வாழும் புலம்
புலம்பெயர் நாடுகள் | தமிழர் வாழ்வு | அனுபவங்கள் | அன்றாட நிகழ்வுகள்
வாழும் புலம் பகுதியில் புலம்பெயர் நாடுகள், தமிழர் வாழ்வு, அனுபவங்கள், அன்றாட நிகழ்வுகள் சம்பந்தமான பதிவுகள் இணைக்கப்படலாம்.
புலம்பெயர் நாடுகளில் வசிக்கும் தமிழர்கள் பற்றியதும் புலம்பெயர் தமிழர்களுக்கு அவசியமானதுமான செய்திகள், தகவல்கள் மாத்திரம் இணைக்கப்படல் வேண்டும்.
5793 topics in this forum
-
செந்தமிழன் சீமான் அவர்களது புலம்பெயர் தேசத்து பயணத்தின் தொடர்ச்சியாக யேர்மனிற்கும் வருகை தந்திருந்தார்.உணர்வுள்ள யேர்மன் தமிழ் மக்கள்,பெரும் திரளாக பல பகுதிகளிலும் இருந்து வருகைதந்து செந்தமிழன் சீமான் அவர்களை மதித்து வரவேற்றார்கள். செந்தமிழன் சீமானுடன் மக்கள் சந்திப்பு நிகழ்வு ஒன்று ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது.அந்த சந்திப்பின்போது நிகழ்ந்த நிகழ்வுகள். தமிழீழ விடுதலைக்கு வலுச்சேர்க்கும் விதமாக தீக்குளித்து உயிர்த்தியாகம் செய்த ஈகியர்களிற்கு செந்தமிழன் சீமான் சுடரேற்றி வணக்கம் செலுத்தியதுடன் மாலை அணிவித்து அஞ்சலி செலுத்தினார். அவரைத் தொடர்ந்து பொதுமக்களும் ஈகியரிற்கு அஞ்சலி செலுத்தினார்கள். நாம்தமிழர் கட்சியின் முதன்மை ஒரு…
-
- 7 replies
- 1.5k views
-
-
புலம்பெயர் தமிழரால் சனம் அழிந்ததாம்………… ------------------------------------------------------------------------- சற்றுமுன் ஐரோப்பாவில் இருந்து ஒலிபரப்பாகும் காணொளிச் சேவையொன்றின் செய்திவீச்சு நிகழ்வைப் பார்க்கவென இருந்தேன். சிலபேருடைய கதையைக் கேட்டா அனல் பத்திறமாதிரியிருக்குது. அதில் இலங்கைத் தீவின் சிறிலங்காவில் நடைபெற இருக்கும் 62 வது சுதந்திர தினம் தொடர்பான ஆய்வும் அதனைத் தொடர்ந்து நேயர் நேரலைக் கருத்துப் பகிர்வும் இடம்பெற்றது. அதில் ஒரு அரசியல் ஆய்வாளர் வந்து சொன்னார், புலம்பெயர்ந்த தமிழர்களது போராட்டத்தால்தான் முள்ளிவாய்க்கால் படுகொலை நடந்ததாகவும், எனவே இந்த ஊர்வலம் அது இது என்று போறதை விடுத்து, சம்பந்தர் ஐயாவைக் குளிர்வித்து அவரோடை கதைச்சு ஏதாவது செய்ய ஊக்கு…
-
- 7 replies
- 1.4k views
-
-
புலம்பெயர்ந்த தமிழர்களுக்கு இலங்கையிலிருந்து "நம்பிக்கை" நாட்டிலிருந்து புலம்பெயர்ந்து வெளிநாடுகளில் வாழ்கின்ற தமிழர்களுக்கு இலங்கை யிலிருந்து தமிழ் பத்திரிகையை விநியோகிப்பதற்கு அரசாங்கம் நடவடிக்கைகளை மேற்கொண்டு வருவதாக தெரிவிக்கப்படுகின்றது. இலங்கையின் உண்மையான நிலைமையினை வெளிநாடுகளில் வாழ்கின்ற தமிழ்மக்களுக்கு தெளிவுபடுத்தும் நோக்கிலேயே இந்த தமிழ் பத்திரிகையை இலவசமாக விநியோ கிப்பதற்கு வெளிவிவகார அமைச்சு நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகின்றது. "நம்பிக்கை" என்ற பெயரில் வெளியிடப்படவிருக்கின்ற இந்த பத்திரிகையை இலங்கையிலிருக்கின்ற தூதரகங்கள் ஊடாக விநியோகிப்பதற்கு நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ள தாக தெரியவருகின்றது. நாட்டின் நலனையும் உண்மையான நிலைமையினையும் கொண்டும்…
-
- 7 replies
- 2k views
-
-
மிசிசாகாவைச் சேர்ந்த குடும்பத் தலைவரான வேலாயுதம் வாமதேவன் என்பவர் ஒன்ராறியோ 6/49 jackpot ஒக்டோபர் மாதத்தின் மத்திய பகுதியில் இடம்பெற்ற அதிஸ்டக் குலுக்கலில் இருபது மில்லியன் டொலர்களை பரிசாகா வென்றுள்ளார். மூன்று பிள்ளைகளில் தந்தையான 62 வயதுடைய இவர் கடந்த 20 வருங்களாக தான் இந்த அதிஸ்ட குலுக்கலில் பங்கேற்று வருவதாகவும், இருந்த போதிலும் இவ்வாறு ஒரு அதிஸ்டம் கிடைக்கும் என தான் எதிர்பார்த்திருக்கவில்லை எனவும் தெரிவித்துள்ளார். வீட்டு விற்பனை முகவராக செயற்பட்டுவரும் இவர் கடந்த ஒக்டோபர் மாதம் 18ஆம் திகதி, தனது மகனின் பிறந்நாளின் காரணமாக இறுதி நிமிடத்தில் ஒரு சீட்டினை வாங்கியதாகவும், வீட்டுக்கு சென்றதும் அதனை ஒரு அலுமாரியில் வைத்துவிட்டதாகவும் குறிப்பிட்டுள்ளார். …
-
- 7 replies
- 1.5k views
-
-
அமெரிக்கா, கனடா வாழ் உறவுகளே, அமெரிக்கா வொசிங்டன் டிசியில் வரும் 18ம் திகதி நடைபெறவுள்ள மாபெரும் கவனயீர்ப்பு பேரணியில் கலந்து கொள்ளுங்கள் Washington DC nonstop Rally 100 th day Mega Rally - Tuesday 08/18/09 Save the date. Prepare for this Historical Event. Give Ideas, Advices, Actions, Donations etc. Please forget our differences and join as one strong and united Tamil team in North America (Canada and USA). Show up our strength to the world. This should become the first step towards our Global Tamil Unity - "The Mighty" Million Ta…
-
- 7 replies
- 1.4k views
-
-
-
விடுமுறையில் செல்லும் புலம்பெயர் தமிழர்களுக்கு உருக்கமான வேண்டுகோள்:சசீதரன் பெரும்பாலும் முட்டை போன்ற வடிவமைப்பைக்கொண்ட வீடுகள் அல்லது அடுக்கு மாடிக் கொங்ரீட் பொந்துகளில் தனிமைப்படுத்தப்பட்ட சிறைவாழ்க்கை புலம்பெயர் நாடுகள் வாழும் சாமானியத் தமிழன் நாளாந்த இருப்பு. முப்பது ஆண்டுகளின் பின்னர் கூட சுத்திகரிப்புத் தொழிலாளிகளாகவும், உணவகங்களிலும், பெற்றோல் நிலையங்களிலும் வேலைபார்த்து நாற்பது வயதில் நோய்களைச் சுமந்து முதுமையடைந்து விடும் மனிதர்களால் உருவானதே புலம்பெயர் சமூகம். ஒவ்வொரு மாதம் முடிவதற்கு முன்னரே வாடைகையை அல்லது வீட்டிற்கான வங்கிக்கடனைச் செலுத்துவதற்கு மாரடிக்கும் புலம்பெயர்ந்த தமிழனின் வாழ்வு எந்த மகிழ்ச்சியும் அற்ற திறந்த வெளிச் சிறை. எப்போதாவது நண்ப…
-
- 7 replies
- 1.8k views
-
-
அவுஸ்திரெலியா ABC தொலைக்காட்சியில் வந்த சிங்களப் பேராசிரியர் Professor Sisira Jayasuriya ன் பேட்டி (மற்றைய சிங்களவர்கள் போல இவர் பொய் பேசாமல் உண்மையைச் சொல்லி இருக்கிறார்) http://www.abc.net.au/reslib/200901/r334759_1514920.asx இவரின் பேட்டியில் இருந்து 1) விடுதலைப் புலிகள் பலமிழக்கவில்லை 2) சிறிலங்காப் படையின் எறிகணையினால் அதிகளவு மக்கள் கொல்லப்பட்டிருக்கிறார்கள் 3) சிறிலங்காவுக்கு சுதந்திரம் கிடைத்தபின்பு சிறிலங்கா அரசினால் தமிழர்கள் மிகவும் பாதிக்கப்பட்டிருக்கிறார்கள
-
- 7 replies
- 2.3k views
-
-
ஒரு நிமிடத்தில் click செய்து கையெழுத்திடுங்கள்! சிங்களவர்கள் 25,000 கையெழுத்திட்டார்கள். தமிழர் 4000 மட்டுமே! http://www.petitiononline.com/oguav96
-
- 7 replies
- 3.2k views
-
-
ஈழத்தின் மீதான இந்திய மேலாதிக்கப் போருக்கு பதிலடி கொடுப்போம்! தேர்தலைப் புறக்கணிப்போம்! என்ற தலைப்பில் மே 01 அன்று தஞ்சையில் மக்கள் கலை இலக்கியக் கழகம் மற்றும் அதன் தோழமை அமைப்புகளான புதிய ஜனநாயகத் தொழிலாளர் முன்னணி, புரட்சிகர மாணவர் இளைஞர் முன்னணி, விவசாயிகள் விடுதலை முன்னணி, பெண்கள் விடுதலை முன்னணி ஆகியவை இணைந்து மேதினப் பேரணி மற்றும் பொதுக்கூட்டத்தை வீச்சாக நடத்தின. தஞ்சை திருவள்ளுவர் திடலில் காலை எட்டு மணிக்கு புதிய ஜனநாயகத் தொழிலாளர் முன்னணியின் மாநிலத் தலைவர் தோழர் அ.முகுந்தன் அவர்களால் கொடியேற்றம் நடைபெற்றது. அதன்பிறகு 9 மணிக்கு ஓவியக் கண்காட்சியை தோழர் துரை. சண்முகம் துவங்கி வைத்தார். தோழர் முகிலன் வரைந்த அந்த ஓவியங்களில் ஈழம் பற்றிய ஓட்டுச் சீட்டு அரசியல்வாத…
-
- 7 replies
- 2k views
-
-
அன்பார்ந்த தமிழீழ பிரஜைகளே, புலம் பெயர் உறவுகளே, தமிழகத்து சகோதரங்களே, மற்றும் மனித உரிமைகள் ஆர்வலர்களே! ஈழத்தமிழரின் துயர்மிகு நாளும், முள்ளிவாய்க்கால் நினைவு தினமான மே 18ம் திகதியை நினவு கூருவதற்கான காலநேரம் அண்மித்துக்கொண்டு வருகிறது. நாம் எமக்கு அருகாமையில் உள்ள இடமொன்றில் கூடி வணக்கம் செலுத்த இருக்கிறோம். இனவேறி பிடித்த சிங்கள இராணுவம், அநாதரவாக நின்ற 146,000 மேலான அப்பாவித்தமிழ் மக்களை கொடூரமான முறையில், பல அக்கிரம செயல்களை நடாத்தி, ஈவிரக்கம் காட்டாமல் கொலைசெய்து மூன்றாண்டுகாலம் உருண்டோடிவிட்டது. இருந்தும் இந்த காதகர்களை பொறுப்பு கூறவைக்க நாம் இன்னமும் நீண்ட தூரம் பயணிக்க இருக்கிறது. உண்மையில், பலநாட்களாக, பல புலம் பெயர் உறவுகளின் உறங்காத உழைப்புக்களின் பின்னும், …
-
- 7 replies
- 964 views
-
-
யேர்மனி ஸ்ருட்கார்ட் நகரத்தில் 8.10.2022முதல் 7.5.2023வரை ‘அகம் புறம்’ எனும் தலைப்பில் ஒரு கண்காட்சி நடந்து கொண்டிருக்கிறது. அதைப் பார்ப்பதற்கு ஆவல் இருந்தும் கொரோனா கெடுபிடிகளால் தள்ளிப் போட்டுக் கொண்டே வந்தேன். இன்னும் ஒரு மாதத்தில் கண்காட்சி முடிந்து விடும் என்பதால் இப்போது போயிருந்தேன். உலகளாவிய ரீதியில் தமிழர்கள் வாழும் நாடுகள், தமிழ் மொழியைப் பற்றிய ஒரு சில ஆவணங்கள் மட்டுமே அங்கே இருந்தன. மற்றும்படி தமிழக சினிமா, தமிழகக் கடைகளின் பெயர்ப் பலகைகள், தமிழக திமு, திமுக தலைவர்கள், தஞ்சைப் பெரிய கோவில் பற்றிய சிறு குறிப்பு என தமிழ்நாடு பற்றிய தகவல்களைத் தவிர வேறெதுவும் பெரிதாக உலகத் தமிழர்களைப் பற்றி அங்கே எனக்குக் கிடைக்கவில்லை. குறிப்பாக, ஈழத் தமிழர்கள் பற்…
-
- 7 replies
- 958 views
-
-
-
- 7 replies
- 958 views
-
-
கனடா: ஒன்ராரோயோ மாநில என்.டி.பி. கட்சியின் கொறடாவாக ஈழத்தமிழர் நீதன் சண் இன்று நடந்த மாநில கட்சிக்கான பிரதம கொறடா ( இது தான் இதன் மொழிபயர்ப்பு என எண்ணுகிறேன்) பதவிக்கு நடந்த போட்டியில் இதில் போட்டியிட்ட நீதன் சண் வெற்றிபெற்றார். இது அனைத்து தமிழர்களுக்கும் ஒரு மகிழ்வான செய்தி. கட்சியின் தலைவரான அன்றியா ஹோர்வாத்தின் தலைமைக்கும் கட்சி உறுப்பினர்கள் ஆதரவு தெரிவித்தனர். நீதன் சண் இந்தப்பதவியில் மூன்று வருடங்களுக்கு இருப்பார். கட்சியை மறுசீரமைப்பது கட்சியை வளர்ப்பது நிதி சேர்ப்பது போன்ற பொறுப்புக்கள் நீதனுக்கு இருக்கும். In other convention news, Andrew MacKenzie of Hamilton was not successful in his bid to be elected party president. He lost to Neethan…
-
- 7 replies
- 947 views
-
-
வணக்கம். இப்புலம் பெயர்ந்த நாடுகளில் வாழும் நம்மில் தாயகவிடுதலை பற்றிக்கதைக்கும் நம்மில் எவ்வளவு மக்கள் இந்தவிடுதலைக்காக தம் முழுமையாகப் பங்களிப்புச் செய்கிறார்கள். அதில் நீங்கல் எப்படி?. என்னைப் பொருத்தவரை நான் பலவிடயங்களில் என் காத்திரமானபங்கைச் செய்கிறேன். அப்படி நாம் எல்லோரும் ஒன்ரு சேர்ந்தால் நமக்குமுன்னால் உள்ள கல்லும் தூசாகும். ஒன்றுபடு தமிழா ஒன்றுபடு நமை எதிர்க்கின்ற படையை வென்றுவெடு...... தலைப்பு தமிழில் மாற்றப்பட்டுள்ளது - யாழினி
-
- 7 replies
- 2k views
-
-
மக்களிற்காக போராடி மடிந்தவர்கள் என்றும் எம் நினைவுகளில் வாழ்வார்கள். அவர்களின் போராட்டங்களை தொடர்வதும், அவர்களின் செய்திகளை அடுத்த கட்டங்களிற்கு, அடுத்த தலைமுறைகளிற்கு எடுத்துச் செல்லுவதுமே அவர்களிற்கான அஞ்சலியாக அமையும். அந்த நாளில் அல்லது அந்த மாதத்தில் வெறும் சடங்காக செய்யப்படுபவை எந்த விதமான அர்த்தமும் இல்லாதவை. இளையராஜா கனடாவிற்கு இசைநிகழ்ச்சி ஒன்றை நடத்துவதற்காக கார்த்திகை மாதம் வருகிறார் என்றதும் புலம்பெயர் புண்ணக்குகளின் தேசபக்தி உச்சத்திற்கு போய்விட்டது. மாவீரர் தினம் வரும் கார்த்திகை மாதத்தில் எப்படி இசைநிகழ்ச்சி நடத்தலாம் என்று புலம்புகிறார்கள். ஆனால் விடாது கருப்பு என்பதைப் போல், வெளிநாட்டிற்கு வந்தாலும் விடாது தமிழனை துரத்தும் கோமாளித்தனமான தமிழ்ப்…
-
- 7 replies
- 1.7k views
-
-
சிறீலங்காவை அனைத்துலக குற்றவியல் நீதிமன்றத்திற்கு பரிந்துரைக்க முடியாது – பிரித்தானியா 76 Views சிறீலங்கா அரசு ரோம் சாசனத்தை அடிப்படையாகக் கொண்ட அனைத்துலக குற்றவியல் நீதிமன்றத்தில் உறுப்பு நாடாக இல்லாததால் அதனை குற்றவியல் நீதிமன்றத்தில் நிறுத்த முடியாது என பிரித்தானியா வெளிவிவகார அமைச்சு கடந்த 16 ஆம் நாள் எழுதிய கடிதம் ஒன்றில் தெரிவித்துள்ளது. இந்த தகவலை தமிழ்நெற் இணையத்தளம் வெளியிட்டுள்ளது. அதில் மேலும் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது: நாம் சிறீலங்கா வெளிவிவகார அமைச்சர் தினேஸ் குணவர்த்தனா மற்றும் சிறீலங்காவுக்கான பிரித்தானியா தூதுவர் ஆகியோருடன் தொடர்ந்து கலந்துரையாடல்களை மேற்கொண்டு வருகின்றோம். சிறீலங்கா அரசு…
-
- 7 replies
- 1.6k views
-
-
வடக்கு முதலமைச்சர் சி.வி விக்கினேஸவரன்! இன்று கனடா வந்து இறங்கிய போது!!
-
- 7 replies
- 1.4k views
- 1 follower
-
-
முப்பது வருடங்களின் பின்னர் நான் மீண்டும் எனது மண்ணில் காலடியெடுத்து வைத்திருக்கின்றேன். சிலவருடங்களாக எனது நாட்டிற்குப் போக வேண்டும் என்ற உந்துதல் அதிகமாகவேயிருந்தது. அது தற்போது சாத்தியப்பட்டிருக்கின்றது. போய் வந்தபின்னர் எனது உணர்வுகள் பற்றிப் பலரும் கேட்டார்கள். உடனே சொல்ல முடியவில்லை. ஆனால் என் மன ஓட்டத்தில் எனது பயணம் எனக்குள் உரையாடலை நிகழ்த்திக் கொண்டேயிருக்கின்றது. அரசியல், சமூக, இலக்கிய நோக்கைத் தாண்டி கிடைத்த சந்தர்ப்பத்தில் நாட்டை, எனது ஊரைப் பார்த்துவிட வேண்டும் என்ற ஆவலுடன் மேற்கொண்ட பயணம் இது. ஊரில் எனக்கு எந்த உறவினருமில்லை, எனது ஊரை விட்டுவந்து முப்பது வருடங்களாகிவிட்டது, முன்பிருந்த அயலவர்களும் அதிகமில்லை. எனக்கு அடுத்த சந்ததியினர் எப்படியிருப்ப…
-
- 7 replies
- 1.1k views
-
-
Get Flash to see this player. நன்றி http://www.vakthaa.tv/v/3533/kolathur-mani-speech
-
- 7 replies
- 1.3k views
-
-
இதனை சரியான பகுதிக்கு நகர்த்தி விடுமாறு நிர்வாகத்தினரை கேட்டு கொள்கிறேன் இது பங்கு சந்தை தொடர்பான பதிவு பங்கு சந்தையில் ஆர்வம் உள்ளவர்களுக்கானது பெரிய பதிவு விருப்பம் உள்ளவர்கள் ஆர்வம் உள்ளவர்கள் வாசித்து பயன் பெறுங்கள் part-1 உலகின் அனைத்து அசைவுகளையும் தீர்மானிப்பதில் பொருளாதாரம் இன்று முதன்மை வகிக்கின்றது. பொருளாதாரத்தின் அசைவுகளைத் தீர்மானிப்பதில் பங்கு சந்தைகள் முக்கியத்தவம் வகிக்கின்றன. இவைபற்றித் தமிழில் தெரியும் வாய்ப்புக்கள் அரிதாகவேயுள்ளன. பங்கு சந்தையில் பல விஷயங்கள் இருந்தாலும் நாம் தற்பொழுது பங்கு வர்த்தகத்தில் அதிகமானோர் பயன்படுத்தும் மேலும் இன்னும் அதிகமானோருக்கு தெரியாமல் இருக்கும் TECHNICAL ANALYZING ஐ ப…
-
- 7 replies
- 6.1k views
-
-
[size=4]2009ம் ஆண்டின் இலங்கைத்தீவின் இறுதி யுத்த காலத்தில், தமிழக தொலைக்காட்சியொன்றில் நடனத்தில் நிகழ்வொன்றின் ஊடாக, ஈழத்தமிழர்களின் அவலத்தினை வெளிப்படுத்தி, உலகத் தமிழர்களின் நெஞ்சங்களை உருகவைத்த ஈழத்தமிழ் நடனக்கலைஞர் பிரேம் கோபால் பிரான்சில் கடந்த 17ம் திகதி கௌரவிக்கப்பட்டார்.[/size] [size=4]பிரான்ஸ் தமிழர் நடுவத்தின் கலை பண்பாட்டுத் துறையின் ஒழுங்கைமைப்பில், பிரான்ஸ் வாழ் ஈழத்தமிழர் கலைஞர்கள், இந்தக் கௌரவித்தினை வழங்கினர்.[/size] [size=4][/size] [size=4][/size] [size=4][/size] [size=4][/size] [size=4][/size] [size=4][/size] [size=4][/size] [size=4][/size] [size=4][/size] [size=4][/size] [size=4][/size] [siz…
-
- 7 replies
- 1.3k views
-
-
கொண்டாட்டம் உயர்வுகளைத் தொடுவது கட்டாயம் என்று பிறந்தநாள் முதல் திணிக்கப்பட்டுவிட்ட நிலையில், நினைவு தெரிந்தவரை ஒட்டம் இருந்து கொண்டேயிருக்கின்றது. அருவரி தொட்டு வெற்றிகளைக் குறிவைத்த முயற்சியும் வெற்றியைக் கொண்டாடுவதும் நடக்கிறது. இருப்பினும், காலப்போக்கில் ஒட்டம் மட்டும் தொடர, வெற்றிகளைக் கொண்டாடுவதற்குத் தெரியாமல் போய் விடுகிறது. வெற்றிகைளத் கொண்டாடத் தெரியாமல் போவதற்கான அடிப்படைக் காரணம், வெற்றிகளை அடையாளங் காண்பது மறந்துபோகின்றது. ஓட்டம் மட்டும் வாழ்வாகி, ஓட்டம் நிற்காது தொடர்வதற்கான அடிப்படையாக வெற்றி என்பது எதிர்காலத்தில் எங்கோ ஒரு பொழுதில் பிறக்கவிருக்கும் வரைவிலக்கணப்படுத்தப்படாத ஒன்றாகிப்போகின்றது. ஓட்டமே மதமாக மொழியாக மூச்சாக பிணைப்பாக ஆகிக்கொள்கிறது.…
-
- 7 replies
- 2.5k views
-
-
To: cmcell@tn.gov.in, cmsec@tn.gov.in Cc: av@vikatan.com, ennangal@vikatan.com, nakkheeeran@gmail.com, politics@kumudam.com, periyarpinju@gmail.com, imtc1974@yahoo.com, thirumaa@hotmail.com, news@makkal.tv, san@makkal.tv, ceo@makkal.tv, prgm@makkal.tv அன்புக்குரிய எமது தொப்புள்கொடி உறவுகளின் தலைவர்களே, தமிழினத் தலைவரும் தமிழினக் காவலருமாகிய மாண்புமிகு முனைவர் கருணாநிதி அவர்களே, இரத்த வெள்ளத்தில் துடிக்கும் ஈழத் தமிழனுக்காக உயிர் கசியும் புலம் பெயர் தமிழனின் கண்ணீர் மனு!!!! பல காலம் இம்சைப்பட்டு நோய்வாய்ப்பட்டு உங்களுக்கு பலமுறை சொல்லியனுப்பியும் உங்களை பார்க்க கடைசிவரை பார்த்திருந்து இன்று மீளா தூக்கத்தில் ஆழ்ந்த எம் உடன் பிறப்புக்களின் மரண செய்…
-
- 7 replies
- 3.1k views
-
-
கனடாவில் தமிழர் திருமணத்தில் நடைபெற்ற உக்கிர மோதல்: காரணம் இதுவா? கனடாவின், டொரன்டோவில் இடம்பெற்ற திருமணமொன்றில் இடம்பெற்ற மோதல் தொடர்பாக சர்வதேச ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன. குறித்த மோதலானது மணப்பெண் மற்றும் மணமகன் குடும்பத்தினரிடையே இடம்பெற்றுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. குறித்த மோதலின் காணொளியும் இணையத்தில் வெளியாகியுள்ளது. இந்நிலையில் இம்மோதலுக்கான காரணம் தொடர்பில் பல்வேறு தகவல்கள் தெரிவிக்கப்பட்டு வருகின்றது. மணமகளின் முன்னாள் காதலன் திருமணத்துக்கு வந்து அந்தரங்க படங்களை சிலவற்றை வெளியிட்ட தாகவும் இதன் பின்னரே மோதல் இடம்பெற்றதாகவும் சில ஊடகங்கள் தெரிவிக்கின்றன. …
-
- 7 replies
- 1.9k views
-