Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

மெய்யெனப் படுவது

மெய்யியல் | நற்சிந்தனைகள் | ஆன்மீகம் | இசங்கள் | பகுத்தறிவு

பதிவாளர் கவனத்திற்கு!

மெய்யெனப் படுவது பகுதியில்  மெய்யியல், நற்சிந்தனைகள், ஆன்மீகம், இசங்கள், பகுத்தறிவு பற்றிய தரமான சிந்தனையைத் தூண்டும் தகவல்கள் இணைக்கப்படலாம்.

எனினும் மதப் பிரச்சாரம், திருவிழாக்கள் போன்ற பதிவுகள் தவிர்க்கப்படவேண்டும்.

  1. சாது ஒருவர் மாலைநேரம் நகரத்தை நோக்கி காட்டுவழியாக குதிரையில் போனார். வழியில் ஒருவன் மயங்கி விழுந்து கிடந்தான்! அவனை தூக்கி தன் குதிரைமீது ஏத்தினார். உடனே அவன் கடிவாளத்தை உலுக்கி குதிரையோடு பறந்தோடி மறைந்தான். அப்போதுதான் அவன் திருடன் என்பதை சாது உணர்ந்தார். மெல்ல நடந்து மறுநாள்காலை நகரசந்தைக்கு போனார். அங்கே குதிரை விற்கும் இடத்தில் அந்த திருடனை கண்டார்! அவன் சாதுவை கண்டதும் பயத்தில் மிரண்டான்! சாது மெல்ல சிரித்து அவன் அருகே சென்று, "குதிரையை நீயே வைத்துக்கொள். ஆனால் அதை அடைந்த விதத்தை யாரிடமும் சொல்லாதே. ஏன் என்றால் சாலையில் யாராவது உண்மையில் மயங்கி விழுந்தாலும் எவரும் உதவமுன் வரமாட்டார்கள். புரிந்ததா..?" என்று சாது கூறிவிட்டு போக, திருடனின் கண்களில் கண்ணீர் துளிகள் …

  2. தமிழ்நாடு என்பது திராவிடநாடு என்றும், திராவிடநாடு என்பதானது இன்னது என்றும், வெகுகாலமாகவே அய்ரோப்பிய அறிஞர் முதல் பல உலக ஆராய்ச்சிக்காரர்களாலும், இந்திய சரித்திர ஆராய்ச்சியாளராலும் எல்லை காட்டி வகுக்கப்பட்டிருக்கிறது என்றும் நான் இது விஷயமாகப் பேசுகிற இடங்களில் எல்லாம் இதைப்பற்றி விளக்கிப் பேசியே வந்திருக்கிறேன். தமிழ், தெலுங்கு, கன்னடம், மலையாளம் முதலிய மொழிகளைத்தாய் மொழியாகப் பேசிவந்த மக்களையே மிகுதியாகக் கொண்ட நாடுகள் - இது திராவிடம் என்று சொல்லப்படுவது யாவரும் அறிந்ததேயாகும். அந்தத் திராவிடம் என்பது பெரிதும் சென்னை மாகாணமாகவே இருக்கிறதுடன் மற்றும் சிறிது சென்னை மாகாணத்தைத் தொட்ட சுற்றுப்புற நாடாகவும் இருக்கிறது. இந்த விஸ்தீரணத்திற்குட்பட்ட முஸ்லிம்களும், கி…

  3. இராமாயணத்தோடு தொடர்புடைய இடங்கள் பற்றிய புனைகதைகள் இளவேனில் இராமாயண நிகழ்ச்சிகள் நடந்த இடங்களாகப் பல இடங்கள் தமிழ் நாட்டில் குறிப்பிடப்படுகின்றன. அல்லது இராமயணக் கதை மாந்தர்களோடு தொடர்பு படுத்தப்படுகின்றன. பல நாட்டு இலக்கிய ஆய்வாளர்களும், அகழ்வாராய்ச்சி அறிஞர் களும் இராமாயணம் குறிப்பிடும் இடங்கள் அனைத் தும் மத்தியப் பிரதேசத்திற்கு வடக்கில்தான் உள்ளன என்று முடிவு கூறியிருக்கிறார்கள். இலங்கைதான் இராமாயணம் குறிப்பிடும் இடங்களில் தென்கோடியிலுள்ளதாகச் சொல்லப்படுவது என்பது அனைவரும் அறிந்ததே. அதுகூட மத்தியப் பிரதேசத்தில் ஓர் ஏரியின் நடுவில் இருந்த தாக எச்.டி.சங்காலியா முதலிய ஆய்வாளர்கள் சான்றுகளோடு முடிவு கட்டியுள்ளார்கள். ஆனால், தமிழ்நாட்டில் பல தீர்த்தங…

  4. இஸ்லாம் மார்க்கத்துக்கும் இந்து மதத்திற்கும் உள்ள ஒற்றுமை அற்ற தன்மை-பெரியார் இஸ்லாம் மத ஒழுக்கம் 1. மதுபானம் கூடாது. 2. சூதாடுதல் கூடாது. 3. விபசாரம் கூடாது. 4. வட்டி வாங்குதல் கூடாது. 5. போர் செய்தல் கூடாது. இந்து மத ஒழுக்கம் 1. கடவுள்களுக்கு மது படைக்கவேண்டும். (ராமாயணம்) 2. அரசர்க்கு சூது உரியது. (பாரதம்) 3. கடவுள்களே விபசாரம் செய்திருக்கின்றன. (கிருஷ்ணன், முருகன்) விபசாரிகளை அனுமதிக்கின்றன. (தேவதாசிகள் முறை) 4. வட்டி வாங்குவது வருணாச்சிரம முறை. (வைசிய தர்மம்) 5. கடவுள்கள் யுத்தம் செய்திருக்கின்றன. யுத்தம் அரச நீதி, அரச தர்மம். (கந்தப்புராணம், பாரதம், ராமாயணம்) மதக்கொள்கைகள், திட்டங்கள் ஆகியவைகளில் இந்து மதம், இ…

  5. மருதனார்மடம் சுந்தர ஆஞ்சநேயர் ஆலய இரதோற்சவம் யாழ்ப்பாணம் – மருதனார்மடம் அருள்வளர் ஸ்ரீ சுந்தர ஆஞ்சநேயர் ஆலய இரதோற்சவப் பெருவிழா இன்று 17.12.2017 காலை வெகு விமரிசையாக இடம்பெற்றது. படங்கள் – ஐ.சிவசாந்தன் http://globaltamilnews.net/2017/55735/

  6. இந்தியாவில் உள்ள கிராமங்களில் மூடநம்பிக்கைகள் மற்றும் கட்டுக்கதைகளை உடைப்பதில் சுயாஷ் தனது நேரத்தை செலவிடுகிறார். அவர் அந்தஷ்ரத்தா நிர்மூலன் சமிதி (ANIS) என்ற அமைப்பின் ஒரு பகுதியாக உள்ளார், இது சாமியார்களையும் அவர்கள் செய்வதாகக் கூறும் அற்புதங்களையும் அம்பலப்படுத்துகிறது.

  7. கடவுளை நம்ப முட்டாளே போதும் என்னைப்பற்றிச் சொல்ல வேண்டுமானால் கடவுள் என்று ஒருவர் இருக்கிறார் என்றோ, இல்லையென்றோ சொல்ல முன் வரவில்லை. அதுபோலவே நீங்கள் அனைவரும் என் பேச்சைக் கேட்டுத்தான் ஆக வேண்டுமென்று கூறவில்லை. இன்னொன்றும் சொல்கிறேன், கடவுள் இருக்கிறார் என்று சொல்லிக் கொள்ள அறிவாளி தேவையில்லை. சாதாரணமாக ஒரு முட்டாள்கூட சொல்லிவிடலாம். ஆனால், கடவுள் இல்லையென்று மறுத்துக்கூற ஒரு அறிவாளியால்தான் முடியும். மறுப்பதற்கான பல ஆதாரங்களைச் சொல்ல வேண்டும்; சிந்தித்து அதற்கான காரணங்களைக் கூற வேண்டும். உலகில் இன்று கடவுள் நம்பிக்கை இல்லாதவர்கள் சுமார் 100 கோடி மக்கள் இருப்பார்கள். கடவுள் நம்பிக்கை இருப்பவர்கள் சற்றுக் கூடுதலாக இருப்பார்கள். நாம் எல்லோரும் கடவுள் நம்பிக்க…

    • 177 replies
    • 24.3k views
  8. மகிஷாசுரனின் அராஜகம் முடிவுக்கு வரும் காலம் நெருங்கியது. எல்லாவற்றினுள்ளும் நிறைந்த சக்தி ஒன்றாகத் திரண்டது. பார்வதி, லட்சுமி, சரஸ்வதி மூவருக்குள் பொலிந்திருக்கும் அளப்பரிய ஆற்றல் பின்னிப் பிணைந்தது. சட்டென்று பிரபஞ்சத்தையே மறைத்து நிற்கும் பேரொளி உதயமாயிற்று. அது மங்களமான பெண் உருவில் திகழ்ந்தது. அரக்கர்கள் அதிர்ந்தனர். தேவர்கள் சந்தோஷத்துடன் ‘துர்க்கா... துர்க்கா...’ என்று தலைமீது கரம் கூப்பித் தொழுதனர். ‘து’ எனும் எழுத்திலுள்ள ‘த்,’ சத்ரு நாசத்தையும், ‘உ,’ கர்மவினை அழிவையும், ‘ர்,’ நோயை விரட்டுவதையும், ‘க,’ பாவங்கள் பொசுங்குவதையும், ‘ஆ’ பயத்தை வெற்றிகொள்வதையும் குறிக்கின்றன. மகிஷனை அறைந்து தனது சூலத்தை பாய்ச்சி, தலையை வெட்டி அதன்மீதேறி நின்றாள் தேவி. அவளே மகிஷாசுரமர…

  9. கொழும்பு - 13, ஜிந்துபிட்டி வீதியில் உள்ள குன்றின் மீது அமைதியாக, ஆர்ப்பாட்டமின்றி புனிதர் தோமாவின் திருப்பெயரில் அர்ப்பணிக்கப்பட்ட ஆலயம் அமைந்துள்ளது. இலங்கை திருச்சபைக்கு (அங்கிளிக்கன்) இவ்வாலயத்தின் கட்டிடம் உரியதாக 1815 ஆம் ஆண்டு நிர்மாணிக்கப்பட்ட போதிலும் இரண்டாயிரம் ஆண்டுகால நீண்ட வரலாற்றை கொண்ட தலமாக காணப்படுகின்றது. இரண்டாயிரம் ஆண்டுகளுக்கு முன்னர் இலங்கைக்கு வந்த புனிதர் தோமா, இக்குன்றின் மீது அமர்ந்து மீனவர்களுக்கு பிரசங்கித்ததாகவும் கிறிஸ்தவ வரலாறு கூறுகிறது. இயேசு கிறிஸ்துவின் சீடர்களில் ஒருவரான தோமா இயேசுவோடு அவரது திருப்பணியில் அவரது சீடராக பங்கேற்றாலும் இயேசுவின் மரணத்தின் பின்பான உயிர்தெழுதலை நம்பாத ஒருவராகவே இருந்தார். உயிர்த்தெழுந்த கிறிஸ்து சீடர்களை…

    • 10 replies
    • 1.4k views
  10. நண்பர் பழனியப்பன்.. ஒரு பெரிய நிறுவனத்தில் கம்பனி செகரட்டரி மற்றும் சீனியர் மேனேஜர் பைனான்ஸ் ஆக பணியாற்றுகிறார். அண்மையில் விபாசனா என்கிற 10 நாள் தியான வகுப்பில் கலந்து கொண்டார். இத்தியானம் குறித்து அவர் நம்மிடம் பகிர்ந்தது இதோ.. 10 நாள் பயிற்சி முடிந்து வீடுதிரும்பும் பழனியப்பன் 10 நாளில் கடைபிடிக்க வேண்டிய விதி முறைகள்.. இது 10 நாள் முழு நேரம் கலந்து கொள்ளும் பயிற்சி.. 10 நாள் அலுவகத்திற்கு மட்டுமல்ல, வீட்டிற்கும் விடுப்பு எடுத்து விட்டு தான் செல்லவேண்டும். இந்த 10 நாளும் யாரிடமும் பேசக்கூடாது. தியானம் குறித்த சந்தேகம் என்றால் மட்டுமே பயிற்சி தருபவரிடம் கேட்க அனுமதி. மொபைல் அவர்கள் உள்ளே அனுமதிப்பதே இல்லை. அவச…

  11. இந்து மதத்திற்கு கடவுள் உண்டா? ``இந்து மதம் என்பது வேத மதமேயாகும்'' என்கிறார் சங்கராச்சாரியார். வேதத்தில் கடவுள் இல்லை என்கிறார் சங்கராச்சாரியார். நான் சொல்கிறேன், தமிழனுக்கு (திராவிடனுக்கு) கடவுள் இல்லை, இல்லவே இல்லை. எப்படி என்றால் நமக்கு தமிழ்ப் பெயர் கொண்ட கடவுள் ஒன்றுகூட கிடையாது. இருப்பவை எல்லாம் வடமொழியில் உள்ள கடவுள் பெயர்களை தமிழில் மொழி பெயர்த்துக் கொண்டிருக்கலாம் என்றாலும் அப்படிப்பட்ட பெயர்களை பார்ப்பனர் ஏற்றுக் கொள்வதில்லை. உதாரணம், கந்தனுக்கு முருகன் என்றும், ஆறுமுகன் என்றும் தமிழ்ப் பெயர்கள் உண்டு. இந்தத் தமிழ்ப் பெயர்களை எந்த பார்ப்பனரும் தங்களுக்குப் பெயர்களாக வைத்துக் கொள்ளுவதில்லை; வடநாட்டான்களும் வைத்துக் கொள்ளுவதில்லை. ஆகவே, தமிழர்கள…

  12. வெட்டுவான் கோயில் இது ஒரே கல்லில் செதுக்கப்பட்ட கலைநயம் மிக்க கோயில். பாண்டிய மன்னர்களால் 8ஆம் நூற்றாண்டில் இது கட்டபட்டது. அழகிய சிற்பங்களை கொண்ட இக்கோயில் முழுவதுமாக முடிக்கப்படவில்லை. பிற்காலதில் விநாயகர் இக்கோயிலில் பிரதிஷ்டை செய்து வணங்கபடுகிறார். அரைமலை என்னும் பழம் பெயரைக்கொண்ட கழுகுமலையின் கிழக்கு பக்கம் வெட்டுவான் கோயிலும் அதன் அருகில் தென்புற மலையில் சமணதீர்த்தங்கரர் உருவங்களும் உள்ளன. வெட்டுவான் கோயில் எல்லோராவிலுள்ள கைலாசநாதர் கோயிலைப்போன்றது. இது ஒரே கல்லில் செதுக்கப்பட்டுள்ளது. பெரிய மலைப்பாறையில் ஏறக்குறைய 7.5 மீட்டர் ஆழத்திற்கு சதுரமாக வெட்டிஎடுத்து அதன் நடுப்புறத்தை கோயிலாக செதுக்கியுள்ளனர். இது பாண்டிய மன்னனால் தோற்றுவிக்கபட்ட ஒற்றை கோயிலாகும். கோயிற்ப…

  13. இளைஞர்களுக்குள் மறைந்திருந்த ஆற்றல்களை விழித்தெழச் செய்தவர் சுவாமி விவேகானந்தர் http://www.thinakaran.lk/sites/default/files/styles/node-detail/public/news/2022/01/11/05_2.JPG?itok=3byZQ6m4 159 ஆவது ஜனன தினம் இன்று சுவாமி விவேகானந்தர் 1863 ஜனவரி 12ஆம் திகதி கல்கத்தாவில் விசுவநாத் தத்தாவுக்கும் புவனேஸ்வரிதேவிக்கும் மகனாகப் பிறந்தார். தாய்மொழி வங்காளம். சிறு வயதிலேயே மிகுந்த நினைவாற்றல் கொண்டவராகவும், சிறந்த விளையாட்டு வீரராகவும் திகழ்ந்தார். இசையும் இசை வாத்தியங்களும் பயின்றார். இளவயது முதலே தியானம் பழகினார். பகுத்தறிவாளராகவும் திகழ்ந்தார். பாடசாலைப் படிப்பு முடிந்தவுடன் 1879 ஆம் ஆண்டு கல்கத்தாவில் உள்ள ம…

    • 0 replies
    • 391 views
  14. இவர்தான் பெரியார் வெற்றி பெற்று விட்டேன் தூத்துக்குடியில் சுமார் 20, 30 சுவர்களில் இராமசாமிக் கழுதைக்குச் செருப்படி என்று எழுதியிருந்தது. ஆனால் இதுவரை அடி விழவில்லை. இங்கும் இராமசாமிக் கழுதை செத்துப் போய்விட்டது என்றும், இராமசாமியின் மனைவி நாகம்மாள் அவிசாரி என்றும் எழுதி இருந்தது. இராமசாமிப் பெரியார் சிரஞ்சீவியாய் இருக்க வேண்டும் என்று எழுதியிருந்ததைப் பார்த்து சந்தோஷப் பட்டிருந்தேனேயானால், இராமசாமிக் கழுதை செத்துப் போய்விட்டது என்பதற்கு நான் வருத்தப்பட வேண்டும். அது போலவே, இராமசாமி மனைவி கற்புக்கரசி என்று எழுதி இருந்ததைப் பார்த்து மகிழ்ச்சி அடைந்து, மாதம் மும்மாரி மழைவரச் செய்து பயன் பெற்று இருந்தால், இராமசாமி மனைவி நாகம்மாள் அவிசாரி என்பதற்கு நான் விசனப்…

  15. இது காட்டுமிராண்டிகளின் கடவுள்கள் இராஜாஜியும், சங்கராச்சாரியாரும் மக்களிடையே பக்திப் பிரச்சாரம் செய்து வருகிறார்கள். எப்போதையும்விட இப்போது அதிகமாகச் செய்து வருகிறார்கள். பேச்சு பேசும்போதும் ``மக்களுக்கு இப்போது வரவர கடவுள் பக்தி குறைந்து வருகிறது'' என்று பேசி வருகிறார்கள். அதன் கருத்து என்ன என்று சிந்திப்போமானால், மக்களிடம் வரவர காலப் போக்கில் மூட நம்பிக்கைகள் குறைந்து விலகி வருகிறது என்பதுதான் பொருளாகும். ஏன் என்றால் அந்தச் சொல்லை உண்டாக்கினவர்களே மக்களிடம் ஒரு முட்டாள்தனமான நம்பிக்கை ஏற்படவேண்டும் என்கின்ற கருத்தில்தான் உண்டாக்கினார்கள் என்று சொல்ல வேண்டும். ஏன் இப்படிச் சொல்லுகிறேன் என்றால் அந்தச் சொல், அதாவது பக்தி என்கிற சொல் ஓர் அர்த்தமற்ற பொருளற்ற சொல்லேயாக…

  16. ச.சச்சிதானந்தம் “உலகமும் உயிரினமும் மனிதனும் கடவுளின் படைப்பு” என்பது கடவுள் கோட்பாட்டு மதங்கள் எல்லாவற்றினதும் கருத்து. ஆனால் பலகோடி ஆண்டுகள் பரிணாம வளர்ச்சி பெற்று உயிரினங்கள் தோன்றின என்பது அறிவியல் முடிவு. “ ஏன்” என்ற கேள்விக்கு சிந்தனை பகுத்தறிவு, ஆராய்ச்சி போன்ற வழிகள் மூலம் பெற்ற விடை அறிவியல் முடிவுக்கும், “ அப்படித்தான்” என்று அறியாமையின் விளைவான நம்பிக்கையில் உண்டான மதக் கருத்துக்கும் அடிப்படைகள் ஆகின்றன. மனிதக் குரங்கிலிருந்து வந்த காட்டு மனிதன் வேட்டையாடுவதும், உணவைத் தேடுவதுமாக வாழ்ந்து கொண்டிருந்தான். திறமையும், திட்டமிடுதலும் வேட்டையாடுவதற்கு வேண்டுவனவாக இருந்தன. அவன் தனது அனுபவத்தில் பெற்ற அறிவினால் ஆயுதங்களையும், சிறு கருவிகளையும் கண்டறிந்தான…

    • 40 replies
    • 8.3k views
  17. உண்மையை உணர்வதற்கு மனமற்ற பரிசுத்த நிலை கோரப்படுகிறது. மனத்தின் செயல்பாடுகள் எவ்வகையில் இருந்தாலும் உண்மையை உணர்வது இயலாது என்பது நம் ஞானச் சான்றோர்களின் கூற்றாகும். நடைப் பயிற்சியைப் போல யோகச் செயல்முறைகளும் உடம்பை ஓம்புவதற்கே. ஆனால் உண்மையை உணர்வதற்கு ‘மனமிறத்தல்’ அவசியமாகிறது. “சிந்தை இறப்போ நின்தியானம்” என்பார் தாயுமானவர். “திரையற்ற நீர்போல சிந்தை தெளிவார்க்குப் புரையற்றிருப்பான் எங்கள் புரிசடையோனே” என்பார் திருமூலர். “மனமும் பதைப்பறல் வேண்டுமென்றால் இராப்பகல் அற்ற இடத்தே இருக்கை எளிதல்லவே” என்பார் அருணகிரியார். இவ்வாறு இவர்கள் கூறுவதற்குக் காரணம் மனமானது நினைவுகள், அனுபவம், அறிவு இவற்றின் மொத்த உருவான நான், எனது என்னும் செருக்குகளுக்கு இடமாக இருப்பதே. மனம் ஆடி ஓய்…

  18. இந்து மதமும் பெண்களும் (பாகம் 1) இங்கே மந்திரங்களின் மூலம் செய்யப்படுகின்ற மோசடிகள் பற்றிய தகவலை இணைத்த போது வசம்பு ஒரு கேள்வியை என்னிடம் எழுப்பியிருந்தார். இந்த மந்திரங்கள் இவ்வளவு மோசமானவை என்றால், இவைகளை பார்ப்பனர்கள் தங்கள் வீட்டு நிகழ்வுகளில் சொல்ல மாட்டார்களா? அப்படிச் சொன்னால் அவர்களும் கேவலப்படுகிறார்கள் அல்லவா? இந்த அர்த்தத்தில் அவருடைய கேள்வி அமைந்திருந்தது. இது நல்ல ஒரு கேள்வி. இதற்கான பதிலை சற்று நீளமாகவும் ஆழமாகவும் பார்க்க வேண்டும். ஒரேயடியாக நீளமாக எழுத மாட்டேன். தொடராக எழுதி இணைக்கிறேன். மற்றவர்களின் கருத்துக்களையும் உள் வாங்கியபடி எழுதுவதற்கு அது ஏதுவாக இருக்கும். இங்கே நான் இரண்டு விதமான மந்திரங்களை இணைத்திருத்தேன். 1.…

    • 18 replies
    • 12.1k views
  19. உளறல் மேல் உளறல்கள் மதமும் கடவுளும் மனிதனை முட்டாளாக்கும் கருவிகள். மனிதனுக்குள் கடவுளைப் புகுத்துவது மனிதனை முட்டாளாக்கும் டானிக் (வைட்டமின் சத்து) ஆகும். இதை இன்று பார்ப்பனர்கள், சங்கராச்சாரிகள் கடவுள் பிரசாரம் செய்வதில் எடுத்துக்கொள்ளும் முயற்சியில் இருந்தே தெரிந்து கொள்ளலாம். கடவுள் மனித நலத்துக்காகக் கண்டுபிடித்த சாதனம் அல்ல. மனிதனை முட்டாளாக்குவதற்குப் பயன்படுத்தும் சாதனமேயாகும். சூரியனை, சந்திரனை, நெருப்பை, நீரை, காற்றை, கல்லை, மண்ணை எந்த மனிதனும் கண்டுபிடிக்கவில்லை. அவற்றின் பெயர்களைத்தான் மனிதன் தெரிந்துகொண்டான். இவற்றிற்கு விளக்கம் தேவை இல்லை. காரண காரியங்கள் தேவையில்லை. மனிதன் என்றால் இவைகளை அறிந்தே ஆகவேண்டும்; இவற்றின் பலனை அனுபவித்தே ஆகவேண்டும். …

  20. இலங்கை உபன்யாசம் அய்ரோப்பா, ஆப்பிரிக்கா, ரஷ்யா முதலிய நாடுகளில் சுற்றுப்பயணம் செய்துவிட்டு, இலங்கை வழியாக இந்தியாவுக்குத் திரும்புகையில், 1932ஆம் வருடம் அக்டோபர் 17ஆம் தேதி கொழும்பு வந்திறங்கிய தந்தை பெரியார் அவர்களுக்கு இலங்கையில் கொழும்பு, கண்டி, நாவல்பட்டி, ஹட்டன், யாழ்ப்பாணம், பருத்தித் துறை முதலிய இடங்களிலும், இந்தியாவில் தூத்துக்குடி, மதுரை முதலாகிய இடங்களிலும் பல நிறுவனங்களின் பேரால் அளித்த பல வரவேற்பு நிகழ்ச்சிகளிலும், பொதுக் கூட்டங்களிலும் தந்தை பெரியார் அவர்கள் ஆற்றிய உரைகளிலிருந்து கடவுள் பற்றி திரட்டியது, (குடிஅரசு, 20.11.1932). தோழர்களே! கடவுள், மதம், ஜாதியம், தேசியம், தேசாபிமானம் என்பவை எல்லாம் மக்களுக்கு இயற்கையாக தானாகவே ஏற்பட்ட உணர்ச்சிகள் அல்…

  21. உலகம் முழுவதும் உள்ள கிறிஸ்தவர்கள் ‘சாம்பல் புதன்’ தினத்தை அனுசரிக்கிறார்கள். இந்த நாளில் அனைத்து கிறிஸ்தவ ஆலயங்களிலும் சிறப்பு ஆராதனை நாளை (புதன்கிழமை) காலை நடைபெறும். சென்ற ஆண்டு குருத்தோலை ஞாயிறு அன்று பயன்படுத்திய குருத்தோலைகளை எரித்து சாம்பலாக்கி நெற்றியில் பூசுவதை சாம்பல் புதன் என்று அழைக்கப்படுகிறது. இந்த ஆராதனையில் குருத்தோலை சாம்பலை புனிதப்படுத்தி அனைத்து மக்களின் நெற்றியிலும் குருக்கள் பூசுவார். இதையடுத்து வருகின்ற 40 நாட்களும் தவக்காலமாக அனுசரிக்கிறார்கள். இந்த காலங்களில் கிறிஸ்தவர்கள் காலையில் சாப்பிடாமல் நோன்பு இருப்பது வழக்கம். பொதுவாக மாமிச உணவுகளை சாப்பிடமாட்டார்கள். பாதிரியார் அருளப்பன் இது குறித்து கூறியதாவது:– கிறிஸ்தவர்களின் தவக்காலம் சாம்பல் புதன்…

  22. கடவுளும் - மின்சாரமும் : கடவுளையும் மனிதன்தான் கண்டுபிடித்தான். மின்சாரமும் மனிதனால்தான் கண்டுபிடிக்கப்பட்டது. இருந்தும் கடவுளை விட மின்சாரம் சக்திவாயந்தது. நம்பாதர்வர்கள் கடவுள் சிலையை ஒரு கையாலும் மின்சாரத்தை இன்னொரு கையாலும் தொட்டுப் பார்த்து உணர்ந்து கொள்ளவும். சக்தியை விடுங்கள், பயன்பாடு என்று பார்த்தால் கடவுள், அதை வைத்து பிழைப்பு நடத்துபவர்களுக்கு மட்டுமே பயன்படுகிறது. ஆனால் மின்சாரமோ சாதி, மத, இன, ஏழை பணக்காரன் என்ற வேறுபாடு இல்லாமல் அனைவருக்கும் பயன்படுகிறது. ஏதோ ஒன்றை வணங்கவேண்டும் என்கிற நிலை வந்தால், நான் மின்சாரத்தை வணங்குவதையே அறிவுடமை என்பேன்.

  23. [size=3]தியானத்தின் பொழுது நாம் முதலில் பார்க்க வேண்டியது நம் உடலைக் கட்டூப்படுத்தி ஒரே இடத்தில் அமரச் செய்வது.[/size] [size=3]எந்த முறையிலும் அமர்ந்து கொள்ளலாம்.[/size] [size=3] நமக்கு சௌகரியமான முறையில். அதே சமயத்தில் அசைவின்றி, ஒரே இடத்தில் அமர்ண்து கொள்வது முக்கியம். தரையில் அமர்ந்து கொண்டோ அல்லது நாற்காலியில் அமர்ந்து கொண்டோ தியானம் மேற்கோள்ளலாம். நமக்கு எந்த இடத்தில் அமர்ந்து கொண்டு தியானம் செய்ய வசதியா உளள்தோ அந்த இடத்தில் அமர்ந்து கொண்டு தியானம் செய்யலாம். வசதியாக உட்கார்ந்து கொள்ளுங்கள். கால்களை சம்மண மிட்டுக்கோள்ளுங்கள். இரண்டு கைகளின் விரல்களைச் சேர்த்துக்கோள்ளுங்கள். கண்களை மேதுவாக மூடுங்கள். அமைதியாக சகஜ நிலைக்கு வா…

  24. 150 வது நிலவரம்.. யாழில் இனத்துவம், தேசியம்.. தொடர்பாக விதண்டாவாதம் செய்பவர்கள் குறிப்பாக.. மதமற்ற இனத்துவம் .. தேசியம் என்ற நிலைப்பாட்டோடு இருப்பவர்கள்.. கேட்பது சிறப்பானது. குறிப்பாக யாழ் கள நிர்வாகத்தில் உள்ளவர்கள் இதன் ஆழத்தன்மையை விளங்கிக் கொள்ள வேண்டியதும் அவசியம்..! தமிழர்களின் இனத்துவம் தனி மத நிலையில் இருந்து.. கூட்டு மத நிலைக்கு வந்திருப்பதை (மத விரிவாக்கள் உலகில் ஏற்பட்ட பின்) ஏற்றுக் கொண்டு.. மதங்களையும் இனத்துவ அடையாலத்திலிருந்து விலக்காமல் இருப்பதை ஏற்றுக்கொள்கின்றனர். பிரதிவாதங்களின் நிலையை சொல்லி சிறப்பாக இதை எமது கவிஞர் புதுவை அவர்கள் விளக்கியுள்ளார்...! பல மதங்கள் உள்ள ஒரு இனத்துவத்தில் மதங்களைக் கையாள்வதில் உள்ள சிக்கல் தன்மை கருதி அவர்கள் சில எச்ச…

    • 11 replies
    • 4.7k views
  25. புதுடில்லி: பர்கா அணிவது குறித்து எழுத்தாளர் தஸ்லிமா நஷ்ரீன் மற்றும் இசையமைப்பாளர் ஏ.ஆர்.ரஹ்மான் மகள் கதிஜா ஆகியோர் சமூக வலைதளங்களில் ஒருவருக்கொருவர் கருத்து மோதலில் ஈடுபட்டனர். ஏ.ஆர்.ரஹ்மானின் மகளான கதிஜா, கருப்பு பர்கா அணிந்திருக்குகும் புகைப்படத்தை சமூக வலைதளமான இன்ஸ்டாகிராமில் பதிவேற்றம் செய்திருந்தார். இந்த புகைப்படத்தை பிரபல பெண் எழுத்தாளர் தஸ்லிமா நஷ்ரீன், நான் ரஹ்மானின் இசையை விரும்புகிறேன். ஆனால் அவரது மகளை பார்க்கையில் மூச்சுத்திணறல் ஏற்படுகிறது. ஒரு கலாச்சார குடும்பத்தில் இருக்கும் படித்த பெண்களைக் கூட மிக எளிதாக மூளைச்சலவை செய்ய முடிகிறது என்பதை பார்க்கையில் வருத்தமளிக்கிறது, என பதிவிட்டார். இந்த பதிவு, இதுவரை 1800 முறை ரீ-டுவிட்களும், 6 ஆயிரம் லைக்குகளும் …

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.