Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

வாழும் புலம்

புலம்பெயர் நாடுகள் | தமிழர் வாழ்வு | அனுபவங்கள் | அன்றாட நிகழ்வுகள்

பதிவாளர் கவனத்திற்கு!

வாழும் புலம் பகுதியில் புலம்பெயர் நாடுகள், தமிழர் வாழ்வு, அனுபவங்கள், அன்றாட நிகழ்வுகள் சம்பந்தமான பதிவுகள் இணைக்கப்படலாம்.

புலம்பெயர் நாடுகளில் வசிக்கும் தமிழர்கள் பற்றியதும் புலம்பெயர் தமிழர்களுக்கு அவசியமானதுமான செய்திகள், தகவல்கள் மாத்திரம் இணைக்கப்படல் வேண்டும்.

  1. லண்டன் லூசியம் பகுதியில் வசித்து வரும் பிரபல தமிழ் வர்த்தகரின் காரொன்று அண்மையில் திருடிச் செல்லப்பட்டுள்ளது. குறித்த வர்த்தகர் தனது காரினை விற்பனை செய்வதற்காக இணையத்தளம் ஊடாக விளம்பரம் செய்துள்ளார். இந்த விளம்பரத்தை பார்வையிட்ட மூவர் காரினை வாங்குவதாக கூறி குறித்த வர்த்தகரை நாடியுள்ளனர். குறித்த காரினை பார்வையிடுவதற்காக வர்த்தகரின் வீட்டுக்கு வந்த மூன்று பேர் காரினை பார்வையிட்டப் பின்னர் அதன் மேலதிக இணைப்புச் சாவியை எவரும் காணாத சமயம் லாவகமாக எடுத்துள்ளனர். அதற்கு பதிலாக தாங்கள் கொண்டு வந்திருந்த பிறிதொரு சாவியை வைத்தும் சென்றுள்ள போதும் இதனை யாரும் அறிந்திருக்கவும் இல்லை. அதன் பின்னர் இரவு நேரத்தில் மீண்டும் அங்கு வருகை தந்த சந்தேகநபர்கள் மேலதிக…

  2. கோத்தபாயவை எதிர்த்து ஸ்கொட்லாந்தில் 01/11/2021 அன்று காலை 11 மணிக்கு நடக்கவிருக்கும் பேரணிக்கான பயண ஒழுங்குகள். https://www.kuriyeedu.com/?p=364956

    • 0 replies
    • 691 views
  3. கின்னஸில் இடம்பிடித்துள்ள, திருகோணமலை இளைஞன்! விபுலானந்தன் கௌரிதாசன் என்ற இளைஞனன் உலகசாதனைப் புத்தகமான “கின்னஸ்” இல் இடம்பிடித்துள்ளார். குறித்த சாதனையானது, உலக சாதனைக்காக உலகெங்கிலுமிருந்து சுமார் 150 000 ஓட்ட வீர, வீராங்கனைகள் கலந்து கொண்ட ஓட்டப் போட்டியில், சுமார் 115 000 பேர் தகுதிகாண் நிலையில் நிராகரிக்கப்பட்டு 35 570 பேர் கின்னஸ் சாதனையாளர்களாக ஏற்றுக் கொள்ளப்பட்டு அவர்களது தர வரிசை வெளியிடப்பட்டுள்ளது. அந்தத் தர வரிசையின்படி 35 570 ஓட்ட வீர, வீராங்கனைகளுள் இவர் 609வது இடம் பிடித்துள்ளார். திருகோணமலையைப் பிறப்பிடமாகக் கொண்ட இவர் தற்போது சுவிட்ஸர்லாந்து இல் வசித்து வருகின்றார். https://athavannews.com/2021/1245609

  4. கம்பேர்க் தமிழாலயத்தில் இடம்பெற்ற 2ஆம்.லெப்.மாலதி அவர்களின் நினைவு வணக்க நிகழ்வு. 16.10.2021 சனிக்கிழமை இன்று யேர்மனி கம்பேர்க் நகரில் உள்ள தமிழாலயத்தில் முதற் பெண் மாவீரர் 2 ஆம் லெப். மாலதி அவர்களின் நினைவு வணக்க நிகழ்வு நினைவுகூரப்பட்டது. இந் நிகழ்வில் கம்பேர்க் தமிழாலய மாணவர்கள், ஆசிரியர்கள், பெற்றோர்கள், கலந்துகொண்டு மலர்தூவி தீபம் ஏற்றி வணக்கத்தினைச் செலுத்தினர். https://www.kuriyeedu.com/?p=364341

    • 0 replies
    • 479 views
  5. பரதநாட்டிய ஆற்றுகை வெளிப்பாட்டுத் தேர்வு 2021 யேர்மனி. அனைத்துலக தமிழ்க் கலை நிறுவகமும் பாரதி கலைக்கூடமும் இணைந்து நடாத்திய பரதநாட்டிய ஆற்றுகை வெளிப்பாட்டுத் தேர்வு 16.10.2021 சனிக்கிழமை யேர்மனி ஆலன் நகரத்தில் மிகச் சிறப்பாக நடைபெற்றது. கொரோனா தொற்று நோய் காரணமாக தடைப்பட்டிருந்த இத்தேர்வு அதன் விதிமுறைகளுக்கு அமைவாக மண்டபம் நிறைந்த பார்வையாளர்களுடன் நடந்தேறியது. இத்தேர்வில் யேர்மனி தென்பகுதியைச் சேர்ந்த மூன்று மாணவிகள் மிகத்திறமையாக தங்கள் ஆற்றுகையை வெளிப்படுத்தினர். இத்தேர்வில் நடன ஆசிரியர் பரதக்கலைவித்தகர் நாட்டிய கலாரத்தினம் திருமதி. மிதிலா விஜித் அவர்களின் மாணவி திருமதி. சர்மிளா தர்சன் அவர்களும் நாட்டிய முதுகலைமானி திருமதி. அற்புதராணி கிருபராஜ் அவர்களின் மா…

    • 0 replies
    • 677 views
  6. நடன ஆற்றுகை வெளிப்பாட்டுத் தேர்வு-2021- யேர்மனி 16.10.2021 Posted on September 22, 2021 by சமர்வீரன் 247 0 https://www.kuriyeedu.com/?p=358400

    • 4 replies
    • 650 views
  7. 10.10.2021 இன்று யேர்மனியில் அனைத்துலக தமிழ்க்கலை நிறுவகத்தால் தமிழ்க்கலைத் தேர்வு. 10.10.2021 இன்று யேர்மனியில் அனைத்துலக தமிழ்க்கலை நிறுவகத்தால் முன்சன், பிராங்பேர்ட், சுவேற்றா ஆகிய நகரங்களில் 2021 ஆண்டுக்கான தமிழ்க்கலைத் தேர்வு நடாத்தப்பட்டு வருகின்றது. 10.10.1987 அன்று வீரச்சாவடைந்த முதற்பெண் போராளி 2ஆம் லெப்டினன்ட் மாலதி அவர்களுக்கு சுடரேற்றி வணக்கம் செலுத்தப்பட்டது. https://www.kuriyeedu.com/?p=363158

    • 0 replies
    • 375 views
  8. திரிபு படுத்தப்பட்ட பாடநூல் தொடர்பில் மனித உரிமை செயல்பாட்டாளர் ம.கயன் அவர்களது கண்டனம் மற்றும் உண்ணாவிரதப் போராட்டம் பற்றிய அறிக்கையும் அனைவருக்கும் வணக்கம், நான் கயன் பேசுகிறேன், இது ஓர் அவசர வேண்டுகோள். உலகமெங்கும் பரந்து வாழும் ஈழத்தமிழர்களுக்கான கோரிக்கையாக இதை நான் முன்வைக்கிறேன். தமிழர்கள் புலம்பெயர்ந்து வாழும் நாடுகளில் தற்போது உருவாகியிருக்கும் தமிழ்க் கல்வி சார்ந்த பிரச்சனை தொடர்பாகவே உங்கள் முன் வந்திருக்கிறேன். நீண்டகாலமாக பிரான்சு நாட்டிலிருந்து உருவாக்கப்பட்டு செயற்படுவது தமிழ் கல்விப் பேரவை என்ற அமைப்பாகும். இந்த அமைப்பினுடைய பாடநூல்களே பிரான்சிலிருந்து அச்சடிக்கப்பட்டு உலகெங்கும் வழங்கப்பட்டு வந்தது. இந்தப்பாடநூலை வெள…

    • 0 replies
    • 654 views
  9. புலம்பெயர் தமிழ் சமூகம் தொடர்பில் இந்திய புலனாய்வுப் பிரிவு தமிழ் புலம்பெயர் சமூகம் சீனாவின் உதவியை நாடுவதற்கான முயற்சிகளில் ஈடுபட்டுள்ளதாக இந்திய புலனாய்வுப் பிரிவு தெரிவித்துள்ளது. இலங்கையில் சீனாவின் ஆதிக்கம் தொடர்பில் இந்திய புலனாய்வு பிரிவு தனது கரிசனையை வெளியிட்டுள்ளது. இலங்கையில் தமிழர்களின் நலன்களை இந்தியா உறுதிப்படுத்த தவறியதனால் இவ்வாறு சீனாவின் உதவியை, புலம்பெயர் தமிழர்கள் நாடும் எத்தனிப்புக்களை மேற்கொள்வதாகத் தெரிவித்துள்ளது. அண்மையில் லண்டனில் வைத்து இலங்கை புலம்பெயர் தமிழ் சமூகம் ஒன்று கூடி இந்த விவகாரம் குறித்து விரிவாக கலந்துரையாடல்களை நடாத்தியுள்ளதாகத் தெரிவிக்கப்படுகின்றது. இலங்கை தமிழர் விவகாரத்தில் இந்தியா காத்திரமான எந்தவொரு நட…

  10. பெலாரஸ் வழியே ஐரோப்பாவினுள் நுழைய இலங்கையர்களும் முயற்சி! எல்லையோரம் ஆணின் சடலம் மீட்பு October 12, 2021 பெலாரஸ் – லித்துவேனியா எல்லைப்பகுதி குடியேற்றவாசிகளுக்கு ஆபத்தானஇடமாக மாறியுள்ளது. பெலாரஸ் நாட்டினூடாக ஐரோப்பிய ஒன்றிய எல்லைக்குள் நுழைய முயல்வோர் இரு நாடுகளினதும் எல்லைக்காவல் படைகளால் மாறிமாறிப் பந்தாடப்படும் நிலை அங்கு காணப்படுகிறது. பதற்றம் நிறைந்த அந்த எல்லைப் பகுதியில் இருந்து இலங்கையர் ஒருவரது சடலம் மீட்கப்பட்டிருப்பதாக பெலாரஸ் ஊடகங்கள் தகவல் வெளியிட்டிருக்கின்றன.கடந்த 5ஆம் லித்துவேனியாவுடனானதேசிய எல்லையில் இருந்து 500 மீற்றர்கள் தொலைவில் கண்டு மீட்கப்பட்ட அந்தச் சடலம் இலங்கையைச் சேர்ந்த 29வயதுடைய ஆண் ஒருவருடையது என்பதை சடலத்துடன் …

  11. யேர்மன் தலைநகரில் உணர்வுபூர்வமாக நடைபெற்ற 2-ம் லெப். மாலதியின் 34 ஆம் ஆண்டு நினைவு நிகழ்வு யேர்மன் தலைநகர் பேர்லினில் 2ஆம் லெப்டினன் மாலதியின் 34 ஆம் ஆண்டு நினைவு நிகழ்வும் தமிழீழப் பெண்கள் எழுச்சி நாள் நிகழ்வும் உணர்வுபூர்வமாக இன்றைய நாள் நடைபெற்றன. தமிழ் பெண்கள் அமைப்பின் ஏற்பாட்டில் இடம் பெற்ற இந்நிகழ்வில் 2ஆம் லெப்டினன் மாலதி அவர்களின் திருவுருவப் படத்திற்கு சுடர் ஏற்றி மலர் தூவி அகவணக்கம் செலுத்தப்பட்டது. அதை தொடர்ந்து 2ஆம் லெப்டினன் மாலதி அவர்களின் வரலாற்றுப் பதிவுகளை நினைவுபடுத்தியதோடு , இளையோர்களால் 2ஆம் லெப்டினன் மாலதி அவர்களின் நினைவாக உருவாக்கப்பட்ட பாடலும் ஒலிபரப்பப்பட்டது. 2ஆம் லெப்டினன் மாலதி அவர்களின் தியாகம் பற்றியும் தமிழீழ விடுதலைப் …

    • 0 replies
    • 496 views
  12. முள்ளியவளையினை சேர்ந்த இளைஞன் ஜெர்மனில் உயிரிழப்பு! Posted on October 7, 2021 by தென்னவள் 62 0 முல்லைத்தீவு முள்ளியவளை 03 ஆம் வட்டாரத்தினை சேர்ந்த இளைஞன் ஒருவர் ஜெர்மனியில் கொரோனா தொற்றுக்கு உள்ளான நிலையில் சிகிச்சை பலனின்றி உயிரிழந்துள்ளார். தாய்நாட்டின் அசாதாரண சூழ்நிலை காரணமாக புலம்பெயர்ந்து ஜெர்மனியில் குடியுரிமை பெற்று வாழ்ந்து வந்த 40 அகவையுடை செல்வராசா செந்தீபன் (செந்தில்) என்று அழைக்கப்படும் இளைஞன் கொரோனா தொற்றுக்கு இலக்காகியுள்ளார். ஒரு வாரத்திற்கு மேலாக கொரோனா தொற்று காரணமாக பாதிக்கப்பட்ட நிலையில் சிகிச்சைக்காக மருத்துவமனை அனுமதிக்கப்பட்டும் சிகிச்சை பலனின்றி 06.10.21 இன்று உயிரிழந்துள்ளார்.https://www.kuriyeedu.co…

  13. புலம் பெயர்ந்தவர்களின் பிள்ளைகள் சில சமயம் சொல்லும் வாக்கியம் இது.எனக்கு தமிழ் பிடிக்காது. இது ஏன் அப்படி? இது ஒரு தமிழ் பிரச்சனை இல்லை. எல்லா இனத்து சில பல பிள்ளைகளும் இப்படித்தான், தங்கள் மொழி பிடிக்கவில்லை என்று சொல்லுகிறார்கள். இது ஒரு உளவியல் விடையமாக இருந்தாலும்,இதை பற்றி எந்த ஆராச்சியும் இதுவரை செய்யப்படவும் இல்லை ஒரு விரிவான கட்டுரைகளை கூகளிலும் தேடவும் முடியவில்லை. ஆரம்ப பள்ளியில் பிள்ளைகளின் நிலை அதாவது மன நிலை என்ன? அவர்கள் வேறு நிறமுடையவர்கள் என்னும் வேறுபாட்டை முதல் முதலில் உணர்கிறார்கள். தங்கள் மொழி வேறு என்பதையும் உணர ஆரம்பிக்கிறார்கள். ஆக அவர்கள் தாங்கள் இன்நாட்டவரை விட வேறுப்பட்டவர்கள் ,நிறத்தால் மொழியால் என்பதை உணரும்போது…

    • 1 reply
    • 1.1k views
  14. சுவிஸில் தொடருந்தில் வீழ்ந்து யாழ். மாதகல் இளைஞன் பலி! AdminOctober 3, 2021 சுவிட்சர்லாந்து நாட்டில் தொடருந்தில் வீழ்ந்து பல்கலைக்கழக மாணவன் ஒருவர் பரிதாபமாக உயிரிழந்த சம்பவம் புலம் பெயர் தமிழர்களிடையே பெரும் துயரத்தை ஏற்படுத்தியுள்ளது . கடந்த வெள்ளிக்கிழமை தேவைநிமிர்த்தம் வெளியில் சென்ற குறித்த மாணவன் தொடருந்தில் வீழ்ந்து உயிரிழந்திருந்ததாக சுவிஸ் தகவல்கள் தெரிவிக்கின்றன. இந்நிலையில் தொடருந்து பாதையை கடந்த சமயம் விபத்து இடம் பெற்றதா அல்லது தற்கொலையா என்ற கோணத்தில் அந் நாட்டு காவல்துறையினர் விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றதாகவும் கூறப்படுகின்றது. யாழ்ப்பாணம் மாதகல் பகுதியைச் சொந்த இடமாகக் கொண்ட தற்போது Meilen மாநிலத்தில் வசித்து வரும் சற்குணராஜா பவீந…

  15. எனக்கு தாவரங்கள் மேல் அதீத நாட்டம் என்பது உங்கள் எல்லாருக்கும் தெரியும் தானே. 2019 இல் கனடாவிலிருக்கும் என் ஒன்றுவிட்ட அண்ணா பாவல், புடோல் பந்தலில் கீழே நின்று படம் எடுத்துப் போட எனக்கும் என வளவில் இரண்டும் நட்டுக் கோடியில் படர விடவேணும் என்ற ஆசை எழுந்தது. ஊரில் உள்ள கணவனின் தங்கையிடம் உள்ள விதைகள் எல்லாம் அனுப்பும்படி கூற யாவரும் 1200 ரூபா கட்டி ஒரு சிறிய பார்சலை அனுப்பி வைக்க கோவிட் காலத்தில் என் கெடுகாலமும் சேர கஷ்டம்சில் எல்லாவற்றையும் எடுத்துவிட்டு அனுமதி இல்லை என்ற விபரத்துடன் கீரை விதைகள் மட்டும் வந்து சேர்ந்தது. உடனே கனடாவுக்கு தொலைபேசி எடுத்து எனக்குக் கொஞ்ச விதைகள் அனுப்புங்கோ என்றதுக்கு நான் எப்படி அனுப்புறது. விதைகள் அனுப்பக் கூடாதே என்று அண்ணா பின்வாங்க, ஒர…

  16. கம்ஷாஜினி குணரத்னம் நோர்வே பாராளுமன்றத்திற்கு தெரிவு! இலங்கை வம்சாவளியான கம்ஷாஜினி குணரத்னம் நோர்வேயின் பொதுத்தேர்தலில் வெற்றிபெற்று பாராளுமன்றத்திற்கு தெரிவாகியுள்ளார். நோர்வேயின் தொழிற்கட்சி சார்பில் அவர் போட்டியிட்டார். அவர் 2015 ஆம் ஆண்டில் ஒஸ்லோவின் பிரதி மேயராக செயற்பட்டிருந்தார். மூன்று வயதில் பெற்றோருடன் நோர்வேயில் குடியேறிய கம்ஸி, தமிழ் இளையோர் அமைப்பின் ஊடாக அரசியலில் பிரவேசித்துள்ளார். பின்னர் தொழிற்கட்சியின் ஒஸ்லோ இளைஞரணியில் இணைந்த அவர், அதன் தலைவியாகவும் பதவி வகித்துள்ளார். 19 வயதில் (2007) ஒஸ்லோ மாநகர சபையின் பிரதிநிதியாகப் பெர…

    • 28 replies
    • 2.9k views
  17. நாமும் இன்று நாடோடிகளே. அது ஒரு புறமிருக்க அண்மையில் பாடசாலையில் ஏற்பட்ட ஒரு சம்பவத்தினால் இங்கு இங்கிலாந்தில் உள்ள, நாடோடிகளைப் பற்றிய அனுபவத்தை சிலரோடு பகிர வேண்டியிருந்தது. அதையே இங்கு பகிர்வது அதன் ஒரு பகுதியாகிறது. எனது வகுப்பறையில் இந்தக் கட்டுரை சொல்லப்போகும் இரு வகை நாடோடிக் குழந்தைகளும் இருந்திருக்கிறார்கள். அவர்களை எல்லாக் குழந்தைகளையும் வரவேற்பது போலவே வரவேற்று, கல்வி கற்பித்திருக்கிறேன். மற்றைய குழந்தைகள் போலல்லாது இவர்களுடைய வாழ்க்கைப் பின்னனி மிகவும் வித்தியாசமானது. இதன் காரணமாக இவர்களுடைய மனங்களுக்கு வலுவூட்டி, தைரியம் கொடுத்து மற்றைய குழந்தைகளோடு பழகவும், தமது வாழ்க்கை முறை பற்றி பாடசாலையில் மற்றவர்களுக்கு எடுத்துக் கூறி தம் அடையாளத்தை நல…

  18. https://tgte.tv/watch/lt-col-thileepan-039-s-memorial-live-event-live-now_zYxS51xSz5eCwvp.html

  19. பாரிஸ் லாச்சப்பலில் தமிழ்த் தேசியத்தை ஊட்டும் உணவகம்! AdminSeptember 25, 2021 பிரான்சு பாரிஸ் லாச்சப்பலில் தமிழ்த் தேசிய உணர்வையும் உணவோடு ஊட்டும் அதிசய உணவகம் ஒன்று ஆரம்பமாகியுள்ளது. தமிழீழத் தேசியத் தலைவரின் அழகிய வர்ணப்படம் வருபவர்களை வரவேற்பதுடன், உள்ளே தமிழீழத் தேசியத் தலைவரின் இல்லம்,புதல்வன் பாலச்சந்தின், முதல் மாவீரர் சங்கர், தியாகி அன்னை பூபதி, தியாக தீபம் திலீபன்,முதல் பெண் மாவீரர் மாலதி, முதல் கரும்புலி மில்லர்,கடற் கரும்புலி அங்கையற்கண்ணி, தேசத்தின் குரல் அன்ரன் பாலசிங்கம் உள்ளிட்டவர்களின் ஓவியங்கள் காட்சிப்படுத்தப்பட்டுள்ளதுடன், சினிமாப் பாடல்களை முற்றாகத் தவிர்த்து தமிழீழத் தாயகப் பாடல்கள் தொடர்ந்து ஒலித்துக் கொண்டேயிருக்கும். அத்தோடு மிகவும…

  20. பிரித்தானியா கடற்கரையில் சடலமாக மீட்கப்பட்ட இலங்கையை பூர்விகமாகக் கொண்ட பெண்! நடந்தது என்ன? வெளியான முழு தகவல் பிரித்தானியாவில் கடலோர காவல்படையால் கண்டுபிடிக்கப்ப இளம் பெண் மருத்துவர் இலங்கையைச் சேர்ந்தவர் என்பது தெரியவந்துள்ளது. பிரித்தானியாவின் இங்கிலாந்தில் இருக்கும் Margate கடற்கரையில் கடந்த 11-ஆம் திகதி பெண் ஒருவரின் சடலம் கடலோர காவல்படையினரால் கண்டுபிடிக்கப்பட்டது. இந்நிலையில், தற்போது உயிரிழந்த அந்த பெண் குறித்த தகவல்கள் வெளியாகியுள்ளது. அதில் அவர் பெயர் Thirushika Sathialingam என்பதும் 26 வயது மதிக்கத்தக்க இவர் சம்பவ தினத்தன்று தன் பெண் தோழிகளுடன் குறித்த கடற்கரைக்கு சென்றுள்ளார். ஹோட்டலுக்கு தோழிகள் திரும்பிய நிலையில், அவர் காணவில்லை. அதன் பின…

  21. நினைவழியா நினைவுகள் என் நினைவில் மாவீரர்கள் – பிரித்தானியாவில் நூல் வெளியீட்டு September 21, 2021 நிலாதமிழ் அவர்களின் படைப்பான மாவீரர் வரலாற்றுப் பதிவாக நினைவழியா நினைவுகள்-என் நினைவில் மாவீரர்கள்-நூல் வெளியீடு விழா 19.09.21 அன்று மாலை லண்டனில் மிகவும் சிறப்பாக இடம்பெற்றது. இந்நிகழ்வில் இலண்டனின் பல முக்கிய தமிழமைப்புகளின் பிரதிநிதிகளும் போராளி மாவீரர் உறவுகளும் நண்பர்களும் கலந்து சிறப்பித்திருந்தனர். தமிழ் அமைப்புக்கள் சார் தமிழ்த்தேசியச் செயற்பாட்டாளர்களால் நிகழ்சிகள் ஏற்பாடு செய்யப்பட்டிருந்தன. திருமதி.சந்திரிக்கா அவர்களின் தலைமையில் நடைபெற்ற இந்நிகழ்வில் பொதுச்சுடரினை மாவீரரின் சகோதரர் திரு. ரேணுதாஸ் இராமநாதன் அவர்கள் ஏற்றி வைத்ததைத் தொடர…

  22. ஆர்யா சம்பந்தப்பட வில்லை. போலீஸ் ஆணையர் தெரிவிப்பு. ஜேர்மன் தமிழ் பெண் விவகாரத்தில், இருவர் கைதாகிய நிலையில், முதலாவது, இரண்டாவது குற்றவாளிகளாக ஆர்யாவும் அவரது தாயாருமுள்ளனர். அவர்கள் விரைவில் கைதாவர்கள் என்று ஜேர்மன் பெண்ணின் சார்பில், அமைந்த வழக்கறிஞர் சொல்லி இருந்தமை குழப்பத்தினை உண்டாக்கி இருந்தது. இந்த நிலையில் பத்திரிகையாளரை சந்தித்த சென்னை போலீஸ் ஆணையர், ஜேர்மன் பெண்ணின் புகார் அவர்கள் மேலே அளிக்கப்பட்டிருந்தது என்ற அடிப்படையில் அவர்கள் பெயர் ஆரம்பத்தில் இருந்தது உண்மை. அந்த வழக்கறிஞர் அதே புகாரின் அடிப்படையிலேயே சென்னை உயர் நீதிமன்றத்தினையும், நாடி இருந்தனர். உயர் நீதிமன்றமும் விசாரிக்க உத்தரவு இட்டிருந்தது. எமது விசாரிப்பின் முடிவில்…

  23. ஆபத்தின் கரங்களில் ஆதி இனம் September 15, 2021 — அகரன் — வழமைபோல மனைவியிடமிருந்து நச்சரிப்பு வந்துவிட்டிருந்தது. ‘’காடுபோல முடி வளர்ந்துவிட்டது. வெட்டுங்கள். பயமாக இருக்கிறது’’ என்று. முடி வெட்டுவதில் எனக்கு அக்கறை இருப்பதில்லை. குறைந்த விலையில் முடி வெட்டும் கடைகளில் காத்திருக்கும் நேரத்தில், ஜெயமோகனின் வெண்முரசின் சில பகுதிகளை படித்துவிடலாம் அல்லது பிரஞ்சு வார்த்தைகளை மகளிடம் கேட்டுபடிக்கலாம், வீட்டுக்குள் வளரும் மரக்கன்றுகளுக்கு தண்ணீர் ஊற்றலாம். ஆனால் மனைவி தன்னை பயமுறுத்தவே இப்படி இருப்பதாக உறுதியாக எண்ணுவாள். அவளின் கடுமையான கண்டனக்குரல், இறுதிப் போராட்டத்தின்பின் முடி திருத்து நிலையத்துக்கு சென்றேன். அ.முத்துலிங்கம் எழுதிய ‘சுவரோடு பே…

  24. நெதர்லாந்து பணியிட விபத்தில் சிக்குண்ட ஈழத் தமிழர் உயிரிழப்பு! AdminSeptember 10, 2021 நெதர்லாந்தின் தொழிற்சாலை ஒன்றில் இடம்பெற்ற விபத்தில் படுகாயமடைந்த ஈழத்தமிழர் ஒருவர் உயிரிழந்துள்ளார். நாட்டின் வடக்கே Breezand பிரதேசத்தில் Balgweg என்னும் இடத்தில் பூந்தோட்ட தொழிற்சாலை ஒன்றில் (bulb company) கடந்த ஓகஸ்ட் 30 ஆம் திகதி காலை விபத்து இடம்பெற்றது என்ற தகவலை அந்நாட்டு ஊடகங்கள் வெளியிட்டிருக்கின்றன. யாழ்ப்பாணம் இருபாலையைச் சொந்த இடமாகக் கொண்டவரும் நெதர்லாந்தில் நீண்டகாலம் வசித்தவருமான தெய்வேந்திரம் ரவீந்திரன் (வயது54) என்ற இரண்டு பிள்ளைகளது தந்தையே உயிரிழந்தவராவார். பூந்தோட்ட மண்ணை நிரப்பும் பாரிய கொள்கலன் ஒன்றில் இருந்து கொட்டப்பட்ட மண்ணில் சிக்குண்டு…

  25. அனுக் அருட்பிரகாசம் எனும் இளைஞரால் படைக்கப்பட்டுள்ள 'A Passage North' எனும் நூலாக்கம் booker பரிசுக்கான 13 பேர் கொண்ட 'Long List' இல் உள்ளடக்கப்பட்டிருந்த நிலையில் இன்று செப்டம்பர் 14 அன்று பரிசினை தீர்மானிக்கும் குழுவினால் 6 பேர் கொண்ட 'Short List' லில் உள்ளடக்கி அறிவிக்கப்பட்டுள்ளது. பரிசினை தீர்மானிக்கும் குழு வெற்றியாளரை, நவம்பர் 2ம் திகதி அன்றும் அறிவிக்கும். long list மற்றும் short list ல் வருவதே மிகப்பெரிய விடயம். இந்நிலையில் அவர் வெற்றி அடைந்தால், தமிழர்கள் எமக்கே பெருமை. அருட்பிரகாசம் வெற்றி பெற வாழ்த்துவோம்.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Account

Navigation

Search

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.