தமிழகச் செய்திகள்
தமிழகச் செய்திகள் பகுதியில் முக்கிய தாய்த் தமிழகச் செய்திகள் இணைக்கப்படலாம்.
இப்பகுதியில் முக்கியமான தமிழகச் செய்திகள் மாத்திரம் இணைக்கப்படல் வேண்டும்.
10293 topics in this forum
-
இந்த ஆண்டு மார்ச் 15ஆம் தேதி முதல் மனிதக் கழிவுகளை அகற்றுவதற்கோ, கழிவுநீர்த் தொட்டிகளைச் சுத்தம் செய்வதற்கோ மனிதர்களைப் பயன்படுத்தக்கூடாது என தமிழக அரசு உத்தரவிட்டுள்ளது. தமிழ்நாடு அரசின் அரசிதழில் இந்த உத்தரவு வெளியிடப்பட்டுள்ளது. 2013ஆம் ஆண்டின் மனிதக் கழிவுகளை மனிதர்களை வைத்து அகற்றுவதற்குத் தடைவிதிக்கும் சட்டத்தின் 7வது பிரிவின்படி இந்த உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளதாகக் கூறப்பட்டுள்ளது. இதன்படி, தனி மனிதரோ, உள்ளூர் நிர்வாகமோ, நேரடியாகவோ, மறைமுகமாகவோ கழிவு நீர்த் தொட்டிகளைச் சுத்தம் செய்யவும் அபாயகரமான கழிவுகளை அகற்றவும் மனிதர்களைப் பயன்படுத்தக்கூடாது. 2013ஆம் ஆண்டின் சட்டப்படி, இம்மாதிரியான பணிகளுக்கு மனிதர்களைப் பயன்படுத்தினால், ஐந்து ஆண்டுகள் வரை சிறை தண்டன…
-
- 1 reply
- 361 views
-
-
மனிதம் காக்கச் சீறி எழுந்த மாணவர்கள் எஸ்.கோபாலகிருஷ்ணன் ஈழத்தில் வதைபடும் தமிழர்களின் உரிமைகளுக்கான போராட்டத்தை மாணவர்கள் கையிலெடுத்துள்ளனர். இதுவரை தனித் தமிழீழ ஆதரவாளர்களால் முன்வைக்கப்பட்ட கோரிக்கைகள் இப்போது ஒட்டுமொத்த மாணவ சமுதாயத்தின் கோரிக்கைகளாக உருப்பெற்றுள்ளன. இதன் தாக்கத்தையும் வீரியத்தையும் அலசும் முன் போராட்டத்தின் பின்னணியைப் பார்த்துவிடுவோம். இலங்கையில் விடுதலைப் புலிகளை ஒழிக்கும் முகாந்திரத்தில் தமிழர்களைக் கொன்று எஞ்சியவர்களின் வாழ்வாதாரத்தைச் சூறையாடிய ராஜபட்சே அரசு, 2009 மே மாதத்தில் விடுதலைப் புலிகள் இயக்கத்தின் தலைவர் வேலுப்பிள்ளை பிரபாகரன் கொல்லப்பட்டுவிட்டதாக அறிவித்தது. அதன் பிறகு போர் முடிந்ததாகவும் அறிவிக்கப்பட்டது. முள்ளிவாய்க்கால் போன்ற மா…
-
- 2 replies
- 872 views
-
-
மனிதாபிமான அடிப்படையில் படகுகளை விடுவியுங்கள் ; இந்திய, இலங்கை அரசுகளிடம் தமிழக மீனவர்கள் கோரிக்கை By T. SARANYA 28 JAN, 2023 | 04:40 PM (ஆர்.ராம்) தடுத்துவைக்கப்பட்டுள்ள படகுகளை மனிதாபிமான அடிப்படையில் விடுவிப்பதற்கு இந்திய, இலங்கை அரசுகள் நடவடிக்கைகளை விரைந்து எடுக்க வேண்டும் என்று யாழ்ப்பாணத்திற்கு வருகை தந்துள்ள தமிழ்நாட்டு விசைப்படகு மீனவர் சங்க இராமநாதபுர மாவட்ட தலைவர் யேசுராசா தெரிவித்தார். 2021ஆம் ஆண்டு டிசம்பர் மாதத்திற்கும் 2022ஆம் ஆண்டு பெப்ரவரி மாதத்திற்கும் இடையில் எல்லைதாண்டி வந்த குற்றச்சாட்டில் கைப்பற்றப்பட்டுள்ள 17 படகுகள் தொடர்பான வழக்கு ஊர்காவற்துறை நீதிவான் நீதிமன்றில் முன்னெடுக்கப்ப…
-
- 0 replies
- 324 views
- 1 follower
-
-
மனு ஸ்மிருதி: ஆ. ராசா இந்துக்கள் பற்றி தவறாக பேசியதாக புதிய சர்ச்சை - பின்னணி என்ன? 3 மணி நேரங்களுக்கு முன்னர் பட மூலாதாரம்,GETTY IMAGES மனு நீதி என்று பரவலாக அறியப்படும் மனுஸ்மிருதி, இந்து மதம் போன்றவை தமிழ்நாட்டில் அவ்வப்போது விவாதப் பொருள் ஆவது வழக்கம். தற்போது, முன்னாள் மத்திய அமைச்சரும் திமுக எம். பியுமான ஆ. ராசா சமீபத்தில் ஒரு நிகழ்ச்சியில், இந்து மதம் குறித்து பேசிய காணொளி சமூக ஊடகத்தில் பரவலாக பகிரப்பட்டு வருகிறது. சென்னையில் நடந்த ஒரு நிகழ்ச்சியில் பேசிய அவர், "நீ பார்சியாக இல்லையெனில், கிறிஸ்தவனாக இல்லையெனில், இஸ்லாமியராக இல்லையெனில், நீ ஒரு இந்துவாகத்தான் இருக்க முடியும் என்று உச்ச நீதிமன்ற…
-
- 1 reply
- 247 views
- 1 follower
-
-
மனுஸ்மிருதி நூலை தடை செய்யக் கோரி திருமாவளவன் தலைமையில் ஆர்ப்பாட்டம் விடுதலைச் சிறுத்தைகள் கட்சித் தலைவர் தொல்.திருமாவளவன் சமீபத்தில் பேசிய நிகழ்ச்சி ஒன்றில் பெண்களை இழிவுபடுத்தும் வகையில் பேசியிருப்பதாக பாஜக கட்சியைச் சேர்ந்த நடிகை குஷ்பு கண்டனம் தெரிவித்தார். இதற்கு மறுப்பு தெரிவித்த திருமாவளவன், தான் பேசியது திரித்து கூறப்பட்டிருப்பதாகவும், மனுதர்ம சாஸ்திரத்தில் உள்ளதையே தான் குறிப்பிட்டு பேசியதாகவும் தெரிவித்தார். இதனை தொடர்ந்து நேற்று அவர் வெளியிட்ட அறிக்கையில், “பிற்படுத்தப்பட்ட மக்களையும், பெண்களையும் இழிவுபடுத்துவதும் மனுஸ்மிருதி நூலைத் தடை செய்ய வேண்டும் என மைய, மாநில அரசுகளை வலியுறுத்தி தமிழகமெங்கும் விடுதலைச் சிறுத்தைகள் கட்சியின்சார்பில் சனிக்க…
-
- 2 replies
- 765 views
-
-
மனுஸ்மிருதி: திருமாவளவனுக்கு எதிரான வழக்கு தள்ளுபடி! மின்னம்பலம் ஐரோப்பிய பெரியார் - அம்பேத்கர் படிப்பு வட்டத்தின் சார்பில் செப்டம்பர் 27ஆம் தேதி நடைபெற்ற இணையக் கருத்தரங்கில் பேசிய விசிக தலைவர் திருமாவளவன், மனுதர்மம் பெண்களை எவ்வாறு சித்தரிக்கிறது என பேசினார். பாஜக மற்றும் இந்து அமைப்பைச் சேர்ந்தவர்கள் திருமாவளவன் பெண்களைக் கொச்சைப்படுத்திவிட்டதாக சமூக வலைதளங்களில் விமர்சித்தனர். ஆனால், மனுஸ்மிருதியில் சொல்லப்பட்டதை தான் மேற்கோள் காட்டியதாக தெரிவித்த திருமாவளவன், பெண்களை இழிவுபடுத்தும் மனு ஸ்மிருதியைத் தடை செய்ய ஆர்பாட்டமும் நடத்தினார். இந்த நிலையில் திருமாவளவன் மீது நடவடிக்கை எடுக்க நாடாளுமன்றச் செயலாளருக்கு உத்தரவிடக் கோரி வழக்கறிஞர் காசி ர…
-
- 0 replies
- 540 views
-
-
விருதுநகர் பராசக்தி மாரியம்மன் கோயிலில் 3வது முறையாக பிரதமராக நரேந்திர மோடி வெற்றி பெறவும், விருதுநகர் லோக்சபா வேட்பாளர் ராதிகா வெற்றி பெற வேண்டியும் நடிகர் சரத்குமார் அங்கப் பிரதக்ஷணம் செய்தார். தமிழகத்தில் மார்ச் 19ல் லோக்சபா தேர்தல் ஓட்டுப்பதிவு நடந்தது. இந்நிலையில் விருதுநகர் லோக்சபா தொகுதியில் பா.ஜ., வேட்பாளராக ராதிகா சரத்குமார் போட்டியிட்டார். மேலும் பா.ஜ., சார்பில் விருதுநகர் லோக்சபா தொகுதியில் ராதிகா போட்டியிடுவதை ஒட்டி அவரது கணவர் சரத்குமாருடன் இணைந்து சூறாவளி பிரசாரம் செய்தனர். இந்நிலையில் நாளை(ஜூன் 4) லோக்சபா தேர்தலில் பதிவான ஓட்டுக்கள் பல்வேறு மையங்களில் எண்ணப்பட உள்ளன. இதையொட்டி விருதுநகர் பராசக்தி மாரியம்மன் கோயிலில் பா.ஜ., பிரமுகர், நடிகருமான சரத்…
-
-
- 15 replies
- 1.4k views
-
-
மைசூரு, மனைவியின் தொந்தரவு தாங்காமல் தென்னை மரத்தில் ஏறி தொழிலாளி தற்கொலை மிரட்டல் விடுத்தார். ‘நடிகர் அம்பரீஷ் வந்து எனது குடும்ப பிரச்சினையை சரிசெய்ய வேண்டும்’ என்று கோரிக்கை விடுத்தார். தற்கொலை மிரட்டல் மைசூரு நகர் சரஸ்வதிபுரத்தை சேர்ந்தவர் வெங்கேடஷ் (வயது 40). கூலி தொழிலாளி. இந்த நிலையில் நேற்று காலை வெங்கடேஷ் தனது வீட்டின் அருகே உயரமான தென்னை மரத்தில் ஏறினார். மேலே ஏறிய அவர், அங்கிருந்து குதித்து தற்கொலை செய்யப்போவதாக மிரட்டல் விடுத்தார். இதனால் அதிர்ச்சி அடைந்த அந்த பகுதி மக்கள், இதுகுறித்து சரஸ்வதிபுரம் போலீசாருக்கு தகவல் தெரிவித்தனர். அதன்பேரில் போலீசார் சம்பவ இடத்துக்கு விரைந்து வந்து அவருடன் பேச்சுவார்த்தை நடத்தினார்கள். அப்போது அவர் மரத்தில்…
-
- 5 replies
- 578 views
-
-
கிருஷ்ணகிரி மாவட்டம், போச்சம்பள்ளியை அடுத்த கொண்டிரெட்டிப்பட்டியை சேர்ந்தவர் லாரி டிரைவர் மோகன்ராஜ் (42). இவரது மனைவி மஞ்சுளா (35). இவர்களுக்கு18 ஆண்டுக்கு முன் திருமணம் நடந்தது. இவர்களுக்கு பத்தாம் வகுப்பு படிக்கும் ஒரு மகன் உள்ளார். மோகன்ராஜுக்கும் அதே பகுதியை சேர்ந்த வேறு ஒரு பெண்ணுக்கும் கூடாநட்பு இருந்துள்ளது, இதனால் கணவன் மீது வெறுப்படைந்த மஞ்சுளா கடந்த ஓராண்டுக்கு முன் கணவரை பிரிந்து சென்று தனியாக வீடு எடுத்து வசித்து வருகிறார். சமீபத்தில், மோகன்ராஜ் தனது மனைவி மஞ்சுளாவிடம் சென்று தான் திருந்தி விட்டதாகவும், இனி நான் உன்னோடுதான் இருப்பேன் என்றுகூறி வீட்டுக்கு அழைத்து வந்துள்ளார் மேலும், சொந்தமாக லாரி வாங்க கொஞ்சம் பணம் வேண்டும் என கூறி மஞ்சுளாவின் கழுத்திலிருந்…
-
- 6 replies
- 1.4k views
-
-
மதுரை, மன உறுதியில்லாமல் தற்கொலை செய்து கொள்வது மனைவியின் முட்டாள்தனமான நடவடிக்கை என்றும், இதற்காக கணவனை குற்றம் சுமத்த முடியாது என்றும் மதுரை ஐகோர்ட்டு உத்தரவிட்டுள்ளது. போலீசார் வழக்கு விருதுநகர் மாவட்டம், பாலையம்பட்டியைச் சேர்ந்தவர் அய்யப்பன். இவருக்கு திருமணமாகி குழந்தை உள்ளது. இவரது மனைவி கடந்த 26.12.2004 அன்று தீக்காயங்களுடன் அருப்புக்கோட்டை அரசு ஆஸ்பத்திரியில் சிகிச்சைக்காக சேர்க்கப்பட்டார். சிகிச்சையின்போது அவர் தாசில்தாரிடம் வாக்குமூலம் அளித்தார். அப்போது அவர், தன் மீது கணவர் அய்யப்பன் மண்எண்ணெயை ஊற்றி தீ வைத்ததாக கூறினார். இதற்கிடையே சிகிச்சை பலனின்றி…
-
- 0 replies
- 390 views
-
-
மனைவியுடன் குடியரசு தின விழாவை சிறப்பித்த முதல்வர் பன்னீர்செல்வம்! தமிழக முதல்வர் பன்னீர்செல்வம் சென்னையில் இன்று நடந்த குடியரசு தின விழாவில் மனைவியுடன் பங்கேற்று அனைவரையும் ஆச்சர்யப்படுத்தினார். இதுவரை முதல்வரின் மனைவி பொது நிகழ்வில் பங்கற்றது இல்லை. முதன் முறையாக முதல்வர் பன்னீர் செல்வத்தின் மனைவி, பொது நிகழ்வில் கலந்து கொண்டது, அரசு ஊழியர்களை ஆச்சரியப்படுத்தியுள்ளது. நிதியமைச்சராக இருந்த பன்னீர் செல்வம், ஜெயலலிதா மறைந்த பிறகு தமிழகத்தின் முதல்வராகப் பொறுப்பேற்றுக் கொண்டார். பன்னீர் செல்வம் முதல்வராக பதவியேற்றதில் இருந்தே பல பிரச்னைகள் அவரை சூழ்ந்து கொண்டிருந்தன. அதிமுக பொதுச் செயலாளராக பொறுப்பேற்ற சசிகலாதான், முதல்வராக பொறுப்பேற்க வ…
-
- 1 reply
- 1k views
-
-
விதம் விதமாக பிரச்சாரம் செய்து வந்த மன்சூர் அலிகான்.. திடீர் உடல் நலக்குறைவு. நடிகர் மன்சூர் அலிகானுக்கு திடீரென உடல்நலம் பாதிக்கப்பட்டுள்ளது. இதையடுத்து மருத்துவமனையில் அவருக்கு சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. நாம் தமிழர் கட்சி வேட்பாளராக திண்டுக்கல் தொகுதியில் களம் இறக்கப்பட்டுள்ளார் நடிகர் மன்சூரலிகான். தினம் ஒரு வித்தியாசம்.. தினம் ஒரு தோற்றம்.. தினம் ஒரு யுக்தியில் பிரச்சாரம் செய்து தொகுதி மக்களை ஈர்த்து வருகிறார்.வேட்பாளராக அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்படுவதற்கு முன்பே, தொகுதிக்குள் சென்று களப்பணியில் ஈடுபட ஆரம்பித்துவிட்டனர். அப்போது முதலே நாம் தமிழர் கட்சி வேட்பாளர்களிலேயே மிக முக்கியமான வேட்பாளராக இவர் தன்னை முன்னிறுத்தி வருகிறார். இந்நிலையில், சர…
-
- 0 replies
- 596 views
-
-
மன்னராட்சிக் கனவு காணும் விஜய் மக்களாட்சியை புரிந்துகொள்வாரா? MinnambalamDec 09, 2024 07:00AM ராஜன் குறை மன்னராட்சிக்கும், மக்களாட்சிக்கும் எத்தனையோ வேறுபாடுகள் இருக்கலாம். எது மிக முக்கியமான வேறுபாடு என்று புரிந்து கொள்ள வேண்டும். மன்னராட்சியில் தனி மனிதர் அரியணை ஏறி ஆட்சிக்கு வருவார். அவர் மன்னராக முடிசூட்டப்பட்டிருந்தால் அவர் தனது ஆயுட்காலம் முழுவதும் மன்னராக இருப்பார். அவர் ஒரு தனி மனிதராகத்தான் பிறப்பின் அடிப்படையிலோ, யானை மாலை போட்டதாலோ, வேறு எந்த காரணத்தாலோ அரசராகத் தேர்ந்தெடுக்கப்படுவார். மக்களாட்சியில் கட்சிகள்தான் ஆட்சிக்கு வரும். ஒட்டுமொத்த கட்சியும் ஆட்சி செய்ய முடியாது என்பதால்தான் அந்தக் கட்சியினர் தேர்ந்தெடுக்கும் ஒருவர் முதல்வராகவோ, …
-
- 2 replies
- 421 views
-
-
மன்னர் கூடசேர்த்த அந்தப்புர மகளிருக்கு சேவை செய்ய வந்த தெலுங்கர்கள்.. நடிகை கஸ்தூரி பேச்சால் 'பரபர'! Mathivanan MaranUpdated: Monday, November 4, 2024, 14:38 [IST] சென்னை: 300 ஆண்டுகளுக்கு முன்னர் மன்னர்களின் அந்தப்புர மகளிருக்கு சேவை செய்ய வந்தவர்கள் தெலுங்கர்கள்; அவர்கள் இன்று தமிழர்கள் இனம் என சொல்லும் போது எப்பவோ வந்த பிரமாணர்களை தமிழர்களே இல்லை என்று சொல்ல நீங்கள் யார்? என்று நடிகை கஸ்தூரி பேசியிருப்பது பெரும் சர்ச்சையாக வெடித்துள்ளது. ஏற்கனவே நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் ஆந்திராவில் இருந்து மலம் அள்ள வந்தவர்கள் அருந்ததியர்கள் என பேசிய பஞ்சாயத்தே முடியாத நிலையில் அந்தப்புர மகளிருக்கு சேவை செய்ய வந்த தெலுங்கர்கள் என பேசியிருப்பது கடும் ச…
-
-
- 57 replies
- 4.2k views
-
-
மன்னர்கள் காலத்தில் அமைக்கப்பட்ட சுரங்கவழி நீர்ப்பாதை கண்டுபிடிப்பு தஞ்சாவூர்:தஞ்சையை ஆண்ட மன்னர்கள், தொலைநோக்கு பார்வையுடன் நீர் மேலாண்மைக்கான அடிப்படை கட்டமைப்புகளை உருவாக்கினார்கள். இன்றைக்கும் இவை செயலாற்றி வருகின்றன. அதில் பல குளங்கள் இன்னும் தஞ்சை மாநகரின் நிலத்தடி நீருக்கான ஆதாரமாக உள்ளன. இதில் பல குளங்களுக்கு தண்ணீர் செல்வதற்கான சுரங்க வழித்தடங்கள் அமைக்கப்பட்டன. சோழ மன்னர்களின் ஆட்சிக்காலத்தில் தஞ்சை நகரை சுற்றிலும் நான்கு புறமும் தொடர்ச்சியாக தண்ணீர் பயணிக்கக்கூடிய அகழி அமைக்கப்பட்டது. பரந்து, விரிந்து பல கிலோ மீட்டர் பரப்பளவு கொண்ட இந்த அகழியில் காவிரி நீரும் மழைநீரும் சேமிக்கப்பட்டன. இது போதாதென, பெரிய கோவில் அருகே சிவகங்கை க…
-
- 0 replies
- 907 views
-
-
மன்னர்கள் காலந்தொட்டே நீடிக்கும் பிரச்னை..! காவிரி கைவிரிக்கப்பட்ட கதை - அத்தியாயம் - 1 Chennai: ஆண்டுகள் எத்தனை... ஆட்சிகள் எத்தனை... வழக்குகள் எத்தனை... இழப்புகள் எத்தனை... பிரச்னைகள் எத்தனை... வன்முறைகள் எத்தனை என இந்தப் பிரச்னையின் பின்னணியில் உள்ள எத்தனையோ வலிகளை அடுக்கிக்கொண்டே போகலாம். அந்தப் பிரச்னை வேறு எதுவுமல்ல, காவிரி விவகாரம்தான்..! உச்ச நீதிமன்றம், உயர் நீதிமன்றம், நடுவர் மன்றம் என எந்த மன்றத்தின் உத்தரவைக் கேட்டும் நியாயமில்லை காவிரிக்கு. காலங்கள் கடந்தபோதும் இதுவரை இந்தப் பிரச்னைக்கு எந்தவொரு நிரந்தரத் தீர்வும் ஏற்படவில்லை. இது, இன்று... நேற்றல்ல... மன்னர்கள் காலந்தொட்டே நீடிக்கிறது. ‘காவிரிக்க…
-
- 14 replies
- 5.3k views
-
-
மன்னார் வளைகுடா : கண்காணிப்பு பணிகளை தீவிரப்படுத்தியுள்ளதாக அறிவிப்பு! மன்னார் வளைகுடா கடல் பகுதியில் இந்திய கடலோர காவல்படையினர் கண்காணிப்பைத் தீவிரப்படுத்தியுள்ளதாக தமிழக அரசு அறிவித்துள்ளது. கடலோர காவல்படையினர் தண்ணீர் மற்றும் மணலில் செல்லும், ஆற்றல் படைத்த ஹோவர் கிராப்ட் கப்பல் மூலம் ஒவ்வொரு கடலோர கிராமங்களுக்காகச் சென்று சோதனையிட்டுள்ளதாகவும் கூறப்பட்டுள்ளது. சர்வதேச கடல் எல்லை ஆலோசனை கூட்டத்தில் பங்கேற்ற இந்திய, இலங்கை கடற்படை உயர் அதிகாரிகள், தமிழகம் மற்றும் இலங்கைக்கு இடையே நடைபெறும் சம்பவங்களைத் தடுப்பது தொடர்பாக ஆலோசனை நடத்தியுள்ளனர். இதனையடுத்தே மேற்படி நடவடிக்கை முன்னெடுக்கப்பட்டுள்ளது. https://athavannews.com/2021/1242738
-
- 1 reply
- 277 views
- 1 follower
-
-
மன்னார் வளைகுடா பகுதியில் தமிழக மீனவர் மீது இந்திய கடற்படையினர் துப்பாக்கிச்சூடு மன்னார் வளைகுடா கடல் பகுதியில் தமிழக மீனவர்கள் மீது இந்திய கடற்படையினர் மேற்கொண்ட துப்பாக்கிச்சூட்டில் ஒருவர் காயமடைந்துள்ளார். தெற்கு மன்னார் வளைகுடா கடல் பகுதியில் மீன் பிடித்துக்கொண்டிருந்த தமிழக மீனவர்களின் படகை நிறுத்துமாறு கடற்படையினர் கூறியுள்ளனர். எனினும் மீனவர்கள் படகை நிறுத்தாமல் சென்றதால் சந்தேகமடைந்த கடற்படையினர் படகை நோக்கி துப்பாக்கிச்சூடு நடத்தியுள்ளனர். இதில், படகில் இருந்த மயிலாடுதுறை மாவட்டத்தை சேர்ந்த மீனவர் படுகாயம் அடைந்துள்ளார். படுகாயமடைந்த மீனவரை கடற்படையினர் மீட்டு ராமநாதபுரம் அரசு வைத்தியசாலையில் அனுமதித்துள்ளனர். அங்க…
-
- 7 replies
- 464 views
- 1 follower
-
-
மன்னார் வளைகுடா: கடல் நீர் பச்சை நிறமாக மாறியது எப்படி? பிரபுராவ் ஆனந்தன் பிபிசி தமிழுக்காக 4 மணி நேரங்களுக்கு முன்னர் மன்னார் வளைகுடா கடற்கரை பகுதியில் 'நாட்டிலுக்கா சின்டிலெம்ஸ்' பாசியால் கடல் நீரின் நிறம் பச்சையாக மாறி காட்சி அளிக்கிறது. இதனால் சிறிய ரக மீன்கள் உயிரிழக்கும் அபாயம் ஏற்பட்டுள்ளது. கடந்த பத்து நாட்களுக்கு மேல் கடல் நீரின் நிறம் இயல்பு நிலைக்கு திரும்பாததால் மீனவர்கள் அச்சமடைந்துள்ளனர். ராமநாதபுரம் மாவட்டம் ராமேஸ்வரம் அருகே மன்னார் வளைகுடா கடல் பகுதியில் பாம்பன் முதல் பெரியபட்டிணம் வரையிலான பகுதியில் பச்சை நிறப் பூங்கோரை பாசிகள் நீரோட்டத்தில் அடித்து வந்…
-
- 0 replies
- 266 views
- 1 follower
-
-
ராமநாதபுரத்தில் இருந்து தூத்துக்குடி வரையிலான மன்னார் வளைகுடாவில் உள்ள 19 தீவுகள் கடலில் மூழ்கும் அபாய நிலையில் உள்ளதாக கடல்சார் ஆராய்ச்சியாளர்கள் அச்சம் தெரிவித்துள்ளனர். ராமநாதபுரம் முதல் கன்னியாகுமரி வரை உள்ள 10,500 சதுர கி.மீ. பரப்பளவிலான மன்னார் வளைகுடா கடல்வாழ் உயிரினங்கள் உயிர்கோளாக விளங்குகிறது. இதில் கீழக்கரையில் இருந்து பூவரசன்பட்டி தீவு, தூத்துக்குடியில் இருந்த விலங்குசலி தீவு, ஆகியவை ஏற்கனவே இயற்கை பேரிடர்களால் கடலில் மூழ்கிவிட்டன.இந்நிலையில் தூத்துக்குடியில் 4 தீவுகள், வேப்பாரில் 3 தீவுகள், கீழக்கரை மற்றும் மண்டபம் பகுதிகளில் உள்ள 14 என மொத்தம் 19 தீவுகள் கடலில் மூழ்கும் அபாயம் இருப்பதாக கடல்சார் ஆராய்ச்சியாளர்கள் தெரிவித்துள்ளனர்.மன்னார்வளைகுடாவில் கடந்த 50 …
-
- 0 replies
- 502 views
-
-
ராமநாதபுரம் மாவட்டம் மன்னார் வளைகுடா பகுதியில் கடல் நீர் நிறம் மாறி மீன்கள் இறந்தது ஏன் என்பது குறித்து ஆராய்ச்சியாளர்கள் விளக்கம் அளித்துள்ளனர். அவ்வாறு செத்து கரை ஒதுங்கிய மீன்களை சாப்பிட வேண்டாம் என்றும் எச்சரிக்கையும் விடுத்துள்ளனர். தமிழகத்தின் தென்கிழக்கு கடல் பகுதி மன்னார் வளைகுடா என அழைக்கப்படுகிறது. இது கன்னியாகுமரியில் தொடங்கி ராமேஸ்வரம் வரையுள்ள இந்திய எல்லைக்கு உட்பட்ட கடல்பரப்பை உள்ளடக்கியது. உலகிலேயே மிகவும் அரிய வகை கடல்வாழ் உயிரினங்களான 100 வகை முள்தோலிகள், 260 வகை சங்கு சிப்பிகள், 450 வகை மீன்கள், 70 வகை கணுக்காலிகள், 6 வகை திமிங்கிலங்கள்,…
-
- 0 replies
- 1.2k views
-
-
பிரபுராவ் ஆனந்தன் பிபிசி தமிழுக்காக 3 மணி நேரங்களுக்கு முன்னர் பட மூலாதாரம்,FUNDAOPRNCIPE_FFI கொரோனா ஊரடங்கு காரணமாக மன்னார் வளைகுடா கடல் பகுதிகளில் மாசு குறைந்ததால் கடந்த பத்து ஆண்டுகளில் இல்லாத அளவு 19 ஆயிரம் ஆமை முட்டைகள் மண்டபம் வனத்துறையினரால் சேகரிக்கப்பட்டன. இவை பொரிப்பகத்தில் வைக்கப்பட்ட பின் பிறந்த ஆமைக் குஞ்சுகள் கடலில் விடப்பட்டுள்ளன. உலகில் உள்ள ஏழு வகை கடல் ஆமைகளில் சித்தாமை, அலுங்காமை, பெருந்தலை ஆமை, பச்சை ஆமை மற்றும் தோணி ஆமை ஆகிய ஐந்து வகை கடல் ஆமைகள் மன்னார் வளைகுடா பகுதியில் காணப்படுகின்றன. ஆண் ஆமையோடு இனப் பெருக்கம் செய்த பெண் ஆமையானது முட்டையிடுவதற்காக மணல்பா…
-
- 21 replies
- 1.8k views
-
-
மன்னார்குடி ரீவைண்ட் ஜாதகம் சகுனி ஆட்டத்தைவிட மோசமான ஆட்டம்! 2014 செப்டம்பர் 27-ம் தேதி! பெங்களூர் பரப்பன அக்ரஹாரா சிறை வளாகத்தில் சொத்துக் குவிப்பு வழக்கு சிறப்பு நீதிமன்றத்தில் நின்று கொண்டிருக்கிறார் ஜெயலலிதா. 4 ஆண்டுகள் சிறையும் 100 கோடி ரூபாய் அபராதமும் விதித்து தீர்ப்பு எழுதுகிறார் நீதிபதி குன்ஹா. மதியம் 3 மணிக்கு சிறைக்குள் அடைக்கப்படுகிறார் ஜெயலலிதா. 2014 செப்டம்பர் 29-ம் தேதி! சென்னை ராஜ்பவனில் பிற்பகல் 3 மணிக்கு ஓ.பன்னீர்செல்வம் தலைமையிலான அமைச்சரவை அழுகாச்சியோடு பதவியேற்கிறது. இந்த இரண்டு சம்பங்களுக்கும் இடைவெளி, இரண்டு நாட்கள். சரியாகச் சொன்னால் 48 மணி நேரம். வழக்கில் தண்டிக்கப்பட்ட உடனே ஜெயலலிதாவின் முதல்வர் பதவி பறிபோகிறது. தெய…
-
- 79 replies
- 26.5k views
-
-
மன்னார்குடியின் மாயவலையில் சிக்கி மாண்டாரா ஜெ "ஜெயலலிதா, சீவகசிந்தாமணி காப்பியத்தில் வரும் சச்சந்தனைப் போல், தான் வீழ்வது தெரியாமலே வீழ்ந்து வருகிறார். படோபகரமான முதல்வராக இருந்தாலும், சசிகலா, நடராஜன் என்கிற கடற்கொள்ளை யர்களின் கரங்களில் அகப்பட்ட அடிமைப் பெண்ணாகத்தான் இருக்கிறார்... 20 வருடங்களுக்கு முன் வலம்புரிஜான் தேநீர் விற்றவர் இந்தியாவின் பிரதமரானதையும் செருப்பு தைத்தவரின் மகன் அமெரிக்க ஜனாதிபதியானதையும் ஜனநாயகம் என்று பெருமை கொண்ட எம்மால் தற்போது பணிப்பெண்ணாக வந்த ஒருவர் தமிழகத்தின் மிகப்பெரிய கட்சியான அ.இ.அ.தி.மு.க. வின் பொதுச்செயலாளராக மாறியுள்ளதோடு முதல்வராகும் துடிப்பில் காய் நகர்த்தல்களை மேற்கொள்வதை ஏனோ உள் மனம் ஏற்றுக்கொள்ள…
-
- 5 replies
- 1.3k views
-
-
மன்னார்குடியில் புத்தாண்டு கொண்டாட்டம்... குடும்ப அஸ்திரத்தை தனதாக்குவாரா தினகரன்?! #VikatanExclusive ஆர்.கே.நகர் இடைத்தேர்தலில் வெற்றிபெற்றதில் இருந்து தமிழக அரசியலில் முக்கிய பேசு பொருளாக மாறியுள்ளார் டி.டி.வி.தினகரன். வெற்றியின் மூலம் கட்சி தன் வசம்தான் இருக்கிறது என்பது போல ஒரு பிம்பத்தைக் கட்டமைத்த தினகரன், தற்போது குடும்பமும் தன் வசம்தான் உள்ளது என்பதை உரக்கச் சொல்ல மன்னார்குடியில் புத்தாண்டை கொண்டாடியுள்ளார். பொதுவாக புத்தாண்டை ஆதரவாளர்களுடன் அடையாறில் இருக்கும் தனது வீட்டில் கொண்டாடும் வழக்குமுடையவர் தினகரன். அன்று ஆதரவாளர்களுக்கு விருந்து கொடுப்பது, குடும்பத்துடன் நேரத்தை செலவிடுவது என்று இருப்பார். ஆனால், ஆர்.கே.நகர் வெ…
-
- 0 replies
- 356 views
-