சமூகவலை உலகம்
முகநூல் | இன்ஸ்ராகிராம் | டுவிட்டர் | வாட்ஸப்
சமூகவலை உலகம் பகுதியில் முகநூல், இன்ஸ்ராகிராம், டுவிட்டர், வாட்ஸப் போன்ற சமூகவலைத் தளங்களில் இருந்து பதிவுகள் இணைக்கப்படலாம். எனினும் அளவுக்கதிகமாக பதிவுகள் இணைப்பதையும், பல தலைப்புக்கள் திறப்பதையும் தவிர்க்கவேண்டும்.
இப்பகுதியில் சமூகவலைத் தளங்களில் இருந்து தரமான பயனுள்ள பதிவுகள், பொழுதுபோக்கு சம்பந்தமான பதிவுகள் இணைக்கப்படலாம்.
ரசிக்கத்தக்க படங்கள், நாகரீகமான துணுக்குகள், மகிழ்வூட்டும் நகைச்சுவை விடயங்கள், கருத்துப்படங்கள் போன்றவற்றைப் இணைப்பதும் பகிர்வதும் அனுமதிக்கப்படுகின்றது.
இவ்வாறு இணைக்கப்படுபவை கருத்துக்கள விதிமுறைகள் பிரிவு 7 இலுள்ள விதிமுறைகளைக் கவனத்தில் கொண்டு பதிவுகள் இணைக்கப்படல் வேண்டும்.
முக்கியமாக சமூகவலைத் தளங்களை மட்டும் ஆதாரமாகக் கொண்டு செய்திகள், அரசியல் அலசல்கள் இணைப்பது தவிர்க்கப்படல் வேண்டும். எனினும் நம்பகத்தன்மை வாய்ந்தவர்களில் முகநூல் குழுமம், பக்கம், சுவர் பகுதிகளில் இருந்து இணைக்கப்படும் காத்திரமான பதிவுகள் அனுமதிக்கப்படும்.
1006 topics in this forum
-
ஜேர்மனியில் இருந்து நவீன நாஸிக்களான வலதுசாரிகளால் துரத்தப்படுவார்களா தமிழர்கள்..? இது இன்று தேர்தல் நடக்கப்போகும் ஜேர்மனுக்கு மட்டுமல்ல வாற வருடம் தேர்தல் நடக்கப்போகும் பிரான்ஸ் மற்றும் அடுத்து தேர்தலைகளை எதிர்கொள்ளவிருக்கும் பெரும்பாலானா ஜரோப்பிய நாடுகளுக்கும் பொருந்தும்.. அப்படி ஒரு நிலமை வந்தால் உலகமெங்கும் அலைந்த யூதர்கள்போல் புலம்பெயர்ந்த தமிழர்கள் அங்க இங்க என்று மறுபடியும் இன்னொரு புது நாட்டுக்கு அலைவதை விட்டு உடனும் நேராக தாய்மண்ணுக்கு வந்து புல்லுசெருக்கி வீடுவாசலை துப்புரவுசெய்து புள்ளகுட்டி பெத்து தமிழர்களின் எண்ணிக்கையை தாயகத்தில் அதிகரித்து உங்கள் பிரதேசங்களை கட்டி எழுப்ப உதவுவது நல்லது.. செத்தாலும் தன் மண்ணில் சாவதே சுதந்திரம்.. சரி இப்போ ஜேர்மன் நிலமையை பார…
-
-
- 20 replies
- 1.1k views
-
-
சிகரெட்டை விட்ட இரண்டு வருடங்களுக்கு பிறகு இதயத்தை பலமாக தாக்கியது. அடைப்புகள் ஏற்பட்டன. இரண்டாயிரத்தில் பைபாஸ் செய்துக்கொண்டேன். அப்போதும் சிகரெட் பிடிப்பவனாக இருந்திருந்தால் மரணம் அன்றே குறிக்கப்பட்டிருக்கும். சிகரெட் நிறுத்தி ஆரோக்கியத்தை அதிகப்படுத்தியதால் அந்த ஆபரேஷனை சமாளிக்க முடிந்தது. பிறகு பத்து வருடங்கள் எந்தவித இம்சையும் இல்லாமல் அழகாக வாழ்க்கை ஓடியது. 2011 இல் நீரிழிவு காரணமாக ரத்தக்கொதிப்பின் காரணமாக மறுபடியும் அடைப்பு ஏற்பட, இரண்டாம் முறை பைபாஸ் செய்து கொண்டேன். சுவாச பயிற்சி செய்திருந்ததால், மூச்சு பற்றிய ஞானம் இருந்ததால், தினந்தோறும் காலையும் மாலையும் வேகமாக நடந்ததால், மெல்லிய உடற்பயிற்சிகள் செய்ததால் இரெண்டாவது பைபாஸையும் தாண்டிவர முடிந்தது. ஆனால் இரண்டாய…
-
-
- 29 replies
- 1.7k views
- 1 follower
-
-
-
ரகு தாத்தா - சுப.சோமசுந்தரம் 1981 ஆம் ஆண்டு வெளிவந்த 'இன்று போய் நாளை வா' திரைப்படத்தில், "ஏக் காங்வ் மே ஏக் கிஸான் ரஹ்தா தா" என்ற இந்தி வாக்கியத்தைப் படிக்கும் தமிழ் மாணவன் "ரஹ்தா தா" என்பதை "ரகு தாத்தா" என மீண்டும் மீண்டும் சொல்வதை நகைச்சுவையாகப் படம் ஆக்கியிருந்தார்கள். இன்று வரை அந்த நகைச்சுவை தமிழ்நாட்டு மக்கள் மனதில் பதிந்திருப்பது இம்மண்ணில் அவ்வப்போது ஒன்றிய அரசின் இந்தித் திணிப்புக்கு எதிரான சவுக்கடிக்கான ஒரு குறியீடு என்று கூறுவது மிகையாகாது. எனவே 1960களில் இந்தி எதிர்ப்புப் போராட்டங்கள் தமிழ்நாட்டில் முழுவீச்சில் நடைபெற்ற பின்னணியில் பின்னப்பட்ட கதையை வைத்து இப்போது எடுக்கப்பட்ட ஒரு படத்திற்கு 'ரகு தாத்தா' எனப் …
-
-
- 9 replies
- 808 views
- 1 follower
-
-
-
- 0 replies
- 364 views
-
-
நேற்று வெளியாகியுள்ள புகைப்படம் ஒன்று தான், உலகில் மிகவும் பரபரப்பாக பேசப்பட்டு வருகிறது. சில தினங்களுக்கு முன்னர் தாய்லாந்து நாட்டில் நடந்த தேசிய அழகிப் போட்டியில் 17 வயதான , மின்ட் என்னும் பெண் வெற்றிபெற்று அழகு ராணியாக முடிசூடிக்கொண்டார். அவர் நிகழ்ச்சி முடிந்த பின்னர் அப்படியே சென்று, குப்பை தொட்டிகளை கழுவி சுத்தம் செய்துகொண்டு இருக்கும் தனது அம்மாவிடம் சென்று ஆசிர்வாதம் வாங்கியுள்ளார். குறித்த புகைப்படம் வெளியாகி , ஆசிய நாட்டவர்களை மட்டும் அல்ல, பல மேற்குலக மக்களையும் உணர்ச்சியில் ஆழ்த்தியுள்ளது.அழகியின் அம்மா பல வருடங்களாக குப்பை தொட்டிகளை கழுவி. அதில் இருந்து கிடைக்கும் பணத்தில் தான் தனது மகளை வளர்த்து வந்துள்ளார். கடும் கஷ்டப்பட்டு தன்னை வளர்த்து ஆளாக்கியமைக்காகவே…
-
- 0 replies
- 737 views
-
-
சுயம் இழந்த சரிதம்… “ இதோ என்னை ஒரு குப்பைக்காரன் தூக்கி தன் குப்பை அள்ளும் வண்டிலுக்குள் எறிகிறான் , குப்பை வண்டிலுக்குள் துர்நாத்தம் சகிக்க முடியவில்லை , சென்ற வருடம் வரை என்னை பாவித்துவிட்டு இப்பொழுது நரை கூன் விழுந்த கிழடுகளைப் தள்ளிவைத்தது போல் என்னையும் ஒதுக்கி விட்டார்கள். என் உடம்பெல்லாம் ஓட்டை விழுந்து ரெண்டு கம்பியும் உடைந்து விட்டது , வாங்கிய புதிதில் படுக்கும் போதும் தன்னுடனே வைத்திருந்த சின்னவள் கூட இப்பொழுது என்னால் பயனில்லை எண்டு தூக்கிப் போட்டு விட்டாள் ….. “ எண்டு குடையின் சுயசரிதைக்கு எடுத்த marks என்னையும் O/L தமிழ் results ஐயும் காப்பாத்திச்சுது. படிக்கேக்க பிடிக்காத பத்தில குடையும் ஒண்டு, ஆனாலும் அது என்னைக் கைவிடேல்லை. “ கொண்டு போன கு…
-
- 0 replies
- 787 views
-
-
மருந்துச் செலவுக்கு வழியில்லாமல் தற்கொலை பண்ணுகிறவர்களின் அமெரிக்கா ஒரு பரிமாற்ற கல்வித்திட்டத்தின் பகுதியாக வந்திருந்த சுமார் முப்பது அமெரிக்க மாணவர்களைப் பார்த்தேன். அவர்களுக்கு வயது 25க்குள் தான் இருக்கும். பாதி பேர்களுக்கு மேல் ஆண்களும் பெண்களும் கிரைண்டர் சைஸுக்கு இருந்தார்கள். அப்போது நான் அண்மையில் பார்த்த ஒரு ஆவணப்படத்தில் இருந்து சில புள்ளிவிபரங்கள் நினைவுக்கு வந்தன. அமெரிக்க மக்கள் தொகையில் 11% நீரிழிவு நோயாளிகள். 5இல் ஒருவர் தனக்கு நீரிழிவு இருந்தும் அதை அறியாமல் இருக்கிறார். அமெரிக்க மக்கள் தொகையில் 48.9% பேர் மிக அதிகமான உடல் (obesity) எடை கொண்டவர்கள். இதற்கு இருபதாம் நூற்றாண்டின் பிற்பகுதியில் - ஐம்பது, அறுபதுகளுக்குப் பிறகு - அ…
-
- 5 replies
- 1.1k views
- 1 follower
-
-
இந்தியாவில் கூர்மையடைந்து வரும் இந்து முஸ்லிம் முரண்பாடுகளிலிருந்து இதை பார்க்கவும் சில வருடங்களுக்கு முன் அவரை முதன் முதலில் சந்தித்தேன். அவர் பெயர் அப்பாஸ் அஹமத் சுமார் அறுபது வயதிருக்கும். பழைய நடிகர் பாலாஜி போல் நல்ல பருமனான உடல். நல்ல நிறம். சிரித்த முகம், மணக்க மணக்க ஏதோ செண்ட் போட்டிருந்தார். வெள்ளை கோடு போட்ட கைலியும் ஜிப்பா போல ஒரே ஒரு பட்டன் வைத்த ஷர்ட்டும் அணிந்திருந்தார். சென்னையின் புறநகரில் நிலம் ஒன்று வாங்கப் போகதாகவும் அதுக்கு லீகல் ஒப்பினியன் வேண்டும் என்றும் சொன்னார். சில டாக்குமெண்டுகளை உடன் எடுத்து வந்திருந்தார் அதுக்கென்ன சார். பார்த்து சொல்கிறேன் என்றேன். என்னை எப்படி தெரியும் என்று கேட்டேன். அவர் மகளின்…
-
- 0 replies
- 865 views
-
-
👆 Thank God, I have not been so ruthless as the guy above in dealing with relatives. I seem to be fair enough 👇
-
-
- 2 replies
- 449 views
- 1 follower
-
-
மீள்பகிர்வு.... உங்கள் முகநூலில் இதைப் பகிர்ந்து விடுங்கள்...! அல்லது இதனை பிரதியெடுத்து பதிவு செய்யுங்கள்...! தேசமாக சிந்தித்தல் என்பது ஒரு வாழ்க்கை முறை கிளிநொச்சி கோரக்கன்கட்டு பகுதியில் வசிக்கும் இருகால்களையும் யுத்தத்தில் இழந்த மாற்று திறனாளி ஒருவரால் உற்பத்தி செய்யப்படும் பாடசாலை புத்தக பைகளுக்கு சந்தைவாய்ப்பு வழங்கி ஆதரவு கொடுங்கள் வெளிநாடுகளில் இருக்கும் எமது உறவுகள் பாடசாலை மாணவர்களுக்கு நன்கொடையாக பாடசாலை புத்தக பைகளை வழங்குபவர்கள் மொத்தமாக ஓடர் செய்து இவரிடம் பெற்றுகொள்ளமுடியும்.. இவரின் திறமைக்கு உங்களால் இயன்ற ஊக்குவிப்பை வழங்குங்கள். இராசேந்திரம் அவருடைய தொலைபேசி இலக்கம் 0775288768 பகிர்ந்து கொள்ளுங்கள்.
-
- 1 reply
- 1.1k views
-
-
-
வெத்து இலை அம்மா செய்த மைசூர்ப்பாகை களவெடுத்து பள்ளிக்கூடம் கொண்டு போக ஒளிச்சு வைச்சதை எறும்பு காட்டிக் குடுக்க, அம்மா அடிக்கத் தடி தேடி ஆச்சீன்டை பொயிலைக் காம்பைக் கொண்டந்தா. அப்ப அடிக்கிறதுக்கு வசதியா கனக்க இருந்திச்சுது. ஏப்பைக் காம்பு, பூவரசந்தடீ, முருக்கஞ் செத்தல் , பொயிலைக்காம்பு எண்டு கன சாமாங்கள் வீட்டிலயோ வேலீலயோ ready made ஆ இருந்தது. இப்ப வீட்டை அடிக்க கடையில போய் பிரம்பை வாங்கி வைக்க பிள்ளைகள் எடுத்து உடைச்சுப் போடும். வழமையான கடைக்குப் போற வேலைக்கு extra வா சில நேரம் வெத்திலை வாங்கிற வேலை வரும். சைக்கிள் பழகின புதுசில அதை ஓடிறதுக்காகவே சைக்கிளில போக விட்டா வாங்கித்தாறன் எண்டு deal போட்டு , ஓம் எண்டா ஓடிப் போய் வாங்கிறது. மாமா வீட்டை வ…
-
- 4 replies
- 1.1k views
- 1 follower
-
-
இது, தெரிஞ்சா... MRI ஸ்கேன் அறைக்குள் நுழையவே மாட்டீ ங்க. கடந்த காலங்களில் மருத்துவத்துறையில் இன்று இருப்பதுப்போல நவீன கருவிகள் அன்று இல்லை. எனவே நோயாளியின் நோய்க்கான காரணத்தை கண்டறிவது ஒரு சவாலான காரியமாக இருந்து வந்தது. பின்னர் எக்ஸ் ரே, ஈசிஜி, எம்ஆர்ஐ போன்ற தொழில்நுட்ப கருவிகள் வந்த பின்னர் மருத்துவர்களுக்கு நோயாளிகளின் பிரச்சனையை கண்டறிவது மிகவும் எளிதாவிட்டது. அதிலும் எம்ஆர்ஐயின் வருகைக்கு பின்னர் நோய்களை துல்லியமாக கணித்து அதற்கு தகுந்த மருத்துவ நடைமுறைகளை எடுக்க மருத்துவர்களுக்கு பெரிதும் உதவியாக இருந்தது. எம்ஆர்ஐ ஸ்கேன் அறைக்குள் நுழையும் போது நம்முடைய அணிகலங்களை கழற்றுமாறு அங்குள்ளவர்கள் அறிவுறுத்துவார்கள். இது பலருக்கும் ஒருவித எரிச்சலை ஏற்படுத்தும். ஆனால் இதற்க…
-
-
- 4 replies
- 549 views
- 1 follower
-
-
-
- 0 replies
- 236 views
- 1 follower
-
-
கனவிலேம் நித்திரை ….. சாரத்தை இழுத்து தலையப்போத்த காலும், காலைப் போத்த காதும் குளிர்ந்திச்சுது. “அங்க பார் பக்கத்து வீட்டு அண்ணா இன்னும் நித்திரை கொள்ளாமல் இரவிரவாப் படிக்கிறான், நீ எழும்பாட்டி வாளியோட தண்ணியை ஊத்துவன்” எண்டு திட்டின படி அம்மா போனா. மழை பெய்யேக்க எழும்பீட்டு திருப்பி ஒருக்காப் ஐஞ்சு நிமிசம் படுக்கிறன் எண்டு படுக்கிற சுகம் இருக்குதே அது ……. . அப்ப மனிசியை சுழட்டேக்க ஒழங்கை வளிய நிண்டு மனிசியோட கதைக்கிற காலத்தில வந்து பத்து நிமிசத்திலயே மனிசி அவசரப்படும் “ யாரும் பாக்க முதல் வெளிக்கிடிறன் எண்டு” ஒரு ஐஞ்சு நிமிசம் எண்டு சொல்லிச்சொல்லி நிண்டு கதைக்கிறதும் அம்மாட்டை இதே dialog ஐ இன்னும் ஐஞ்சு நிமிசம் படுக்கிறன் எண்டு சொல்லி மழைக்குளிருக்க திருப்பித் …
-
- 1 reply
- 640 views
-
-
ஹர்த்தால் “ நாளை யாழ்குடா நாடு முழுவதும் ஹர்த்தால்”எண்டு முரசொலியில முன்பக்கம் வாசிச்சவுடன் எனக்குள் ஒரு குறுகுறுப்பு . ஏன் இந்த ஹர்த்தால் , ஹர்த்தால் எண்டால் என்ன , யார் இதை ஒழுங்கு படுத்தி இருக்கிறார்கள் , யாரை எல்லாம் ஹர்த்தால் செய்யச் சொல்லுறார்கள் எண்ட சிந்தனை ஒண்டும் இல்லை, ஆனாலும் எனக்குள் இருந்த வேற ஆர்வம் அம்மாவுக்கு தொற்ற முதல் நான் வெளிக்கிட்டன் . இண்டைக்காவது கொஞ்சம் இருந்து மெல்லச் சாப்பிடன் எண்டு வீட்டை சொன்னதை எல்லாம் கவனிக்காம , அவசரமா வெளிக்கிட்டன் ஹர்த்தாலை எப்பிடி முழுமையா அமுல் படுத்துவது எண்டு. நல்ல ஞாபகம் , நிசாகரன் லண்டனுக்கு படிக்கப் போய் அனுப்பின முதலாவது கடிதத்தில் “ மச்சான் இங்கேம் உங்க மாதிரித்தான் திடீரெண்டு holiday எண்டு அறிவிச்சா,…
-
- 1 reply
- 760 views
- 1 follower
-
-
நான் இதை முழுக்க முழுக்க தென்னகத்தை சேர்ந்த, நகரங்களில் வாழும் மத்திய, மேல் மத்திய வர்க்க வேலை செய்யும் ஆண்களை -குறிப்பாக 70-80களுக்கு முன்பு பிறந்தவர்கள், 80-90 களுக்குப் பிறகு பிறந்தவர்களை – வைத்தே சொல்கிறேன். நான் கல்லூரிகளில் வேலை செய்துள்ளதால் அங்கு அரசு ஊதியம் பெறுகிற கடந்த இரு பத்தாண்டில் வேலைக்கு வருகிறவர்களை ஐம்பது வயதுக்கு மேலானவர்கள் மற்றும் நாற்பதுகளுக்கு கீழிருக்கும் தனியார் சம்பளம் பெறுகிறவர்களுடைய உடல் மொழியை ஒரே சமயம் பார்த்து ஒப்பிடும் வாய்ப்பு கிடைத்தது. அதை வைத்தே இதை சொல்கிறேன். 60-70களின் தலைமுறையை சேர்ந்த ஆண்களிடம் ஒரு ஸ்டைல் உள்ளதாக எனக்கு எப்போதுமே தோன்றியதுண்டு. நான் இதை ஒரு மாணவனாக நாகர்கோயிலிலும் சென்னையிலும் படித்த காலத்திலும் கண்டிருக்கிறேன். …
-
- 0 replies
- 746 views
- 1 follower
-
-
Facebook இந்த உலகை எப்படி எல்லாம் மாற்றியிருக்கிறது? எளிய விளக்கம்
-
- 0 replies
- 458 views
- 1 follower
-
-
•எங்கு நல்ல புத்தகங்கள் எரிக்கப்படுகிறதோ அங்கு விரைவில் நல்ல மனிதர்களும் எரிக்கப்படுவார்கள் - சே அவர்கள் முதலில் யாழ் நூலகத்தை எரித்தார்கள். பின்னர் ஒன்றரை லட்சம் தமிழ் மக்களை எரித்தார்கள். ஆனால் வேடிக்கை என்னவெனில் எரித்தவர்கள் நல்லவர்கள் என்றும் அவர்களுடன் 5 வயது முதல் சேர்ந்து வாழக் கிடைத்தது தனது பாக்கியம் என்று ஒரு தமிழ் தலைவர் கூறுகிறார். அதைவிட வேடிக்கை என்னவெனில், ஏன் எமது நூலகத்தை எரித்தீர்கள் என்று கேட்ட தமிழ் இளைஞர்கள் பயங்கரவாதிகளாம். அவர்கள் அப்படி கேட்டது வன்முறையாம். அதை தன்னால் ஒருபோதும் ஆதரிக்க முடியாது என்று அந்த தலைவர் பெருமையுடன் பேட்டி தருகிறார். எப்படி முள்ளிவாய்க்கால் இனப்படுகொலைக்கு பிரபாகரனின் பய…
-
- 33 replies
- 4.6k views
- 1 follower
-
-
தமிழீழ விடுதலைப்புலிகள் அமைப்பின் ஆரம்பகால உறுப்பினர்களில் ஒருவரான கப்டன் வாசு அவர்கள் பற்றிய Para Ni Krishna Rajani அவர்களின் பதிவிற்கான Ruthira Jay அவர்களின் பின்னுட்டத்தை கீழே காணலாம். அனைத்துலக இராணுவ அரசியல் உதவிகளால்; புலிகள் இறுதிப்போரில் தோற்கடிக்கப்பட்டிருந்தாலும்'; சிங்கள இராணுவம் சம்பந்தப்பட்ட மூன்று கட்ட ஈழப்போர் களிலும்; அவற்றின் பெரும்பாலான சமர்களிலும் வென்று சிங்களத்தைப் புலிகள் மண்டியிடச்செய்திருந்தனர் என்பதை மறைத்து; புலிகள் கல்வியறிவற்ற வர்கள் என்று திருவாய்மலர்ந்த பீலா மார்சல் பொன்சேகா போன்றவர்கட்கு இது சமர்ப்பணம். // தமிழீழ விடுதலைப் புலிகள் இயக்கமே முற்று முழுதாக ஒரு கல்வியறிவு பெற்ற இராணுவமாகவே ஆரம்பம் முதல் பரிணமித்து இருந்த…
-
- 2 replies
- 970 views
-
-
கோடி ரூபாயில் யாழில் உருவாகப்பட்ட சொகுசு கப்பல்! வெள்ளோட்டம் குறிகட்டுவானில் | Luxury tourist Ship contact ship Sail lanka 0773874540 - Piradeep 0774023015 - U.Jenushan
-
-
- 12 replies
- 1.1k views
- 1 follower
-
-
நீண்ட வரிசையில் “அதிகாலை , சேவல் கூவியது , காகங்கள் கரைந்தன, இரவு இரை தேடச் சென்ற பெற்றோரைக் காணாமல் குஞ்சுகள் கத்தின, தூரத்தில் எங்கேயோ கோயில் மணி ஓசை கேட்டது, கடகம் நிறைய புடுங்கிய கத்தரிபிஞ்சுகளையும் , வெண்டைக் காய்களையும் தலையில் சுமந்த படி சின்னத்தம்பி சந்தைக்கு ஓட்டமும் நடையுமாக போய்க்கொண்டருந்தார் “ எண்டு தமிழ் பாடத்தை வாசிக்க மணி அடிச்சுது. பள்ளிக்கூடத்தில மிகச்சிறந்த சந்தோசம் எண்டால் , மணி அடிச்ச உடன பாய்ஞ்சு போய் முதலாவதா சைக்கிளை எடுத்துக் கொண்டு போறது தான். கொண்டு போய் விடேக்கயே டக்கெண்டு எடுக்கத் தக்கதாத்தான் விடிறது . மத்தியான வெய்யில், கடைசிப் பாடம் அதுகும் interval இல தண்ணி மட்டும் குடிச்சிட்டு இருக்கேக்க வகுப்பை விட சைக்கிள் park ஐத் தான் பாக்…
-
- 0 replies
- 569 views
-
-
ட்விட்டர் முதலீட்டாளர்கள் டெஸ்லா நிறுவனர் ஈலோன் மஸ்க் மீது வழக்கு: காரணம் என்ன? அனபெல் லியாங் வணிக செய்தியாளர் 27 மே 2022 பட மூலாதாரம்,GETTY IMAGES ஈலோன் மஸ்க் மீதும் ட்விட்டர் நிறுவனத்தின் மீது ட்விட்டர் முதலீட்டாளர்கள் வழக்கு தொடர்ந்துள்ளனர். 44 பில்லியன் டாலர் கொடுத்து ட்விட்டர் நிறுவனத்தை வாங்கும் ஈலோன் மஸ்க்கின் திட்டத்தை கையாண்டது தொடர்பாக இந்த வழக்கை முதலீட்டாளர்கள் தொடர்ந்துள்ளனர். முன்னதாக, ட்விட்டர் நிறுவனத்தை வாங்கும் ஒப்பந்தத்தை தற்காலிகமாக நிறுத்திவைப்பதாக ஈலோன் மஸ்க் தெரிவித்திருந்தார். கலிஃபோர்னியா பெருநிறுவன விதிகளை ஈலோன் மஸ்க் பலவழிகளில் …
-
- 1 reply
- 670 views
- 1 follower
-
-