பொங்கு தமிழ்
தமிழ் | தமிழர் | தேசியம் | வரலாறு | பண்பாடு
பொங்கு தமிழ் பகுதியில் தமிழ், தமிழர், தேசியம், வரலாறு, பண்பாடு சம்பந்தமான பதிவுகள் இணைக்கப்படலாம்.
தமிழர்களின் பண்பாடு, கலாச்சாரம், தேசியம், வரலாறு சம்பந்தமான அவசியமானதும், நம்பகத்தன்மை உள்ளதுமான தகவல்கள் மாத்திரம் இணைக்கப்படல் வேண்டும்.
1539 topics in this forum
-
ஒரு காலத்தில் தோப்புக்கரணம் போடுவது என்பது பள்ளிகளில் மிகச் சாதாரணமான விஷயம். தவறு செய்தாலோ, வீட்டுப்பாடம் எழுதி வரா விட்டாலோ ஆசிரியர்கள் மாணவர்களைத் தோப்புக்கரணம் போட வைப்பது வாடிக்கை. பரிட்சை சமயத்தில் பக்தி அதிகரித்து மாணவர்கள் அதிக மதிப்பெண் பெற தாங்களாகவே பிள்ளையார் முன் தோப்புக்கரணம் போடுவதுமுண்டு. ஆனால் இக்காலத்தில் தோப்புக்கரணம் போடுவதை அதிகமாக நாம் காண முடிவதில்லை. ஆனால் இந்த தோப்புக்கரணம் அமெரிக்காவில் ஆராய்ச்சிக்கு எடுத்துக் கொள்ளப்பட்டுள்ளது என்று சொன்னால் ஆச்சரியமாக இருக்கிறதல்லவா? லாஸ் ஏஞ்சல்ஸைச் சேர்ந்த மருத்துவர் எரிக் ராபின்ஸ் (Dr.Eric Robins) இந்த எளிய உடற்பயிற்சியால் மூளையின் செல்களும் நியூரான்களும் சக்தி பெறுகின்றன என்கிறார். அவர் தன்னிடம் வ…
-
- 3 replies
- 1.7k views
-
-
1. ஞானப்பால் உண்டது உ திருச்சிற்றம்பலம் திருஞானசம்பந்த சுவாமிகள் அருளிச் செய்த தேவாரத் திருப்பதிகங்கள் முதல் திருமுறை 1. திருப்பிரமபுரம் பண்: நட்டபாடை பதிக வரலாறு: சோழ நாட்டிலே, சீகாழியிலே, தவம்பெருகும் கவுணிய குலத்தில், சிவதீட்சை பெற்ற வேதியர்குல திலகராகிய சிவபாத இருதயருக்கும் பகவதியம்மையாருக்கும் வேதநெறி தழைத் தோங்க, மிகுசைவத் துறைவிளங்க, சித்திரைமாதத்துத் திரு வாதிரைத் திருநாளிலே திருமகனார் ஒருவர் தோன்றினார். இவருக்கு மூன்றாமாண்டு நடக்கும்பொழுது ஒருநாள் சிவபாத இருதயர் சீகாழிக் கோயிலுள் இருக்கும் பிரமதீர்த்தத்தில் நீராடச் சென்றார். குழந்தையும் அழுது கொண்டே உடன் சென்றது. சிவபாத இருதயர் உடன் வந்த சிறுவரைக் கு…
-
- 4 replies
- 1.9k views
-
-
புரட்சி கவிஞர் பாரதிதாசனின் "அழகின் சிரிப்பு" 1. அழகு காலையிளம் பரிதியிலே அவளைக் கண்டேன்! கடற்பரப்பில், ஒளிப்புனலில் கண்டேன்! அந்தச் சோலையிலே, மலர்களிலே, தளிர்கள் தம்மில், தொட்ட இடம் எலாம் கண்ணில் தட்டுப்பட்டாள்! மாலையிலே மேற்றிசையில் இலகு கின்ற மாணிக்கச் சுடரிலவள் இருந்தாள் ஆலஞ் சாலையிலே கிளைதோறும் கிளியின் கூட்டந் தனில் அந்த 'அழகெ' ன்பாள் கவிதை தந்தாள். சிறுகுழந்தை விழியினிலே ஒளியாய் நின்றாள்; திருவிளக்கிற் சிரிக்கின்றாள், நாரெடுத்து நறுமலரைத் தொடுப்பாளின் விரல்வளைவில் நாடகத்தைச் செய்கின்றாள்; அடடே செந்தோட் புறத்தினிலே கலப்பையுடன் உழவன் செல்லும் புதுநடையில் பூரித்தாள்; விளைந்த நன்செய் நிறத்தினிலே என் விழியை நிறுத்தினாள்; என் நெஞ்சத்தில் குடிய…
-
- 0 replies
- 2.2k views
-
-
அழிந்து வரும் தமிழர் இசைக்கருவிகள் – எருதுகட்டு மேளம்/ஜிம்பளங்கு கொட்டு – சரவண பிரபு ராமமூர்த்தி எருதுகட்டு மேளம்/ஜிம்பளங்கு கொட்டு – தோற்கருவி அமைப்பு உருளை வடிவத்தில் இருக்கும் சிறிய இசைக்கருவி ஜிம்பளங்கு கொட்டு. பலா மரம், வேம்பு, வேங்கை அல்லது பூவரசு மரத்தைக் குடைந்து உடல் பகுதி செய்யப்படுகிறது. மதுரையில் இருந்து மரம் வாங்கி வந்து ஆசாரிகளிடம் தந்து குடைந்து கொள்கிறார்கள். இக்கருவியை இசைப்பவர்களே இதை மேற்கொண்டு செய்துகொள்கிறார்கள். பெரும்பாலும் எருமைக் கன்றின் தோலும் மறுபுறம் ஆட்டின் தோலும், சிலர் மாட்டுத் தோலும் பயன்படுத்தி தட்டும் முகங்களை செய்துக்கொள்கிறார்கள். பிரம்பு அல்லது மூங்கில் வளையங்களில் தோலை ஒட்டி அந்த வட்டவடிவமான த…
-
- 0 replies
- 2.8k views
-
-
அழிந்துப் போன பண்டைய தமிழரின் இசைக் கருவி தமிழர்களின் வழக்கொழிந்துப் போன பண்டைய இசைக் கருவிகளில் குட முழவமும் ஒன்றாகும். மிகப் பெரிய தமிழர் இசைக்கருவிகளில் ஒன்றான இது இன்று தமிழகத்தில் ஓரிரு இடங்களில் மட்டுமே எஞ்சியுள்ளது. திருவாரூர் தியாகராஜர் மற்றும் திருத்துறைப்பூண்டி மருந்தீஸ்வரர் கோவில்களில் மட்டுமே இப்போது குட முழவத்தைக் காண முடியும்.வார்ப்பு வெண்கலத்தில் உருவாக்கப்பட்ட உயரமானக் குடத்தில் ஐந்து வாய்கள் இருக்கும்.வாய்கள் அனைத்தும் மான் தோல்களால் மூடப்பட்டிருக்கும்.ஒவ்வொரு வாயிலிருந்து வெவ்வேறு விதமான பண்(இசை) எழுப்பப்படும்.குட முழவம் போலவே கேராளவிலும் பழமையான இசைக் கருவி பயன்படுத்தப்படுகின்றது. ஆனால் அதில் ஒரே ஒரு வாய் மட்டுமே இருக்கும்.அதை ம…
-
- 1 reply
- 2.1k views
-
-
அழிந்துவரும் தமிழர் பண்பாட்டுப் பொருள்கள் : அரிக்கன் விளக்கு காற்றால் சுடர் அணைந்துவிடாதபடி கண்ணாடிக் கூண்டு பொருத்தப்பட்ட கைப்பிடியுடன் கூடிய மண்ணெண்ணெய் விளக்கு. அம்மி குழவி கொண்டு மிளகாய், தேங்காய் முதலியவற்றைச் சமையலுக்கு ஏற்றவாறு அரைக்கப் பயன்படுத்தும் நீள்சதுரக் கல். அண்டா அகன்ற வாயும் அதே அளவிலான அடிப்பாகமும் உடைய பெரிய பாத்திரம். அடுக்குப்பானை ஒன்றின் மேல் ஒன்றாக (கீழே பெரியதிலிருந்து மேலே சிறியது வரை) வைக்கப்பட்ட பானைகளின் தொகுப்பு. இதில் உப்பு, புளி, தானியங்கள் போன்றவற்றை சேமித்து வைத்திருப்பர். அடிகுழாய் கைப்பிடியைப் பிடித்து அடிப்பதன் மூலம் நிலத்தின் அடியிலிருந்து நீரை வெளியே கொண்டுவரப் பயன்படும் குழாய். ஆட்டுக்கல் வட்ட அல்லது சதுர வடிவ…
-
- 2 replies
- 5.3k views
-
-
-முடிந்தால் எல்லோரும் கீழுள்ள முகவரிக்கு எமது உறவுகளுக்கு நடந்துகொண்டிருக்கும் அனியாயத்தையும் ஆதங்கத்தை தெரியப்படுத்தவும். ---------------------------------------------------------------------- Media Report - Humanitarian Disaster in NE Sri Lanka [ Editor-TamilOosai ][ 28.12.2004] Dear Sir/Madam RE: Humanitarian Disaster in Sri Lanka As you are all already aware there are more than 13000 people have been killed in Sri Lanka as of 27th December (20:43 GMT) alone and this figure is expected to rise. While the international media reports the numbers it focuses on the plight of Tourists and the dead in the South alone. However the largest …
-
- 7 replies
- 2k views
-
-
பிரபாகரன் என்ற பெயர் தமிழர்களின் உதடுகளில் உச்சரிக்கப்பட்டு, உள்ளங்களில் சிம்மாசனமிட்டு அமர்ந்திருக்கிறது. 1954 நவம்பர் 26-ல் வல்வெட்டியில் வேலுப்பிள்ளை-பார்வதிக்கு மகனாக பிறந்த பிரபா கரனுக்கு இந்த ஆண்டில் 60-வது பிறந்தநாள்... அதாவது, மணிவிழா. ஈழத்திலும் தமிழகத்திலும் உலகெங்கும் தமிழர்கள் வாழும் பகுதிகளிலும் நவம்பர் 26-ல் பிறந்தநாள் விழாவும், மறுநாள் (நவ.27) மாவீரர் நாளும் கடைப்பிடிக்கப்பட்டன. புலம்பெயர் தமிழர்கள் வாழும் நோர்வேயில், லண்டனில், ஐரோப்பிய ஒன்றியங்களில் வீர விளையாட்டு, ஆடல், பாடல் என களைகட்டியது திருவிழா. ஈழத்தைப் பொறுத்தவரை 2009 முள்ளிவாய்க்கால் கொடூரத்திற்குப் பிறகு இன்னும் முழுமையான அமைதி திரும்பவில்லை. உரிமைகளும் கிடைக்கவில்லை. பிரபாகரன் எங்கே இருக்க…
-
- 0 replies
- 1.4k views
-
-
அவள் பெயர் கண்ணகி... இன்று சித்திரை பௌர்ணமி. கண்ணகி நீதிக்காகப் போராடி இறுதியில் கணவனைக் காண விண்ணுலகம் சென்ற நாள். ஆம்..... ஏறக்குறைய ஈராயிரம் ஆண்டுகளுக்கு முன்னர் தலைவிரிக் கோலத்துடன், ஒரு பக்கம் அறுக்கப்பட்ட மார்பகத்துடன் குருதி கொட்ட விண்ணுலகம் புகுந்தாள் தன் கணவனுடன் சேர. ஆயிரம் பேர் கூடியிருக்கின்ற அவையில் ஒரு அபலைப் பெண் மட்டும் வந்து நின்று மாட்சிமை பொருந்திய மன்னனை எதிர்த்து கேள்வி கேட்டால் என்ன நடக்கும்? சற்று சிந்தித்துப் பாருங்கள்... டெல்லிப் பேருந்தில் சீரழிக்கப்பட்ட நிர்பயாவின் நிலைதான் அவளுக்கும் நேர்ந்திருக்கும். தமிழகத்தின் முதல் பெண் புரட்சிக்காரி கண்ணகிதான் என்று பட்டிமன்றப் பேச்சுகளிலும் வாய்ப்பந்தல் இடுவர். உண்மையில் நடந்தத…
-
- 1 reply
- 1.9k views
-
-
அவிசொரிந் தாயிரம் வேட்டலின் ஒன்றன் உயிர்செகுத் துண்ணாமை நன்று. -குறள் 259 புலான்மறுத்தல் ஆயிரம் வேள்விகளை செய்து கிடைக்கும் புண்ணியத்தை விட உயிரை கொன்று புலால் சாப்பிடாதது நல்ல புண்ணிய தரும். தெய்வப் புலவர் திருவள்ளுவர் தந்தருளிய திருக்குறளில் 1330 குறட்பாவில் மிக அதிகமானமுறை பலப்பல தமிழ் அறிஞர்களால் தவறக பயன்படுத்தும் குறள், மேலுள்ளதே. நாம் இக்குறளின் பல்வேறு உரைகளைப் பார்ப்போம். புலான் மறுத்தல் அதிகாரத்தில் இது வந்துள்ளது. ஆயிரம் வேள்விகளை செய்து கிடைக்கும் புண்ணியத்தை விட உயிரை கொன்று புலால் சாப்பிடாதது நல்ல புண்ணிய தரும். இங்கு புலால் மறுத்தலை வலியுறுத்துகிறார். வள்ளுவப் பெருந்தகை, தான் ஏற்றுள்ள அதிகாரத்தின் கருப்பொருளை- சி…
-
- 1 reply
- 2.3k views
-
-
ஆகமம் ஆர் வீட்டு அப்பன் சொத்து? கோயில்களைக் கட்டுவது படிமைகளை நிறுவுவது வழிபாடு நடத்துவது இவை அனைத்தும் ஆகமங்களின் படி இருக்க வேண்டும் என்று உச்சநீதிமன்றம் தீர்ப்பு வழங்கியிருக்கிறது. ரஞ்சன் கோகாய் என் வி இரமணா என்ற இரு நீதியரசர்கள் இந்தத் தீர்ப்பை வழங்கியிருக் கிறார்கள். இந்த இரு மேதைகளும் ஆகம விதிகளை எந்தச் சட்டக் கல்லூரியில் படித்தார்கள் என்று தெரியவில்லை. தமிழர்களை இழிவு படுத்தும் தீர்ப்பு இது. Agamas ie .treatises pertaining to matters like Construction of temples Installatio…
-
- 0 replies
- 2.3k views
-
-
-
http://www.youtube.com/watch?v=sLmoGB69i3Y
-
- 2 replies
- 1.1k views
-
-
ஆங்கிலயேர் கற்ற பெருந்தோட்ட தமிழ் ஆங்கிலேயர் எப்போ எங்கு தமிழ் கற்றார்கள் என்கிறீர்களா? இற்றைக்கு நூறு வருடங்களுக்கு முன்பு கற்றிருக்கிறார்கள். இது குறித்த சுவாரஸ்யமான தகவலை பத்தனை கல்வியியற் கல்லூரியில் இடம்பெற்ற மலைச்சாரல் கண்காட்சி நிகழ்வில் அறியக்கூடியதாக இருந்தது. நூறு வருடங்களுக்கு முன்பு பல தேயிலை தோட்டங்களின் உரிமையாளர்களாகவும் தோட்டத்துரைமார்களாகவும் இருந்தவர்கள் பறங்கியர்களே.இது நாம் அறிந்த விடயம். அக்காலகட்டத்தில் தேயிலைத் தோட்டங்களில் தொழிலாளர்களை வழிநடத்தவும் வேலைத்தலம் தொடர்பான அறிவைப் பெற்றுக்கொள்ளவும் தமிழைக் கற்றுக்கொள்வதற்கு இவர்கள் மிகவும் சிரமப்பட்டனர். இவர்களின் சிரமத்தை அறிந்த டபிள்யூ.பி.ஜி. வெல்ஸ் என்பவர் 1915 ஆம் ஆண்டு இவர்களுக்…
-
- 0 replies
- 2.4k views
-
-
ஆங்கிலேயர்களே பார்த்து நடுங்கிய தமிழச்சி வேலு நாச்சியாரின் மறைக்க பட்ட வரலாறு தமிழ் பெண் என்பதால் தோல்வியை மறைக்க ஆங்கிலயேர் செய்த சதி, மறைக்கப்பட்ட வரலாறு
-
- 0 replies
- 361 views
-
-
தமிழர்களின் அழிக்கப்பட்ட நெறி #4 முதல் மூன்று கட்டுரைகளைப் படிக்க, கீழுள்ள இணைப்பிற்குச் செல்லவும். http://www.yarl.com/forum3/index.php?showtopic=130413 முருகன் எப்படி ஆசீவக நெறியின் தெய்வம்? – பகுதி #1 பல்லாயிரம் ஆண்டுகளாக இருக்கும் ஆசீவக நெறியின் அடையாளங்கள் அழிக்கப்பட்டாலும் மாற்றப்பட்டாலும் அதை முழுவதுமாக செய்ய முடியாது. அதேபோல் தான் ஆசீவக சித்தர்களின் அடையாளங்களும். முருகன் எப்படி தெய்வ நிலையை அடைந்த ஒரு ஆசீவக சித்தன் எனப் பார்க்கப் போகிறோம். விநாயகரை முழுமுதற்கடவுள், வினை(கட்டம்) தீர்த்தான் என நாம் அழைக்கிறோம். அதனால் தான், எந்தப் பெரிய கோயில்களுக்கும் சென்றால் முதலில் விநாயகரை வழிபட்டுவிட்டு தான் பின் மற்ற தெய்வங்களை வணங்குவது வழக்கமாக இருந்து வருகிறது.…
-
- 9 replies
- 10k views
-
-
என் இனிய தமிழ் மக்களுக்கு தமிழ்வேந்தனின் அன்பான வணக்கங்கள், 1500 ஆண்டிற்கு முன் தமிழர்களின் அழிக்கப்பட்ட நெறியான ஆசீவக நெறியைப்(அமணம்) பற்றிய ஆய்வுக் கட்டுரைகளை உங்களிடம் பகிர்ந்துகொள்ளலாம் என உள்ளேன். இங்கு நான் பகிர்ந்துகொள்ளப்படும் கட்டுரைகள், ஆசீவக நெறியைப் பற்றி பல்வேறு இணையதளங்களில் பல்வேறு இடங்களில் தேடிக் கிடைத்தத் தரவுகளை வைத்து என் ஆய்வுகளின் தரவுகளையும் சேர்த்து எல்லோருக்கும் புரியும் விதம் ஒரு கோர்வையாகத் தொகுக்கப்பட்டது. இதன் மூலம், நம் உண்மையான வரலாறு என் மக்களுக்கு எளிதாகச் சென்றடையும் என்ற நோக்கத்துடனும் நம்பிக்கையுடன் தொடங்குகிறேன். நன்றி. கட்டுரைகளை படிக்கத் தொடங்கும் முன்பு, மக்களிடம் இதுவரை பிறரால் பரப்பப்பட்ட தவறான கண்ணோட்டதிற்காக ஒரு தெளி…
-
-
- 15 replies
- 33.8k views
- 1 follower
-
-
http://sinnakuddy1.blogspot.com/2007/07/83-video.html
-
- 14 replies
- 3.9k views
-
-
[size=4]ஆடிப்பிறப்புக்கு நாளை விடுதலை ஆனந்தம் ஆனந்தம் தோழர்களே கூடிப் பனங்கட்டி கூழும் குடிக்கலாம் கொழுக்கட்டை தின்னலாம் தோழர்களே[/size] [size=2][size=4]இன்று திங்கட்கிழமை ஆடிப்பிறப்பு. சோமசுந்தரப்புலவர் கூழைப்பற்றி பாடினாலும் பாடினார். எங்கள் மனமும் கூழுக்காக அலையத் தொடங்கியது. முன்னரெல்லாம் ஆடி பிறந்துவிட்டால் போதும் ஊரிலே கொழுக்கட்டைக்கும் கூழுக்கும் குறைவே இருக்காது.[/size][/size] [size=2][size=4]அந்தக் கூழின் சுவை கடந்த சில நாள்களாகவே எங்களையும் ஏதோ செய்தது. நாங்கள் என்றால் நானும் அரவிந்தனும் தென்இலங்கையில் அறைக்குள் இருந்து படித்துக் கொண்டிருக்கும் வட இலங்கைவாசிகள்.[/size][/size] [size=2][size=4]"கூழை கடையிலே காசுகொடுத்து வாங்க முடிய…
-
- 2 replies
- 1.6k views
-
-
வணக்கம் கள உறவுகளே , வாசகர்களே , " ஆண்டவரின் எச்சங்களை " யாழ்ப்பாணக் கோட்டையின் வரலாற்றுடன் முடிவுக்குக் கொண்டு வருகின்றேன் . இந்தக் குறுந்தொடருக்கு கருத்துக்கள் வழங்கிய அனைத்து உறவுகளுக்கு எனது மனங்கனிந்த நன்றிகள் . ******************************************************************************************************************************* யாழ்ப்பாணக் கோட்டை . யாழ்ப்பாணத்தை ஐரோப்பியக் குடியேற்றவாத ஆட்சியாளர்கள் ஆண்ட காலத்தில் கட்டப்பட்ட கோட்டையாகும். முதலில் போத்துக்கீசரால் அமைக்கப்பட்ட இக் கோட்டை பின்னர் ஒல்லாந்தரால் இடித்து மீளவும் கட்டப்பட்டது. 1980களின் இறுதிக்காலம் வரை நல்ல நிலையில் இருந்த இக் கோட்டை பின்னர் இடம்பெற்ற உள்…
-
- 2 replies
- 1.4k views
-
-
" ஆண்டவர் " என்ற சொல் ஆன்மீகரீதியில் புனிதமானது . மாறாக அதே சொல் எமது இனத்தைப் பொறுத்தவரையில் பல ரணங்களையும் , ஆறாவடுக்களையும் விட்டுச் சென்றிருக்கின்றது . ஒரு தேசிய இனத்திற்கு அதன் விடுதலை வேட்கை எவ்வளவு அத்தியாவசியமானதோ அதேயளவு அந்த இனத்தின் பாரம்பரிய வரலாறும் அத்தியாவசியமாகின்றது . வரலாறுகள் தெரியாமல் நுனிப்புல் மேய்வது போல் குறுகியகண்ணோட்டத்தில் வரலாற்றைப் பார்த்து ஓர் இனம் அதற்கான விடுதலையை முன்னெடுக்குமனானால் , அது தற்கொலைக்கு ஒப்பானது என்பது என்னது தாழ்மையான அபிப்பிராயமாகும் . எம்மை ஆண்டவர்கள் ஆண்டது போதாதென்று " நீங்கள் யாவருமே எங்கள் அடிமைகள் " என்பதைத் தினமும் சொல்லாமல் சொல்கின்ற மௌனசாட்சிகளாகத் தங்கள் எச்சங்களை எமது பாரம்பரிய பூமியிலே விட்டு விட்டுச் சென்றுள்ள…
-
- 9 replies
- 1.7k views
-
-
அரிப்புக் கோட்டை ( அல்லிராணிக் கோட்டை ) . அரிப்புக் கோட்டை அல்லது அல்லிராணிக் கோட்டை , மன்னார்த் தீவுக்கு 10 மைல்கள் தெற்கேயுள்ள " அரிப்பு " என்னும் இடத்தில் அமைந்துள்ள ஒரு கோட்டை . இதன் அமைவிடம் வரண்ட தரிசு நிலப்பகுதியாக அமைந்துள்ளது . இந்தக் கோட்டை முதன் முதலில் போத்துக்கீசரால் கட்டப்பட்டது . 1658ல் ஒல்லாந்தர் இதனைக் கைப்பற்றித் இதைத் திருத்தி அமைத்தனர். அரிப்புக் கோட்டை ஏறத்தாழச் சதுர வடிவமானது. இதன் பக்கங்கள் வடக்கு, கிழக்கு, தெற்கு, மேற்கு ஆகிய திசைகளை நேராக நோக்கியிருக்கும்படி அமைந்துள்ளன. கோட்டையின் வடமேற்கு மூலையிலும், தென்கிழக்கு மூலையிலும் இரண்டு கொத்தளங்கள் அமைக்கப்பட்டுள்ளன. இதன் உட்புறம் கோட்டையின் வடக்குச் சுவரையும்,…
-
- 1 reply
- 897 views
-
-
ஆனையிறவுக் கோட்டை . 1776 ஆம் ஆண்டில் ஒல்லாந்தர் இக் கோட்டையை நிறுவினர். இக் கோட்டை அமைக்கப்பட்ட காலத்தில் ஆனையிறவுக்கும் தலை நிலத்துக்கும் இடையே ஆழம் குறைவான நீரேரி இருந்தது. கோடை காலத்தில் மட்டும் நீர் வற்றிக் குறுகிய நிலத்தொடர்பு இருக்கும் இப்பகுதியூடாக முறையான சாலைகள் எதுவும் இருக்கவில்லை. வற்றுக் காலத்தில் ஏற்றுமதிக்காக வன்னிப் பகுதியில் இருந்து கொண்டுவரப்படும் யானைகளை இவ்வழியூடாகவே ஊர்காவற்றுறைக்குக் கொண்டுவந்தனர். இது தவிர பிற வணிகப் பொருட்களும் இவ்விடத்தினூடாக வன்னிக்கும், யாழ் குடாநாட்டுக்கும் இடையே எடுத்துச் செல்லப்பட்டன. இவ்வாறான வணிகக் கட்டுப்பாட்டுத் தேவைகளுக்காகவே ஒல்லாந்தர் ஒரு கோட்டையை ஆனையிறவில் நிறுவினர். இக் கோட்டையின் தள அமைப்பு…
-
- 2 replies
- 1.9k views
-
-
ஊர்காவற்றுறைக் கோட்டை வட இலங்கையில் ஐரோப்பியரால் அமைக்கப்பட்ட கோட்டைகளில் ஊர்காவற்றுறை ஹீ மென்கில் கோட்டை வரலாற்றில் முக்கியம் பெறுகிறது. இக்கோட்டையானது ஊர்காவற்றுறை – காரைநகரினை பிரிக்கும் ஆழமான கடலின் மத்தியில் போர்த்துக்கீசரினால் கட்டப்பட்டது. யாழ்ப்பாணத்தை ஒல்லாந்தர் கைப்பற்றி ஆட்சி செய்த போது ஊர்காவற்றுறை கோட்டையினை மாற்றியமைத்து தற்போதைய வடிவத்தினையும் பெயரையும் பெற்றது என்றும் கூறப்படுகின்றது. இக்கோட்டையானது ஒல்லாந்தர் காலத்தில் நாட்டைப் பாதுகாக்கும் நோக்குடன் அமைக்கப்பட்டதாக கூறப்பட்டாலும் இது முதன்முதலில் அமிநால் டெமென்சிஸ் என்ற போர்த்துக்கேய தளபதியால் 17 ம் நூற்றாண்டில் கட்டப்பட்டதிற்கு ஆதாரங்கள் உள்ளன. இக்கோட்டையில் இருந்து இந்த…
-
- 0 replies
- 887 views
-
-
காங்கேசந்துறைக் கோட்டை . ஈழத்தமிழர்களின் வரலாற்று ஆதாரங்கள் பலவிதங்களால் இல்லது போயின 1. தமிழ் பௌத்தர்கள இருந்ததற்கான வரலாறு சிங்களவர் தமது என உரிமை கோரி அபகரித்துகொண்டனர் 2. இந்து/சைவ சமயம் சார் ஆதாரங்களான புராதன ஆலயங்கள் போர்த்துகேயர், ஒல்லாந்தரால அழிக்கப்பட்டு அம்மூலப்பொருட்கள் கோட்டைகள் கட்ட பயன் பட்டன. அதற்கு இன்றும் உள்ள ஆதாரமாக திருகோணமலை கோட்டைசுவரில் உள்ள முன்னே குளக்கோட்டன் மூட்டு திருப்பணியை எனும் கற்வெட்டு. 3. போர் சூழலால் அழிக்கப்பட்டவை. 4. நாமெ அழித்தவை, அழித்துகொண்டிருப்பவை இதில நாமே அழித்தவை /அழித்துகொண்டிருப்பவை தான் வருத்ததிற்குரியதும் எமது இழி நிலையுமாகும். எம்மிடம் பல நூறு ஆண்டுகளுக்கு முற்பட்ட கட்டடங்கள் தற்போது இல்ல…
-
- 1 reply
- 1.1k views
-