வாழும் புலம்
புலம்பெயர் நாடுகள் | தமிழர் வாழ்வு | அனுபவங்கள் | அன்றாட நிகழ்வுகள்
வாழும் புலம் பகுதியில் புலம்பெயர் நாடுகள், தமிழர் வாழ்வு, அனுபவங்கள், அன்றாட நிகழ்வுகள் சம்பந்தமான பதிவுகள் இணைக்கப்படலாம்.
புலம்பெயர் நாடுகளில் வசிக்கும் தமிழர்கள் பற்றியதும் புலம்பெயர் தமிழர்களுக்கு அவசியமானதுமான செய்திகள், தகவல்கள் மாத்திரம் இணைக்கப்படல் வேண்டும்.
5792 topics in this forum
-
பாகம் ஒன்று வீட்டு வன்முறைகள் பலவிதமாக ஒரு குடும்பத்தில் அல்லது ஒரு உறவு முறைமைக்குள் ஏற்படுகிறது. இவை பாலியல் வன்முறை உள்ப்பட ஒருவரைத் தம் கட்டுப்பாட்டில் வைத்திருத்தல், ஒருவரை கட்டாயப்படுத்துதல், அவரை அச்சுறுத்துதல், வெல்வேறு விதங்களாக இழிவு படுத்தல் மற்றும் பல விதமான வன்முறை நடத்தைகளின் ஒரு நிகழ்வாகவோ அல்லது இவை அனைத்தையும் உள்ளிட்ட ஒரு கூட்டுச் சம்பவங்களின் தொகுப்பாகவோ பார்க்கலாம். அநேகமான சந்தர்ப்பங்களில் இப்படியான வன்முறைச் சம்பவங்கள் ஒரு கணவன் மனைவிக்கிடையேயோ அல்லது முன்னாள் கணவன் மனைவிக்கிடையிலோ நடைபெற்றாலும் கூட இது ஒரு குடும்ப உறுப்பினர் அல்லது ஒரு உறவில் இருக்கும் ஒருவரால் அக்குடும்ப அங்கத்தவர் அல்லது உறவு முறையில் உள்ள இன்னொருவர் மீது மேற்கொள்ளப்பட…
-
- 1 reply
- 1.6k views
-
-
11 ஆண்டுகளாக ஈழத் தமிழர்கள் கட்டமைக்கப்பட்ட இனவழிப்பினை சந்தித்துக் கொண்டிருக்கின்றனர் – பிரான்ஸ் தமிழர்களின் பண்பாட்டு அமைப்பு 11 ஆண்டுகளாக ஈழத் தமிழர்கள் கட்டமைக்கப்பட்ட இனவழிப்பினை சந்தித்துக் கொண்டிருக்கின்றனர் என்றும் இராணுவ ஆக்கிரமிப்பால் புதிய இலங்கை அரசும் தொடர்ந்து தமிழர்களின் வாழ்வை அழிக்கிறது என பிரான்ஸ் தமிழர்களின் பண்பாட்டு அமைப்பு தெரிவித்துள்ளது.ஜெனீவாவில் செப்டம்பர் 14ஆம் திகதி முதல் நடைபெறும் ஐ.நா மனித உரிமைகள் சபையின் 45 ஆவது கூட்டத்தொடரில் குறித்த அமைப்பின் சார்பாக உரையாற்றி அர்த்னா பிரபாகரன் இந்த விடயத்தை இதனைத் தெரிவித்தார்.வலிந்து காணாமல் ஆக்கப்பட்டோரின் உறவுகள் முன்னெடுத்த நீதிக்கான போராட்டத்தை இராணுவத்தினர் மற்றும் பொலிஸார் தடுத்தமையானது மனித உ…
-
- 0 replies
- 548 views
-
-
குரோய்டன் பொலிஸ் நிலையத்தில் ஒரு பொலிஸ் அதிகாரி சுட்டுக் கொலை! தெற்கு லண்டனில் உள்ள குரோய்டன் பொலிஸ் நிலையத்தில், ஒரு பொலிஸ் அதிகாரி சுட்டுக் கொல்லப்பட்டார். விண்ட்மில் லேனில் உள்ள பொலிஸ் மையத்தில் தடுத்து வைக்கப்பட்டிருந்த ஒருவரால் அந்த அதிகாரி சுட்டுக் கொல்லப்பட்டுள்ளார். 02:15 பி.எஸ்.டி.யில் சம்பவத்திற்குப் பிறகு வந்த துணை மருத்துவர்களால் அந்த அதிகாரி சம்பவ இடத்தில் சிகிச்சை பெற்றார். பின்னர் அவர் துப்பாக்கிச் சூட்டுக் காயங்களுடன் மருத்துவமனைக்கு கொண்டுச் செல்லப்பட்ட நிலையில் உயிரிழந்துள்ளார். சம்பவ இடத்திலேயே 23வயது இளைஞரை அதிகாரிகள் தடுத்து வைத்தனர். அவரும் துப்பாக்கிச் சூட்டுக் காயத்துடன் அவர் மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டு ஆபத்தான ந…
-
- 23 replies
- 2.3k views
-
-
உலகத் தமிழ் பாராளுமன்றம் உதயமானது! உலகத் தமிழ் வம்சாவளி அமைப்பு துறை சார்ந்த வல்லுநர்களைக் கொண்டு ‘உலகத் தமிழ் பாராளுமன்றம்’ என்ற ஓர் அமைப்பை உருவாக்கியுள்ளது. இதில், இந்தியா, இலங்கை, மலேசியா, சிங்கப்பூர், மொரிஷியஸ், கனடா, பப்புவா நியூ கினி, கயானா போன்ற எட்டு நாடுகளில் உள்ள தமிழ் நாடாளுமன்ற உறுப்பினர்கள், செனட்டர்கள் என 147 பேரும் மத்திய அமைச்சர்களாக 14 பேரும் தற்போது உள்ளனர். உலகில் அனைத்து நாடுகளிலும் தமிழ் இளைஞர்கள் அரசியலில் ஈடுபடுதல், அரசியல் மூலம் தமிழர்கள் அரசாங்கத்தின் சலுகைகளைப் பெறுதல், பல்வேறு நாடுகளில் உள்ள பொதுப் பிரச்சினைகளை அந்தந்த நாட்டு பாராளுமன்றத்தில் குரல் கொடுத்து தீர்வு காணுதல் போன்றன இவ்வமைப்பின் நோக்கமாகும். அரசியலில் பல்வேறு கொள…
-
- 8 replies
- 2.2k views
-
-
எம்மின விடுதலைக்காய் பசித்திருந்தவனை நினைந்து, நாமும் அரைநாள் பசித்திருப்போம்! – சீமான் பேரழைப்பு உலகெங்கும் வாழும் தாய்த்தமிழ் உறவுகளுக்கு, வணக்கம்! ஈழ நிலத்தில் நிகழ்த்தப்பட்ட தமிழர் இனப்படுகொலைக்கு எதிராகவும், பன்னாட்டுச் சமூகத்திடம் தமிழ்த்தேசிய இனத்திற்கு இழைக்கப்பட்ட அநீதியையும், தமிழர்கள் பக்கம் நிற்கும் தார்மீக நியாயத்தையும் உணர்த்தும் பொருட்டும் இந்திய வல்லாதிக்கத்தின் ஆழ்ந்த அமைதியைக் கலைக்க 12 நாட்கள் நீர்கூட அருந்தாது பட்டினிப்போராட்டத்தை முன்னெடுத்து உயிர்நீத்த ஈகைப்பேரொளி நம்முயிர் அண்ணன் லெப்டினட் கேணல் திலீபன் அவர்களது 33வது நினைவு நாளை அனுசரித்துப் போற்றுவதற்குச் சிங்களப் பேரினவாத அரசு ஈழ நிலம் முழுமைக்கும் தடை விதித்திருக்கிறது. காற்றோடு கல…
-
- 0 replies
- 711 views
-
-
ஜெனிவா ஐ.நா முன்றலில் நடைபெற்ற கவனயீர்ப்புப் போராட்டம் தமிழினப்படுகொலைக்கு நீதி கேட்டு அனைத்துலக சுயாதீன விசாரணையை வலியுறுத்தி சுவிஸ் ஜெனிவா நகரத்தில் மாபெரும் போராட்டம் ஒன்று இன்று (21) இடம்பெற்றது. பின்வரும் கோரிக்கைகளை வலியுறுத்தியே மாபெரும் போராட்டம் ஒன்று இடம்பெற்றது. 1.பல தசாப்தங்களாக,இலங்கைத்தீவில் சிங்கள அரசினால் தொடர்ந்து நடத்தப்படும் தமிழினப்படுகொலையை ஆராய்ந்து, ஐக்கிய நாடுகள் சபையின் செயலாளர் நாயகம் பங் கீ மூன் அவர்களால் நியமிக்கப்பட்ட நிபுணர்குழுவினால் வெளியிடப்பட்ட அறிக்கைக்கு நீதி கிடைக்கும் பொருட்டு அனைத்துலக குமூகம் அனைத்துலக நீதிமன்றில் விசாரணையை நடாத்தி தமிழ்மக்களுகக்கான நீதியைப் பெற்றுக்கொடுக்க வேண்டும். 2.ஈழத்தமிழ்த…
-
- 4 replies
- 946 views
-
-
-
இறையாண்மை விதிவிலக்களிப்பு சட்டத்தை நீக்குக ! சிறிலங்கா தேசத்தை கனடா நீதிமன்றத்தில் நிறுத்துவோம் !! - நாடுகடந்த தமிழீழ அரசாங்கம் கோரிக்கை ! இலங்கைத்தீவில் சிங்கள ஆக்கிரமிப்பாளர்களால் வலிந்து காணாமலாக்கப்பட்ட தமிழ்உறவுகளுக்கு நீதிவேண்டி நெடுநடைப் பயணம் மேற்கொண்டிருந்த டேவிட் தோமஸ், மகாஜெயம் மகாலிங்கம், விஜிதரன் வரதராஜா, யோகேந்திரன் வைசீகமகபதி, யோகேசுவரன் நடேசு, குலேந்திரசிகாமணி வேலுச்சாமி, விஜயகுமார் நமசிவாயகம் ஆகியோரது இனஉணர்வுக்கும், கடின உழைப்புக்கும், நெஞ்சுரத்துக்கும் நாடுகடந்த தமிழீழ அரசாங்கம் தனது தலைசாய்த்து மரியாதை வணகத்தினை தெரிவித்துக்க கொள்கின்றது பிரதமர் வி.உருத்திரகுமாரன் அவர்கள் தனது பாராட்டுச் செய்தியில் தெரிவித்துள்ளார். …
-
- 0 replies
- 551 views
- 1 follower
-
-
காணாமல்போனவர்கள் விவகாரத்தில் கனடா பிரதமர் தலையிடவேண்டும்- தமிழ் செயற்பாட்டாளர்கள் வேண்டுகோள் Rajeevan ArasaratnamSeptember 16, 2020 இலங்கையில் காணாமல்போனவர்கள் விவகாரத்தில் கனடா பிரதமர் ஜஸ்டின் ட்ரூடோ தலையிடவேண்டும் என கனடாவில் உள்ள தமிழ் செயற்பாட்டாளர்கள் வேண்டுகோள் விடுத்துள்ளனர். இறைமையுள்ள நாடு அல்லது அதன் தலைவருக்கு எதிராக இன்னொரு நாட்டில் நீதிமன்ற நடவடிக்கையை எடுப்பதை தடுக்கும் விடுபாட்டுரிமையை கனடா பிரதமர் நீக்கவேண்டும் என தமிழ் செயற்பாட்டாளர்கள் வேண்டுகோள் விடுத்துள்ளனர். அவ்வாறான நடவடிக்கை இலங்கையில் காணாமல்போனவர்களின் குடும்பத்தவர்கள் தங்கள் குடும்பத்தவர்களுக்காக நீதியை கோருவதற்கு உதவும் என ஒட்டாவாவை சேர்ந்த தமிழ் செயற்பாட்டாளர் குமணண் குணரட்ணம் …
-
- 0 replies
- 477 views
-
-
-
2020 காணாமல் ஆக்கப்பட்டவர்கள் தினம் கனடா பேரணி நிகழ்வு
-
- 3 replies
- 875 views
-
-
இரண்டு இளம் பெட்டையளோட பாலியல் சேட்டை விட்டு மாட்டிய பிரிட்டிஷ் பழமைவாத கட்சியின் முன்னாள் பாராளுமனற உறுப்பினர் இரண்டு வருஷம் உள்ள போனார். தீர்ப்பு அறிவிக்கப்பட்ட பின்னர், அவர் சிறைக்கு கொண்டு செல்லப்பட , வெளியே வந்த மனைவி, 25 வருட மணவாழ்வினை முடித்துக் கொள்வதாக அறிவித்தார். அவரது 20 வயது மகளும், தனக்கும், தகப்பனுக்கும், இனி ஓட்டும் இல்லை, உறவும் இல்லை என்று அறிவித்தார். முதலாவது பெண்ணை, தனது வீட்டினுள், நான் 'குறும்புக்காரன்' என்று சொல்லியவாறே, திரத்தி, திரத்தி , கட்டி அணைத்தார் எனவும், பத்து வருடத்துக்கு பின்னர், பாராளுமன்றில், அவரது உதவியாளரை 'கை' யை பிடித்து அழுத்தினார் எனவும் குற்றம் சுமத்தப்பட்டிருந்தது. தான் சிக்கலாம் என்று, த…
-
- 2 replies
- 874 views
-
-
-
- 0 replies
- 990 views
-
-
அவுஸ்திரேலியா விக்டோரியாவில் ஆற்றில் மூழ்கி தமிழ் இளைஞர் பலி BharatiSeptember 13, 2020 விக்டோரியாவின் Mildura பகுதியில் Murray ஆற்றில் மூழ்கி தமிழ் இளைஞர் ஒருவர் பலியானதாக தெரிவிக்கப்படுகிறது. நேற்றுமுன்தினம் தனது நண்பர்களுடன் Murray ஆற்றுக்குச் சென்ற இவ்விளைஞர் நீச்சலில் ஈடுபட்டபோது காணாமல்போனதாக அறிவிக்கப்பட்டது. இவரைத் தேடும்பணி வெள்ளி பிற்பகல் முதல் மேற்கொள்ளப்பட்டுவந்தநிலையில் குறித்த இளைஞரின் சடலம் Murray ஆற்றிலிருந்து மீட்கப்பட்டதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர். மெல்பேர்னில் கல்விகற்றுவரும் இலங்கையைச் சேர்ந்த21 வயது தமிழ் இளைஞரே இவ்வாறு மரணமடைந்ததாகவும், தொழில்நிமித்தம் தனது நண்பர்களோடு அவர் Mildura-வுக்கு சென்றிருந்ததாகவும் கூறப்படு…
-
- 0 replies
- 688 views
-
-
சிறுமிகளுக்கு பாலியல் அச்சுறுத்தல்; அவுஸில் இலங்கையர் கைது! சிறுமிகளை பாலியல் செயற்பாடுகளுக்கு தூண்டிய குற்றச்சாட்டில் அவுஸ்ரேலியா – மெல்போர்ன் நகரில் வசித்து வந்த 23 வயதுடைய இலங்கையர் கைது செய்யப்பட்டுள்ளார். குறித்த நபர் 12 முதல் 14 வயதுக்குட்பட்ட இளம் பெண்களிடம் ஆபாச ஒளிப்படங்களை அனுப்புமாறு வற்புறுத்தியதாகவும் அவர்களை அதற்காக அச்சுறுத்தியதாகவும் குற்றம் சுமத்தப்பட்டுள்ளது என சர்வதேச ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளது. குறித்த சந்தேகநபர் தொடர்பாக அந்நாட்டு புலனாய்வாளர்களுக்கு இரகசிய தகவல் வழங்கப்பட்டுள்ளதனைத் தொடர்ந்து புலனாய்வாளர்கள் அவரை பின்தொடர்ந்ததாகவும், மெல்போர்ன் புறநகர்ப் பகுதியான பர்வூட்டில் சந்தேகநபர் தொடர்பாக கிடைத்த தகவலின் அடிப்படைய…
-
- 0 replies
- 625 views
-
-
இலங்கைத் தீவில் தமிழர் உரிமைகள் மறுக்கப்பட்டதை உரத்துக்கூற தமிழர் நாம் ஒன்றிணைவோம் பண்டைய தமிழர் தாயகம் ஈழம். இன்று சிங்களவர்களுக்கான சிறீலங்காவாக மாற்றப்பட்டுள்ளது. சிறீலங்காவை ஆட்சி புரிந்த, புரியும் சிங்களக் கட்சிகளால் அமுல்ப்படுத்தப்பட்ட சட்டங்களும், திட்டங்களும் அவற்றை நடைமுறைப்படுத்துவதற்கான சிங்கள அரச பயங்கரவாதமும் இலங்கைத் தீவில் தமிழ்த் தேசிய இனத்தின் வாழ்வு நிலைகளையும், வாழ்வு இயக்கங்களையும் மாற்றியமைத்தது. தமிழர்களின் வாழ்வுக்காக உருவாக்கப்பட்ட ஒப்பந்தங்களும் தீர்வுகளும் கிழிக்கப்பட்டதும், அழிக்கப்பட்டதும் அவை நடைமுறைப்படுத்தப்படாமல், போனைதே சிறீலங்காவில் மறைக்கப்பட்ட வரலாறாகியது. சிங்களக் கட்சிகளின் அரச பயங்கரவாதத்திற்கும் இணைந்த ஆளுக…
-
- 0 replies
- 623 views
-
-
என் வீட்டிலிருந்து கொஞ்சத் தூரம் சென்றால் அந்தப் பெருவெளி கண்ணுக்கு எட்டிய தூரம்வரை பரந்து விரிந்திருந்தது. அந்த வெளியின் நடுவே புற்களைத் தவிர வேறு எதுவும் இல்லை. ஆனால் சுற்றிவர பெரு மரங்கள் கிளைபரப்பி கோடையில் இலைகள் நிறைந்துபோய் பார்ப்பதற்கு மிகவும் ரம்மியமான காட்சி. காலையில் நடப்பது எனக்கு மட்டுமல்ல பலருக்கும் விரும்பியோ விரும்பாமலோ செய்யவேண்டிய ஒரு கடனாக மாறியிருந்தது. எனக்கு மற்றவர்களுடன் சேர்ந்து நடப்பதும் சரிவராது. ஏனெனில் எப்படியும் இருவர் அமைதியாக நடக்கவே முடியாது. ஏதாவது ஒரு கதையில் ஆரம்பித்து மற்றொன்றில் தாவித் தொடரும். நான் இரு கைகளையும் அரைவாசி தூக்கியபடி விசுக் விசுக்கென நடக்கத் தொடங்கி இருப்பது ஆண்டுகளாவது ஆகியிருக்கும். எப்போதுமே மற்றவர்களுக…
-
- 28 replies
- 4k views
-
-
கனடா ஒன்ராரியோ வீதி விபத்தில் இரு தமிழர்கள் பலி; ஒருவர் கடந்த வாரம் திருமணமானவர் September 5, 2020 கனடா ஒன்ராரியோவில் புளுமவூன்டன் எனும் இடத்தில் நேற்று முன்தினம் வியாழக்கிழமை இரவு 11 மணியளவில் (Grey Road 19 Near Craigmore Crescent) Audi Sedan கார் வீதியை விட்டு விலகி மரத்தில் மோதியதில் இரண்டு தமிழர்கள் ஸ்தலத்திலேயே கொல்லப்பட்டனர். படுகாயமடைந்த ஒருவர் ரொரன்ரோ மருத்துவமனைக்கு மருத்துவ ஹெலிக்கொப்டரில் எடுத்துச்செல்லப்பட்டதாக ஒன்ராரியோ மாகாண பொலிஸாரின் செய்திக்குறிப்புகள் தெரிவிக்கின்றன. விபத்தில் பரிதாபமாகக் கொல்லப்பட்ட ஒருவர் தனபாலசிங்கம் கஜன் (29) கடந்த சனிக்கிழமை திருமணம் செய்தவர் என்ற துயரமான செய்தி குடும்பத்தினரினை அதிர்ச்சியில் ஆழ்த்தியுள்ளது.…
-
- 4 replies
- 1.2k views
-
-
இன்று 05.09.2020 பிரான்ஸ் தொலைக்காட்சியில் நடைபெற்ற இசைத்தேர்வு நிகழ்ச்சியில் சுவிஸ் வசிக்கும் தமிழ்ச்சிறுமி ஒருவர் கலந்து கொண்டு தேர்வும் செய்யப்பட்டுள்ளார்
-
- 0 replies
- 619 views
-
-
Dr Vishna Rasiah died in April aged 48 with coronavirus பிரிட்டனில் தமிழ் மருத்துவர் விஷ்ணு ராசையா அவர்கள் கொரோனா தொற்றால் கடந்த ஏப்ரல் 2020 உயிரிழந்தார். மலேசியாவிலும், டிரினிடாடிலும் குடும்பத்தைக் கொண்ட டாக்டர் விஷ்ணு, பர்மிங்காம் மகளிர் மற்றும் குழந்தைகள் என்ஹெச்எஸ் அறக்கட்டளையில் பணிபுரிந்தார், மேலும் இப்பகுதியில் பிறந்த குழந்தைகளுக்கான மருத்துவசேவையில் முன்னணியில் இருந்தார். இவரின் நினைவாக 112km சைக்கிள் ஓட்டம் இவரது 7 வயது மகளை முன்னிலை படுத்தி நடத்தப்பட்டது. வைத்தியசாலை நிதிக்காக £17000 இதனால் திரடப்பட்டது. https://www.bbc.co.uk/news/uk-england-birmingham-54040078 https://www.ibctamil.com/uk/80/141843?ref=imp-news https:…
-
- 0 replies
- 675 views
-
-
கடந்த ஒரு சில மாதங்களில் உறவினர், நண்பர் வீடுகளில் நிகழ்ந்த இயற்கை மரணங்களும் அதனோடு நிகழ்ந்தேறிய சமய சம்பிரதாயங்கள் மற்றும் அவரவர் குடும்ப கடைபிடிப்புகளுமே இந்த திரியை எழுத தூண்டுகிறது. சில வேளைகளில் அவரவர் குடும்பத்தில் நடக்கும் நிகழ்வுகளில் நான் மூக்கை நுழைக்கிறேனோ என்ற எண்ணம் எழுந்தாலும், சில தெளிவுகளும் தெரியாத சில விடயங்களை தெரிந்து கொள்ளும் சாத்தியங்களும் இருப்பதாக பட்டதால் இதை எழுதுகிறேன். முதல் மரணம் - மனைவியின் சித்தப்பா எதிர்பாராத மாரடைப்பினால் கொரோனா உச்ச மாதங்களில் நிகழ்ந்த ஒன்று. ஊரே கூடி அழுது, முடிவுக்கு வந்த வாழ்க்கை இறுதிப்பயணம் அதுவல்ல, மாறாக 10 பேர் மட்டுமே ஒரே நேரத்தில் பங்கு கொண்டு சொற்ப சம்பிரதாயங்கள் மட்டுமே கடைபிடிக்கப்பட்டு நி…
-
- 28 replies
- 4.1k views
- 1 follower
-
-
சுயாதீன சா்வதேச விசாரணையை வலியுறுத்தி நெதர்லாந்திலிருந்து ஐ.நா. நோக்கி சைக்கிள் பயணம்.! ஐக்கிய நாடுகள் சபை மனித உரிமைகள் பேரவையின் 45 ஆவது கூட்டத் தொடர் செப்ரெம்பர் 14-ஆம் திகதி ஆரம்பமாகி ஒக்டோபர் 6 ஆம் திகதி வரை நடைபெறவுள்ள நிலையில் தமிழினப் படுகொலைக்கு அனைத்துலக சுயாதீன விசாரணையை வலியுறுத்தி ஐ.நா. நோக்கி மனிதநேய துவிச்சக்கரவண்டிப் பயணம் நெதர்லாந்தில் இருந்து நேற்று வெள்ளிக்கிழமை ஆரம்பிக்கப்பட்டது. நெதர்லாந்தில் டென்காக்கில் அமைந்துள்ள அனைத்துலக குற்றவியல் நீதிமன்ற முன்றலில் இருந்து இந்தப் பயணம் ஆரம்பமானது. மனிதநேய துவிச்சக்கரவண்டிப் பயணத்தை 5 உணர்வாளர்கள் தொடர்ச்சியாக முன்னெடுத்து வருகின்றனர். தம்மை அர்பணித்து எம்மிடம் கையளிக்கப்பட்ட விடுதலைப் ப…
-
- 0 replies
- 517 views
-
-
வல்வெட்டித்துறை இளைஞர் படகு விபத்தில் கனடாவில் பலி September 4, 2020 கனடா ரொரன்ரோவில் வூட்பைன் பீச்சில் நேற்று வியாழக்கிழமை மதியம் 12:30 மணியளவில் படகு ஒன்று விபத்துக்கு உள்ளான போது வல்வெட்டித்துறை தீருவிலையைச் சேர்ந்த இலங்கைகொன் பல்லவநம்பி (46வயது) என்பவர் மிகவும் பரிதாபமாக பலியாகியுள்ளார். இவர் 3 பிள்ளைகளின் தந்தை எனவும் அறியப்படுகிறது. இச்சம்பவத்தின் போது 7 தமிழர்கள் இருந்ததாக தெரிவிக்கப்படுகின்றது. இதில் மூவர் காயங்களுடன் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். ஏனைய மூவர் படகிலிருந்து தூக்கியெறியப்பட்டு நீந்தி கரைசேர்ந்துள்ளனர். சம்பவம் நடைபெற்றதும் உடனடியாக பொலிஸாரும், மருத்துவ அவசரஉதவியும் சம்பவம் நடைபெற்ற இடத்திற்கு சென்றதாகவும்…
-
- 18 replies
- 1.6k views
- 1 follower
-
-
அமெரிக்க அலுவலக பிரதானியான முதல் யாழ்ப்பாணத்துப் பெண்! அமெரிக்காவில் நடைபெறவுள்ள ஜனாதிபதித் தேர்தலில் ஜனநாயக கட்சி சார்பில் போட்டியிடுகின்ற துணை வேட்பாளரான கலிபோர்னியா செனட் சபை உறுப்பினர் கமலா ஹரிஸின் புதிய அலுவலக பிரதானியாக யாழ்ப்பாணத்துப் பெண்ணான அமெரிக்கா – இலங்கை வம்சாவழியைச் சேர்ந்த ரோஹினி கொசோக்லு நியமிக்கப்பட்டுள்ளார். அமெரிக்க அலுவலக பிரதானி பதவியில் நியமிக்கப்பட்ட முதல் ஆசிய அமெரிக்க பெண் ரோஹினி கொசோக்லு ஆவார். மேலும் துணை வேட்பாளரான கமலா ஹரிஸும் இந்தியாவின் சென்னையை பூர்விகமாகக் கொண்டவர் என்பதும் குறிப்பிடத்தக்கது. அமெரிக்க ஜனாதிபதி தேர்தல் எதிர்வரும் நவம்பர் மாதம் 3ம் திகதி இடம்பெறவுள்ளது. https://newuthayan.com/அமெரிக்க-அ…
-
- 4 replies
- 1.1k views
-
-
கலாச்சார வித்தியாசங்களின் பரிமாணங்களும் அளவுகோல்களும்! (ஆங்கில உரையாடல் தமிழாக்கம் செய்யப்பட்டுள்ளது.) “எப்படி இருக்கிறாய் தோழி?” சிரித்தபடி வந்த கத்தரீனின் நீலக்கண்களும் புன்னகைத்தன. “ நல்ல சுகமாய் இருக்கிறன்!” சொன்னபடியே அவள் முகத்தைப் பார்த்தேன். “ எனக்கு சொல்லாமல் கொள்ளாமல் வீட்டுக்குப் போயிருந்தது ஏனோ?” கேள்வியில் ஒரு வித கோபம் கலந்த பாசம். “நேத்தைக்கு ஏதோ முகத்தை தூக்கி வைச்சிருந்தாய்,கோபத்தில் இருக்கிறாய், இன்று பேசலாம் என இருந்தேன்,” பதில் சொல்ல கத்தரீன் கலகலவெனச் சிரித்தது அந்தக் கணங்களை லேசாக்கியது. “ நேற்றைக்கு எனக்கு உடல் நிலை நல்லாயில்லை, வைத்தியரைக் கூப்பிடச் சொன்னேன், நீ கூப்பிடவேயில்லை!” கத்தரீன் குறைப்பட்டுக் கொண்டாள். “ நான் தொலைபே…
-
- 10 replies
- 1.6k views
- 1 follower
-