தமிழகச் செய்திகள்
தமிழகச் செய்திகள் பகுதியில் முக்கிய தாய்த் தமிழகச் செய்திகள் இணைக்கப்படலாம்.
இப்பகுதியில் முக்கியமான தமிழகச் செய்திகள் மாத்திரம் இணைக்கப்படல் வேண்டும்.
10262 topics in this forum
-
நித்தியானந்தாவை கைதுசெய்ய இன்ரர்போல் ‘Blue Corner Notice’ வெளியீடு! சர்ச்சைக்குரிய சாமியார் நித்தியானந்தாவை கைதுசெய்வதற்கு சர்வதேச விசாரணை அமைப்பான இன்ரர்போல் ப்ளூ கோர்னர் நோட்டீஸ் (Blue Corner notice) வெளியிட்டுள்ளது. சாமியார் நித்தியானந்தா மீது பாலியல் குற்றச்சாட்டுக்கள் உள்ளிட்ட பல்வேறு குற்றச்சாட்டுக்கள் சுமத்தப்பட்டுள்ள நிலையில் அவர் தலைமறைவாகியுள்ளார். இந்நிலையில், அவரைப் பிடிப்பதற்கு சர்வதேச புலனாய்வு அமைப்பான இன்ரர்போலிடம் உதவி பெறும் வகையில் குஜராத் மாநில பொலிஸார் குற்றவியல் விசாரணைத் துறைக்கு கடிதம் எழுதியுள்ளனர். அதேசமயம், நித்தியானந்தாவைக் கண்டுபிடிக்க உயர் நீதிமன்றம் விதித்த கெடு முடிவடைந்த நிலையில், நித்தியானந்தாவுக்கு எதிராக புளூ கோர்னர்…
-
- 2 replies
- 1.1k views
-
-
நீட் தேர்வுக்கு விண்ணப்பித்தவர்களின் எண்ணிக்கையில் சரிவு 2019ஆம் ஆண்டைக் காட்டிலும் 2020இல் நடக்கும் நீட் தேர்வுக்கு விண்ணப்பித்தவர்களின் எண்ணிக்கை தமிழகத்தில் 17 சதவீதம் சரிந்துள்ளது. இந்த ஆண்டு தமிழகத்தில் இருந்து 1,17,502 மாணவர்கள் நீட் தேர்வுக்கு விண்ணப்பித்துள்ளனர். இது கடந்த ஆண்டை காட்டிலும் 17 சதவீதம் குறைவாகும். 2016ஆம் ஆண்டுக்கு பின்னர் தமிழகத்திலிருந்து நீட் தேர்வுக்கு விண்ணப்பிக்கும் மாணவர்களின் எண்ணிக்கை தற்போதுதான் குறைந்துள்ளது. தேசிய அளவில் நீட் தேர்வுக்கு விண்ணப்பித்திருக்கும் மாணவர்களின் எண்ணிக்கை 74 ஆயிரமாக அதிகரித்துள்ளது. இது தொடர்பாக ஆசிரியர்கள் கூறுகையில், பலமுறை தேர்வு எழுதும் மாணவர்களே அதிகளவில் நீட் தேர்வில் தேர்ச்சி பெறுவதாலும்…
-
- 0 replies
- 563 views
-
-
பேரறிவாளன் விவகாரம்: தமிழக அரசு பதிலளிக்க உச்ச நீதிமன்றம் உத்தரவு முன்னாள் பிரதமர் ராஜீவ் காந்தி கொலை வழக்கில் ஆயுள் தண்டனை அனுபவித்துவரும் பேரறிவாளன் விவகாரத்தில் தமிழக அரசு எடுத்த நடவடிக்கை குறித்து பதில் அளிக்கும்படி உச்ச நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. தனது தண்டனையை இரத்து செய்யுமாறு கோரி, பேரறிவாளன் உச்ச நீதிமன்றத்தில் மனுவொன்றை தாக்கல் செய்திருந்தார். மேலும் ராஜீவ் காந்தியை கொலை செய்ய பயன்படுத்திய பெல்ட் வெடிகுண்டில் வைக்கப்பட்ட பேட்டரியை வாங்கி கொடுத்ததாக தன் மீது குற்றம் சாட்டப்பட்டதாகவும், ஆனால் அந்த குற்றச்சாட்டு சந்தேகத்துக்கு இடமின்றி நிரூபிக்கப்படவில்லை என்றும் பேரறிவாளன் குறித்த மனுவில் கூறியிருந்தார். இந்த வழக்கு கடந்த முறை விசாரணைக்கு எடுத்…
-
- 0 replies
- 473 views
-
-
அலங்காநல்லூர் ஜல்லிக்கட்டில் இன்று ஒரே நாளில் மாடு முட்டியதில் மாணவர் ஒருவரும், பார்வையாளர் ஒருவரும் உயிரிழப்பு Puvi Moorthy மதுரை: அலங்காநல்லூரில் ஜல்லிக்கட்டு போட்டியை காண வந்தவர் திடீரென மயங்கி விழுந்து உயிரிழந்ததால் பரபரப்பு ஏற்பட்டுள்ளது. முதலுதவி அளித்து மேல்சிகிச்சைக்காக கொண்டு செல்லும் போது செல்லப்பாண்டி என்பவர் உயிரிழந்தார். அலங்காநல்லூரில் இன்று ஒரே நாளில் மாடு முட்டியதில் மாணவர் ஒருவரும், பார்வையாளர் ஒருவரும் உயிரிழந்துள்ளனர். அலங்காநல்லூரில் ஜல்லிக்கட்டு மாடு முட்டி அதன் உரிமையாளர் ஸ்ரீதரன் என்பவர் உயிரிழந்தார். மாடு முட்டி உயிரிழந்த காளை உரி…
-
- 28 replies
- 2.4k views
- 1 follower
-
-
சண்டைக்கோழியினால் கொல்லப்பட்ட இந்தியர் இந்தியாவின் ஆந்திரப் பிரதேசத்தில் கோழிச்சண்டை தடைசெய்யப்பட்ட ஒரு விளையாட்டு. அப்படியிருந்தும், பலர் இந்த விளையாட்டில் கலந்துகொள்கிறார்கள். சண்டைக்கென்று வளர்க்கப்படும் சேவல்களின் கால்களில் கூரான சிறிய கத்தி கட்டப்பட்டிருக்கும். சண்டையின்பொழுது எதிர்ச் சேவல் இக்கத்தியினால் குத்தப்பட்டு கொல்லப்படும் வரைக்கும் சண்டை தொடரும். மிருகவதையினைக் காரணம்காட்டி இக்கோழிச் சண்டைகள் தடைசெய்யப்பட்டிருக்கின்றன. சென்ற வெள்ளிக்கிழமை ஆந்திரப் பிரதேசத்தில் இவ்வகையான கோழிச்சண்டை நிகழும் இடத்தில் ஒருவர் கோழியின் கத்தி வயிற்றைக் கிழித்ததினால் மரண்மடைந்திருக்கிறார். இரு சேவல்களும் சண்டையிடும் சிறிய வட்டத்தினுள் சேவல்களை நிற்கவைக்க போட்டி நடத்துனர் …
-
- 0 replies
- 903 views
-
-
இலங்கை தமிழர்கள் 4.61 இலட்சம் பேருக்கு குடியுரிமை வழங்கப்பட்டுள்ளது- நிர்மலா சீதாராமன் குடியுரிமை திருத்தச் சட்டத்தால் பழைய நடைமுறைகளில் எந்த பாதிப்பும் ஏற்படாது. 1964 முதல் 2008 வரை 4.61 இலட்சம் இலங்கை தமிழர்களுக்கு குடியுரிமை வழங்கப்பட்டுள்ளதென இந்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் தெரிவித்துள்ளார். சென்னையில் நேற்று (ஞாயிற்றுக்கிழமை) நடைபெற்ற நிகழ்வில் கலந்தகொண்டு கருத்து தெரிவிக்கும்போதே அவர் இவ்வாறு குறிப்பிட்டுள்ளார். குறித்த கூட்டத்தில் நிர்மலா சீதாராமன் மேலும் கூறியுள்ளதாவது, “ குடியுரிமை திருத்தச் சட்டம் யாருடைய குடியுரிமையையும் நிராகரிக்கும் சட்டமல்ல. புதிய குடியுரிமையை வழங்குவதற்காகவே கொண்டுவரப்பட்டுள்ளது. பாகிஸ்தான், ஆப்கானிஸ்தான், பங்களாதே…
-
- 0 replies
- 708 views
-
-
தமிழக முதலமைச்சரின் செயற்பாட்டுக்கு குடியரசுத்தலைவர் பாராட்டு விவசாயியாக இருந்ததை மறக்காமல் இன்றும் விவசாயம் செய்யும் தமிழக முதலமைச்சரின் செயல்கள் மகிழ்ச்சியை ஏற்படுத்தி உள்ளதாக துணை குடியரசுத்தலைவர் வெங்கய்யா நாயுடு தெரிவித்துள்ளார். இவ்விடயம் தொடர்பாக தனது டுவிட்டர் பக்கத்திலேயே வெங்கய்யா நாயுடு தெரிவித்துள்ளார். குறித்த டுவிட்டர் பதிவில் மேலும் தெரிவித்துள்ளதாவது, “ முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி, தன்னுடைய செயற்பாடுகள் ஊடாக மக்களை கவர்ந்து அவர்களை ஊக்கப்படுத்தி வருகிறார். இதனால் மக்கள் நிலையான விவசாயத்தை கையில் எடுத்து அதன்மேல் கவனத்தை செலுத்த வேண்டும். ஆட்சி செயற்பாடுகள் மூலம் பல்வேறு விருதுகளை மத்திய அரசிடம் இருந்து பெற்று வந்த முதலமைச்சர், இப்போது…
-
- 0 replies
- 787 views
-
-
உலகிலேயே அதிக அறிவுத்திறன் கொண்ட தமிழகச் சிறுமி….!! வாழ்த்துங்கள்.! உலகிலேயே அதிக அறிவுத்திறன் கொண்ட திருநெல்வேலியை சேர்ந்த சிறுமி விசாலினி…!!11வயதில், தனக்குரிய இணைய தளத்தைத் தானே வடிவமைத்தவர்.அதுவும் 24 மணிநேரத்தில். தான் கற்றதோடு மட்டும் நிறுத்தவில்லை இவர். கற்பிக்கவும் தொடங்கினார். தன் 11வயதில், 25 க்கும் மேற்பட்ட இன்ஜினியரிங் கல்லூரிகளுக்கு அழைக்கப்பட்டு அங்கு Final Year மாணவர்கள், கல்லூரிப் பேராசிரியர்கள், துறைத் தலைவர்கள் (HOD’s), முதல்வர்களுக்கு Seminar வகுப்புகளை நடத்தியவர். இவரது திறமையை அறிந்த Indian Overseas Bank நிர்வாகம் சர்வதேச தலைமையகத்துக்கு வருகை தருமாறு அழைப்…
-
- 4 replies
- 1.7k views
-
-
இலங்கை அகதிகள் முகாம்களில் அடிப்படை வசதிகள் இல்லை.. பார்த்தாலே கண்ணீர் வருகிறது… January 19, 2020 இலங்கை, வங்கதேச அகதிகளுக்கான முகாம்களில் அடிப்படை வசதிகள் ஏதும் இல்லை. இந்த முகாம்களைப் பார்க்கும் போது கண்ணீரை வரவழைக்கிறது என நிதி அமைச்சர் நிர்மலா சீதாராமன் தெரிவித்துள்ளார். மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி ஆம் ஆத்மி தமுமுக மனிதநேய மக்கள் கட்சி புதிய நீதிக் கட்சி விடுதலைச் சிறுத்தைகள் புதிய தமிழகம் பகுஜன் சமாஜ் கட்சி மக்கள் நீதி மய்யம் மனிதநேய ஜனநாயகக் கட்சி சமத்துவ மக்கள் கட்சி நாம் தமிழர் கட்சி பாமக தமிழக வாழ்வுரிமைக் கட்சி மதிமுக அதிமுக திமுக காங்கிரஸ் பாஜக தமாகா இந்திய கம்யூனிஸ்ட் கட்சி மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி ஆம் ஆத்மி தமுமுக மனிதந…
-
- 2 replies
- 1.1k views
-
-
சீறும் 700 காளைகள்.. களமிறங்கிய 730 வீரர்கள்.. தெறிக்கவிடும் புகழ்பெற்ற அவனியாபுரம் ஜல்லிக்கட்டு! தமிழர் பண்டிகையான பொங்கல் பண்டிகையை முன்னிட்டு, மதுரை அலங்காநல்லூரில் ஜல்லிக்கட்டு போட்டி மிக சிறப்பாக நடந்து வருகிறது. தமிழர் பண்டிகையாக பொங்கல் பண்டிகை கொண்டாடப்பட்டு வருகிறது. எல்லா மதத்தினரும் இயற்கையை போற்றி இந்த பொங்கல் பண்டிகையை கொண்டாடுகிறார்கள். தமிழர் மரபுகளை நினைவு கூறுவதும், பாரம்பரியத்தை நினைவு கூறுவதும், பழமையை நினைவு கூறுவதும் இந்த பண்டிகையின் முக்கிய நோக்கம் ஆகும்.பொங்கல் பண்டிகையை முன்னிட்டு தமிழகம் முழுக்க பல்வேறு பகுதிகளில் உரிய அனுமதியுடன், மாபெரும் பாதுகாப்புடன் ஜல்லிக்கட்டு போட்டி நடந்து வருகிறது. அதன் ஒரு பகுதியாக தமிழகத்தில் பாராமபாரியமான மது…
-
- 4 replies
- 1.4k views
- 1 follower
-
-
திருச்சி நகரத்தில் சாலையோரம் வசித்துவந்த பெண் ஒருவரை லாரி ஓட்டுநர் ஒருவர் பாலியல் வன்புணர்வுக்கு உட்படுத்திய சம்பவம் அங்கு அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. பாதிக்கப்பட்ட பெண் தற்போது காயங்களுடன் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக காவல்துறையினர் தெரிவித்துள்ளனர். திருச்சி மாவட்டம் காந்தி மார்க்கெட் பகுதியில் சாலையோரம் பிச்சையெடுத்து வந்த பெண் ஒருவர் உணவு மற்றும் பணஉதவியை எதிர்பார்த்து பலரிடம் உதவி கேட்டுள்ளார். அவருக்கு உதவி செய்வதாகக் கூறி லாரி ஓட்டுநர் சதீஸ்குமார் கடந்த புதன் கிழமையன்று (ஜனவரி 15) அவரை மறைவான இடத்திற்குக் கூட்டிச்சென்று அவரை பாலியல் வன்…
-
- 0 replies
- 875 views
-
-
படத்தின் காப்புரிமை ARUN SANKAR / Getty தந்தை பெரியார் குறித்து அவதூறான கருத்துகளை பொது வெளியில் தெரிவித்து, வதந்தி பரப்பி, பொது அமைதியை குலைக்கும் வகையில் நடிகர் ரஜினிகாந்த் பேசியிருப்பதால், அவர் மீது நடவடிக்கை எடுக்கவேண்டும் என திராவிடர் விடுதலை கழக உறுப்பினர்கள் சென்னை திருவல்லிக்கேணி காவல்நிலையத்தில் புகார் அளித்துள்ளனர். கடந்த ஜனவரி14ம் தேதி சென்னையில் நடைபெற்ற துக்ளக் இதழின் ஆண்டு விழாவில் பேசிய நடிகர் ரஜினிகாந்த், 1971ல் சேலத்தில் தந்தை பெரியார் நடத்திய பேரணி ஒன்றில் ராமன், சீதை ஆகியோரின் நிர்வாண உருவங்களை எடுத்துச்சென்ற நிகழ்வு நடத்தப்பட்டது என பொய்யான தகவலை ப…
-
- 0 replies
- 479 views
-
-
கும்பகோணத்தில் வடமாநில இளம்பெண்ணை பாலியல் வன்கொடுமை செய்யப்பட்ட வழக்கில் நான்கு இளைஞர்களுக்கு வாழ்நாள் சிறைத் தண்டனையும், மேலும் இந்த வழக்கில் தொடர்புடைய ஆட்டோ டிரைவருக்கு 7 ஆண்டுச் சிறைத் தண்டனையும் விதித்து தஞ்சாவூர் மகளிர் நீதிமன்றம் இன்று பரபரப்பான தீர்ப்பு வழங்கிள்ளது. டெல்லியைச் சேர்ந்தவர் 27 வயது நிரம்பிய இளம்பெண். இவருக்குக் கும்பகோணத்தைத் தலைமையிடமாகக் கொண்டு இயங்கும் தனியார் வங்கியில் வேலை கிடைத்தது. இதன் பயிற்சிக்காக டெல்லியிலிருந்து சென்னை வந்தவர் பின்னர் திருச்செந்தூர் எக்ஸ்பிரஸ் ரயில் மூலம் சென்னையிலிருந்து கும்பகோணத்திற்கு 2018-ம் ஆண்டு டிச 1-ம் தேதி வந்தார். ரயில் இரவு 11 மணியளவில் தாமதமாக கும்பகோணம் வந்தடைந்துள்ளது. ரயிலை விட்டு இறங்கிய …
-
- 3 replies
- 1.5k views
-
-
முரளிதரன் காசிவிஸ்வநாதன் பிபிசி தமிழ் (கோப்புப்படம்) சென்னையில் தற்போது நடந்துவரும் புத்தகக் கண்காட்சியில் பல பதிப்பாளர்களுக்கு கடைகள் ஒதுக்கப்படவில்லையென குற்றம்சாட்டப்படுகிறது. கருத்து சுதந்திரம் இல்லையென கூறப்படுகிறது. உண்மையில் புத்தகக் கண்காட்சி எப்படி, எதற்காக நடத்தப்படுகிறது? செ…
-
- 0 replies
- 795 views
-
-
தமிழக பா.ஜ.க தலைவர் யார் என்பது குறித்த அறிவிப்பு இன்று? தமிழக பா.ஜ.க தலைவர் யார் என்பது இன்று(வெள்ளிக்கிழமை) அறிவிக்கப்படும் எனத் தகவல் வெளியாகியுள்ளது. புதுச்சேரி பா.ஜ.க தலைவராக வி.சாமிநாதனே மீண்டும் நியமிக்கப்பட்டுள்ளார். 2015-ஆம் ஆண்டு முதல் இவர், அந்த பொறுப்பில் இருக்கிறார். அதேபோல போராட்டக்காரர்களை சுட்டுத்தள்ள வேண்டும் என பேசி சர்ச்சையில் சிக்கிய திலீப் கோஷ்க்கு மீண்டும் மேற்குவங்க மாநில பா.ஜ.க தலைவர் பொறுப்பு வழங்கப்பட்டுள்ளது. ஒடிசா மாநிலத்தில் பாஜக தலைவராக சமிர் மொஹந்தி போட்டியின்றி தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளார். 61 வயதான மொஹந்தி, 2016-ஆம் ஆண்டு முதல், ஒடிசா மாநில பாஜகவின் துணைத்தலைவராக பொறுப்பு வகித்தவர். உத்தரகாண்ட் மாநிலத்தில் பன்ஷிதார் ப…
-
- 0 replies
- 430 views
-
-
வெங்கையா நாயுடு வெளியிட்ட ஒற்றை புகைப்படம்...!! கொந்தளித்த தமிழகம்...! திருவள்ளுவர் தினத்தை முன்னிட்டு காவி உடையில் , கழுத்தில் ருத்ராட்ச மாலை , நெற்றியில் திருநீற்றுப் பட்டை என உள்ள திருவள்ளுவர் படத்தை துணை ஜனாதிபதி வெங்கையா நாயுடு ட்விட்டர் பக்கத்தில் பகிர்ந்து திருவள்ளுவர் தின வாழ்த்து கூறியிருப்பது சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது . தமிழ்ப்புலவர் , தெய்வப்புலவர் , திருவள்ளுவரை பாஜகவினர் இந்து மத அடையாளங்களை புகுத்தி அவரை இந்துவாக சித்தரிக்க முயற்சிக்கும் நடவடிக்கையில் இறங்கியுள்ளனர். இது தமிழகத்தில் மிகப் பெரிய அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது . பாஜகவின் இம்முயற்சிக்கு எதிர்ப்பு தெரிவித்து எதிர்க்கட்சிகள் கண்டனம் தெரிவித்து வருகின்றன. இந்நி…
-
- 0 replies
- 559 views
-
-
திமுக காங்கிரஸ் கூட்டணியில் விரிசல்? காங்கிரஸ் கூட்டத்தில் பங்கேற்காதது ஏன்.. டிஆர் பாலு விளக்கம் திமுக எம்பி டி.ஆர்.பாலு சொல்வதை பார்த்தால் திமுக காங்கிரஸ் கூட்டணியில் விரிசல் ஏற்பட்டது உறுதியாகி உள்ளது. உள்ளாட்சி தேர்தல் சீட் பங்கீட்டில் கூட்டணி தர்மத்தை திமுக காப்பாற்றவில்லை என்று கேஎஸ் அழகிரி சொன்னது பெரிய அளவில் திமுக கூட்டணியில் சலசலப்பை ஏற்படுத்தியது.இதற்கு திமுக தரப்பில் எந்த பதிலும் அளிக்கப்படவில்லை. அதேநேரம் டெல்லியில் குடியுரிமை காங்கிரஸ் கமிட்டியின் தலைமையில் எதிர்க்கட்சிகள் கூட்டம் நேற்று நடந்தது. குடியுரிமை திருத்த சட்டம், என்ஆர்சி, ஜேஎன்யூ மாணவர்கள் தாக்கப்பட்டது, நாடு முழுக்க நடக்கும் போராட்டம் ஆகியவை குறித்து இதில் ஆலோசனை செய்யப்பட்டது.எத…
-
- 4 replies
- 933 views
- 1 follower
-
-
சர்ச்சைக்குரிய சாமியார் நித்தியானந்தாவின் சீடர் மர்மமான முறையில் உயிரிழப்பு! சர்ச்சைக்குரிய சாமியார் நித்தியானந்தாவின் குஜராத் ஆசிரமத்தைச் சேர்ந்த சீடர் ஒருவர் மர்மமான முறையில் உயிரிழந்துள்ளார். சர்ச்சைக்குரிய சாமியார் நித்தியானந்தாவை இண்டர்போல் உதவியுடன் அகமதாபாத் மற்றும் பெங்களூர் பொலிஸார் தீவிரமாக தேடி வருகின்றனர். நித்தியானந்தாவுக்குச் சொந்தமான குஜராத்தில் உள்ள யோகினி சர்வஜன பீடம் ஆசிரமத்தைச் சேர்ந்த சதீஷ் செல்வகுமார் என்கிற ஸ்ரீநித்திய ஈஷ்வர பிரியானந்தா என்பவர் கடந்த சில நாட்களாக மாயமானார். இந்நிலையில் அவரது உடல் இந்திய – நேபாள எல்லையில் கண்டெடுக்கப்பட்டு வாரணாசியில் உள்ள நித்தியானந்தா ஆசிரமத்தில் தகனம் செய்யப்பட்டதாக தகவல் வெளியாகியுள்ளது. இந…
-
- 0 replies
- 441 views
-
-
சென்னை ரஜினிக்கும் விஜய்க்கும் இடையே தான் போட்டி நிலவுவதாக, நாம் தமிழர் கட்சி தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் தெரிவித்துள்ளார். சீமான் இன்று (வெள்ளிக்கிழமை) செய்தியாளர்களை சந்தித்துப் பேசியதாவது: "ஆட்சியில் இருக்கும்போது தமிழர்களுக்கு வேலைவாய்ப்பு கொடுக்காமல் யாருக்கு வேலை கொடுத்தீர்கள் என்ற கேள்விக்கு திமுகவிடம் இருந்து என்ன பதில் வரும்? ஈழப்படுகொலைக்கு துணை நின்றவர்களே, ஈழப்படுகொலைக்கு நியாயம் கேட்கின்றனர். 10 ஆண்டுகளாக ஐநாவில் தங்கள் பிரதிநிதிகளை அனுப்பி பேசாத அவர்கள், இப்போது ஏன் பேசுகின்றனர்? அதற்குக் காரணம் எங்கள் அரசியல் வலுப்பெறுகிறது. திராவிடக் கட்சிகளால் எல்லாமும் அழிவதை பார்க்கும் இளைய தலைமுறையினர் போராடத் தொடங்கு…
-
- 0 replies
- 910 views
-
-
சென்னை: சென்னையில் நடைபெற்று வரும் 43-வது புத்தக கண்காட்சியில் ஈழத் தமிழர் பிரச்சனை, தமிழீழ விடுதலைப் புலிகள் இயக்கம் தொடர்பான ஆதரவு- எதிர்ப்பு நூல்கள் அதிகம் விற்பனையாகின்றன. இருப்பினும் தடை செய்யப்பட்ட விடுதலைப் புலிகள் இயக்கம் தொடர்பான நூல்களை புத்தக கண்காட்சியில் இருந்து அகற்ற வேண்டும் என்று தமிழக பாஜக வலியுறுத்தியுள்ளது. சென்னை புத்தக கண்காட்சியில் இம்முறை சர்ச்சைகளும் அரங்கேறி வருகின்றன. அரசுக்கு எதிரான நூல்களுடன் அமைக்கப்பட்டிருந்த மக்கள் செய்தி மையம் ஸ்டாலை புத்தக கண்காட்சி நடத்தும் பபாசி அமைப்பினர் அகற்றினர்.இதற்கு எதிர்ப்பு தெரிவித்த மக்கள் செய்தி மையத்தின் நிறுவனர் அன்பழகன் கைது செய்யப்பட்டார். இதனைத் தொடர்ந்து தற்போது இலங்கை விவகாரமும் புத்தக கண்காட்சியை மையம்…
-
- 2 replies
- 1.1k views
- 1 follower
-
-
தெலுங்கானாவின் சுற்றுலா, தொழில், நீர் நிலைகளை தமிழகத்துக்கு கொண்டுவர முயற்சிக்கிறேன் – தமிழிசை தெலுங்கானாவின் சுற்றுலா, தொழில், நீர் நிலைகளை தமிழகத்துக்கு கொண்டுவர முயற்சிக்கிறேன் என தெலுங்கானா ஆளுநர் தமிழிசை சௌந்தரராஜன் தெரிவித்துள்ளார். அத்துடன் தமிழகம் மற்றும் தெலுங்கானா இடையே பாலமாக இருப்பேன் என்றும் அவர் குறிப்பிட்டுள்ளார். இந்திய தொழில் வர்த்தகச் சங்கம் தூத்துக்குடி சார்பில் சிறந்த ஏற்றுமதியாளர்களுக்கான விருது வழங்கும் விழா இன்று (ஞாயிற்றுக்கிழமை) தூத்துக்குடியில் நடைபெற்றது. குறித்த நிகழ்வில் சிறப்பு அழைப்பாளராக தமிழிசை சௌந்தரராஜன் கலந்துகொண்டு 37 சிறந்த ஏற்றுமதியாளர்கள் மற்றும் தூத்துக்குடி துறைமுக உபயோகிப்பாளர் விருதுகளை வழங்கி வைத்தார். …
-
- 0 replies
- 421 views
-
-
துணை முதல்வருக்கு வழங்கப்பட்ட இசட் பிரிவு பாதுகாப்பு நீக்கம் – மத்திய அரசு! துணை முதல்வர் ஓ.பன்னீர்செல்வத்திற்கு வழங்கப்பட்ட இசட் பிரிவு பாதுகாப்பு விலக்கிக் கொள்ளப்பட்டது. பாதுகாப்பு முக்கியத்துவம் கருதி முக்கிய தலைவர்களுக்கு இசட் பிளஸ், இசட், எக்ஸ், வை ஆகிய பிரிவுகளின் கீழ் பாதுகாப்பு வழங்கப்படுகிறது. குடியரசுத் தலைவர், துணை குடியரசுத் தலை வர், பிரதமர், நீதிபதிகள், மத்திய அமைச்சர்களுக்கு இசட் பிரிவு பாதுகாப்பு வழங்கப்படுகிறது. தவிர பாதுகாப்பு அச்சுறுத்தல் உள்ள தனி நபர்களுக்கும் அவர்கள் தகுதிக்கு ஏற்ப பாதுகாப்பு அளிக்கப்படுகிறது. தேசிய பாதுகாப்பு படை கமாண்டோக்கள், டெல்லி பொலிஸார் அல்லது இந்தோ – திபெத் எல்லை பாதுகாப்புப் படையினர், மத்திய ரிசர்வ்…
-
- 2 replies
- 624 views
-
-
புலிகளின் தலைவர் பிரபாகரன் குறித்து தி.மு.க. மற்றும் அ.தி.மு.க. இடையே காரசார விவாதம் விடுதலைப் புலிகளின் தலைவர் பிரபாகரன் வழிதவறி சென்றதால்தான் அவர் மீதான அ.தி.மு.க.வின் அனுதாபம் குறைந்ததாக அக்கட்சியின் சட்டமன்ற உறுப்பினர் செம்மலை தெரிவித்துள்ளார். இதுதொடர்பாக தி.மு.க. மற்றும் அ.தி.மு.க. இடையே சட்டமன்றத்தில் காரசார விவாதம் நடைபெற்றது. சட்டமன்றத்தில் ஆளுநர் உரை மீதான விவாதத்தின்போது பேசிய அ.தி.மு.க. சட்டமன்ற உறுப்பினர் செம்மலை, விடுதலைப் புலிகள் தலைவர் பிரபாகரனின் தாயார் சிகிச்சைக்காக விமானத்தில் சென்னை வந்தபோது, அவரை அப்போதைய தி.மு.க. தலைமையிலான அரசு தடுத்து நிறுத்தியது என்றும் ஆனால் தற்போது இலங்கை தமிழர்கள் குடியுரிமைக்காக தி.மு.க. போராடுகிறது எனவும் விமர்ச…
-
- 5 replies
- 1k views
-
-
21 வயதுக்கு குறைவானவர்கள் ஜல்லிக்கட்டில் பங்கேற்க முடியாது – புதிய கட்டுப்பாடுகள் விதிப்பு ஜல்லிக்கட்டில் பங்கேற்கும் மாடுபிடி வீரர்களுக்கு வயது 21 ஆக இருக்க வேண்டும் என்றும் அதற்கு குறைவான வயதுடையவர்கள் மாடுபிடிக்க அனுமதி இல்லை என்றும் மதுரை மாவட்ட ஆட்சியர் வினய் அறிவித்துள்ளார். மேலும் பாலமேடு, அங்காநல்லூர் ஜல்லிக்கட்டு போட்டிகளில் பங்கேற்கும் வீரர்களுக்கு உடல் பரிசோதனை நடத்தப்படவுள்ளதாகவும் அவர் விடுத்துள்ள அறிக்கையில் கூறப்பட்டுள்ளது. மேலும் அறிக்கையில், “அலங்காநல்லூர் ஜல்லிக்கட்டுப் போட்டியில் பங்கேற்க விரும்பும் மாடுபிடி வீரர்களுக்கு நாளை 10ஆம் திகதி அலங்காநல்லூர் ஊராட்சி ஒன்றிய ஆரம்ப பள்ளியிலும், பாலமேடு போட்டியில் பங்கேற்க விரும்புபவர்களுக்கு நாளை மற…
-
- 0 replies
- 444 views
-
-
-
- 82 replies
- 10.8k views
- 2 followers
-