிலவு கடந்த 22.02.2016 அன்று மாலை 06.20-க்குத் தோன்றி நள்ளிரவை 12.25-க்கு இனிதே கடந்தது. இது இழு பறியான நிலைதான். அதற்கு முதல் நாள், நிலவு மாலை 06.10-க்குத் தோன்றி நள்ளிரவு 11.41-க்குக் கடந்த நிலையில் இந்த முழுநிலவு 14-ம் நாளிலேயே வந்து விட்டது என்ற கணிப்பை மாற்றி வியப்பிலும் வியப்பாகவும் விரைந்து இழப்பை ஈடுசெய்தும் வெற்றி பெற்றுள்ளது. நிலவு 23.02.2016 அன்று மாலை 07.20-க்குத் தோன்றியது. இந்த ஒரு மணி நேர இடைவெளி அதற்கு முதல் நாளில் இல்லை என்பது குறிப்பிடத்தக்கது கடந்து சென்ற நிலவு பங்குனி உத்தரம்: இவ்வாண்ட…

    • 0 replies
    • 784 views
  20. மரபு வழித் தமிழ்த் தேசிய தக்கார் அவையம்-2016 6-ஆம் பதிவு நாள்: 26-03-2016 ----------------------------------------------------------------------------------------------------------------------------- பெருந்தச்சு நிழல் நாள்காட்டியின்படி இவ்வாண்டின் நான்காவது நிலவு வெற்றி பெற்றுள்ளது. 23.03.2016 அன்று 6.33-க்குத் தோன்றி நள்ளிரவை 12.33-க்கு கடந்தது. இது இழு பறியான நிலைதான் ஆயினும் முறை முற்றிய நிலவாகக் கணக்கில் கொள்ளலாம். இவ்வாண்டின் முதல் இரண்டு முழுநிலவுகளான தைப்பூசம், மாசிமகம் இரண்டும் ஒவ்வொரு நாள் குறைவுற்ற நிலையில் பங்குனி உத்தரமும், சித்திரைச் சித்தரையும் வெற்றி பெற்றுள்ளது வரவேற்கத்தக்கது. சித்திரைமேழி:- தமிழ் மரபில் …

    • 0 replies
    • 865 views
  21. கர்மவீரர் காமராஜர் சென்னை தேனாம்பேட்டையில் உள்ள காங்கிரஸ் மைதானம், சத்திய மூர்த்தி பவன் இவையெல்லாம் பல கோடி ரூபாய் மதிப்புள்ளவை இவை காமராசர் தேடிய செல்வம். ஆனால் தமிழ்நாடு காங்கிரஸ் கட்சிக்காக அவர் தேடியவை. சென்னையில் வாடகை வீட்டில்தான் கடைசி வரை காமராசர் வசித்தார். முதல்-அமைச்சராக இருந்த போது, அவர் வீட்டில் அரசு சார்பில் ஒரு தொலைபேசி இருந்தது. எப்போது பேசினாலும் பேசிய நேரம், பேசிய ஊர் முதலியவற்றை ஒரு நோட்டில் குறித்து வைக்க வேண்டும. அப்போதெல்லாம் எஸ்.டி.டி. வசதிகள் கிடையாது. டிரங்கால் பதிவு செய்துதான் பேச வேண்டும். டெலிபோன் பில் வந்தவுடன் அந்த நோட்டில் உள்ள விவரங்களைப் பார்த்து அரசு சம்பந்தப்பட்ட தொலைபேசி அழைப்புக்கான கட்டணத்தை மட்டும் அரசு கணக்கில் செல…

  22. வணக்கம் கள உறவுகளே ! வாசகர்களே ! யாழ் இணையம் தனது பதினைந்தாவது அகவையில் கால் அடி எடுத்து வைக்கும் இந்த வேளையிலே அதற்கு எனது மனங்கனிந்த பிறந்தநாள் வாழ்த்துக்களைக் கூறிக்கொண்டு , ஓர் போட்டிக் குறுந்தொடர் ஊடாக உங்களைத் தொடுகின்றேன் . நான் ஏற்கனவே ஆரம்பித்த பூக்கள் , பறவைகள் , மீன்கள் , விலங்குகள் வரிசையில் நகரும் வகையைச் சேர்ந்த பாம்பு இனங்களை உறவுகளுக்கு அறிமுகம் செய்கின்றேன் . நான் ஒரு பாம்பின் படத்தைப் போடுவேன் . நீங்கள் அந்த பாம்பிற்கான தூய தமிழ்ச் சொல்லைத் தரவேண்டும் . சரியான தூய தமிழ்ப் பெயரைத் தருபவருக்கு என்னால் ஓர் சிறப்புப் பரிசு தரப்படும் . அதாவது சரியான தூயதமிழ் பெயரைச் சொல்லும் முதலாவது கள உறவிற்கு ஒரு பச்சைப் புள்ளி பரிசாகத் தரப்படும் . யாரும் அதற்கான பெயரைச்…

  23. வணக்கம் கள உறவுகளே !! படமெடுத்த பாம்பும் பயந்தோடிய யாழ் கள உறவுகளும் என்ற போட்டித் தொடரை இத்துடன் நிறைவுக்குக் கொண்டு வருகின்றேன் . இத்தொடரில் ஆர்வமுடன் பங்கு பற்றி பரிசில்களை அள்ளிக் குவித்த அனைத்துக் கள உறவுகளுக்கும் எனது தலை சாய்கின்றது . பொதுவாகப் பாம்பு என்றாலே பயமும் அருவருப்பும் அடைகின்றோம் . அதனால் தானோ " பாம்பென்றால் படையும் நடுங்கும் " என்ற பழமொழியையும் " பாம்பின் காலைப் பாம்பு அறியும் " என்ற சொலவடையையும் எமது முன்னோர் விட்டுச் சென்றுள்ளனர் . தமிழர் வாழ்வில் நாக வழிபாடு அவர்கள் பாரம்பரியத்தில் ஊறிவிட்டதொன்று . இதற்கு ஈழத்திலே பரந்து விரிந்துள்ள நாகதம்பிரான் ஆலயங்கள் சாட்சியாக எம் முன்னே இருக்கின்றன . அத்துடன் ஈழத்திலே நாகர்கள் வாழ்ந்ததிற்கான பல வரலாற்று தடை…

  24. பண்டைத் தமிழர் வாழ்க்கை முறை சமுதாயம் என்பது யாது? ஒழுங்குபட்ட அமைப்புடன் ஒருவரையொருவர் சார்ந்து வாழும் மக்கள் கூட்டமே சமுதாயம் என்று மனிதவின இயல் (Ethnology) அறிஞர்களால் வரையறுக்கப் படுகிறது. ஆனால் சில மனிதப்புவி இயல் (Anthropogeography) அறிஞர்கள் இது குறுகிய வரையறை எனக்கருதி, ஒரு புவியியல் அமைப்பிலுள்ள இயற்கை வளங்களும், தாவர, விலங்கினங்களும் அடங்கிய கூட்டுச் சேர்க்கையே சமுதாயமென்றும், அந்தச் சூழ்நிலையில் வாழும் மக்கள் அந்தச் சமுதாயத்தின் ஓர் அங்கமே என்றும் கூறுகின்றனர். தற்கால அறிஞர்களால் புதுமையாகக் கொள்ளப்படும் இதே கருத்து இரண்டாயிரம் ஆண்டுகட்கும் முற்பட்ட நம் தமிழ் இலக்கண நூலாகிய தொல்காப்பியத்தில் கூறப்பட்டிருக்குமாயின், நம் மூதாதையரின்…

    • 0 replies
    • 12.9k views
  25. தமிழரின் சமர் படைக்கலன்கள் : வீரத்தில் சிறந்து விளங்கிய தமிழர்கள் இத்துணை படைக்கலங்களைப் பயன்படுத்தியிருக்கிறார்கள் என்ற செய்தி நமக்கெல்லாம் பெரும் வியப்பை தருவதாக அமைந்துள்ளது. தமிழரின் ஆய்தங்கள் இருவகைப்படும். கைக்கொள்படை/ கைப்படை: - (hand held weapons) கைவிடுபடை: எய்படை - எய்யும் ஆய்தங்கள் - அம்பு, சன்னகம், கவண்டை போன்றவை எறிபடை - எறியும் ஆய்தங்கள் - விட்டேறு, குந்தம், தோமரம் போன்றவை கைவிடாப்படை: குத்துப்படை - குத்தும் ஆய்தங்கள் - வேல், சூலம் போன்றவை வெட்டுப்படை - வெட்டும் ஆய்தங்கள் - வாள், கோடாரி போன்றவை அடுபடை - அடிக்கும் ஆய்தங்கள் - தண்டு, தண்டம், உலக்கை போன்றவை தடுபடை - மேற்வரும் படையை தடுக்கும் ஆய்தங்கள் - கிடுகு, தோல், மாவட்டணம் போன்றவை கைக்கொள்ளாப்படை: - ( siege…

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Account

Navigation

Search

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.