Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

நூற்றோட்டம்

நூல்கள் | அறிமுகம் | திறனாய்வு

பதிவாளர் கவனத்திற்கு!

நூற்றோட்டம் பகுதியில் நூல்கள், அறிமுகம், திறனாய்வு சம்பந்தமான பதிவுகள் இணைக்கப்படலாம்.

இப்பகுதியில் நூல்களின் அறிமுகங்கள், திறனாய்வுகள் மாத்திரம் இணைக்கப்படுதல் வேண்டும். ஈழத்தை சேர்ந்த, பூர்வீகமாகக் கொண்டவர்களின் நூல்களுக்கு முன்னுரிமை கொடுக்கப்படவேண்டும். ஏனையவை தரமான படைப்புக்களை அறிமுகம் செய்யும் நோக்கில் இணைக்கப்படல் வேண்டும்.

  1. எங்கிட்ட ஒரு காசிருக்கு அபிலாஷ் சந்திரன் சின்ன வயதில் என் அப்பா அடிக்கடி ஒரு நாட்டுப்புற கதை சொல்வார். ஒரு குருவிக் கதை. அதை அண்ணாத்துரை ஒரு மேடையில் சொன்னதாக கூறுவார். ரொம்ப நகைச்சுவையான அட்டகாசமான கதை. கதை இப்படி போகிறது. ஒரு ராஜாவும் அவர் மந்திரியும் வேட்டைக்கு வனத்துக்கு போகிறார்கள். வேட்டை முடித்து இருவருமாக ஓய்வு எடுத்துக் கொண்டிருக்கிறார்கள். அப்போது ஒரு குருவி இவ்வாறு பாடுவது கேட்கிறது: “என் கிட்ட ஒரு காசிருக்கு யாருக்கு வேணும் யாருக்கேனும் தேவையிருந்தா வாங்கிட்டு போங்கோ” முதலில் ராஜா இந்த பாடலை ஆர்வமாய் கேட்கிறார். பாவம் குருவி ஒரு காசை வைத்துக் கொண்டு என்ன பாடு பட்டு பாடுகிறது என யோசிக்கிறார். ஆனால் குருவி ரிப்பீட்டில் பாடிக் கொண்…

  2. ‘இலங்கையின் போரும் சமாதானமும்’ – ஒஸ்லோவில் இன்று புத்தக அறிமுக அரங்கு ரூபன் சிவராசாJun 06, 2019 by in செய்திகள் ‘இலங்கையின் போரும் சமாதானமும்’ – நோர்வேயின் சமாதானத் தோல்வியின் விளைவுகள், என்ற பேராசிரியர் Øivind Fuglerudஇன் புத்தக அறிமுக அரங்கு ஒஸ்லோவில் இன்று இடம்பெறுகின்றது. Øivind Fuglerud: நோர்வேஜிய சமூக மானிடவியற்துறைப் பேராசிரியர். முப்பது ஆண்டுகளுக்கு மேலாக இலங்கைத்தீவின் அரசியல் சமூக நிலைமைகள் பற்றிய ஆய்வுகளை முன்னெடுத்து வருபவர். மட்டுமல்லாது நோர்வே தமிழ்ச் சமூகம் தொடர்பான ஆழ்ந்த அறிதலுடையவர். ஈழத் தமிழர்களின் நாடுகடந்த வாழ்வு பற்றிய அறிதலுமுடையவர். இலங்கையின் பல பாகங்களிலும் தங்கியிருந்து கள ஆய்வுகளை மேற்கொண்ட அனுபவம் மிக்கவர் இலங்கை நிலைமை…

  3. தெரிந்தும் தெரியாத தமிழ் - நுாலாய்வு: கிருஸ்ணா நூல் வாங்க: kindle திரு. வி.இ.குகநாதன் அவர்களது தெரிந்தும் தெரியாத தமிழ் என்ற நுாலை kindle மூலம் அண்மையில் படிக்கும் வாய்ப்புக் கிடைத்தது. அந்நுாலைப் படித்த பின்பு அதனைப் பற்றி குறிப்புரை ஒன்றை எழுதினால் நன்றாக இருக்கும் என்ற நோக்கம் தோன்றவே இக் கட்டுரையை எழுத முனைந்துள்ளேன். ஒரு நுாலைப் படிக்கும் போதும் அதன் பக்கங்களைப் புரட்டும் போதும் முன் பின்னாகத் தகவல்களைச் சரிபார்த்துக் கொள்ள முடியும். ஆனால் இந்த நுாலைக் கின்டிலில் (kindle) படிப்பதால் பக்கங்களைப் புரட்டினாலும் குழம்பி விடுமோ என்ற பயமும் இடையிடையே தோன்றவே செய்தது. ஆனாலும் ஒருவாறு முழுமையாகப் படித்து முடித்த பின்பே இக்கட்டுரையை எழுதுகின்றேன். …

  4. தனக்கொன்றும் தெரியாதென தலைதிரும்பி இருந்த ஒட்டுமொத்த தமிழகத்தையும் – ஈழத்து இழப்பின் பக்கம் திருப்பி என் உறவுகள் மடிந்து கொண்டிருந்த பேரழிவை உணர்த்த தன் உயிரையும் துச்சமென ஈந்த தியாகி சகோதரர் திரு. முத்துகுமார் அவர்களை நினைவு கொள்வதில் – பெருமை கொள்வதோடு அல்லாமல் - அவருடைய இனத்தின் மீதான இந்த அக்கறை, மொழியின் மீதான பற்று சமுகத்தின் மீதான பொதுநல உணர்வை நாமும் நமக்குள்ளும் நிறைத்துக் கொள்வோம்! என் கவிதையை படிக்கும் முன்பு தங்கள் அனைவரிடமும் ஒரு மன்னிப்பினை கோரிக் கொள்கிறேன்.. வன்மம் உள்ள வார்த்தைகளை இதுபோன்ற கவிதைகளில் கையாளும் நிமித்தம் உள்ளது. பொதுவாக, நாய் என்றெல்லாம் எழுத நானே விரும்புவதில்லை - அதிலும் குறிப்பாக நாயிற்கு ஒப்பீடாக மனிதனை எண…

  5. ‘தேவதைகளின் தீட்டுத்துணி’ என்ற எனது முதலாவது சிறுகதைத்தொகுப்பு வெளியாகி பதின்னான்கு மாதங்களின் பின் இப்பொழுது ‘சேகுவேரா இருந்த வீடு’ என்ற இரண்டாவது சிறுகதைத் தொகுப்பு வெளியாகிறது. இடைப்பட்ட காலத்தில் எழதி பிரசுரமான சில கதைகள், பிரசுரமாகாத கதைகளென பதின்மூன்று கதைகள் இதிலிருக்கின்றன. ஈழ நூல்களைத் தொடர்ந்து பதிப்பித்து வரும் வடலிதான் இதனையும் வெளியிடுகிறது. முன்னர் ஒரு காலத்தில் கதைகள் எழுதுவதிலும், புத்தகங்கள் வெளியிட வேண்டுமென்பதிலும் அலாதி பிரியமிருந்தது. அப்பொழுதெல்லாம் நிறையக்கதைகள் எழுதித்தள்ளினேன். ஆயினும் அப்பொழுது எந்தப்புத்தகமும் வெளியாகியிருக்கவில்லை. ஒரு புத்தகத்திற்கு முயற்சி செய்து இறுதி வரை வந்து கைவிட வேண்டியதாயிற்று. அப்பொழுது அது பெரிய கவலையான விடயம்தான்.…

  6. வியக்கவைக்கும் சிங்களப் பண்பாட்டுக் கூறுகள் - நூல் விமர்சனம் | மா.பவித்திரா என்.சரவணனின் சிங்களப் பண்பாட்டிலிருந்து... ஒரு சமூகத்தின் பாரம்பரிய பண்பாட்டு அம்சங்கள் அனைத்தையுமே இன்னொரு தலைமுறைக்கு கடத்தி செல்வது இலகுவான விடயமல்ல. அவ்வாறு சிங்கள பண்பாட்டில் பல பாரம்பரிய அம்சங்கள் இன்றும் அதேமுறையில் பின்பற்றபட்டு வருகின்றது. இலங்கை பன்மைத்துவ சமூகத்தைக் கொண்ட நாடு. இன்று இன நல்லிணக்கம் குறைவாக இருப்பதற்கு முதன்மையான காரணங்களில் ஒன்றாக ஒரு இனத்தின் புராதன பண்பாட்டு, கலை, கலாசார அம்சங்கள் பற்றிய புரிந்துணர்வு இன்னொரு இனத்திற்கு இன்மையே ஆகும். இக்குறையை நிவர்த்தி செய்யும்பொருட்டும், இதுவரை தமிழில் அதிகம் பேசப்படாத சிங்கள புராதன கலாசாரத்தையும், பண்பாட்டு அம்ச…

  7. Started by விசுகு,

    முகடு - ஓலை 2 வாங்கினேன்.... வெளியில் நன்றாக வந்துள்ளது...... உள்ளே வாசித்துவிட்டு எழுதுகின்றேன்...

  8. புத்தகப்பண்பாடு அருகி வருகிறதா? இன்று உலக புத்தக தினம்! குளோபல் தமிழ் செய்திகளுக்காக பார்த்தீபன் நல்ல புத்தகங்கள் நல்ல நண்பர்கள் என்றும் நல்ல புத்தகங்களே சிறந்த வழிகாட்டிகள் என்றும் வாசிப்பே மனிதனைப் பூரணப்படுத்துகின்றது என்றும் பேசப்பட்ட கால கட்டம் மெல்ல மெல்ல நழுவிச் செல்வதைப் போல இருக்கிறது. ஒரு கால கட்டத்தில் புத்தகங்களை பதிப்பிப்பதும் புத்தகங்களைப் பெறுவதும் மிகவும் அரிதாக இருந்தது. அப்போது வாசிப்பும் புத்தக தேடலும் புத்தக பாதுகாப்பும் மிகவும் ஆரோக்கியமாக இருந்தது. ஆனால் தொடர்பாடலில், பதிப்புத்துறையில் பல்வேறு வளர்ச்சிகளும் பாய்ச்சல்களும் ஏற்பட்டுள்ள இந்தக் காலத்தில் புத்தக வாசிப்பு மிகவும் கவலைக்கிடமாகவல்லவா இருக்கிறது? இன்று உலக புத்தக தினமாகும். இதனை பத…

  9. [size=4]இந்தியாவில் பிறந்த பிரிட்டிஷ் எழுத்தாளரான சல்மான் ருஷ்டி தனது நினைவலைகள் பற்றி எழுதியுள்ள புதியதோர் புத்தகத்தில், தான் எழுதிய சர்ச்சைக்குரிய புதினமான தி சாட்டானிக் வெர்ஸஸ் (சாத்தானின் வேதங்கள்) பற்றிய தனது தரப்பு வாதத்தை மீண்டும் வலியுறுத்தியுள்ளார்.[/size] [size=3][size=4]1989ல் இந்த புத்தகம் வெளிவந்தபோது, இறைதூதர் முகமதுவை இது இழிவுபடுத்துவதாக உள்ளது என முஸ்லிம்கள் கொதிப்படைய வன்முறைமிக்க ஆர்ப்பாட்டங்கள் நடந்திருந்தன.[/size][/size] [size=3][size=4]சல்மான் ருஷ்டியைக் கொல்ல வேண்டும் என்று இரானின் முன்னாள் அதியுயர் மதகுரு அயதொல்லா கொமேனி மத ஆணை பிறப்பிக்க, பத்து ஆண்டுகளுக்கும் மேலான காலம் ருஷ்டி தலைமறைவாக வாழ்ந்துவந்தார்.[/size][/size] [size=3][siz…

  10. எங்களைப் பார்ப்பதற்காக விருந்தினர் ஒருவர் வருவதாக எம்மிடம் கூறப்பட்டது. நாங்கள் விருந்தினரைச் சந்திப்பதற்காக எமது சிறைக்கூடங்களிலிருந்து வெளியில் கொண்டு செல்லப்பட்டு மரம் ஒன்றின் கீழ் வட்டமாக அமருமாறு கூறப்பட்டோம். தமிழீழ விடுதலைப் புலிகளின் அரசியற்துறையில் ஒரு தலைவராகச் செயற்பட்ட கரிகாலன் எம்முடன் உரையாடுவதற்காக அங்கு வந்திருந்தார். சிறையிலிருந்த எம்மை விடுதலை செய்வதற்கு அவர்களுக்கு நாங்கள் உதவவேண்டும் என கரிகாலன் எம்மிடம் கேட்டார். கைதிகளை விடுவிப்பதற்கான சமரசப் பேச்சுக்களுக்காக பிரதிநிதி ஒருவரை அனுப்புமாறு சிறிலங்கா அரசாங்கத்திற்கு அழுத்தம் கொடுக்கும் வகையில், அப்போதைய எதிர்க்கட்சித் தலைவராக இருந்த ரணில் விக்கிரமசிங்கவிற்கு கடிதம் ஒன்றை எழுதுமாறு கரிகாலன் எம்மிடம…

  11. ''நகரங்கள் காட்டில் மிதந்துகொண்டிருந்தன'' சுந்தரபுத்தன், ஷங்கர்ராமசுப்ரமணியன் சமகால தமிழ் எழுத்துலகின் முக்கியமான பெயர் எஸ். ராமகிருஷ்ணன். பத்திரிகை, சினிமா, இணையம் என பன்முக ஊடகங்களில் தனித்த ஆளுமையுடன் செயல்பட்டுக்கொண்டிருக்கிறார். சமீபத்தில் இயல் விருதுக்காக கனடா, அமெரிக்கா நாடுகளுக்குச் சென்றுவந்த அவரிடம் எழுத்துகள், பயணம், வாசிப்பு பற்றி தசஇ பேசியதிலிருந்து.... சிறுபத்திரிகை எழுத்தாளராக செயல்படத் தொடங்கியவர் நீங்கள். இப்போது தமிழகம் அறிந்த பிரபல எழுத்தாளுமைகளில் ஒருவர். உங்களிடத்தில் இந்த புகழ் என்ன மாற்றங்களை ஏற்படுத்தியுள்ளது? முதலில் நான் புகழ் என்று சொல்லமாட்டேன். மாறாக என்னுடைய வாசகர்களின் எண்ணிக்கை அதிகமாகியிருக்கிறது. வாசிக்கும்…

  12. 41-வது தென்னிந்திய புத்தகக் கண்காட்சி: ஜன.10 முதல் 22 வரை சென்னையில் நடக்கிறது புத்தக கண்காட்சி - கோப்புப் படம் தென்னிந்திய புத்தக விற்பனையாளர் மற்றும் பதிப்பாளர் சங்கம் (பபாசி) சார்பில் ஆண்டுதோறும் புத்தகக் கண்காட்சி நடந்து வருகிறது. 40 ஆண்டுகளாக நடந்த கண்காட்சி 41-வது ஆண்டாக வரும் 10-ம் தேதி துவங்க உள்ளது. தென்னிந்திய புத்தக விற்பனையாளர் மற்றும் பதிப்பாளர் சங்கம்(பபாசி) சென்னை புத்தகக் கண்காட்சியை 40 ஆண்டுகளாக நடத்தி வருகிறது. சென்னை தவிர மதுரை, திருச்சி போன்ற நகரங்களிலும் பபாசி புத்தகக் கண்காட்சிகளை நடத்தி வருகிறது. ஆண்டு தோறும் நடைபெறும் புத்தகக் கண்காட்சியில் 700 அரங்குகள் வர…

  13. ஈழத்துக் கவிஞரும் எழுத்தாளருமான தீபச்செல்வன் எழுதிய முதல் கவிதை நூலான பதுங்கு குழியில் பிறந்த குழந்தை கவிதைத் தொகுப்பு அனுஷா சிவலிங்கம் அவர்களால் சிங்களத்தில் மொழியாக்கம் செய்யப்பட்டு கடந்த வெள்ளியன்று (29 / 9 /2023) ஆம் திகதி கொழும்பு பண்டாரநாயக்க சர்வதேச மாநாட்டு மண்டபத்தில் அரங்கம் நிறைந்த மக்கள் மத்தியில் இடம்பெற்றது. சிங்கள படைப்பாளிகள் மற்றும் கலைஞர்கள் பலர் நூல் தொடர்பிலும் ஈழ மக்களது போராட்டம் தொடர்பிலும் பல முக்கிய உரைகளை நிகழ்த்தினர். ஈழத்தமிழர் போராட்டம், விடுதலைப் புலி போராளிகள் தொடர்பில் சிங்கள மக்கள் படைப்பாளிகள் அறிந்து கொள்ள வேண்டிய விடயங்களை தீபச்செல்வனின் உரை அமைந்தது (உரையை இணைப்பில் பார்க்கலாம்). ஈழத்து இலக்கிய உலகில் வலிமை மிக்க கு…

  14. ஈழம் - தமிழ் திரையுலகினர் ஆவேசம் தமிழ் திரையுலகினர் ஈழத்திற்காக ஆவேசமாக, ஆத்திரமாக, வேதனையாக தங்களை பதிவு செய்திருக்கிறார்கள். இந்தப்பதிவுகள் ‘ஈழம்-மௌனத்தின் வலி’என்று தனிப்புத்தகமாக தொகுக்கப்பட்டுள்ளது. நடிகர் கமல்ஹாசன், நடிகர் சத்யராஜ், நடிகர் சூர்யா, நடிகர் பிரகாஷ்ராஜ், இசையமைப்பாளர் ஏ.ஆர்.ரகுமான், இயக்குநர்கள் பாலா,அமீர், சேரன், லிங்குசாமி, மிஸ்கின்,ஏ.ஆர்.முருகாதாஸ், கே.வி.ஆனந்த், பாலாஜிசக்திவேல், கவிஞர்கள் வைரமுத்து, அப்துல்ரகுமான்,இன்குலாப், பா.விஜய்.தாமரை, தமிழச்சி, கபிலன், நா.முத்துக்குமார், அறிவுமதி, மு.மேத்தா முதலானோர் தங்களது ஈழ உணர்வுகளை பதிவு செய்துள்ளனர். நேற்று சென்னையில் நடந்த இப்புத்தகத்தின் வெளியீட்டு விழாவிற்கு நடிகர்கள் சூர்யா, பிரக…

  15. தீபச்செல்வனின் ‘ஈழம் - மக்களின் கனவு’ சித்திராங்கன் சென்னை புத்தகத் திருவிழாவில் கவிஞர் தீபச்செல்வனின் ‘ஈழம் மக்களின் கனவு’ என்ற புதிய நூல் தோழமை வெளியீடாக வந்திருக்கிறது. பதுங்கு குழியில் பிறந்த குழந்தை, ஆட்களற்ற நகரத்தைத் தின்ற மிருகம், பாழ்நகரத்தின் பொழுது ஆகிய மூன்று தொகுப்புக்கள் ஏற்கனவே வெளிவந்துள்ள நிலையில் இது தீபச்செல்வனின் நான்காவது நூலாகும். ‘ஈழம் மக்களின் கனவு’ என்ற இந்நூல் ஈழம் பற்றிய உரையாடல்களையும் வாக்குமூலங்களையும் கொண்டிருக்கிறது. தீபச்செல்வனுடன் ஷோபாசக்தி நிகழ்த்திய ‘ஈழத்து மக்களும் கனவுமே எனது ஆதர்சம்’ என்ற நேர்காணல் தொடர்ச்சியான விமர்சனத்தினை எதிர்கொண்ட ஓர் உரையாடலாகும். அதேபோல் ‘பதுங்குகுழியில் இருந்து கொஞ்சம் சொற்கள்’ என்ற நேர்காணல் …

  16. ஆறிப்போன காயங்களின் வலி உண்மையில் அவை ஆறிப்போகாத வடுக்களின் நினைவுகள் தான். 18 ஆண்டுகள் விடுதலைப் புலிகள் இயக்கத்தில் போராளியாக செயற்ப்பட்ட வெற்றி செல்வியின் ஏழாவது நூல் இதுவாகும். பெயருக்கு ஏற்றாற் போல அவர் வெற்றி செல்வியாகத்தான் வாழ்ந்து கொண்டிருக்கிறார். நம் வாழ்க்கையில் தினம் தினம் எத்தனையோ நூல்களை வாசிக்கின்றோம். ஆனால் ஏனோ ஒரு சில நூல்கள் தான் எப்போதும் நெஞ்சை வருடிக்கொண்டே இருக்கும். அதுபோலத்தான் இந்த நூலும். அவர் வாழ்ந்த சமூக சூழலில் உள்ள மக்களின் பிரச்சினைகள்தான் அவரது படைப்புக்களின் கருவாக மாறியுள்ளது. ஆறிப்போன காயங்களின் வலி என்ற இந்நூல் 2016 ஆம் ஆண்டு ஜூன் மாதம் தவமணி வெளியீட்கதால் வெளியிடப்பட்டது. ஈழப் போருக்கு பின்னரான காலப்பகுதியில் புனர்வாழ…

  17. கழுகு நிழல் -புதிய அரசியல் பத்தி எழுத்து பாரம்பரியத்தின் தொடக்கம் யோ.கர்ணன் தமிழில் புனைவெழுத்துக்கள் அச்சாகும் அளவிற்கு புனைவுசாரா எழுத்துக்கள் அச்சாகின்றனவா என்பது தெரியவில்லை. இதற்கான பதில் பெரும்பாலும் இல்லையென்பதாகவே இருக்கும் என்று நினைக்கிறேன். அதிலும் குறிப்பாக ஈழத்தமிழ் சூழலில் புனைவுசாரா எழுத்துக்களின் தொகுப்பென்பது கோடைமழையை ஒத்த நிகழ்வென்பதே என் அபிப்பிராயம். பொதுவாகவே ஈழத்தில் பதிப்பக முயற்சிகள் சிரமமான விடயமென்று ஆகி வருகின்றன. இந்திய சூழலுடன் ஒப்பிடுகையில் புத்தகங்களிற்கான சந்தை வாய்ப்பு, விநியோக வலையமைப்பு, அச்சு தரம் என்பனவற்றில் வெகுவாக பின்தங்கியிருப்பதும் இதற்கான குறிப்பிடத்தகுந்த காரணங்கள். இப்பொழுது சொல்லிக் கொள்ளும்படியான பதிப்பக முயற்சிகள் இ…

  18. தமிழின் முக்கியமான எழுத்தாளர்கள், வாசகர்கள், மொழிபெயர்ப்பாளர்கள் ஆகியோரைச் சிறந்த மொழிபெயர்ப்பு நூல்களைப் பரிந்துரைக்கும்படிக் கேட்டு, அவர்களுடைய பட்டியல்களிலிருந்து இறுதிசெய்யப்பட்ட பட்டியல்கள் இங்கே கொடுக்கப்பட்டிருக்கின்றன. உலக இலக்கியம் * அந்நியன்-ஆல்பெர் காம்யு; (பிரெஞ்சிலிருந்து) வெ.ஸ்ரீராம், க்ரியா பதிப்பகம். * அன்னா கரீனினா- டால்ஸ்டாய்; (ஆங்கிலம் வழி) நா. தர்மராஜன், பாரதி புத்தக நிலையம். * கடலும் கிழவனும் - எர்னஸ்ட் ஹெமிங்வே; (தமிழில்) ச.து.சு. யோகியார், எஸ்.எஸ். பப்ளிகேஷன். * கரமசோவ் சகோதரர்கள் - பியோதர் தாஸ்தாயெவ்ஸ்கி; (ரஷ்ய மொழியிலிருந்து), அரும்பு சுப்பிரமணியம், காலச்சுவடு பதிப்பகம். * நம் காலத்து நாயகன்- லெர்ம…

  19. நான் ஸ்ரீலங்கன் இல்லை - தீபச்செல்வனின் புதிய கவிதை நூலின் அசத்தும் அட்டைப்படம்.! ஈழத்து கவிஞர் தீபச்செல்வனின் புதிய கவிதை தொகுப்பின் அட்டைப் படம் வெளியிடப்பட்டுள்ளது. தீபச்செல்வனின் பிறந்த தினமன்று, ‘நான் ஸ்ரீலங்கன் இல்லை’ என்ற புதிய கவிதை நூலின் அட்டைப் படத்தை யாவரும் பதிப்பகம் வெளியிட்டுள்ளது. கடந்த ஆண்டு தீபச்செல்வன் எழுதிய நடுகல் நாவல் வெளியாகி உலக அளவில் வாசகர்கள் மத்தியில் பெரும் வரவேற்பை பெற்றிருந்தது. நடுகல் மூவாயிரம் பிரதிகளை தாண்டி, மூன்றாவது பதிப்பு காண்பதாக அண்மையில் தீபச்செல்வன் தெரிவித்திருந்தார். கவிதைகள் வாயிலாக பரவலாக பெரும் வரவேற்பை பெற்றுள்ள தீபச்செல்வனின் ஆறாவது கவிதை நூல் இது. இதற்கு முன்னதாக "எனது குழந்தை பயங்கரவாதி " என்ற கவிதை ந…

  20. பாரிஸில் ஆயுத எழுத்து ..கோமகனின் தனிக்கதை மற்றும் நிலவு குளிர்சியாக இல்லை .ஆகிய புத்தகங்களின் அறிமுகமும் திறனாய்வும் . ஆதரவு கொடுப்பவர்கள் .எதிர்ப்பவர்கள் .புறக்கணிப்பவர்கள் .அனைவரையும் அன்புடன் அழைக்கிறேன் .

    • 10 replies
    • 1k views
  21. வாசிப்போம் வாருங்கள் - எஸ். ராமகிருஷ்ணன் ருஷ்ய எழுத்தாளர்கள் மற்றும் கடந்த காலத்தின் புகழ்பெற்ற செவ்வியல் நாவல்கள் பற்றியே அதிகம் எழுதி வருகிறீர்களே, சமகால உலக இலக்கியத்தில் கவனம் கொள்ளவேண்டிய முக்கிய எழுத்தாளர்கள் யார். என்ன புத்தகம் என்று ஒரு சிறிய அறிமுகம் தர இயலுமா ? என இரண்டு நாட்களுக்கு முன்பு சத்யநாராயணா என்ற நண்பர் ஒரு மின்னஞ்சல் அனுப்பியிருந்தார், அவருக்கு எழுதப்பட்ட இந்த மின்னஞசலை விருப்பமான வேறு எவருக்காவது பயன்படக்கூடும் என்று நினைத்து அப்படியே வெளியிடுகிறேன் •• கடந்த ஐந்து ஆண்டுகளில் நான் வாசித்தவரை முக்கியமான எழுத்தாளர்களாக பத்து பேரைக்குறிப்பிடுவேன், ஆப்ரிக்க இலக்கியம். லத்தீன் அமெரிக்க இலக்கியம். பின்நவீனத்துவம். என்று ஒ…

  22. 'தனிமனித அவலத்தின் நினைவுகள் கூட்டு மனநிலையில் வடுவாக மாறுகின்றன.' பா.அகிலனின் 'அம்மை' கவிதை நூலை முன்வைத்து… தேவகாந்தன் மறைந்த கலை இலக்கிய விமர்சகர் வெங்கட் சாமிநாதன்மூலம் தொண்ணூறுகளின் ஆரம்பத்தில் பா.அகிலனது கவிதைகளுடனான அறிமுகம் எனக்கு ஏற்பட்டது. இந்த அறிமுகத்தைத் தொடர்ந்தே 'பதுங்கு குழி நாட்கள்' தொகுப்புக்குள்ளான என் பிரவேசம் இருந்தது. அவரது அடுத்த கவிதைத் தொகுப்பு 'சரமகவிகள்' வெளிவந்தபோது, மேலும் அவரது கவிதைகளை அறிவதற்கான தரவுகளுடன் நான் இருந்திருந்தேன். 'அம்மை' தொகுப்பு வெளிவந்தபொழுது அவருடன் நேரடி அறிமுகமே உண்டாகியிருந்தது. கவிதைகளின் அகத்துள்ளும் அகலத்துள்ளும் சென்று தேட இது இன்னும் வாய்ப்பாக அமைந்தது. 'அம்மை' தொகுப்பை புரட்டியதுமே என் மனத…

  23. அந்த நிலவறை மனிதன் யார்? பத்தொன்பதாம் நூற்றாண்டின் இறுதியில் பிரிட்டிஷ் எழுத்தாளர் ஆர்தர் கானன் டாய்ல் படைத்த துப்பறியும் கதாபாத்திரமான ஷெர்லாக் ஹோம்ஸ்தான், நவீன தடயவியல் என்ற புதிய அறிவுத்துறை உருவாவதற்கே வழிவகுத்தது. குற்றம் நடந்த தலம், குற்றம் நடந்த உடலைப் பரிசீலிப்பதன் வழியாக குற்றத்துக்கான சூழலையும் குற்றவாளியையும் நெருங்க முடியலாமென்ற சாத்தியத்தைச் சுட்டிக்காட்டியவர் ஷெர்லாக் ஹோம்ஸ். ஆர்தர் கானன் டாய்ல், ஷெர்லாக் ஹோம்ஸைப் படைத்ததற்கு ஒரு தசாப்தத்துக்கு முன்னர், ஃபியோதர் தஸ்தயேவ்ஸ்கி தனது மிகச் சிறந்த படைப்பான கரமசோவ் சகோதரர்களைப் படைத்துவிட்டார். ஷெர்லாக் ஹோம்ஸின் குற்ற ஸ்தலம் உடல் என்றால், தஸ்தயேவ்ஸ்கியின் ஆர்வம் உடலுக்குள் சற்றே ஆழத்தில் உள்…

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Account

Navigation

Search

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.