வாழும் புலம்
புலம்பெயர் நாடுகள் | தமிழர் வாழ்வு | அனுபவங்கள் | அன்றாட நிகழ்வுகள்
வாழும் புலம் பகுதியில் புலம்பெயர் நாடுகள், தமிழர் வாழ்வு, அனுபவங்கள், அன்றாட நிகழ்வுகள் சம்பந்தமான பதிவுகள் இணைக்கப்படலாம்.
புலம்பெயர் நாடுகளில் வசிக்கும் தமிழர்கள் பற்றியதும் புலம்பெயர் தமிழர்களுக்கு அவசியமானதுமான செய்திகள், தகவல்கள் மாத்திரம் இணைக்கப்படல் வேண்டும்.
5812 topics in this forum
-
ஈழத்தமிழ் பெண் ஹம்சாயினி குணரட்ணம் நோர்வே- ஒஸ்லோ மாநகர துணை மேயராக தெரிவு! நோர்வே தலைநகர் ஒஸ்லோ மாநரக துணை மேயராக ஈழத்தமிழ் பெண்ணான ஹம்சாயினி குணரட்ணம் தெரிவுசெய்யப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது. கடந்த செப்ரெம்பர் மாதம் இடம்பெற்ற உள்ளூராட்சித் தேர்தலில் வெற்றிபெற்ற இவர், புதிதாக பதவியேற்கவுள்ள நகரசபை நிர்வாகத்தின் துணை மேயராக தெரிவாகியுள்ளார். தொழிலாளர் கட்சியைச் சேர்ந்த ஹம்சாயினி கட்சியின் ஒஸ்லோ மாநகர கிளையின் துணைத் தலைவராக பதவி வகித்து வருவதுடன், தொழிலாளர் கட்சியின் இளைஞர்பிரிவு தலைவராகவும் பதவி வகித்திருந்தார். 27 வயதான இவர், 2011 ம் ஆண்டு நோர்வேயில் தொழிலாளர் கட்சியின் இளைஞர் மாநாட்டில் மேற்கொள்ளப்பட்ட பயங்கரவாத தாக்குதலிருந்து தப்பியவர் என்பது குறிப்பிடத்தக…
-
- 3 replies
- 2.1k views
-
-
ஈழத்தமிழ் மக்களின் அவலங்கள் பற்றிய சான்றுகள். ஈழத்தமிழ் மக்களின் வராலாறும் அவர்களின் வாழ்விடங்களை காலகாலமாக சிங்கள அரசு அபகரித்துவருவதற்கான சான்றுகளும் அதற்கான புள்ளிவிபரங்களும்இ 1958தொடக்கம் இன்றுவரை மேற்கொள்ளப்பட்டுவரும் இனவழிப்பு நடவடிக்கைகள் பற்றிய சான்றுகளும் புகைப்படங்களும் தேவையாக உள்ளது. இச்சான்றுகளைத் தரக்கூடியவர்கள்இ இவற்றைத் தேடி இணைக்கக் கூடியவர்கள் இப்பகுதியில் இணைத்துக்கௌள்ளும்படி அன்புடன் கேட்டுக் கொள்ளுகிறேன்.
-
- 7 replies
- 1.5k views
-
-
இலங்கைத்தீவு விடயத்தில் அமெரிக்காவின் ஈடுபாடு தொடர்பில் பல்வேறு வியாக்கியானங்கள் வழங்கப்படுகின்றன. அவை ஒன்றுக்கொன்று முரண்பட்ட கருத்துகளாக இருந்தபோதிலும், நீண்டகால மூலோபாய அடிப்படையிலேயே அமெரிக்கா தனது நாட்டின் நலன்கருதி ஈழத்தமிழர்கள் விடயத்தில் செயற்படுகின்றது என்பதில் கருத்து வேறுபாடுகளில்லை. மூன்றாம் உலக நாடுகளை தமது ஒழுங்குக்குள் கொண்டு வருவதற்கு அமெரிக்கா முற்படுகின்றது. அதனடிப்படையில் முரண்டு பிடிக்கும் சிறிலங்கா அரசாங்கத்தின் மீது நடவடிக்கை எடுக்க லிபியா உட்பட்ட சில நாடுகளில் மேற்கொள்ளப்பட்ட வழிமுறைகள் போலன்றி முற்றிலும் வேறுபட்ட ஒரு புதிய மூலோபாயத்தைக் கையாண்டு வருகிறது. அந்த வழிமுறையானது ஈழத்தமிழர்களின் தமிழீழக் கோரிக்கையை நிரந்தரமாகவே நலிவடையச் செய்கின்ற ஒரு வழி…
-
- 0 replies
- 747 views
-
-
ஈழத் தமிழ் மாணவன் சர்வதேச அரங்கில் கவனத்தை ஈர்த்துள்ளார். இலங்கையிலிருந்து புலம்பெயர்ந்து இந்தியாவில் கல்வி கற்றுவரும் ஈழத்தமிழரான அர்ச்சிகன் என்ற மாணவனே இவ்வாறு தமிழர்கள் மத்தியில் பாராட்டுக்களைப் பெற்று வருகின்றார். விஜேந்திரகுமார் - மேனகா தம்பதிகளின் மகனான அர்ச்சிகன், அமெரிக்காவில் உள்ள விண்வெளி நிறுவனமான National Space Society (NSS) சர்வதேச ரீதியாக மாணவர்களிடையே நடத்திய போட்டியில் வெற்றி பெற்றுள்ளார். விண்வெளியில் மனிதர்களைக் குடியமர்த்தும் போது பின்பற்ற வேண்டிய அறிவுசார் நுட்பங்களை உள்ளடக்கி, அவரது சிந்தனையில் உருவான செயற்றிட்டம் வெற்றி பெற்றுள்ளதாக NATIONAL SPACE SOCIETY (NSS) அறிவித்துள்ளது. NSS அமைப்பின் தலைமை உலகம் முழுவதும் …
-
- 5 replies
- 909 views
- 2 followers
-
-
ஈழத்தமிழ்ப் பெண் சிவராதை லோகநாதனின் சாதனை. http://www.nitharsanam.com/?art=17600 சிவராதை லோகநாதனுக்கு வாழ்த்துக்கள்
-
- 14 replies
- 3.5k views
-
-
http://www.aanthaireporter.com/?p=5629 “விடுதலையின் பாதையில்” படபபிடிப்பின் நடந்த விறுவிறுப்புகள்! கடந்த ஆடி ஆவணி மாத காலகட்டத்தில் அமெரிக்க திரைப்பட கலைஞர் சுகிர் பொன்ச்சாமி தனது குழுவுடன் ஆந்திர மாநிலம் விசாகபட்டிணத்தின் தெற்கே உள்ள தேவிபுரம் எனும் ஒரு சிறிய கிராமத்துக்குச் சென்றார். அவர்கள் அங்கே உள்ள திரை தொழிலாளிகளுடன் சேர்ந்து விடுதலையின் பாதையில் எனும் படத்தை தயாரிக்க திட்டமிடடிருநதனர். இந்த விடுதலையின் பாதைக்கும் ஆந்திரா இரண்டாக பாடாய் படுவதற்கும் தொடர்பில்லை. விடுதலையின் பாதை குழுவுக்கு கிடைத்த முதல் வரவேற்ப்பும் அங்கு குழுமியிருந்த திரை தொழிலாளிகளும் கொடுத்த உற்சாகம் பெரிய தெம்பைக் கொடுத்தது.இதற்கிடையில் தேவிபுரம் எனப்படும் ஆன்மிக கிராமம் ப…
-
- 0 replies
- 745 views
-
-
ஈழத்தின் பிரபல நாடகக் கலைஞரும் ஊடகவியலாளருமான டேவிட் ராஜேந்திரன் கடந்த 19-ம் திகதி வியாழக்கிழமை லண்டனில் காலமானார். ஈழத்தில் இருந்து புலம்பெயர்ந்து 30 ஆண்டுகளுக்கு மேலாக பிரான்சில் வசித்து வந்த டேவிட் ராஜேந்திரன், ஓரிரு மாதங்களுக்கு முன்னரே லண்டனில் குடியேறி சிறிது காலம் நோய்வாய்ப்பட்டு மருத்துவ மனையில் அனுமதிக்கப்பட்ட பின்னர் மரணமடைந்தார். இலங்கை ஒலிபரப்புக் கூட்டுத்தாபனம் இலங்கை வானொலி என்ற பெயரில் இயங்கி வந்த 1960-களின் பிற்பகுதியில் அந்த நிறுவனத்தில் தொழில் நுட்ப பொறுப்பாளராகப் பணியாற்றத் தொடங்கிய டேவிட் ராஜேந்திரன், அன்றைய நாட்களில் நேயர்கள் மத்தியில் பிரபல்யம் பெற்ற கிராமியப் பாடல்கள் நிகழ்ச்சியின் தொழில்நுட்பப் பொறுப்பாளராகவும் நிகழ்ச்சித் தயாரிப்பாளராகவும் ந…
-
- 0 replies
- 780 views
-
-
ஈழத்தின் மீதான இந்திய மேலாதிக்கப் போருக்கு பதிலடி கொடுப்போம்! தேர்தலைப் புறக்கணிப்போம்! என்ற தலைப்பில் மே 01 அன்று தஞ்சையில் மக்கள் கலை இலக்கியக் கழகம் மற்றும் அதன் தோழமை அமைப்புகளான புதிய ஜனநாயகத் தொழிலாளர் முன்னணி, புரட்சிகர மாணவர் இளைஞர் முன்னணி, விவசாயிகள் விடுதலை முன்னணி, பெண்கள் விடுதலை முன்னணி ஆகியவை இணைந்து மேதினப் பேரணி மற்றும் பொதுக்கூட்டத்தை வீச்சாக நடத்தின. தஞ்சை திருவள்ளுவர் திடலில் காலை எட்டு மணிக்கு புதிய ஜனநாயகத் தொழிலாளர் முன்னணியின் மாநிலத் தலைவர் தோழர் அ.முகுந்தன் அவர்களால் கொடியேற்றம் நடைபெற்றது. அதன்பிறகு 9 மணிக்கு ஓவியக் கண்காட்சியை தோழர் துரை. சண்முகம் துவங்கி வைத்தார். தோழர் முகிலன் வரைந்த அந்த ஓவியங்களில் ஈழம் பற்றிய ஓட்டுச் சீட்டு அரசியல்வாத…
-
- 7 replies
- 2k views
-
-
பிரவரி 24 ஆம் தேதி ஜான் கெரியின் தலைமையில் ஈழத்தில் நடக்கும் மனித உரிமை மீறல்கள், கொலைகல் குறித்தான் விவாதத்திற்கு உங்கள் கருத்துக்களை சொல்லுங்கள். இன்னும் இரண்டே நாட்கள் இருக்கிற நிலையில் இதை உடனடியாக செய்ய வேண்டியது முக்கியம். விவரங்கள் கீழே: US Senate Committee on Foreign Relations’ hearing on Sri Lanka TAMIL GENOCIDE is on Feb. 24th ONLY 2 DAYS LEFT!!! http://foreign.senate.gov/hearings/2009/hrg090224p.html http://www.tamilsydney.com/index2.php?opti...f=1&id=1862 The witnesses seem positive. Please send compelling stories to the Chair, John Kerry and the witnesses too. Please, please submit your letters to them, politely but with comp…
-
- 0 replies
- 618 views
-
-
புலம் பெயர்ந்த ஈழத் தமிழர் ஒருர் அவுஸ்திரேலிய இராணுவத்தினால் இந்த வாரம் மேஜராகத் தரமுயர்த்தப்பட்டார். major-lavan மேஜர் சேரலாதன் தர்மராஜா அகா லவன் எனப்படும் குறித்த நபர் தனது 19ஆவது வயதில் தனது குடும்பத்தினருடன் அவுஸ்திரேலியாவில் புகலிடம் தேடிக்கொண்டார். மேஜர் தர்மராஜா என அழைக்கப்படும் லவன் தொடர்பாக அவரது நண்பர் கருத்துத் தெரிவிக்கையில், 19 வருடங்களுக்கு முன்னர் நாம் இருவரும் அவுஸ்திரேலிய மண்ணில் கால் பதித்தோம். நாமிருவரும் கோம்புஸ் ஹவுஸ் பாடசாலையில் பத்து வருடங்கள் ஒன்றாகக் கல்வி கற்றோம். ஆனால், லவன் ஒருபோதுமே தனது பயணம் குறித்து எதுவுமே சொல்லவில்லை. இருப்பினும் அவனுடைய பயணம் எனக்கு நிறையவற்றைக் கற்றுக்கொடுத்துள்ளது. அதனை நான் உங்களுக்குத் தெரியப…
-
- 4 replies
- 1.2k views
-
-
-
ஈழத்து நாடகத்துறை முன்னோடி டேமியன் சூரி மேடையிலேயே தனது உயிரை அர்ப்பணித்தார் பிரான்ஸ் திருமறைக் கலா மன்றத்தினால் வருடாந்தம் நடாத்தப்பட்டு வரும் “கலைவண்ணம்” கலை நிகழ்வின் சிறப்பு அரங்காற்றுகையாக “தங்கத் தமிழ் வேந்தன்” என்ற நாட்டுக்கூத்து மேடையேற்றப்பட்டது.இந்த நாட்டுக் கூத்தை இயக்கி அதில் கும்பகர்ணன் பாத்திரமேற்று, நடித்திருந்த டேமியன் சூரி கூத்து நடைபெற்றுக் கொண்டிருந்த வேளை, இராமனால் எய்யப்பட்ட அம்பு தைத்து வீழ்வதாக நடித்த படியே மேடையிலேயே உயிரிழந்தார் ஈழத்து நாடகத்துறை முன்னோடியான டேமியன் சூரி.ஐம்பது ஆண்டுகளுக்கு மேலாக கலையுலகிற்கு அருஞ்சேவையாற்றிய இவர், அரங்கிலேயே உயிரை அர்ப்பணித்துள்ளது குறிப்பிடத்தக்கது. இந்த நாட்டுக் கூத்தை இயக்கி அதில் கும்பகர்…
-
- 8 replies
- 1.5k views
-
-
சில நாட்களாக என் மனதில் உறுத்தலாகவே உள்ளது. ஒரு நாடு மொழி, காலச்சாரம் என்று போராடி விட்டு, அதை எதையுமே காப்பாற்றாத முடியாத நாட்டில் பணத்தையும், சுகவாழ்க்கையையும் மையப்படுத்தி வாழ்கின்ற வாக்கை சரியா என்று. என்னுமொரு 10 வருட காலப்பகுதிக்குள் திரும்பிச் சென்று வாழவே விரும்புகின்றேன். இது நடக்குமா என்றால்... நடக்க வேண்டும் என்பதே அவா. ஆனால் எம்முள் பலருக்கு அது விருப்பமில்லாமல் இருக்கலாம். ஆனாலும் வெளிநாட்டு வாழ்க்கை என்று வந்த பலரில் அவதானித்த ஒரு விடயம். ஏதோ அங்குள்ள வாழ்க்கையை விடக் கூடச் சம்பாதிக்கின்றார்கள். ஆனால் செய்கின்ற வேலை என்பது....அடுத்த தலைமுறை ஏதோ படித்து வேலை பார்க்கும் நிலைக்கு வந்தாலும் அது எச் சமயத்திலும் மொழி, இனம் பற்றிக் கவலைப்படவே போவதில்லை. நாங்கள் காட…
-
- 41 replies
- 4k views
-
-
துமிலன் செல்வகுமாரன் ஈழத்தில் இருந்து தனது நான்காவது வயதில் யேர்மனிக்கு இடம் பெயர்ந்தவர். கணினித்துறையில் தனது தொழில்சார் கல்வியை முடித்திருந்தாலும், எழுதுவதில் உள்ள ஆர்வத்தால் பத்திரிகைத் துறைக்குள் நுழைந்து நிருபராக, புகைப்படக் கலைஞராக ஆரம்பித்து இன்று ஒரு பத்திரிகையின் ஆசிரியராகவும், எழுத்தாளராகவும் செயற்பட்டுக் கொண்டிருக்கிறார். வெளிநாட்டவர்களுக்கு எதிராகச் செயற்படும் NSU என்ற திரைமறைவு அமைப்பின் கொலைகள் மற்றும் செயற்பாடுகளைப் பற்றிய Geheimsache NSU என்ற புத்தகத்தை இவர் ஒன்பது எழுத்தாளர்களுடன் இணைந்து யேர்மனிய மொழியில் எழுதி இருக்கின்றார். 2023இல் யேர்மனி-ஸ்வேபிஸ் ஹால் நகரில் நடந்த நான்கு விதவைகளின் தொடர் கொலைகளை ஆராய்ந்து பொலீஸாரின் கவன…
-
-
- 28 replies
- 2.1k views
- 4 followers
-
-
எதிர்வரும் 14 திகதி ஈழபதீஸ்வரர் ஆலயத்திற்கு முன்னால் பாரிய ஆர்பாட்டம் நடைபெற உள்ளது. கடந்த 8 வருடங்களாக கோவில் கணக்கு காட்டப்படாமை பொதுமக்களின் கோவலை தனது சொந்த கம்பனியாக ஜெயதேவன் கள்ள உறுதி முடித்து தட்டிசுத்தியமை. கோவில் காசில் கொழும்பில் வீடு லண்டனில் மூண்று வீடுகள் வாங்கியமை. கோவிலைசாட்டி மக்களிடம் இருந்து உண்டியல் ஊடாக பணம் கறக்கின்றமை ஆகியற்றை எதிர்த்து தளபதி றாஜன் தலைமையில் பாரிய ஆர்பாட்டமும் ஒண்றுகூடலும் நடைபெற உள்ளது அனைத்து தமிழ் ஆர்வலர்களும் வந்து கலந்துகொள்ளுமாறு அன்புடன் கேட:டக் கொள்ளுகின்றோம். கோரிக்கைகள். கணக்கு வளக்கு கடந்த 8 வரடத்தானும் காட்டப்படல் வேன்டும். கடந்த 8 வருட உண்டியல் கணக்கு காட்டப்படல்வேன்டும். கோவில் பொதுமக்களின் பொத…
-
- 52 replies
- 9.7k views
-
-
Wall Photos புத்தக வெளியீடு: ஈழப் போராட்டத்தில் எனது பதிவுகள் ஆரம்பகால விடுதலைப் புலி உறுப...்பினரான ஐயர் (கணேசன்) அவர்களின் ஈழ விடுதலைப் போராட்டம் குறித்த மிக முக்கிய பதிவுகளை இந் நூல் தாங்கியுள்ளது.See More By: Trc Thedakam
-
- 108 replies
- 9.2k views
- 1 follower
-
-
ஈழமக்களை காக்கக்கோரி சிங்கப்பூரில் 48 மணிநேர அடையாள உண்ணாநிலை போராட்டம் [படங்கள்]சிங்கப்பூரைச் சேர்ந்த தமிழ் உறவான திரு ராஜசேகர் என்பவர் ஈழமக்களை காக்கக்கோரி இன்று சனிக்கிழமை காலை 10.00 மணியளவில் தொடங்கி வரும் திங்கட்கிழமை காலை 10.00 மணி வரையான 48 மணி நேர உண்ணாநிலை போராட்டத்தை தொடங்கியுள்ளார். மூலம்: மீனகம்.கொம்
-
- 2 replies
- 875 views
-
-
போர் என்றார்கள். சமாதானம் என்றார்கள். புரிந்துணர்வு ஒப்பந்தம் என்றார்கள்.அப்புறம் சமாதானத்திற்கான போர் என்றார்கள். சமாதானமும், போரும் நேர்முரணான சொற்பதங்கள் இரவையும் பகலையும் போல. துர்தேவதையின் பார்வை சுட்டெரித்ததில் வெண்புறாக்கள் வெந்து மடிந்தன புனைவுகள் உண்மையை வீழ்த்துவதைப் போல. உலோகப் பறவையின் எச்சங்கள் வீழ்ந்த வனங்களும், நகரங்களும் பற்றி எரிந்தன. சாவகச்சேரி சாவுகளின் கச்சேரியானது. யாழ் பாழானது. கிளிநொச்சியும், முல்லைத்தீவும் ஆக்கிரமிப்பாளனின் வசமாயின. உலகின் மிகப்பெரும் இடப்பெயர்வு அப்போது தான் நிகழ்ந்தது. வன்னித் தாய் குழந்தைகளை வாரி அணைத்துக் கொண்டாள் பருந்திடமிருந்து கோழி குஞ்சுகளைக் காப்பது போல. தமிழகத்திற்கு வெண்மணியும் தமிழீழத்திற்கு செம்மணியும் ஒடுக்குமுறையின்…
-
- 0 replies
- 513 views
-
-
ஈழம் - ஈரான் - அமெரிக்கா - ஜெயதேவன் (பாகம் 1) தலைப்பை பார்த்தால் மொட்டைத் தலைக்கும் முழங்காலுக்கும் முடிச்சு போடுவது மாதிரி தெரியும். ஆனால் உண்மையில் சில முடிச்சுக்கள் இருக்கத்தான் செய்கின்றன. விடயம் வெகு சுலபம். ஈழத்தில் அமெரிக்கா இராணுவரீதியாக தலையிடுமா? அதை ஈரான் விவாகாரம் தடுத்து நிறுத்துமா? அமெரிக்கா தலையிட்டால் ஈழத்தில் உள்ள தமிழ் மாநிலத்திற்கு ஜெயதேவன் இடைக்கால முதலமைச்சராக வருவாரா? கேள்விகள் இவ்வளவுதான். இனி பதில்களைப் பார்ப்போம் விடுதலைப்புலிகள் போரை ஆரம்பித்தால், அமெரிக்கா உடனடியாக தன்னுடைய படைகளை அனுப்பி விடுதலைப்புலிகளை அடக்கும் என்று பல சிங்களவர்களும் சில தமிழர்களும் நம்புகின்றார்கள். ஆனால் அமெரிக்காவிற்கு இலங்கைத்தீவில் தலையிடுவதற்கு அவசியமான …
-
- 2 replies
- 1.7k views
-
-
எம் பூர்வீகத் தொடர்பைப் பிரதிபலிக்கும், எமது வரலாற்று நாயகர்களை நினைவு கூறும், எம் உறவுகளின் தொடர்பை எடுத்துக் காட்டும், ஈடில்லா ஈழத்தை எம்முடன் இணைக்கும் ஆவணம் தானே இந்தத் தேசிய அடையாள அட்டை. தலைமுறை, தலைமுறையாக நாமும் எமது சந்ததியும் பெருமையுடன் பேணிக்காக்க வேண்டிய அளப்பரிய சொத்தல்லவா இந்தச் சர்வதேச சாதனம். எமது வாழ்க்கை பூராவும் பாவிக்கவல்ல இந்த அத்தாட்சிப் பத்திரத்தை குழந்தைகள் உட்பட ஒவ்வொரு ஈழத்தமிழரும் தவறாமலும், தாமதியாமலும் பெற்றுக்கொள்ள வேண்டும். இந்த ஆவணத்தைப் பெறுவோரின் எண்ணிக்கை கண்டு மகிந்தாவும் மருளவேண்டும், உலகமும் விழிப்படைய வேண்டும் அதேவேளை, உலகம் பூராவும், பல முனைகளில் இராஜதந்திர உறவுகளை உருவாக்கும் முயற்சிகளை மேற்கொண்டு வருகிறோம். இதில் ஒ…
-
- 3 replies
- 758 views
- 1 follower
-
-
ஈழத் தமிழ் மக்களை அகதிகளாய் துரத்தி முல்லைத்தீவில் அடைத்திருக்கும் சிங்கள இனவெறி இராணுவம் இதுவரை எவ்வளவு தமிழ் மக்களை கொன்றிருக்கிறது என்பதற்கு கணக்கில்லை. என்றாலும் உயிரைப் பறிகொடுத்தும், படுகாயமுற்றும் இருக்கும் மக்களின் விவரங்கள் ஏதோ ஒரு வகையில் நமக்கு தெரிய வருகின்றன. ஆனால் இந்த இனப்படுகொலைப் போரை நடத்தும் சிங்கள இராணுவ வீரர்களில் எத்தனை பேர் இறந்திருக்கிறார்கள் என்ற கணக்கு மட்டும் இரகசியமாக பாதுகாக்கப்பட்டு வருகிறது. ஓரிரு ஆயிரம் வீரர்கள் இறந்திருப்பார்கள் என்றும், பலநூறுபேர் பணியை விட்டு ஓடி வந்ததாகவும் உறுதி செய்யப்படாத தகவல்கள் தெரிவிக்கின்றன. இத்தனை இழப்பிருந்தும் சிங்கள இராணுவம் எப்படி தொடர்ந்து முன்னேறுகிறது என்பதற்கு முக்கியமான காரணம் இந்திய அரசு செய்து வ…
-
- 2 replies
- 2.8k views
-
-
போராட்ட படங்களை காண http://vinavu.wordpress.com/2009/02/13/eelam23/ ஈழத்தில் இறுதி தாக்குதல் என்ற பெயரில் தமிழ் மக்களின் மீது சிங்கள இனவெறி இராணுவம் தொடுத்திருக்கும் போரில் அன்றாடம் பல பத்து மக்கள் கொல்லப்படுகின்றனர். இந்தப் போரில் இந்தியா ஈடுபட்டிருக்கிறது என்பதற்கான ஆதாரங்களும் தற்போது வெளிவந்து கொண்டிருக்கின்றன. தமிழக மாணவர்களிடம் ஈழம் தொடர்பாக ஒரு விழிப்புணர்வு வந்திருப்பதை தடை செய்ய நினைத்த அரசு காலவரையற்ற விடுமுறை அறிவித்து 12.02.09 அன்று திறப்பதாக அறிவித்து செயல்படுத்தியது. திறந்த அன்றே திருச்சி நகரின் எல்லாக் கல்லூரி மற்றும் பள்ளி மாணவர்களை அணிதிரட்டிய புரட்சிகர மாணவர் இளைஞர் முன்னணி திருச்சி மத்திய பேருந்து அருகே உள்ள 117ஆவது பிரேதச இராணுவப்படை தலைமை அலுவல…
-
- 0 replies
- 3.9k views
-
-
ஈழத்திலை ஆயுதப் போராட்டம் முடிசிச்சுதா ... புலிகளின் தலைமையும் இல்லையெண்டு அறிவிச்சிட்டாங்களா இங்கினை ..புலம்பெயர் தேசங்களின் புலிகளின் கட்டமைப்போ நேத்திக்கடனிற்கு(வேண்டுதலுக
-
- 42 replies
- 6.2k views
-
-
யேர்மனியில் மார்ச் 16ந் திகதி வந்த அரசாங்க அறிவிப்பின்படி தனிமைப் படுத்தல் மேலும் இரண்டு வாரங்கள் அதிகமாக்கப்பட்டு ஏப்ரல் 3ந்திகதிவரை நீடிக்கப் பட்டிருக்கிறது. ஈஸ்டர், கிறிஸ்மஸ் இரண்டுமே யேர்மனியில் பிரதானமானவை. ஈஸ்டர் திருநாளை ஒட்டி யேர்மனியில் வெள்ளி முதல் திங்கள்வரை நான்கு நாட்கள் பொது விடுமுறை இருக்கிறது. பாடசாலைக்கு இரண்டு வாரங்கள் விடுமுறை. யேசுவை சிலுவையில் அறைந்த வெள்ளிக்கிழமையில் அநேக யேர்மனியர்கள் இறைச்சி சாப்பிடுவதில்லை. ஆனால் மீன் சாப்பிடுவார்கள். விருந்தினர்கள் வருகைகள், அன்பளிப்புகள் என்று யேசு உயிர்த்த ஞாயிறில் அவர்கள் களித்திருப்பார்கள். ஈஸ்டர் திருநாளில் முட்டைகளுக்கு வர்ணம் தீட்டி, அவற்றைத் தோட்டங்களில் ஆங்காங்கு ஒளித்து வைத்து விட்டு பிள்ளைகளிட…
-
- 2 replies
- 849 views
-
-
பொதுநலவாய நாடுகளின் தலைவர்களின் கூட்டத்தில் (CHOGM ) பிரித்தானிய பிரதம மந்திரி திரு.டேவிட் கமரூனை கலந்து கொள்ள வேண்டாமென பல்வேறு வழிகளில் பிரித்தானியத் தமிழர் பேரவை முயற்சி செய்த வண்ணம் உள்ளது. அவ்வகையில்இ மாபெரும் கையெழுத்து வேட்டை ஒன்றை தமிழ் மக்கள் வாழும் பகுதிகளில் நடத்தி அதனை அந்தந்த தொகுதி பாராளுமன்ற உறுப்பினர்களிடம் கையளித்துக் கொண்டிருக்கிறோம் ஏற்கனவே ,பிர்மின்காம், கவெண்ட்ரி, விம்பில்டன் ஈலிங் பகுதிகளிலுள்ள வழிபாட்டுத்தளங்களிலும் மற்றும் பொது இடங்களிலும் இந்தக் கையெழுத்து வேட்டை சிறப்பாக நடைபெற்றுள்ளது. இதன் தொடர்ச்சியாக தொழில் கட்சியைச் சேர்ந்த ஈஸ்ட்ஹாம் தொகுதிக்கான பாராளுமன்ற உறுப்பினர் Stephen Timms அவர்களை பிரித்தானிய தமிழர் பேரவை உறுபினர்கள் ச…
-
- 0 replies
- 354 views
-