Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

தமிழகச் செய்திகள்

செய்திகள் இணைப்போர் கவனத்துக்கு!

தமிழகச் செய்திகள் பகுதியில் முக்கிய தாய்த் தமிழகச் செய்திகள் இணைக்கப்படலாம்.

இப்பகுதியில் முக்கியமான தமிழகச் செய்திகள் மாத்திரம் இணைக்கப்படல் வேண்டும்.

  1. தவறான நட்பால் வீழ்ந்த ஆலமரம் ஜெயலலிதா! ஜெயலலிதா... இந்திய அரசியலில் தவிர்க்க முடியாத ஒரு பெயர். திரைப்பட நடிகையாகத் தொடங்கிய இவரது வாழ்க்கை, அரசியலுக்குள் நுழைந்ததும் பல அதிர்ச்சியான திருப்பங்களுடன் நகர்ந்தது. அ.தி.மு.கட்சியின் தலைவர் எம்.ஜி.ஆரின் நம்பிக்கைக்குப் பாத்திரமாக விளங்கியதையே தனது பலமாக மாற்றிக்கொண்டார். கட்சியின் கொள்கைப் பரப்புச் செயலாளராக தமிழகம் முழுவதும் பயணித்தார். எம்.ஜி.ஆர் மறைவுக்குப் பிறகு, தமிழக முதல்வரானார். ஆனால், அவரின் வாழ்க்கை முடிவு இனிமையாக இல்லை. இறப்புக்குப் பிறகு அவரைக் குற்றவாளியாக நீதிமன்றம் கூறிவிட்டது. வரலாற்றில் இருந்து நீங்காத கறையாக இது அமைந்துவிட்டது. பணம், புகழ் ஆகியவற்றைக் கொண்டிருந்த ஜெயலலிதாவை இந்த இடத்துக…

  2. அரசு விழாவில் பங்கேற்க விஜயபாஸ்கருக்கு தடை பதவியை பறிக்கவும் பழனிசாமி ஆலோசனை அமைச்சர் பதவியில் இருந்து, விஜயபாஸ்கரை நீக்க, முதல்வர் ஆலோசித்து வருகிறார். சென்னையில், நேற்று நடந்த, அரசு மருத்துவமனை கட்டடங்கள் திறப்பு விழாவில், அமைச்சர் விஜயபாஸ்கருக்கு பதிலாக, அமைச்சர் ஜெயக்குமார் பங்கேற்றார். அமைச்சர் விஜயபாஸ்கர் வீட்டில், வருமான வரித்துறையினர் நடத்திய சோதனையில், ஆர்.கே. நகர் தொகுதி வாக்காளர்களுக்கு, 89 கோடி ரூபாய் வழங்கப்பட்டதற்கான ஆவணங் கள் சிக்கின.அந்த பணத்தை, முதல்வர் மற்றும் அமைச்சர்கள் மூலம் வழங்கியதும், ஆவணங்கள் மூலம் தெரிய வந்துள்ளது. வாக்காளர்களுக்கு பணம் வினியோகம் செய்த, …

  3. கொரோனா – நகைச்சுவை நடிகர் பாண்டு காலமானார்! கொரோனா பாதிப்பு காரணமாக சென்னையில் உள்ள தனியார் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த நடிகர் பாண்டு காலமானார். கொரோனா பாதிப்பின் காரணமாக நகைச்சுவை நடிகர் பாண்டு மற்றும் அவரது மனைவி குமுதா ஆகியோர் சென்னையில் உள்ள தனியார் மருத்துவமனை ஒன்றில் சிகிச்சை பெற்று வந்த நிலையில், இன்று அதிகாலை நடிகர் பாண்டு சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார். அவரது மனைவி குமுதா, தீவிர சிகிச்சை பிரிவில் மருத்துவர்களின் கண்காணிப்பில் உள்ளார். பாண்டு – குமுதா தம்பதியினருக்கு பிரபு, பஞ்சு மற்றும் பின்டு ஆகிய 3 மகன்கள் உள்ளனர். கேப்பிடல் லெட்டர்ஸ் எனும் நிறுவனத்தை வெற்றிகரமாக நடத்தி நடிகர் பாண்டு, பல்வேறு திரையுலக பிரபலங்களின் இல்லங்கள் மற்றும் …

  4. பி.ஜே.பி-க்கு ஸ்டெர்லைட் கொடுத்தது எத்தனை கோடி? ‘தமிழர்கள் படுகொலை செய்யப் படுகின்றனர். ஏனென்றால், அவர்கள் ஆர்.எஸ்.எஸ் சித்தாந்தத்துக்கு அடிபணிய மறுக்கின்றனர். மோடியின் தோட்டாக்களால் ஒருபோதும் தமிழ் மக்களின் உணர்வுகளை நசுக்க முடியாது’ என ஸ்டெர்லைட் விவகாரம் பற்றி காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தி ட்விட்டரில் கருத்து தெரிவித்தார். உடனே, பி.ஜே.பி-யின் தமிழகத் தலைவர் தமிழிசை சௌந்தர்ராஜன், ‘‘ஸ்டெர்லைட்டுக்கும் பி.ஜே.பி-க்கும் எந்தச் சம்பந்தமும் இல்லை. ராகுல் காந்தி மன்னிப்பு கேட்க வேண்டும்’’ என்றார். உண்மையில் ஸ்டெர்லைட்டுக்கும் பி.ஜே.பி-க்கும் மட்டுமல்ல, காங்கிரஸுக்கும்கூடத் தொடர்பு இருக்கிறது. டெல்லி அசோகா ரோட்டில் உள்ள பி.ஜே.பி தலைம…

  5. பட மூலாதாரம்,SPECIAL ARRANGEMENT 13 மே 2025, 05:26 GMT புதுப்பிக்கப்பட்டது 13 நிமிடங்களுக்கு முன்னர் (இந்த சமீபத்திய செய்தி தொடர்ந்து புதுப்பிக்கப்பட்டு வருகிறது.) கடந்த 2019-ஆம் ஆண்டில் தமிழ்நாட்டையே உலுக்கிய பொள்ளாச்சி பாலியல் வழக்கில் 9 பேரும் குற்றவாளிகள் என்று தீர்ப்பு வழங்கப்பட்டுள்ளது. கோவை மாவட்ட மகளிர் நீதிமன்ற நீதிபதி நந்தினி தேவி சற்று முன்பு தீர்ப்பு வழங்கினார். 9 பேர் மீதும் முன்வைத்த குற்றச்சாட்டுகளை அரசு தரப்பு நிரூபித்திருப்பதாக நீதிபதி தெரிவித்தார். அவர்களுக்கு என்ன தண்டனை என்ற விவரம் நண்பகல் 12 மணிக்கு அறிவிக்கப்படும் என்று நீதிபதி தெரிவித்துள்ளார். கடந்த அதிமுக ஆட்சிக் காலத்தில் வெளிச்சத்துக்கு வந்த இந்த பாலியல் வழக்கு காரணமாக, அரசுக்கு எதிராக கடும் வி…

  6. கண்ணீர்... களங்கம்... கொலைப்பழி! - சசிகலா நெக்ஸ்ட்? ப.திருமாவேலன், படம்: ப.சரவணகுமார் உளவுபார்க்க வந்தவருக்கு உயர்ந்த பரிசுப்பொருள் கிடைக்கும். ஆனால், நாடே கிடைத்ததாக சரித்திரம் இல்லை. சசிகலா, சரித்திரத்தையே மாற்றியவர்?! அரசியலுக்கு அது வேண்டும், இது வேண்டும், அது இருக்கிறதா, இது இருக்கிறதா என... நூறு விஷயங்களை அடுக்குவார்கள். அது இது எதுவும் இல்லாமல் லட்சக்கணக்கான தொண்டர்களை வழிநடத்தும் இடத்துக்கு சசிகலா வந்துவிட்டார். சிரமம் இல்லாமல் வந்துவிட்ட அவர், சின்னம்மா அல்ல... அதிர்ஷ்ட அம்மா! `ஆயிரம் ஆயிரம் கூட்டங்களுக்கு நான் அம்மாவுடன் சென்றிருக்கிறேன். ஏறத்தாழ 33 ஆண்டுகளுக்கும் மேலாக எத்தனையோ கூட்டங்களில் அவருடன் கலந்துகொ…

  7. முருகனைக் காப்பாற்ற நளினி உண்ணாவிரதம்! மின்னம்பலம் முன்கூட்டியே விடுதலை மற்றும் உயிருக்கு மோசமான நிலையில் காணப்படும் கணவரைக் காப்பாற்றக்கோரி நளினி சிறையில் உண்ணாவிரதம் இருந்து வருகிறார். முன்னாள் பிரதமர் ராஜீவ்காந்தி கொலை வழக்கில் முருகன், அவருடைய மனைவி நளினி, பேரறிவாளன், சாந்தன், ராபர்ட் பயஸ், ஜெயக்குமார், ரவிச்சந்திரன் ஆகியோர் ஆயுள் தண்டனை அனுபவித்து வருகின்றனர். இதில், முருகன் வேலூர் மத்திய ஆண்கள் சிறையிலும், நளினி மத்திய பெண்கள் சிறையிலும் அடைக்கப்பட்டுள்ளனர். சுமார் 27 ஆண்டுகளாக சிறைத் தண்டனை அனுபவித்து வரும் முருகன், நளினி, சாந்தன் உள்ளிட்ட ஏழு பேரையும் விடுதலை செய்ய வேண்டும் என்று பல்வேறு கட்சிகள், அமைப்பினர் வலியுறுத்தி வருகின்றனர். இ…

  8. அம்பேத்கர் மக்கள் இயக்கத்தின் மாவட்ட தலைவர் ஆ. அண்ணாதுரை தலைமையில் சேலம் மாவட்ட கலெக்டர் அலுவலகத்திற்கு 10க்கும் மேற்பட்டோர் நேற்று சென்றனர். அவர்கள் கலெக்டர் க. மகரபூஷணத்தை சந்தித்து புகார் மனு ஒன்றை அளித்தனர். அந்த மனுவில் கூறப்பட்டிருப்பதாவது… சேலம் பழைய சூரமங்கலம் பகுதியில் அமைந்துள்ள அரசுப் பள்ளியில் பணியாற்றி வரும் சமூகவியல், கணிதம் ஆகிய பாடங்கள் கற்பிக்கும் ஆசிரியர், 8ம் வகுப்பு மாணவிகளிடம் தவறாக நடந்து வருகிறார். உயரம் குறைந்த மாணவிகளை பின் இருக்கையிலும், உயரம் அதிகம் கொண்ட மாணவிகளை முன் இருக்கையில் அமர வைப்பதும், மாணவியின் சட்டைப் பாக்கெட்டில் கையை விட்டு என்ன வைத்திருக்கிறாய் என்று கேட்கிறார். மிக கொச்சையாக நடந்துகொள்கிறார். சனிக்கிழமை நாள்களில் ப…

    • 0 replies
    • 1.1k views
  9. தனது அபராதத் தொகையை செலுத்தினார் சசிகலா! சொத்து குவிப்பு வழக்கில் பெங்களூரு சிறையில் இருக்கும் சசிகலா தனது அபராதத் தொகையை சிறப்பு நீதிமன்றத்தில் செலுத்தியுள்ளார். மறைந்த முன்னாள் முதலமைச்சர் ஜெயலலிதாவின் தோழி சசிகலா சொத்து குவிப்பு வழக்கில் தண்டனை பெற்று கடந்த 2017ஆம் ஆண்டு பெப்ரவரி மாதம் 17ஆம் திகதி பெங்களூர் சிறையில் அடைக்கப்பட்டார். அவருக்கு 4 ஆண்டு சிறை தண்டனையும், 10 கோடி ரூபாய் அபராதமும் விதிக்கப்பட்டது. இதற்கிடையே பெங்களூருவை சேர்ந்த டி.நரசிம்மமூர்த்தி என்பவர் சசிகலா விடுதலை குறித்து கேள்வி எழுப்பி தகவல் பெறும் உரிமை சட்டத்தின் கீழ் விண்ணப்பித்திருந்தார். அவரது கேள்விக்கு கடிதம் மூலம் பதிலளித்த பெங்களூர், அக்ரஹாரா சிறை அதிகாரி ஆர்.லதா “சிறை ஆ…

  10. வட மாநிலத்தவர்கள் சேலம் தொழிலாளியை கட்டி வைத்து 2 நாட்களுக்கு அடித்ததாக குற்றச்சாட்டு - 7 பேர் கைது கட்டுரை தகவல் எழுதியவர்,பி.சுதாகர் பதவி,பிபிசி தமிழுக்காக 2 மணி நேரங்களுக்கு முன்னர் பட மூலாதாரம்,GETTY IMAGES படக்குறிப்பு, மாதிரி படம் சூளகிரி அருகே திருடன் எனக் கூறி சேலம் மாவட்டத்தைச் சேர்ந்த தொழிலாளியைக் கட்டி வைத்து 2 நாட்களாக சரமாரியாகத் தாக்கிய குற்றச்சாட்டில் 5 வட மாநில தொழிலாளர்கள் உள்பட 7 பேரை போலீசார் கைது செய்தனர். கிருஷ்ணகிரி மாவட்டம் சூளகிரி அருகே உள்ள சின்னாறு பகுதியில் காய்கறிகள் மற்றும் பழங்கள் பதப்படுத்தும் ப…

  11. 14 வயது சிறுமியை சீரழித்த சாமியார்... சிறுமியின் தாயாரே உடந்தையான கொடுமை! சென்னை: சென்னையில் 14 வயது சிறுமியை ஒரு சாமியார் பாலியல் பலாத்காரம் செய்து சீரழித்துள்ளார். இந்த கொடும் செயலுக்கு அந்த சிறுமியின் தாயாரும் உடந்தையாக இருந்தது அதிர்ச்சியை பரப்பியுள்ளது. சாமியார் மற்றும் தாயார் ஆகியோர் கைது செய்யப்பட்டுள்ளனர். அந்த சிறுமி மேலும் சீரழிந்து போக காரணமாக இருந்த 4 பேர் தலைமறைவாகி விட்டனர். பெரம்பூரைச் சேர்ந்தவர் அந்த சிறுமி. 14 வயதாகிறது. அவரது தந்தை பல ஆண்டுகளுக்கு முன்பே இறந்து விட்டார். தாயார் சசிகலாவுடன் வசித்து வந்தார். இந்த நிலையில் கடந்த ஆண்டு பெரம்பூரில் உள்ள ஒரு ஆசிரமத்திற்கு மகளை அழைத்துச் சென்றார் சசிகலா. அங்கு அறவழி சித்தர் என்ற குறி சொல்லும் சாமியா…

    • 5 replies
    • 1.1k views
  12. பட மூலாதாரம்,GETTY IMAGES கட்டுரை தகவல் எழுதியவர், கமலா தியாகராஜன் பதவி, பிபிசி டிராவல் 4 மணி நேரங்களுக்கு முன்னர் 2008ஆம் ஆண்டு ஒரு மாலை வேளையில், தென்னிந்திய நகரமான வேலூரில் உள்ள அரபிக் கல்லூரியில் முகமது சுல்தான் பாகவி 26 வயது மாணவராக இருந்தபோது, அவர் ஒரு குறிப்பிடத்தக்க விஷயத்தைக் கண்டுபிடித்தார். நகரின் லபாபீன் கப்ருஸ்தான் மசூதியில் தொழுகையை முடித்த பிறகு, மசூதியின் முற்றத்தை ஒருவர் சுத்தம் செய்வதைக் கண்டார். அவர் குப்பைகளை, காகிதங்களை, இலைகளை சேகரித்து, அவற்றை எரிப்பதற்காக மசூதியின் நுழைவாயிலுக்கு அருகில் இருந்த ஒரு கிணற்றின் அருகே குவித்து வைத்தார். மசூதியை விட்டு பாகவி புறப்படத் தயாரானபோது, மெல்லி…

  13. திருச்சிக்கு மகளுடன் பிரச்சாரத்திற்காக ஹெலிகாப்டரில் வந்த கமல் .. உற்சாக வரவேற்பு திருச்சி: திருச்சிக்கு மகளுடன் பிரச்சாரத்திற்காக ஹெலிகாப்டரில் வந்த மக்கள் நீதி மய்யம் கட்சி தலைவர் கமல்ஹாசனுக்கு அவரது தொண்டர்கள் உற்சாக வரவேற்பு அளித்தனர் திருச்சிக்கு மகளுடன் பிரச்சாரத்திற்காக ஹெலிகாப்டரில் வந்த கமல் .. உற்சாக வரவேற்பு - வீடியோ தமிழகத்தில் அடுத்த ஆண்டு நடைபெற உள்ள சட்டமன்ற தேர்தலையொட்டி அதிமுக, திமுக உள்ளிட்ட கட்சிகள் தங்களுடைய தேர்தல் பரப்புரையை துவங்கியது இதனிடையே மக்கள் நீதி மையத்தின் தலைவர் கமல்ஹாசன் கட்சியின் பிரச்சாரத்தை ஏற்கனவே துவக்கினார். இந்நிலையில் இன்று திருச்சி வந்த அவர், பிரச்சாரக்கூட்டத்தில் பேசினார். நா…

  14. 5001 பேர் கலந்து கொண்ட, அதிமுக பால் குட ஊர்வலம்... ஸ்தம்பித்தது வேலூர்.சென்னை: இந்தப் புகைப்படத்தைப் பார்க்கும்போது ஷங்கர் படத்தில் வரும் கிராபிக்ஸ் காட்சி போலவே இருக்கிறது இல்லையா. ஆனால் இது வேலூரில் அதிமுகவினர் நடத்திய பால் குட ஊர்வலம். இந்த ஊர்வலத்தால் வேலூரே ஸ்தம்பித்துப் போனது. உடல் நலக்குறைவால் சென்னை அப்பல்லோ மருத்துவமணையில் சிகிச்சை பெற்றுவரும் முதல்வர் ஜெயலலிதா விரைவில் குணமடைய வேண்டிய அதிமுகவினர் தொடர்ந்து விதம் விதமான பிரார்த்தனைகளை நடத்தி வருகின்றனர்.அந்த வகையில், ஜெயலலிதா பூரண குணம்பெற வேண்டி வணிக வரித்துறை அமைச்சர் கேசி வீரமணி தலைமையில் தொழிலாளர் நலத்துறை அமைச்சர் நிலோபர் கபீல் முன்னிலையில் வேலூர் கோட்டை ஜலகண்டேஸ்வர்ர் ஆலயத்தில் 5001பெண்கள் பால்குடம் ஏ…

  15. ஜெயலலிதா மர்மம்! - யார் அந்த 17 பேர்? எஸ்.ஏ.எம்.பரக்கத் அலி - ஓவியம்: கார்த்திகேயன் மேடி ‘மர்ம மரணம்’ பட்டியலில் தமிழகத்தில் முதலிடத்தில் இருப்பது ஜெயலலிதாவின் மரணம்தான். ஒட்டுமொத்த எதிர்க்கட்சிகளும் திரண்டு ஜெயலலிதாவின் மரணத்துக்கு நியாயம் கேட்டபோது செவிடாய் இருந்த அரசு இப்போது செவி சாய்ப்பதற்குக் காரணம் அரசியல். ஜெயலலிதாவின் மரணம் தொடர்பாக வதந்தி பரப்பியவர்கள் எனச் சொல்லி பலரையும் கைது செய்தார்கள். ஜெயலலிதாவின் அண்ணன் மகள் தீபா, ‘‘ஜெயலலிதா மரணத்தில் மர்மம் இருக்கிறது’’ என்றார். சி.பி.ஐ. விசாரணை கோரி மக்களவையில் ஓ.பி.எஸ். எம்.பி-க்கள் அமளியில் ஈடுபட்டனர். ஜெயலலிதாவின் தோழி கீதாவும் இந்த விவகாரத்தை எழுப்பினார். பிரதமரிடமே நேரில் போய்ப் புகார்…

  16. ஐதராபாத்: தெலுங்கானா தலைநகர் ஐதராபாதுக்கு அருகில் உள்ள யாதாத்ரி கோவிலை, 1,800 கோடி ரூபாயில், திருமலை போல் மாற்றுவதற்கான முயற்சிகளில் மாநில அரசு ஈடுபட்டுள்ளது. தெலுங்கானாவில், முதல்வர், சந்திரசேகர ராவ் தலைமையிலான தெலுங்கானா ராஷ்ட்ரீய சமிதி அரசு அமைந்துள்ளது. ஆந்திரா பிரிக்கப்பட்டு, தெலுங்கானா தனி மாநிலம் அமைத்த போது, உலகின் பணக்கார கோவில்களில் ஒன்றான திருமலை, ஆந்திராவுடன் இணைந்தது. பல்வேறு விஷயங்களில் இரு மாநிலங்களுக்கும் இடையே பலத்த போட்டி இருந்து வருகிறது. இந்நிலையில், தலைநகர் ஐதராபாதுக்கு அருகில் உள்ள, புராதன நரசிம்மர் கோவிலான, யாதாத்ரி கோவிலை மேம்படுத்த, 1,800 கோடி ரூபாய் செலவில், தெலுங்கானா மாநில அரசு, புதிய திட்டத்தை வகுத்துள்ளது. மொத்தம், 11 ஏக்கர் நிலப்பரப்பில் அ…

    • 3 replies
    • 1.1k views
  17. ஈழத்தமிழர்களுக்கு ஆதரவாக திருநங்கைகள் நடாத்திய உண்ணாவிரத போராட்டம்: [saturday, 2013-03-30 10:48:11] ஈழத்தமிழர்களுக்கு ஆதரவாக தமிழ்நாட்டில் கடந்த 1 மாதமாக போராட்டம் தீவிரம் அடைந்துள்ளது. கல்லூரி மாணவர்கள், சினிமா துறையினர், தமிழ் ஆர்வலர்கள், தொண்டு நிறுவனத்தினர் என பல்வேறு தரப்பினரும் ஆர்ப்பாட்டம், உண்ணாவிரதம் போன்ற போராட்டங்களில் ஈடுபட்டு வருகின்றனர். இப்போது திருநங்கைகளும் இலங்கை தமிழர்களுக்கு ஆதரவு தெரிவித்து போராட்டத்தில் குதித்துள்ளனர். தண்டையார்பேட்டை திருவொற்றியூர் நெடுஞ்சாலையில் அப்பல்லோ ஆஸ்பத்திரி அருகே இன்று திருநங்கைகள் உண்ணாவிரத போராட்டம் நடத்தினர். இதில் வடசென்னை பகுதியில் உ…

    • 1 reply
    • 1.1k views
  18. `என் பிரதமரை கேள்வி கேட்க எனக்கு உரிமையில்லையா?': பிரகாஷ் ராஜ் பிரத்யேக பேட்டி இதை பகிர ஃபேஸ்புக்கில் இதை பகிர டுவிட்டரில் இதை பகிர Messenger இதை பகிர மின்னஞ்சல் படத்தின் காப்புரிமைFACEBOOK நடிகரும், தமிழ் திரைப்படத் தயாரிப்பாளர் சங்கத்தின் பொதுச் செயலாளருமான பிரகாஷ் ராஜ் கடந்த சில மாதங்களாக சமூகவலைதளங்களிலும் பேட்டிகளிலும் தெரிவித்துவரும் கருத்துகள் பெரும் சலசலப்பை ஏற்படுத்தியிருக்கின்றன. மிகப் பரபரப்பான சூழலில் தற்போதைய மத…

  19. போர்க்குற்றவாளியை இராணுவத் தளபதியாக நியமித்த இலங்கையை இந்தியா கண்டிக்க வேண்டுமென, பாட்டாளி மக்கள் கட்சித் தலைவர் ராமதாஸ் வலியுறுத்தியுள்ளார். இதுகுறித்து அவர் விடுத்துள்ள அறிக்கையில், யுத்தக்குற்றவாளியான ஷவேந்திர சில்வாவை இலங்கை அரசாங்கம் இராணுவத்தளபதியாக நியமித்துள்ளது.இது தமிழர்களைப் பெரும் அதிர்ச்சிக்கு உள்ளாக்கியுள்ளது. 2009-ஆம் ஆண்டு நடந்த போரில் அப்பாவித் தமிழர்களை படுகொலை செய்வதில் முக்கியப் பங்கு வகித்தவர் ஷவேந்திர சில்வா.இவ்வாறான ஒருவரை இராணுவத் தளபதியாக நியமித்தமை கடுமையாக கண்டிக்கத்தக்கது. இவரது தலைமையிலான 58-ஆவது படையணியே போரின் இறுதிக் கட்டத்தில் அப்பாவித் தமிழர்களை கொன்று குவித்தது. தமிழர்களுக்கு எதிரான தாக்குதலை தீவிரப்படுத்த வேண்டும் என…

  20. சென்னை: சென்னை உட்பட, தமிழகத்தின் முக்கிய நகரங்களில், வெப்பநிலை தொடர்ந்து அதிகரித்து வருகிறது. குறிப்பாக, தலைநகர் சென்னையில், 1948ல் பதிவான, அதிகபட்சமான, 43 டிகிரி செல்சியசை, தற்போதைய வெப்பநிலை நெருங்குகிறது. சுடுநீரில் குளிக்க, 'ஹீட்டர்' போட வேண்டாம்; பக்கெட் தண்ணீரை வெளியில் வைத்தால் போதும். கொதிக்கும் நீர் கிடைக்கும். உச்சி வெயிலில் வெளியில் சென்றால், உடலில் ஈரப்பதத்தை இழந்து, மனிதன் மரணிக்கும் அளவிற்கு, வெப்பம் உயர்ந்துள்ளது. குறிப்பாக, வட மாவட்டங்களில், வெப்பநிலை மிகவும் கடுமையாக உள்ளது. கத்தரி வெயில்: கடந்த சில ஆண்டுகளை விட, இந்தாண்டு மே, ஜூன் மாதங்களில், வெப்பம் அதிகரித்துள்ளதாக, வானிலை வல்லுனர்கள் தெரிவிக்கினறனர். ஆண்டுதோறும், 'கத்தரி வெயில்' எனப்படும், அ…

    • 0 replies
    • 1.1k views
  21. மிஸ்டர் கழுகு: பதவி பறிக்கும் குட்கா? ‘சென்னை உயர் நீதிமன்றத்தில் இருக்கிறேன். மதியத்துக்குள் வந்துவிடுவேன்’ என மெசேஜ் அனுப்பியிருந்தார் கழுகார். மதிய வெயிலில் வியர்வையோடு வந்த அவரிடம், ‘‘காவிரிப் பிரச்னை, கவர்னர் விவகாரத்தால் பின்னுக்குப் போனது. கவர்னர் விவகாரம், தினகரன்-திவாகரன் மோதலில் அடிபட்டுப் போனது. இப்போது குட்கா விவகாரம் எல்லாவற்றையும் பின்னுக்குத் தள்ளிவிட்டதே’’ என்றோம். ‘‘தினகரனுக்கும் பி.ஜே.பி-க்கும் இடையில் நல்ல புரிதல் ஏற்பட்டுள்ளது. மோடியின் ஆலோசகராக உள்ள அதிகாரி ஒருவர் தினகரனை சென்னையில் வந்து சந்தித்துவிட்டுப் போனார் என பல வாரங்களுக்கு முன்பே நமது நிருபர் எழுதியிருந்தார். அதற்கும், நீர் மேலே சொல்லி இருக்கிற எல்லா வ…

  22. சொத்துக்குவிப்பு வழக்கில் தடம் பதித்தவர்கள்: ஜெயலலிதாவின் விடுதலைக்கு வித்திட்டவர்கள் சுப்பிரமணியன் சுவாமியால் பரபரப்பாக தொடங்கப்பட்டு பல்வேறு திருப்பங்களைக் கடந்த சொத்துக் குவிப்பு வழக்கு, மே 11-ம் தேதி குமாரசாமியால் முடித்து வைக்கப் பட்டும், தீர்ப்பு குறித்து சர்ச்சை நிலவி வருகிறது. இவ்வழக்கில் இருந்து ஜெயலலிதாவுக்கு கிடைத் திருக்கும் விடுதலை எளிதாய் கிடைத்தது அல்ல. விடுதலை தந்த 919 பக்க தீர்ப்பின் ஒவ்வொரு எழுத்திலும் முகம் தெரியாத பல வழக்கறிஞர்க‌ளின் உழைப்பு இழையோடிருக்கிறது. சட்டத்தில் இருந்த அத்தனை பிரிவுகளிலும் நுழைந்து வெற்றியை சாத்தியமாக்கி இருக்கிறார்கள். சென்னை முதன்மை அமர்வு நீதிமன்றத்தில் வாதிட்ட விருத்தால ரெட்டியாரில் தொடங்கி ஜோதி, கே…

  23. நடிகர் சேதுராமன் மரணம் - "நீ திரும்பி வர மாட்டாயா..." - திரைப்பட நடிகர் சேது மாரடைப்பில் மரணம் 3 மணி நேரங்களுக்கு முன்னர் இதை பகிர ஃபேஸ்புக்கில் இதை பகிர Messenger இதை பகிர டுவிட்டரில் இதை பகிர மின்னஞ்சல் பகிர்க தமிழ்த் திரைப்பட நடிகரும், மருத்துவருமான சேதுராமன் நேற்று (வியாழக்கிழமை) இரவு மாரடைப்பு காரணமாக மரணம் அடைந்தார். இவருக்கு வயது 36. இவர் 2013ஆம் ஆண்டு வெளியான கண்ணா லட்டு தின்ன ஆசையா…

  24. டங்களுக்கு முன்னர் அதிமுகவும் பாஜகவும் எதிர்வரும் தமிழக சட்டமன்ற தேர்தலை இணைந்து சந்திக்கும் என்று தெரிவித்துள்ளார் பாரதிய ஜனதா கட்சியின் அகில இந்திய தலைவர் ஜே.பி. நட்டா. மதுரையில் இன்று நடைபெற்ற பொதுக்கூட்டத்தில் அவர் இவ்வாறு அறிவித்துள்ளார். தேர்தல் கூட்டணி குறித்து பாஜக தரப்பிலிருந்து முறையான அறிவிப்பு வெளிவருவது இதுவே முதல்முறை. கடந்த நவம்பர் மாதம் பாரதிய ஜனதா கட்சியின் முன்னாள் தேசிய தலைவரும், இந்திய உள்துறை அமைச்சருமான அமித் ஷா தமிழகம் வந்திருந்தபோது பாரதிய ஜனதா கட்சி மற்றும் அதிமுக கூட்டணி எதிர்வரும் சட்டமன்ற தேர்தலிலும் தொடரும் என்று அதிமுகவின் ஒருங்கிணைப்பாளரும் தமிழகத்தின் துணை முதலமைச்சருமான ஓ.பன்ன…

  25. சட்டப்பேரவையின் முதல் அரை மணிநேர பரபரப்பு விவரம் சட்டப்பேரவை வளாகம். அமளி, முழக்கம், வேண்டுகோள், நிராகரிப்பு என சட்டப்பேரவையின் முதல் அரைமணி நேரம் பரபரப்பாக இருந்தது. சட்டப்பேரவையில் பலத்த அமளிக்கிடையே நம்பிக்கை வாக்கெடுப்பு தீர்மானத்தை எடப்பாடி பழனிசாமி முன்மொழிந்தார். ரகசிய வாக்கெடுப்பு நடத்த வேண்டும் என்று பன்னீர்செல்வம் அணி எம்.எல்.ஏக்கள் முழக்கமிட்டனர். அதைத் தொடர்ந்து திமுக, காங்கிரஸ் பேரவை உறுப்பினர்களும், இந்திய யூனியன் முஸ்லிம் லீக் உறுப்பினரும் ரகசிய வாக்கெடுப்பு நடத்த வலியுறுத்தினர். இந்நிலையில் திமுகவினருக்கு எதிராக எடப்பாடி பழனிசாமி அணியினர் முழக்கமிட்டதால் அமளி ஏற்பட்டது. …

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.