வாழும் புலம்
புலம்பெயர் நாடுகள் | தமிழர் வாழ்வு | அனுபவங்கள் | அன்றாட நிகழ்வுகள்
வாழும் புலம் பகுதியில் புலம்பெயர் நாடுகள், தமிழர் வாழ்வு, அனுபவங்கள், அன்றாட நிகழ்வுகள் சம்பந்தமான பதிவுகள் இணைக்கப்படலாம்.
புலம்பெயர் நாடுகளில் வசிக்கும் தமிழர்கள் பற்றியதும் புலம்பெயர் தமிழர்களுக்கு அவசியமானதுமான செய்திகள், தகவல்கள் மாத்திரம் இணைக்கப்படல் வேண்டும்.
5792 topics in this forum
-
புலம்பெயர் தேசத்தவர்கள் நீங்கள் படித்த பாடசாலையில் உள்ள மாணவர்களுக்கு உதவுவதற்கு முன் வரவேண்டும் – ஆறு.திருமுருகன் அத்தியாவசிய மருந்துகளுக்கு தட்டுப்பாடு நிலவும் போது விபத்துக்களில் சிக்காமலும் வன்முறைகளில் ஈடுபடாமலும் இளைஞர்கள் இருக்க வேண்டுமென சிவபூமி அறக்கட்டளையின் தலைவர் கலாநிதி ஆறு.திருமுருகன் தெரிவித்தார். கனேடியத் தமிழர்கள் 10 மில்லியன் ரூபா பெறுமதியான உயிர்காக்கும் மருந்துகளை தெல்லிப்பளை புற்றுநோய் வைத்தியசாலைக்கு நன்கொடையாக வழங்கினர். இந்நிகழ்வில் கலந்துகொண்டு கருத்து தெரிவித்த போதே இதனை தெரிவித்தார். மேலும் தெரிவிக்கையில், இலங்கையில் அத்தியாவசிய மருந்துப் பொருட்களுக்கு பாரிய தட்டுப்பாடு நிலவுகிறது. இந்நிலையில் இளைஞர்கள் விப…
-
- 3 replies
- 1.1k views
- 1 follower
-
-
ஒன்றல்ல....இரண்டாவது முதுநிலைப்பட்டம் பெற்று ஆச்சரியப்பட வைத்த 87 வயது இந்திய மூதாட்டி (படம்: Instagram/Vijay Thanigasalam) கல்விக்கு வயதில்லை என்பார்கள். அது வாழ்க்கை முழுவதும் தொடரக்கூடிய பயணம். அந்தக் கூற்றை நிரூபித்துள்ளார் 87 வயது மூதாட்டி ஒருவர். திருமதி வரதலட்சுமி சண்முகநாதன் கனடாவைச் சேர்ந்தவர். யோர்க் பல்கலைக்கழகத்தில் (York University) முதுநிலைப்பட்டம் பெற்ற ஆக வயதானவர் அவர். …
-
- 0 replies
- 499 views
-
-
லைக்கா ஹெல்த்தின் தலைவர் பிரேமா சுபாஸ்கரன், கௌரவ கலாநிதிப்பட்டம் வழங்கி கௌரவிக்கப்பட்டுள்ளார்! இந்தியாவின் டொக்டர் எம்.ஜி.ஆர் கல்வி மற்றும் ஆராய்ச்சி நிறுவன நிகர்நிலைப் பல்கலைக்கழகம் லைக்கா ஹெல்த்தின் தலைவர் திருமதி பிரேமா சுபாஸ்கரனுக்கு கௌரவ கலாநிதிப் பட்டத்தை வழங்கி கௌரவித்துள்ளது. தெலுங்காணா மாநில ஆளுநர் மருத்துவர் தமிழிசை சௌந்தரராஜன் இந்த கௌரவ கலாநிதிப்பட்டத்தை வழங்கி கௌரவித்துள்ளார். லைக்கா ஹெல்த்தின் (lyca Health) நிறுவனரும் தலைவருமான திருமதி பிரேமா சுபாஸ்கரன் வைத்தியத் துறைசார் சேவையில் பிரதான இடத்தை தக்கவைத்துள்ளார். லைக்கா ஹெல்த்தின் (lyca Health) தலைவரான பிரேமா சுபாஸ்கரன் ஒரு முக்கிய தொழில்முனைவோராகவும், பரோபகாரியாகவும் விளங்குகிறார். …
-
- 5 replies
- 1.8k views
-
-
அமெரிக்க பொலிஸாரால் கொல்லப்பட்ட இலங்கை இளைஞன்! அமெரிக்காவின் டெக்சாஸ் மாகாணத்தில் உள்ள ஒஸ்டின் நகரில் இலங்கை வம்சாவளியைச் சேர்ந்த ஒருவர் பொலிஸ் அதிகாரியின் துப்பாக்கிச் சூட்டுக்கு இலக்காகி உயிரிழந்துள்ளார். தொழில்நுட்ப துறையில் தொழில் புரியும் இலங்கை வம்சாவளியைச் சேர்ந்த 33 வயதுடைய ராஜ் என்பவர் இவ்வாறு துப்பாக்கிச் சூட்டுக்கு இலக்காகி உயிரிழந்துள்ளார். கடந்த நவம்பர் 15 ஆம் திகதி தொழில் முடித்து வீடு திரும்பிய போதே இந்த துப்பாக்கிச்சூட்டு சம்பவம் இடம்பெற்றுள்ளதாக தெரியவந்துள்ளது. குறித்த இளைஞனின் மரணம் தொடர்பில் பெற்றோர் ஊடகங்களுக்கு பல்வேறு தகவல்களை வெளியிட்டுள்ளமை தற்போது பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது. தனது வீட்டில்…
-
- 0 replies
- 1.1k views
-
-
அவுஸ்திரேலியாவில் புகலிடம் கோரியிருந்த தமிழ் அகதியொருவர் இன்று நாடு கடத்தப்படவுள்ளார் என தகவல்கள் வெளியாகியுள்ளன. மனோநிலை பாதிக்கப்பட்டதால் எம்ஐடீஏ சிறையில் ஐந்து வருடங்கள் அடைக்கப்பட்டிருந்த இலங்கை தமி;ழ் புகலிடக்கோரிக்கையாளர் ஒருவர் இன்று இலங்கைக்கு நாடு கடத்தப்படுவதற்காக மெல்பேர்ன் விமானநிலையத்திற்கு அழைத்து செல்லப்பட்டுள்ளார் என அவுஸ்திரேலிய தகவல்கள் தெரிவிக்கின்றன. அவர் பலவந்தமாக நாடு கடத்தப்படவுள்ளார். இலங்கை தமிழ் புகலிடக்கோரிக்கையாளரை இன்று இலங்கைக்கு நாடு கடத்துகின்றது அவுஸ்திரேலியா | Virakesari.lk
-
- 0 replies
- 990 views
-
-
பிரான்ஸில் இரண்டு இலங்கை தமிழர்கள் அதிரடி கைது! பிரான்ஸின் வடபகுதியிலிருந்து இல் து பிரான்ஸிற்கு சென்று கொண்டிருந்த இரண்டு இலங்கை தமிழர்கள் கைது செய்யப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர். வேர்தன் (Verdun) சுங்க அதிகாரிகள் மேற்கொண்ட திடீர் சுற்றிவளைப்பின் போது கடந்த 8ஆம் திகதி அவர் கைது செய்யப்பட்டுள்ளதாக தெரியவந்துள்ளது. லக்சம்பேர்க்கில் வாங்கிய 3,000 மதுசார போத்தல்களை வைத்திருந்த குற்றச்சாட்டில் குறித்த இரண்டு இலங்கையர்களும் கைது செய்யப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர். அந்த பகுதியில் மேற்கொண்ட பாரிய சுற்றிவளைப்பாக உள்ளதென அதிகாரிகள் கூறியுள்ளனர். கார் ஒன்றில் மறைத்து வைத்த நிலையில் இந்த மதுபானம் கொண்டு வரப்பட்டுள்ளது. காரில் …
-
- 3 replies
- 1.2k views
-
-
தமிழீழத் தேசியத் தலைவர் மேதகு வே. பிரபாகரன் அவர்களின் 68 ஆவது அகவைத் திருநாள்-யேர்மனி. Posted on November 16, 2022 by சமர்வீரன் 10 0 தமிழீழத் தேசியத் தலைவர் மேதகு வே. பிரபாகரன் அவர்களின் 68 ஆவது அகவைத் திருநாள்-யேர்மனி. – குறியீடு (kuriyeedu.com)
-
- 0 replies
- 638 views
-
-
இந்தியாவில் இருந்து இறக்குமதியாகும் ஆட்டா மாவுக்கு இங்கு பெரும் தட்டுப்பாடு நிலவுகிறது. நம்மவர்கள் இதை எந்த நாளும் பாவிப்பதில்லை. ஆனால் இந்தியர்கள் கூடுதலாக பஞ்சாபியர்கள் சப்பாத்தி இல்லாமல் சாப்பாடே இறங்காது. நியூயோர்க்கில் உள்ள ஒரு குடும்ப இந்திய நண்பர் தான் விடயத்தை சொல்லி வட கரோலினாவில் இருந்தா வாங்கி வாங்க என்றார். நானும் இந்தியகடை முழுவதும் தேடி பார்த்தேன்.கிடைக்கவில்லை. இந்தியா திடீரென ஏற்றுமதியை நிற்பாட்டியது தான் காரணமென்கிறார்கள்.ஏதோ சூழ்ச்சி இருக்கு என்னவென்று தான் தெரியலை என்கிறார்கள். உறவுகளே நீங்கள் வாழும் நாடுகளிலும் இப்படியான தட்டுப்பாடுள்ளதா?
-
- 11 replies
- 1.1k views
- 1 follower
-
-
கனடா – மிசிசாகா வங்கிக் கொள்ளையில் இலங்கைத் தமிழர்! November 5, 2022 கனடா – மிசிசாகாவில் வங்கி ஒன்றில் நடந்த கொள்ளைச் சம்பவம் தொடர்பில் சந்தேக நபர் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளதாக அந்நாட்டுக் காவற்துறையினர் தெரிவித்துள்ளனர். மிசிசாகாவைச் சேர்ந்த 30 வயதான தாமிரன் அமிர்தகணேசன் என்ற இலங்கையைச் சேர்ந்த தமிழரே கைது செய்யப்பட்டுள்ளார் என தெரிவிக்கப்படுகின்றது. கடந்த மாதம் 23ம் திகதி (23.10.22) இடம்பெற்ற இந்த கொள்ளைச் சம்பவத்தில் சந்தேகநபர் வங்கியை விட்டு வெளியேறி கால்நடையாக தப்பிச் சென்றுள்ளதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது. விரிவான குற்றவியல் விசாரணைக்குப் பிறகு சந்தேக நபர் மறு நாள் அடையாளம் காணப்பட்டதாக அறியப்…
-
- 10 replies
- 1.8k views
-
-
காரசாரமான யாழ்ப்பாணத்து ஒடியல் கூழ் விருந்து || Village Cooking Style Odiyal Kool நல்லதொரு ஒடியற் கூழ்விருந்துக் காணொளி. இப்படியானதொரு காட்சியைக் காண்பது குறைவு. ஏதாவது கழகங்கள் போன்றனவே இப்படியானவற்றை செய்வதுண்டு. ஆனால் பெண்கள் குழாமாக இணைந்து இப்படியொரு கூட்டிணைந்த செயற்பாடு. அனைவருக்கும் பாராட்டுகள். எமது கள உறவுகளும் பார்த்து மகிழவென்று இணைத்துள்ளேன். நன்றி நன்றி - யூரூப்
-
- 3 replies
- 1.2k views
-
-
யேர்மன் தெற்காசியாவிற்கான பணிப்பாளரை சந்தித்து பேசினார் திரு கஜேந்திரன் செல்வராஜா. Posted on October 18, 2022 by சமர்வீரன் 456 0 ஈழத்தமிழர்களின் அரசியல் நெருக்கடி குறித்து யேர்மன் வெளிவிவகார அமைச்சின் தெற்காசியாவிற்கான பணிப்பாளரை சந்தித்து பேசினார் திரு கஜேந்திரன் செல்வராஜா யேர்மன் வெளிவிவகார அமைச்சின் தெற்காசியாவிற்கான பணிப்பாளருடனும், இலங்கைக்கான விசேட பணிப்பாளருடனும், யேர்மன் மனிதவுரிமை ஆணைக்குழுவின் பிரதிநிதியுடனும் தமிழ்த் தேசிய மக்கள் முன்னணியின் பொதுச்செயலாளரும் நாடாளுமன்ற உறுப்பினர் திரு கஜேந்திரன் செல்வராஜா அவர்களுக்கும் இடையில் முக்கிய சந்திப்பொன்று நேற்றைய தினம் பேர்லின் தலைநகரத்தில் இடம்பெற்றுள்ளது. ஜெனீவா மனித…
-
- 1 reply
- 471 views
-
-
ஸ்லோவாக்கியா சர்வதேச பூப்பந்தாட்டப் போட்டியில் பதக்கங்களை வென்ற ஈழத்துச் சிறுவன் Posted on October 22, 2022 by தென்னவள் 24 0 கடந்த செப்ரெம்பர் மாதம் 30 ஆம் திகதி முதல் ஒக்ரோபர் 2 ஆம் திகதி வரை ஸ்லோவாக்கியா (Slovakia) நாட்டில் நடைபெற்ற 13 வயதுக்கு உட்பட்ட சிறுவர்களுக்கான சர்வதேச போட்டியில் இங்கிலாந்து நாட்டிலிருந்து தேஜா வேணுகோபால் அவர்கள் கலந்துகொண்டிருந்தார். இவர் பங்குபற்றிய அனைத்துப்போட்டிகளிலும் பதக்கங்களைப் பெற்று நம் அனைவர்க்கு பெருமை சேர்த்திருக்கின்றார். இவரை உலகத் தமிழர் பூப்பந்தாட்டப்பேரவை WTBF இங்கிலாந்துக் கிளையானது போட்டிக்கு அனுப்பியிருந்தனர். ஒற்றையர் ஆட்டம் – வெள்ளிப் பதக்கம் இரட்டையர் ஆட்டம் – வெ…
-
- 0 replies
- 589 views
-
-
2023 முதல்... நியூயோர்க் நகரத்தில், தீபாவளிக்கு.. பாடசாலைகளுக்கு விடுமுறை. - நியூயார்க் நகர மேயர் எரிக் ஆடம்ஸ்.- அடுத்த ஆண்டு முதல் நியூயார்க் நகரில் தீபாவளி ஒரு பொது பள்ளி விடுமுறையாக மாறும் என்று மேயர் எரிக் ஆடம்ஸ் (டி) வியாழக்கிழமை அறிவித்தார். இது ஏன் முக்கியமானது: இந்த ஆண்டு அக்டோபர் 24 ஆம் தேதி தொடங்கும் இருள் மீது ஒளியின் கொண்டாட்டமான தீபாவளி, இந்துக்கள், சீக்கியர்கள், ஜைனர்கள் மற்றும் பௌத்தர்களால் அனுசரிக்கப்படும் மிகவும் புனிதமான விடுமுறை நாட்களில் ஒன்றாகும். ஒவ்வொரு ஆண்டும் சுமார் 200,000 நியூயார்க்கர்கள் தீபாவளியை கொண்டாடுகிறார்கள், மாநில சட்டமன்ற உறுப்பினர் ஜெனிபர் ராஜ்குமார் (டி), விடுமுறையை அங்கீகரிக்கும் மசோதாவை அறிமுகப்படுத்தினார். அவர்கள…
-
- 2 replies
- 425 views
-
-
B.C. NDP தலைமை போட்டியில் இருந்து தமிழர் விலத்தல்
-
- 0 replies
- 667 views
-
-
சமகால அரசியல் தொடர்பாக நாடாளுமன்ற உறுப்பினர் திரு. செல்வராசா கயேந்திரன் (தமிழ்த் தேசிய மக்கள் முண்ணனி) மக்களைச் சந்திக்கவும் கலந்துரையாடவும் நொய்ஸ் மற்றும் வூப்பெற்றால் நகரங்களுக்கு(16.10;2022) வருகைதருகின்றார். உறவுகள் இணைந்துகொண்டு கருத்துகளைப்பகிரலாம். இது வட்ச்சப் ஊடாகக் கிடைத்த தகவல் யேர்மன் வாழ் கள உறவுகளுக்குப் பயன்படலாம் என்ற நோக்கில் இணைத்துள்ளேன். நன்றி
-
- 0 replies
- 1.2k views
-
-
கனடாவின் மார்க்கம் நகரில் இடம்பெற்ற வாகன விபத்தில் தமிழர்கள் இருவர் உயிரிழந்துள்ளதாகவும், ஒருவர் படுகாயமடைந்துள்ளதாகவும் தகவல்கள் வெளியாகியுள்ளன. நேற்று மாலை இந்த விபத்து இடம்பெற்றுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. மார்க்கம் சாலை மற்றும் எல்சன் தெரு பகுதியில் இந்த விபத்து இடம்பெற்றுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. உயிரிழந்தவர்கள் இருவரும் 20 வயதுக்கு உட்பட்டவர்கள் என தெரிவிக்கப்படுகின்றது. மூன்று பேர் பயணித்த காருடன் ட்ரக் வண்டி மோதி விபத்துக்குள்ளாகியுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர். காரின் சாரதியான 21 வயது இளைஞனும், பின் இருக்கையில் பயணித்த 23 வயதுடைய பெண்ணும் சம்பவ இடத்திலேயே உயிரிழந்துள்ளனர். விபத்துக்கு காரணம் வெளியாகவில்லை மூன்றாவத…
-
- 33 replies
- 3k views
- 3 followers
-
-
பிரான்சில் எரிபொருள் தட்டுப்பாடு;பெற்றோல் நிலையங்களில் நீண்ட வரிசையில் வாகனங்கள் -சி.எல்.சிசில்- எண்ணெய் சுத்திகரிப்பு ஆலை ஊழியர்களின் வேலை நிறுத்தம் காரணமாக பிரான்சில் எரிபொருள் தட்டுப்பாடு ஏற்பட்டுள்ளது. இதுவரை பிரான்சிலுள்ள 07 எண்ணெய் சுத்திகரிப்பு நிலையங்களில் 06 மூடப்பட்டுள்ளதாக வெளிநாட்டு ஊடகங்கள் தெரிவிக்கின்றன. இதன் காரணமாக எரிபொருள் நிரப்பு நிலையங்களில் வாகனங்கள் நீண்ட வரிசையில் காணப்படுவதாகவும், பல எரிபொருள் நிரப்பு நிலையங்களில் எரிபொருள் இல்லை எனவும் தெரிவிக்கப்படுகிறது. 10 சதவீத சம்பள உயர்வு கோரி எண்ணெய் சுத்திகரிப்பு ஆலை ஊழியர்கள் வேலைநிறுத்தத்தைத் தொடங்கியுள்ளனர். …
-
- 5 replies
- 709 views
-
-
சமகால அரசியல் தொடர்பாக நாடாளுமன்ற உறுப்பினர் திரு. செல்வராசா கயேந்திரன் (தமிழ்த் தேசிய மக்கள் முண்ணனி) மக்களைச் சந்திக்கவும் கலந்துரையாடவும் பிராங்பேர்ட் மற்றும் லண்டவ் நகரங்களுக்கு(15.10;2022) வருகைதருகின்றார். உறவுகள் இணைந்துகொண்டு கருத்துகளைப்பகிரலாம். இது வட்ச்சப் ஊடாகக் கிடைத்த தகவல் யேர்மன் வாழ் கள உறவுகளுக்குப் பயன்படலாம் என்ற நோக்கில் இணைத்துள்ளேன். நன்றி
-
- 2 replies
- 511 views
-
-
பேராசிரியர் தனபாலசிங்கம் இராஜேஸ்வரன் அவர்களுக்கு“நாட்டுப்பற்றாளர்” மதிப்பளிப்பு. Posted on October 7, 2022 by சமர்வீரன் 54 0 பேராசிரியர் தனபாலசிங்கம் இராஜேஸ்வரன் அவர்களுக்கு“நாட்டுப்பற்றாளர்” மதிப்பளிப்பு. அவுஸ்திரேலியா பேர்த் நகரத்தில் வாழ்ந்த தேசியச்செயற்பாட்டாளர் பேராசிரியர் தனபாலசிங்கம் இராஜேஸ்வரன் அவர்கள், சாவடைந்தார் என்ற செய்தி எம்மைப் பெருந்துயரில் ஆழ்த்தியிருக்கிறது. அவுஸ்திரேலியா கேட்டின் பல்கலைக்கழகத்தில் பொறியியல் பேராசிரியரான ராஜ் இராஜேஸ்வரன் அவர்கள், தமிழீழ விடுதலைப்போராட்டத்தில் கொண்ட பற்றுறுதி காரணமாகத் தன்னை ஒரு தேசியச்செயற்பாட்டாளராக அவுஸ்திரேலியா தமிழர் ஒருங்கிணைப்புக்குழுவில் தன்னை இணைத்துக் கொண்டவர…
-
- 0 replies
- 493 views
-
-
லெப்.கேணல் திலீபன், 2ஆம் லெப் மாலதி ,நினைவெழுச்சி நிகழ்வு- 15.10.2022 யேர்மனி Saerbeck Posted on September 27, 2022 by சமர்வீரன் 46 0 லெப்.கேணல் திலீபன், 2ஆம் லெப் மாலதி ,நினைவெழுச்சி நிகழ்வு- 15.10.2022 யேர்மனி Saerbeck – குறியீடு (kuriyeedu.com) லெப்.கேணல் திலீபன், 2ஆம் லெப் மாலதி ,நினைவெழுச்சி நிகழ்வு- யேர்மனி,Stuttgart. லெப்.கேணல் திலீபன், 2ஆம் லெப் மாலதி ,நினைவெழுச்சி நிகழ்வு- யேர்மனி,Stuttgart. – குறியீடு (kuriyeedu.com)
-
- 1 reply
- 585 views
-
-
அதிகாரப்பகிர்வும்- இராணுவமயப்படுத்தலை முடிவிற்கு கொண்டுவருவதும் இலங்கையின் பொருளாதார வளர்ச்சிக்கு அவசியமான விடயங்கள்- ஹரி ஆனந்தசங்கரி By Rajeeban 18 Sep, 2022 | 01:30 PM அதிகாரப்பகிர்வும் இராணுவமயப்படுத்தலை முடிவிற்கு கொண்டுவருவதும் இலங்கையின் பொருளாதார வளர்ச்சிக்கு அவசியமான விடயங்கள் என கனடா நாடாளுமன்ற உறுப்பினர் ஹரி ஆனந்தசங்கரி தெரிவித்துள்ளார் தமிழ் கார்டியனுடனான கருத்துப்பகிர்வின் போது அவர் இதனை குறிப்பிட்டுள்ளார். இலங்கையின் பெரிதாக்கப்பட்டுள்ள இராணுவம் குறித்து கரிசனை வெளியிட்டு ஜூன் மாதம் சர்வதேச நாணயநிதியத்திற்கு கடிதம் எழுதியதாக தெரிவித்துள்ள அவர் ஐக்கியநாடுகள்…
-
- 2 replies
- 631 views
-
-
-
- 2 replies
- 770 views
-
-
காணாமல் போன இவர்கள் எங்கே ? கனடா ஒன்ராறியோ மாகாணசபைக் கதவைத் தட்டிய தமிழர்கள் By Rajeeban 01 Sep, 2022 | 12:40 PM சிறிலங்கா அரசினால் வலிந்து காணாமலாக்கப்பட்ட தமிழர்கள் எங்கே என்ற கேள்வியுடன் கனடாவின் ஒன்ராறியோ மாகாணசபையின் கதவினை நோக்கி ஒளிப்படங்காட்சிப்படுத்தல் இடம்பெற்றுள்ளது வலிந்து காணாமலாக்கப்பட்டவர்களுக்கான அனைத்துலக நாளான ஓகஸ்ற்-30 செவ்வாயன்றுஇலங்கைத்தீவில் சிறிலங்கா அரசினால் வலிந்து காணாமலாக்கப்பட்ட தமிழர்களுக்கு நீதி கோரி, தமிழர் தாயகம் உட்பட புலம்பெயர் நாடுகள் எங்கும் கவனயீர்ப்பு நிகழ்வுகள் இடம்பெற்றிருந்தன. கடந்த 2 ஆயிரம் நாட்களுக்கு மேலாக காணாமலாக்கப்பட்ட தமது உறவுக…
-
- 3 replies
- 943 views
-
-
கனடா ஒன்டாரியோ சட்டமன்றத்தில் இசைப்புயல் A.R.ரஹ்மான்
-
- 2 replies
- 1.1k views
-
-
குரங்கம்மை நோயால் பரிதவிக்கும் நியூயோர்க் நகர் -சி.எல்.சிசில்- நியூ யோர்க் நகரம் குரங்கம்மை உருவெடுக்கும் உலக மையமாக மாறியுள்ளது. இதுவரை அங்கு பதிவுசெய்யப்பட்டுள்ள குரங்கம்மைச் சம்பவங்களின் எண்ணிக்கை சுமார் 1,600ஆகும். நோய்ப்பரவலைக் கட்டுப்படுத்த அமெரிக்கா தேசிய அளவிலான நெருக்கடி நிலையை அறிவித்துள்ளது. எனினும் தொற்று அதிவேகமாகப் பரவிவரும் வேளையில், சிகிச்சை அளிப்பதில் தாமதம் ஏற்பட்டுள்ளது. அதேவேளை நியூயோர்க் நகரில் வசிக்கும் பலரிடையே, குரங்கம்மைத் தொற்றுக் குறித்துக் குழப்பம் நிலவுகிறது. அத்துடன் அங்கு தடுப்பூசிகளும் தகவல்களும் போதுமான அளவில் இல்லை என…
-
- 3 replies
- 836 views
-