Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

சமூகச் சாளரம்

சமூகம் | பண்பாடு | குடும்பம் | வாழ்வியல் | சீர்திருத்தங்கள் | பெண்ணியம்

பதிவாளர் கவனத்திற்கு!

சமூகச் சாளரம் பகுதியில் சமூகம், பண்பாடு, குடும்பம், வாழ்வியல், சீர்திருத்தங்கள், பெண்ணியம் பற்றிய தரமான சிந்தனையைத் தூண்டும் தகவல்கள் இணைக்கப்படலாம்.

எனினும் அளவுக்கதிகமாக  பதிவுகள் இணைப்பதையும், பல தலைப்புக்கள் திறப்பதையும் தவிர்க்கவேண்டும்.

  1. கலியாணம் முடிஞ்சி 11ஆம் நாள் எய்ட்ஸ்! ஜெரா படம் | நேர்க்காணல் கண்டவர் அதைப் பெருந்தேடல் என்றுதான் சொல்லவேண்டும். ஒரு விழிப்புணர்வுக்காக, எச்.ஐ.வி. தொற்றுக்குள்ளான ஒருவரின் கதையை வெளியிடுவது என்று நீண்டகாலமாகவே திட்டமிட்டு, குறித்த நோயாளர்களைத் தேடிவந்தோம். இரண்டாயிரத்துக்கும் மேற்பட்ட எச்.ஐ.வி. நோயாளர்கள் யாழ்ப்பாணத்திலிருந்தும் நேரடியாகவோ, மறைமுகமாகவோ ஊடகங்களில் பேச மறுக்கின்றனர். அவர்கள் மத்தியிலிருந்து, “நாங்கள் ஊடகங்களில் பேசுகின்றோம்” என்று முன்வந்தது ஒரு குடும்பம். “எங்கள பாக்க வருத்தம் வந்தாக்கள் மாதிரி தெரியேல்லயோ?” அவர்களை நாங்கள் கண்டதும் கேட்ட முதல் கேள்வியில் நிலைகுலைந்துதான் போனோம்! 30 வயதுக்குட்பட்ட இளந் தம்பதியினர் அவர்கள். உடல்சோர்வோ, மனச் சோர்வோ…

  2. அலுவலகத்தில் ஒரு மேனேஜர் இருக்கிறார். வடக்கத்திக்காரர். தமிழ் தெரியும். திருச்சியில் கல்லூரிப்படிப்பை படித்த எஃபெக்ட். கல்லூரியில் படிப்பை முடித்துவிட்டு வேறொரு நிறுவனத்தில் ஒன்றரை வருடங்கள் பணியாற்றியிருக்கிறார். பிறகு நிறுவனம் மாறியவர் படபடவென மேலேறி இப்பொழுது முதுநிலை மேலாளர் ஆகிவிட்டார். சொம்படித்து ஆனார், பின்வாசல் வழியாக வந்தார் என்றெல்லாம் சிறுமைப்படுத்தி விட முடியாது. சின்சியர் சிந்தாமணி. பொழுது விடிந்ததும் அலுவலகம் வந்தார் என்றால் எல்லோரையும் வீட்டுக்கு அனுப்பிவிட்டுத்தான் மூட்டையைக் கட்டுவார். இடையில் ஃபேஸ்புக், ட்விட்டர் மட்டுமில்லை வேறு எந்த இணையத்தளத்தையும் திறந்து வைத்துக் கூட பார்த்ததில்லை. அவர் என்ன வேலை செய்கிறார் என்பதை மோப்பம் பிடிக்கவே அடிக்கடி அருகில்…

  3. "இது தாண்டா லவ்!" சக்கர நாற்காலியில் மனைவியை இருத்தி கடற்கரையோரம் உலாவச் சென்ற அந்தத் தாத்தாவைப் பார்த்து நண்பன் சொன்னான் - சில வருடங்களுக்குமுன். 'இவர்கள் காதல் திருமணம் செய்திருப்பார்களா?' 'உண்மையான காதலன் இப்படித்தான் இருப்பான்' தொடர்ந்து பேசிக் கொண்டிருந்தான். எனக்குக் கண்ணாடித் தாத்தாவின் ஞாபகம் வந்தது. ‘எனக்கும் கூட ஒரு உண்மையான காதலைத் தெரியும்' என்றேன். கண்ணாடித்தாத்தா நல்லதோர் கதைசொல்லி. கதை கேட்பது எப்போதும் எங்களுக்குப் பிடித்தமான விசயமாகவே இருக்கிறது. நமது குழந்தைப் பருவத்தில் நம் முதற்செயல் கவனித்தலும், கதை கேட்பதுமாகவே ஆரம்பிக்கிறது. அதுவே முதல் தேடல். அப்போது தொற்றிக் கொண்ட ஆர்வம் இறுதிவரை குறைவதில்லை. கதை சொல்லுதல் என…

  4. சமூக வலைத்தளங்களின் வளர்ச்சி ஊகத்திற்கு அப்பால் உள்ளது. ஃபேஸ்புக், டுவிட்டர், கூகுள் ப்ளஸ் போன்ற பல சமூக வலைத்தளங்கள் தொடர்ந்து ஏறுமுகத்தில் உள்ளன. அலுவலகங்களில் பெரும் பிரச்சினையாக விவாதிக்கப்பட்டும் விஷயங்களில் ஒன்று வேலை நேரத்தில் ஊழியர்கள் தனிப் பட்ட விஷயங்களுக்காக இத்தகைய வலைத்தளங்களை மேய்ந்துகொண்டிருப்பதுதான். பெரும்பாலான நிறுவனங்கள் தங்களது ஊழியர்களின் வேலை நேரத்தைச் சமூக வலைத்தளங்கள் அபகரித்துக் கொள்வதாக நினைக்கின்றன. எனவே அலுவலகத்தில் சமூக வலைத்தளங்களை முடக்கிவைத்துள்ளன. இது பெரும்பாலும் கீழ்நிலையில் உள்ள ஊழியர்களுக்குத்தான். ஏனெனில் உயர் மட்டத்தில் உள்ளவர்கள் பொறுப்பு மிக்கவர்களாகவே எப்போதும் கருதப்படுகிறார்கள். எனவே அவர்களுக்கு இப்படித் தடையேதும் விதிக்கப்படுவ…

  5. சமூக இணையத்தளமான பேஸ்புக்கை உபயோகிப்பவர்களில் 32 சதவீதத்தினர் தமது வாழ்க்கை துணையை விட்டு விலகுவது தொடர்பில் சிந்திப்பதாக புதிய ஆய்வு ஒன்று கூறுகின்றது. அமெரிக்க போஸ்டன் நகரைச் சேர்ந்த பேராசிரியர் ஜேம்ஸ் ஈ காட்ஸ் தலைமையிலான ஆய்வாளர்களால் இந்த ஆய்வு மேற்கொள்ளப்பட்டது. இரு ஆண்டுகளுக்கு இடைப்பட்ட காலப்பகுதியில் பேஸ்புக்குகளை உபயோகிக்கும் 43 நாடுகளைச் சேர்ந்த விவாகரத்து பெற்ற, திருமணம் செய்து கொண்ட18 வயதுக்கும் 39 வயதுக்குமிடைப்பட்ட வயதுடைய 1160 தனி நபர்களிடம் இந்த ஆய்வு மேற்கொள்ளப்பட்டது. பேஸ்புக்கை அதிகளவில் உபயோகிப்பவர்கள் விவாகரத்து தொடர்பில் 2.18 சதவீத வளர்ச்சிக்கு பங்களிப்புச் செய்துள்ளதாக இந்த ஆய்வு கூறுகிறது. http://www.virakesari.lk/articles/2014/07/03…

  6. ஆண்-பெண் நட்பு: காமம் மற்றும் சமஅந்தஸ்து வெறும் தோழியான ஒரு girl friend ஐ எப்படி அழைக்க? நான் பங்கேற்ற ஆண்-பெண் சமநிலை பற்றின ஒரு நீயாநானா விவாத படப்பிடிப்பின் போது இந்த சிக்கலை பல பங்கேற்பாளர்கள் ஏதோ புதுசு என்பது போல் திடுக்கிட்டவாறு எதிர்கொண்டனர். கோபிநாத் தொடர்ந்து ஒவ்வொரு முறையும் “அந்த கெர்ல் பிரண்ட் இல்லீங்க” என்று சொல்ல நேர்ந்தது. Female friend என்ற சொல் ஏதோ மிக்ஸி கிரைண்டர் போன்ற இரைச்சலை கொண்டுள்ளது. சிநேகிதி, தோழி ஆகிய பதங்களை வானம்பாடிகளில் இருந்து இடதுசாரிகள், பெண் பத்திரிகைகள் வரை அர்த்தம் திரித்து விட்டனர். ஆண்நண்பர்களும் இருக்கும்பட்சத்தில் ஒரு பெண்ணின் தோழி கெர்ல் பிரண்டா வெறும் பிரண்டா? ஆனால் இது ஒரு சொல்லாக்கம் பற்றின பிரச்சனை அல்லவே! ஆண்-பெண் …

  7. http://youtu.be/hdWi9B3OyFA நாளுக்கு நாள் புலம்பெயர் நாடுகளில் வாழும் தமிழர்கள் தங்கள் மகள்களின் பூப்படைதல் நிகழ்வை நாகரீகத்தின் உச்சமாக நடாத்திக் கொண்டிருக்கும் கொண்டாட்டங்களை தினமும் அறிகிறோம். இந்த வீடியோ இணைப்பில் இன்னொரு புதுவகை விழா. ஒருகாலம் தேசத்தின் பாடல்களை பாடிய பாடகர் சாந்தன், பிறின்சி ரஞ்சித்குமார் போன்றோர் பாடலைப்பாட புதுவை அன்பன் பாடலொன்றை சடங்கிற்கு உரிய சிறுமிக்காக பாடியுள்ளார்கள். மிகவும் வருத்தம் தருகிறது இந்நிகழ்வு. பெண் பிள்ளைகள் துணிச்சலோடு சாதனைகள் படைக்கும் திறமையாளர்களாக வளர்ந்து வர வேண்டிய வளர்க்கப்பட வேண்டிய இக்காலத்தில் போகப்பொருளாகவே பெண்பிள்ளைகளை அவர்களது எண்ணங்களை சிதைக்கும் நிகழ்வாகவே இன்றைய கால சாமத்தியச் சடங்குகள் நடாத்தப்படுகிறது.…

  8. அம்மா அப்பா. ஜேர்மனிய தமிழ் கலப்புத்திருமண விவரணப்பட முன்னோட்டம். http://www.kino-zeit.de/filme/amma-appa# http://www.kino-zeit.de/filme/trailer/amma-appa http://www.ammaandappa.com/#!homeeng/c14zq

    • 3 replies
    • 1.1k views
  9. ஆண்களின் உலகம் அண்மை காலமாக ஆண்களின் உலகம் மீதான அன்பும், மதிப்பும் கூடிக்கொண்டே இருக்கிறது. 30 வயதில் ஒரு தியாகியைப் போல குடும்பப் பொறுப்புகள் சுமந்து திரிபவர்களின் முகங்களும், தன்னிடம் இருக்கும் கடைசி சில்லறைக் காசு வரை உடனிருக்கும் நண்பர்களுக்காய் செலவிடும் மனங்களும், ஜவ்வாது மலையின் பழங்குடி சிறுமி படிக்கவியலாமல் போனதற்காய் தி.நகர் பேருந்து நிலையத்தில் நள்ளிரவில் கண்ணீர் விட்ட தோழனுமாய்… அன்பு நிறைந்த ஆண்கள் நிறையப்பேரை சமீபமாய் காண்கிறேன்! எழுத்தில், திரையில், பொதுவில்… ஆண்கள் என்றால் பொறுப்பற்ற பொறுக்கிகள் என்ற சித்திரம் பின்னப்பட்டிருக்கிறது. இது முழு பொய் இல்லை, முழு உண்மையும் இல்லை. முப்பதைக் கடந்த வயதில்… தங்கையின் திருமணம், அக்காவின் பேறுகாலம் என நில்ல…

  10. வணக்கம் உறவுகளே என்னை அறிய என்னை புடம்போட அதை எதிர் கொள்ள என்றுமே பின்னிற்பதில்லை.. அந்தவகையில் எனது சில எழுத்துக்கள் அல்லது கலந்துரையாடல்கள் என்னைப்பற்றியோ அல்லது எனது வயது சார்ந்தோ வெளியில் விமர்சிக்கப்படுவதாக அறிந்தேன்.... என்றுமே பின் முதுகில் குத்துபவர்கள் பற்றி நான் கவலைப்பட்டதில்லை அத்துடன் அது தெரியவரும் போது அதற்காக நேரடி விவாதங்களை எதிர்கொள்ள தயங்குவதில்லை............ இங்கு திறக்கப்படும் அனைத்து திரிகளிலும் அனைத்து கருத்தாளர்களுடனும் விவாதிப்பவன் அல்லது கலந்து கொள்பவன் யான். நான் ஒரு எழுத்தாளனோ அல்லது படைப்பாளியோ அல்ல ஆனால் படைப்புக்கள் கருத்துக்கள் மற்றும் தாயகம் சார்ந்து விவாதிக்க என்னால் முடியும். அநேகமாக சீரியசான வ…

    • 42 replies
    • 3k views
  11. இந்தியா முழுவதும் கடந்த இரண்டு நாட்களாக, சமூக வலைதளமான ட்விட்டரில் #TheMistakeGirlsMake என்ற ஹஷ்டேக் பிரபலமடைந்து இருந்தது. இந்த ஹஷ்டேக்கை வைத்து ஆண்களும் பெண்களும் பல ட்வீட்களைத் தட்டினர். சிலர் நகைச்சுவையாகவும், எவரையும் புண்படுத்தாத வகையிலும் ட்வீட் செய்ய, பெரும்பாலானவர்கள் பெண் மோகம் கொண்ட வாசகங்களையும், பெண்களை வெறுக்கும் வாசகங்களையும், அவர்களை மிக மோசமாக இழிவுபடுத்தும் வகையிலும் ட்வீட் செய்தனர். "பெண்ணாக பிறப்பதே தவறு", "அவர்கள் எதையாவது சரியாக செய்வதுண்டா?", "நம்பத் தகுந்த ஒருவரை சோதிப்பதாக நினைத்துக்கொண்டு தன் சிறிய ஐ.க்யூ. மூலம் ஏமாற்றுவது" போன்ற ட்வீட்களைத் பதிவு செய்தனர். மேலும் சிலர், இங்கு வெளியிட முடியாத அளவிற்கு மிக மோசமான ட்வீட்களையும் பதிவு செய்தன…

    • 5 replies
    • 1.1k views
  12. எவன் போட்டுக் கொடுத்தான்? வா மணிகண்டன் சில விஷயங்களைக் காதிலேயே போட்டுக் கொள்ளக் கூடாது. யாராவது நம்மிடம் வந்து ‘அவன் அப்படியாமே இவள் இப்படியாமே’ என்றாலும் சரி. ‘அவர் உங்களைப் பத்தி அப்படி சொன்னார்’ என்றாலும் சரி- காதை மூடிக் கொள்ள வேண்டும். சிலர் ஒரு படி மேலே போய் ‘அந்த ஆளைப் பத்தி என்ன நினைக்கறீங்க?’ என்பார்கள். போட்டு வாங்குகிறார்களாம். எதையாவது சொல்லி வாயை மூடியிருக்க மாட்டோம் ஆனால் சம்பந்தப்பட்டவருக்கு தகவல் சென்று சேர்ந்திருக்கும். திரும்பிய பக்கமெல்லாம் இப்படிப்பட்ட மனிதர்களைச் சந்திக்க வேண்டியிருக்கிறது. தன்னை நல்லவனாகக் காட்டிக் கொள்வதற்காக அடுத்தவர்களை கெட்டவர்களாக மாற்றிவிட தயங்காத உலகம் இது. எங்கள் லே-அவுட்டில் குடியிருக்கும் நண்பர் பன்னாட்டு …

    • 1 reply
    • 1.1k views
  13. எஸ் வி வேணுகோபாலன் மொகலம்மா என்ற பெண்மணியைப் பற்றிய ஆங்கிலக் கட்டுரை ஒன்றை வாசிக்க நேர்ந்தபோது கல்வியின் பெருமை குறித்த புதிய பரிமாணம் எனக்குக் கிடைத்தது. ஆந்திர பிரதேசத்தைச் சார்ந்த இந்தப் பெண், இங்கிலாந்து இளவரசர் சார்லஸ் இந்தியாவுக்கு வருகை தந்தபோது அவரால் சிறப்பிக்கப்பட்டார். ஹர்ஷ் மெந்தர் எழுதிய அந்தக் கட்டுரை, எந்த இடத்திலிருந்து அந்தப் பெண் இந்தப் பெருமைக்குரிய இடத்தை வந்தடைந்தார் என்பதை தி இந்து நாளிதழில் அருமையாகப் படம் பிடித்துக் காட்டி இருந்தது. பிறந்த முதலாம் ஆண்டிலேயே காய்ச்சல் ஏற்பட்டதை அடுத்து, மொகலம்மா நடக்க முடியாத குழந்தையாக வளர்ந்தார். பல குறைபாடுகளுடன் வாழ்ந்து கொண்டிருந்த அந்தக் குழந்தையின் தாய், மொகலம்மாவுக்கான எதிர்காலம் அவரது கல்வியில் இருக்கிறது …

  14. பாலியல் அத்து மீறல்கள் வா. மணிகண்டன் www.nisaptham.com மிகச் சமீபத்தில் இந்தியாவில் நிகழ்ந்த பெண்களுக்கு எதிரான கொடுமைகள் என்று பட்டியல் எடுத்தால் பயங்கரமாக இருக்கிறது. வன்புணர்ந்து பிறகு தலையில் அடித்துக் கொல்வது, அடையாளம் தெரியாதபடிக்கு பாதி உடலை எரித்துவிட்டு போவது, தூக்கில் தொங்கவிடுவது என்று ஒவ்வொன்றும் குரூரமாக இருக்கின்றன. இவற்றையெல்லாம் வெறும் செய்தியாகப் படித்தால் பெரிதாக பாதிப்பு தெரிவதில்லை. நம் உறவுப் பெண் யாரையாவது அந்த இடத்தில் ஒரு வினாடிக்கு பொருத்திப் பார்த்தால் நெஞ்சுக்குள் மிகப்பெரிய உருண்டை ஒன்று அடைத்துக் கொள்கிறது. இவையெல்லாம் உத்தரப்பிரதேசத்திலும் டெல்லியிலும்தான் நடக்கின்றன என்றில்லை. கொஞ்ச நாட்களுக்கு முன்பாக பெருந்துறையில் பெண் போ…

  15. Started by கிருபன்,

    ஆதங்கம் - உஷா கனகரட்ணம் 30 மே 2014 சின்ன விரல்களிடையே பென்சிலைப் பிடித்தபடி சின்னது ஏதோ எழுதிக் கொண்டிருக்கிறது. இடையிடையே எழுதுவதை நிறுத்திவிட்டு பென்சிலை மோவாயில் தேய்த்தபடி தீவிரமாக யோசிக்கிறது. பார்த்துக் கொண்டிருந்த கயலுக்கு சிரிப்பாக வந்தது. அதன் பிஞ்சுக் கால்களையும் கைகளையும் கம்பளிக்குள் புதைத்து, பிடரியில் கை வைத்து சுகத்தை விட அதிகமான பயத்துடன் அவளைத் தூக்கிச் சென்ற காலங்கள் நினைவில் வந்தது. நான்கு வருடங்கள் எப்படிப் பறந்தன என்று புரியவில்லை. இங்கு வந்திருக்கும் சில நாட்களாகத் தான் இப்படி நிதானமாக உட்கார்ந்து குழந்தையை ரசிக்க முடிகிறது. இத்தனை வருடங்களை வீணாக நம்மைப் பற்றிய கவலையில் ஏக்கத்திலேயே கழித்து விட்டோமோ... உனக்கு ஒரு நல்ல தாயாக இருந்தேனா…

  16. பணி இடத்தில் - சபல புத்தி உடைய ஆண்களை சமாளிப்பது எப்படி? [Thursday, 2014-05-22 18:30:36] பணி இடத்தில் அனைவரும் பெண்களிடம் கண்ணியமாக நடந்து கொள்வார்கள் என்று எதிர்பார்க்க முடியாது. சில சபலபுத்தி கொண்டவர்களும் இருக்கத்தான் செய்வார்கள். அவர்களிடம் இருந்து தப்பிக்கும் கலையை பெண்கள் தெரிந்து கொள்ள வேண்டும். சக ஆண் ஊழியர்கள் தொடக்கத்தில் நல்ல மாதிரி பட்டால் கூட அளவுக்கு அதிகமாக அவர்களிடம் பேச வேண்டாம். யாரைப் பற்றியுமே சரியான முடிவுக்கு வர சிறிது காலம் தேவை. அதுவரை பொறுத்திருந்து, பிறகு நட்பு பாராட்டுவது நல்லது. உங்களுக்கு உங்கள் வேலை மிகவும் தேவையானதாக இருக்கலாம். அந்த வருமானத்தை நம்பித்தான் உங்கள் குடும்பமும், வருங்காலமும் இருக்கிறது என்கிற நிலைகூட இருக்கலாம். ஆனால் இதையெல…

    • 25 replies
    • 4.2k views
  17. நான் சில காலங்களுக்கு முன்னர் தமிழ் திருமணங்களில் புலம் பெயெர் நாடுகளில் மணமகள் மணமகனின் காலில் வீழ்ந்து வணங்கும் வழக்கம் பற்றி குறிப்பிட்டு இருந்தேன். ஆனால் தாயகத்தில் அங்கே புலம்பெயர் நாடுகளை விட ஒரு படி மேல் அல்லவா செய்கிறார்கள். நான் இணைத்துள்ள காணஒளியில் 5.50 தொடக்கம் 6.00 நிமிடம் வரையிலான பகுதியை கவனிக்கவும், அதை பர்ர்த்து போடு கள உறுப்பினர்கள் தாம் திரும்பவும் திருமணம் செய்ய போகிறோம் என அடம் பிடிக்கக் கூடாது

    • 12 replies
    • 2.3k views
  18. சமூக வலைத்தளமான ஃபேஸ்புக்கில் தங்களது சொந்த விஷயங்களை அதிகமாக பகிர்ந்துகொள்பவர்கள் பெரும்பாலும் தனிமையில் வாடுபவர்களே என்று ஓர் ஆய்வு தெரிவிக்கின்றது. ஆஸ்திரேலியாவின் சார்ல்ஸ் ஸ்ருட் பல்கலைக்கழகத்தின் ஆய்வாளர்கள், சமூக வலைத்தளங்களில் தங்களைப் பற்றின விஷயங்களைப் அதிகமாக பகிர்ந்துகொள்வதற்கும், தனிமையில் வாடுவதற்கும் ஏதாவது தொடர்புள்ளதா என்பது கண்டறிய வேண்டும் என்று முற்பட்டனர். இந்த ஆய்விற்காக, ஃபேஸ்புக்கின் பகிரங்கமாக தங்களது அக்கவுண்ட்டைப் பயன்படுத்தும் 600 பெண் பயனீட்டாளர்களின் பற்றிய விவரங்களை சேகரித்தார் அப்பல்கலைக்கழகத்தின் இணை பேராசிரியர் ஏஸ்லாம் அல்-சக்கஃப். இதே நிலை, ஆண்களுக்கும் பொருந்தும் என்று தெரிய வந்துள்ளது. “நாங்கள் 308 பயனீட்டாளர்களைப் …

  19. அனுபவம் தரும் துணிச்சல்: போனவாரம் லோங்வீக்கென்ட் எனது அக்காவின் மகள் போன்பண்ணி எங்கேயாவது லாங்ட்ரிப் போவோமா என்று கேட்டார், அதற்கு நான் எங்கே போகலாம் என்றதற்கு அவர் Illinois, Indiana. Kentucky என்று சில பெயர்களை சொன்னார் அதில் எனக்கு இந்தியானா என்ற பெயர் பிடித்திருந்தது. காரணம் இந்தியா என்ற பெயர் மேலும் Indiana Jones பெயரில் வந்த படங்கள் பார்த்த பாதிப்பு. ஒருவழியாக கடைசி rental கார் கிடைத்துவிட்டது, பின் ஹோட்டல் booking, அது இன்டியானாவில் மாத்திரம் கிடைத்தது. பென்சில்வேனியா சென்று அங்கு Grovecity இல் ஷாப்பிங் செய்துவிட்டு அங்கிருந்து இந்தியானா செல்வோம் என்று அக்காவின் மகள் விரும்பினார். நான், அக்கா, அக்காமகள், அண்ணன் மகள், நான்கு பேரும் சனி இரவு 8.30pm புறப்படோம். போகும்…

    • 25 replies
    • 5.1k views
  20. பேஸ்புக்கை விட்டு ஏன் விலக நினைக்கிறோம்? ஆர்.அபிலாஷ் ஒரு குடும்பச் சண்டை எப்படி இரண்டு நாட்களில் சமூக வலைத்தளம் மூலம் வெடித்துக் கட்டுப்பாட்டை கடந்து வளர்ந்து சுனந்தா புஷ்கரைத் தற்கொலைக்கு தூண்டியது என்பதை சமீபத்தில் பார்த்தோம். சமூக வலைத்தளங்கள் நம்மைத் தேவைக்கு அதிகமாக உணர்ச்சிவசப்பட வைப்பதுடன், யாரையும் பழிவாங்கும் அபார அதிகாரமும் நமக்கு உள்ளதாக ஒரு போலி தன்னம்பிக்கையையும் கொடுக்கிறது. இது தன் கணவனின் காதலியாகத் தான் நம்பின பாகிஸ்தானியப் பத்திரிகையாளரைப் பழிக்கும்படி, ஒற்றர் என அவமானிக்கும்படி சுனந்தாவை வெறியேற்றுகிறது. பிறகு இந்தப் பிரச்சினை அவர் கைமீறிப் போகிறது. டிவிட்டரில் குற்றச்சாட்டை சுனந்தா எழுதவில்லை, யாரோ அதை ஹேக் செய்து விட்டார்கள் என சசி தரூர் கூ…

  21. பெண் குழந்தைகள் யாருடைய மடியிலும் அமரக்கூடாது என்று சொல்லிக் கொடுக்க வேண்டும். மாமா, சித்தப்பா, பெரியப்பா யாராக இருந்தாலும் சரி. 2 அல்லது 3 வயதுக்கு மேல் ஆன குழந்தைகள் முன்னிலையில் உடை மாற்றிக் கொள்ளுவதைத் தவிர்க்க வேண்டும். குழந்தைகளை யாரும் என்னுடைய கணவன் என்றோ, மனைவியென்றோ குறிப்பிடுவதோ, மனதில் பதிய வைப்பதோ தவறு. குழந்தை விளையாடப் போகும்போது உங்கள் பார்வை அவர்கள் மீது இருந்து கொண்டே இருக்கட்டும். மேலும் அவர்கள் என்ன விளையாடுகிறார்கள் என்பதையும் கவனித்துக் கொள்ளுங்கள். ஏனென்றால் குழந்தைகள் தங்களுக்குள்ளாகவே பாலியல் துன்புறுத்தல்களுக்கு உள்ளாக நேரிடும். உங்கள் குழந்தையால் சரியாக பொருந்தியிருக்க முடியாத நபரை ஒருபோதும் சந்திக்க அனுமதிக்காதீர்கள் அல்லது அவ…

    • 0 replies
    • 630 views
  22. பூ இருக்கிறது அதனுள் அபரிதமான சக்தியை கொண்ட தேன் இருக்கிறது அந்த தேனை எடுப்பதற்கு இரண்டு வழிமுறைகள் உண்டு ஒன்று அதனை கசக்கி பிழிந்து எடுப்பது ஒரு வழிமுறை அதே நேரம் பூவிற்கு வலிக்காமல் அதே நேரம் அதன் வளர்ச்சிக்கும் வழிவகுத்தபடி மென்மையாக அமர்ந்து தேனை எடுக்கும் வண்ணத்துபூச்சியின் முறை இரண்டாவது வழிமுறையாகும். இங்கே நான் பூ என்று சொல்வது உங்களது குழந்தைகளைத்தான் நமக்கு இறைவன் தந்த அதி அற்புதமான கொடையான குழந்தைகளை மதிப்பெண் பெறவைப்பது உள்ளீட்ட அவர்களின் பல்வேறு சக்தியினை வெளிக்கொண்டு வர நாம் கையாளும் முறை வண்ணத்து பூச்சியின் குணத்தை கொண்ட மென்னையான,அதே நேரம் உண்மையான , அன்பை ஆதாரமாகக்கொண்ட தோழமையுடன் கூடிய அணுகுமுறையே சிறந்ததாகும். அஸ்திவாரம் போட வேண்டிய தருணம்: அதற…

    • 0 replies
    • 1.6k views
  23. ‘ஓடி விளையாடு பாப்பா’ என்று சொன்ன பாரதியின் வரிகள், இன்றைக்கு ’வீடியோ கேமில் ஓட்டி விளையாடு பாப்பா’ என்று மாறிவிட்டது. கால் வலிக்கத் தெருக்களிலும், மைதானங்களிலும் விளையாடிய காலம் போய், காசு கொடுத்துக் கடைகளில் விளையாடும் நிலைக்கு வந்துவிட்டோம். கோடை விடுமுறை நேரம் இது. பள்ளி நாட்களில் வீட்டில் இருக்கும் சில மணி நேரத்திலேயே களேபரத்தை ஏற்படுத்தும் குழந்தைகளை, இந்த மாதம் எப்படித்தான் சமாளிக்கப் போகிறோமோ என்று பெற்றோர் புலம்புவது கேட்கத்தான் செய்கிறது. கற்றலும் குணநலமும் குழந்தைகளின் கற்றல் திறன் என்பது தாயின் வயிற்றிலிருந்து பிறந்த கணம் முதல் ஆரம்பிக்கிறது. தன்னுடைய ஒவ்வோர் அசைவிலும் பெற்றோர், சுற்றியுள்ளவர்களிடம் கற்றுக்கொண்டவற்றையே குழந்தை பிரதிபலிக்கிறது. எனவே மரபணுக்க…

    • 0 replies
    • 873 views
  24. எனது வாழ்க்கையில் நான் பல கஸ்டங்களை அனுபவித்திருக்கிறேன். இன்றும் கஸ்டத்தில்தான் உள்ளேன். நான் கொஞ்சம் சந்தோசமாக இருந்தாலும் விரைவில் கஸ்டத்திற்குள் தள்ளப்படுகிறேன். பணம்கூட எவ்வளவு சம்பாதித்தாலும் கையிருப்பில் இருப்பதில்லை. தொடர்ந்து ஏதாவதொரு பிரச்சனை வந்து கொண்டேயிருக்கிறது. நானும் தியானம் போன்றவற்றைக்கூட முயற்சி செய்துள்ளேன். இருந்தும் என்னால் எனது கஸ்டங்களிலிருந்து வெளிவர முடியவில்லை. சின்ன வயது எனில், அறியா வயது என விடலாம். புத்திசாலித்னமாக இருந்தாலும், என்னதான் திட்டமிட்டு வாழ முற்பட்டாலும் என்னால் முன்னேற முடியவில்லை. என்னைச் சுற்றியிருப்பவர்கள் (குடும்பத்தினர்) மிகவும் நன்றாகவே உள்ளார்கள். அவர்கள் எனக்கு உதவி செய்ய மறுக்கிறார்கள். இதனால் வேறு வழியின்றி …

    • 35 replies
    • 3.4k views

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Account

Navigation

Search

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.