Jump to content

அரசனின் மாளிகை- முகனூல் என்னை தடை செய்த கவிதை


Recommended Posts

இன்று என் சொந்த பெயரில் உள்ள முகனூலில் கொழும்பில் இடம்பெற்ற போராட்டத்தை பற்றி சிம்பிளாக சொல்ல எழுதிய இந்தக் கவிதையால் முகனூல் தற்காலிகமாக என்னை தடை செய்தது.

..................................

இவ்வாறே அவர்கள் 

அரசனின் மாளிகையை

சுற்றி வளைத்தனர்

 

அன்று தேவ சபையில்

அரசன் பல்லாயிரம் ஆடுகளை

கொன்று 

தன் இந்திரியத்தால் குளிப்பாட்டி

விருந்து கொடுத்து இருந்தான்.

வண்ணாத்திப் பூச்சிகளின்

இறைக்கைகளை வெட்டி

படையல் போட்டு

இருந்தான்

 

அதை புசித்தவர்கள்

இன்று அவன் மாளிகையை

சுற்றி வளைத்தனர்

தங்களின் நாவு

வரண்டு எச்சில்

வற்றி விட்டதாக

கிளர்ந்து எழுந்தனர்

 

தாளா பசியால்

கதவுகளை

நெட்டித் தள்ளுகின்றனர்

 

அரசன் அவர்களை அறிவான்

 

இன்னும் ஒருமுறை

அவன் விருந்து கொடுத்து

இந்தக் கணக்கையும்

முடித்து வைக்கும் போது

சுற்றி வளைத்தவர்கள்

அரசனை

ஆரத் தழுவுவர் 

 

வண்ணத்துப் பூச்சிகளின்

இறக்கைகளை அவன்

மீண்டும் முறிக்கும் போது

அவனை அவர்கள்

மீண்டும் அரசனாக்குவர்

 

டொட்.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

சுடாமல் சுட்டிட்டுது...அருமையான கவிதை..

Link to comment
Share on other sites

  • 2 weeks later...
  • கருத்துக்கள உறவுகள்

உண்மை சுடும்.....எப்பக்கம் தொடினும்......இதுக்கு தடை செய்யாமல் இருந்திருந்தால்தான் அதிசயம்.......!  👍

நன்றி நிழலி ......!  

Link to comment
Share on other sites

6 minutes ago, suvy said:

உண்மை சுடும்.....எப்பக்கம் தொடினும்......இதுக்கு தடை செய்யாமல் இருந்திருந்தால்தான் அதிசயம்.......!  👍

நன்றி நிழலி ......!  

இந்தக் கவிதையை தடை செய்த காரணம் அரசியல் இல்லையாம். வண்ணாத்துப் பூச்சிகளை கொல்வது (Animal cruelty) பற்றி எழுதியதாம் என்று காரணம் போட்டு இருந்தார்கள். 

எங்கே போய் தலையை முட்ட என்று இருந்தது....

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

இது நல்ல பகிடியாய் இருக்கு.....கவிதையில் கூட வண்ணத்துப் பூச்சியை வாழவைக்கினமாம்.......!  😁

Link to comment
Share on other sites

6 minutes ago, suvy said:

இது நல்ல பகிடியாய் இருக்கு.....கவிதையில் கூட வண்ணத்துப் பூச்சியை வாழவைக்கினமாம்.......!  😁

அநேகமாக யாரோ ரிப்போர்ட் பண்ணியிருப்பினம். என் முகனூலில் மகிந்த பக்தர்கள் சிலர் உள்ளனர்.

Link to comment
Share on other sites

வண்ணத்துப் பூச்சிகளின்

இறக்கைகளை அவன்

மீண்டும் முறிக்கும் போது

அவனை அவர்கள்

மீண்டும் அரசனாக்குவர்

 

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

“அதை புசித்தவர்கள்

இன்று அவன் மாளிகையை

சுற்றி வளைத்தனர்

தங்களின் நாவு

வரண்டு எச்சில்

வற்றி விட்டதாக

கிளர்ந்து எழுந்தனர்”

 

“வண்ணத்துப் பூச்சிகளின்

இறக்கைகளை அவன்

மீண்டும் முறிக்கும் போது

அவனை அவர்கள்

மீண்டும் அரசனாக்குவர்”

 

சிங்களத்தின்/ஆதிக்கவாதிகளின் உண்மை முகம். 

நன்றி நிழலி.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
2 hours ago, நிழலி said:

இந்தக் கவிதையை தடை செய்த காரணம் அரசியல் இல்லையாம். வண்ணாத்துப் பூச்சிகளை கொல்வது (Animal cruelty) பற்றி எழுதியதாம் என்று காரணம் போட்டு இருந்தார்கள். 

எங்கே போய் தலையை முட்ட என்று இருந்தது....

நானும் இதைத் தான் நினைத்தேன்.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
On 31/3/2022 at 21:33, நிழலி said:

இன்று என் சொந்த பெயரில் உள்ள முகனூலில் கொழும்பில் இடம்பெற்ற போராட்டத்தை பற்றி சிம்பிளாக சொல்ல எழுதிய இந்தக் கவிதையால் முகனூல் தற்காலிகமாக என்னை தடை செய்தது.

..................................

இவ்வாறே அவர்கள் 

அரசனின் மாளிகையை

சுற்றி வளைத்தனர்

 

அன்று தேவ சபையில்

அரசன் பல்லாயிரம் ஆடுகளை

கொன்று 

தன் இந்திரியத்தால் குளிப்பாட்டி

விருந்து கொடுத்து இருந்தான்.

வண்ணாத்திப் பூச்சிகளின்

இறைக்கைகளை வெட்டி

படையல் போட்டு

இருந்தான்

 

அதை புசித்தவர்கள்

இன்று அவன் மாளிகையை

சுற்றி வளைத்தனர்

தங்களின் நாவு

வரண்டு எச்சில்

வற்றி விட்டதாக

கிளர்ந்து எழுந்தனர்

 

தாளா பசியால்

கதவுகளை

நெட்டித் தள்ளுகின்றனர்

 

அரசன் அவர்களை அறிவான்

 

இன்னும் ஒருமுறை

அவன் விருந்து கொடுத்து

இந்தக் கணக்கையும்

முடித்து வைக்கும் போது

சுற்றி வளைத்தவர்கள்

அரசனை

ஆரத் தழுவுவர் 

 

வண்ணத்துப் பூச்சிகளின்

இறக்கைகளை அவன்

மீண்டும் முறிக்கும் போது

அவனை அவர்கள்

மீண்டும் அரசனாக்குவர்

 

டொட்.

அருமையான கவிதை

Link to comment
Share on other sites

Archived

This topic is now archived and is closed to further replies.



  • Tell a friend

    Love கருத்துக்களம்? Tell a friend!
  • Topics

  • Posts

  • Our picks

    • மனவலி யாத்திரை.....!

      (19.03.03 இக்கதை எழுதப்பட்டது.2001 பொங்கலின் மறுநாள் நிகழ்ந்த ஒரு சம்பவத்தின் நினைவாக பதிவிடப்பட்டது இன்று 7வருடங்கள் கழித்து பதிவிடுகிறேன்)

      அந்த 2001 பொங்கலின் மறுநாள் அவனது குரல்வழி வந்த அந்தச் செய்தி. என் உயிர் நாடிகளை இப்போதும் வலிக்கச் செய்கிறது. அது அவனுக்கும் அவனது அவர்களுக்கும் புதிதில்லைத்தான். அது அவர்களின் இலட்சியத்துக்கு இன்னும் வலுச்சேர்க்கும். ஆனால் என்னால் அழாமல் , அதைப்பற்றி எண்ணாமல் , இனிவரும் வருடங்களில் எந்தப் பொங்கலையும் கொண்டாட முடியாதபடி எனக்குள் அவனது குரலும் அவன் தந்த செய்திகளும் ஒலித்துக் கொண்டேயிருக்கும்.
      • 1 reply
    • பாலியல் சுதந்திரமின்றி பெண்விடுதலை சாத்தியமில்லை - செல்வன்


      Friday, 16 February 2007

      காதலர் தினத்தை வழக்கமான தமது அரசியல் நிலைபாடுகளை பொறுத்து அணுகும் செயலை பல்வேறு தரப்பினரும் உற்சாகமாக செய்து வருகின்றனர்.கிரீட்டிங் கார்டுகளையும், சாக்லடுகளையும் விற்க அமெரிக்க கம்பனிகள் சதி செய்வதாக கூறி காம்ரேடுகள் இதை எதிர்த்து வருகின்றனர்.அமெரிக்க கலாச்சாரத்தை திணிக்க முயற்சி நடப்பதாக கூறி சிவசேனாவினரும் இதை முழுமூச்சில் எதிர்க்கின்றனர். தமிழ்நாட்டில் பாமக ராமதாஸ் இதை கண்டித்து அறிக்கை விட்டுள்ளார். பாகிஸ்தானிலும், அரபுநாடுகளிலும் இதை எதிர்த்து பத்வாக்கள் பிறப்பிக்கப்பட்டு அதை மீறி இளைஞர்கள் இதை கொண்டாடியதாக செய்திகள் வந்துள்ளன.
      • 20 replies
    • எனக்குப் பிடித்த ஒரு சித்தர் பாடல் (எந்தச் சித்தர் என்று மறந்து விட்டேன். கட்டாயம் தேவை என்றால் சொல்லுங்கள் எனது ஓலைச் சுவடிகளை புரட்டிப்பார்த்து பின்னர் அறியத் தருகிறேன்)

      நட்ட கல்லைத் தெய்வம் என்று நாலுபுட்பம் சாத்தியே
      சுற்றி வந்து முணுமுணென்று கூறுமந்த்ரம் ஏனடா
      நட்ட கல்லும் பேசுமோ நாதன் உள்ளிருக்கையில்
      சுட்ட சட்டி தட்டுவம் கறிச்சுவை அறியுமோ?


      பொருள்:
      சூளையில் வைத்துச் சுட்டுச் செய்த மண் பாத்திரத்தில் வைக்கும் கறியின் சுவை எப்படியானது என்று அந்தப் பாத்திரத்துக்கு விளங்குமா? அது போல, எம்முள்ளே எருக்கும் இறைவனை நீ அறியாமல் ஒரு கல்லினுள் கடவுள் இருப்பதாக நம்பி வெறும் கல்லை அராதித்து வழிபடுகிறாய்.
      • 7 replies
    • களத்தில் தற்போது சமயம் சம்ம்பந்தமாக பெரியா கருத்து பரிமாற்றம் நடக்கிறது, அங்கே கருத்தாடு பெரியவர்களே, அறிஞோர்களே உங்களால் இறைவன் இருக்கார் என்று ஆதாரத்துடன் நிரூபிக்க முடியுமா...........? முடிந்தால் நிரூபியூங்கள், நிரூபித்து விட்டு உங்கள் கருத்து மோதலை தொடருங்கள்
      • 46 replies
    • சமூகத்துக்கு பயனுடைய கல்விநிலை எது?

      பேராசிரியர் சோ. சந்திரசேகரன்

      இன்று நாட்டில் உள்ள கல்விமுறையையும் அதற்கு அப்பால் உள்ள கல்வி ஏற்பாடுகளையும் நோக்குமிடத்து, பல்வேறு கல்வி நிலைகளை இனங்காண முடியும். அவையாவன: ஆரம்பக்கல்வி, இடைநிலைக் கல்வி, பல்கலைக்கழகக் கல்வி உள்ளடங்கிய உயர் கல்வி, பாடசாலையில் வழங்கப்படும் (1-11 ஆம் வகுப்பு வரை) பொதுக்கல்வி, தொழில்நுட்பக்கல்வி, வளர்ந்தோர் கல்வி என்பன, இவை தவிர கருத்தாக்க ரீதியாக முறைசாராக் கல்வி, வாழ்க்கை நீடித்த கல்வி, தொடர்கல்வி எனப் பலவற்றை இனங்காண முடியும். இவற்றில் ஆரம்பக்கல்வி, இடைநிலைக்கல்வி, உயர்கல்வி என்னும் கல்வி நிலைகளே முறைசார்ந்த (Formal) கல்வியின் பிரதான நிலைகள் அல்லது கூறுகளாகும்.
      • 5 replies
×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.