சமூகச் சாளரம்
சமூகம் | பண்பாடு | குடும்பம் | வாழ்வியல் | சீர்திருத்தங்கள் | பெண்ணியம்
சமூகச் சாளரம் பகுதியில் சமூகம், பண்பாடு, குடும்பம், வாழ்வியல், சீர்திருத்தங்கள், பெண்ணியம் பற்றிய தரமான சிந்தனையைத் தூண்டும் தகவல்கள் இணைக்கப்படலாம்.
எனினும் அளவுக்கதிகமாக பதிவுகள் இணைப்பதையும், பல தலைப்புக்கள் திறப்பதையும் தவிர்க்கவேண்டும்.
2254 topics in this forum
-
International Nursing Week (May 9-15)உலக செவிலியர் நாள் (International Nurses Day) உலக நாடுகளனைத்திலும் மே 12 ஆம் நாளன்று கொண்டாடப்பட்டு வருகின்றது. செவிலியர்கள் (தாதிகள்) சமூகத்திற்கு ஆற்றும் பங்களிப்பை சிறப்பாக நினைவுகூர இந்நாள் தேர்ந்தெடுக்கப்பட்டது.உலக செவிலியர் அமைப்பு (International Council of Nurses) இந்நாளை 1965அம் ஆண்டிலிருந்து நினைவுகூருகிறது. 1953இல் ஐக்கிய அமெரிக்காவின் அரசு சுகாதாரத் திணைக்களத்தைச் சேர்ந்த அதிகாரியான டொரத்தி சதர்லாண்ட் (Dorothy Sutherland) என்பவர் இந்நாளை செவிலியர் நாளாக அறிவிக்க அன்றைய அதிபர் ஐசன்ஹோவருக்கு விடுத்த வேண்டுகோள் நிராகரிக்கப்பட்டது.] ஜனவரி 1974இல், நவீன தாதியியல் முறையை உருவாக்கிய இங்கிலாந்தைச் சேர்ந்த புளோரன்ஸ் நைட்டிங்க…
-
- 0 replies
- 1.5k views
-
-
ஐரோப்பியசெய்தியாளர் நவீன காலங்களில் எப்பொழுதும் நிலையாகக் காணப்டும் நேரம் இன்மையானது, தொடர்ச்சியான அழுத்தத்தை ஏற்படுத்தி எதிலும் அவசரத்தையும், முக்கியமான வற்றை மிக விரைவாகவும், திறமையாகவும் செய்து முடிக்கும் எண்ணத்தையும் தந்து விடும் நிலையில், குழந்தைகளின் அடிப்படைத் தேவைகள் முழுமையாகப் பராமரிக்கப்படாது போய்விடுவதாக ஆய்வொன்று தெளிவு படுத்த முயல்கிறது. அமைதியாகவும் மெதுவாகவும் செயற்ப்படுத்தப்டும் விடயங்களே, நிதானமாகவும், விரைவாகவும் தேவையானவற்றை சாதிக்க உதவும் தந்திரமாக உள்ளதென்பதனை மக்கள் அறிந்திருந்தும், அதனைப் பின்பற்றாதது மிகவும் துன்பகரம் ஆனதாகும். உணர்வையும், சக்தியையும் இணைத்து எதையும் கேட்டு அறிந்து கொள்ளக் குழந்தைகளுக்கு, அமைதியான சூழல் தேவைப்படுவதாகக் குழந்…
-
- 0 replies
- 544 views
-
-
என் வீட்டில் மூன்று நாட்களாக ஒரு பிரச்சனை. முந்த நாள் மதியம் தூங்கி எழுந்து படிகளில் இறங்கி வர மூக்கு வேறு மணத்தைக் கிரகிக்க ஆரம்பித்தது. என் வீட்டு வரவேற்பறையில் போய் நின்மதியாக இருக்க முடியவில்லை. ஒரே நாற்றம். என்ன இது யாராவது எதையாவது மிதித்துவிட்டார்களா என ஒவ்வொருவரின் காலணிகளையும் மணந்தும் பார்த்தாயிற்று. காலணிகள் சுத்தமாகவே இருந்தன. வீடு முழுவதையும் நன்றாக துடைத்தும் விட்டாயிற்று. வாசத்துக்கு எதையாவது கொழுத்துங்கோ என்று பிள்ளைகள் சொல்ல, ரோசாப்பூவின் மணத்தை வீடு முழுதும் பரப்பிவிட்டு அன்றைய பொழுது போய்விட்டது. மாலையில் ரோசாப்பூவின் மணம் அடங்க மீண்டும் நாற்றம் இருக்க விடாது துரத்தியது. என்ன செய்வது நாளை காலை எழுந்து பார்க்கலாம் என்று எண்ணி தூங்கச் சென்றுவிட்டோம். …
-
- 35 replies
- 3.3k views
-
-
இந்த ஆண்டு பள்ளிப் பருவம் முடியும் காலத்தில், விளையாட்டுப் போட்டிகளுக்குப் பெயர் கொடுக்கும் தருணத்தில் ஒன்றை மறந்துவிடாதீர்கள். இந்தப் போட்டிகளில் எந்தக் குழந்தைக்குப் பரிசு தருவீர்கள் என்று கேளுங்கள். போட்டியில் கலந்துகொள்ளும் எல்லாக் குழந்தைகளுக்குமே பரிசு உண்டு என்று சொன்னால் உங்கள் குழந்தையைப் போட்டியிலிருந்து விலக்கிக்கொள்ளுங்கள். ஒரு காலத்தில் பதக்கம், கேடயம், கோப்பை என்பவையெல்லாம் அரிதாக இருந்தன. மிகப் பெரிய உயர்நிலைப் பள்ளியாக இருந்தாலும் ஓரிருவருக்கு மட்டுமே அவை கிடைத்தன. அதனால், அந்தப் பரிசுகளுக்கே தனி மரியாதை இருந்தது. இப்போது போட்டியை நடத்துகிறவர்கள் வசூலிக்கும் பணத்தில் கால்வாசியைப் பரிசுகள் வாங்குவதில் செலவிடுகிறார்கள். 1960-களுக்குப் பிறகு, இந்தக் கோப்பைகள…
-
- 0 replies
- 945 views
-
-
"மே" தினம். தினமும்... 16, 18 மணித்தியாலம் என்று, முழுக்க கடுமையாக உழைக்கும், தொழிலாளர்களுக்காக.... போராடி.. எட்டு மணித்தியால வேலை செய்வதை உறுதிப்படுத்திய தினம் இது. இந்தப் போராட்டம்... ஒரு கம்யூனிச நாட்டில் நடந்திருந்தால், ஆச்சரியப் பட்டிருக்க மாட்டேன். இது, அமெரிக்காவில் நடந்தது. மருத்துவர், தாதியர்கள், தீயணைப்பு வீரர்கள், காவல் துறையினர் போன்றவர்களுக்கு லீவு இல்லை. சரித்திரத்தை கதைத்தால்.... உங்களுக்கு, பிடிக்காது என்று எனக்கு வடிவாய்த் தெரியும். ஆன படியால்... நிகழ்காலத்துக்கு வருவோம். நாளைக்கு யாருக்கு லீவு, யார் வேலைக்குப் போக வேணும்? என்ன காரணத்தால்... வேலைக்குப் போக வேண்டும், என்பதை.... கூறுங்களேன்.
-
- 9 replies
- 927 views
-
-
-
இந்துக்களுக்கு மஞ்சள் நிறம் புனிதமான நிறம் என்பதால் அந்தத் திருமணப் பரிசும் மஞ்சள் நிறத்தில் தரப்பட்டது என்று விளக்குகிறார்கள், தமிழர் திருமணங்களில் ஆரம்பத்தில் தாலி இருந்ததாக, இலக்கியங்களில் குறிப்பிடப்படவில்லை. சங்க காலத்தின்போது நடந்த திருமணங்களில் புதுமணல் பரப்பி, விளக்கு ஏற்றி, வயதில் மூத்தபெண்கள், மணப்பெண்ணை நீராட்டி வாழ்த்தி அவள் விரும்பியவனுடன் அவளை ஒப்படைத்தனர்.நாளடைவில் “”தாலம்” என்ற பெயர்தான் தாலியாகமாறியிருக்கிறது.பதினோராம்நூற்றாண்டில்தான் திருமணச் சின்னம்என்ற ரீதியில் தாலி என்ற பெயர் உபயோகப்படுத்தப் பட்டது என்கிறது உலகத் தமிழ் ஆராய்ச்சி நிறுவனம்வெளியிட்டிருக்கும் “”தமிழர் திருமணம்” என்கிற புத்தகம்.மாங்கல்யச் சரடானது ஒன்பது இழைகளைக் கொண்டது.ஒவ்வொரு இழைகளும…
-
- 6 replies
- 3.4k views
-
-
ஒரு மின்னல் தோன்றி மறைவது போலக் கோபம்... செல்லத்துக்கு! ஏன், எதற்கு என்று யோசிப்பதற்குள் மூக்கு சிவக்கும் கோபம் வெவ்வேறு வண்ணங்களுக்கு மாறி விடும். ‘ஸாரி’ சொல்லி, கட்டிப்பிடித்து, முத்தம் கொடுத்த நிமிடங்களுக்குப் பிறகுதான் அது ஆற்றுப்படும். குழந்தைகள் எதிர்கொள்ளும் மனம் சார்ந்த அழுத்தங்கள்தான் அவர்களின் கோபத்துக்கான முக்கியக் காரணம். ‘‘உணர்வுகளை வெளிப்படுத்துவது ஒரு கலை. குழந்தை பிறந்தது முதல் உணர்வுகளை வெளிப்படுத்தும் பழக்கத்தை இயல்பாகவே கொண்டிருக்கிறது. நம் வாழ்க்கை முறையிலோ உணர்வுகளை அடக்குவதற்கு மட்டுமே சொல்லித்தரப்படுகிறது. இந்தத் தவறான அணுகுமுறைதான் குழந்தைக்கு மன அழுத்தச் சூழலை உருவாக்குகிறது. உணர்வுகளைப் புரிந்துகொள்ள வாய்ப்பளிப்பதன் மூலம் இது போன்ற பிரச்னைக…
-
- 0 replies
- 1.1k views
-
-
சிறிது நாட்களாகவே என்னை மனச் சோர்வு ஆட்கொண்டுள்ளது. மிகவும் துடிதுடிப்பானவள் என்று பெயர் எடுத்த நான் இப்போதெல்லாம் சோர்ந்து போய் காணப்படுகிறேன். எந்த வேலை செய்தாலும் அடுத்த வேலை இருந்தால் முடிகிறது தூங்க மாட்டேன் முன்பு. இப்போதோ வீட்டில் எந்த வேலையும் செய்ய மனம் வருகுதே இல்லை. அதற்காக கடையில் வாங்கச் சாப்பிட்டுக் காலம் கழிக்கிறேன் என்று எண்ணிவிடவேண்டாம். அனால் எதோ சமைக்கிறேன். கணவருக்கும் பிள்ளைகளுக்கும் கொடுக்கிறேன். இரண்டு நண்பிகளுடன் தொலைபேசியில் அப்பப்ப அரட்டை அடிக்கிறேன். எனது தோட்டம் இம்முறையும் பூக்க ஆரம்பித்துவிட்டதுதான். ஆனாலும் முன்பு இருந்ததுபோல் அவற்றைக் கூடக் கவனிப்பதில்லை. ஆனாலும் அவை பூக்கத்தான் செய்கின்றன. மலையில் கட்டாயம் தூங்குவதும் பின்னர் இரவு …
-
- 9 replies
- 1.1k views
-
-
ஐ லவ் யூ ஐ லவ் யூ . இந்த ஆங்கில வாக்கியம் அறிமுகமான பின்புதான் 20-ம் நூற்றாண்டு தமிழர்கள் தங்கள் காதலை ‘வாயால்’ நேரிடையாக சொல்ல ஆரம்பித்திருப்பார்கள் என்றே தரவுகள் தெரிவிக்கின்றன. அதற்கு முன்னால் எல்லாம் ஜாடை மாடை , கண்களால் சிக்னல் கொடுப்பது என ஓட்டிக்கொண்டிருந்து, எப்போதேனும் மறைவிடத்தில் வாய்ப்பு கிடைத்தால் கட்டியணைத்து முத்தமிடுவது அல்லது மேட்டரையே முடித்து விடுவது என ஓடிக்கொண்டு இருந்தது. இதில் கவனிக்க வேண்டிய விஷயம் என்னவென்றால் மேட்டர் முடிவதற்கு முன் இருவரும் ஒரு வார்த்தை பேசியிருக்க மாட்டார்கள். ஐ லவ் யூ அறிமுகமானதும் உற்சாகமான நம் ஆட்கள், கொள்ளுத்தாத்தா எள்ளுத்தாத்தா முதற்கொண்டு தன் பரம்பரையில் எல்லோரும் சொல்ல முடியாமல் விட்ட காதலை எல்லாம் சேர்த்து வை…
-
- 10 replies
- 1.2k views
-
-
நான் கடவுள் இல்லை - நீதிபதி சந்துரு நான் கடவுள் இல்லை அப்புறம் எதற்கு மாலை போடுகிறீர்கள். எனக்கு குளிரவில்லை அப்புறம் எதற்கு சால்வை போற்றுகிறீர்கள். எனக்கு பசியில்லை அப்புறம் எதற்கு பழங்கள் கொண்டுவருகிறீர்கள். இப்படி இந்த நாட்டில் இன்றைய தினம் ஒருவரால் "தில்'லாக பேசமுடியும் என்றால் அது முன்னாள் ஐகோர்ட் நீதிபதி சந்துரு ஓருவரால்தான் முடியும். அவரை பேட்டிக்காக சந்திக்க சென்றபோது அசந்துவிட்டேன், காரணம் பலரது வீட்டிற்குள் நூலகம் இருக்கும், ஆனால் அவரது வீடே நூலகத்திற்குள்தான் இருந்தது, அந்த அளவிற்கு வீட்டில் திரும்பிய திசைகளில் எல்லாம் புத்தகங்கள், புத்தகங்கள், புத்தகங்கள்தான். அந்த புத்தகங்களில் பெரும்பாலானவை சட்டம் சம்பந்தபட்ட புத்தகங்களே. எத்தனையோ நீதிபதிகள் ஓய்வு பெறுக…
-
- 106 replies
- 37.6k views
-
-
-
- 5 replies
- 1.1k views
-
-
வா. மணிகண்டன் http://www.nisaptham.com/ ஒரு பெரிய யானை. அதுவும் கிழட்டு யானை. வெகு நாட்களாக உள்ளூர் மிருகக்காட்சி சாலையில் இருக்கிறது. அது ஒன்றும் வருமானம் கொழிக்கும் மி.க.சாலை இல்லை. பஞ்சப்பாட்டு பாடத் துவங்கி ‘இனி வேலைக்கு ஆகாது’ என்று முடிவு செய்துவிடுகிறார்கள். காட்சிசாலையில் இருந்த பிற விலங்குகளை எல்லாம் விற்றுவிடுகிறார்கள். இந்த யானை மட்டும் மிச்சம் ஆகிவிடுகிறது. வாங்குவதற்கு ஆள் இல்லை. காலம் போன காலத்தில் யார் வாங்குவார்கள்? கிழட்டு யானையால் பயன் இல்லை என்று சீந்துவார் இல்லை. அதனால் ஊருக்குள் பெரிய விவாதம் நடக்கிறது. நகரசபையில் உறுப்பினர்கள் சண்டையெல்லாம் போடுகிறார்கள். பிறகு நகரமே யானையை தத்தெடுத்துக் கொள்வது என்று முடிவு செய்யப்படுகிறது. யானையை வைத்திருப்…
-
- 6 replies
- 1.2k views
-
-
யுத்தத்தால் பாதிக்கப்பட்ட யாழ்ப்பாணச் சமூகத்தில் சாதியும் உள்ளூரில் இடம்பெயர்ந்த மக்களும்(1): பரம்சோதி தங்கேஸ்,காலிங்க டியூடர் சில்வா இக்கட்டுரை யுத்தத்தால் பாதிக்கப்பட்ட யாழ்ப்பாணச் சமூகத்தில் சாதி மற்றும் சமூக விலக்குப்பற்றியதொரு ஆய்வுக் கற்கையாகும். இக்கற்கையின் முன்னைய பகுதி வரல◌ாற்றுரீயாக இடம்பெற்ற இரண்டாம்தரத் தகவல்களிளன அடிப்படையாகக் கொண்டது. ஏனைய பகுதிகள் யாழ்ப்பாணத்தில் உள்ளுரில் இடம்பெயர்ந்து அகதி முகாம்களில் வாழும் மக்களின் ஒரு பகுதியினரை அடிப்படையாகக் கொண்டு மேற்கொள்ளப்பட்ட ஆய்வுத் தரவுகளினைப் பகுப்பாய்வு செய்வதாக அமைகின்றன. உள்ளுரில் இடம்பெயர்ந்து அகதி முகாம்களில் வாழும் மக்களில் பஞ்சமர் என அழைக்கப்படும் மரபரீதியாக ஒடுக்கப்பட்ட சாதிகளின் பிரதிநிதித்துவம…
-
- 0 replies
- 801 views
-
-
-
பெண்களை கால்மேல் கால் போட்டு உட்காராதே என நம் முன்னோர்கள் சொல்லியிருக்கின்றனர்.. இதை பெண் அடிமைத்தனம் புல்ஷிட் என இன்றைய நவநாகரீக பெண்கள் சொல்கின்றனர்... சொல்லிவிட்டு போகட்டும் ஆனால் நம் முன்னோர்கள் முட்டாள்கள் இல்லை.. கால்மேல் கால் போட்டு அமர்வதை அகங்காரம், திமிர், ஒழுங்கீனம் என மேலோட்டமாக சொல்லிவைத்தாலும், அதன் உள் பொருள் பெண்கள் கால்மேல் கால் போட்டு அமர்வதால்,அவர்களது கர்ப்பப்பை நாளடைவில் பாதிக்கும் என்பதால்தான்... இது அவர்களது நன்மைக்காகத்தான்... என் நன்மை எனக்கு தெரியும் என்றளவில் இன்று போய்க் கொண்டிருக்கும் நிலையில் இதைப்பற்றி என்ன சொல்வது!! FB
-
- 23 replies
- 5.8k views
-
-
கடந்த வாரம் எங்கள் வீட்டுக்கு,எங்களுக்கு தெரிந்த பெண்மணி ஒருவர் அவரது கணவனோடு வந்திருந்தார். அவரின் வயது பற்றி எங்கள் வீட்டில் உள்ள எல்லோருக்கும் ஒரு சர்ச்சை இருந்து கொண்டுதான் இருந்தது. மனிசி சொன்னது தன்னொத்த வயது இருக்கும் என்று அதாவது 35. மகள் சொன்னாள் அந்த அன்ரிக்கு 34 மட்டில் தான் இருக்கும் என்று. நான் சொன்னேன் அந்த அன்ரி வந்தவுடன் அவவிடமே கேட்டுப் பார்ப்போம். புருஷனோடு அந்த சர்ச்சைக்குரிய பெண்மணி எங்கள் வீட்டுக்கு இரவு சாப்பாட்டுக்கு வந்ததும் நாங்கள் மூன்று பேரும் ஒருவரை ஒருவர் பார்த்துக் கொண்டோம். சிரித்துக் கொண்டோம். வந்திருந்த பெண்மணி ஊர் துளவாரங்களில் அவ்வளவு இன்ஸ்றட் இல்லாத பெண்மணி. எங்களின் சிரிப்பை என்ன என்றும் கேட்கவில்லை. கடைசியில் புருஷனும் பெண்சாதியும…
-
- 4 replies
- 1.7k views
-
-
பெண்களுக்கு பிடிக்காத ஆண்களின் குணங்கள் என்ன! [sunday, 2014-04-06 20:27:38] இந்த உலகில் எப்படி ஆண்களுக்கு ஒருசில குணங்கள் உள்ள பெண்களை பிடிக்காதோ அதேப் போன்று பெண்களுக்கும் சில குணங்கள் உள்ள ஆண்களை பிடிக்காது. அத்தகைய ஆண்களைப் பார்த்தால், பொறுத்துக் கொள்ள முடியாத அளவில் கோபம் மற்றும் வெறுப்பு வரும். பெண்களுக்கு ஆண்கள் மீது அளவுக்கு அதிகமான பாசம் வருவதற்கு காரணம் ஆண்களது ஒருசில குணங்கள் தான். அதே சமயம் வெறுப்பு வருவதும் குணங்களால் தான். அத்தகைய குணங்கள் என்னவென்று பார்க்கலாம்... • பெண்கள் கெட்ட வார்த்தையை அதிகம் பேசும் ஆண்களிடம் பழக விரும்பமாட்டார்கள். ஏனெனில் இந்த குணம் இருந்தால், எந்த ஒரு சிறு விஷயத்திற்கு திட்டும் போதும், கெட்ட வார்த்தையை ப…
-
- 19 replies
- 11.4k views
-
-
“அருவருப்பான தோற்றம் கொண்ட ஆணோ பெண்ணோ காதலிக்கப்பட்டதாக வரலாறு உண்டா?”... கொஞ்சம் யோசித்த பின்னர் பதிவைப் படியுங்கள். அன்பு, பாசம், நேசம், கோபம், தாபம், காதல், காமம் போன்றவை அன்றாடம் நம்மை ஆளுகிற உணர்ச்சிகளைக் குறிக்கும் சொற்கள். இந்தப் பதிவுக்குத் தொடர்புடைய அன்பு, கருணை, காமம், காதல் ஆகிய பதங்களுக்கான பொருள் வேறுபாட்டையும், அந்த உணர்ச்சிகள் நம்முள் ஏற்படுத்தும் விளைவுகளையும் முதலில் தெரிந்து கொள்வோம். அன்பு: ஒருவர் மீது ஒருவர் கொள்ளும் பற்றுதல். இந்த உணர்ச்சிக்கு ஆட்படுவதால் ஏற்படும் விளைவு, ஒருவர் நலனில் இன்னொருவர் அக்கறை கொள்ளுதல்; உதவுதல். கருணை: சொந்தமோ பந்தமோ இல்லாதவர் மீதும் செலுத்துகிற அன்பு. இதன் விளைவு, பிரதி பலன் கருதாமல் உதவுதல். காமம்: கவர்ச்ச…
-
- 0 replies
- 1.2k views
-
-
பிள்ளைகளை வளர்த்து ஆளாக்க முதலே வேலை வேலை என அலையும் பெற்றோர்களே கவனிக்கவும்! உங்கள் பிள்ளைகளின் காப்பகத்தில் உங்களுக்கு 100% நம்பிக்கையிருந்தாலும் ஏதோ ஒரு விடயத்தில் அல்லது நன்னடத்தை எனும் பெயரில் துன்புறுத்தப்படுகின்றார்கள். இது நானறிந்த உண்மை. இங்கே பாருங்கள் கொடுமையை..... இதே மாதிரி உங்கள் பால்குடிகளுக்கு நடந்தால் உங்கள் மனம் எப்படி கொதிக்கும்?
-
- 13 replies
- 1.4k views
-
-
மனதைத் தொட்ட ஒரு காணொளி ------------------------------------------------ #பொதுக் குழாய்கள் அடைக்கப் பெறாமல் நீர் வீணாவதை அனுதினமும் பார்த்து வருகிறோம். அதற்கு விழிப்புணர்வு தரும் 47 வினாடிகள் கொண்ட இந்த படம் நமக்கு ஒரு பாடம். ஒரு 5 அறிவுள்ள விலங்கிற்கு உள்ள பொறுப்பு கூட நமக்கில்லை.. மிக வேதனையான விஷயம். https://www.facebook.com/photo.php?v=798025203560593
-
- 6 replies
- 998 views
-
-
ஒரு விமர்சனம் உடன்பாடற்றதாக இருக்கலாம். ஆனால் அது தேவையற்றதாக இருக்க முடியாது. மனித உடலி்ல் வலியின் செயற்பாட்டை இது ஒத்திருக்கிறது. அதாவது இது நலமற்ற நிலையின் மீது கவனத்தைக் குவிக்கச் செய்கிறது. என்று விமசனம் பற்றி Winston Churchill கூறுகிறார். (Criticism may not be agreeable, but it is necessary. It fulfils the same function as pain in the human body. It calls attention to an unhealthy state of things. ― Winston Churchill) சுதந்திரத்திற்கான அச்சுறுத்தல் விமர்சனமின்மையே என்கிறார்.1986 இல் இலக்கியத்திற்காக நோபல் பரிசுபெற்ற நைஜீரிய நாட்டு எழுத்தாளும் நாடகசாரியருமான Wole Soyinka. (The greatest threat to freedom is the absence of criticism. ― Wole Soyinka) எமது சமுதாயம…
-
- 9 replies
- 1.5k views
-
-
பொறியியல் படிக்கிறாள். பன்னாட்டு தகவல் தொழில்நுட்ப நிறுவனங்களில் பணிபுரிகிறாள். உலகப்பொருளாதாரத்தின் வீழ்ச்சியும் எழுச்சியும் நேரடியாகப் பாதிக்கும் அளவிற்கு இந்திய நகர்ப்புறத்துப் பெண்ணான அவளது வாழ்க்கைத் தரம் உயர்ந்திருக்கிறது. ஆனாலும், விளம்பரங்களில் எளிதில் கரைபோக்கும் சோப்பை தேடும் பெண்ணாகவே இன்றும் அவள் தெரிகிறாள். மசாலா முதல், எண்ணெய் வரையிலான சமையலறைத் தேவைகளைத் தேர்வு செய்யும் பொறுப்புள்ள குடும்பத் தலைவி அவள் என்பதை நிலைநிறுத்த விளம்பரங்கள் தவறுவதே இல்லை. பெண் எவ்வளவு பெரியவளாக இருந்தாலும், சமைப்பது, துணி துவைப்பது, பாத்திரம் துலக்குவது போன்ற வீட்டு வேலைகள் அவளுக்கு மட்டுமே உரித்தானவை என்பதை, வெகுஜனப்புத்தியில் அவ்வப்போது பதியவைக்கவும் அவை தவறுவதில்லை. ஒரு சில…
-
- 1 reply
- 924 views
-
-
உங்களுடைய துணையிடம் சொல்லக்கூடாத 9 விஷயங்கள்!!! நெடுநாட்கள் மகிழ்ச்சியாக இருக்கும் தம்பதிகள் சில நேரங்களில் அவர்கள் என்ன சொல்கிறார்கள் மற்றும் எப்படி சொல்கிறார்கள் என்பதை கவனித்துப் பார்க்க வேண்டும். அதே நேரம், தங்களுடைய உயிருக்குயிரானவர் சொல்லும் விஷயங்களுக்கு அவர்கள் எப்படி பதில் சொல்கிறார்கள் என்பதையும் கவனிக்க வேண்டும். நீங்கள் ஒருவருடன் மிகவும் அன்யோன்யமாக இருப்பதால், அவரிடம் எதை வேண்டுமானாலும் பேசலாம் என்று நினைக்கக் கூடாது. எனவே, உங்கள் துணையிடம் நீங்கள் சொல்லக்கூடாத விஷயங்களை இங்கு கொடுத்துள்ளோம். அதைப் படித்து தெரிந்து கொண்டு, அவற்றை மறந்தும் சொல்லாதீர்கள். 1. 'நீங்கள் தான் எப்பொழுதும்...' அல்லது 'எப்பொழுதும் நீங்கள் கிடையாது' இதை யோசித்துப்…
-
- 7 replies
- 1.1k views
-
-
ஊரே அம்மணமாக சுற்றும் போது வா. மணிகண்டன் http://www.nisaptham.com/2014/03/blog-post_11.html அலுவலகத்தில் மதிய உணவை யாரோடும் சேர்ந்து சாப்பிடுவதில்லை என்ற அவப்பெயர் எனக்கு உண்டு. வீட்டிலும் அப்படித்தான். தனியாக அமர்ந்து கொட்டிக் கொள்வேன். உள்ளே தள்ளிக் கொண்டிருக்கும் அதை மட்டுமே செய்ய வேண்டும் என நினைப்பேன். பள்ளிப்பருவத்திலிருந்தே பழகிய பழக்கம் இது. இப்பொழுது வினையாக போய்விட்டது. அதை வைத்தே திட்டுகிறார்கள். அலுவலகத்தில் கழண்டு கொள்வதற்கு இன்னொரு அனுபவமும் காரணமாக இருக்கிறது. முள்ளிவாய்க்கால் சம்பவம் உச்சகட்டத்தில் இருந்த போது யுத்த நிலவரங்களை அலுவலக கேண்டீனில் இருக்கும் டிவியில்தான் பார்த்துக் கொண்டிருந்தோம். கூடவே இன்னொரு தமிழ் பையனும், பீஹாரி ஒருவனும் சாப்ப…
-
- 1 reply
- 1.1k views
-