வாழும் புலம்
புலம்பெயர் நாடுகள் | தமிழர் வாழ்வு | அனுபவங்கள் | அன்றாட நிகழ்வுகள்
வாழும் புலம் பகுதியில் புலம்பெயர் நாடுகள், தமிழர் வாழ்வு, அனுபவங்கள், அன்றாட நிகழ்வுகள் சம்பந்தமான பதிவுகள் இணைக்கப்படலாம்.
புலம்பெயர் நாடுகளில் வசிக்கும் தமிழர்கள் பற்றியதும் புலம்பெயர் தமிழர்களுக்கு அவசியமானதுமான செய்திகள், தகவல்கள் மாத்திரம் இணைக்கப்படல் வேண்டும்.
5797 topics in this forum
-
நண்பர்களுடன் சேர்ந்து, காங்கிரசுக்கு வாக்களிக்க வேண்டாம் என்று துண்டறிக்கை அச்சிட்டு தமிழக மக்களிடம் வினியோகம் செய்ய திட்டமிட்டுள்ளோம்... மாதிரி துண்டறிக்கைகள் இருந்தால் உதவி செய்யவும்.. நன்றி... அன்புசிவம்
-
- 0 replies
- 626 views
-
-
துபாயில் கடந்த நான்கு வருடங்களாக நடைபெற்றுவந்த மாநகர இரயில் போக்குவரத்துச் சேவையின் ஒரு பகுதி (Red Channel), கடந்த புதன் கிழமை 09-09-09, இரவு 09 மணி 09 நிமிடம் 09 துளிகளுக்கு, மக்களுக்கான சேவைக்கு துபாயின் அரசரால் தொடங்கி வைக்கப்பட்டது. அதில் இன்று பயணம் செய்தபோது எடுத்த சில படங்கள் பார்வைக்கு... நிழலிக்கு சில இடங்கள் பரிச்சயமானதாக இருக்கும்... நவீன விமான நிலயங்களுக்கு ஒப்பாக, ஒவ்வொரு இரயில் நிலையமும் மிக நேர்த்தியாக கட்டப்பட்டுள்ளது. துபாய் வந்தால், அவசியம் ஒரு சுற்றுலாவலம் இதில் அவசியம் சென்று வரலாம்! மேலதிக விபரங்களுக்கு... http://www.gulfnews.com/nation/Traffic_and...t/10347194.htm…
-
- 7 replies
- 1.1k views
-
-
துப்பாக்கிச் சூடு - பல உயிர்பலி? ஜெர்மனியின் ஹெம்பர்க் நகரில் உள்ள Jehovah´s Witness சமயத்தைச் சேர்ந்தோரால் பயன்படுத்தப்படும் கட்டடத்தினுள் துப்பாக்கிச் சூட்டுத் தாக்குதல் நடந்திருக்கின்றது. அதில் சிலர் உயிரிழந்து அல்லது காயமடைந்துள்ளதாக எப்பகுதி பொலிஸார் தெரிவித்துள்ளனர். அவர்கள் மருத்துவமனைக்குக் கொண்டு செல்லப்பட்டுள்ளதாகவும் பொலிஸார் தெரிவித்துள்ளனர். துப்பாக்கிச் சூட்டில் குறைந்தது 6 பேர் உயிரிழந்திருக்க கூடும் என ஜேர்மனியின் செய்தி ஊடகங்கள் தெரிவிக்கின்றன. நேற்றிரவு (9 மார்ச்) நடந்த அந்தத் தாக்குதலுக்கான காரணம் குறித்து இதுவரை தகவல் ஏதும் இல்லை என்றும் பொலிஸார் தெரிவித்துள்ளனர். தாக்குதல்காரர் அல்லது தாக்குதல்காரர்கள் கட்டடத்தினுள் …
-
- 0 replies
- 1.2k views
-
-
நான் சுவிஸ்க்கு உறவினர் வீட்டுக்கு சென்றிருந்தபோது(இரண்டுவாரங
-
- 5 replies
- 2k views
-
-
இந்திய புலனாய்வுத்துறையினரின் தமிழர் எதிர்ப்பு ஊடகமும், பொய்ப்பிரச்சாரங்கள், காட்டிக்கொடுப்புக்கள், .. மூலம் ஒட்டுக்குழுக்களின் லண்டன் முகாமாக்கப்பட்டிருக்கும் துரோகிகளின் வானொலி "ரி.பி.சி" ஆனது ஜனநாயகவாதிகளினால் தற்போது முற்றுகைக்கு உள்ளாக்கப்ப்ட்டிருக்கிறது. தளபதி ராஜனின் தலைமையில் லண்டன் ரெயினர்ஸ்லேன் பகுதியில் அமைந்திருக்கும் கூலிகளின் முகாம் வாயிலில் பெருந்தொகையான இளையர்கள் கூடியிருப்பதாக நம்பகரமாக தெரிய வருகிறது. மேலதிக விபரங்கள் விரைவில் ....
-
- 73 replies
- 9k views
-
-
........ கடவுள் கல்லாப் போனான் .... என்று . கனகாலம் கோயிலுக்கு சென்று ... மீண்டும் பொழுது போக்குக்காக போனால் ... பூசை முடிந்து நாலு கிழடுகள் சாப்பாட்டு இடத்தில், நாட்டு நடப்புகளை கதைத்துக் கொண்டிருக்க .... நானும் பக்கத்தில் குந்த .... .... "என்னவாம், நாடு நிலவரம்" . ..... "ம்ம்ம்ம்ம்... என்னத்தை சொல்ல? எல்லாம் முடுச்சு போச்சு!!! இனி கதைத்தென்ன" .. பெருமூச்சுடன்.... .... "எல்லோரும் சேர்த்து கொள்ளியை வைச்சுட்டாங்கள்" .... .... "போராட்டம் என்று ஒன்றை தொடங்கி கண்ட மிச்சம் வெளிநாடு, அவ்வளவுதான்".... .... "வாயாலை கதைத்துக் கதைத்து காலத்தை விட்டு விட்டம், அவன் சிங்களவன் கெட்டிக்காரன் செயலாலை செய்து போட்டான்" .... .... "விசர் பொடியள் யுத்தநிறுத்தம் எண்டதை சைன் பண்ண…
-
- 6 replies
- 2.6k views
-
-
http://www.bbc.co.uk/news/av/uk-43887380/shopke http://www.bbc.co.uk/news/av/uk-43887380/shopkeeper-fights-off-armed-robbers-with-chilli-powder
-
- 36 replies
- 6.2k views
-
-
புலிகளை போரில் வெல்வது என்ற பெயரில் இனப்படுகொலை செய்திருக்கும் ராஜபக்சேவை போர்க்கைதியாக விசாரித்து தண்டிக்க வேண்டும், இலங்கை அரசுக்கு உதவியாய் இருக்கும் இந்திய மேலாதிக்கத்தை எதிர்க்க வேண்டும், இராணுவ வதை முகாம்களிலிருக்கும் மக்கள் அவர்களது சொந்த இடங்களுக்கு செல்ல அனுமதிக்க வேண்டும், இலட்சக்கணக்கான தமிழ் மக்கள் அகதிகளாக வெளியேறிய இடத்தில் சிங்களக் குடியேற்ற பகுதிகளாக மாற்ற நினைக்கும் சதியை முறியடிக்க வேண்டும் ஆகிய கோரிக்கைகளை தமிழக மக்களிடத்தில் கொண்டு செல்லும் நோக்கில் 21.05.09 வியாழனன்று தமிழகத்தின் மாவட்டத் தலைநகரங்களில் ம.க.இ.கவும் அதன் தோழமை அமைப்புக்களும் மாபெரும் ஆர்ப்பாட்டத்தை நடத்த இருக்கின்றன. சென்னையில் மெமோரியல் ஹால் அருகே காலை 10.30 முதல் இந்த ஆர்ப்பாட்டம் நட…
-
- 1 reply
- 1.3k views
-
-
தூக்க மாத்திரையால் விமானத்தில் அவமானப்பட்ட கனடா பிரஜை! விமான பயணத்திற்கு முன்பாக மருத்துவரால் பரிந்துரைக்கப்பட்ட தூக்க மாத்திரையை உட்கொண்ட கனடாவைச் சேர்ந்த ஒருவரை அதிகாரிகள் பயணிக்க அனுமதிக்காததால் தாம் அவமானமாக உணர்வதாக அவர் தெரிவித்துள்ளார். விமானம் புறப்படுவதற்கு சற்று நேரத்திற்கு முன், உறங்கிக் கொண்டிருந்த ஸ்டீபன் பெனட் என்ற நபரை விமான பணிப்பெண் எழுப்ப முயன்றுள்ளார். அவர் தூக்க மாத்திரை உட்கொண்டு உறங்கிக் கொண்டிருந்த காரணத்தினால், அவரை பயணிக்க அனுமதிக்கவில்லை. அவர் பயணம் செய்யும் நிலையில் இருக்கிறார் என விமான நிலைய மருத்துவர்கள் கூறியதுடன், இது தொடர்பாக தன் தனிப்பட்ட மருத்துவரிடன் மின்னஞ்சலை அவர் காண்பித்தும் அவருக்கு அனுமதி மறுக்கப்பட்டுள்ளத…
-
- 0 replies
- 1k views
-
-
இலங்கை ஜனாதிபதி வருகையை ஒட்டி லண்டனில் ஆர்ப்பாட்டம். காமன்வெல்த் எனப்படும் பொதுநலவாய அமைப்பு நாடுகளின் தலைவர்கள் பங்குபெறும் ஒரு கூட்டத்தில் கலந்துகொள்வதற்காக இலங்கை ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ லண்டன் வந்துள்ள நிலையில், அம்னஸ்டி இண்டர் நேஷனல் எனப்படும் சர்வதேச பொதுமன்னிப்பு சபையானது லண்டன் பொதுநலவாய அமைப்பின் தலைமை அலுவலகத்துக்கு முன்பாக எதிர்ப்பு ஆர்ப்பாட்டம் ஒன்றை நடத்தியுள்ளது. இலங்கை பிரஜைகள், மனித நேய ஆர்வலர்கள் மற்றும் பல்வேறு தரப்பினர் உட்பட கணிசமான எண்ணிக்கையிலானோர் அந்த ஆர்ப்பாட்டத்தில் கலந்துகொண்டனர். இலங்கையில் நடக்கின்ற மோதல்கள் தொடர்பில் ஒரு கவன ஈர்ப்பை கொண்டுவரும் நோக்கிலேயே இந்த ஆர்ப்பாட்டம் நடத்தப்பட்டது என்று சர்வதேச அபய ஸ்தாபனத்தின் தெற…
-
- 2 replies
- 908 views
-
-
தூத்துக்குடி மக்கள் படுகொலைக்கு எதிரான கண்டன போராட்டம்!! இடம்: இந்திய துணை தூதரகத்திற்கு முன்பாக (365 Bloor வீதிக்கு அருகில், Toronto, Canada) காலம்: வெள்ளிக்கிழமை, மே 25, 2018 நேரம்: பி.ப. 3:00 - 6:00 மணி தூத்துக்குடி மண்ணில் எம் தமிழ் உறவுகள் மேல் காவல் படையினர் நிகழ்த்திய தாக்குதலில்படுகொலை செய்யப்பட்ட உறவுகளின் மீதான தாக்குதலை கண்டித்தும், நடந்த படுகொலைக்கானசுயாதீன விசாரணையை உடனடியாக நடத்த கோரியும், மக்களுக்கு ஊறு விளைவிக்கும் மக்கள்விரும்பாத ஸ்டெர்லைட் ஆலைகளை மூட கோரியும் கனடிய மண்ணில் இந்திய துணைதூதரகத்திற்கு முன்பாக கனடா வாழ் தமிழ் ம…
-
- 1 reply
- 916 views
-
-
தூத்துக்குடி ஸ்டெர்லைட் ஆலையை மூடக் கோரி அமெரிக்காவில் ஆர்பாட்டம்… தூத்துக்குடி ஸ்டெர்லைட் ஆலையை மூடக் கோரி அமெரிக்காவில் உள்ள சான் பிரான்சிஸ்கோ நகரில் ஆர்பாட்டம் நடத்தப்பட்டுள்ளது. தூத்துக்குடி பொது மக்கள் படுகொலைக்கு எதிராகவும், வேதாந்தா தாமிர உருக்காலையை மூடக் கோரியும் உலகெங்கிலும் போராட்டம் நடந்து வருகிறது. லண்டனில் நடந்த போராட்டத்தை தொடர்ந்து வேதாந்தா நிறுவனத்தை லண்டன் பங்கு சந்தையில் இருந்து நீக்க வேண்டும் என்றும் குரல் கொடுக்கப்பட்டு வருகிறது. அமெரிக்காவிலும் இது போன்ற போராட்டங்கள் பல நகரங்களில் நடைபெற்று வருகிறது. சான்பிரான்சிஸ்கோ நகரில் உள்ள இந்திய தூதரகத்தின் முன் சுமார் 200 பேர் தூத்துக்குடி ஸ்டெர்லைட் ஆ…
-
- 0 replies
- 707 views
-
-
தென் கொரியா தலைநகர் சியோல் நகரில் மாக்டாங் தொடர்வண்டி நிலையத்தில் உள்ள பர்கர் கிங் உணவகத்தில் உலகின் மூத்த மொழியான தமிழ் மொழியில் நன்றி என எழுதி உள்ளனர். தென்கொரிய நாட்டில் கூட தமிழுக்கு இடம் உள்ளது. ஆனால் இந்தியாவில் நடுவண் அரசு வானூர்தியில், வங்கியில், அஞ்சல் சேவையில், தொடர்வண்டிகளில், அலுவலகங்களில் எங்கும் தமிழுக்கு இடமில்லை என்பது எவ்வளவு பெரிய வேதனை. http://www.sankathi24.com/news/32062/64//d,fullart.aspx
-
- 6 replies
- 1.2k views
-
-
தமிழர்கள் மீதான போர் குற்றங்கள் மற்றும் இனப்படுகொலை தொடர்பில், சிறிலங்கா அரசுத் தலைவரிடம் கேள்வியெழுப்புங்கள் என, நாடுகடந்த தமிழீழ அரசாங்கத்தின் பிரதமர் வி.உருத்திரகுமாரன் அவர்கள் , தென் கொரிய அதிபரிடம் கோரி;க்கை விடுத்துள்ளார். நான்கு நாள் பயணமாக, சிறிலங்கா அரசுத் தலைவர் மகிந்த ராஜபக்ச தலைமையிலான குழுவினர் , தென் கொரியாவுக்கு சென்றுள்ள நிலையில், நாடுகடந்த தமிழீழ அரசாங்கத்தின் பிரதமர் வி.உருத்திரகுமாரன் அவர்கள், தென் கொரிய அதிபர் Lee Myung-bak அவர்களுக்கு கடிதமொன்றினை அனுப்பியியுள்ளார். போரின் இறுதி ஐந்து மாதங்களில் மட்டும், 40 000 தமிழர்கள் படுகொலை செய்யப்பட்டுள்ளனர் என்பதனை, ஐ.நாவின் புள்ளிவிபரங்களின் சுட்டிக்காட்டியுள்ளதை தனது கடிதத்தில் குறிப்பிட்டுள்ள பிரதம…
-
- 0 replies
- 574 views
-
-
வணக்கம், நேற்று கனடா தமிழ்விசன் தொலைக்காட்சியில் பலரும் அறிந்த கொண்டாட்டம் நிகழ்வை இம்முறையும் செய்வதா அல்லது இல்லையா என்று நம்மவர்களின் கருத்துக்களை கேட்கும் ஓர் நேரடி நிகழ்ச்சி சுமார் இரண்டு மணித்தியாலங்கள் நடைபெற்றது. வரும் ஞாயிற்றுக்கிழமை ஓர் கருத்துக்கணிப்பும் நடாத்தப்படவுள்ளதாக கூறப்பட்டு உள்ளது. எவரும் எப்படியான தமது கருத்துக்களையும் இவ்விடயத்தில் ஒளிவு மறைவு இன்றி கூறலாம் என்றும், சொல்லப்படும் கருத்துக்களின் அடிப்படையிலேயே இறுதி முடிவு - அதாவது வழமையான இந்த கொண்டாட்டத்தை இம்முறை ஓர் எழுச்சி நிகழ்வாக நடாத்துவதா அல்லது இல்லையா என்று இறுதி முடிவு எடுக்கப்படும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்த கொண்டாட்டம் சம்மந்தமாக கடந்த பல வாரங்களுக்கு முன்னரே பலர் மத்த…
-
- 20 replies
- 2.1k views
-
-
African National Congressசின் புதிய தலைவராக ஜேக்கப் சூமா தேர்வு செய்யப்பட்டிருப்பது பரபரப்பான பல கருத்தாடல்களை உலக அரங்கில் தோற்று வித்துள்ளது. இது தொடர்பான தகவல்களைக் கேட்டபோது எனக்குள் ஒரு சிந்தனை. எனினும் இச்சிந்தனையை ஆதாரப்படுத்துவற்கான ஆணித்தரமான ஆதாரங்கள் எவற்றையும் நான் இது வரை அறியவில்லை. எனவே இது முற்றுமுழுதான ஒரு Controversy Theory என்ற ரகத்திற்குள் தான் அமைய தற்போது வாய்ப்புள்ளது. எனினும் யாழ் கள அவதானிப்பாளர்களின் இவ்விடயம் தொடர்பான கருத்தை அறிவதற்காக இப்பதிவினை இங்கிடுகின்றேன். African National Congress உறுப்பினர்கள் இன்று ஜேக்கப் சூமாவை அடுத்த தலைவராகத் தேர்ந்தெடுத்து விட்டார்கள். இருப்பினும் பல மட்டங்களில் இருந்தும் சூமா பற்றிக் கொடுக்கப்படும் விபரங்கள…
-
- 6 replies
- 2.1k views
-
-
சிறிலங்காவில் பல மில்லியன் பெறுமதியான முதலீடுகளைச் செய்துவரும் நாடுகளில் ஒன்றாக தென்னாபிரிக்கா உள்ள நிலையில், தென்னாபிரிக்கா முறையிலான உண்மை நல்லிணக்க ஆணைக்குழுவினை சிறிலங்காவில் அமைப்பதற்கான தென்னாபிரிக்க அரசாங்கத்தின் பரிந்துரையினை நாடுகடந்த தமிழீழ அரசாங்கம் நிராகரித்துள்ளது. நாடுகடந்த தமிழீழ அரசாங்கத்தின் அரசவை அமர்வில் நிறைவேற்றப்பட்ட தீர்மானம் ஒன்றில் இதனை நிராகரித்துள்ள நாடுகடந்த தமிழீழ அரசாங்கம், நீதி வழங்களிலிருந்து சிறிலங்காவினைக் காப்பாற்ற அல்லது நீதியை தாமதப்படுத்த சிறிலங்கா அரசுக்கு உதவும் பொறிமுறையாகலாம் என அர்தீர்மானத்தில் அச்சம் தெரிவிக்கப்பட்டுள்ளது. இதன் காரணமாக தொடர்ந்து முன்னெடுக்கப்பட்டுவரும் இனவழிப்பை முடிவுகட்டி நிலையான சமாதான அரசியல் …
-
- 1 reply
- 909 views
-
-
தென்னாபிரிக்காவில் தமிழர்கள் -அன்பரசு- பளிங்குத்தரையில் கொட்டிய நெல்லிக்கனியைப் போல் உலக நாடுகள் பலவற்றில் தமிழினம் பரவிக் கிடக்கிறது. 80 மில்லியன் தமிழர்கள் 100 தொடக்கம் 120 வரையிலான நாடுகளில் காணப்படுகிறார்கள். இவர்களில் பலர் தமிழ் பேசுவதில்லை. தமிழையே அறியமாட்டார்கள் என்று சொல்வதில் தவறில்லை. தென்னாபிரிக்காவில் ஏழு இலட்சம் தமிழர்கள் வாழ்கிறார்கள். ஒரு வீதத்தினர் மாத்திரம் தமிழைப் பேசும், எழுதும் திறனைப் பெற்றுள்ளனர். இப்படியானவர்கள் நாற்பது அகவைக்கு மேற்பட்டவர்களாக உள்ளனர். எமது விடுதலைப்போர் காரணமாகத் தென்னாபிரிக்கத் தமிழர்கள் மத்தியில் தேசிய விழிப்பு காணப்படுகிறது. பொதுவாகப் பிற நாடொன்றில் நெடுகாலம் பல தலைமுறையாகவாழும் இனம் ஏதோவொரு காலகட்டத்தில் நான் யா…
-
- 0 replies
- 1.1k views
-
-
தென்மேற்கு ஒன்ராரியோவில் (கனடா) நேற்றுக் கொட்டிய பனியில் பலர் சிக்குண்டு 24 மணித்தியாலங்களாக தெருவில் நிற்கிறார்கள்..! அவர்களது கார்கள் பனியில் சிக்கியுள்ளதால் வெளிவரமுடியாத நிலை..! ராணுவம் மீட்பு நடவடிக்கைகளில் ஈடுபட்டுள்ளது. காணொளிக்கு இங்கே சொடுக்கவும்..!
-
- 9 replies
- 1.3k views
-
-
-
- 1 reply
- 1.5k views
-
-
அது திசை மாறி போவதுதான் புதுமை அல்லவா ...? ஒவ்வரு நாளும் உலகில் உள்ள ஓவரு மனிதரும் வாழ்விற்காக எதோ ஒருவகையில் போராடி கொண்டுதான் இருக்கிறோம். வாழ்க்கை என்பது எல்லோருக்கும் பிடித்தமாக அமைவதில்லை என்று பலரும் சொல்ல கேள்வி பட்டு இருக்கிறோம். பிடித்தமாக ..? என்றால் என்ன ..? வாழ்க்கை பிடிக்காவிட்டால் தற்கொலை செய்து இறந்துபோகும் வசதி எல்லோருக்கும் இருக்கும் என்றுதான் நம்புகிறேன். ஆக தற்கொலை செய்யாது எல்லோரும் வாழ்வதால் ... எல்லோருக்கும் வாழ்க்கை பிடித்திருக்கிறது என்று கொள்ளலாமா ? இப்போதைய காலகட்டம் பிடிக்காது போனாலும் ..... எதிர்கால நாட்களை எமக்கு பிடித்ததாக அமைக்க வேண்டும் என்று எல்லோரும் ஒரு போராட்டமாக வாழ்கையை கொண்டிருக்கிறோம். வசதியான வாழ்வு அமைப்பது என்பதற்காக பலரும் …
-
- 6 replies
- 3.7k views
-
-
தென்றல் தொலைகாட்சி புலம்பெயர் மக்களின் உளம்தொட வருகிறது…. தென்றல். உலகத் தமிழரது உணர்வுகளின் தரிசனம்…..தென்றல் தொடர்புகளுக்கு 0049 1632332239 வீசும் காற்றாகும் பேசும் தமிழாகும் நாளும் உமதாகும் காத்திருங்கள் பரிசார்த்த ஒளிபரப்பு ""Nepali TV" மாலை 19.00 22.00 Satellite - Eutelsat Hotbirds -13° East Frequency - 11727 MHz. Symbol rate - 27500 Polarity - V FEC - 3/4 http://www.tamilvoice.dk/nyheder1407200844.htm
-
- 3 replies
- 1.6k views
-
-
வணக்கம், வெளிநாடுகளில இருந்து சிறீ லங்காவுக்கு போற தமிழ் ஆக்கள் சிறீ லங்கா காவல்துறை அல்லது பாதுகாப்பு அமைச்சிடம் இருந்து பெற வேண்டிய அனுமதிப்பத்திரங்கள் தொடர்பாக இங்கு யாருக்கும் தகவல்கள் தெரியுமோ? குறிப்பாக, "வெளிநாடுகளில் பிறந்த பிள்ளைகள் யாழ்ப்பாணம், திருகோணமலை - வடக்கு, கிழக்கு பகுதிகளுக்கு செல்வதற்கு பாதுகாப்பு அமைச்சிடம் முன்கூட்டிய அனுமதி பெறவேண்டும்" எனப்படும் தகவல் பற்றி உங்களுக்கு ஏதும் தெரியுமோ? மற்றையது, சிறீ லங்கா காவல்துறையில் வெளிநாடுகளில் இருந்து செல்பவர்கள் தமது வதிவிடம், பயண நோக்கங்கள் பற்றி பதிவு செய்யவேணுமோ? இதுபற்றிய தகவல்களை பெறக்கூடிய சிறீ லங்கா அரசாங்க வலைத்தள தொடுப்புக்களை அறிந்தால் இங்கு இணைத்துவிடுங்கள். நன்றி.
-
- 20 replies
- 2.1k views
-
-
எனக்கு பயிர் பச்சை பூங்கன்றுகள் என்றால் பைத்தியம் என்று உங்களுக்குத் தெரியும் தானே. ஆனால் அவற்றைப் பராமரிக்க நான் படும் பாடு சொல்ல முடியாதது. ஆனாலும் ஒவ்வொரு ஆண்டும் பூச்சிகொல்லி வாங்கியே கன காசு செலவாகிறது. இந்தியாவில் இயற்கை விவசாயம் செய்யும் ஒரு தோழியிடம் விசாரித்தபோது எதற்காக பூச்சி கொல்லி மருந்துக்களைப் பயன்படுத்துகிறீர்கள். இயற்கை பூச்சி விரட்டியைப் பயன் படுத்துங்கள் என்றார். அவர் கூறியபடியே உள்ளி, இஞ்சி, பச்சை மிளகாய் சேர்த்து அரைத்து கன்றுகளுக்கும் இலைகளுக்கும் தெளித்தும் எந்தப் பூச்சி புழுவும் போனதாகக் காணவில்லை. உங்கள் யாருக்காவது இயற்கையாக பூஞ்செடிகளில் பிடிக்கும் அழுக்கணவன், பங்கஸ் என்பவற்றை விரட்டும் வழி தெரிந்தால் கூறுங்கள் உறவுகளே.
-
- 28 replies
- 4.7k views
- 1 follower
-
-
வணக்கம், எமது தாயக செய்திகள், கவனயீர்ப்புக்கள் பற்றி மிக அதிகளவில் தற்போது சர்வதேச ஊடகங்களில் செய்திகள் வரத்தொடங்கியுள்ளது. வழமையாக பின்னூட்டல்கள் எழுதும் எம்மவர்களில் பலர் தெருவில் நிற்பதால் ஊடகங்களில் நம்சார்பாக பின்னூட்டல்கள் இடப்படுவது மிகவும் குறைவடைந்துள்ளது. சிறீ லங்கா பேரினவாதிகள் இந்தச்சந்தர்ப்பத்தை தமக்கு மிகவும் சாதகமாக பயன்படுத்துகின்றார்கள். தயவுசெய்து வீடுகளில் இருப்பவர்கள் ஊடகங்களில் பின்னூட்டல்களை தொடர்ந்து இட்டுக்கொண்டு இருங்கள். நன்றி! http://news.google.ca/news?pz=1&ned=ca...=en&q=tamil
-
- 4 replies
- 2.1k views
-