Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.
  • advertisement_alt
  • advertisement_alt
  • advertisement_alt

தமிழகச் செய்திகள்

செய்திகள் இணைப்போர் கவனத்துக்கு!

தமிழகச் செய்திகள் பகுதியில் முக்கிய தாய்த் தமிழகச் செய்திகள் இணைக்கப்படலாம்.

இப்பகுதியில் முக்கியமான தமிழகச் செய்திகள் மாத்திரம் இணைக்கப்படல் வேண்டும்.

  1. கோடநாடு எஸ்டேட்டில் வருமான வரித்துறையினர் சோதனை கோடநாடு எஸ்டேட் பங்களாவின் வாயில் கதவு. | கோப்புப் படம் மறைந்த முன்னாள் முதல்வர் ஜெயலலிதாவுக்குச் சொந்தமான கோடநாடு எஸ்டேட் பங்களாவில் இன்று (புதன்கிழமை) காலை முதல் வருமான வரித்துறையினர் சோதனையில் ஈடுபட்டுள்ளனர். காலை 8 மணியளவில் 20-க்கும் மேற்பட்ட கார்களில் அதிகாரிகள் வந்தனர். அவர்கள் தொடர்ந்து சோதனையில் ஈடுபட்டுள்ளனர். சோதனை நடைபெற்றுவருவதால் பங்களா கதவுகள் மூடப்பட்டு வெளியே பலத்த போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டுள்ளது. அண்மையில், கோடநாடு எஸ்டேட் காவலாளி ஓம் பகதூர் படுகொலை செய்யப்பட்டார். கோடநாடு எஸ்டேட் காவலாளி …

  2. விஜய் மக்கள் இயக்கம் கலைப்பு? மின்னம்பலம்2021-09-28T07:30:02+5:30 விஜய் மக்கள் இயக்கம் கலைக்கப்பட்டுவிட்டதாக நடிகர் விஜய்யின் தந்தையும் இயக்குநருமான எஸ்.ஏ.சந்திரசேகர் சென்னை உரிமையியல் நீதிமன்றத்தில் தெரிவித்துள்ளார். விஜய் மக்கள் இயக்கம் என்ற பெயரில் ஒரு கட்சியைத் தான் ஆரம்பித்துள்ளதாக சென்ற ஆண்டு திடீரென்று எஸ்.ஏ.சந்திரசேகர் அறிவித்தார். இதனை தேர்தல் கமிஷனிலும் பதிவு செய்ய விண்ணப்பித்திருந்தார். உடனேயே இந்த மக்கள் இயக்கத்திற்கும் தனக்கும் எந்தத் தொடர்பும் இல்லையென்றும், இந்த அமைப்பில் தனது ரசிகர்கள் யாரும் சேரக் கூடாது என்றும் அறிக்கை வெளியிட்டார் நடிகர் விஜய். கூடவே இந்த இயக்கத்தில் நிர்வாகிகளாக இருந்த தனது அப்பா, அம்மா மற்றும் சிலர் மீத…

  3. நாகப்பட்டினத்தில் சாதி மறுப்பு காதல் திருமணம் செய்த மகளை இழுத்துச் சென்ற தந்தை - தலித் கணவர் புகார் நடராஜன் சுந்தர் பிபிசி தமிழுக்காக 13 அக்டோபர் 2021, 05:32 GMT படக்குறிப்பு, பெண்ணின் தந்தை (வலது) மற்றும் உறவினர் ஒருவர் சார் பதிவாளர் அலுவலகத்தில் இருந்து அவரை இழுத்துக்கொண்டு வெளியே வந்தனர். தலித் இளைஞர் ஒருவரை சாதி மறுப்பு திருமணம் செய்து கொண்ட பெண், அந்தத் திருமணத்தைப் பதிவு செய்வதற்காக, சார் பதிவாளர் அலுவலகம் வந்திருந்தபோது, அப்பெண்ணின் தந்தையும் வேறு சிலரும் அடித்து இழுத்துச் சென்ற காணொளி வெளியாகி அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. கணவர் தாழ்த்தப்பட்ட சமூகத்த…

  4. “சினிமா பிரபல அரசியல்வாதிகள் அனைவரும் எம்.ஜி.ஆர் ஆகிவிட முடியாது!” தி இந்து என்.ராம் மறைந்து இத்தனை ஆண்டுகளுக்குப் பின்னும் பேசுபொருளாய் இருக்கிறார் எம்.ஜி.ஆர்! கலைவாணர் அரங்கில், 'எம்.ஜி.ஆர் எ லைஃப்' என்ற பெயரில், எம்.ஜி.ஆரின் வாழ்க்கை வரலாற்று நூல் வெளியிடப்பட்டது. பெங்குவின் பதிப்பகம் வெளியிட்டிருக்கும் இந்த நூலை எழுத்தாளரும், ஈராக் நாட்டின் ஐ.நா சபை அதிகாரியுமான ஆர். கண்ணன் எழுதியிருக்கிறார். இவர் ஏற்கெனவே ஆங்கிலத்தில், ‘பயோகிராஃபி ஆஃப் அண்ணா' என்ற சுயசரிதை நூலை எழுதியிருக்கிறார். கலைவாணர் அரங்கில் நடைபெற்ற இந்நூல் வெளியீட்டு விழாவில், ''எம்.ஜி.ஆர் எங்கள் ஊர்க்காரர்'' என உருகினார் சிறப்பு விருந்தினரான சசி தரூர் எம்.பி! “திராவிட இயக்கத்தில் …

  5. `நாட்டையே ஆளத் துடிப்பவனுக்கு, சொந்த வீடு இல்லாதது எவ்வளவு பெரிய வரலாற்றுத் துயரம்' என பொதுக்கூட்ட மேடையிலேயே சென்டிமென்ட் டச் கொடுப்பதாகட்டும், 'தி.மு.கதான்டா உண்மையான சங்கி' என்று செருப்பைத் தூக்கிப் பிடித்து விமர்சிப்பதாகட்டும்... எப்போதுமே தமிழக அரசியலின் ஹாட் டாபிக் சீமான்! பரபரப்பான இந்த நேரத்தில் நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமானை நேரில் சந்தித்தேன்... ``மாரிதாஸின் பதிவு கருத்துரிமைக்கு ஆதரவாக நீங்கள் குரல் கொடுக்கிறீர்கள். ஆனால், கருத்தைப் பதிவிட்ட மாரிதாஸே சிறிது நேரத்தில் அந்தப் பதிவை நீக்கிவிட்டார் என்றால் என்ன அர்த்தம்?'' ``கல்புர்கி, நரேந்திர தபோல்கர், கௌரி லங்கேஷ், ஸ்டேன் லூர்து சாமி போன்றோரை பா.ஜ.க-வின…

  6. "ஜெயலலிதாவிடம் அரசியல் கற்றவன் நான்"- எம்.ஜி. ஆர் நூற்றாண்டு விழாவில் தினகரன் பேச்சு மதுரை மாவட்டம் மேலூரில், டி.டி.வி. தினகரன் தலைமையில் எம்.ஜி.ஆர் நூற்றாண்டு விழா எற்பாடு செய்யப்பட்டிருந்தது. அ.தி.மு.க மூன்றாகப் பிரிந்த பிறகு, ஒ. பன்னீர்செல்வம் மற்றும் எடப்பாடி பழனிசாமி அணியின் சார்பாக பல்வேறு இடங்களில் எம்.ஜி.ஆர் நூற்றாண்டு விழா நடத்தப்பட்டுவருகிறது. இந்நிலையில், இன்று மதுரை மாவட்டம் மேலூரில், டி.டி.வி. தினகரன் தலைமையில் எம்.ஜி.ஆர் நூற்றாண்டு விழா நடைபெற்றது. இந்த விழாவில் மொத்தம் 14 எம்.எம்.ஏ-க்கள் மற்றும் 5 எம்.பி-க்கள் பங்கேற்றனர். விழாவில் கூடியிருந்த மக்களிடம் தினகரன் பேசியது: "எம்.ஜி.ஆர் நூற்றாண்டு விழாவைக் கொண்…

  7. ஜெயலலிதாவின் கடைசிப்பயணம்! மனதளவில் அனாதையாக தன் பாதுகாவளரின் கைபிடித்து குழந்தைபோல நடந்து செல்லும் காட்சி..... கடைசியாக ஒருமுறை ..

  8. "எப்ப அகதியா பதிவு செய்வீங்க?" - அடைக்கலம் கோரி வந்த இலங்கை தமிழர்கள் கண்ணீர் பிரபுராவ் ஆனந்தன் பிபிசி தமிழுக்காக ஒரு மணி நேரத்துக்கு முன்னர் இலங்கையில் நீடித்து வரும் பொருளாதார நெருக்கடி காரணமாக அங்கிருந்து படகு மூலம் தமிழ்நாட்டுக்கு இதுவரை 75 இலங்கை தமிழர்கள் வந்துள்ளனர். ஆனால், தாய்நாட்டை விட்டு வெளியேறி வந்த அவர்கள், அகதிகளாக பதிவு செய்யப்படாமல் மண்டபம் அகதிகள் முகாமில் தங்க வைக்கப்பட்டுள்ளனர். வழக்கமாக இதுபோல உரிய ஆவணமின்றி வெளிநாட்டில் இருந்து இந்தியாவுக்குள் வந்தால் அவர்கள் மீது கடவுச்சீட்டு சட்டப்படி நடவடிக்கை எடுக்கப்படும். ஆனால், இலங்கையில் நிலவி வரும் அசாதாரண சூழல் கார…

  9. கரு முட்டை எடுத்து விற்க பல ஊர்களுக்கு அழைத்துச் செல்லப்பட்ட ஈரோடு சிறுமி: தாய் கைது ஏன்? பிரமிளா கிருஷ்ணன் பிபிசி தமிழ் 5 மணி நேரங்களுக்கு முன்னர் பட மூலாதாரம்,GETTY IMAGES படக்குறிப்பு, கருமுட்டை - சித்தரிப்புப் படம். ஈரோடு மாவட்டத்தில், பணத்துக்காக 13 வயது சிறுமியின் கருமுட்டைகளை அவரது தாய் உள்ளிட்ட சிலர், தனியார் மருத்துவமனைகளில் பலமுறை விற்றுள்ளதாக வெளியாகியுள்ள தகவல் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. கருமுட்டைகளை விற்பதற்காக, சிறுமியை அவரது தாய் தமிழ்நாட்டின் பல ஊர்களுக்கு அழைத்துச்சென்றது விசாரணையில் தெரியவந்துள்ளதாக போலீசார் கூறுகின்றனர். …

  10. விடுதலைகாக உண்ணாவிரதம் இருந்த ஈழத்தமிழர் தீக்குளிப்பு திருச்சி மத்திய சிறையில் உள்ள சிறப்பு முகாமில் உண்ணாவிரதம் இருந்து வந்த ஈழத் தமிழர்களில் ஒருவரான உமா ரமணன் என்பவர் இன்று தன்னை விடுதலை செய்ய வேண்டும் என்று வலியுறுத்தி தீ குறித்துள்ளார். இது குறித்து அறிந்த அதிகாரிகள் உடனடியாக அவரை மீட்டு திருச்சி அரசு மருத்துவமனைக்கு சிகிச்சைக்காக அனுப்பி வைத்துள்ளனர் மேலும் உண்ணாவிரதத்தில் ஈடுபட்டு வரக்கூடிய 4 பேர் மரத்தில் தூக்கு கயிறு கட்டி தூக்கில் தொங்க தயார் நிலையில் உள்ளதாகவும் அவர்களிடம் அதிகாரிகள் பேச்சுவார்த்தை நடத்தி வருவதாகவும் கூறப்படுகிறது. https://www.thaarakam.com/news/4bf1cd74-f7c8-4b18-8cd5-b6b8afa28722

  11. தமிழக மீனவர்களிடம் இலங்கைக் கடற்படை நடந்துகொள்ளும் அணுகுமுறை உலகில் வேறு எந்த இரு நாடுகளுக்கு இடையிலும் காண முடியாதது. நெருக்கமான கடல் எல்லையைக் கொண்ட இரு நாடுகளிடையே கடலோடிகள் எல்லை தாண்டிச் செல்வது எங்கும் நடக்கக் கூடியது. இந்தியாவையே எடுத்துக்கொண்டால், இந்தப் பக்கம் எப்படி மீனவர்கள் இலங்கை எல்லைக்குள் செல்கிறார்களோ, அதேபோல, அந்தப் பக்கம் பாகிஸ்தான் எல்லைக்குள் செல்வதும் நடக்கத்தான் செய்கிறது. ஆனால், இலங்கை அரசைப் போல பாகிஸ்தான் அரசு கொடூரமாக நடந்துகொள்ளவில்லை. அதேபோல், இந்திய எல்லைக்குள் தவறி வரும் எந்நாட்டு மீனவர்களையும் நாம் கண்ணியமாகவே கையாள்கிறோம். இலங்கை அரசின் அத்துமீறல்கள் சமீப காலமாக அதிகரித்திருக் கின்றன. இலங்கைக் கடற்படையினரால் தமிழக மீனவர்கள் தாக்கப் படுவத…

  12. நீங்கள் செய்த கர்மம் சீக்கிரம் திரும்பி வந்துவிட்டது: சன் டிவியை சாடிய ஹைகோர்ட் நீதிபதி! சென்னை: கேபிள் டிவி தொழிலில் ஏகாதிபத்தியமாக செயல்பட்டு மற்றவர்களை பாதிப்படைய செய்தீர்கள்...அந்த கர்மம் சீக்கிரம் திரும்பி வந்துவிட்டது என்று சன் டிவி குழுமத்தை சென்னை உயர்நீதிமன்ற நீதிபதி வெ. ராமசுப்பிரமணியன் சாடியுள்ளார். சன் குழுமத்திற்கு சொந்தமான கல் கேபிள்ஸ் நிறுவனத்தின் டிஜிட்டல் உரிமம் ரத்து செய்யப்பட்டதை எதிர்த்து சென்னை உயர்நீதிமன்றத்தில் அந்நிறுவனத்தின் சார்பில் வழக்கு தொடரப்பட்டுள்ளது. அந்நிறுவனத்தின் நிர்வாக இயக்குநர் விட்டல் சம்பத் குமரன் இது தொடர்பாக மனு தாக்கல் செய்தார். இந்த மனுவை நீதிபதி வெ.ராமசுப்பிரமணியன் விசாரித்தார். அப்போது அவர், கல் கேபிள்ஸ் ந…

  13. மீனவர் பிரச்னையில் நிரந்தரத் தீர்வுக்காக பாஜக போராடி வருகிறது: தமிழிசை செளந்தரராஜன் தமிழக மீனவர் பிரச்னையில் நிரந்தரத் தீர்வு காண்பதற்காக பாஜக தொடர்ந்து பல்வேறு நடவடிக்கைகளை எடுத்து வருவதாக, அக்கட்சியின் மாநிலத் தலைவர் தமிழிசை செளந்தரராஜன் கூறினார். தூத்துக்குடியில் திங்கள்கிழமை அவர் அளித்த பேட்டி: தமிழகம் முழுவதும் பல்வேறு இடங்களில் போட்டியிடும் பாஜக வேட்பாளர்கள் ஆளுங்கட்சியினரால் மிரட்டப்பட்டு வருகின்றனர். மிரட்டலையும் மீறி 80-க்கும் மேற்பட்ட வேட்பாளர்கள் களத்தில் உள்ளனர். தேர்தல் ஆணையம் நடுநிலையோடு நடந்துகொள்ள வேண்டும் எனத் தொடர்ந்து நாங்கள் வலியுறுத்தி வருகிறோம். பல்வேறு அசாதாரணச் சூழல் உருவாகியுள்ளதால் உள்ளாட்சி இடைத்தேர்தலை ரத்து செய்து, …

  14. கவர்னரை மிரட்டும் கவர்ன்மென்ட்? - ஆபாச ஆடியோ... அதிரும் ராஜ்பவன்! ‘யாரை மிரட்டுவதற்காக அந்த ஆடியோ வெளியானது’ என்ற கேள்விதான் அதிகார மட்டத்தில் இப்போது விவாதப் பொருளாக மாறியுள்ளது. பேராசிரியை நிர்மலாதேவி, மதுரை காமராசர் பல்கலைக்கழகத்திலோ, திருநெல்வேலி மனோன்மணீயம் சுந்தரனார் பல்கலைக்கழகத்திலோ முக்கியப் பதவியைக் கைப்பற்றுவதற்காக சில காரியங்களைப் பார்த்து வந்தார். அந்தப் பதவியைக் குறிவைத்து இருக்கும் மற்றவர்கள் நிர்மலாதேவியை மாட்டிவிடுவதற்காக இந்த ஆடியோவை லீக் செய்தார்கள்’’ என்கிறது ஒரு தரப்பு. ‘‘மாணவிகளிடம் நிர்மலாதேவி பேசும் ஆடியோ வெளியானால் அதிகம் அவமானப்படப் போவது தமிழக கவர்னர் பன்வாரிலால் புரோஹித். கவர்னரை அவமானப்படுத்த வேண்டும் என்று அதிகார…

  15. பெங்களூரு: பெங்களூரு மத்திய சிறையில் உள்ள ஜெயலலிதாவுக்கு இதயத்தில் பிரச்னை ஏற்பட்டுள்ளதாக வெளியான செய்தி தவறானது என போலீஸ் கமிஷனர் எம்.என்.ரெட்டி கூறியுள்ளார். சொத்து குவிப்பு வழக்கில் தண்டனை பெற்று பெங்களூர் மத்திய சிறையில் அடைக்கப்பட்டுள்ள தமிழக முன்னாள் முதலமைச்சர் ஜெயலலிதாவுக்கு இதயத்தில் பிரச்னை ஏற்பட்டுள்ளதாவும், அவர் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட உள்ளதாகவும் சில கன்னட ஊடகங்களில் செய்தி வெளியாகியிருந்தது. இந்நிலையில், இதுகுறித்து டுவிட்டர் சமூக வலைதளத்தில் பதிலளித்துள்ள பெங்களூரு போலீஸ் கமிஷனர் ''ஜெயலலிதாவுக்கு இதயத்தில் பிரச்னை உள்ளது என சில கன்னட செய்தி சேனல்கள் செய்தி வெளியிட்டுள்ளன. இது தவறான செய்தி. வழக்கமாக இசட் பிளஸ் பாதுகாப்பின்கீழ் உள்ள ஒருவர், நகருக்…

  16. கத்தி பட சர்ச்சையில் சுப்பிரமணியன்சுவாமி என்ட்ரி ஆனது எப்படி? சென்னை: சட்டம் ஒழுங்கை காரணம் காட்டி கத்தியை திரையிடச் செய்ய பாஜகவின் சுப்பிரமணியன் சுவாமி முயன்று வருவதாக கூறப்படுகிறது. மேலும் கத்தி படத்தை எதிர்ப்பவர்களை குண்டர் சட்டம் அல்லது தேசிய பாதுகாப்பு சட்டத்தில் கைது செய்ய வேண்டும் என்றும் சுப்பிரமணியன் சுவாமி வலியுறுத்தியுள்ளார். ராஜபக்ஷே பங்குதாரராக உள்ள லைக்கா நிறுவனத்தின் தயாரிப்பில் உருவான படம் என்பதால் "கத்தி' படத்தை ரிலீஸ் பண்ண விடமாட்டோம் என்று விடுதலை சிறுத்தைகள் கட்சித் தலைவர் திருமாவளவன், வேல்முருகன் தலைமையிலான தமிழர் விடுதலைக் கூட்டமைப்பு போன்றவை பலத்த எதிர்ப்பு தெரிவித்துள்ளன. இதையடுத்து "கத்தி' இயக்குநர் ஏ.ஆர்.முருகதாஸ், லைக்கா உரிமையாளர் சுபாஷ்கரன…

  17. (நா.தனுஜா) கச்சதீவில் புத்தர்சிலையொன்று நிறுவப்பட்டமையைக் கடுமையாகக் கண்டித்திருக்கும் இந்திய மக்களவை உறுப்பினர் தொல்.திருமாவளவன், அந்த புத்தர்சிலையை அகற்றுவதற்கும் அப்பகுதியில் மதரீதியான ஒருமைப்பாட்டை நிலைநாட்டுவதற்கும் உடனடியாக நடவடிக்கை எடுக்குமாறு இந்திய அரசாங்கத்தை வலியுறுத்தியுள்ளார். சில வாரங்களுக்கு முன்னர் கச்சதீவில் புத்தர்சிலையொன்று வைக்கப்பட்ட விவகாரம் தமிழ்மக்கள் மத்தியில் கடும் அதிருப்தியையும், எதிர்ப்பையும் தோற்றுவித்திருந்தது. கச்சதீவிலுள்ள புனித அந்தோனியார் தேவாலயம் இலங்கை மற்றும் இந்தியவாழ் கத்தோலிக்கர்களின் முக்கிய வழிபாட்டுத்தலமாகும். இவ்வாறானதொரு பின்னணியில் கச்சதீவில் விகாரை அமைப்பதற்கான முயற்சிகள் எவையும் மேற்கொள்ளப்…

    • 3 replies
    • 727 views
  18. சகோதரரின் சிகிச்சைக்காக தனி விமானம்: தமிழக அரசு மூலம் 14.91 இலட்சத்தை செலுத்தினார் துணை முதல்வர்! தமிழக துணை முதல்வர் ஓ.பன்னீர்செல்வத்தின் சகோதரரை இராணுவ விமானம் மூலம் மதுரையிலிருந்து சென்னைக்கு அழைத்து வந்ததற்காக 15 இலட்சம் ரூபாய் கட்டணம் வசூலிக்கப்பட்டுள்ளது. பன்னீர்செல்வத்தை பாதுகாப்பு துறை அமைச்சர் நிர்மலா சீதாராமன் சந்திக்க மறுத்த பின்பே மத்திய அரசு கட்டணம் கேட்டுள்ள தகவலும் அம்பலமாகியுள்ளது. உடல்நலக் குறைவால் பாதிக்கப்பட்டுள்ள ஓ.பன்னீர்செல்வத்தின் சகோதரர் கடந்த ஜூலை மாதம் மதுரையிலிருந்து சென்னைக்கு இராணுவ விமானம் மூலம் அழைத்து வரப்பட்டது பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியது. இதற்கு நன்றி தெரிவிக்க ஜூலை 24 டெல்லி சென்ற பன்னீர்செல்வத்தை, மத்திய அமைச்சர் ந…

    • 3 replies
    • 688 views
  19. படத்தின் காப்புரிமை facebook தமிழக அமைச்சர் இளைஞர் நலன் மற்றும் விளையாட்டு மேம்பாட்டுத் துறை பாலகிருஷ்ண ரெட்டிக்கு பேருந்துகளை கல் வீசித் தாக்கிய வழக்கில் மூன்று ஆண்டுகள் சிறை தண்டனை விதிக்கப்பட்டுள்ளது. அந்த தண்டனையை நிறுத்திவைக்கவும் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. இவர் அ.தி.மு.க. சார்பில் ஓசூர் தொகுதியில் போட்டியிட்டு வெற்றி பெற்றவர். 1998ஆம் ஆண்டு கிருஷ்ணகிரி மாவட்டம் ஓசூரை அடுத்துள்ள பாகலூரில் கள்ளச்சாராயம் விற்கப்படுவதைக்…

  20. பட மூலாதாரம்,MSSRF MEDIA கட்டுரை தகவல் எழுதியவர், முரளிதரன் காசிவிஸ்வநாதன் பதவி, பிபிசி செய்தியாளர் 28 செப்டெம்பர் 2023 புதுப்பிக்கப்பட்டது 9 பிப்ரவரி 2024 (பசுமைப் புரட்சியின் தந்தை என்று அழைக்கப்படும் எம்.எஸ். சுவாமிநாதன், முன்னாள் பிரதமர்கள் நரசிம்மராவ், சரண் சிங் ஆகியோருக்கு பாரத ரத்னா விருது அறிவிக்கப்பட்ட நிலையில் இந்தக் கட்டுரை மறு பகிர்வு செய்யப்படுகிறது) இந்தியாவில் பசுமைப் புரட்சி எனப்படும் விவசாய உற்பத்தியைப் பெருக்குவதில் முன்னோடியாகச் செயல்பட்ட விஞ்ஞானி எம்.எஸ்.சுவாமிநாதன் காலமானார். அவருக்கு பாரத ரத்னா விருது அறிவிக்கப்பட்டுள்ளது. 1925-ஆம் ஆண்டு கும்பகோணத்தில் பிறந்த…

  21. டி.செல்வகுமார் மக்களிடம் நெருக்கமாகப் போயி ருப்பதால் இத்தேர்தலில் பெரிய மாற்றம் ஏற்படும் என்று நாம் தமிழர் கட்சி தலைமை ஒருங் கிணைப்பாளர் சீமான் கூறியுள்ளார். தனது தேர்தல் பிரச்சார அனுபவம் குறித்து ‘இந்து தமிழ்’ நாளிதழுக்கு அவர் அளித்த சிறப்புப் பேட்டி: பிரச்சாரக் களத்தில் மக்களிடம் எத்தகைய எழுச்சியைப் பார்த்தீர்கள்? எங்களது தேர்தல் பிரச்சாரப் பொதுக்கூட்டம் நடந்த இடங்களில் இளைஞர்கள், கட்சி சார்பற்ற மக்கள், நடுநிலையானவர்கள், பெண்கள் ஆகியோர் எழுச்சியுடன் வந்ததைக் காண முடிந்தது. மாற்றத்துக்கான அரசியல் எதிர்பார்ப்பு இருப்பது தெரிகிறது. தன்னெழுச்சியாக ஏற்பட்டுள்ள இந்த மாற்றம் எங்களுக்கு மிகப்பெரிய நம்பிக்கையைக் கொடுத்துள்ளது. …

  22. நரபலி கொடுக்கப்பட்ட இடத்தில் எலும்பு துண்டுகள் கண்டெடுப்பு: உறங்காமல் காவல் காத்த சகாயம் டீம்! மதுரை மேலுரில் பி.ஆர்.பி நிறுவனம் நரபலி கொடுத்தததாக கூறப்படும் இடத்தில் இருந்து எலும்பு துண்டுகள் கண்டெடுக்கப்பட்டுள்ளது. சுடுகாட்டில் தோண்டும் பணி மலம்பட்டி சுடுகாட்டில் ஆர்.டி.ஓ. செந்தில் குமாரி, சட்ட ஆணையர் சகாயம் குழுவினர் முன்னிலையில், இன்று காலை 9 மணி முதல் 8 பேர் கொண்ட குழுவினர் உதவியுடன் சுடுகாட்டில் தோண்டும் பணி நடைபெற்று வருகிறது. முதலில் பொக்லைன் உதவியுடன் அந்த இடத்தில் தோண்ட முடிவு செய்யப்பட்டது. ஆனால் அப்படி தோண்டும் போது சில தடையங்கள் அழிக்கப்படக்கூடும் என்பதால் மனிதர்களின் உதவியோடு அங்கு தோண்டும் பணி நடைபெற்று வருகிறது. அதன்படி, சுடுகாட்டில் சேவற்கொடியோன் அ…

  23. காங்கிரஸ் மூத்த தலைவர் ஈவிகேஎஸ் இளங்கோவன் காலமானார் 14 டிசம்பர் 2024, 05:53 GMT ஈவிகேஎஸ் இளங்கோவன் காங்கிரஸ் மூத்த தலைவரும், ஈரோடு கிழக்கு தொகுதி சட்டமன்ற உறுப்பினருமான ஈவிகேஎஸ் இளங்கோவன் இன்று காலமானார். அவருக்கு வயது 75. உடல் நலக்குறைவு காரணமாக அவர் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருந்தார். ''ஈ.வி.கே.எஸ். இளங்கோவன் 13 நவம்பர் 2024 அன்று மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். மருத்துவ பணியாளர்கள் எவ்வளவோ முயற்சி செய்த போதிலும் அவர் இன்று (14 டிசம்பர்) காலமானார்'' என்று மியாட் மருத்துவமனை கூறியுள்ளது. ஈரோடு கிழக்கு தொகுதி உறுப்பினராக பொறுப்பு வகித்த தனது மகன் திருமகனின் மறைவைத் தொடர்ந்து, 2023-ஆம் ஆண்டு …

  24. ஆன்மிக பயணமாக இமயமலைக்கு செல்கிறார் நடிகர் ரஜினிகாந்த் நடிகர் ரஜினிகாந்த் ஆன்மிக பயணமாக இமயமலைக்கு பயணமாகியுள்ளார். இமயமலை செல்வதற்காக சென்னையில் இருந்து இன்று (ஞாயிற்றுக்கிழமை) காலை விமானம் மூலம் டெல்லி சென்ற ரஜினிகாந்த், அங்கு ஒரு வார காலம் தங்கியிருப்பார் என தகவல் வெளியாகியுள்ளது. ரஜினிகாந்த் தற்போது லைகா புரொடக்ஷனின் தயாரிப்பில் ஏ.ஆர்.முருகதாஸ் இயக்கத்தில் ‘தர்பார்’ படத்தில் நடித்துள்ளார். இதில் அவருக்கு ஜோடியாக நயன்தாரா நடிக்கிறார். ரஜினி பொலிஸ் அதிகாரியாக நடிக்கும் இந்த படத்தில் அதிரடியான சண்டைக் காட்சிகள் இடம் பெற்றுள்ளன. ஹிந்தி நடிகர்கள் பிரதீக் பார்பர், சுனில் ஷெட்டி, நிவேதா தாமஸ், யோகி பாபு, தம்பி ராமையா உள்ளிட்ட பலரும் ரஜினியுடன் நடித்துள்ளனர…

  25. ஜல்லிக்கட்டுக்கு இடைக்கால தடை: உச்ச நீதிமன்றம் ஜல்லிக்கட்டு போட்டி நடத்த அனுமதி அளித்த மத்திய அரசின் அறிவிக்கைக்கு, உச்ச நீதிமன்றம் இடைக்கால தடை விதித்துள்ளது தமிழகத்தில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. ஜல்லிக்கட்டு போட்டியின் போது காளைகள் துன்புறுத்தப்படுவதாகவும், இதனால் ஜல்லிக்கட்டு போட்டிக்கு தடை விதிக்க வேண்டும் என்றும் விலங்குகள் நல ஆர்வலர்கள் தொடர்ந்த வழக்கை விசாரித்த உச்ச நீதிமன்றம், ஜல்லிக்கட்டு போட்டி நடத்த தடை விதித்தது. இதனால் கடந்த ஆண்டு தமிழகத்தில் ஜல்லிக்கட்டு நடைபெறவில்லை. இந்த ஆண்டில் ஜல்லிக்கட்டு நடத்த அனுமதிக்க வேண்டும் என்று கோரி மத்திய அரசை தமிழக அரசு வற்புறுத்தியது. பல்வேறு அரசியல் கட்சி தலைவர்களும் ஜல்லிக்கட்டு நடத்த அ…

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.