கவிதைக் களம்
கள உறுப்பினர்களின் கவிதைகள் | கவிதை மொழியாக்கங்கள்| பாடல் வரிகள்
கவிதைக் களம் பகுதியில் கள உறுப்பினர்களின் கவிதைகள், கவிதை மொழியாக்கங்கள், பாடல் வரிகள் சம்பந்தமான பதிவுகள் இணைக்கப்படலாம்.
இப்பகுதியில் யாழ்கள உறுப்பினர்களின் சுய கவிதை ஆக்கங்கள், கவிதை மொழியாக்கங்கள், பாடல் வரிகள் மாத்திரம் இணைக்கப்படல் வேண்டும். சுய ஆக்கங்களை ஊக்கப்படுத்தும் நோக்கில் இப்பிரிவில் இணைக்கப்படுபவை முகப்பிலும் காண்பிக்கப்படும்.
772 topics in this forum
-
நிராகரிப்பு என்பது வேதனைக்கு உரியது ஆனால் நிராகரிப்பினால் ஏற்படும் அனுபவம் வலிமையானது பல நிராகரிப்புகளில் ஏற்படும் அனுபவங்கள் கற்றலுக்கான வாய்ப்பாகிறது முகிலின் நிராகரிப்பால் மழை உருவாகிறது மழையின் நிராகரிப்பால் மண் ஈரமாகிறது விதை நிராகரிக்கப்படுவதால் நிழல் கொடுக்கும் பெரு விருட்சமாகிறது நிராகரிப்பு என்பது தோல்வியின் கடைசி ஆயுதம் நிராகரிப்பு என்பது உடைந்து போன பின்னும் எழத் துடிப்பது நிராகரிப்பு என்பது உடைந்து போகாமல் இருக்க உள்ளூர எழுந்து மறையும் ஓராயுதத் தோற்றங்களில் ஒன்று யாரோ ஒருவரின் நிராகரிப்பு இன்னொருவரால் நேசிக்கப்படுகின்றது யாரோ ஒருவரின் நிராகரிப்பால் நிராகரிக்கப்பட்டவரின் திறமை உயர் கணிப்புக்குள்ளாகிறது நிராகரிக்கப்பட…
-
- 11 replies
- 4.4k views
-
-
கிருமியும்,கிராமத்தின் கவலையும்..! வண்டில் மாடும்,ஏரால் தீட்டும் வர்ணமும் பனையும்,தென்னையும் வாய்க்கால்,வரம்பும் கோயில்,குளமும் ஆடும்,மாடும் மூலிகைச்செடிகளும் தோட்டமும்,துரவும். முன்னோர் வாழ்வின் முதுசங்கள் இவைகள் என்மேல் அவர்களின் இருப்பும்,பாசமும் உங்களுக்கேனோ இல்லாமல் போனது. பட்டணம்,நகரமென படையெடுத்து போயிருந்து பழயவள் எனச்சொல்லி பழித்தீர்கள் என்னையும். கிராமத்தான் என்று கேலிபண்ணுவார்களென நகரத்து பெயர்களையே “நா” கூசாமல் சொன்னீர்கள் பக்கத்து வீட்டானின் பகட்டு வாழ்வைநம்பி காரும்,வீடும் கடன் பட்டே …
-
- 11 replies
- 2k views
-
-
என் வீட்டின் சாளரங்களை விருப்பப்பட்ட நேரம் நான் திறக்க விரும்புகிறேன் பனி மூடிய வீதிகள் கொஞ்சம் ஓய்வெடுக்கட்டும் எப்போதாவது ஒரு வசந்த நாளை நான் எதிர்பார்த்திருக்கிறேன் குளிர் சலித்துப் போய்விட்டது இப்போது என் மனம் சூடான ஒன்றை விரும்புகிறது தியா - காண்டீபன்
-
-
- 11 replies
- 963 views
- 1 follower
-
-
மனதுக்கும்…..உதடுகளுக்கும் , தொடுசல் அறுந்து நாளாகி விட்டது! வேடம் போடுவதில், நாடக நடிகர்களையும்…., மிஞ்சியாகி விட்டது! மாடு மாதிரி உழைச்ச, களைப்புப் போக, உல்லாசப் பயணம் போனால்…, அந்தக் கடற்கரை….., ஊர்க் கடற்கரையிடம்…, பிச்சை வாங்க வேண்டும்…, போலத் தெரிகின்றது! வசதியில்லாததுகள், வறுமையில் வாழ்பவர்கள்…, விற்கின்ற பொருட்களை…, அறாத விலை பேசி வாங்குவதில்…, ஒரு திருப்தி…! உறுத்துகின்ற மனதுக்கு.., நாங்களும் வாங்கா விட்டால்…, அதுகள் பட்டினி தான்…, என்று ஒரு சமாதானம்! வங்கியட்டைகளின் கனதி…., வீட்டுக்கடனின் பரிமாணம், கட்ட வேண்டிய சிட்டைகளின…
-
- 11 replies
- 2.1k views
-
-
எடுக்கவோ.....கோர்க்கவோ. அரவக்கொடியோனின் அரண்மனைதனில் பரவித் தொடுத்த முத்தாடை அணிந்து இரவியின் பெயருடை பானுமதியாள் புரவித் தேருடை மன்னனுடன் கரத்தில் தாயக் கட்டைகளோடு உருட்டி ஆடுகின்றாள் சதுரங்கம். அங்கதேசத்து மன்னனாம் கர்ணன் தங்கக் கவச குண்டலத்துடன் பிறந்தோன் இங்கு மாமன்னன் துரியனைக் காணவந்தவன் தங்கையனைய மங்கை வேண்ட --- சதுர் அங்கம் ஆட மஞ்சத்தில் எழுந்தருளி சிங்கம் போலவும் வீற்றிருந்தனன். ஆட்ட சுவாரசியத்தில் மலர்ந்திருந்தவள் இட்ட இலக்கங்கள் இல்லாமலாகி வாட்டமுடன் கட்டைகளை க…
-
- 11 replies
- 4k views
-
-
வலிசுமந்த வரிகளுடன் அம்மாவுக்கு மகள் எழுதும் ஓர் மடல். உங்கள் விமர்சனங்களிற்காக https://youtu.be/MsPzmh_uYog
-
- 11 replies
- 5.8k views
-
-
மங்கையவளின் மரக்கறிக் கடை..!(காய்கறிக்கடை) ************************* பகுதி-1 முதலில் தக தகவென்ற மேனியை பார்த்ததும் தக்காழியை வாங்கி வைத்தேன். முந்தானையை பார்த்து முனகினேன் முருங்கக்காய் வரத்து குறைவென்றாள். கையை வைதேன் சும்மா சுறண்டாதீர்கள் மென்மையான தோல் உதிரம் வருமென்றாள் எடுத்து பார்த்தேன் பீற்றூட் கிழங்கு. அவளின் விரலை பிடிப்பதுபோல் எண்ணினேன் முளிந்து பார்த்தாள் எனது கையில் இருந்தது வெண்டிக்காய் உடைக் வேண்டாமென உறுமி விட்டு சிரித்தாள். அவளி…
-
- 11 replies
- 1.1k views
-
-
புல்லை வெட்டுங்கோ ---------------------------------- நாலு நாள் ஆகிவிட்டது ஒவ்வொரு குழாயின் கீழும் அண்டா குண்டா என்று வைத்து தேனும் பாலும் இனி வீடு தேடி வரும் என்றனர் வைத்த அண்டாவும் குண்டாவும் அப்படியே காத்து வாங்கிக் கொண்டு காத்துக் கிடக்கின்றன தேன் எப்ப வரும் பால் எப்ப வரும் என்று கொஞ்சம் முன்னரே சொன்னால் தனி தனியே பிடித்து வீடு முழுக்க வைத்துக் கொள்வேன் எட்டு வருடம் முந்தியும் வரும் வரும் என்றீர்கள் வரவே இல்லை கடைசி மட்டும் பின்னர் நீங்கள் போய் விட்டீர்கள் இப்ப வந்து விட்டீர்கள் இந்த தடவை என்றாலும் ஓட விடுங்கள் பாலையும் தேனையும் …
-
-
- 11 replies
- 707 views
- 1 follower
-
-
முழித்துக் கொண்ட சீனாவும் முதலீட்டு இராஜதந்திரமும் 🇨🇳 -பா.உதயன் ———————————————————————————————————- அடங்கிப் கிடந்த டிராகன் ஒன்று முழித்துக் கொண்டது ஆயுதம் இல்லாமல் ஆக்கிரமிப்பு செய்கிறது அத்தனை உலக வேலியும் அறுத்து கடன் இராஜதந்திர வலையில் கழுகுப் பிடியில் கட்டி இழுக்கிறது கம்யூனிச சீனா கன நாடுகளை இன்று இலங்கை பாகிஸ்தான் பர்மா வங்கம் என்று வளைத்து விட்டது தனக்கு கீழே இப்போ இந்து கடலில் டிராகன் குந்தி இருந்து எறிகிற வலையில் இந்த சின்ன மீன்கள் அகப்பட்டுப் போயினர் வலையை கிழித்து இனி வருவது கடினம் இந்த பட்டிப் பாதை முத்து மாலை மூலாபாயத்தை இனி செத்தாலும் அவிழ்க்க முடியாது…
-
- 11 replies
- 1k views
-
-
உரக்கச் சொல்கிறோம் நாங்கள் அமெரிக்கர்கள்! இரண்டு கொடிய வைரஸ்கள் இப்போது அமெரிக்கர்களைக் கொல்கின்றன. ஒன்று கோவிட் 19, மற்றையது இனவாதம். இங்கே அனைத்துத் துப்பாக்கிகளும் சொர்க்கத்தை நோக்கி மட்டுமே சுடுகின்றன. எச்சரிக்கைக் காட்சிகளால் சிறகுகள் வெட்டப்படும் கறுப்பு பறவைகள் நசுக்கப்படும் மனிதத் தலைகள்... இங்கே, சட்ட உலகம் இருளில் ஆழ்த்தியத்தைத் தவிர வேறெதுவும் பேசாது இங்கே - யாரும் வரவேற்கப்படுவதில்லை. ஆட்சியாளர்களால் “வீட்டிற்கு செல்” என்ற சொல் தவிர “நீதி” என்ற சொல் உச்சரிக்கப்படுவதில்லை. மரணத்தால் மட்டுமே ஆசீர்வதிக்கப்பட்டவர்களாய் குற்றமேதுமின்றிப் பலர் சொர்க்கவாசலை நிறை…
-
- 10 replies
- 2.1k views
-
-
மஹாகவி உருத்திரமூர்த்தியின் சாதியம் தொடர்பான கவிதை எனது குரலில் https://youtu.be/no-2WHQ7ti0
-
- 10 replies
- 3k views
-
-
விழி விரித்தாய் பார்த்ததுமே பரவசத்தில் உடல் சிலிர்த்தாய் மோகமானாய் - பெரும் தாகத்தடன் கட்டுடைத்து என்னங்கம் மேய்ந்தாய் ஆசையோடு அழுத்தினாய் தழுவலிலே தளர்வறிந்தாய் தீண்டியும், நிமிண்டியும் – எனைத் திரள வைத்தாய். உன் விரல்களிடை என் இதழ் குவித்தாய் விதவிதமாய் இரசித்து உன்னுதடழுத்திக் கவ்வினாய் உரசலிலே தீ மூட்டி – எனை உன்மத்தம் கொள்ள வைத்தாய் என் தகிப்பில் தணல் வைத்தாய் உறிஞ்சினாய் , உள்ளிழுத்தாய் மினிக்கி ஆடும் எனை இழுத்து - உன் சுவாசத்துள் சிறைப்பிடித்தாய் தெரிந்தும்….. எனைச் சரணடைந்தாய் கணம் பிரிய மறுத்தபடி யாசகம் கேட்கிறா…
-
- 10 replies
- 2.5k views
-
-
அம்மா..! அம்மாவின் கருவறையில் நாங்கள் தெய்வம். ஆலயத்தின் கருவறையில் அம்மா தெய்வம். உயிரோடு உடல் தந்தாள் உலாவ விட்டாள்-தமிழ் உணர்வோடு உணவு தந்தாள் உயர வைத்தாள். இருள் வந்து சூழும் போது நிலவாய் நின்றாள் எமை வளர்த்து மரமாக்க வேராய்ச் சென்றாள் உறக்கமின்றி எம்மவர்க்கு உயர்வைத் தந்தாள் உழைத்துழைத்து- உலகத்தில் ஓடாய்த் தேய்ந்தாள் தனைமறந்து எமக்காக வாழ்ந்த தாயை-அவள் தந்த உயிர் பிரியுமட்டும் நிறுத்தி வாழ்வோம். அம்மாதான் நேரில் கண்ட அன்புத்தெய்வம் அதைவிடவும் ஆலயங்கள் தேவையுண்டோ..? -பசுவூர்க்கோபி-
-
- 10 replies
- 1.4k views
-
-
நான் எனும் நான் ------------ நான் இன்னும் எனக்கும் நானே சொல்லாத வார்த்தைகள் என்னிடம் உள்ளன அந்த வார்த்தைகளின் அடியில் தேங்கி கிடக்கின்றது பெருங் காடென விரியும் துரோகம் நான் எனக்கு எழுதாத சொற்கள் நிறைய உள்ளன அதன் உச்சரிப்புகளில் மறைந்து கிடக்கின்றன நான் பலரை தூற்ற நினைத்த வசவுகள் நான் பார்க்க விரும்பாத பல பக்கங்கள் உள்ளன அதன் வரிகளில் நிறைந்து கிடக்கின்றன இரக்கமற்ற நினைவுகளும் ஈரம் காய்ந்த என் உணர்வுகளும் நான் கேட்க மறுக்கும் பாடல்கள் உள்ளன தன் வரிகளில் கண்ணீரையும் துரோகங்களையும் காட்டாறு எனப் பாயும் தோல்விகளின் வரிகளையும் சுமந்த படி நான் பார்க்க விரும்பாத ஒரு முகம் எனக்குள்ளது அதன் அத்தன…
-
- 10 replies
- 1.2k views
- 1 follower
-
-
கட்டுப்பாடுகள் விட்டுப் போகையில் மனம் கெட்டுப் போய்விடும் எம்மில் முட்டி மோதியே எழும் சிந்தைகளை அது கட்டிப் போட்டு விடும் அதை வெட்டி வீழ்த்தியே வெற்றி வாகை சூடினால் வானம் நம் வசப்படும் எதுவுமே தெரியாதென்று ஒதுங்கினால் வாழ்வு பெட்டிப் பாம்பாய் அடங்கி விடும் எல்லாம் தெரிந்து கெட்டித்தனமாய் இருந்தால் வாழ்வு சிறந்து விடும் எதையும் பட்டுத் தெளிவோம் என்று விட்டு விட்டால் பின்பு கண் கெட்ட பிறகு சூரிய நமஸ்காரமா என ஆகி விடும் திட்டுத் திட்டாய் மனதில் தோன்றும் பல வன்மங்கள் அவை சொட்டு சொட்டாய் நம்மை அழித்து விடும் மட்டு மட்டாய் நாம் வழங்கும் அன்பு கூட இறுதியில் பட்டுப் பட்டாய் கரைந்து போய் விடும் கொட்டும் மழை போல் அன்பை வாரி வழங்கினால் விட்டுப…
-
- 10 replies
- 1.4k views
-
-
நம்பிக்கை ஒளி தெரிகிறது! ******************************** பேய்களையெல்லாம் ஓடக் கலைத்து பெருந்துயரனைத்தும் தீயில் கொளுத்தி புதுமுக வரவால் பொங்குது மண்றம் பொறுப்போம் விரைவில் விடியுமெம் தேசம். குடு குடு கிளடுகள் கதிரையில் இல்லை குடும்ப ஆட்சியும் கோட்டையில் இல்லை கொள்ளையும் திருட்டும் வரப்போவதில்லை கோயிலும் மசூதிக்கும் அழிவேதுமில்லை. இனங்களைப் பிரிக்கும் தந்தரமில்லை இளையோர் நெஞ்சில் வஞ்சகமில்லை எனிவரும் காலம் பஞ்சமுமில்லை எல்லோர் மனத்துக்கும் துன்பமுமிலை. தமிழர் தரப்பிலே ஒற்றுமையில்லை தனித் தனி சுயநலம் தேவையுமில்லை-சிலர் போரின் அவலத்தை புரிந்ததேயில்லை போன கதிரயை மறப்பதேயில்லை. தெற்கைப் போலவே திடமாய் நீ சேரு தென்றலாய் மண…
-
-
- 10 replies
- 891 views
- 1 follower
-
-
நாட்டில் நின்ற காலம் தொடர்-2 பஸ் பயணம்! ************* பஸ்.. நிக்கமுன்னே ஏறச்சொல்லி நடத்துனரோ கத்திறார் நாங்கள் ஓடி ஏறமுன்னே சாரதியோ இழுக்கிறார் யன்னல் சீற்று அத்தனையும் தண்ணிப்போத்தல் கிடக்குது நாம் இருக்க போனாலே-அருகில் ஆள் இருக்கு என்கிறார் அத்தனைக்கும் காசு வாங்கி ஆளைப் பின்பு ஏற்றுறார் ஆரம்பத்தில் ஏறியவர் அவலப்பட்டுத் தொங்கிறார். ஏறிவரும் அனைவர் முதுகிலும் சாக்கு பைகள் தொங்குது என்னொருவர் இடத்தை கூட அந்தபைகள் பிடிக்குது இறங்கிப் போகும் போதுகூட கையில் எடுப்பதில்லை இழுத்திழுத்து அனைவருக்கும் இடஞ்சல் கொடுத்து போகுறார். …
-
-
- 10 replies
- 1.3k views
- 1 follower
-
-
2024/2025 *************** பழமைக்கு பிரியாவிடையும் புதுமைக்கு வரவேற்பும் இன்றிரவு 12 மணிக்கு! இழப்புகள், ஏற்றங்கள் துக்கங்கள், மகிழ்சிகள் வேதனைகள், சாதனைகள் வெறுப்புகள், வெற்றிகள எல்லாமே இரண்டறக் கலந்து எமக்குத் தந்தாய். அத்தோடு.. உலகச் சண்டைகளும் இயற்கையழிவுகளும் பொருளாதார சிக்கல்களும் தந்து.. பொறுமையிழக்க வைத்தாய். இத்துடன் முடிந்தது என்றுதான் இருந்தோம் உனது கோரப் பற்களால்-தென் கொறியா விமானத்தை தீயிட்டுக் கொளுத்தி 179 அப்பாவி உயிகளை தின்றுவிட்டுச் செல்கிறாயே இது நியாயமா? நீயே சொல். அவர்களின் துக்கத்தில் மூழ்கி உன்னை அனுப்பி வைக்…
-
-
- 9 replies
- 737 views
-
-
பூச்சிய மாற்றம் --------------------------- வீட்டுக் கதவினூடு வெளியேறியதும் இன்னொரு நாடு வருகின்றது எத்தனை தடவைகள் கதவைத் திறந்து நான் போய் வந்தாலும் அது பழக்கமில்லாத இடமாகவே இருக்கின்றது அதனூடு என் நாட்டிற்கு போய் என்னவர்களுடன் நான் வட்டமாக இருக்கின்றேன் விளையாடுகின்றேன் சிரிக்கின்றேன் சில வேளைகளில் நாங்கள் சேர்ந்து அழுவதும் உண்டு மீண்டும் அதே பாதையில் அந்த நாட்டை கடந்து வீட்டின் கதவை திறந்து உள்ளே வந்ததும் இது தான் என் இடம் என்று மீண்டும் நிமிர்கின்றேன் வீட்டினுள் இருந்து மாற்றம் ஒன்றே மாறாதது மாறுங்கள் மாறுங்கள் என்று எழுதிக் குவிக்கின்றேன் …
-
-
- 9 replies
- 746 views
-
-
பார்த்தவுடன் முடிவுக்கு வராதே.! ************************* கடலின் நடுவே மிதக்கின்ற ஊரை-ஒரு கதையாசிரியன் காணப்போனான் கோடை வெய்யிலில் எரிந்து கிடந்ததாம். உணவின்றி கால்நடை இறந்துகிடந்ததாம் வயலெல்லாம் வெடித்து பிளந்து கிடந்ததாம் வளரும் மரம்செடி விறகாய் தெரிந்ததாம் காய்ந்த பூமியென கதையே எழுதினான் கானாதோரை நம்பவே வைத்தான் -அது பாலைவனமென பரிந்துரை செய்தான்-தான் பட்டதுன்பமென பலதும் சொன்னான் புத்தகம் விற்று புகழுமடைந்தான். ஆறுமாதம் கழித்தொருவன் அந்த ஊருக்கே அவனும் போனான் பச்சைப்பசேலென மூலிகை இருந்ததாம்-மரங்க…
-
- 9 replies
- 1.2k views
-
-
புளிய மரமும் பொற்க்காலமும்.! ************************* முற்பது வருடம் கழித்து என் மண்ணுக்கு போனபோது-என்னை யாருக்கும் தெரியவில்லை. சொந்த மண்ணிலே என்னை சுற்றுலா பயணியாக.. எந்த நாடு ,எந்த ஊர் எங்கு போகவேண்டும் இங்கு.. யாரைத்தெரியுமென ஏதேதோ கேள்விகள் என்னைச்சுற்றி குவிந்தன.. ஊர்ப்பற்றோடு உறுதியாக வாழ்ந்து.. மறைந்துபோன எம் தாய்,தந்தையைக்கூட தெரிய வாய்ப்பில்லை. ஏனென்றால்.. அந்த ஊரில் வசித்திராத புது முகங்கள். அங்கு ஓடித்திரியும் பிள்ளைகளை பார்க்கிறேன் அவர்களும் மூண்றாவது தலைமுறையினர் அவர்களை எனக்கோ என்னை அவர்…
-
- 9 replies
- 926 views
-
-
புயல்களும், உழவனும்..! ****************** உழுதவன் விதைக்கும் காலம் உணர்விலே மகிழ்ச்சி பொங்கும் அழுதவன் வறுமையெல்லாம் அடங்குமே என நினைத்தான். வரம்பு நீர் உயற்ச்சி கண்டு வளர்கின்ற நெற்பயிரின் அருகிலே.. அதிகாலை தொட்டு ஆதவன் மறையும் மட்டும் உடலது உயிராயெண்ணி ஒன்றியே வாழ்ந்தான் வயலில். கடலலை அடித்தாற் போல காற்றிலே பயிர்கள் ஆட உளமது நிறைந்துழவன் உச்சத்தில் மகிழ்ச்சி கண்டான். நிறைமாத கெற்பனி போல் நெற்பயிர் குடலை தள்ள வறுமையும் கடனும் நீங்கி-நல் வாழ்கையை கனவில் கண்டான். மனைவிக்கு சாறியோடு மகளுக்கு வரனும்தேடி மகனுக்கு கல்வியூட்ட மனதினில் எண்னி வாழ்ந்தான். அடை மழை கட்டி வானம்-புரவி அடித்தது புயலாய் நாட்டில் பெர…
-
- 9 replies
- 1.1k views
-
-
வெள்ளை வேட்டியோடு கொள்ளைக்காரர்கள் நாட்டை ஆள வருவார் நரிகள் கூட வருவர் ஊருக்காய் உழைத்தவன் படித்தவன் பண்பாளனை பாராளுமன்றம் அனுப்பி வைக்கார் படித்தவன் கூட வரான் போனவர் அனைவரும் பொழுது விடியுமுன்பே மந்திரியாவார்கள் நூறுக்கு மேலே மந்திரிமார் பாதிக்கு மேலே வேலை இல்லை சிங்கப்பூர் போல் சிலோனை மாற்றுவோம் என்று கூடச் சொன்னார் ஸ்ரீ லங்காவின் அரைவாசி இப்போ சீனாவுக்கு சொந்தம் எடுத்த கடன் தலைக்கு மேலே திருப்பி கொடுக்கவில்லை அரை நூற்ராண்டாய் அந்த மலையக மக்கள் படுக்குற துன்பம் அவன் தேனீருக்குள் தெரியுது இவன் இரத்தமும் வியர்வையுமாய் அவனுக்கு அங்கே எதுகும் இல்லை ஆயிரம் ரூபாய் சம்பள உயர்வுக்காய் …
-
- 9 replies
- 1.6k views
-
-
"C:\Users\Karu\OneDrive\Desktop\Queen Elisabeth.jpg" அன்னை எலிசபெத் இன்னுயிர் நீத்தனள் அன்னை இரண்டாம் எலிசபத் தன்னைக் கவர்ந்தனன் காலன் ஐக்கிய ராச்சிய அரசியாக ஆண்டுகள் எழுபதைக் கடந்து முக்கிய உலகத் தலைவியாக முடியுடன் வாழ்ந்தவள் அன்னை அநீதிகள் நிறைந்த உலகினில் தன்றன் ஆற்றலால், அன்பினால் பலத்தால் தனிப்பெரும் சிறந்த தலைவியாய் மிளிர்ந்த தாயவள் எலிசபத் அரசி இனியொரு தலைமை இங்கிலாந்திற்கு இப்படியமையுமா அறியோம் இறைவனின் தயவால் இவ்வுலகிருந்த இனியதாய் மறைந்தனள் அந்தோ பொதுநலவாயத் தலைமையை ஏற்று பொறுப்புடன் கடமைகள் ஆற்றி அதிகரித்திட்ட அகதிகட்குதவி ஆற்றிய சேவைகள் பலதாம் …
-
- 9 replies
- 1.1k views
-
-
இன்று என் சொந்த பெயரில் உள்ள முகனூலில் கொழும்பில் இடம்பெற்ற போராட்டத்தை பற்றி சிம்பிளாக சொல்ல எழுதிய இந்தக் கவிதையால் முகனூல் தற்காலிகமாக என்னை தடை செய்தது. .................................. இவ்வாறே அவர்கள் அரசனின் மாளிகையை சுற்றி வளைத்தனர் அன்று தேவ சபையில் அரசன் பல்லாயிரம் ஆடுகளை கொன்று தன் இந்திரியத்தால் குளிப்பாட்டி விருந்து கொடுத்து இருந்தான். வண்ணாத்திப் பூச்சிகளின் இறைக்கைகளை வெட்டி படையல் போட்டு இருந்தான் அதை புசித்தவர்கள் இன்று அவன் மாளிகையை சுற்றி வளைத்தனர் தங்களின் நாவு வரண்டு எச்சில் வற்றி விட்டதாக கிளர்ந்து எழுந்தனர் தாளா பசியால் …
-
- 9 replies
- 1.2k views
-