வாழும் புலம்
புலம்பெயர் நாடுகள் | தமிழர் வாழ்வு | அனுபவங்கள் | அன்றாட நிகழ்வுகள்
வாழும் புலம் பகுதியில் புலம்பெயர் நாடுகள், தமிழர் வாழ்வு, அனுபவங்கள், அன்றாட நிகழ்வுகள் சம்பந்தமான பதிவுகள் இணைக்கப்படலாம்.
புலம்பெயர் நாடுகளில் வசிக்கும் தமிழர்கள் பற்றியதும் புலம்பெயர் தமிழர்களுக்கு அவசியமானதுமான செய்திகள், தகவல்கள் மாத்திரம் இணைக்கப்படல் வேண்டும்.
5815 topics in this forum
-
வெள்ளிக்கிழமை மாலை கனடாவின் மார்க்கம் நகரில் உள்ள ஹில்டன் 5 நட்சத்திர ஹோட்டல் (HILTON SUITES INTERNATIONAL) மண்டபத்தில் நடைபெற்ற MISS TAMIL CANADA-2015 விருது வழங்கும் விழாவில் 14 இளம் போட்டியாளர்கள் கலந்துகொண்டார்கள். மேற்படி விழாவிற்கு சுமார் 500 பார்வையாளர்கள் கலந்துகொண்டார்கள். மேற்படி அழகு ராணி போட்டியில் கலந்து கொண்ட அனைத்து போட்டியாளர்களும் நடுவர்கள் பலவிதமான போட்டிகளையும் நடத்தி, அவர்தம் திறமைகளை கண்டறியும் உத்திகளையும் மேற்கொண்டார்கள். இறுதியில் செல்விகள் தீப்தி ஞானேஸ்வரன், விதுசாயினி பரமனாதன்,சுயிரபி ஆகியோர் முதல் மூன்று இடங்களையும் தட்டிக்கொண்டனர். பல கலை நிகழ்ச்சிகளும் அங்கு நடைபெற்றன. http://www.canadamirror.com/canada/45636.html#sthash.xLMKmbg8.dpb…
-
- 16 replies
- 1.4k views
-
-
நெதர்லாந்து தமிழமுதம் இசைக்குழுவில் நீண்டகாலமாக கொங்கோட் இசைக்கலைஞனாக செயற்பட்ட யோகா நேற்று அகால மரணமடைந்துள்ளார். இவர் தாயகப்பாடல்களிற்கான இசைப்பயணத்தில் பல வருடங்களாக பணியாற்றியிருந்தார். இவ் இசைக்குழுவிற்கு ஏற்பட்ட பல சோதனைகளில் இவ் இசைக்குழுவோடு இறுதிவரை உறுதியாகப் பயணித்த தேசத்தை நேசித்த கலைஞன் இவர் ஆவார். அன்னாரின் இறுதிச்சடங்குகள் பற்றிய அறிவித்தல் பின்னர் அறிவிக்கப்படும். http://www.pathivu.com/news/41148/57//d,article_full.aspx
-
- 0 replies
- 833 views
-
-
கடன் எலும்பை முறிக்கும்! கடன் கொடுக்காதவர்கள் கூட இந்த உலகில் இருப்பார்கள். ஆனால் கடன் வாங்காதவர்கள் யாருமிருக்க முடியாது. திருப்பதி வெங்கடாசலபதி முதல் திருச்சி மணிகண்டன் வரை இதற்கு விதிவிலக்கு யாருமில்லை. அப்படி யாரும் நான் இதுவரை கடன் வாங்கியதில்லை என்று சொன்னால், அவர்கள் அரசியல் அறியாதவராக இருப்பார். 'இந்தியா வாங்கிய கடனில் அவருக்கு பங்குண்டு' என்று தெரியப்படுத்துங்கள்... கடன் பற்றி கீழே உள்ளவற்றை படித்து ஒன்று கடன்கொடுப்பதை நிறுத்திவிடுங்கள் அல்லது கடன் வாங்குவதை நிறுத்திவிடுங்கள். இரண்டில் எது உங்கள் சாய்ஸ்... => கடன் அன்பை மட்டுமல்ல, சில நேரங்களில் கை கால்களைக்கூட முறித்துவிடும். => ஒருத்தரை உடனே மறக்க அவர்கிட்ட கடன் வாங்கணும். ஒருத்தரை காலம்பூரா மறக்கா…
-
- 0 replies
- 2.1k views
-
-
கனடியப் பிரஜைகளான தமிழர்களுக்குள்ள தடைகள்! அமெரிக்க அறிக்கை வலுச்சேர்க்கிறது? [ வியாழக்கிழமை, 25 யூன் 2015, 02:52.49 AM GMT ] கனடாவிற்கு முன்பாகவே அமெரிக்கா மற்றும் இங்கிலாந்தில் இரட்டைப் பிரஜைகளிற்கான சட்டம் ஏற்கனவே இருக்கின்றது. அவுஸ்திரேலியாவும் ஒரு சட்டத்தை இப்போது கொண்டு வந்திருக்கிறது. அமெரிக்கா சில தினங்களிற்கு முன்னர் வெளியிட்ட அறிக்கை மிகவும் பாராதுரமானது. கனடியப் பிரஜைகளாகவுள்ள தமிழர்களை இது தேசத்துரோகம் என்ற வகையிலும் பாதிக்கலாம். மேற்குலகின் பிரஜைகளான தமிழர்கள் இதனை எவ்வாறு கையாள வேண்டும் என்பது பற்றி இந்தவார நிஜத்தின் தேடல் நிகழ்வில் ஆய்வாளர் சுரேஸ் தர்மா தனது கருத்துக்களைப் பகிர்ந்து கொண்டார்.
-
- 0 replies
- 660 views
-
-
-
- 1 reply
- 1.1k views
-
-
மிருசுவிலில் இடம்பெற்ற கூட்டுப் படுகொலை வழக்கின் குற்றவாளிக்கு இன்று மரண தண்டனை விதிக்கப்பட்டது. கொழும்பு மேல் நீதிமன்றம் லலித் ஜயசூரிய, பீரிதிபத்ம சூரசேன ஆகியோரே இந்தத் தீர்ப்பை வழங்கினர். இராணுவப் படையணியைச் சேர்ந்த சார்ஜன்ட் சுனில் ரத்நாயக்க என்ற இராணுவச் சிப்பாய்க்கே மரண தண்டனை விதிக்கப்பட்டுள்ளது. இந்த வழக்கில் குற்றச்சாட்டப்பட்டிருந்த 2ஆம், 3ஆம், 4ஆம், 5ஆம் தரப்பு சந்தேக நபர்கள் விடுவிக்கப்பட்டனர். இந்தக் கொலைச் சம்பவத்தில் குற்றஞ்சாட்டப்பட்டிருந்த முதல் குற்றவாளிக்கு மரண தண்டனை விதித்துத் தீர்ப்பளிக்கப்பட்டது. 2000ஆம் ஆண்டு டிசம்பர் மாதம் இரண்டாம் வாரத்தில் அல்லது அதற்கு அண்மித்த காலத்தில் மிருசுவில் வாசியான குணபாலன் ரவி வீரன், மற்றும் இரண்டு குழந்தைகள் உள்ளிட…
-
- 0 replies
- 365 views
-
-
June 24, 2015 ஐ.நா விசாரணைக்கு போலிச்சாட்சியங்களா ? தமிழர் தரப்பின் மீதான சிங்களத்தின் அச்சம் ! 0 by tmdas5@hotmail.com • TGTE சிறிலங்கா தொடர்பிலான ஐ.நா விசாரணைகளுக்கு போலிச்சாட்சியங்களை தமிழர்கள் வழங்கி வருகின்றனர் என்ற சிங்கள பத்திரிகையொன்றின் குற்றச்சாட்டுக்கு நாடுகடந்த தமிழீழ அரசாங்கம் பதில் அளித்துள்ளது. நாடுகடந்த தமிழீழ அரசாங்கம் போலியான சாட்சியாளர்களை ஜெனீவாவுக்கு அழைத்து சென்று, ஐ.நா மனித உரிமைப் பேரவை விசாரணைக்குழுவிடம் சாட்சியமளிக்க செய்துள்ளதென்றும், நாடுகடந்த தமிழீழ அரசாங்கத்தின் ஐந்து பேர் ஜெனீவாவில் தங்கியிருந்து சிறிலங்கா அரசுக்கு எதிராக செயற்பட்டு வருவதாகவும் அச்சிங்கள பத்திரிகை செய்தி வெளியிட்டிருந்தது. இச்செய்தி தொடர்பில் கருத்து வெளியிட்டுள்ள நாட…
-
- 0 replies
- 319 views
-
-
சுவிட்சர்லாந்து தேசிய தடகள அணியில் தடம்பதித்துவரும் ஈழத்தமிழர் சோ .சுகந்தன் ஐரோபிய நாடுகளுக்கிடையில் இவ்வருடம் நடைபெறவுள்ள தடகளப்போட்டிகளில் மீண்டும் இவர் களம்மிறங்கவுள்ளர் இலங்கையில் நடைபெற்ற யுத்தம் காரணமாக புலம்பெயர்ந்து சுவிட்சர்லாந்தில் 25வருடங்களுக்கு முன் தஞ்சம்மடைந்த சோமசுந்தரம் சுகந்தினி ஆகியோரின் முதலாவது மகன் இவரவார் சுகந்தனுக்கு மூன்று சகோதரர்கள் உள்ளனர். சிறுவயது முதல் தடகளத்தில் அதிக ஆர்வம் கொண்ட சுகந்தன் சுவிட்சர்லாந்தில் களம் கண்டவர் அத்துடன் பல சதனைகளுக்கும் உரியவர் படிபடியாக பல போரட்டங்களுக்குமத்தியில் தேசிய தடகள அணியில் இடம்பிடித்தார் சுவிஸ் தேசிய அணியில் இடம்பிடித்த முதல் ஈழத்தமிழர் என்ற பெருமையும் இவரையே சாரும். ஐரோப்பிய நாடுகளுக்கிடையில் ந…
-
- 3 replies
- 1k views
-
-
கனடாவில் தமிழர்கள் தங்களின் அடையாளத்தையும், கலாச்சாரத்தையும், பண்பாட்டையும் வெளிப்படுத்தும் முகமாக பிரதான வீதிகள் மூடப்பட்டு தமிழர் தெருவிழா இடம்பெறவுள்ளதையிட்டு கனடாத் தமிழர்கள் குதுகாலத்தில் ஆழ்ந்துள்ளனர். அதுகூட இவ் விழா பற்றிய அறிமுகத்தை பாரிய ரொறன்ரோவின் முதல்வர் ஜோன் ரோறி அவர்களே நிகழ்த்தி வைத்தது கனடா வாழ் தமிழர்களிற்கு இரட்டடிப்புச் சந்தோதத்தைக் கொடுத்துள்ளது. கனடாவில் பாரிய நகரமான ரொறன்றோவின் முதல்வர் ஜோன் ரொறி அவர்கள் தனது அலுவலகத்தில் வைத்துள்ள பிரதான படங்கள் ஒன்று இரண்டில் முக்கியமானதானக தான தமிழர்களுடன் விநாயகர் ஆலயத்தில் வழிபடும் படத்தை பிரதானமாக வைத்துள்ளது இங்கு குறிப்பிடத்தக்கதாகும். இத்தாலி, ஜேர்மனி, கிரேக்கம், பிரேசில், பிரான்;ஸ் போன்ற நாடுகளிலிருந்த…
-
- 2 replies
- 899 views
-
-
இரண்டு இலட்சத்தினை கடந்த சிறிலங்காவுக்கு எதிரான கையெழுத்து: அதிர்ச்சியில் சிறிலங்கா !! 0 by tmdas5@hotmail.com • TGTE சிறிலங்காவினை அனைத்துலக குற்றவியல் நீதிமன்றத்தில் நிறுத்துமாறு ஐ.நாவைக் கோரும் கையெழுத்துக்கள் இரண்டு இலட்சத்தினைக் கடந்துள்ளது. நாடுகடந்த தமிழீழ அரசாங்கத்தின் ஒருங்கிணைப்பில் தமிழீழம், புலம், தமிழகம் என தமிழர்கள் பரந்து வாழ்கின்ற தேசமெங்கும் பல்வேறு அமைப்புக்களினாலும் இக்கையெழுத்து இயக்கம் முன்னெடுக்கப்பட்டு வருகின்றது. இந்தியா, இலங்கை, அவுஸ்திரேலியா, பிரான்ஸ் என்ற தரவரிசையில் இரண்டு இலட்சங்களைக் கடந்த இக்கையெழுத்து இயக்கமானது ஒரு மில்லியனை நோக்கி செல்கின்றது. எதிர்வரும் செப்ரெம்பர் மாதம் சிறிலங்கா தொடர்பிலான ஐ.நா.மனித உரிமைகள் உயர் ஆணையாளரின் விசாரண…
-
- 0 replies
- 385 views
-
-
நாம் தமிழர் குவைத் நேற்றும் கையெழுத்து வேட்டையை தொடர்ந்தனர் https://youtu.be/CKjb_NlHQ70 ஶ்ரீலங்கா அரசால் தமிழீழத்தில் காலங்காலமாக மேற்கொள்ளப்பட்டு வரும் இனவழிப்புக்கு நீதி கேட்டு ஶ்ரீலங்கா அரசை சர்வதேச குற்றவாளிகள் நீதிமன்றத்தில் நிறுத்த உலக அரங்கில் தமிழ் பேசும் மக்களால் மேற்கொள்ளப்பட்டு வரும் கையெழுத்து போராட்டம் முழுவீச்சில் இடம்பெற்று வருகிறது இதில் குவைத் வாழ் தமிழ்மாறன் ரமேஷ், பொறியாளர் க.முருகேசன், கேசவன், கவாஸ்கர், குமார் மற்றும் அன்பு அனைவரும் சேர்ந்து கையெழுத்தைப் (21-05-2015) நேற்றும் அனைத்து குவைத் வாழ் மக்களிடமும் கையெழுத்தை பெற்றார்கள். தங்களுடைய வேலைப்பளுக்களுக்கு மத்தியில் இவர்கள் தமிழின அழிப்புக்கு நீதி வேண்டிய கையெழுத்து போராட்டத்தை மேற்கொண்…
-
- 0 replies
- 677 views
-
-
http://www.thehindu.com/todays-paper/4300-from-af-pak-get-citizenship/article7316206.ece The NDA government on Sunday said it had granted citizenship to about 4.300 Hindu and Sikh refugees from Pakistan and Afghanistan in its one year of being in power, nearly four times the number granted to such persons in the preceding five years under UPA-II. According to officials in the government, this rapid increase in granting citizenships is in keeping with the BJP’s stated aim of positioning India as a ‘natural home’ for Hindus fleeing persecution anywhere in the world, a policy similar to Israel’s Law of Return that grants only Jews the right to return and settle there. T…
-
- 1 reply
- 1.1k views
-
-
எலக்சன் காலத்தில இவர் எங்களுக்கு நல்லது செய்வார் இவர் எங்களைக் காப்பாற்றுவார் எண்டு நம்பிக்கை வைச்சு ஒராளுக்கு வாக்களிப்பம். அவர் வெண்டதும் ஏதோ நாங்களே வெண்டது மாதிரி சந்தோசப்படுவம். கேக் வெட்டுவம் கொண்டாடுவம். ஆனால் மனிசன் பாளிமென்றுக்குள்ளை போய் கொஞ்சம் பகட்டுகளைக் கண்டதும் ஆள் மாறிப் போயிடும். ஆளைக் காணவே கிடைக்காது. நாங்கள் எதாவது கடிதத்தை மனுவைப் போட்டாலும் பதில் கிடைக்காது. என்னடாவெண்டு வெறுத்துப் போய் அடுத்த எலக்கசினிலை வேறையாளுக்குப் பின்னாலை போவம். அந்தாள் பேசிற பேச்சை வைச்சுப் பாத்து இந்தாள் எங்களைக் காப்பாற்றும் எண்டு முறிஞ்சு வேலை செய்வம். அந்தாளும் தன்ரை புத்தியைக் காட்டிப் போட்டு நாங்கள் கேக்கிற கதைக்கிற ஒண்டைடயும் காதிலை வாங்காமல் த்னரை பாட்டைப் பாக்கும். …
-
- 9 replies
- 1.6k views
-
-
கனடிய தமிழ் பேசும் வர்த்தகப் பிரமுகர் திரு கணேசன் சுகுமாருக்கு ஒன்றாரியோ மாகாணப் பாராளுமன்றத்தில் புகழாரம் சூட்டிய மாகாணப் பாராளுமன்ற உறுப்பினர் திரு Han Doug MPP கனடாவில் தமிழர்கள் மத்தியில் மட்டுமல்ல பல்லின மக்களாலும் ஆயிரக்கணக்கான அரசியல்வாதிகளாலும் நன்கு அறியப்பட்டவராக விளங்குபவரும், வெற்றிகரமான வர்த்தக நிறுவனங்களை இங்கு நடத்திய வண்ணம் பல நுாற்றுக்கணக்கான கனடியர்களுக்கும் வெளிநாட்டவர்களுக்கு வேலைவாய்ப்புக்களை வழங்கியவரும், பல நற் பணிகளுக்கு தாராள சிந்தையோடு வாரி வழங்கும் வள்ளலாக விளங்குகின்றவருமான திரு கனேசன் சுகுமார் அவர்களைப் பாராட்டி அ்ண்மையில் ரொரென்ரோ மாநகரிலட் உள்ள குயின்ஸ்பார்க் என்று அழைக்கப்படும் மாகாணப் பாராளுமன்றத்தில் நடைபெற்ற முக்கிய அமர்வொன்றில் புகழாரம…
-
- 1 reply
- 699 views
-
-
சிறிலங்காவை சர்வதேசக் குற்றவியல் நீதிமன்றத்தில் நிறுத்துக : நாடுகடந்த தமிழீழ அரசாங்கம் மில்லியன் (பத்து இலட்சம்) கையெழுத்து இயக்கத்தைத் தொடங்கியது ! • மக்களை மையப்படுத்திய நீதிக்கான இயக்கம் • சர்வதேசக் குற்றங்களைச் செய்தது சிறிலங்கா அரசே தான் • ஒரு உள்நாட்டு விசாரணை அமைப்புக்கான அரசியல் சூழல் இல்லை இலங்கைத்தீவில் தமிழர்களுக்கு எதிராக இனப்படுகொலை, மனித இனத்திற்கு எதிரான குற்றங்கள், போர்க்குற்றங்கள் ஆகியவற்றைச் செய்துள்ளவர்களை, சர்வதேசக் குற்றவியல் நீதிமன்றத்தின் முன்பு நிறுத்துமாறு ஐக்கிய நாடுகள் மன்றத்தை வலியுறுத்தி நாடுகடந்த தமழீழ அரசாங்கம் ஒரு கையெழுத்து இயக்கத்தை தொடங்கியுள்ளது. ஒரு மில்லியன் (பத்து இலட்சம்) கையெழுத்துக்களைப் பெறுவதை நோக்கமாகக் கொண்டுள்ள …
-
- 10 replies
- 1.4k views
-
-
மட்டக்களப்பில் பிறந்த மருத்துவர் ஆதித்தனுக்கு பிரிட்டிஷ் அரசு விருது வழங்கி கெளரவிப்பு! [Tuesday 2015-06-16 19:00] மட்டக்களப்பில் பிறந்து பாப்வா நியூகினியில் மருத்துவராகப் பணியாற்றும் டொக்டர் ஆதித்தன் செல்வநாதனுக்கு பிரிட்டிஷ் அரசு OBE விருது வழங்கி கௌரவித்துள்ளது. சிறிய நாடான பாப்வா நியூகினியிலுள்ள மக்களுக்கு சிறப்பான மருத்துவ சேவை வழங்கியதற்காகவே இந்த விருது வழங்கப்படுவதாக பாராட்டுப்பத்திரத்தில் தெரிவிக்கப்பட்டுள்ளது. கடந்த இருபது ஆண்டுகளுக்கும் மேலாக பாப்வா நியூகினியில் மருத்துவராக பணியாற்றி வரும் அவர், விமானங்களில் பறப்பவர்களின் உடல் நிலை குறித்த சிறப்பு மருத்துவப் படிப்பை படித்துள்ளார். பாப்வா நியூகினியில் போதிய உயர்த…
-
- 4 replies
- 842 views
-
-
பிரித்தானியாவில் வற்புறுத்தி, (forced) கல்யாணம் செய்து வைப்பதில், எம்மவர்கள் 6வது இடத்தில் ( 1.1% ) உள்ளனர். கடந்த வருடம் சட்டவிரோதமாக்கப்பட்ட பின், பாகிஸ்தானியர்கள் (38.3%) முதலிடத்திலும், இந்தியர் (7.8) இரண்டாம் இடத்திலும் உள்ளனர். ஒருவரை வற்புறுத்தி, திருமணம் செய்ய வைப்பது, 7 ஆண்டுகள் சிறை கொண்ட கிரிமினல் குற்றமாக்கப்பட்டுள்ளது. 'என்ற அண்ணயிண்ட பெடியக் கட்டத்தான் வேணும், இல்லையெண்டால் கொம்மாமை உயிரோட பார்க்க மாட்டாய், சொல்லிப்போட்டன்'. எண்ட தங்கச்சீன்ற பெட்டைக்கென்ன குறை, கறுப்பிதான், முந்தி யாரையோ விரும்பி, விட்டுப்போட்டா தான். ஆனால் நல்ல காசு, நகை, வீடு தருகினமே... என்ற எங்கண்ட விளையாட்டுக்காரர் கம்பி எண்ணத் தயாராக வேண்டியது தான். . SL placed sixth f…
-
- 8 replies
- 986 views
-
-
07ஜூன்2015 ஆகிய நேற்றைய தினத்தில் Durham Tamil Association இனால் 15 ஆவது சிறுவர் விளையாட்டுப் போட்டி + தமிழர் சந்திப்பு நிகழ்வு இனிதே நடாத்தப்பட்டது. சிறுவர்களுக்கான விளையாட்டுப் போட்டி, மதிய உணவு மற்றும் ஒன்றுகூடல் என்பனவற்றுடன் நிகழ்வு இனிமையாகக் கழிந்தது. ஒன்றாரியோ மாகாணத்தில் உள்ள அஜாக்ஸ் (Ajax), பிக்கரிங் (Pickering), விற்பி (Whitby), ஒஷாவா (Oshawa), கிளரிங்டன்(Clarington) மற்றும் உக்ஸ்பிரிட்ஜ் (Uxbridge) ஆகிய பிரதேசங்களை உள்ளடக்கிய பகுதிகளை டுறம் (Durham) பிரதேசம் என்று அழைப்பர். அண்மைக்காலமாக தமிழர்கள் பெரும் எண்ணிக்கையில் குடியேறி வரும் பிரதேசங்களில் டுறம் பிரதேசமும் ஒன்றாகும். இங்குள்ள 'டுறம் தமிழர் ஒன்றியம்' (Durham Tamil Association) எனும் அமைப்பு இப் ப…
-
- 3 replies
- 947 views
-
-
ஊர்கூடி உறவாடுவோம் என்னும் நிகழ்வொன்று, புலம்பெயர்ந்து யேர்மனியின் தென்மானிலத்திலுள்ள லூட்விக்போர்க் என்ற பெருநகருக்கு வந்துசேர்ந்த ஆரம்பகாலத் தமிழர்களால் ஊர்கூடி உறவாடுவோம் என்னும் நிகழ்வொன்று நடாத்தப்பட்டது. இந்நிகழ்வானது, 'லூட்விக்போர்க்' என்ற பெருநகருக்குள் அமைந்த 'மார்பார்க்' என்ற ஊரில் நடந்தேறியது. இந்நிகழ்வின் ஒழுங்குமுறைகள் சற்று வித்தியாசமாக இருந்தது. வழமையாக, முதலில் மங்கலவிளக்கேற்றி, வணக்கம் செலுத்தி, வரவேற்புரை, அறிமுகம் என நேரங்கள் நீண்டு, பெற்றேருடன் வரும் குழந்தைகள் சிறுவர்கள் ஏன் சில பெரியவர்களும்கூட பசி தாகம் ஏற்பட்டு எப்போதடா இடைவேளை வரும் என எதிர்பார்த்துப் பரிதவிப்பதுண்டு. இந்நிகழ்வில் வழமைக்கு மாறாக மண்டபத்தில் நுளைபவர்கள் நேரடியாகவே உணவுப்பண்டங்கள் உ…
-
- 11 replies
- 2.3k views
-
-
இங்கிலாந்தில்.. பார்மிங்காம் பகுதியில் கொள்வனவு செய்யப்பட்ட தக்காளி ரின்னில் பல்லி இருந்தமை சமையலின் போது கண்டறியப்பட்டுள்ளது. மேற்படி தக்காளின் ரின்.. பார்மிங்காமில் அமைந்துள்ள.. Masala Bazaar என்ற ஆசிய உணவுப் பொருள் விற்பனை நிலையத்தில் வாங்கப்பட்டுள்ளது. அது Euro Foods க்கு சொந்தமானது. Euro Foods தான் இந்த ரின்களை இத்தாலிய வழங்குனரிடம் இருந்து தருவித்ததாக விசாரணையின் போது தெரிவித்துள்ளது. http://www.bbc.co.uk/news/uk-england-birmingham-33018521
-
- 11 replies
- 2.7k views
-
-
புகலிடக் கோரிக்கையாளரும், ஈழத்தமிழருமன ஜனகன் சிவநாதன் என்பவரை நாடு கடத்தும் முயற்சிகளில் பிரித்தானிய குடிவரவு, குடியகல்வு அதிகாரிகள் ஈடுபட்டு வருகின்றனர். இந்த தகவலை ஓப்பன் டெமொக்கிரசி (opendemocracy) என்ற இணையதளம் இன்று வியாழக்கிழமை வெளியிட்டுள்ளது. ஜனகன் சிவநாதன் தற்போது மோர்டன் நிலையத்தில் தடுத்து வைக்கப்பட்டுள்ளார் என தெரிவிக்கப்பட்டுள்ளது. கடந்த யுத்த காலத்தில் ஜனகன் சிவநாதன் இலங்கையிலிருந்தபோது கல்விகற்ற சந்தர்ப்பத்தில் கொடூரமான சித்திரதைகளுக்கு முகங்கொடுத்திருந்ததாக அவரது ஆதரவாளர்கள் தெரிவித்துள்ளனர். அதன் பின்னர் அவர் 10 வருடங்களாக சிறைவைக்கப்பட்டிருந்தார் என்றும் கூறப்பட்டுள்ளது. இந்த நிலையில் ஜனகன் சிவநாதனின் வழக்கறிஞர் புதிய மருத்துவ அறிக்கைகளை முன்வைத்து …
-
- 0 replies
- 774 views
-
-
எதிர்வரும் யூன் 18ம் நாள் நடைபெறவுள்ள டென்மார்க் பாராளுமன்றத் தேர்தலில் டென்மார்க் வாழ் தமிழ் மக்களில் 40 வீதமானோர் வாழ்கின்ற பகுதியில்- (vestjylland Storkreds: Herning, Ikast-Brande, Ringkøbing-Skjern, Skive, Holstebro, Viborg, Silkeborg, Stuer, Lemvig ) – திரு கஜேந்திரன் சிறிசுரேந்திரன் (கஜன்) அவர்கள் போட்டியிடுகின்றார் என அறியப்படுகின்றது. 25 ஆண்டு காலமாக புலம்பெயர்ந்து டென்மார்க் நாட்டில் டெனிஸ் மக்களுடன் சமூக இணைப்பு மற்றும் நட்புறவோடு வாழ்ந்து வருகின்ற ஈழத்தமிழ்மக்கள் மத்தியில் ஈழத்தமிழர் ஒருவர் பாராளுமன்றத் தேர்தலில் பங்கெடுப்பது என்பது இதுவே முதல் தடவையாகும் எனக் குறிப்பிடப்படுகின்றது. இவ்வாறான சூழலில் நாம் வாழும் நாடுகளின் அரசியல்பொருளாதார வளர்ச்சியில் பங்குகொண…
-
- 0 replies
- 560 views
-
-
நெதர்லாந்தில் ஈழத்தமிழர் விளையாட்டு ஒன்றியம் நடாத்திய வெற்றிக்கிண்ண உதைபந்தபட்ட போட்டி 2015 [Tuesday 2015-06-02 07:00] கடந்த 31-05-2015 ஞாயிற்றுக்கிழமை மத்திய நெதர்லாந்தின் ZEIST என்னுமிடத்தில் ஈழத்தமிழர் விளையாட்டு ஒன்றியத்தால் வெகு சிறப்பாக நடாத்தப்பட்டது. கேணல் சங்கர் (சத்தியநான்)அண்ணாவின் நினைவுவணக்கத்துடன் காலை 10:00 மணிக்கு பொதுச்சுடரேற்றலுடன் ஆரம்பித்த நிகழவு பின்னர் தேசியக்கொடியேற்றப்பட்டு, ஈகச்சுடர் மலர்வணக்கம் அகவணக்கத்தை தொடர்ந்து. சிறுவர்களுக்கான உதைபந்தாட்டம், பெரியவர்களுக்கான உதைபந்தாட்டம், சீரற்ர காலநிலையிலும் வெகு சிறப்பாகவும் விறுவிறுப்பாகவும் நடைபெற்றது. இருந்தாலும் பலநூற்றுக்கணக்கான மக்கள் வந்து கலந்து கொண்டு மிக மகிழ்ச்சியா…
-
- 0 replies
- 430 views
-
-
முள்ளிவாய்காலில் இருந்து நல்லூர் வரை நீதிக்கான நடைப்பயணம் 574f2dae7c13dab28cf68b32ccd4369a
-
- 2 replies
- 633 views
-
-
May 29, 2015 லண்டன் ஈஸ்காமில் நாடுகடந்த தமிழீழ அரசாங்கத்தின் பொதுக்கூட்டம் ! by tmdas5@hotmail.com • TGTE சிறிலங்காவினை அனைத்துலக நீதிமன்றில் பாரப்படுத்துமாறு ஐ.நாவைக் கோரும் கையெழுத்து இயக்கத்தினை தீவிரப்படுத்தும் பொருட்டு லண்டன் ஈஸ்தாம் பகுதியில் பொதுக்கூட்டமொன்று இடம்பெற இருக்கின்றது. எதிர்வரும் மே 30ம் நாள் சனிக்கிழமை மாலை 7 மணிக்கு Trinity Community Centre, East Avenue, Eastham, LONDON, E12 6SG. எனும் இடத்தில் இப்பொதுக்கூட்டம் இடம்பெறுகின்றது. நாடுகடந்த தமிழீழ அரசாங்கம் ஒருங்குபடுத்தியுள்ள இக்கூட்டதில் பத்து லட்சம் கையெழுத்துக்களை இலக்காக கொண்டுள்ள கையெழுத்து இயக்கம் தொடர்பிலும் மற்றம் நடந்து முடிந்த நா.தமிழீழ அரசாங்கத்தின் அரசவைக் கூட்டம் தொடர்பிலும் …
-
- 0 replies
- 361 views
-