Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

வாழும் புலம்

புலம்பெயர் நாடுகள் | தமிழர் வாழ்வு | அனுபவங்கள் | அன்றாட நிகழ்வுகள்

பதிவாளர் கவனத்திற்கு!

வாழும் புலம் பகுதியில் புலம்பெயர் நாடுகள், தமிழர் வாழ்வு, அனுபவங்கள், அன்றாட நிகழ்வுகள் சம்பந்தமான பதிவுகள் இணைக்கப்படலாம்.

புலம்பெயர் நாடுகளில் வசிக்கும் தமிழர்கள் பற்றியதும் புலம்பெயர் தமிழர்களுக்கு அவசியமானதுமான செய்திகள், தகவல்கள் மாத்திரம் இணைக்கப்படல் வேண்டும்.

  1. வியாபாரியா பூசாரியா?? தலைப்பைப்பாத்திட்டு இந்து மதநம்பிக்கையாளர்கள் கொதித்து எழலாம். மதநம்பிக்கையில்லாதவர்கள் இரண்டுமே ஒண்டுதானே என்று நினைக்கலாம். வேற்று மதக்காரர்கள் இந்து மதத்திலை இதுதானே நடக்கிறது என்று அலுத்துக்கொள்ளலாம்.(இந்து மதம்வேறு சைவமதம் வேறு ) ஆனால் என்னுடைய சைவ மதத்திற்கே இழுக்கு ஒரு சில பூசாரிகளாலும் சாமியார்களாலும்தான்.நானும் ஒரு சைவன் என்கிற முறையில் வெட்கி தலை குனிந்தபடி இந்தக் கட்டுரையை எழுதுகின்றேன்.கட்டுரை முடிவில் பக்தியின் பெயரால் கோடி கோடியாய் கொட்டிக்கொடுக்கும் புலம்பெயர் உறவுகளே சிந்தியுங்கள் இனி விடயத்திற்கு வருவோம்.யெர்மனியில் HAMM காமாட்சியம்மன் கோயில் ஜரோப்பாவிலேயே மிகவும் பிரசித்தி பெற்ற பிரமாண்டமான கோயில்.இந்த…

  2. சர்வதேச மன்னிப்புச்சபையின் சிட்னிக்கிளையில் சிறிலங்காவின் வடக்கு கிழக்குப் பகுதியில் உள்ள மக்களுக்கு எதிராக நடைபெறும் மனித உரிமை மீறல்கள் பற்றிய உரை வரும் 25ம் திகதி செவ்வாய்க்கிழமை மாலை 4 மணிக்கு நடைபெறுகிறது. சிறிலங்காவில் வடக்கு கிழக்கு மக்களுக்கு ஏற்பட்ட கொடுமைகளை நேரில் பார்த்த, சிறிலங்காவில் இருந்து வரும் பாதிரியார் டானியல் அவர்கள் உரையாற்றுகிறார். உரை நிகழும் விலாசம் Amnesty International Australia, Room 1, 79, Myrtle Street, Level 1, Chippendale

  3. வெளிநாட்டில் சம்பாதிக்கும் கணவனா? திருமதி. மீனாட்சி குமரேசன் யாழ்ப்பாணம், கொக்குவில் பகுதியை சேர்ந்த எனது பெயர் மீனாட்சி. எனது பெற்றோர்கள், வெளிநாடு சென்று சம்பாதிக்கும் மாப்பிள்ளை ஒருவரைப் பார்த்து, திருமணம் செய்து வைத்தார் கள். எனது திருமணம் இந்தியாவில் நடந்தது. திரு மணம் முடிந்ததும் தமிழக நகரில் உள்ள அவரின் உறவினர் (பெரியப்பாவின் மகன்) வீட்டில் எங் களது இல்லற வாழ்க்கை தொடங்கியது. இரண்டே மாதம் கழித்து அவர் மீண்டும் அரபு நாட்டிற்கு பணி நிமித்தமாகச் சென்று விட்டார். மூன்று மாதம் கழித்து, உறவினர் பெயரில் பணம் அனுப்பத் தொடங்கினார். பணத்தை, உறவினரின் பெயரில் அனுப்பி வைக்க, என்னுடைய அத்தியாவசிய செலவுக்கே அவர்களிடம் கைகட்டி நிற்க வேண்டிய நிலை ஏற்பட்டது. ஒ…

  4. இன்னொரு சந்தேகம் என்ற கவலை வேண்டாம். இது சற்றே ஆக்கபூர்வமான ஒரு விடயம். அண்மைக்காலமாக ஈழ மக்களுக்காக தமிழக மக்கள் குரல் குடுப்பது அனைவருக்கும் தெரிந்த ஒரு விடயம். ஆனால் இது ஒன்றும் சாதாரண விடயம் கிடையாது. வெளிநாடு வந்த எம்மவர்களில் சிலரே எம் மக்களின் துயரை தெரிந்தும் தெரியாதது போல் நடிக்கும் போது, தமிழகத்தில் ஏற்பட்டிருக்கும் இந்த மாற்றம் நிச்சயம் மதிக்கப்பட வேண்டிய, நன்றி சொல்ல கூடிய ஒரு விடயம். இது நாள் வரை பெரும்பாலும் புலம்பெயர்ந்த ஈழத்தமிழர்கள் காட்டிய ஆதரவு எனும் பலம் எம் தமிழக சகோதரங்கள் மூலமும் வர ஆரம்பித்திருப்பதையிட்டு மகிழாமல் இருக்க முடியுமா? அரசாங்கங்கள், தலைவர்கள் என்பதை தள்ளி வைத்து விட்டு, 'எம்மினம்' / 'மனிதாபிமானம்' என சிந்திக்க ஆரம்பித்திருப்பத…

  5. நாளை சிட்னி கோம்புஸ்ஸில் அவுஸ்திரெலியாப் பாராளுமன்ற உறுப்பினர்களின் ஆதரவை நாடுவது பற்றிய அரசியல் கலந்துரையாடல் நடைபெறவுள்ளது. தற்பொழுது மிகவும் நெருக்கடியான காலத்தில் ஈழத்தில் எம்மவர்களும் படும் இன்னல்களை உள்ளூர் அரசியல்வாதிகளிடமும், பாராளுமன்ற உறுப்பினர்களுக்கும் வெளிப்படுத்துவது தொடர்பான கலந்துரையாடல் நாளை மாலை 2 மணிக்கு பின்வரும் விலாசத்தில் நடைபெறுகிறது. Iron Bark Room, Strathfield Council Library, Rochester St, Homebush 15th Nov 2008 தொலைபேசி -02 95804545 மின்னஞ்சல் -info@atel.org.au www.atel.org.au

  6. அன்பான உறவுகளே, பத்து வருடங்களாக புகழுக்காகவும், பணத்திற்காகவும் நடாத்தப்படும் கானக்குயில் .இம்முறையும் அதே குறிக்கோளுக்காக சனிக்கிழமை 15.11.2008 ஒழுங்கு செய்யப்பட்டுள்ளது. தாயகத்தில் மக்கள் இன்றைய நாளில் அனைத்து தேவைக்காகவும் அழுது கொண்டிருக்கும் நிலையில் .இந்த நிகழ்வை ஒரு தாயக மக்களின் உதவிக்காக அல்லது அந்த மக்களின் துயர் துடைக்கும் நிகழ்வாக ஒழுங்கு செய்து ,இசை நிகழ்ச்சியோடு மக்களுக்கும் பங்களித்ததாக இருந்திருக்கும் படி மாற்றி ஏதாவது ஒரு வழியில் பயன்படுத்தி இருக்கலாம். ஆனால் நிகழ்வு வழக்கம் போல் நிகழ்ச்சி ஒழுங்கமைப்பாளர்களின் பணப்பைக்கும் புகழுக்கும் சேர்க்கவே நடாத்த பட இருக்கின்றது. முன்னைய கானக்குயில் நிகழ்ச்சிகளை விட்டு விட்…

  7. ACT NOW!Pearl Action http://pearlaction.org/ This is an American based lobby group. However, this letter campaignis part of an international campaign, in which Australia canparticipate as well, for the European Union to deny Sri Lanka GSP+trade status. Sending the letter is very simple - just click on the link for"Non-U.S. Activists" and it will take you to the correct web page: (http://www.congressweb.com/cweb4/index.cfm?orgcode=pearl&hotissue=26) Then you fill in your address and click "Send E-mail" and yourpersonalised letter will be sent to the EU Trade Commisioner! We're trying to get up to 1000 letters sent, and normally we get about300 from America. W…

  8. SBS Radio News Features Sri Lanka's ethnic conflict: the first of a two-part series A new humanitarian crisis has emerged in northern Sri Lanka, amid an intensified effort by government forces to seize territory under the control of Tamil separatist rebels. Tens-of-thousands of people have fled their homes, and most are now dependent on food rations in makeshift camps. As the crisis unfolds, the Sri Lankan government has prohibited independent reporting of what's actually happening in the conflict zone. And human rights groups say they're alarmed by reports of severe human rights violations by BOTH sides in the fighting, but are being refused perm…

  9. சிட்னியில் தமிழ் குறும்பட விழா 2008- விழாவில் ஈட்டும் இலாபம் முழுவதும் வன்னி மக்களுக்கு வழங்கப்படும். நீங்கள் ஒவ்வொருவரும் தவறாது பார்க்கவேண்டிய பல பரிசுகள் வென்ற 14 குறும்படங்கள் தென்மராட்சி அபிவிருத்தி அமைப்பினால் திரையிடப்படுகிறது இடம் HOLROYD CITY COUNCIL HALL 17 Miller Street, Merrylands, NSW2160 திகதி 23.11.2008 நேரம் - மாலை 4.00 முதல்

  10. சிறிலங்காவில் நடைபெறும் இனப்பிரச்சினைக்கு அரசியல் தீர்வுக்குத் தான் அவுஸ்திரெலியா அரசு ஆதரவு என்று அவுஸ்திரெலியா வெளிவிவகார அமைச்சர் ஸ்ரிபன் சிமித் பேர்த் வாழ் தமிழர்களுக்கு உறுதியளித்துள்ளார். கடந்த 7ம் திகதி பேர்த் வாழ் 200 ஈழத்தமிழர்கள் அவுஸ்திரெலியா வெளிவிவகார அமைச்சரின் அலுவலகத்துக்கு முன்பாக நடத்திய கவனயீர்ப்பின் போது நடைபெற்ற சந்திப்பில் அமைச்சரின் முதன்மை ஆலோசகர் திரு.டேவிட் கட் வெளிவிவகார அமைச்சரின் செய்தியை தமிழர்களுக்கு தெரியப் படுத்தினார். அமைச்சர் அச்சமயத்தில் அவரது தொகுதியில் இருக்காததினால் தமிழர்களைச் சந்திக்க முடியவில்லை என்றாலும் சிறிலங்காவில் வடக்கில் வாழும் தமிழர்களின் நிலை பற்றி மிகுந்த அனுதாபத்துடன் அமைச்சர் கவனிப்பதாகவும் திரு.டேவிட் கட் அங்கு தெரி…

  11. பொன் விழா காணும் கோசிப் மீண்டும் ஒரு கோசிப்பில் உங்களை சந்திப்பதில் மிக்க மகிழ்ச்சி. என்னுடைய நண்பன் ஒருத்தரை ஒரு கேள்வி கேட்க வேண்டும் என்று கனநாளா எதிர்பார்த்து கொண்டிந்தனான்.இன்று தான் சந்தர்ப்பம் கிடைத்தது.சின்ன வயதில் இருந்து ஒன்றாக படித்தனாங்கள் அப்பவே அவன் நல்ல கெட்டிகாரன்.யாழ்பாணத்தான் சின்ன வயசிலையே கெட்டிகாரன் என்றால் இப்ப வெளிநாட்டில அவர்கள் எப்படி பதவியில இருப்பார்கள் என்று நான் சொல்லி உங்களுக்கு தெரிய வேண்டியதில்லை. அவர் தொழில் நிமித்தம் உலகம் சுற்றுவார் வருடத்தில் பத்து தடவையாவது வெளிநாடு தொழில் நிமித்தம் சென்று வருவார் (புத்தனின் நண்பன் வெளிநாட்டு புளுகுகள் எல்லாம் எங்களுக்கு எதற்கு என்று நீங்கள் புலம்புவது விளங்கிறது).இந்த வெளிநாடுகளுக்கு …

    • 19 replies
    • 3k views
  12. தமிழ் சொற்கள் தெரிந்தவர்கள் சொல்லுங்கள். laptop.................... webcam..................... suit....................... printer ----------------- mouse .................. keyboard --------------- scanner ------------------ speakers------------------ headset-------------------- cd player------------------- cutlery------------------- calculater---------------- stapler ------------------ pencil case-------------------- sharpener------------------- trampoline..................... இவ்வளவு சொற்களுக்கும் தமிழ் தேவை. தெரிந்தவர்கள் உதவி செய்யுங்கள்

  13. மலிபன் விசுகோத்தில் மெலாமைன் நஞ்சு - கனேடிய உணவு பரிசோதனை நிறுவனம், மலிமன் லெமன் பfவ் விசுகோத்துக்களில் அங்கீகரிக்கப்பட்ட அளவிலும் அதிகமாக மெலாமைன் காணப்பட்டதால் மலிபன் லெமன் பfவ் சந்தையில் இருந்து மீளப்பேறப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்த லெமன் பfவ் விசுக்கோத்துக்கள் கடந்த ஆகஸ்ட் மாதம் தயாரிக்கப்பட்டதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்த அறிவிப்பை தொடர்ந்து கருத்து வெளியிட்ட மலிபன் நிறுவனத்தினர், தமது உற்பத்திகளில் மெலாமைன் இருக்கவில்லை என தாங்கள் ஐக்கிய இராச்சியத்திலும், சிங்கபூரிலும் உள்ள நிறுவனங்கள் மூலம் செய்த ஆய்வின் மூலம் உறுதிப்படுத்தப்பட்டுள்ளதாக தெரிவித்துள்ளனர். மெலாமைன் உணவு பொருட்களின் தடையின் பின் கனடாவில் மலிபன் லெமன் பfவ் உட்பட மேலும் சினா,…

  14. இலங்கையில் நடைபெறும் மனிதவுரிமை மீறல்கள் பற்றிய கலந்துரையாடல். 29.10.2008 அன்று யேர்மனி ஸ்ருட்காட் நகரில் 'இலங்கையில் மனிதவுரிமை மீறல்கள்" எனும் தலைப்பில் மகாநாடொன்று நடைபெற்றுள்ளது.இந்நிகழ்வானத

    • 3 replies
    • 1.2k views
  15. ஆவ்! இங்கே கொட்டாவி விட்டு ஓரமாக நித்திரை கொள்ளலாமா? 1. சாதாரண தமிழகமக்களின் கருத்தையே வெளிமாநிலங்களிலே தெரியவிடாமலும், தமிழக மத்தியதட்டு படிச்ச அசாதாரண மனுசருக்கு இலங்கைநிலை பற்றிய உண்மையைச் சொல்லாத இந்து & புரொண்ட்லைன் இன்னமும் தனியான தமிழக ஆங்கில ஊடகங்களாகக் கோலோச்சும் நிலையை விட்டு வைத்திருக்கும் தமிழகம் 2. ஈழத்தமிழர் பெயரிலே கருநாநிதியையும் ஜெயலலிதாவையும் தமது விருப்பத்தின்படி குதிரையை ஓட்ட வைப்பது தெரிந்தும் வாயை மூடிக்கொண்டு ஐஸ் குச்சி ஒரு கையிலும் டைம் பாம் இன்னொரு கையிலும் வைத்திருந்து விளையாடக்கூடிய வாய்வீரமறவர்களைக் கொண்ட தமிழகம். 3. தமிழகத்தமிழருக்கும் அவர்களுக்கென்ற சொந்த வாழ்வும் சூழலும் உண்டு என்று உணரவே தலைப்படாது, ஈழத்தமிழருக்குக் குரல்…

  16. கள மறவர்களே! புலமெங்கும் தமிழர் எழுவதுகண்டு மகிழ்ந்தோர் கனடாவில் தமிழர் தூங்குவது கண்டு வெகுண்டனர். அவர்களுக்கு ஒரு இனிப்பான சங்கதி. நாளை தொடக்கம் ஒருவாரத்துக்கு கனடா இளையோர் அமைப்பு முன்னெடுக்கும் ஈழத்தமிழர் ஆதரவுக் குரலுடன் எல்லோர் குரலும் சேர்ந்து ஓங்கி ஒலிக்கட்டும் தமிழ்முழக்கம்!!!!

  17. இன்று தமிழீழ மக்களை சிங்களம் 1.5 பில்லியன் அமெரிக்க டாலர்களை செலவழித்து பெரிய இராணுவ பலம் கொண்டு அழித்து வருகின்றது. இதை தமிழினமும் தன் தலமையின் கீழ் அணி கொண்டு தன்னைத்தானே காப்பாற்றி வருகிறது. எம்மக்களை அழிக்கும் சிங்களத்தின் பொருளாதார வலு குறைக்கப்படின், அதன் படை பலம் குறைக்கப்படின் எம்மவர்களின் உயிர்கள் காப்பற்றப்படும். கடந்த மூன்று வருடங்களாக சிங்களம் ஐரோப்பிய ஒன்றியத்தின் ஆடை வகைக்களுக்கான ஏற்றுமதி வரிச்சலுகையை கொண்டுள்ளது. ஐரோப்பிய ஒன்றியம் இந்த வருட டிசம்பர் மாதம் இதை மேலும் மூன்று வருடங்களுக்கு நீடிப்பதா இல்லையா என முடிவெடுக்கவுள்ளது. சிங்களம் விண்ணப்பத்தை இம்மாதம் சமர்பித்துள்ளது. ஆயினும், சிங்கள அரச பயங்கரவாதத்தின் தமிழருக்கெதிரான திட்டமிட்ட இன அழிப…

  18. இந்திய மாணவர்களின் ஆதரவினால் ஒட்டாவா தமிழ் மாணவர் கல்விக் களஞ்சியம் பெரிதும் ஊக்கமடைகிறது என்றும் அவர்களுக்கு ஒட்டாவா தமிழ் மாணவர் கல்விக் களஞ்சியம் நன்றியினை தெரிவித்துக் கொள்கின்றது. தொடர்ந்து வாசிக்க

    • 0 replies
    • 659 views
  19. மனித உரிமைகளை மதிக்கும் நாடு நெதர்லாந்து. மனித உரிமைகளை மதிக்காத உனக்கு இங்கு என்ன வேலை? எனக் கேள்வி எழுப்பி சிறிலங்கா தூதரகம் முன்பாக "இக்காட்" அமைப்பினர் கவனயீர்ப்பு போராட்டம் நடத்தினர். தொடர்ந்து வாசிக்க

    • 0 replies
    • 627 views
  20. ஈழத்திலிருந்து புலம் பெயர்ந்து பத்து லட்சத்திற்கும் மேல் உலகமெல்லாம் பரவிக் கிடக்கிற தமிழினமே.. எங்கள் பணத்தில் நடிகர்கள் வாழ்கிறார்கள் எங்கள் பணத்தில் நடிகைகள் சாப்பிடுகிறார்கள் என ஓயாது புலம்புகிற புலம்பெயர் தமிழனே.. உன் பணத்தை நம்பி அங்கே இரண்டு லட்சம் மக்கள் இருக்கிறார்கள் என்பதை உணர மாட்டாயா..? அஜித்தையும் அர்சுனையும் உண்ணாவிரதத்திற்கு வரவைப்பதுதான் உன் உயர்ந்த பட்ச சேவையா..? அவர்கள் வருவது தான் உயர்ந்த பட்ச தேவையா..? புலமெல்லாம் பரவியிருக்கும் தமிழனின் ஒவ்வொரு குடும்பத்திலிருந்தும் தினமும் ஒரு டொலர் கொடுத்தாலே 2 லட்சம் மக்களுக்கு ஒரு நாளுக்கு ஒரு நேர முழு உணவு கிடைக்குமே.. மாதம் முப்பது டொலர்கள் முடியாதா உன்னால்..? இந்த வரலாற்றின் தேவையை மறந்து…

    • 66 replies
    • 8.4k views
  21. எனக்கு சிங்களம் தெரியாது ஆனால் சிங்கள இணையத்தளம் ஒன்றில் போடபட்டிரிந்தது சிங்களவன் எம்மை அழித்துகொண்டிருகிறான் ஆனால் இவர் சிங்கள தமிழ் ஒற்றுமை பற்றி படிகொண்டிருக்கிறார்கள் http://www.lankanewspapers.com/news%5C2008...e_headline.html

  22. பரிஸ் சிறையில் தமிழர்கள் இருவர் உண்ணாநிலைப் போராட்டம் ( 10/25/2008 11:41:14 AM ) பிரான்ஸ் சிறையில் தடுத்து வைக்கப்பட்டுள்ள அந்த நாட்டின் தமிழர் ஒருங்கிணைப்புக் குழுவின் முன்னாள் பொறுப்பாளர் பரிதி இன்று சனிக்கிழமை உண்ணாநிலைப் போராட்டத்தை ஆரம்பித்துள்ள நிலையில், மற்றொரு தமிழ்க் கைதியான செந்தூரனும் உண்ணாநிலைப் போராட்டம் மேற்கொள்ள இருப்பதாக அறிவித்துள்ளார். இன்று சனிக்கிழமை காலை 8:00 முதல் நாளை ஞாயிற்றுக்கிழமை இரவு 8:00 மணி வரையிலான 36 மணி நேரம் பரிதி உண்ணாநிலைப் போராட்டத்தை மேற்கொண்டு வருகின்றார். தாயகத்தில் தமிழ் மக்கள் மீது சிறீலங்கா அரசு மேற்கொண்டுவரும் இன அழிப்புக்கான தாக்குதல்கள், 2 இலட்சத்து 30 ஆயிரத்திற்கு மேற்பட்ட மக்கள் இடம்பெயர்ந…

  23. சினிமா சார்ந்து பல கருத்துக்கள் முன் வைக்கப்படுவதால் இதில் எனது கருத்தை அல்லது எனது அனுபவத்தை எழுதலாம் என்று நினைக்கிறேன் ஏனெனில் இதுபோல் ஒரு நிலையை நானே பலவருடங்களுக்கு முன் நானாகவே சிந்தித்து முக்கியமாக எவரது தூண்டுதலும் இன்றி முடிவெடுத்தேன் அதாவது அபுPர்வராகங்கள் படத்திலிருந்து கிட்டத்தட்ட தளபதி படம்வரை நான் ரஐனியின் அதிதீவிர ரசிகனாக இருந்தேன் அது நான் யாழ்ப்பாணத்திலிருந்த காலத்திலும்சரி கொழும்பிலிருந்த காலத்திலும் சரி ஏன் வெளிநாடு வந்தபின்பும்சரி அத்தனை படத்தினையும் முதல்காட்சி பார்த்து விடுவேன் இது எனது நண்பர்கள் உறவினர்கள் அனைவருக்கும் தெரியும் ஆனால் தற்போது கிட்டத்தட்ட 10 வருடங்களாக நான் ரஐனி படம்…

  24. சுவிஸ் தமிழ் இளையோர் அமைப்பினரது 24 மணிநேர உறங்கா நிலைப் போராட்டம் சனி, 25 அக்டோபர் 2008, 00:13 மணி தமிழீழம் [சுவிஸ் நிருபர் மகி] சுவிஸ் தமிழ் இளையோர் அமைப்பினர் உறங்கா நிலைப் போராட்டம் ஆரம்பிக்கப்பட்டுள்ளது. வன்னியில் சிறீலங்காப் படையினரது போர் முன்னெடுப்புகளினால் இடம்பெயர்ந்து அல்லலுறும் தமிழ் உறவுகளை நினைவு கூர்ந்தும் மற்றும் தமிழ்நாடு முழுவதும் மாணவ சமுதாயத்தால் மேற்கொள்ளப்படும் வகுப்பு புறக்கணிப்பு போராட்டத்திற்கு ஆதரவைத் தெரிவித்தும் உறங்கா நிலைப் போராட்டம் முன்னெடுக்கப்பட்டுள்ளது. நேற்று வெள்ளிக்கிழமை இரவு 7 மணிக்கு அகவணக்கத்துடன் ஆரம்பமாகிய உறங்கா நிலைப் போராட்டம் 24 மணிநேரம் முன்னெடுக்கப்படவுள்ளது. நிகழ்வில் எங்களையும் கொஞ்சம் பாரு…

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.