வாழும் புலம்
புலம்பெயர் நாடுகள் | தமிழர் வாழ்வு | அனுபவங்கள் | அன்றாட நிகழ்வுகள்
வாழும் புலம் பகுதியில் புலம்பெயர் நாடுகள், தமிழர் வாழ்வு, அனுபவங்கள், அன்றாட நிகழ்வுகள் சம்பந்தமான பதிவுகள் இணைக்கப்படலாம்.
புலம்பெயர் நாடுகளில் வசிக்கும் தமிழர்கள் பற்றியதும் புலம்பெயர் தமிழர்களுக்கு அவசியமானதுமான செய்திகள், தகவல்கள் மாத்திரம் இணைக்கப்படல் வேண்டும்.
5814 topics in this forum
-
டொரொன்டோவில் குடிவரவாளர்களுக்கான, தொழிற்றுறை, கல்வி, மற்றும் குடியமர்வு தொடர்பான இலவச கருத்தரங்கம் (FREE CAREER EDUCATION & SETTLEMENT IMMIGRANT FAIR) நீங்கள் டொரொன்டோவிற்கு அண்மையில் வந்த குடிவரவாளரா? இந்த அரிய சந்தர்ப்பத்தைத் தவற விடாதீர்கள். ஜூன் மாதம் 8ம் திகதி மு.ப 10.00 மணி தொடக்கம் பி.ப 4.30 வரைக்கும் Metro Toronto Convention Centre (255 Front St. W) என்ற முகவரியில் இக்கருத்தரங்கம் நடைபெறுகிறது. இந் நிகழ்விற்கு Centennial College, Osgoode Professional Development – YORK University, Humber College ஆகியனவும், இன்னும் பல நிறுவனங்களும் ஆதரவு வழங்குகின்றன.
-
- 0 replies
- 444 views
-
-
ஒன்ராரியோவின் மாகாண அரசு கடந்த கல்வி ஆண்டில் புதிய / மறுசீரமைக்கப்பட்ட பாலியல் கல்விப் பாடத்திட்டத்தை பாடசாலைகளில் அறிமுகம் செய்ததைத் தொடர்ந்து, பல்வேறு இனக்குழுக்களினால், டொரொன்டோவின் பல பகுதிகளில் பெற்றோர்களால் எதிர்ப்பு நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டது தெரிந்ததே. தமிழ் சமூகத்தைச் சார்ந்த பெற்றோர்களும், தமிழ் அரசியல்வாதிகளும் இவ்வெதிர்ப்பு நடவடிக்கைளில் பங்கேற்றிருந்தனர். குறிப்பாக இஸ்லாமிய சமூகத்தவர் செறிந்து வாழும் பகுதியான Thorncliff Park இல், கடந்த வருடம் இவ்வெதிர்ப்பு நடவடிக்கையின் ஒரு பகுதியாக சில பாடசாலைகளில் 90% இற்கும் அதிகமான மாணவர்கள் பாடசாலைகளுக்குச் செல்லவில்லை. இது தவிர நகரின் முக்கிய பகுதிகளிலிலும், மாகாண அரசின் சட்டசபை முன்பாகவும் எதிர்ப்பு ந…
-
- 0 replies
- 572 views
-
-
கனடாவின் அதி உயர் கடேற் விருது அமோஸ் டன்ஸ்டன் என்ற இலங்கைத் தமிழ் மாணவருக்கு வழங்கப்பட்டுள்ளது. கனடாவின் முன்னாள் பிரதமர் ஸ்டீவன் ஹார்பர் அண்மையில் இந்த விதை வழங்கி கெளரவித்தார். கனேடிய கடேற் விருதுகளில் அதி உயர் விருதாகக் கருதப்படும் Lord Strathcona Award விருதே, அமோஸிற்கு வழங்கப்பட்டுள்ளது. உடல் பயிற்சி மற்றும் இராணுவப் பயிற்சிகளில் அதி உச்ச திறமைகளை வெளிப்படுத்தும் கடேற் வீரர்களை ஊக்குவித்து கௌரவிக்கும் நோக்கில் இந்த விருது வழங்கப்பட்டு வருகின்றது. கொழும்பை பிறப்பிடமாகக் கொண்ட அமோஸ் தற்போது கனேடிய பிரஜையாவார். மணி டன்ஸ்டன் - மேரி டண்ஸ்டன் ஆகியோரின் சிரேஸ்ட புதல்வாரன அமோஸ் American Football விளையாட்டிலும் மிகச் சிறந்த திறமைகளை வெளிப்படுத்த…
-
- 9 replies
- 1.7k views
-
-
இங்கு புலம் பெயர் நாடுகளில் நாம் பல்வேறு நாட்டவர்களுடன் வாழ்கின்றோம். மற்றய நாட்டவர்களுடன் ஒப்பிடும் போது ஈழத்தமிழர்கள் நாம் சற்று செலவாளிகள் என்பது எனது அனுபவம். நாம் சற்றுத் திட்டமிட்டால் பல வகைகளில் பணத்தை மிச்சப் படுத்த முடியும் என்பது எனது கருத்து (அனுபவம்), எமக்கு சில சேமிப்பு வழிமுறைகள் தெரிந்திருக்கும் அவற்றில் சில நாம் வாழும் நாடுகளுக்கு மட்டுமே உரியவை, சில எல்லோருக்கும் பொதுவானவை இவற்றை நாம் எம்மிடையே பகிர்ந்து கொள்வோம் . எமக்கு தெரிந்தவற்றை மற்றவர்களுடன் பகிர்ந்து கொள்வது கூட ஒருவகை தானம் தானே. இங்கு சுவிஸ் பத்திரிகைகளில் பல டிப்ஸ் கள் வருகின்றன அவை பெரும்பாலும் சக்தி சேமிப்பு தொடர்பாக இருக்கும். அவை மிகவும் பயணுள்ளதாக இருக்கும் முடிந்தவரை…
-
- 44 replies
- 4.3k views
- 1 follower
-
-
Eve 5:42:00 PM A+ A- Print Email சிறிலங்காவின் நீதிப்பொறியமைவுகளை கண்காணிக்கும் பொறுப்புடமைக்கான பன்னாட்டு நிபுணர் குழுவின் அறிக்கை (Sri lanka - Monitoring Accountability Panel (MAP) , ஜூன் மாத ஐ.நா மனித உரிமைச்சபை கூட்டத் தொடரின் போது வெளிவர இருக்கின்றது. சிறிலங்கா தொடர்பில் ஐ.நா மனித உரிமைச்சபையில் நிறைவேற்றப்பட்ட தீர்மானத்தின் நடைமுறைக்கு அமைய ஐ.நா மனித உரிமை ஆணையாளரின் அறிக்கைக்கு முன்னராக இவர்களது அறிக்கை வெளிவர இருக்கின்றது. ஐ.நா மனித உரிமைச்சபையில் நிறைவேற்றப்பட்டிருந்த தீர்மானத்தினை சிறிலங்கா ஏற்றுக் கொண்டிருந்ததோடு, ஆதரவு பல வாக்குறுதிகளை அனைத்துலக சமூகத்…
-
- 0 replies
- 740 views
-
-
'ஆனாரூனா' என்று மதிப்பாக அழைக்கப்படும் மரியாதைக்;குரிய அமரர் நா. அருணாசலம் ஐயா அவர்களின் மறைவு, தமிழ் கூறும் நல்லுலகிற்குப் பேரிழப்பாகும் என நாடுகடந்த தமிழீழ அரசாங்கத்தின் பிரதமர் வி.உருத்திரகுமாரன் அவர்கள் விடுத்துள்ள இரங்கல் செய்தியில் தெரிவித்துள்ளார். தமிழினப்பற்று, மொழிப்பற்று மிக்கவரும் தமிழினத்தின் மேம்பாட்டுக்காக தனது செல்வம், உழைப்பு, உணர்வு எல்லாவற்றையும் அயராது செலுத்திய ஐயா அவர்களின் மறைவைக் கேள்வியுற்று ஆழ்ந்த துயரம் கொண்டுள்ளோம் எனவும் அவர் தனது இரங்கல் செய்தியில் தெரிவித்துள்ளார். மேலும் பிரதமர் வி.உருத்திரகுமாரன் அவர்களது இரங்கல் செய்தியில் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது, …
-
- 0 replies
- 623 views
-
-
28 SHARES PrintReport us0 Comments சென்ற சனிக்கிழமை 21 May பழைய மாணவர் சங்கம் ஒன்றால் ஒரு நிகழ்ச்சி நடை பெற்றது. அந்த நிகழ்ச்சியின் நோக்கம் பற்றி தெளிவுகள் இல்லாமையால் அந்த கல்லூரியின் பழைய மாணவர் ஒருவர் தமிழ்வின் இணையத்தை தொடர்பு கொண்டிருந்தார். அவருடைய கேள்விகள் முறைப்படி அமைந்தமையால், அக்கேள்விகளை மக்களிடத்தே கொண்டு செல்வது ஒரு ஊடகத்தின் பொறுப்பு என்பதை அறிகிறோம். அதனால் அவருடைய கேள்விகளையும் கருத்துக்களையும் பிரசுக்கின்றோம். லண்டனில் உள்ள Hartley கல்…
-
- 3 replies
- 1.1k views
-
-
தமிழக முதலமைச்சர் செவ்வி ஜெயலலிதாவுக்கு பிரதமர் வி.உருத்திரகுமாரன் வாழ்த்து ! தமிழக சட்டசபைத் தேர்தலில் பெருவெற்றியீட்டிய தமிழக முதலமைச்சர் செல்வி ஜெயலலிதா அவர்களுக்கு நாடுகடந்த தமிழீழ அரசாங்கம் தனது வாழ்த்துக்களை தெரிவித்துக் கொள்வதாக பிரதமர் வி.உருத்திரகுமாரன் அவர்கள் தெரிவித்துள்ளார். ஈழத் தமிழ் மக்கள் குறித்த தேர்தல் உறுதிமொழியினை அக்கறையுடன் நிறைவேற்றுமாறும் நாடுகடந்த தமிழீழ அரசாங்கம் வேண்டிக் கொள்வதாகவும் பிரதமர் வி.உருத்திரகுமாரன் அவர்கள் கோரியுள்ளார். பிரதமர் வி.உருத்திரகுமாரன் அவர்களது அறிக்கையின் முழுமையான வடிவம் : …
-
- 0 replies
- 452 views
-
-
லண்டனில் TCC இன் வன்முறையுடன் ஆரம்பமான முள்ளிவாய்க்கால் நிகழ்வு BTF இன் நிகழ்வு லண்டனில் முள்ளிவாய்க்கால் நினைவுதினம் இரு வேறு போட்டி அமைப்புக்களால் ‘கொண்டாடப்பட்டது’. வழமையாக பீ.ரீ.எப்(BTF) முள்ளிவாய்க்கால் நினைவு தினத்தையும், ரீ.சீ.சீ (TCC) மாவீரர் தினத்தையும் நடத்துவதுண்டு, இந்த முறை முள்ளிவாய்க்கால் நினைவுதினத்தை பீ.ரீ.எப் இற்குப் போட்டியாக ரீ.சீ.சீ ஏற்பாடு செய்திருந்தது. அருகருகான இரு பகுதிகளில் ஏற்பாடு செய்யப்பட்டிருந்த இந்த நிகழ்வுகள் ஆரம்பமாவதற்கு முன்பதாகவே பீ.ரீ.எப் இன் மேடை அமைந்திருந்த பகுதிக்குள் புகுந்த ரீ.சீ.சீ உறுப்பினர்கள் வன்முறையில் ஈடுபட ஆரம்பித்தனர். பீ.ரீ.எப் இன் மேடையை ரீ.சீ.சீ கலைக்க முற்பட்ட போது அங்கு குழுமியிருந்த மக்களின் தலையீட்டால்…
-
- 52 replies
- 5.4k views
- 1 follower
-
-
உலகின் அதிக நாடுகளில்.... அகதிகளாக வாழும் ஒரே இனம், ஈழத் தமிழர்கள்: யுனிசெப்: உலகில் 9கோடி அகதிகள். உலகில் அதிக நாடுகளில் அகதிகளாக வாழும் ஒரே இனம் இலங்கைத் தீவைச் சேர்ந்த ஈழத் தமிழர்கள் என்ற ஐ.நாவின் உப அமைப்பான யுனிசெப் தெரிவித்துள்ளது.போர், உள்நாட்டுப் பிரச்சினை வன்முறை, இனக்கலவரம் காரணமாக உடமைகள், உறவுகள் மற்றும் உரிமைகளை இழந்து, எவ்வித ஆதரவும், வசதியும் இன்றி வாழும் மக்களே அகதிகள். இவர்கள் சொந்த நாட்டுக்கு உள்ளேயோ அல்லது நாடு கடந்தோ இடம்பெயரும்போது அகதிகளாக அடையாளப்படுத்தப்படுகின்றனர். உலகில் எல்லா நாடுகளிலும் அரசியல், பொருளாதாரம், உள்நாட்டு போர் உள்ளிட்ட பல்வேறு காரணங்களினால் மக்கள் அகதிகளாக வெளியேறுகின்றனர். பசி, பட்டினி தாங்க முடியாமல், உயிருக்குப் பயந்த…
-
- 3 replies
- 2.4k views
-
-
-
நுண்ணறிவு தேர்வில் இலங்கை சிறுமி சாதனை நுண்ணறிவில் சிறந்த விஞ்ஞானியான அல்பட் என்ஸ்டைனின் சாதனை இலங்கை வம்சாவளி சிறுமியான நிஷி உக்லேயால் முறியடிக்கப்பட்டுள்ளது. இங்கிலாந்தின் மென்சா நிறுவனத்தினால் முன்னெடுக்கப்பட்ட நுண்ணறிவுத் தேர்வில் 10 வயது சிறுமியான நிஷி உக்கலே கலந்துகொண்டு சாதனையை முறியடித்துள்ளார். குறித்த இச்சிறுமி தனது முதலாவது தேர்வில் 162 புள்ளிகளையும் இரண்டாவது தேர்வில் 142 புள்ளிகளை பெற்றுக்கொண்டுள்ளார். இவரின் அறிவுத்திறமையைக்கண்டு வியந்த அவ் அமைப்பினர் இச்சிறுமியை அவர்களின் அமைப்பில் இணைத்துக்கொண்டுள்ளனர். இச்சிறுமி அல்பட் அய்ன்ஸ்டைனை விட 2 புள்ளிகள் அதிகமா…
-
- 2 replies
- 1k views
-
-
News Articles மொழிபெயர்ப்பாளர் லக்ஷ்மி ஹோல்ம்ஸ்ட்ரோம் மறைந்தார்! ஈழத்து இலக்கியங்களை ஆங்கிலத்தில் மொழிபெயர்த்த லக்ஷ்மி ஹோல்ம்ஸ்ட்ரோம் நேற்று காலமாகியுள்ளார். இந்தியாவில் பிறந்த லக்ஷ்மி ஹோல்ம்ஸ்ட்ரோம் பிரித்தானியாவில் வாழ்ந்து வந்தவர். தமிழின் முக்கியமான எழுத்துக்களை மொழிபெயர்த்த லக்ஷ்மி ஹோல்ம்ஸ்ட்ரோம் ஈழத்து மற்றும் புலம் பெயர் படைப்புக்களையும் மொழிபெயர்த்துள்ளார். சென்னைப் பல்கலைக்கழகத்தில் ஆங்கில இலக்கியத் துறையில் இளமானிப் பட்டம் பெற்ற இவர் லண்டன் ஒக்ஸ்போர்ட் பல்கலைக்க…
-
- 1 reply
- 815 views
-
-
பிரான்சில் வதிவிட உரிமை இல்லை என்ற காரணத்தை வைத்து பல தமிழர்கள் பிரஞ்சுப் போலீசாரால் கைது செய்யப்பட்டு திருப்பியனுப்பப் பட்டுக் கொண்டிருக்கின்றனர். பிரான்சின் தலைநகரமான பாரிஸ் நகரிலேயே இந்த சம்பவம் சத்தமின்றி நடைபெற்று வருகின்றது. முன்னர் வதிவிட உரிமை இல்லாத நபர் ஒருவரை பொலிசார் கைது செய்யும் போது அவரை நீதிமன்றத்தில் ஒப்படைக்கவேண்டிய பொறுப்பு காவல் துறைக்கு வழங்கப்படும் , ஆனால் தற்போது வதிவிட உரிமை ( விசா) இல்லாமல் கைது செய்யப்படும் நபரை எந்தவொரு விசாரணையும் இன்றி பொலிசாரே நேரடியாக ரகசியமான முறையில் நாடு கடத்தி விடுகின்றனர், இது வரை பல நூற்றுக் கணக்கான தமிழர்கள் இலங்கைக்கு திருப்பியனுப்ப பட்டுள்ளனர். பாதிக்கப்பட்ட தமிழர் ஒருவர் எமது செய்திச் சேவ…
-
- 2 replies
- 1.1k views
-
-
நோர்வே தமிழ் சங்கத்தின் இந்த நாடகம் வெளிநாட்டில் உள்ள பிள்ளைகளின் வருங்காலத்தையும் அதனால் பெற்றொர் படபோகும் வேதனையையும் மிகவும் அற்புதமாக எடுத்து காட்டுது. இதற்கு என்ன உங்களின் தீர்வு என்பதை இங்கு பதிவுசெய்தால் மற்றவர்களுக்கு உதவியாக இருக்கும்.
-
- 16 replies
- 2.2k views
-
-
இங்கிலாந்தின் தலைநகரான லண்டனில் நாளை(May 5) மேயர் தேர்தல் நடைபெறவுள்ளது.625.70.560.350.160.300.053.800.100.160.80 (9) இதில் Sadiq Khan(Labour), Zac Goldsmith (Conservative) , Sian Berry (Green Party), Caroline Pidgeon (Liberal Democrat) உட்பட மொத்தம் ஏழு பேர் போட்டியிடுகின்றனர். இந்த தேர்தலில் Supplementary Vote System என்னும் முறை பயன்படுத்தப்படவுள்ளது, இதனை பொறுத்தவரையில் வெற்றி பெறுவதற்கு வேட்பாளர்கள் குறைந்தது 50சதவிகித வாக்குகளை பெறவேண்டும். லண்டன் மேயருக்கான அதிகாரங்களில் முக்கிய இடம்பிடிப்பது வீட்டு வசதி வாரியம், போக்குவரத்து மற்றும் சுகாதாரம். இதனை மேம்படுத்துவதில் ஒவ்வொரு கட்சியும் பல்வேறு திட்டங்களை வகுத்துள்ளனர். இதனை பற்றியும், தான் மே…
-
- 4 replies
- 1.3k views
-
-
இலங்கைப் புகலிடக் கோரிக்கையாளர் படகு அவுஸ்திரேலியாவிற்குள் பிரவேசம்: குளோபல் தமிழ்ச்செய்தியாளர்:- (ஆவணப்படம்) இலங்கைப் புகலிடக் கோரிக்கையாளர்களைக் கொண்ட படகு ஒன்று அவுஸ்திரேலியாவிற்குள் பிரவேசித்துள்ளதாகத் தெரிவிக்கப்படுகிறது. அவுஸ்திரேலியாவின் கொகோஸ் தீவுகளை இந்த படகு சென்றடைந்துள்ளதாகத் தெரிவிக்கப்படுகிறது. திங்கட்கிழமை காலையில் இலங்கையர்களைக் கொண்ட படகு கொகோஸ் தீவுகளை அடைந்துள்ளதாக பிரதேச மக்கள் தெரிவித்துள்ளனர். பிரதேசத்தில் சீரற்ற காலநிலை நிலவி வருவதாகக் குறிப்பிடப்படுகிறது. கடந்த இரண்டு ஆண்டு காலப்பகுதியில் இலங்கைப் புகலிடக் கோரிக்கையாளர் படகு ஒன்று அவுஸ்திரேலியாவை சென்றடைந்தமை இதுவே முதல் சந்தர்ப்பமாகும் என்பது கு…
-
- 2 replies
- 672 views
-
-
-
- 1 reply
- 981 views
-
-
பிரித்தானிய பாடசாலைகளில் தமிழ் மற்றும் சீனச் சிறுவர்கள் சிறப்பான பெறுபேறுகளை பெற்றுக்கொள்வதாக அந்நாட்டு ஆய்வறிக்கை கூறுகின்றது. முன்னேறுவதற்கான துடிப்பான பெற்றோரின் சிந்தனையும் அவர்களது வீடுகளில் பின்பற்றப்படும் அமைதியான நடைமுறைகளுமே இவ்வளர்ச்சிக்கு காரணம் எனவும் அவ்வறிக்கை கூறுகின்றது. கடந்த ஆண்டு கணிப்பின்படி 1600 சீனச்சிறுவர்கள் தங்களது தாய்மொழியாக சீனமொழியை பதிவுசெய்திருக்கின்றார்கள். 2800 தமிழ்ச்சிறுவர்களும் தங்களது தாய்மொழியாக தமிழை பதிவுசெய்திருக்கின்றார்கள். பிரித்தானியாவில் ஆங்கிலம் தவிர்ந்த 317 மொழிகளை சேர்ந்த வெளிநாட்டினர் கல்விகற்றுவருகின்றார்கள். அதில் ஆகக்கூடுதலான இடத்தை உருது மொழியினரும் (144000) பொலிஸ் மொழியை (113000) இனரும் பஞ்சாபி மொழ…
-
- 10 replies
- 1.4k views
-
-
கனடாவில் தமிழர்களைக குறிவைத்து நூதன மோசடி! விழிப்புடன் இருக்க காவலர்கள் வேண்டுகோள்!! - See more at: http://www.canadamirror.com/canada/61447.html#sthash.woVVIcXe.dpuf கனடாவிலுள்ள தமிழர்கள் பலரும் ஒரு நூதன மோசடி வலைக்குள் சிக்க வைக்கப்பட்ட சம்பவம் அண்மைக்காலமாகவே இடம்பெற்று வருகின்றது. கனடிய மத்திய காவல்துறையிலிருந்து பேசுகின்றோம். உங்களுடைய குடிவரவு விசாரனை சம்பந்தமான ஒரு விண்ணப்பத்தை நீங்கள் கடந்த காலத்தில் பூர்த்தி செய்யவில்லை. இந்த இணைப்பை குடிவரவு அதிகாரிக்கு மாற்றுகின்றேன் என மாற்றப்படுகின்றது. அந்த இணைப்பில் வரும் குடிவரவு அதிகாரியெனப்படுவர் இன்னமும் கடுந்தொணியில் உங்களது குடிவரவின் போது ஒரு விண்ணப்பபம் நிறப்பப்படவில்லை எனக் கூறுவ…
-
- 6 replies
- 930 views
-
-
இத்தாலியில் தியாகி பொன் சிவக்குமாரன் நினைவு தமிழர் விளையாட்டு விழா மைத்தானத்துக்குள் நுழைந்த சிங்களக் காடைக்கும்பல் ஒன்று.. சிங்கக் கொடியையும் சிங்களப் பதாதைகளையும் தாங்கிக் கொண்டு ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டதுடன்.. சிங்கக் கொடியை நிகழ்வில் ஏற்ற வற்புறுத்தியும் உள்ளனர். இந்த அடாவடியை அடுத்து மைதானத்துக்கு வந்த இத்தாலிய காவல்துறையும் தமிழீழத் தேசியக் கொடியான தமிழர் கொடியை நிகழ்வில் ஏற்ற தடைவிதித்ததை அடுத்து.. இவ்விரு தரப்பினரதும் அடாவடியை ஏற்க மறுத்த நிகழ்ச்சி ஏற்பாட்டாளர்கள்.. தமிழர் விளையாட்டு நிகழ்வை தொடராமல் முடிவுறுத்தியதாகச் செய்திகள் வெளியாகியுள்ளன. சொறீலங்காவில் இருந்து இப்போ சிங்களக் காடைத்தனம்... புலம்பெயர் தேசம் நோக்கியும் தமிழர்களை துன்புறுத்த ஆரம்பித்த…
-
- 15 replies
- 1.8k views
-
-
கனடாவில் என்ன நடக்கிறது – பாலியல் வன்முறை இன்னொரு தமிழர் கைது! Peter April 25, 2016 Canada ரோறன்ரோப் பொலிசார் பொதுமக்களிற்கு ஒரு பாலியல் வன்முறை தொடர்பான அறிவித்தலை விடுத்துள்ளனர். கடந்த திங்கட்கிழமை தாங்கள் ஒரு விசாரணையை மேற்கொண்டுள்ளதாகவும் அந்தச் சம்பவம் 2014ம் ஆண்டு இடம்பெற்ற ஒரு சம்பவம் தொடர்பானதாகவும் அறியத் தந்துள்ளனர். இதன் பிரகாரம் 41 வயதான ஒரு பெண்மணி மேற்படி நபருடன் வேலைவாய்ப்பு சம்பந்தமாக தொடர்பு பட்டிருந்தார் எனவும், அந்தப் பெண் மொட்டேல் எனப்படும் விடுதிக்கு அழைத்துச் செல்லப்பட்டு பாலியல் பலாத்காரம், மற்றும் இயற்கைக்கு மாறான வழிகளில் புணர்தல் என்பவற்றிக்கு உட்படுத்தப்பட்டார் எனவும் இந்த அறிவித்தல் தெரிவிக்கின்றது. கடந்த வியாளக்கிழமை மாலை 47 வ…
-
- 13 replies
- 1.8k views
-
-
புலம் பெயர்ந்தோர் இப்போதும் அலாஸ்காவின் ஒட்டகங்களா? - கலாநிதி சர்வேந்திரா 1993 இல் ஒஸ்லோவில் நடந்த ஒரு இலக்கியக் கலந்துரையாடலில் பங்கு கொண்ட பேராசிரியர் சிவத்தம்பி தாயகத்தில் இருந்து புலம் நோக்கிப் பெயர்ந்த கவிஞர்களின் கவிதைகளில் காணப்பட்ட படிமம் ஒன்று குறித்து கருத்தினை வெளியிட்டிருந்தார். புலம்பெயர் கவிஞர்கள் இலையுதிர்த்து நிற்கும் மரங்களை 'கருகிய' அல்லது 'எரிந்த' அல்லது 'பட்ட' மரங்களாக சித்தரிக்கும் படிமங்களைக் கொண்டு கவிதைகளை எழுதுகின்றனர். இலையுதிர்த்து நிற்கும் மரங்களை இவ்வாறு சித்தரிப்பதனை இலையுதிர் மரங்களைத் தமது வாழும் அனுபவத்திற் கொண்ட மேற்குலகக் கவிஞர்கள் செய்யமாட்டார்கள். எரிந்த, கருகிய அல்லது பட்ட மரங்களை மட்டும் இலையுதிர்த்த மரங்களா…
-
- 0 replies
- 1k views
-
-
எனக்கு பயிர் பச்சை பூங்கன்றுகள் என்றால் பைத்தியம் என்று உங்களுக்குத் தெரியும் தானே. ஆனால் அவற்றைப் பராமரிக்க நான் படும் பாடு சொல்ல முடியாதது. ஆனாலும் ஒவ்வொரு ஆண்டும் பூச்சிகொல்லி வாங்கியே கன காசு செலவாகிறது. இந்தியாவில் இயற்கை விவசாயம் செய்யும் ஒரு தோழியிடம் விசாரித்தபோது எதற்காக பூச்சி கொல்லி மருந்துக்களைப் பயன்படுத்துகிறீர்கள். இயற்கை பூச்சி விரட்டியைப் பயன் படுத்துங்கள் என்றார். அவர் கூறியபடியே உள்ளி, இஞ்சி, பச்சை மிளகாய் சேர்த்து அரைத்து கன்றுகளுக்கும் இலைகளுக்கும் தெளித்தும் எந்தப் பூச்சி புழுவும் போனதாகக் காணவில்லை. உங்கள் யாருக்காவது இயற்கையாக பூஞ்செடிகளில் பிடிக்கும் அழுக்கணவன், பங்கஸ் என்பவற்றை விரட்டும் வழி தெரிந்தால் கூறுங்கள் உறவுகளே.
-
- 28 replies
- 4.7k views
- 1 follower
-
-
இலண்டனில ஒரு அப்பாவிகள் கூட்டம் வாழ்கிறது. அவர்களில் ஒருவரை எதேச்சையாக வடக்கே மான்செஸ்டர் போகும் ரயிலில் சந்தித்தேன். அடிப்படை அறிவு எதுவும் இல்லை. கடின உழைப்பாழி. Real Estate காரர் யாரிடமோ வீடு வாங்க உதவிக்குப் போய் வாங்கிவிட்டார். ஏதாவது கிறடிட் பிரச்சனை இருக்கக்கூடும். 7 வருடங்களில் எல்லாமே சட்டரீதியா அழிந்து விடும் என்ற அறிழே இல்லா அப்பாவியாயிருந்தார். இவற்றை வரப்பிரசாதமாக கருதி realtor, அந்த குடுப்பத்திடம் £2,000 தனது 'கொஞ்சம் கஸ்டமான' வேலைக்கென புடுங்கிவிட்டார். ஆனால் வீட்டு காப்புறுதிக்கு சாதாரணமாக ஆண்டுக்கு £199 க்கு குறைவாக கட்டணத்துக்கு, மாதம் £69 தனது கணக்குக்கு வருமாறு செய்துள்ளார். அநேகமாக அவர் முழுத் தொகை செலுத்தி, இவரது பத்திரத்தை காப்புறுதி நிறுவ…
-
- 23 replies
- 2.6k views
-