வாழும் புலம்
புலம்பெயர் நாடுகள் | தமிழர் வாழ்வு | அனுபவங்கள் | அன்றாட நிகழ்வுகள்
வாழும் புலம் பகுதியில் புலம்பெயர் நாடுகள், தமிழர் வாழ்வு, அனுபவங்கள், அன்றாட நிகழ்வுகள் சம்பந்தமான பதிவுகள் இணைக்கப்படலாம்.
புலம்பெயர் நாடுகளில் வசிக்கும் தமிழர்கள் பற்றியதும் புலம்பெயர் தமிழர்களுக்கு அவசியமானதுமான செய்திகள், தகவல்கள் மாத்திரம் இணைக்கப்படல் வேண்டும்.
5813 topics in this forum
-
பிரான்சின் தலைநகர் பரிஸ் லாச்சப்பலில் அமைந்துள்ள விநாயகர் ஆலயத் தேர்த் திருவிழா இன்று ஞாயிற்றுக்கிழமை இடம்பெற்றது. ஆயிரக்கணக்கான மக்கள் கலந்துகொண்ட இந்நிகழ்வில் இருந்து சில காட்சிப் பதிவுகள்... http://www.sankathi24.com/news/32739/64//d,fullart.aspx
-
- 0 replies
- 787 views
-
-
அன்பான தமிழ் உறவுகளே...! துபாயில் தடுத்து சிறை வைக்கப்பட்டிருக்கும் உங்களின் உறவான... ஐநாவால் அகதிகளாக ஏற்றுக் கொள்ளப்பட்ட ஈழ அகதிகளை இலங்கைக்கு நாடு கடத்தாமல் தடுக்கும் விதத்தில் அந்த ஈழ அகதிகளை உங்களில் ஒரு உறவாக நினைத்து அவர்களை நாடு கடத்துவதில் இருந்து உடனடியாக தடுத்து நிறுத்த அவர்களுக்கான இந்தத் தளத்தில் உங்கள் கையொப்பங்களை பதிவிடுங்கள். உங்களின் ஒவ்வொரு கையொப்பம்தான் ஐநாவின் நெஞ்சில் பதியப்பட்டு, அந்த அகதிகளின் நாடு கடத்தலை உடனடியாக தடுத்து நிறுத்தும். அன்பான தமிழ் உறவுகளே... உடனடியாக உங்கள் கையொப்பங்களை பதிவிடுங்கள். நன்றி. Please sign!! http://chn.ge/147LNpW முகப்புத்தகத்திலிருந்து ஒரு கோரிக்கை .
-
- 0 replies
- 630 views
-
-
நவநீதம்பிள்ளையின் கைகளை சென்றடைந்த நோர்வே சிறுவர் விவகாரம் நோர்வே நாட்டில் அவல நிலைக்குள்ளாக்கப்பட்டுள்ள வெளிநாட்டு வதிவாளர்களின் குழந்தைகள் தொடர்பான விவகாரம் இலங்கை வந்திருந்த ஐ.நா. மனித உரிமைகள் விவகாரங்களுக்கான உயர்ஸ்தானிகர் நவநீதம்பிள்ளையின் கவனத்திற்கு கொண்டுவரப்பட்ட அதேவேளை, நோர்வேயில் வதியும் யாழ்ப்பாணத்தைச் சேர்ந்த நான்கு குடும்பங்களின் நிலைமை மற்றும் அவர்களது குழந்தைகள் நோர்வே காப்பகங்களால் பலவந்தமாக தடுத்து வைக்கப்பட்டுள்ளமை ஆகிய விடயங்களை தெளிவுபடுத்திய நான்கு ஆவணக்கோவைகள் அவரிடம் நேரடியாக கையளிக்கப்பட்டுள்ளனர். நோர்வே நாட்டில் வதியும் யாழ்ப்பாணத்தைச் சேர்ந்த எரிக்ஜோசப் டிலாந்தினிஜோசப் தம்பதியரின் மூன்று குழந்தை…
-
- 0 replies
- 666 views
-
-
28 வயதான இலங்கையர் ஒருவர் பாரிஸில் சென் ஆற்றில் வீழ்ந்து மீட்கப்பட்ட நிலையில் மாரடைப்பு ஏற்பட்டு உயிரிழந்துள்ளார். பாரிசின் 18 நிர்வாகப்பிரிவிலுள்ள கே து ஒஸ்ரலிட்ஸ் பகுதியில் சென் ஆற்றங்கரையேரம் நேற்று மாலை 5 மணியளவில் நடந்து சென்ற இந்த இலங்கையர் அந்தபகுதியில் சென்ற சிலருடன் வாய் தகராறில் ஈடுபட்டதாகவும் இதில் ஆத்திரடைந்த ஒருவர் அவரை ஆற்றுக்குள் தள்விட்டதாகவும் உறுதிப்படுத்தப்படாத சாட்சிகள் தெரிவித்ததாக பாரிஸ் ஊடகங்கள் தெரிவித்துள்ளன. நீச்சல் தொரியாத இவர் முதலுதவி படையினரால் மீட்கப்பட்டு மருத்துவமனையில் அனுமதிகப்பட்ட நிலையில் மாரடைப்பு ஏற்பட்டு உயிரிழந்துள்ளார். இவர் சென் ஆற்றுக்குள் விழுந்ததற்கான காரணத்தில் குழப்பநிலை உள்ளதாக பாரிஸ் நகர காவல்துறையினர் தெரிவித்துள்னர்.இவ…
-
- 2 replies
- 909 views
-
-
நடுங்கும் விரல்களால் ஒரு இட்லி யைக்கூட அவரால் பிய்த்து உண்ண முடியவில்லை. அதிகபட்சம் ஓர் இட்லி அல்லது பாதி தோசைதான் அவருடைய உணவு. ஒழுங்கு செய்யப்படாமல் கலைந்துகிடக்கும் நூல்கள், ஒரு தண்ணீர் கேன், பழைய கட்டில் - இவைதான் 90 வயது டேவிட் ஐயாவின் வசிப்பிடத்தை அலங்கரிக்கும் பொருட்கள். யார் இந்த டேவிட்? ''என்னை எல்லோரும் 'டேவிட் ஐயா’ என்றுதான் சொல்வார்கள். என் பெயர் சாலமோன் அருளானந்தம் டேவிட். இலங்கை அரசின் பயங்கரவாதப் பிரிவு போலீஸிலும், இந்தியாவிலும் இந்த 90 வயதுக் கிழவனின் பெயரை இப்படித்தானப்பா பதிந்திருக்கிறேன்!'' என்று மெலிதாகச் சிரிக்கும் டேவிட் ஐயா, தன் அந்திமக் காலத்தை யாருமற்ற தனிமையோடு சென்னையில் கழிக்கிறார். ''இலங்கையின் கரம்பனில் 1924-ம் ஆண்டு பிறந்தேன். ஆண…
-
- 10 replies
- 2.1k views
-
-
பொதுவாகத் தமிழினத்தை நோக்கிய எச்சரிக்கை தான் இது என்றாலும் கடந்த சில நாட்களாக தினமும் கேள்விப்படும் கண்டு துயருறும் செய்திகள் ஸ்கோபறோத் தமிழர்களிற்கான விசேட எச்சரிக்கையாக இந்த விடயத்தை பதிய வைத்துள்ளது. கடந்த வாரத்தில் மட்டும் ஸ்காபுரோ பகுதியில் நானறிய 7 தங்கச் சங்கிலிகள் அறுக்கப்பட்டுள்ளன. குறிப்பாக மோர்னிங்சைட், நெல்சன் ஆகிய வீதிகளுக்கு இடையிலேயே இந்தக் களவுகள் இடம்பெற்றுள்ளன. நேற்று முன்தினம் இரண்டு சங்கிலி அறுப்புகளும் ஆதற்கு முதல்நாள் 2 அறுப்புகளும் இதனுள் அடக்கம். வழமையாக தனியே செல்லும் பெண்களிடம் தமது கைவரிசையைக் காட்டிய திருடர்கள் கடந்த சனிக்கிழமை நெல்சன் பார்க்கினுள் சுமார் நூறு தமிழிர்கள் கூடியிருந்த இடத்தின் வாயிலில் ஒரு உதைப்தாட்டப் பயிற்சியாளரான த…
-
- 10 replies
- 1.4k views
-
-
பொதுநலவாய நாடுகளின் தலைவர்களின் கூட்டத்தில் (CHOGM ) பிரித்தானிய பிரதம மந்திரி திரு.டேவிட் கமரூனை கலந்து கொள்ள வேண்டாமென பல்வேறு வழிகளில் பிரித்தானியத் தமிழர் பேரவை முயற்சி செய்த வண்ணம் உள்ளது. அவ்வகையில்இ மாபெரும் கையெழுத்து வேட்டை ஒன்றை தமிழ் மக்கள் வாழும் பகுதிகளில் நடத்தி அதனை அந்தந்த தொகுதி பாராளுமன்ற உறுப்பினர்களிடம் கையளித்துக் கொண்டிருக்கிறோம் ஏற்கனவே ,பிர்மின்காம், கவெண்ட்ரி, விம்பில்டன் ஈலிங் பகுதிகளிலுள்ள வழிபாட்டுத்தளங்களிலும் மற்றும் பொது இடங்களிலும் இந்தக் கையெழுத்து வேட்டை சிறப்பாக நடைபெற்றுள்ளது. இதன் தொடர்ச்சியாக தொழில் கட்சியைச் சேர்ந்த ஈஸ்ட்ஹாம் தொகுதிக்கான பாராளுமன்ற உறுப்பினர் Stephen Timms அவர்களை பிரித்தானிய தமிழர் பேரவை உறுபினர்கள் ச…
-
- 0 replies
- 354 views
-
-
போன புதன்கிழமை மாலை சுமார் 4 மணி இருக்கும். நான் வேலை செய்து கொண்டு இருக்கும் building இல் இன்னமும் வேலை போகாமல் மிச்சமாக இருக்கும் 4 பேரும் மெல்ல மெல்ல வேலையை இடை நடுவில் விட்டு விட்டு வெளியேறுகின்றனர். அலுவலக நேரம் 8:30 இல் இருந்து 04:30 வரைக்கும். ஆனால் இவர்கள் ஏன் இப்படி 4 மணிக்கே போகினம் என்று எனக்கு சிறு குழப்பம் வருகின்றது. எனக்கு முன்னால் இருந்து வேலை செய்து கொண்டிருந்த IT Administrator மெல்ல எனக்கு Bye see you later என்று வழக்கமாக சொல்லும் சம்பிரதாய விடைபெறுதல் வார்த்தகளைக் கூட சொல்லாமல் வெளியேறுகின்றார். எனக்கு பின்னால் இருக்கும் AS400 இனை நாளொன்றுக்கு காலையில் 2 தரம் (சாப்பாட்டுக்கு முன்), மாலையில் 3 தரம் (சாப்பாட்டுக்கு பின்) என்று கரைச்சுக் கு…
-
- 41 replies
- 3.4k views
-
-
மெட்ராஸ் கபே திரையிட எதிர்ப்பு- கனடாவில் பிரம்மாண்ட போராட்டம்!! வான்கூவர்: தமிழீழ விடுதலைப் போராட்டத்தைக் கொச்சைப்படுத்தும் மெட்ராஸ் கபே திரைப்படத்தை வெளியிட எதிர்ப்புத் தெரிவித்து கனடாவில் மிகப் பிரம்மாண்ட ஆர்ப்பட்டம் நேற்று நடத்தப்பட்டது. Read more at: http://tamil.oneindia.in/news/2013/08/24/world-canada-tamils-protest-against-madras-cafe-film-181977.html முற்றுகையால் படம் ரத்து மெட்ராஸ் கபே படத்தை கனடாவின் வார்டன் & எக்ளிங்டன் சந்திப்புக்கு அருகில் இருக்கும் சினிப்ளெக்ஸ் திரையரங்கில் முற்பகல் 11 மணி முதல் இரவு 10 மணிவரை 4 காட்சிகளாக திரையிட திட்டமிடப்பட்டிருந்தது. ஆனால் கனடா வாழ் தமிழர்கள் நூற்றுக்கணக்கானோர் திரையரங்கம் முன்பு ஒன்று திரண்டு முற்றுகை…
-
- 6 replies
- 984 views
-
-
தமிழ் இன அழிப்பிற்கு நீதி கேட்டு ஐநாவிலும் .ஐரோப்பிய பாராளுமன்ற முன்றலிலும் மாபெரும் கவனயீர்ப்பு ஒன்றுகூடல்...! 30.09.2013 திங்கள், 14:00- 16:00 மணி EU- Brussels, Rue de la Loi 175, 1048 Brussels, Belgium எமது அன்புக்குரிய மக்களே...! "போராட்டத்தின் வடிவம் மாறலாம் ஆனால் எமது இலட்சியம் மாறாது.."- என்ற தமிழீழத் தேசியத் தலைவரின் சிந்தனைக்கு செயல்வடிவம் கொடுக்க அனைத்துலக வாழ் தமிழ் மக்களை இக் கவனயீர்ப்பில் கலந்து கொள்ளுமாறு உரிமையுடன் கேட்டுக் கொள்கின்றார்கள் சுவிஸ் தமிழர் ஒருங்கிணைப்புக் குழுவினர். ஏனைய ஐரோப்பிய நாட்டு மக்கள் உங்கள் பகுதி மக்கள் பிரதிநிதிகளுடன் தொடர்பு கொள்ளுங்கள்...!
-
- 0 replies
- 466 views
-
-
பிரிட்டன் வாழ் இந்திய பெண்ணிடம், கொள்ளைஅடித்த வழக்கில், இலங்கை நபருக்கு, 20 மாதம் சிறைத் தண்டனை விதித்து, லண்டன் கோர்ட் தீர்ப்பு கூறியது. பிரிட்டனில் வசிக்கும் இந்தியர், கீர்த்தி மிஸ்ட்ரி. ஏற்கனவே, திருமணமான, இலங்கையை சேர்ந்த, டி சில்வாவுடன், கீர்த்தி மிஸ்ட்ரி வசித்து வந்தார். இந்நிலையில், டி சில்வாவிற்கு, 40ஆயிரம் பவுண்ட்சை மிஸ்ட்ரி, கொடுத்துள்ளார். அத்துடன், "பணத்தை வீட்டில் வைத்திருப்பதை விட, வியாபாரத்திற்கு பயன்படுத்திக் கொள்வதுதான் நல்லது' என, டி சில்வா, மிஸ்ட்ரியை நம்ப வைத்தார். இந்த சூழலில், தன் தாயின் மருத்துவ செலவிற்காக, டி சில்வாவிடம் கொடுத்து வைத்திருந்த பணத்தை, மிஸ்ட்ரி கேட்டார். ஆனால், டி சில்வாவால், பணத்தை கொடுக்க முடியவில்லை. இந்நிலையில், கடந…
-
- 8 replies
- 1.1k views
-
-
சர்வதேச மனித நேய அமைப்புகள் அனைத்தும் சிறி லங்காவில் இந்த மாநாட்டை நடாத்த வேண்டாம் என்று பொதுநலவாயா நாடுகளின் அரசுகளுக்கு தமது அதிர்ப்தியை தெரிவித்து இருக்கும் நிலையில், தமிழ் நாடு எங்கும் இந்த மாநாட்டில் இந்திய கலந்து கொல்ல கூடாது என்ற குரலும், தமிழ்நாட்டு முதல் அமைச்சர் சிறி லங்காவை நட்பு நாடு அல்ல என்று இந்தியா அறிவிக்க வேண்டும் என்று கூறியிருக்கும் நிலையில் புலம்பெயர் தமிழ் மக்களும் பொதுநலவாயா மாநாடு சிறி லங்காவில் நடப்பது 'சர்வதேசத்திலில் இனவாதத்தை வளர்க்கவும், சர்வதேச சட்டங்களை எல்லோரும் மீராளாம், சர்வதேச சட்டங்களை எந்த நாடும் மதிக்க வேண்டிய அவசியம் இல்லை' என்பதை வலியுறுத்துவது போலாகும். சர்வதேச சட்டங்கள் மதிக்கப்பட வேண்டும் அதில் பொதுநலவாயா நாடுகள் உலக நாடுகளுக்கு…
-
- 0 replies
- 409 views
-
-
எனது வீட்டிற்கு அருகில் இன்று ஒரு பஸ் -லொறி விபத்து நடந்தது செய்தியில் பார்த்தேன் .நான் வேலையால் வீடு திரும்பும் வீதி மூடப்பட்டு சுற்றி வளைத்து வந்தேன் .அதில் ஒரு பெண் பலியானார் என்று செய்தி வந்தது . காரைநகரை சேர்ந்த மனோரஞ்சனா கனகசபாபதி என்ற தமிழ் பெண்தான் என செய்திகள் வந்துள்ளது . இவர் வேம்படி பழைய மாணவர் . ஆழ்ந்த அனுதாபங்கள் .
-
- 34 replies
- 2.6k views
-
-
1970 களில் ஜேர்மனி சுவிஸ் போன்ற இடங்களில் இருந்து அமெரிக்கா வந்த இந்த மக்கள் இப்போதும் அந்த நாளில் வாழ்ந்த வாழ்க்கை மாதிரியே வாழ்கிறார்கள்.இவர்களைப் பற்றி கேள்விப்பட்டுள்ளேன்.அரை குறை நம்பிக்கையாக இருந்தது.அண்மையில் பென்சில்வேனியா மாநிலத்தில் லான்செஸ்ரர் என்னும் இடத்திற்கு இவர்களைப் பார்ப்பதற்காக போயிருந்தேன்.பெரும் தொகையான மக்கள் இவர்களையும் இவரகள் வதிவிடங்களையும் பார்க்க வருகிறார்கள்.வந்தவர்கள் இவர்களது உற்பத்தி பொருட்களையும் நிறையவே வாங்கி செல்கிறார்கள். சாதாரணமாக எமது வீடுகள் போன்ற வீடுகளிலேயே வாழ்கிறார்கள்.ஆனால் மின்சாரம் பாவிப்பதில்லை.மோட்டார்வண்டி பாவிப்பதில்லை.எந்த ஒரு இயந்திரத்தையும் பாவிப்பதில்லை.ஏன் மிதிவண்டி கூட பாவிப்பதில்லை.ஆனால் ஸ்கூட்டர் மாதிரி இரண்டு…
-
- 12 replies
- 1.2k views
-
-
தொழில் கட்சி அரசு ஆட்சியில் படகு மூலம் வந்த 32000 பேருக்கு பிரஜா உரிமை கொடுக்க போவதில்லை என்று இன்னும் சிலவாரங்களில் ஆட்சி அமைக்க போகும் என்று பெரிதும் எதிர்பார்க்கப்படும் லிபரல் கட்சி அறிவித்துள்ளது....... அதேபோல் அகதி என்று அடையாளம் கனப்படுபவர்களுக்கு தற்காலிக விசாவே வழங்கப்படும் என்றும் தெரிவித்துள்ள அதே நேரம் அகதி அந்தஸ்த்து நிராகரிக்கப்பட்டால் மீண்டும் முறையிட முடியாத வாறு சட்டதிட்டங்கள் கடுமையகப்படும் என்றும் தெரியவருகின்றது பிரித்தானிய பாணியில் சட்டங்கள் கடுமையாக்கப்படும் என்றும் அக்கட்சி கூறி இருக்கின்றது .... The Coalition will ramp up its hardline stance on refugees on Friday, announcing that almost 32,000 asylum seekers who have already arrived in Austr…
-
- 2 replies
- 556 views
-
-
7 ஆண்டு செந்சோலை படுகொலை - சிறார்கள் -பள்ளி மாணவர்கள் படுகொலை செய்யப்பட்ட நாள். சர்வதேச மனிதவுரிமை அமைப்புகள் கண்டனம் தெரிவிக்க அன்று இருந்த ஐக்கிய நாடுகள் சபையின் செயலாளர் திரு காஃபி ஆனான் தனது அதிர்ப்தியை தெரிவித்த்திருந்தார். மஹிந்த ராஜபாஸ்கே தனது மகிழ்ச்சியை தெரிவிக்க அவருடன் அமெரிக்க ஐரோப்பிய யூனியன் ஜப்பான் நார்வே சமாதான பேச்சு வார்த்தைக்கு பாதுகாவலர்கள் என்று கூறியவர்கள் அமைதியாக இருந்தார்கள். போர் காலம் இல்லாத நேரத்த்தில் நான்கு போர் விமானங்கள் 16 கூண்டுகளை வீசி கொன்ற 53 பள்ளி மாணவர்களின் படுகொலை - திட்டமிடப்பட்ட இனப்படுகொலை. அதை பார்த்து கொண்டிருந்தவர்கள் அமைதியாக இருந்தவர்கள் அந்த இனப்படுகொலைக்கு பக்க துணையாக இருந்தார்கள் என்று கூறுவதில் என்ன தவறு. 2…
-
- 0 replies
- 397 views
-
-
இனவெறி சிங்கள அரச வான்படையின் திட்டமிட்ட குண்டுவீச்சுத் தாக்குதலில் படுகொலை செய்யப்பட்ட மாணவச் செல்வங்களின் நினைவுகளைச் சுமந்ததும், தமிழர்களின் நெடிய வரலாற்றுப் பயணத்தில் மறக்கமுடியாத ஆறாவடுவாக மாறியதுமான வள்ளிபுனம் செஞ்சோலை வளாகப் படுகொலையின் 7ஆம் ஆண்டு நினைவு வணக்கநாள் நேற்று சுவிஸ் பேர்ன் தமிழர் இல்லத்தில் உணர்வுபூர்வமாகக் அனுஸ்டிக்கப்பட்டது. இந்நிகழ்வில் தமிழர் இல்லம் நிரம்பிய மக்கள், மிகவும் உணர்வுபூர்வமாக கலந்து கொண்டிருந்தனர். சுவிஸ் தமிழர் ஒருங்கிணைப்புக் குழுவினரின் ஏற்பாட்டில் நடைபெற்ற இவ்வணக்க நிகழ்வில் செஞ்சோலை, காந்தரூபன் அறிவுச்சோலை போன்ற இல்லங்களைத் தோற்றுவிக்க காரணியாய் இருந்த முதற் கடற்கரும்புலி மேஜர் காந்தரூபன் அவர்களுக்குரிய முதலாவது ஈகச்…
-
- 0 replies
- 258 views
-
-
ஐக்கிய நாடுகள் பட்டயத்தின் 99ம் விதியின் கீழ் ஐ.நா செயலாளர் நாயகம் தனது உட்கிடையான அதிகாரங்களை பயன்படுத்தி முள்ளிவாய்கால் இனப்படுகொலை தொடர்பான அனைத்துலக விசாரணை ஒன்றை கொண்டுவர அமெரிக்க அரசு தனது தார்மீக, இராஜதந்திர வளங்களை பயன்படுத்த வேண்டுமென நாடுகடந்த தமிழீழ அரசாங்கத்தின் பிரதமர் விசுவநாதன் உருத்திரகுமாரன் அவர்கள், ஐ.நாவுக்கான அமெரிக்க தூதுவர் சமந்தபவரிடம் அவர்களின் கோரிக்கையொன்றினை முன்வைத்துள்ளார். ஐ.நாவுக்கான அமெரிக்க தூதுவர் சமந்தபவரிடம் அவர்களுக்கு இவ்விவகாரம் தொடர்பில் எழுத்தியுள்ள கடித்திலேயே இக்கோரிக்கையினை நாடுகடந்த தமிழீழ அரசாங்கத்தின் பிரதமர் விசுவநாதன் உருத்திரகுமாரன்அவர்கள் முன்வைத்துள்ளார். 21ம் நூற்றாண்டில் நடைபெற்ற மிகக்கொடுமைய…
-
- 0 replies
- 470 views
-
-
14.08.2013 காலை 11 வாக்கில் இருந்து GTV இல் தோன்றிய சம்பந்தன்.. வடக்கு மாகாண சபை தேர்தல் (அதனை வரப்பிரசாதம் என்று வேறு சொன்னார்கள்.. கேட்கவே சகிக்க முடியல்ல) வாக்குச் சேகரிக்கும் கோரிக்கைகளை முன்வைப்பதில் செலுத்திய கவனத்தை தமிழ் மக்களுக்கான தீர்வுகள் தொடர்பில்.. தமிழ் தேசியக் கூட்டமைப்பின் தற்போதைய நிலைப்பாடுகள் தொடர்பில்.. மக்கள் கொண்டிருக்கும் அபிப்பிராய பேதத்தைக் களையும் பொருட்டு எதனையும் சொல்ல ஆர்வம் காட்டவில்லை. மேலும் தொலைபேசியில் தொடர்பு கொண்டு பேசிய உறவுகளின் கேள்விகளை செவிமடுக்கும் இயல்பற்று (காது கேட்காத நிலையில்.. கேள்வித்திறன் இழந்துள்ளார் போலுள்ளது.. )இருந்த சம்பந்தன்... நிகழ்ச்சி தொகுப்பாளரின் மற்றும் லண்டன் தமிழ் தேசியக் கூட்டமைப்பு கிளைத் தலைவர் என்று…
-
- 1 reply
- 778 views
-
-
இன்று நீங்கள் ஏதாவது ஒரு நிகழ்வைக்கண்டிருப்பீர்கள் அதை இங்கு பதியுங்கள். இன்று நான் பார்த்தது காலையில் வேலைக்கு வந்தபோது கடைக்கு முன் கார் நிறுத்தும் அத்தனை இடங்களும் வெறுமையாக இருந்தன. (சாதாரணமாக இடத்துக்கு அலையணும்) தூரமாக வரும்போதே கார் தரிக்கும் இடத்தினூடாக காரைச்செலுத்தினேன் மகள் இருந்தாள் சிரித்தபடி சொன்னால் கார் தரிப்பிடத்தில் அப்பா கார் ஓடுகின்றார் என. இதுவும் அதிசயம் பரிசில். இந்த மாதம் அநேகமானவர்கள் விடுமுறையில் வெளியில் சென்றுவிடுவதால் இந்த மாதம் மட்டும் கொண்டாட்டம். முன் கார்களை முட்டத்தேவையில்லை அத்துடன் குறித்த நேரத்தில் வேலைக்கும் வரமுடியும்.
-
- 4 replies
- 753 views
-
-
தமிழால் இணைவோம் தாய்லாந்தில், மன்னர் முடிசூட்டுவிழாவின் போது, திருவெம்பாவையும் தேவாரமும் பாடப்படுகிறது இன்றும் மன்னராட்சி நிகழும் தாய்லாந்தில், மன்னர் முடிசூட்டுவிழாவின் போது, திருவெம்பாவையும் தேவாரமும் பாடப்படுகிறது! கி.பி 11ஆம் நூற்றாண்டில், சோழப்பேரரசு காலத்தில், “சீயம்” என்ற பெயரிலிருந்த தாய்லாந்து, சோழர் மேலாதிக்கத்தை ஏற்றுக்கொண்டது. அதன் எச்சமே இந்த பாவையும் தேவாரமும் பாடும் வழக்கம்! மன்னரின் அரச குரு வாமதேவ முனிவர், தமிழ்நாட்டிலிருந்து சென்று குடியேறிய பரம்பரையில் வந்தவர். முன்பு ஓரளவு கிரந்த வரிவடிவத்தை அறிந்திருந்த இவர்கள், இன்று தமிழையோ கிரந்தத்தையோ எழுத - படிக்க முடியாதவர்களாக இருக்கிறார்கள். எனினும், திருவெம்பாவைப் பாடல்களை தமது “தாய்” மொழியின் வரிவ…
-
- 1 reply
- 833 views
-
-
ஈழத்தில் இருந்து ஒரு குரல் உலகத் தமிழியல் ஆய்வு நடுவம் நடத்தும் உலகத் தமிழியல் ஆய்வு மாநாடு லண்டனில் கலாநிதி வண தவத்திரு தனிநாயகம் அடிகளார் நூற்றாண்டில் லண்டனில் இயங்கும் உலகத் தமிழியல் ஆய்வு நடுவம் நடத்தும் உலகத் தமிழியல் ஆய்வு மாநாடு இம் மாதம் 14ஆம்திகதி முதல் 18ஆம்திகதி வரை லண்டனில் நடைபெறுகிறது. லண்டன் பல்கலைக்கழகத்தின், ஆபிரிக்கக் கற்கைகள் பிரிவில், உலகத் தமிழியல் ஆய்வு நடுவத்தின் தலைவரும் ஓய்வு நிலைப் பேராசிரியருமான அ.சண்முகதாஸ் தலைமையில் இவ் ஆய்வு மாநாடு நடைபெறுகிறது. இதில், கிழக்கு மாகாணத்தில் இருந்து தமிழ் ஆய்வாளரும் கிழக்குப் பல்கலைக்கழக சிரேஸ்ட விரிவுரையாளருமான திருமதி ரூபி வலன்ரீனா பிரான்சிஸ் கலந்து கொள்கிறார். இதன்போது, தமிழ் மொழியின் முதல் …
-
- 0 replies
- 441 views
-
-
நாடுகடந்த தமிழீழ அரசின் முதலாவது நாடாளுமன்றம் ஒக்ரோபர் 1ம் நாள் கலைப்பு [ புதன்கிழமை, 07 ஓகஸ்ட் 2013, 15:20 GMT ] [ ஐரோப்பிய செய்தியாளர் ] நாடுகடந்த தமிழீழ அரசின் முதலாவது நாடாளுமன்றம் ஒக்ரோபர் முதலாம் நாளுடன் கலைக்கப்படுவதாக, நாடு கடந்த தமிழீழ அரசாங்கத்தின் பிரதமர் வி.உருத்திரகுமாரன் அறிவித்துள்ளார். புதிய நாடாளுமன்றத்தை தெரிவு செய்வதற்கான தேர்தலுக்கான ஏற்பாடுகள் தீவிரமாக மேற்கொள்ளப்பட்டு வருவதாகவும், நாடுகடந்த தமிழீழ அரசின் சார்பில் வெளியிடப்பட்டுள்ள செய்திக் குறிப்பில் கூறப்பட்டுள்ளது. இந்தச் செய்திக்குறிப்பில் மேலும், இலங்கைத்தீவில் சுதந்திர தமிழீழத்துக்கான போர் தான் ஓய்ந்ததே அன்றி போராட்டம் அல்ல என்பதனை முரசறைந்து முகிழ்ந்த நாடுகடந்த தமிழீழ அரசின் முதலாவது ந…
-
- 1 reply
- 439 views
-
-
சிட்னியில் பல நிகழ்ச்சிகள் நடைபெறுகின்றன. பழையமாணவ சங்கங்கள்,பல்கலைக்கழக சங்கங்கள் பல உள்ளன அவர்களின் நிகழச்சிகள் பல நடை பெறுகின்றன, அந்த நிகழ்ச்சிகளை பார்க்கும் பொழுது எனக்கு சில எண்ணங்கள் தோன்றுகின்றது அது பிழையாகவும் இருக்கலாம் ,இருந்தாலும் கிறுக்க வேண்டியதும்,புலம்பவேண்டியதும் என் பொறுப்பு.பழைய மாணவசங்கத்தில் நானும் உறுப்பினன் என்பதையும் முதலே தெரிவித்துக்கொள்கின்றேன். ஊரில் கோவில் திருவிழா காலங்களில் ஒவ்வொரு உபயகாரர்களும் தங்களது திருவிழா மற்றவர்களினுடய திருவிழாவை விட நன்றாகவும் ,பலராலும் பேசப்பட வேண்டும் என்ற எண்ணத்தில் மிகவும் ஆடம்பரமாக ஏட்டிக்கு போட்டியாக செய்து முடிப்பார்கள்.ஒரு கூட்ட மேளமா?ஐந்து கூட்ட மேளமா?,ஒரு சப்பரமா? ஐந்து சப்பரமா?,என்ற பாகுபாட்டில் தரா…
-
- 11 replies
- 1.4k views
-
-
மேற்படிப்பை தொடர்வதற்காக வவுனியாவில் இருந்து லண்டன் சென்ற பெண் லண்டனில் இனந்தெரியாதோரால் கொலை செய்யப்பட்டுள்ளார். 2010ஆம் ஆண்டு மேற்படிப்பிற்காக லண்டன் சென்ற தனது மகள் கடந்த 6ஆம் திகதி கூரிய ஆயுதத்தினால் குத்திக் கொலை செய்யப்பட்டுள்ளதாக உயிரிழந்த பெண்ணின் தந்தை தெரிவித்துள்ளார். வவுனியா, தவசிகுளத்தை சேர்ந்த 32 வயதுடைய குணராசா மயூரதி என்பவரே இவ்வாறு உயிரிழந்துள்ளார். லண்டன் சென்று அங்கு தங்குவதற்கான விசா அனுமதி பெற்ற நிலையில் அங்குள்ள அடுக்குமாடித் தொடரில் வசித்த வந்த நிலையிலேயே கொலை செய்யப்பட்டுள்ளதாக அப் பெண்ணின் தந்தையான செ.குணராசா தெரிவித்தார். உயிரிழந்த பெண் ஒரு குழந்தைக்கு தாயார் என அப் பெண்ணின் தந்தை குறிப்பிட்டார். தற்போது சடலம் லண்டனில் உள்ள வைத்திய…
-
- 0 replies
- 618 views
-