மெய்யெனப் படுவது
மெய்யியல் | நற்சிந்தனைகள் | ஆன்மீகம் | இசங்கள் | பகுத்தறிவு
மெய்யெனப் படுவது பகுதியில் மெய்யியல், நற்சிந்தனைகள், ஆன்மீகம், இசங்கள், பகுத்தறிவு பற்றிய தரமான சிந்தனையைத் தூண்டும் தகவல்கள் இணைக்கப்படலாம்.
எனினும் மதப் பிரச்சாரம், திருவிழாக்கள் போன்ற பதிவுகள் தவிர்க்கப்படவேண்டும்.
1238 topics in this forum
-
கீதை காட்டும் பாதை - இளங்கோ நம்மில் பலர் ஏதாவது நூலை படிக்கும் முன்பே அது தொடர்பான அதீத மயக்கத்தில் ஆழ்ந்திருப்பார்கள். அண்மையில் எனது நண்பர் ஒருவர் பகவத் கீதையைப் பற்றி என்னுடன் கதைத்துக் கொண்டிருந்தார். கீதை ஒரு தலை சிறந்த நூல் என்றும் அது போதிக்கும் தத்துவங்கள் மகத்தானவை என்றும் அவர் கூறிக் கொண்டிருந்தார். அவரிடம் ஐந்து நிமிடங்கள் பேசிய பின்தான் எனக்குத் தெரிந்தது கீதையானது போர்க்களத்தின் நடுவில் கண்ணனால் அருச்சுனனுக்கு சொல்லப் பட்டது என்ற ஒன்றைத் தவிர வேறு எதுவும் அவருக்கு தெரிந்திருக்கவில்லை என்று. அது மட்டுமல்ல எது நன்றாக நடந்ததோ அது நன்றாகவே நடக்கும் என்று தொடங்கும் கீதையின் அந்த வரிகள் இல்லாத ஈழத் தமிழர் வீடுகள் இருக்குமோ என நான் ஐயுறும் அளவிற்கு நான் சென்ற அத…
-
- 0 replies
- 6.5k views
-
-
-
பாரதிதாசனும் பெரியாரும் எஸ்.வி.ராஜதுரை ''...சமூகப் புரட்சி தனது கவித் திறனைப் பழங்காலத்திலிருந்து பெற முடியாது; எதிர்காலத்திலிருந்துதான் பெற முடியும்." -கார்ல் மார்க்ஸ், லூயி போனபார்ட்டின் பதினெட்டாம் புரூமேர் 1891-1967ஆம் ஆண்டுகளில் வாழ்ந்த பாரதிதாசன் பெரியாரின் சமகாலத்தவர். பெரியாருக்கு 12ஆண்டுகளுக்குப் பின்பு பிறந்து பெரியாருக்கு ஒன்பது ஆண்டுகளுக்கு முன்பே இயற்கை எய்தியவர். பெரியாரைவிட ஏறத்தாழ 22ஆண்டுகள் ஆயுட்காலம் குறைந்தவர். 37ஆண்டுக் காலம் ஆசிரியப் பணி, கவிதைத் தொழில், நாடகப்பணி, திரைப்பட ஈடுபாடு ஆகிய வற்றோடு காங்கிரஸ் தேசிய இயக்க, சுய மரியாதை இயக்கச் செயல்பாடுகளில் தன்னை ஈடுபடுத்திக் கொண்டவர். சிறிது காலம் புதுவைச் சட்டமன்ற உறுப்பினராக வும…
-
- 4 replies
- 5.9k views
-
-
அண்மையில் வெளியான...பெரியார்.. படம்.. பெரியார் போலவே...முரண்பாடுகளுடன்.... 1. ராமசாமியாகி நாயக்கர் ஆகிய பெரியாரின் பூர்வீகம் மறைக்கப்பட்டு ஈரோட்டுக்கே சொந்தமாக்கிக் காட்டி உள்ளார்கள். 2. நாயக்கர் என்ற சாதியக் கூறை தூக்கி எறிவதாகச் சொல்லும் பெரியார்.. ராமர் + சாமி என்பதை தூக்கி எறியாமலே கட்டிக்காத்திட்டத்தை சுயமரியாதைக்க அடக்கிட்டாங்க. 3. நாகம்மையின் தாலியைக் கழற்றியவர்.. தான் மட்டும் புலிப்பல்லுப் போட்ட சங்கிலி சகிதம்..நாகம்மைக்கு இடஞ்சல் இல்லாம இருக்க விரும்பாம.. சுயநலத்தோட இருக்கிறார். 4.பெண்களை சுயசிந்தனையின் வழி அறிவுபூர்வமா வழிநடத்தாம.. அவங்களை ஏமாளியாக் காட்டி ஏமாற்றுக் கதை சொல்லி.. ஏமாற்றி அவர்களில் மாற்றங்களை காட்டிறது பெண்களை ராமசாமி எந்தளவுக…
-
- 36 replies
- 7.4k views
-
-
கடவுள் இந்த உலகத்தைப் படைத்தார் எனில், கடவுளை யார் படைத்தார்? இந்த உலகம் சிக்கலானது அதிசயமானது எனில், உலகத்தைப் படைத்த கடவுளும் அதிசயமானவரா சிக்கலானவரா? இவ்வாறான பல சிக்கலான கேள்விகளுடன் இன்று பரபரப்பாக விற்பனையாகிக் கொண்டிருக்கும் புத்தகம், The God Delusion.'Richard Dawkins'என்னும் ஒக்ஸ்போர்ட் பேராசிரியர் எழுதி இருக்கும் இந்தப் புத்தகத்தில் அப்படி என்ன எழுதி இருக்கிறார்? மாய உலகில் ஒருவர் சஞ்சரிப்பார் எனில் நாம் அவருக்கு பித்துப் பிடித்து விட்டது என்போம், அனால் அதே மாயையில் பலரும் சஞ்சரிக்கும் போது அவர்கள் ஒரு சமயத்தைப் பின் பற்றுகிறார்கள் என்போம்.ஏன்? எதற்கு? என்கிற கேள்விகளுக்கு அப்பால் இது இப்படித் தான் இது புனிதமானது நீ இதனை நம்பு என்பது சமயம்.இது பற்றி எ…
-
- 8 replies
- 2.5k views
-
-
கடவுள்மறுப்புக்கொள்கை எதோ இன்று தோன்றியது அல்ல. கடவுள்மறுப்புக்கொள்கைகள் வெவ்வேறு காலகட்டங்களில் வெவ்வேறு மனிதர்களால் தோன்றிக்கொண்டுதான் இருக்கின்றன. எடுத்துக்காட்டாக கடந்தநூற்றாண்டில் அம்பேத்கார், பெரியார் போன்றோர்கள் இந்தியாவில் கடவுள்மறுப்புகொள்கைகளை பெரிதும் உறுதிபடுத்தினர். மார்க்ஸிய தத்துவமும் கம்யுனிசமும் கடவுள்மறுப்புகொள்கைகளை அடிப்படையாகக் கொண்டவை. டார்வினின் பரிணாம வளர்ச்சித்தத்துவம் கடவுள்மறுப்பை மேலும் உறுதிபடுத்தியது. புத்தர் மற்றும் சக்கிரடிஸ்-ன் தத்துவங்கள் கடவுள் மற்றும் கடவுள் சார்ந்த சாத்திரங்களை எதிர்த்தன. பொதுவாக, கடவுள்மறுப்பும் பகுத்தறிவும் ஒன்றோடொன்று சம்பந்தப்பட்டவை. ஆனால் பகுத்தறிவு முழுமையாக செயல்படாவிட்டால், கடவுள்மறுப்பு நிச்சயமாக நீர்த்த…
-
- 0 replies
- 942 views
-
-
01. தலைவர்களுக்காகக் காத்திருக்காதீர்கள். தனிமையாகவே செய்யுங்கள், தனி மனிதனாக தனிமனிதனுக்கு செய்யத் தொடங்குங்கள். 02. கிறீஸ்துவை அறிதல் என்பது பிரசங்கம் வைப்பதல்ல வாழ்ந்து காட்டுவது. 03. நம்மிடமும் குற்றம் குறைகள் இருப்பதைப் பார்க்க மறுப்பதுதான் பாவங்களில் எல்லாம் மகாபாவம். 04. கிறிஸ்துவின் சமயம் அன்பு அன்பைப் பரப்புவதே கிறீத்தவம். 05. கடவுளுக்கு விருப்பமான செயலைச் செய்ய வேண்டுமா உங்கள் குடும்பத்தையும் அருகில் இருப்பவரையும் கவனித்துக் கொள்ளுங்கள். 06. தொழு நோயும், கசரோகமும் நோயல்ல கவனிக்க ஆளில்லாமையே பெரிய நோயாகும். 07. தோல்விகள் என்றால் இறைவன் தருகிற முத்தங்கள். 08. சந்தோசம் ஒரு தொற்று நோய் ஏழைகளுக்கு சேவை செய்யும்போது சந்தோசத்துடன் புற…
-
- 1 reply
- 2.5k views
-
-
யேசு அழைக்கிறார்" தினகரனின் தீர்க்கதரிசனங்கள்!!! - தமிழ்நாட்டில் இருந்து வெளிவரும் "உண்மை"(மே 1-15) இதழில் வெளிவந்த கட்டுரை - மதத்தை மூலதனமாக வைத்து வணிகம் செய்யும் மதவாதிகள் இப்போதெல்லாம் காலத்திற்குத் தக்கவாறு மாறிக் கொள்கிறார்-கள். கருத்தால் மாற்றிக் கொள்ளவில்லை. கரன்சிக்காக மாறிக் கொள்கிறார்கள். இந்து மதத்தைத் தக்க வைத்துக்கொள்ள தியானம், யோகம், வாழும் கலை என்று புதிய பெயர்களுடன் கும்பலைத் திரட்டுகிறார்கள். கிறித்துவப் பிரச்சாரகர்களோ இன்னும் புதிய வழியைத் தேடுகிறார்கள். ஒரு மாதத்திற்கு முன் 10ஆம், 12ஆம் வகுப்பு தேர்வு சமயம் தேர்வில் வெற்றி பெற பிரார்த்தனை என்று ஒரு கூட்டத்தைத் திரட்டினார் திருவாளர் பால் தினகரன். இவர் நீண்ட நாட்களாக இயேசுவை அழைத்துக் கொ…
-
- 25 replies
- 8.7k views
-
-
பெரியார் ரசிகர்கள், அவர் கொள்கைகளை எதிர்க்கிறவர்கள் எல்லோரும் நிச்சயமாக படிக்க வேண்டிய கட்டுரை. 19.9.2004 ஜூனியர் விகடனில் ஞாநி எழுதிய கட்டுரை. தீண்டாமை என்ற மிகப் பெரிய சமூகக் கொடுமைக்கு எதிராக இருபதாம் நூற்றாண்டில் நடந்த முதல் மாபெரும் போராட்டம்... வைக்கம் போராட்டம்! 1924-ல் நடந்த அந்தப் போராட்டத்துக்குக் காரணம், மாதவன் என்ற ஈழவ சாதி வக்கீலை திருவனந்தபுரம் நீதிமன்றத்துக்குள் பணிக்குச் செல்லவிடாமல் தடுத்ததுதான். நீதிமன்றம் அரண்மனை வளாகத்தில் இருந்தது. மகாராஜா பிறந்த நாளுக்காக யாகம் நடந்துகொண்டிருந்தது. அப்போது ஈழவர் அந்த வளாகத்தில் நுழைந்தால் தீட்டாகிவிடும் என்று மாதவன் தடுக்கப்பட்டார். கேரளா முழுவதும் கோயில்களை சுற்றியுள்ள தெருக்களில் தாழ்த்தப்பட்டோர் நடக்கக்க…
-
- 5 replies
- 2.8k views
-
-
உ திருச்சிற்றம்பலம் ஸ்ரீ மெய்கண்ட தேசிகன் திருவடி வாழ்க திருக்குறள் பொது நூலா? சித்தாந்த பண்டித பூஷணம் ஆ.ஈசுரமூர்த்திப் பிள்ளை திருநெல்வேலி பேட்டை தோற்றுவாய் விஞ்ஞானிகள் அதிகரிக்கின்றனர். விஞ்ஞானம் வளர்கிறது. அதனால் அற்புதங்கள் பல ஆக்கம் பெறுகின்றன. ஆயினும் அவற்றுள் தீங்கு பயப்பன பல. அவையும் நலத்துக்குப் பயன்படுத்தப்படுமா? அத்தீங்கு அகற்றப்படுமா? அவ்வாசையோடு செய்யப்படும் முயற்சிகளுமுள. நலம் பயக்கும் அற்புதங்களும் பலவே. ஆனால் எதிர்பாராத விதத்தில் ஆபத்துக்கள் அவற்றாலும் விளைவதுண்டு. எப்படியும் அவ்வற்புதங்கள் அற்புதங்களே. அவற்றால் உலகம் செழிக்கிறது. நாகரிகம் மேற்போகிறது. மக்கள் சுகிக்கின்றனர். அதனை நாமுஞ் …
-
- 130 replies
- 25.1k views
-
-
நாம் யார், எங்கிருந்து வந்தோம், எங்கே செல்கிறோம், எப்படி இங்கு வந்தோம்,உலகம் தோன்றியது எப்படி, மனிதரைக் கடவுள் படைத்தாரா, கடவுள் இருக்கிறார,அப்படியாயின் கடவுளை யார் படைத்தார் போன்ற பல விடை தெரியா வினாக்களுக்கு விடை காண வேண்டுமெனில் நாம் இந்தப் பிரபன்சம் பற்றிய சில அடிப்படையான விடயங்களைத் தெரிந்து கொள்ள வேண்டும். இந்தப் பிரபன்சமும் நாமும் இந்த உலகமும் உலகில் வாழும் அனைத்து சீவராசிகளும்,உலோகங்களும்,மூல
-
- 11 replies
- 2.4k views
-
-
பகுத்தறிவைப் பயன்படுத்தும் முறை 'திராவிட நாடு பிரிய வேண்டு மென்று ஆந்திர, மலையாள கன்னட மக்கள் கவலைப்படவில்லை. வடமொழித் தொடர்பு அவர்கள் மொழியில் இருப்பதால் அவர்கள் வடமொழி ஆதிக்கத்தை எதிர்க்க மனநிலை இல்லாதவர்களாய் உள்ளனர்' (18-6-1955 தமிழ்நாடு) என்கிறாரவர். திராவிட நாட்டுப் பிரிவுக்கு அவர் பல வருடங்கள் உழைத்தார். அவ்வழைப்புக்கு மூலமான தம் பகுத்தறிவை அவர் சரியாகப் பயன் படுத்தவில்லை. அவ்வுழைப்பு வீணாயிற்று. அவர் சலித்துவிட்டார். பிறகுதான் அவர் மூளையில் புதியதோர் பகுத்தறிவு உதித்தது. அதுவே அவ்வாக்கியம். 'அந்த மூன்று போரட்டங்களிலும் நாம் தோல்வியைத்தான் அடைந்தோம்.' (19-8-1955 தமிழ்நாடு) என்பது அவரது மற்றோ ரழுகை, 'மதம் அழிந்தால் அ…
-
- 68 replies
- 10.3k views
-
-
முன்னுரை ஒரு காலத்தில் பௌத்தமதம் தமிழ் நாட்டில் சிறப்புற்றிருந்தது. ஏறக்குறைய கி. மு. இரண்டாம் நூற்றாண்டு முதல் கி. பி. பத்தாம் நூற்றாண்டு வரையில் இந்த மதம் தமிழ் நாட்டில் உயர் நிலை பெற்றிருந்தது. பிற்காலத்தில், பதின்மூன்றாம் நூற்றாண்டுக்குப் பின்னர், இந்த மதம் மறையத் தொடங்கி, இப்போது முழுவதும் தமிழ் நாட்டில் மறைந்துவிட்டது. இப்போதைய தமிழர், ஒரு காலத்தில் பௌத்த மதம் தமிழகத்தில் செல்வாக்குப் பெற்றிருந்ததென்பதை முற்றும் மறந்துவிட்டனர்; அது இவர்களுக்குப் பழங்கதையாய், கனவாய் மறைந்துவிட்டது. எழுநூறு ஆண்டுகளுக்கு முன்னர், பல நூற்றாண்டாகத் தமிழகத்தில் பரவியிருந்த பௌத்த மதம், தமிழ் மொழியிலும் தன் செல்வாக்கைச் செலுத்தியிருக்க வேண்டுமன்றோ? பௌத்தர் தமிழ் …
-
- 7 replies
- 5.8k views
-
-
மையிலை சீனி வெங்கட சாமி எழுதி , சைவ சித்தாந்தக் கழகத்தால் வெளியிடப்பட்ட சமணமும் தமிழும் என்னும் நூலில் இருந்தே கழுவேற்றமும் சமணமும் என்னும் தலைப்பில் இடப்பட்ட வரலாற்று ஆதரங்கள் படி எடுத்துப் போடப்படுள்ளன. அந்தத் தலைப்பில் இதை இணைக்க முடியாது இருப்பதனால் இங்கே பதிப்புரை முன்னுரை என்பவற்றையும் அந்தத் தலைப்பில் இணைக்காத பகுதிகளையும் இடுகிறேன். பதிப்புரை நம் தமிழகத்தில் பண்டைக்காலமுதல் இக்காலம்வரை பல்வகைச் சமயங்கள் பல்கி வளர்ந்துள்ளன. அப்பழங்காலச் சமயங்களுள், சமணமும் ஒன்றாகும். சமயக் கணக்கர்கள், தத்தங் கொள்கைகளாகிய சமயத்தைப் பரப்புதற்கு மொழியைக் கருவியாகக் கொண்டு, மொழிக் கண் சமய நுணுக்கங்களைக் காதைகள் வாயிலாகவும், எடுத்துக் காட்…
-
- 0 replies
- 1.4k views
-
-
களத்தில் தற்போது சமயம் சம்ம்பந்தமாக பெரியா கருத்து பரிமாற்றம் நடக்கிறது, அங்கே கருத்தாடு பெரியவர்களே, அறிஞோர்களே உங்களால் இறைவன் இருக்கார் என்று ஆதாரத்துடன் நிரூபிக்க முடியுமா...........? முடிந்தால் நிரூபியூங்கள், நிரூபித்து விட்டு உங்கள் கருத்து மோதலை தொடருங்கள்
-
-
- 46 replies
- 8.3k views
- 1 follower
-
-
உ திருச்சிற்றம்பலம் ஸ்ரீ மெய்கண்ட தேசிகன் திருவடி வாழ்க சுயமரியாதையியக்கச் சூறாவளி ஒரு சிவசேவகன் சித்தாந்த பண்டித பூஷணம் ஆ.ஈசுரமூர்த்திப் பிள்ளை திருநெல்வேலி பேட்டை சுயமரியாதையியக்க குழாத்தினர்காள்! 'சுயமரியதை யியக்கச் சூறாவளி' யென்னும் இந்நூலில் உம் இயக்கக் கொள்கைகள் சிலவற்றை யாம் வரிசையாக அநுவதித்துக் கொண்டு அவற்றுள் ஒவ்வொன்றையும் பலவாறு ஆசங்கித்துள்ளேம். நீவிர் அவ்வாசங்கைகளை முறையே அநுவதித்துக் கொண்டு ஒவ்வொன்றற்குஞ் சமாதானங் கூறுவீராக. அறிவுடை யுலகிற்கு அவ்வியக்கம் இயையுமாறு அச்சமாதானங்கள் அறிவும் முரணாமையும் அளவி வெளிப்படுக. சமாதானங்கள் தோன்றாதொழியினும், அறியாமை, அழுக்காறு, வெகுளி, நிந்தை, பராம…
-
- 14 replies
- 2.6k views
-
-
கடவுள் வாழ்த்துகொன்றை வேந்தன் செல்வன் அடியினைஎன்றும் ஏத்தித் தொழுவோம் யாமேஉயிர் வருக்கம் 1. அன்னையும் பிதாவும் முன்னறி தெய்வம் 2. ஆலயம் தொழுவது சாலவும் நன்று 3. இல்லறம் அல்லது நல்லறம் அன்று 4. ஈயார் தேட்டை தீயார் கொள்வர் 5. உண்டி சுருங்குதல் பெண்டிர்க்கு அழகு 6. ஊருடன் பகைக்கின் வேருடன் கெடும் 7. எண்ணும் எழுத்தும் கண் எனத் தரும் 8. ஏவா மக்கள் மூவா மருந்து 9. ஐயம் புகினும் செய்வன செய் 10. ஒருவனைப் பற்றி ஓரகத்திரு 11. ஓதலின் நன்றே வேதியர்க்கு ஒழுக்கம் 12. ஒளவியம் பேசுதல் ஆக்கத்திற்கு அழகு 13. ஃகமும் காசும் சிக்கெனத் தேடு
-
- 1 reply
- 1.9k views
-
-
நீதி மொழிகள் --------------- (சமய ஞானம்) கல்வி நல்லவர்களுக்குக் கல்வி மெய்யறிவை உண்டாக்கும்: தீயவர்களுக்கோ அக்கல்வி, செருக்கு வீண் வியவகார புத்தி ஆடம்பரம் முதலிய தீமைகளைத் தருவதாகும். சூரியன் இருளை நீக்கி ஆயிரங் கிரணங்களோடு ஜாஜ்வல்யமாய் வெளிவரினும், மயில் கிளி பூவை முதலிய பறவைகளே மகிழ்ச்சியடையும்: கூகையோ கண் குருடாகத் தானே இருக்கும். சுகதுக்கங்கள். பித்தம் மேலிட்ட காலத்தில் தலையிலே கிறுகிறுப்பு உண்டாகும்: அ·து உள்ளவர்களுக்கு மலை மரம் முதலிய நிலைப்பொருள்களெல்லாம் சுற்றுவனபோலத் தோன்றும். அதுபோலச் சாதாரண ஜனங்கள் சுகம் அனுபவிக்கும்பொழுது தம்முடைய சாமர்த்தியத்தை மிகப் புகழ்ந்தும். துக்கம் அனுபவிக்கும்பொழுது பிறர் தமக்குச் செய்த தீங்கினை ந…
-
- 0 replies
- 1.7k views
-
-
பண்டிதர் வீ. பரந்தாமன் ( முன்னாள் ஹாட்லிக் கல்லூரித் தமிழாசிரியர்) அவர்களால் எழுதப்பட்ட நூலில் இருந்து சில பகுதிகள்.. முழுவதையும் படிக்க.. http://www.noolaham.net/library/books/02/155/155.htm
-
- 4 replies
- 1.9k views
-
-
உ சிவமயம் திருச்சிற்றம்பலம் ஸ்ரீலஸ்ரீ யாழ்ப்பாணத்து நல்லூர் ஆறுமுக நாவலரின் சைவ வினா விடை முதல் புத்தகம் 1. கடவுள் இயல் 1. உலகத்துக்குக் கருத்தா யாவர்? சிவபெருமான். 2. சிவபெருமான் எப்படிப்பட்டவர்? என்றும் உள்ளவர்; எங்கும் நிறைந்தவர்; எல்லாம் அறிபவர்; எல்லாம் வல்லவர். 3. சிவபெருமான் ஆன்மாக்களுக்காகச் செய்யுந் தொழில்கள் யாவை? படைத்தல், காத்தல், அழித்தல் என்னும் மூன்றுமாம். 4. சிவபெருமான் இந்த மூன்று தொழில்களையும் எதைக் கொண்டு செய்வார்? தமது சத்தியைக் கொண்டு செய்வார். 5. சத்தி என்னுஞ் சொல்லுக்குப் பொருள் யாது? வல்லமை. 6. சிவபெருமானுக்குச் சத்தி யாவர்? உமா…
-
- 479 replies
- 68.9k views
-
-
மஹாபாரதம் அரசாளும் குடும்பத்திற்குள் நடந்த ஒரு சண்டை. அரசாளுபவர்கள் சண்டையிட்டால் மாளுவது சாதாரண மக்கள். போர் யாருக்கும் நல்லது அல்ல. முடிந்தால் போரை தவிர்ப்பது தான் வீரம். வாய்மையே வெல்லும். வாய்மையை வெல்ல வைக்க சில பொய்கள் அவசியமாகிறது. ஆனால் அப்படி சொல்லப்படாத பொய்களினால் வாய்மையே தோற்கவேண்டி நிலை வந்தால் அது ஆபத்து. பாண்டவர்கள் தாய் சொல்லை தட்டாதவர்கள் சகோதரத்துவத்திற்கு மதிப்பு கொடுத்தவர்கள் சூதாட்டம் எனும் தவறு செய்ததால் நாட்டை இழந்தவர்கள். அதனால் பல கஷ்டமும் பட்டவர்கள். கௌரவர்கள் சொன்ன வார்த்தையை காப்பாற்றாதவர்கள். தந்தை சொல்லையும் தாய் சொல்லையும் மீறியவர்கள் சூழ்ச்சியினால் நேர்மையை வெல்ல நினைத்தவர்கள். …
-
- 20 replies
- 26.5k views
-
-
ராமன் தந்தை சொல் தட்டாதவன். சித்தியையும் தாயாக மதித்து நடப்பவன். ஒரு மனைவி சட்ட-திட்டங்கள் இல்லாத காலத்திலும் ஒரு பெண்ணுடன் வாழ விழைந்தவன். படகோட்டியான குகனை மார்போடு அணைத்து இன்றோடு ஐயவரானோம் என்று சொல்லி ஏற்ற தாழ்வு மனிதருள் இல்லை என்று காட்டியவன். மக்கள் சந்தேகம் கொண்டு தன் மனைவியை தவறாக பேசிவிடுவார்களோ என்று அவளை தீக்குளிக்க சொன்னவன். தன் மனைவி தவறு இழைக்காதவள் அதனால் அதிலிருந்து மீண்டு வருவாள் என்று நம்பிக்கை கொண்டவன். சீதை வசதியாக வாழ்ந்திருந்தாலும் கணவன் இருக்கும் இடம் சொர்க்கமாக நினைத்து காட்டுக்கு பின் தொடர்ந்தவள். தசரதன் பல மனைவிகள் கொண்டவன். கதை எழுதப்பட்ட காலத்தை கொண்டு பார்த்தால் ஒரு மனைவி சட்டம் இல்லாதிருந்திருக்கும். ஒரு மனைவி ச…
-
- 3 replies
- 1.6k views
-
-
அடக்குதலால் ஆத்திரத்தை இல்லாமல் செய்துவிட முடியாது. அப்ப ஆத்திரம் வரும் போது என்ன செய்ய வேண்டும்? (***)
-
- 4 replies
- 2k views
-
-
படத்தில் இருப்பவர் கோபிநாதன். மறைந்த ஜனாதிபதி கே.ஆர். நாராயணனின் பள்ளித் தோழர். இந்தியாவில் 37வது தலைமை நீதிபதி கே.ஜி.பாலகிருஷ்ணனின் தந்தை என்ற பெருமைக்குரியவர். கே.ஆர்.நாராயணனை போல் உழைத்து தன் மகன்கள் வாழ்க்கையில் உயர வேண்டும் என்று அறிவுரை கூறி வந்தார். கேரளாவில், "புலயன்' என்ற பின்தங்கிய ஜாதி, பிற்காலத்தில், "சேரமர்' என்று அரசாங்கத்தால் மாற்றப்பட்டது. பொதுச் சாலைகளில் இவர்களால் நடமாட முடியாத நிலைமை இருந்தது. இந்த இனத்தில் பிறந்தவர் தான் கே.ஜி.பாலகிருஷ்ணன். இதை எதிர்த்து போராடினார் திருவனந்தபுரம் வெங்ஙானூரைச் சேர்ந்த அய்யங்காளி என்ற இளைஞர். படிப்பு அறிவே இல்லாத இவர், உயர் ஜாதியினரை எதிர்த்து, சினிமா பாணியில் அடிதடியில் இறங்கினார். "அய்யங்காளியின்…
-
- 0 replies
- 952 views
-
-
நான் போடும் வேஷங்கள் நாடகத்தில் ஒருவர் நடிக்கும் போது தான் வேறு, தான் ஏற்றிருக்கும் பாத்திரம் வேறு என்பதை நன்றாகவே அறிந்திருக்கிறார். அதனால்தான் பிச்சைக்காரர் வேடம் ஏற்று மேடையில் அழுது புரண்டாலும் ரசிகர்களின் கைதட்டல்களைக் கேட்டுத் தன்னையே உள்ளூரப் பாராட்டிக் கொள்ள அவரால் முடிகிறது. நடிகன் இல்லாமல் வேடம் இல்லை. ஆனால், வேடம் இல்லாமல் நடிகன் இருக்கிறான். நடிகன் எந்த வேடம் ஏற்றாலும் அவை எல்லாம் நடிகனைச் சார்ந்து தான் இருக்கின்றன. ஆனால், எல்லா வேடங்களில் இருந்தும் நடிகன் விலகி நின்று சுதந்திரமாகவே இருக்கிறான். அதேபோல், சிந்திப்பவன், படிப்பவன், துக்கப்படுபவன், சந்தோஷப்படுபவன் என்று ஒருபக்கம் பல்வேறு வேடங்களில் `நான்' இருந்தாலும் இன்னொரு பக்கம் இந்த வேடங்களிலிர…
-
- 1 reply
- 1.3k views
-