Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

வாழும் புலம்

புலம்பெயர் நாடுகள் | தமிழர் வாழ்வு | அனுபவங்கள் | அன்றாட நிகழ்வுகள்

பதிவாளர் கவனத்திற்கு!

வாழும் புலம் பகுதியில் புலம்பெயர் நாடுகள், தமிழர் வாழ்வு, அனுபவங்கள், அன்றாட நிகழ்வுகள் சம்பந்தமான பதிவுகள் இணைக்கப்படலாம்.

புலம்பெயர் நாடுகளில் வசிக்கும் தமிழர்கள் பற்றியதும் புலம்பெயர் தமிழர்களுக்கு அவசியமானதுமான செய்திகள், தகவல்கள் மாத்திரம் இணைக்கப்படல் வேண்டும்.

  1. ஹரி ஆனந்தசங்கரி, சுதேச குடியினர் விவகார அமைச்சரின் நாடாளுமன்ற செயலாளராக நியமனம்! கனேடிய நாடாளுமன்ற உறுப்பினர் ஹரி ஆனந்தசங்கரி சுதேச குடியினர் விவகார அமைச்சரின் நாடாளுமன்ற செயலாளராக நியமிக்கப்பட்டுள்ளார். கனேடிய பிரதமர் ஜஸ்டின் ரூடோவினால் இந்த நியமனம் வழங்கப்பட்டுள்ளது. இந்தநிலையில் சுதேச குடியினர் விவகார அமைச்சரின் நாடாளுமன்ற செயலாளராக பணியாற்றவுள்ளமை மகிழ்ச்சியளிப்பதாக ஹரி ஆனந்தசங்கரி தெரிவித்துள்ளார். பழங்குடி மக்களுக்கு எதிராக கனடா செய்த தவறுகளை சுயநிர்ணயத்தின் அடிப்படையில் கொள்கைகளை அங்கீகரித்து செயல்படுத்துவதன் மூலம் மாத்திரமே அதனை சரிசெய்ய முடியும் எனவும் குறிப்பிட்டுள்ளார். பழங்குடி மக்களின் உரிமைகள் தொடர்பான ஐக்கிய நாடுகள் சபையின் பிரகடனத்…

  2. பிரிட்டனில் வாழும் தமிழ் சமூகத்திற்கு நன்றி தெரிவித்து செய்தியொன்றை வெளியிட்டுள்ள பிரதமர் பொறிஸ்ஜோன்சன் இலங்கையில் நல்லிணக்கமும் பொறுப்புக்கூறலும் சாத்தியமாகவேண்டும் என விருப்பம் வெளியிட்டுள்ளார் வீடியொவொன்றில் பொறிஸ்ஜோன்சனின் இந்த கருத்துக்கள் வெளியாகியுள்ளன. தேர்தலை முன்னிட்டு டுவிட்டரில் வெளியாகியுள்ள வீடியோவில் அவர் இதனை தெரிவித்துள்ளார் வணக்கம் நான் தமிழ் சமூகத்திற்கு அவர்கள் எங்கள் நாட்டிற்கு செய்துவரும் அனைத்து விடயங்களிற்காகவும் நன்றி தெரிவிக்க விரும்புகின்றேன் என பொறிஸ்ஜோன்சன் தெரிவித்துள்ளார். தமிழ் சமூகத்தினரின்விழுமியங்களும்,எங்கள் தேசத்தின் தேசிய சுகாதார சேவை தொழில்முயற்சியாண்மைக்கு அவர்கள் வழங்குகின்ற பங்களிப்பும், அவர்கள்…

    • 1 reply
    • 1.3k views
  3. கனடாவில் உயிரிழந்த இந்தியப் பெண்ணின் மரணம் தொடர்பாக அதிர்ச்சித் தகவல்கள்! கனடாவில் உயிரிழந்த இந்திய இளம்பெண்ணின் மரணம் தொடர்பாக அவரது தந்தை தொடர்ச்சியாக சில அதிர்ச்சித் தகவல்களை வெளியிட்டுள்ளார். பஞ்சாப்பைச் சேர்ந்த பிரப்லீன் மதாரு (வயது 21), கனடாவில் சர்ரே பகுதியில் உள்ள வீடு ஒன்றில் உயிரிழந்த நிலையில் அவரது உடல் கண்டெடுக்கப்பட்ட்து. அவருடன் 18 வயதான உள்ளூர் இளைஞர் ஒருவரின் உடலும் கண்டெடுக்கப்பட்டது. இருந்த போதும் குறித்த இளைஞர் யார் என்பதைத் தெரியப்படுத்த வேண்டிய அவசியம் ஏற்படவில்லை என பொலிஸார் தெரிவித்தனர். இந்தநிலையில், குறித்த யுவதி உயிரிழந்த தகவல் தவிர வேறெந்தத் தகவலும் அளிக்கப்படாத நிலையில், கனடாவுக்குச் சென்ற பிரப்லீனின் தந்தையான குர்தயால் சிங்…

  4. வடக்கு பிரிட்டனில் உள்ள பிராட்போர்ட் நகரில் காஷ்மீர் பற்றி எதாவது குறிப்பிடாமல், உரையாடலோ அல்லது விவாதமோ முழுமையடையாது. இங்கு, ஆலயமோ, மசூதியோ, ஒருவரின் வீடோ அல்லது தேர்தல் பிரச்சாரமோ எதுவாக இருந்தாலும் காஷ்மீரை புறக்கணிப்பது கடினம். இந்தியாவில் இருந்து 6,500 கி.மீ தொலைவில் உள்ள பிரிட்டனில் தேர்தல் பிரச்சினையாக உருவெடுத்துள்ளது காஷ்மீர். ஆகஸ்ட் 5 ஆம் தேதி, இந்திய அரசு ஜம்மு-காஷ்மீருக்கு சிறப்புரிமை தரும் 370 வது பிரிவை அகற்றி அதன் தனித் தன்மையை முடிவுக்கு கொண்டுவந்து மாநிலத்தை இரண்டாகப் பிரித்து, இரண்டையும் யூனியன் பிரதேசங்களாக ஆக்கியது. இதனால், பிராட்போர்டில் வாழும் இந்திய மற்றும் பாகிஸ்தான் சமூகங்களிடையே, இது பிரச்சனையாக பெரிய அளவில் உருவெடுத்தது மட்ட…

  5. இலங்கைத் தமிழர்களின் எதிர்காலம் பணயம் வைக்கப்பட்டுள்ளது - துரித நடவடிக்கை எடுக்க கோரி பிரித்தானிய தமிழர் பேரவை இந்திய பிரதமருக்கு அவசர கடிதம் இலங்கைத் தமிழர்களின் எதிர்காலம் தற்போது பணயம் வைக்கப்பட்டுள்ளது. ஆகவே இந்தச்சந்தர்ப்பத்தில் தமிழ் மக்கள் சமத்துவமாகவும், பாதுகாப்பாகவும் வாழ்வதற்குரிய நடவடிக்கைகளை இந்தியா உடன் எடுக்காது விட்டது எதிர்காலம் இருள்சூழந்ததாகிவிடும் என்று சுட்டிக்காட்டி பிரித்தானிய தமிழர் பேரவை இந்தியப் பிரதமர் மோடிக்கு அவசர கடிதமொன்றை அனுப்பி வைத்துள்ளது. இந்தியாவுக்கும் இலங்கைக்கும் இடையில் அண்மையில் இடம்பெற்ற கலந்துரையாடல் தொடர்பில் புலம்பெயர் தமிழர்களின் நோக்கு எனும் தலைப்பில் அனுப்பி வைக்கப்பட்ட கடிதத்தில் குறிப்பிட்டுள்ளதாவது, இல…

  6. வள்ளுவர் சிலையை திறந்து வைத்து உரையாற்றும் திருமாவளவன்..!! யேர்மனி வரை நீண்ட தமிழ்நாடு பொலிரிக்ஸ்..!! ஐரோப்பாவில் முதன் முறையாக நிறுவப்படும் இரண்டு ஐம்பொன் சிலைகளும் தமிழரின் சிந்தனை மரபுகளையும் பன்முகத் தன்மையினையும் விளக்குவதாக அமைந்திருக்கிறது. யேர்மனியில் ஐயன் திருவள்ளுவர் சிலைகள் நிறுவப்படும் நிகழ்வு வெற்றிகரமாக நடந்தேற வாழ்த்துகிறேன் என விடுதலை சிறுத்தைகள் தலைவர் தொல்.திருமாவளவன் தெரிவித்துள்ளார். இது குறித்து தெரிவித்துள்ள அவர், உலகம் முழுவதும் பரவி வாழும் தமிழர்கள் தாம் செல்லும் நாடுகளிலெல்லாம் தமது பண்பாட்டையும் அடையாளங்களையும் நிறுவி தனித்தவொரு தேசிய இனம் என்பதை உறுதி செய்து வருகின்றனர். இதனால் வேறுபாடுகளைக் கடந்து தமிழர்கள் என்று ஒரு…

  7. கல்வியில் தொடர்ந்தும் தமிழ் சிறார்கள் முன்னிலையில் நோர்வே ஆரம்ப பாடசாலை கல்வியில் இலங்கை பின்புலத்தை கொண்ட தமிழ் மாணவர்கள் சராசரி புள்ளி அடிப்படையில் நோர்வேஜிய பெற்றோரின் பிள்ளைகளை விடவும் முன்னிலையில் இருப்பதாக புதிததாக வெளிவந்துள்ள புள்ளி விபரங்கள் தெரிவிக்கின்றன. 2012 ஆண்டு தொடக்கமான தேசிய புள்ளிவிபரவியல் திணைக்களத்தின் தரவுகளை மையமாக வைத்து நடத்தப்பட்ட ஆய்வில் சில வெளிநாட்டு பின்புலத்தை கொண்ட பெற்றோரின் பிள்ளைகள் ஆரம்ப பாடசாலை கல்வியில் நோர்வே பெற்றோருக்கு பிறந்த பிள்ளைகளை விட முன்னணியில் இருப்பதாக Aftenposten செய்தி வெளியிட்டுள்ளது. இதிலும் குறிப்பாக இலங்கை பின்புலத்தை கொண்ட பெற்றோரின் பிள்ளைகள் ஏனைய நாட்டு பிள்ளைகளையும் விட கல்வியில் முன்னணியில் உள்ள…

  8. ‘புலம்பெயரிகள்’ ஒரு நோக்கு -நிவேதா உதயராஜன் ‘புலம்பெயர்தல்’ என்ற சொற்பதம் அன்றுதொட்டு பயன்பாட்டில் இருந்தாலும் தமிழர்கள் போரின் காரணமாக இடம்பெயர்ந்து உலகின் பல நாடுகளுக்கும் செல்ல ஆரம்பித்த காலத்திலிருந்து ஊடகவியலாளர்களால் புலம்பெயரிகள் என்று தாய்நாட்டை விட்டு புலம்பெயர்ந்த தமிழ் மக்கள் குறிப்பிடப்பட்டார்கள். போரின் காரணாமாக உயிரைக் காத்துக் கொள்வதற்காய், வறுமையின் காரணமாக, திருமணத்திற்காய், வெளிநாட்டு மோகத்தில், கல்வி கற்பதற்காய் என பல காரணங்களுக்காக அவர்கள் புலம்பெயர்ந்திருந்தாலும் மீண்டும் தாய்நாடு திரும்பி வாழ முடியாத ஒரு பாதுகாப்பற்ற நிலையை போர் தோற்றுவித்திருந்தது. பதினாறு பதினேழு வயதுதொட்டு ஐம்பது கடந்தவர்கள் கூட புலம்பெயர்ந்து வெளிநாடுகளில் தஞ்ச…

  9. லண்டனில் முன்னாள் போராளிகள் சிறப்பாக நடத்திய தேசிய தலைவரின் பிறந்தநாள் நிகழ்வு முன்னாள்போராளிகளால் தமிழீழ விடுதலைப் புலிகளின் தலைவர் மேதகு வேலுப்பிள்ளை பிரபாகரனின் 65வது அகவை நாள்நிகழ்வு மேற்கு லண்டனிலுள்ள பெருவில் ( Perivale) பகுதியில் 26.11.2019 கொண்டாடப்பட்டது. தமிழீழவிடுதலைப்புலிகளின் முன்னாள் மருத்துவப் போராளி உயர்ச்சி தலைமையில் நடைபெற்ற இந்நிகழ்வில்தமிழீழ தேசிய கொடியினை முன்னாள்கடற்புலி போராளி சுடரொளி ஏற்றிவைத்து நிகழ்வினை ஆரம்பித்து வைத்தார். இந்நிகழ்வில் முன்னாள்போராளிகள், ஊடகவியலாளர்கள், பொதுமக்கள் உட்பட நூற்றுக்கு மேற்பட்டோர் கலந்து கொண்டனர். தேசியத்தலைவர் பிரபாகரனுக்கு மிகவும் பிடித்த உணவான கோழிப்புக்கை இந்த நிகழ்வில் வழங்கப்பட்டது . தலை…

    • 11 replies
    • 2.9k views
  10. கனடாவில் தமிழ் பெண்ணைக் காணவில்லை – விசாரணைகள் ஆரம்பம் கனடாவில் தமிழ் பெண்ணொருவர் காணாமல் போயுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. 28 வயதான தஸ்மி ஸ்ரீஸ்கந்தராஜா என்பவரே இவ்வாறு காணாமல் போயுள்ளதாக ரொரன்றோ பொலிஸார் தெரிவித்துள்ளனர். கடந்த 26ஆம் திகதி இரவு ஏழு மணிக்கு மிட்லன்ட் அவென்யூ மற்றும் எக்லின்டன் அவென்யூ கிழக்கு பகுதியில் கடைசியாக இவர் காணப்பட்டுள்ளனர். 5 அடி உயரமும் 120 பவுண்ட் எடையும் கொண்ட அவரது தலைமுடியின் நிறம் கருப்பு என்று பிரவுன் நிற கண்கள் கொண்டவர் என்றும் கூறப்பட்டுள்ளது. இந்தநிலையில் இவரை கண்டுபிடிக்க பொதுமக்களின் உதவியை பொலிஸார் கோரியுள்ளனர். தகவல் தெரிந்தவர்கள் 416-808-4100 என்ற எண்ணுக்கு அழைக்குமாறு அறிவுறுத்தல் விடுக்கப்பட்டுள்ளது…

  11. டிச. 12 பிரித்தானிய தேர்தல் | கன்சர்வேட்டிவ் கட்சிக்குப் பெரும்பான்மை? அடுத்த மாதம் (டிசம்பர் 12) நடக்கவிருக்கும் பிரித்தானிய பொதுத் தேர்தலில் பொறிஸ் ஜோன்சனின் ஆளும் கன்சர்வேட்டிவ் கட்சி பெரும்பான்மையுடன் வெற்றிபெறுமெனக் கருத்துக் கணிப்பொன்று கூறுகிறது. ஜோன்சன், கோர்பின் விவாதம் 650 ஆசனங்களைக் கொண்ட பொதுச் சபையில் கன்சர்வேட்டிவ் கட்சி 359 ஆசனங்களையும், தொழிற்கட்சி 211 ஆசனங்களையும் பெறுமென ‘யூகவ் எம்.ஆர்.பி. போலிங்’ (YouGov MRP Polling) எந்னும் கருத்துக் கணிப்பு நிறுவனம் தன் தரவாய்வு மூலம் எதிர்வு கூறியிருக்கிறது. 2017 ம் ஆண்டில் நடைபெற்ற தேர்தல் முடிவுகளையும் இந் நிறுவனம் சரியாக எதிர்வுகூறியிருந்தது. ட…

  12. தமிழீழத் தேசிய மாவீரர் நாள் ஊடக அறிக்கை – பிரித்தானியா AdminNovember 27, 2019 தமிழீழத் தேசிய மாவீரர் நாள் தாயக விடுதலை வேள்வியில் தம்மை ஆகுதியாக்கிய மான மறவர்களை நெஞ்சிருத்தி வணக்கம் செலுத்தும் நாளே மாவீரர் நாளாகும். 1989ம் ஆண்டு சிறீலங்கா, இந்திய இராணுவங்கள் தமிழீழ மண்ணை ஆக்கிரமித்துக் கொண்டிருந்த காலத்தில் முதற்களப் பலியாகிய லெப்.சங்கர் அவர்கள் வீரச்சாவடைந்த (1987) நவம்பர் 27ம் நாளை தமிழீழ விடுதலைப் புலிகள் தமிழீழத் தேசிய மாவீரர் நாளாகப் பிரகடனப்படுத்தினர். இத் தேசிய மாவீரர் நாளை புலம்பெயர் தமிழ் மக்கள் கடைப்பிடிப்பதற்கான ஒழுங்கினை மூத்த தளபதி கேணல். கிட்டு அவர்கள் ஒழுங்கமைத்து 1991 நவம்பர் 27ம் நாளில் இருந்து தமிழீழத் தேசியத் தலைவர் அவர்களின் தூரநோக்கு…

  13. மாவீரர் யாரோ என்றால் மரணத்தை வென்றுள்ளோர்கள்! தாய் மானம் வாழ என்றே தம்மையே தந்துள்ளோர்கள்! ஊர் வாழ வேண்டும் என்றே உன்னத ஆர்வம் கொண்டோர்! ஏராளமான துயர் எண்ணங்கள் தாங்கி நின்றோர்! ஏராளமான துயர் எண்ணங்கள் தாங்கி நின்றோர்! மாவீரர் யாரோ என்றால் மரணத்தை வென்றுள்ளோர்கள்! மதம் சொல்லி மொழியை சொல்லி மரபுகள் இனங்கள் சொல்லி வதம் செய்யும் ஆட்சி தன்னை.. உதைத்திட எழுந்ததீரர் சிதைந்தது மானம் என்றால் சினந்திடும் வீரவான்கள்.. உதைத்திட எழுந்த தீரர் சிதைந்தது மானம் என்றால் சினந்திடும் வீரவான்கள்…. சுதந்திரம் உயிர் மூச்சென்றே துணிந்தெழும் ஞானவான்கள்! துணிந்தெழும் ஞானவான்கள்! (மாவீரர்….) தேசிய உரிமை வாழ்வின் சின்னமாய் மின்னுவோர்கள் வீ…

    • 6 replies
    • 1.5k views
  14. இங்கிலாந்திலுள்ள இலங்கை உயர்ஸ்தானிகர் அலுவலகத்தின் பாதுகாப்பு ஆலோசகராக கடமையாற்றிய பிரிகேடியர் பிரியங்க பெர்ணான்டோவுக்கு எதிராக தாக்கல் செய்யப்பட்டுள்ள வழக்கு, அடுத்த மாதம் டிசெம்பர் மாதம் 6ஆம் திகதி விசாரணைக்கு எடுத்துக்கொள்ள தீர்மானிக்கப்பட்டுள்ளதாகத் தெரிவிக்கப்படுகின்றது. இங்கிலாந்திலுள்ள இலங்கையின் உயர்ஸ்தானிகர் அலுவலகத்தில் கடந்தாண்டு பெப்ரவரி மாதம் 4ஆம் திகதி நடைபெற்ற இலங்கையின் 70ஆவது சுதந்திரத்தினக் கொண்டாட்டத்தின் போது, அங்கு ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டிருந்தவர்களை அச்சுறுத்திய சம்பவம் தொடர்பிலேயே, இவருக்கு எதிராக வழக்குத் தாக்கல் செய்யப்பட்டிருந்தது. http://www.tamilmirror.lk/செய்திகள்/பரகடயர-பரயஙகவன-வழகக-ஒததவபப/175-241248

    • 0 replies
    • 775 views
  15. காணவில்லை பாரதி பாலசுந்தரம் (42) என்ற பெண்ணை செப்டெம்பர் 25, 2019 இலிருந்து காணவில்லை. கடைசியாக, ரொறன்ரோ Queen Street East / Victoria Street பகுதியில் காணப்பட்டார். அவர் பற்றிய தகவல் இருப்பின் ரொறன்ரோ காவற்துறையினரை அழைக்கவும். Bharathy Balasundaram, 42, was last seen on Wednesday, September 25, 2019, in the daytime hours, in the Queen Street East and Victoria Street area. She is described as 5’2", thin build, with shoulder-length black hair, and brown eyes. There are no clothing descriptions at this time. Police are concerned for her safety. Anyone with information is asked to contact police at 416-808-5100, Crime Stoppers ano…

    • 0 replies
    • 886 views
  16. இலங்கையின் ஜனாதிபதியாக கோட்டாபய ராஜபக்ஷ தேர்ந்தெடுக்கப்பட்டதை அறிந்து மிகுந்த ஏமாற்றமடைந்துள்ளதாக கனடா ஆளும் லிபரல் கட்சி நாடாளுமன்ற உறுப்பினர் ஹரி ஆனந்தசங்கரி தெரிவித்துள்ளார். கோட்டாபய ராஜபக்ஷ, அவரது சகோதரர் மகிந்த ராஜபக்ஷ ஆகியோர் மனிதகுலத்திற்கு எதிரான குற்றங்கள் மற்றும் இனப்படுகொலை ஆகியவற்றைச் செய்தவர்களாவர் என்றும் அவர் தெரிவித்துள்ளார். இலங்கை ஆயுதப்படைகள் செய்த போர்க்குற்றங்களுக்கு உத்தரவிட்டவர்கள் இவர்களே எனவும் அவர் விடுத்துள்ள அறிக்கையில் குறிப்பிட்டுள்ளார். ஜனாதிபதியாக கோட்டாபய ராஜபக்ஷ தேர்ந்தெடுக்கப்பட்டிருப்பது நல்லிணக்கத்திற்கான எந்தவொரு முயற்சிகளையும் நீர்த்துப் போகவே செய்யும். மேலும் ஒட்டு மொத்தமாக நாட்டை மேலும் இழிவுபடுத்துகிறது என்றும் அவர…

    • 6 replies
    • 1.6k views
  17. பொய்யாவிளக்கு தமது குடும்ப நலன்களுக்கும் மேலாக மக்களுக்கு சேவைசெய்யும் வைத்தியர்கள் கதை சொல்லும் படம். அப்படிச சேவையாற்றிய வைத்தியர் ஒருவரின் புலம்பெயர் வாழ்வில் இருந்து ஆரம்பிக்கும் கதை பின்னோக்கி நகர்ந்து தாயகத்தில் ஏற்பட்ட வலிகளைச் சொல்லி அதற்கு ஒத்தடம் கொடுக்கவும் செய்கிறது. இனவழிப்பின் உச்சத்தில் நடந்த கதைக் களத்தினைத் தன்னம்பிக்கையுடன் எடுத்து நல்ல முறையில் கையாண்டு இருக்கின்ற திரைக்குழுவினர் பாராட்டுக்குரியவர்கள். இந்த திரைப்படத்தை தவறாது பார்த்து எமது ஆதரவை கொடுப்போம்.. பொய்யா விளக்கு பாடல் - The Lamp Of Truth Audio Teaser பாடியோர்: உத்தரா உன்னிகிருஷ்ணன், பம்பா பாக்யா Singer: Bamba Bakya இசை :…

    • 1 reply
    • 1.1k views
  18. கனடா நாட்டில் அதிகம் விளையாடப்படும், பிரபல விளையாட்டு - ஐஸ் ஹாக்கி. அதை ஒளிபரப்பும் தொலைக்காட்சி நிறுவனத்தில் நீண்டகாலமாக முதலாவது 20 நிமிட விளையாட்டின் பின்னர் ஆய்வாளராக பணிபுரிவர் - டொன் செரி. இவருக்கு வயது 85. கடந்த சனிக்கிழமை நடந்த விளையாட்டில், அவர், புலம்பெயர்ந்து வாழும் மக்களில் அதிகமானோர் கார்த்திகை 11 ஆம் திகதி அன்றை நோக்கிய நாட்களில் மறைந்த வீரர்களை நினைவு கூர்ந்து 'பொப்பி' என்ற பூவை அணிவதில்லை என்றும் அதற்காக இரண்டு டாலர்களை தருவதும் இல்லை என்று கூறினார். மேலும், "நீங்கள் இந்த நாட்டிற்கு வந்து இந்த சுதந்திரங்களை உருவாக்க தமது உயிர்களை தந்தவர்களை நினைவுகூருவதும் இல்லை", என்று கூறினார். இது, நாட்டில் பல வேறு மக்களின் கருத்துக்களமாக மாறியது.…

    • 0 replies
    • 828 views
  19. பிரம்டனில் இரண்டு குழந்தைகள் கொலை | தந்தை கைது! கொலைக்கான காரணம் இன்னும் வெளியிடப்படவில்லை கொலை செய்யப்பட்ட குழந்தைகளின் தந்தை எட்வின் பாஸ்ரிடாஸ் (52) பிரம்ப்ரன், ஒன்ராறியோ, கனடா: ஒன்பது மற்றும் பன்னிரண்டு வயதுடைய இரு பிள்ளைகளைக் கொன்ற குற்றத்திற்காக அவர்களின் தந்தையார் கைதுசெய்யப்பட்டுள்ளார். புதனன்று, குழந்தைகள் இருவரும் கொலை செய்யப்பட்ட நிலையில் ஹிபேர்ட்டன் கிறெசெண்ட்டிலுள்ள அவர்களது வீட்டில் கண்டுபிடிக்கப்பட்டனர். 52 வயதுடைய எட்வின் பாஸ்ரிடாஸ் கைது செய்யப்பட்டு பிணையை எதிர்பார்த்து விளக்க மறியலில் வைக்கப்பட்டுள்ளார். கொலைக்கான காரணங்கள் பற்றி இதுவரை எதுவும் வெளியிடப்படவில்லை. ஜொனதன் பாஸ்ரிடாஸ் 12, இடம்…

    • 1 reply
    • 1.3k views
  20. கனடாவில், கார் திருட்டில் ஈடுபட்ட இரண்டு தமிழ் இளைஞர்கள் கைது! கனடாவில் இடம்பெற்ற பெருமளவு கார் திருட்டுக்களில் சந்தேகநபர்களாகக் கருதப்படும் யாழ்ப்பாணத்தைச் சேர்ந்த சகோதரர்கள் இருவர் பொலிஸாரினால் கைது செய்யப்பட்டுள்ளனர். விபத்தில் சிக்கிய கார் ஒன்றை பலவந்தமாக இழுத்துச்செல்ல முயன்றபோது, வாகனத்தின் உரிமையாளர் பொலிஸாருக்கு அறிவித்ததையடுத்து, குறித்த இரண்டு இளைஞர்களும் பொலிஸாரிடம் சிக்கிக் கொண்டனர். அவர்களிடம் மேற்கொள்ளப்பட்ட விசாரணையில் ஏற்கனவே பல கார் திருட்டுக்களில் ஈடுபட்டிருந்தமை தெரியவந்துள்ளது. கனடாவில் விபத்தில் சிக்கிய வாகனங்களை, இழுத்துச் செல்லும் நிறுவனங்களுக்கிடையிலும் கடும் போட்டி நிலவுகின்றது. விபத்தொன்று இடம்பெற்றால் அந்த வாகனத்தை இழுத்துச் ச…

  21. சிங்கப்பூரில் சரித்திரம் படைத்த கடையநல்லூர் ஸ்ட்ரீட்! சிங்கப்பூரின் முக்கிய பகுதியான தஞ்சோங் பகாரில் அமைந்துள்ள கடையநல்லூர் வீதி வரலாற்று சிறப்பை பெற்றுள்ளது. எனினும் இந்த வீதியின் தொன்மை பற்றி சிலர் மாத்திரமே அறிந்துள்ளனர். தமிழ்நாட்டின் கடையநல்லூர் என்ற ஊரிலிருந்து சிங்கப்பூருக்கு குடிபெயர்ந்த தமிழ் பேசும் முஸ்லிம்களைக் குறிக்கும் வீதியாக கடையநல்லூர் ஸ்ட்ரீட் விளங்குகின்றது. அவர்கள் தஞ்சோங் பகார் வட்டாரத்தில் குடியேறிய பின்னர் இந்தியாவின் கடைய நல்லூரிலிருந்து தங்கள் குடும்பத்தினரையும் சிங்கப்பூருக்கு வரவழைத்துக்கொண்டனர். தமிழ்க் கல்வியின் முக்கியத்துவத்தை உணர்ந்தும் வகையில் அவர்கள், தமிழ்ப் பாடசாலையொன்றை நிறுவும் முயற்சியில் ஈடுபட்டனர். எனினும், ஆரம்ப…

  22. எங்கள் பிரச்சினை உங்களுக்குத் தெரியுமா? - ந.சரவணன் 10/30/2019 01:01:00 PM 1983-ம் ஆண்டில் இலங்கையில் ஏற்பட்ட இனக்கலவரம், போராக உருமாறிய பிறகு, முதன்முறையாக ஈழத்திலுள்ள தமிழர்கள் ‘அகதிகளாக’ வெளியேற ஆரம்பித்தார்கள். அப்போது ஒரு லட்சத்திற்கு மேற்பட்டவர்கள் அகதிகளாகத் தமிழகம் வந்தார்கள். 1990-ம் ஆண்டில் பெருமளவில் மக்கள் அகதியாக இந்தியா வந்தபோது, இந்தியாவில் அப்போதிருந்த அரசு நிர்வாகம், அகதிகளைக் குடியமர்த்துவதற்குச் சிரமப்பட்டது. குறுகிய காலத்துக்குள் லட்சக்கணக்கானவர்கள் வந்ததால், அரசு நிர்வாகத்துக்குச் சிரமம் இருந்தது. ஓலைக் கொட்டகையில், கல்யாண மண்டபங்களில், நெல் மூட்டைகள் வைக்கப்பட்டிருந்த குடோன்களில், அரசுக்கு சொந்தமான பராமரிப்பில்லாத காலிக்கட்டி…

  23. பிள்ளைகளைக் கொடுமைப்படுத்திய குற்றத்துக்காக பிரான்சில் வசிக்கும் 46 வயதுடைய இலங்கைத் தமிழ்ப் பெண் ஒருவருக்கு பிரான்ஸ் நீதிமன்றம் ஒன்று 18 மாதம் ஒத்திவைக்கப்பட்ட சிறைத் தண்டனை வழங்கியுள்ளது. பரிசின் புறநகர்ப் பகுதியான திறாப் என்ற இடத்தில் வசிக்கும் இந்தப் பெண் 14 வயதிலிருந்து 9 வயது வரையிலான தனது 4 பிள்ளைகளையும் கடந்த 6 வருடங்களாக கொடூரமாகத் துன்புறுத்தியதாக ஆண் ஒருவர் செய்த முறைப்பாட்டை அடுத்து நடவடிக்கையில் இறங்கிய காவல்துறையினருக்கு அதிர்ச்சியழிக்க கூடிய தகவல்கள் கிடைத்ததாக பெரும்பாலான பிரெஞ்சு ஊடகங்கள் தகவல் வெளியிட்டுள்ளன. இந்தப் பெண், தற்போது 14 வயதாகும் தனது மூத்த மகளை அவரது 8வது வயதிலிருந்து தொடர்ச்சியாகத் துன்புறுத்தியது உறுதிப்படுத்தப்பட்டுள்ளது. க…

    • 0 replies
    • 1.2k views
  24. ஹரி ஆனந்தசங்கரி 21,241 வாக்குகளால் அமோக வெற்றி Oct 22, 2019 | 6:43by கனடாச் செய்தியாளர் in செய்திகள் கனேடிய நாடாளுமன்றத் தேர்தலில் ஒன்றாரியோ மாகாணத்தில், ஸ்காபரோ ரூஜ்பார்க் தொகுதியில் இரண்டாவது முறையாகப் போட்டியிட்ட ஹரி ஆனந்தசங்கரி 21,241 வாக்குகள் வித்தியாசத்தில் அமோக வெற்றி பெற்றுள்ளார். ஆளும் லிபரல் கட்சியின் சார்பில் போட்டியிட்ட ஹரி ஆனந்தசங்கரிக்கு இந்தமுறை 62.3 வீத வாக்குகள் கிடைத்துள்ளதாக இறுதி முடிவுகளில் இருந்து தெரியவந்துள்ளது. ஸ்காபரோ ரூஜ்பார்க் தொகுதியில் கட்சிகளும் அவற்றின் வேட்பாளர்களும் பெற்ற வாக்குகள் விபரம் – ஹரி ஆனந்தசங்கரி – லிபரல் கட்சி – 31,339 – 62.3 % …

    • 25 replies
    • 4.2k views

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Account

Navigation

Search

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.