கவிதைக் களம்
கள உறுப்பினர்களின் கவிதைகள் | கவிதை மொழியாக்கங்கள்| பாடல் வரிகள்
கவிதைக் களம் பகுதியில் கள உறுப்பினர்களின் கவிதைகள், கவிதை மொழியாக்கங்கள், பாடல் வரிகள் சம்பந்தமான பதிவுகள் இணைக்கப்படலாம்.
இப்பகுதியில் யாழ்கள உறுப்பினர்களின் சுய கவிதை ஆக்கங்கள், கவிதை மொழியாக்கங்கள், பாடல் வரிகள் மாத்திரம் இணைக்கப்படல் வேண்டும். சுய ஆக்கங்களை ஊக்கப்படுத்தும் நோக்கில் இப்பிரிவில் இணைக்கப்படுபவை முகப்பிலும் காண்பிக்கப்படும்.
772 topics in this forum
-
கனவில் கருங்கூந்தல் கலைய கண்ணிமைகள் காவியம் புனைய கைவிரல்கள் கவி பாட வெண்கழுத்து வெட்கத்தில் சிவக்க செவ்விதழ்கள் சுவை சொட்ட வியர்வையில் துவண்ட உன் எழிலுக்கு துகில் கலைக்க வந்த என் கைகள் காற்றில் கலந்தது! விலகும் உன் பெண்ணியம் கண்டு.
-
- 0 replies
- 1.2k views
-
-
இரவில் இன்பம் தரும் உன் விரல்கள் பகலில் விலகிப் போக வருத்தமொன்றே விருப்பப்பாடமாக எடுத்த எனக்கு மறுஇரவு முழுநிலவாகுமோ!
-
- 0 replies
- 1.2k views
-
-
என் .....மரணத்தின் போது......யாரும் அழவேண்டாம்......நீங்கள் இழப்பதற்கு......இன்னும் நிறைய இருக்கிறது.....!என்.....உடலை மரணத்தின் பின்.....நீராட வேண்டாம்......உயிருள்ள போது நன்றாக......நீராடுகிறேன்..................!என்.....உயிரற்ற உடலுக்கு........வாய்க்கரிசி போடவேண்டாம்.......உயிருள்ளபோது நன்றாக.......சாப்பிடுகிறேன்...............!என் ......மரணத்தின் போது......ஈமைக்கிரிகைகள் எதுவும்.......செய்யவேண்டாம்.......கடவுள் பற்றற்றவன் அல்ல.....கிரிகைகளில் பற்றற்றவன்.....!என்.....உடலை எரிக்காதீர்கள்......புதைத்துவிடுங்கள்......புழுக்கலும் பூச்சிகளும்.....உணவாக உண்டுமறைந்துவிடுகிறேன்.......!^^^^^^கவிப்புயல் இனியவன்யாழ்ப்பாணம்- இலங்கை
-
- 4 replies
- 1.8k views
-
-
TRIBUTE TO KALAIGNARகலைஞர் அஞ்சலி- வ.ஐ.ச.ஜெயபாலன்.எங்கள் போர்கால நெருடல்களை மறந்து. காலமெல்லாம் ஈழத் தமிழருக்கு அரணாய் அவர் நின்றதை நினைந்து அஞ்சலிக்கிறேன், கலைஞரின் புகழ்பூத்த காலத்து இயல் இசை நாடக செம்மொழியாய் தமிழ்கூறும் நல்லுலகமெல்லாம் தமிழ் வளர தமிழகத்தில் அரசு இயற்றிய ஆற்றலை வியந்து கலங்குகிறேன்.குமரியில் காலமெல்லாம் தமிழகத்தை தின்ற கடற்கோளும் தலைபணிய வள்ளுவனை எல்லைக் காவலாய் வைத்த மாண்புகளைப் போற்றி மனது நெகிழ்கிறதேஉன்னை வழியனுப்ப வந்து நீலமலையெங்கும் தேன்சிந்தி அழுகின்ற குறிஞ்சிமலர்களுடன் கண்சிந்தும் கவிஞன் நான். ஏற்கனவே உலகத் தமிழர் மனங்களிலே புதைதுவிட்டான். இனி அவனை எங்கே இடுவதென ஏங்குவதேன்? செம்மொழிப் பூங்கா அவனது நினைவிடமாய் என்றும் இருக்குமே. அண்ணா நூலகத்தைவி…
-
- 12 replies
- 2.2k views
-
-
பாடா அஞ்சலி தமிழ் மூலமும் கவிஞர் வாசுதேவனின் பிரஞ்சு மொழிபெயர்ப்பும். 1. பாடா அஞ்சலி ( வ.ஐ.ச.ஜெயபாலன்) -------------- உதிர்கின்ற காட்டில் எந்த இலைக்கு நான் அஞ்சலி பாடுவேன் ? சுணாமி எச்சரிக்கை கேட்டு மலைக்காடுகளால் இறங்கி கடற்கரைக்குத் தப்பிச் சென்றவர்களின் கவிஞன் நான். பிணக்காடான இந்த மணல் வெளியில் எந்தப் புதைகுழியில் எனது மலர்களைத் தூவ யாருக்கு எனது அஞ்சலிகளைப் பாட வென்றவரும் தோற்றவரும் புதைகிற உலகோ ஒரு முதுகாடாய் உதிர்கிறது. எந்தப் புதைகுழியில் என் மலர்களைச் சூட எந்த இலையில் அஞ்சலிகளை எழுத இந்த உலகிலும் பெரிய இடுகாடெது ? பல்லாயிரம் சாம்ராட்சியங்களைப் புதைத்து புதிய கொடிகள் நாட்டப்படுகிற பெரிய …
-
- 1 reply
- 1k views
-
-
சன்னல்: -இது ஒஸ்லோவில் 1990 டிசம்பர் எழுதப்பட்ட கவிதை. நண்பர் பேராசிரியர் ஒய்விண்ட் புக்ளரூட் சன்னல் கவிதையை நோர்வீஜிய மொழியாக்கம் செய்தார். சன்னலின் நோர்வீஜிய மொழியாக்கம் நோர்வீஜிய வெளிவிவகார அமைச்சின் ’நோராட்’ இதழில் வெளிவந்தது. இலக்கிய ஆர்வமுள்ள பெண்மணி செல்வி. நினி ரொப் எனது விசா அலுவலராக அமைந்தது அதிஸ்ட்டம் என்றே சொல்ல வேண்டும். சன்னல்கவிதை அவரைக் கவர்ந்ததது. அதனால் அவர் இக்கவிதையை குடிவரவு திணைக்கள் அதிகாரிகள் வெளிவிவகார அமைச்சு நீதி அமைச்சு அதிகார்களுக்கு பிரதி அனுப்பினார். இதனால் என் செல்வாக்கு உயர்ந்ததது. மட்டக்களப்பு அபிவிருத்தி தொடர்பான என்கட்டுரையின் பங்களிப்பின் அடிப்படையில் நோராட் என்னை தென்னாசிய நிபுணர் என கடிதம் தந்தது, அதன் அடிப்படையில் எனது கலைஞர்கள…
-
- 0 replies
- 1.3k views
-
-
முடிவுறாத் துயரத்தின் சாட்சியாய் முடிவேயற்ற புதைகுழிக்குள் மரணங்கள் மலிந்து மண்ணில் உதிரங்கள் இறைத்த நன்னாள் ஓலங்கள் ஒருங்கே கேட்டும் உதவிட யாரும் எண்ணா ஈனர்களாக்கி நாங்கள் ஒடுக்கி அடக்கி மண்ணில் உயிருடன் புதைத்த நன்னாள் உன்மத்தம் கொண்ட மூடர் ஊளைகளோடு ஊனை உறிஞ்சியே உதிர்த்தன அன்று எரிந்தன எங்கள் ஊர்கள் சரிந்தன சடலங்கள் அங்கே ஆணின் பெண்ணின் ஆடை அவிழ்த்து அம்மணமாக்கியே அரக்கர் சிரிக்க கூனிக் குறுகி நாம் மண்ணில் கரைய கொடுமைகள் அங்கே குவியலாயின கேடுகெட்டு நாம் பார்த்திருந்தோம் கைகள் அறுந்தன அன்…
-
- 1 reply
- 1k views
-
-
அம்மாவும் போராளிக் கவிஞன் தோழன் புதுவை இரத்தினதுரையும். . எங்கள் வீடு எப்பவும் போராளிகளுக்கு நிழலாக இருந்தது. என் அம்மாவும் அப்பாவும் போராளிகளையும் தங்கள் பிள்ளைகளாகவே அரவணைத்தார்கள். கவிதை ஈடுபாடுள்ள என் பெற்றோர் புதுவை இரத்தினதுரை மீதும் அவரது கவிதைகள்மீதும் பெருமதிப்பு வைத்திருந்தனர். போர்க்காலத்தில் வன்னியில் அம்மா சுகயீனமுற்றிருந்தபோது போராளி நண்பர்கள் பலர் என் அம்மாவைப் போய்பார்த்து நலம் விசாரித்த சேதியை தம்பி பாரதிதாசன் மூலம் அறிந்து நிமதியடைந்தேன். எனினும் சக கவிஞன் தோழன் புதுவை இரத்தினதுரை இன்னும் அம்மாவைப் போய்ப் பார்க்கவில்லை என்கிற சேதி கவலை தந்தது. . அந்த நாட்க்களில் கொங்கு நாட்டு காட்டாறான கொடுங்கரை ஆற்றுக்கு ஓசை காழிதாசுடன் சென்றிருந்தேன். நி…
-
- 0 replies
- 967 views
-
-
ஏரிக்கரைப் பூங்காற்றே... வானம் சிந்தாமல் மழையின் தூறல்கள் தேகம் நனைந்தாலும் மனதில் சாரல்கள் புரவியின் வேகமுடன் பரவிடும் நீரருவி பறந்திடும் பரவசத்தில் விரைந்திடும் நீர்த்திவலை வியப்பால் விழிவிரிய வனப்பால் மனம் நிறைய தமிழ்ப்பால் வார்த்தையின்றி தவித்தேன் உனைரசிக்க பாறை இடுக்ககளில் பனியின் துகள் சிதற சீறும் அரவமென உன் சீற்றம் எழுந்து நிற்க பொங்கு தமிழெனவே பொங்கி நீ நிமிர திங்கள் உன் அழகால் தினமும் நாணி நிற்க தாயாய் உனைக்கண்டேன் பேயாய் உனைக்கண்டேன் வெஞ்சினத்தால் துடிதுடிக்கும் வீரப்பெண்ணாய் உனைக்கண்டேன் காதலருக்கெல்லாம் நீ கண்ணுக்கு விருந்தானாய் கவிஞருக்கெல்லாம் நீ கவிதைப் பொருளானாய் கலைஞருக்கெல்லாம் நீ ஓவியக் கலையானாய் கன்னியருக்கெல்லாம் நீ கனவ…
-
- 5 replies
- 2k views
-
-
ஆபாசமென தமிழ்நாட்டு சஞ்சிகைகள் சில எனது “பாவைக் கூத்து” கவிதையை பிரசுரிக்க முடியாது என்றார்கள். தயவு செய்து இக்கவிதையை வாசித்து உங்கள் கருத்தை எழுதுங்கள்.பத்திரிகையாளர்கள் துணிச்சலுடன் பிரசுரிக்க விரும்பினால் பிரசுரியுங்கள். , பாவைக் கூத்து - வ.ஐ.ச.ஜெயபாலன் * அம்ம வாழிய தோழி, யார் அவன் என்று வினாக்குறியானாய் அறிந்திலையோடி? * வீட்டுக் காவல் மறந்து சந்து பொந்து மரங்களில் எல்லாம் காலைத் தூக்கி நின்றாடி பெட்டை நாய்களுக்கு மூத்திரக் குறுஞ்சேதி எழுதி அலையுமே அந்த சீமை நாயின் பேர் இல்லத்து வம்பனடி அவன். போயும் போயும் அவனையா கேட்டாய்? * பொம்மலாட்டப் பாவையைபோல் ஒருவர் சொல்லுக்கு ஒருவர் ஆடிய இனிய நம் நாட்கள் போய்விடும் தோழி. உன் மழலை அ…
-
- 2 replies
- 1.6k views
-
-
கவிதையோடு வாழ்பவனும்.... கவிதையாக வாழ்பவனும்.... கவிஞன்........! கண்டதை எழுதுவதும்.... கண்டபடி எழுதுவதும்.... கவிதையில்லை....... கண்ணியமாய் எழுதுபவன்..... கவிஞன்........! காதலால் ............. கவிதை வரும் என்பதை.... காட்டிலும்........... காதலோடு கவிதை...... எழுதுபவன் உண்மை..... கவிஞன்..........! சமூக ...... சீர்திருத்தத்துக்காய்..... கவிதை எழுதுவதைவிட.... சமூகத்திலிருந்து...... சீர்திருந்தி வாழ கவிதை..... கவிதை எழுதுபவன்..... கவிஞன்...........! …
-
- 5 replies
- 3.8k views
-
-
கவிப்புயலின் கஸல்கள் ---------------------------- சில நேரங்களில்.... கனவுகள் பலித்தால்.... வலியென்ன என்பதை.... உன் காதலில் கற்றுக்கொண்டேன்.....! நீ..... நினைவில் வரும்போது..... தலைவலி தருகிறாய்.... கனவில் வரும் போது.... தலைவிதியாகிறாய்......! நீ போன ஜென்மத்தில்.... பட்டாம் பூசியாய்.... இருந்திருக்கிறாய்...........! @ கவிப்புயல் இனியவன் கவிப்புயலின் கஸல் 01
-
- 4 replies
- 1.3k views
-
-
நெ - போ கவிதைகள்.. இரண்டு சொல்லுக்குள் (பெயர் - வினை.. பெயர் - பெயர்.. வினை - வினை.. பெயர் எச்சம் - பெயர்.. வினை எச்சம் - வினை.. வினை எச்சம் - பெயர்.. பெயர் எச்சம்.. வினை எச்சம்... இப்படி எல்லாம் கலந்து வரும்) ஒரு கவிதை. அடைப்புக்குள் கவிக்கான கரு அமையும். உங்களின் கற்பனை திறனுக்கு ஏற்ப அது நெடுத்து.. நெடுக்கால போய்க்கிட்டே இருக்கும்... அதனால்... அதுக்கு நெ - போ கவிதைகள் என்று பெயரிடப்படுகிறது. (முழுக்க முழுக்க யாழுக்கு என்று யாழில் ஆரம்பமாகிறது.) நீங்களும் கவிதைகளை வார்க்கலாம்... தொடக்கம்.. கவிதை -1 யாழ்... தொடக்கம்... ( இசையின் தொடக்கம்) கவிதை 2.. சொல்... மழை.. (கவிதை)
-
- 176 replies
- 16.9k views
-
-
கவிதையோடு வாழ்பவனும் கவிதையாக வாழ்பவனுமே கவிஞன் & கவிஞனின் சின்ன கிறுக்கல்கள் கவிப்புயல் இனியவன்
-
- 233 replies
- 43.5k views
-
-
விண்ணை அளந்திடும் புள்ளினம் போல் மனம் எண்ணிலா எண்ணம் கொண்டு மிதந்திடும்; மண்ணில் சூரியக் வெளிச்சமும் விழு முன்னே கண்ணும் விழித்த கணமே துள்ளி எழ வைக்கும்; திண்ணிய மனதுடன் எண்ணிய கருமத்தை வண்ணமுறச் செய்திடும் துணிவையும் தந்திடும்; தன்னைக் கற்றுணர்ந்து கொண்ட இலட்சியம் உண்மையென நம்பி உழைக்கும் மனிதர்க்கு! *** எழிலினை எதனிலும் கண்டு நயந்திடும் பார்வையும் முழுமையிலா அவனியின் தன்மை உணர் புன்னகையும் அழுக்காறு களைந்து பிறரை வாழ்த்திடும் உள்ளமும் ஆழ்மனம் சொல்லும் வழி விலகாத வாழ்வும் கொள்ள அளவில்லாக் களிப்பில் ஆன்மா முழுமை கொள்ளும்! *** எல்லைகள் தெரியா விரிந்த வான வெளி - ஆங்கே எல்லையாய் உந்தன் மனம் இடும் வேலி. வண்ணங்கள் ஏழு அழகு வானவிலில் - உன் எண்ணக் கனவின் வண்ணங்கள் எண்ணில; க…
-
- 19 replies
- 6.2k views
-
-
உன் இதயத்தில் நான் என்னை கொல்ல காதலை நிறுத்து ...!!! நீ கடந்து வந்த பாதை கவிதையானது காதலில் இணைந்த பெற்றோர் காதலை வெறுக்கிறார்கள் காதல் சிரிகிறது ....!!! + கவிப்புயல் இனியவன் கஸல் கவிதை ;780 +++++++++++++++ நான் .. காதலுக்காக ஏங்குகிறேன் ... நீ காதல் சொல்ல தயங்குகிறாய் ... வயிறு பசியில் அழுகிறது ... கண் கண்ணீருக்காக அழுகிறது .. மனம் காதலுக்காக அழுகிறது ... மன காயப்படும் போது ... யார் ஆறுதல் சொல்வார்கள் .. என்று எங்கும் மனம் போல் .. உன்னை தேடுகிறேன் ...!!! + கஸல் கவிதை ++++++++++++++++ இதயத்தை நானே வெட்கப்படுகிறேன் என்னை தூக்கி எறிந்து உன்னை வைத்திருப்பதற்காக .... உனக்காகவே வாழ்கிறேன் எனக்காக நீ எப்போது வாழ்வாய் ...? கடிகாரத்…
-
- 219 replies
- 25.9k views
-
-
ஒரு சாதாரணக் கவிஞனின் அசாதாரணக் கவிதைகள் 99 எனக்குப் பேய் பிடித்திருக்கிறது அவளுக்குப் பேய் பிடித்திருக்கிறது என்கிறார்கள் இருக்கிறதா இல்லையாவென்று தெரியாவிட்டாலும் எனக்கும் பேய் பிடித்திருக்கிறது அவளுக்குப் பிடித்திருக்கிறது என்பதற்காக மட்டுமின்றி, பேய்களுக்குக் கோயில் இல்லை வேளா வேளைக்குப் பூஜை இல்லை அபிஷேகம் அலங்காரம் காணிக்கை உண்டியல் அறவே இல்லை தேர் இல்லை திருவிழா இல்லை சப்பார பவனி கூட இல்லை கடவுளைப் போல் பேய்கள் சாதி மதம் பார்ப்பதில்லை. ஓட்டத்தான் வேண்டுமெனில் கடவுள்களை ஓட்டிவிட்டு பேய்களை ஓட்டுங்கள் ஒரு சாதாரணக் கவிஞனின் அசாதாரணக் கவிதைகள் 98 பாத்திரமறிந்து பிச்சையிடுகிறது தெய்வம் தங்கத்தட்டில் வைரக்கற்களையும் அலுமினியத் தட்டில் சில்லர…
-
- 228 replies
- 34k views
-
-
எல்லா இரவுகளையும் போல சில இரவுகள் இருப்பதில்லை வானில் அலையும் ஒற்றைக் குருவியின் துயர் அப்பிய குரலை போல சில இரவுகள் காரணமின்றி துயரால் நிரம்புகின்றன எங்கோ அறுந்து போன ஒரு இழை ஞாபகத்தில் வந்திருக்கலாம் என்றோ காணாமல் போன நண்பனின் குரல் மீண்டும் கேட்டு இருக்கலாம் அல்லது எப்போதோ எவருமற்று தனித்து விடப்பட்டதின் துயரம் தீண்டி இருக்கலாம் புரண்டு படுக்கையில் நிரடிப் போகும் ஒரு நொடி நினைவுத் துளியால் சில இரவுகள் காரணமின்றி துயரத்தில் மூழ்கி விடுகின்றன ரயில் பயணங்களில் இரா வேளையில் குளிர் காற்றிடை பாடும் விழியற்ற பாடகனின் குரலில் வழியும் வேதனையைப் போல இருக்கின்றன இந்த இரவுகள் பின்னிரவொன்றில் விளக்கற்ற வீதி ஒன்றில் விற்று முடிந்து செ…
-
- 12 replies
- 3.5k views
-
-
உடைப்பு மழைக்காடு வறண்டதென்று வரி புனையும் வண்ணம் சக்கரவாகம் மழை தின்றதெவ்வாறு? எண்ண எரிவுகளில் பினீக்ஸ் பிறப்பு மட்டும் கன்னம் வருடி நின்று கனிவது எங்ஙனம்? பூமி காலடிக்குள் புதைந்து மறைவதாக வானுலகம் வியாபித்து விரிந்தது எக்கணம்? வல்லமையின் பொழுதொன்றை அல்லதென்றாக்கும் வனையப்படாத வினையூக்கி எது? நெருஞ்சின்முட்களை நொறுக்கி சிரிக்கின்ற பூக்களை அள்ளி வந்த காற்றின் முகவரி யாது?
-
- 26 replies
- 6.1k views
-
-
வசந்தம் தாய்மண்ணைத் தழுவாமல் போகிறது. வாய்கள் பல இருந்தும் மௌனத்தில் நோகின்றன. எரிக்கும் நெருப்படக்கி இனமொன்று வேகிறது எதுவரைக்கும் தான் முடியும்? எழும்போது உலகம் தெளியும். வளவுக் குயில்கள் குரலிழந்து போயுளன. வாசக் காற்றும் கந்தகத்துள் தோய்ந்துளது. உப்புக்கடல் எழுந்த ஒப்பாரிப் பேரலைகள் கொட்டிய மனித சாம்பலுடன் கரைந்துளன. முற்றத்து மலர்களை முட்செடிகள் கிழித்துளன. மூசிய பேய்க்காற்றில் ஊர்களெலாம் தீய்ந்துளன. செத்தகூடுகள், சிதைந்த உறுப்புகள் நச்சுக் காற்றினால் வீழ்த்திய மெய்களென வல்லரக்கத் தனத்திற்கு வெள்ளோட்டம் முடிந்துளது. எண்ணிப் பார்க்குமுன்னே ஏதேதோ நடந்துளன. சொந்தமண் இப்போது சோகத்தில் தவித்துளது. ஆறாப் பெருந்துயரில் அள்ளுண்ட …
-
- 15 replies
- 2.7k views
-
-
ஒரு முறை பிறந்து பல முறை இறந்து பட்டப் பகலில் பார்வை இழந்து பசியோடு அலைகிறோம் பார்பவன் யாரும் இல்லை போர் ஒன்று வந்து புயல் போல் வீச அங்கும் இங்குமாக அலைகிறோம் ஆற்றில் கிடக்கும் ஆல இலைபோல மனிதப் பிறவியை மதிக்காத இந் நாட்டில் மனிதப் பிறவியே வேண்டாமையா என்று மனது உறுத்துகிறது மறுயென்மம் இருந்தால் பிறப்போம் நல்ல மனிதர்களாக …
-
- 32 replies
- 5.2k views
-
-
நாய் ஒடுக்கி வைத்தாலும் நியாயம் பேசும் வல்லமைகள்... பனிவிழும் தேசத்து பழகுதமிழ் சோதரே! இனி வரும் காலம் எங்கள் இருப்புணர்த்தும் நேரம். ஆண்டுகள் சிலமுன்னர் நாம் எங்கு நிலையிருந்தோம்? மீண்டோம் எனும் நினைப்பா... நேற்றைகளை குடித்துளது? மாண்டு நம் உறவெல்லாம் மண்தின்னப் பார்த்திருந்தும் கூண்டுக்குள் எமைப்பூட்டி குரல் அடங்கி கிடப்பது ஏன்? கண்விசிக்க, மனம் வலிக்க, காலமுகம் கண்டிருந்தும், கங்குல் கரைத்தழிக்கும் காலம் விட்டு நிற்பது ஏன்? கந்தகத்து முட்களிடை சொந்த நிலம் வேகுவதை - உம் செங்குருதிப்பூ விரித்துப் பார்த்திடுக உறவுகளே! அன்னை திருவாசல் அகலத்திறந்து நீ முன்னை குதித்தநிலம் உன் மூத்த தாய் அல்லவா? அவள் வண்ணத் திருமேனி வலியேந்தி நல…
-
- 6 replies
- 2.2k views
-