சமூகச் சாளரம்
சமூகம் | பண்பாடு | குடும்பம் | வாழ்வியல் | சீர்திருத்தங்கள் | பெண்ணியம்
சமூகச் சாளரம் பகுதியில் சமூகம், பண்பாடு, குடும்பம், வாழ்வியல், சீர்திருத்தங்கள், பெண்ணியம் பற்றிய தரமான சிந்தனையைத் தூண்டும் தகவல்கள் இணைக்கப்படலாம்.
எனினும் அளவுக்கதிகமாக பதிவுகள் இணைப்பதையும், பல தலைப்புக்கள் திறப்பதையும் தவிர்க்கவேண்டும்.
2253 topics in this forum
-
-
இன்டைய கால கட்டத்தில் காதலித்து திருமணம் செய்வது நல்லதா அல்லது பெற்றோர்கள் மூலம் பேசித் திருமணம் செய்வது நல்லதா...காதலித்து திருமணம் செய்தால் எமது மனதிற்குப் பிடித்தவரைத் திருமணம் செய்யலாம் கணவன்,மனைவிக்கிடையே ஏதாவது பிரச்சனை வந்தால் அதற்கு அவர்களே பொறுப்பு ஆனால் பெற்றோர் பேசித் திருமணம் செய்து வைத்து தம்பதியினரிடையே பிரச்சனை வந்தால் அதற்கு திருமணம் செய்து வைத்தவரே பொறுப்பு...உங்களைப் பொறுத்த வரை எந்த திருமணம் சிறந்தது என நினைக்கிறீங்கள்? புலம் பெயர் நாட்டில் பிறந்து வளர்ந்தோர் அந்த நாட்டில் வேற்று இனத்தவரைக் காதலித்து திருமணம் செய்கின்றனர் இது ஆரோக்கியமானதா...இதனால் எமது மொழி,கலாச்சாரம்,பண்பாடு என்பன அழிந்து போகாதா...அல்லது மாறி வரும் இண்டைய உலகத்தில் இது தேவையானதா…
-
- 18 replies
- 2.7k views
-
-
சோயா பீன்! ஆப்பிரிக்காவில் உள்ள ஜாம்பியா நாட்டில் ஒரு இரண்டு வயதுப் பெண் குழந்தை புரதச்சத்துப் பற்றாக்குறையால் நோய்வாய்ப்பட்டு இறக்கும் நிலையில் இருந்தது. அந்தக் குழந்தைக்கு சோயாவில் தயாரிக்கப்பட்ட சில உணவு வகைகளைக் கொடுத்து உயிர் பிழைக்க வைத்தனர். உயிர் பிழைத்த குழந்தைக்கு ஜாம்பியாவின் அதிபர் சோயா பீன் என்று பெயர் வைத்தார். இதுவே பிற்காலத்தில் சோயாபீன்ஸ் என்று பெயர் பெற்றது. Thanks:AARUMUGAM
-
- 17 replies
- 2.9k views
-
-
அண்ட சராசரங்கள் அனைத்தும் ஏதோ ஓர் ஈர்ப்பில்தான் இயங்கிக் கொண்டிருக்கிறது. அந்த ஈர்ப்பு ஒவ்வோர் அணுவிலும் நிரம்பியிருக்கிறது என்கிறது விஞ்ஞானம். உயிர்சமூகம் தன்னை ஆண், பெண் என இரண்டாகப் பிரித்து தங்களுக்குள் உருவாகும் ஈர்ப்பின் மூலம் இணைந்து முழுமை பெற்றுவிடுகிறது. இந்த இனிய உணர்வை 'காதல்' என்று குறிப்பிடுவதில் தவறில்லை. ஆதிமனிதர்கள் கட்டுப்பாடுகளற்று காதலித்தார்கள். அவர்கள் வாழ்தலின் முக்கிய குறிக்கோள் காதலாக மட்டுமே இருந்தது. அதனால் காதலை விருப்பம்போல் அனுபவித்தார்கள். மனிதன் தங்களுக்கான ஒலி, ஓசை, மொழி, எழுத்து இவை எதுவும் அறியப்படாததற்கு முன்பே அவர்களால் அறியப்பட்டது காதல்; காதல்; காதல் மட்டுமே. கட்டுப்பாடுகளற்று காதலித்த ஆதிமனிதர்களின் மீது மெல்ல மெல்…
-
- 21 replies
- 3.5k views
-
-
‘செல்ஃபி புள்ள’யின் உளவியல்! ஆர்.அபிலாஷ் எங்கள் பல்கலைக்கழகத்தில் ஓர் ஆய்வரங்கில் என் நண்பரான மெல்ஜோ எனும் ஆசிரியர் ஒரு கட்டுரை வாசித்தார். தற்படங்கள் இன்று ஒரு சமூக சுயமாக, தன்னிலையாக மாறிவருகிறது என்பதே அவரது கருதுகோள். அதாவது, நாம் ஒவ்வொருவரும் சமூக அங்கீகாரத்துக்காகத் தற்படங்களை எடுத்துச் சமூக வலைதளங்களில் வெளியிடுகிறோம். இது மிகையாக மாறும்போது தற்பட விரும்பிகளுக்குச் சமநிலை குலைகிறது. பல எடிட்டிங் ஆப்கள் மூலம் தம் தோற்றத்தை மெருகேற்றிப் பொய்யான பிரதியை அவர்கள் வெளியிடுகிறார்கள். இதற்கு விருப்பக் குறிகள் அதிகமாக ஆக, உண்மைக்கும் பொய்க்கும் இடையே இடைவெளி அதிகமாகிறது. ஒரு நண்பர் இதை வேறுவிதமாய் முன்வைத்தார். நாம் அனைவரும் ஒரு குறிப்பிட்ட உடல் தோற்றத்தை ம…
-
- 0 replies
- 1.7k views
-
-
படத்தின் காப்புரிமை Getty Images நாம் மனநல மருத்துவரை சந்திக்க செல்லாமல் இருக்கலாம். எந்த மனநில பிரச்சனையும் இல்லாமல் இருப்பது போல இருக்கலாம். ஆனால், தினசரி வாழ்வு மற்றும் பணி சுமை தரும் மன அழுத்தம், நம்மை நிறைவாக வாழவிடுவதில்லை; குறைந்தபட்சம் திருப்தியுடன் கூட வாழவிடுவதில்லை. ஆனால், இப்போது நவீன அறிவியல் எவ்வளவோ வளர்ந்திருக்கிறது. நேர்மறையான மனநிலையை எப்படி வளர்த்தெடுத்து கொள்வது என்பது தொடர்பான எண்ணற்ற ஆலோசனைகளையும் அது வழங்குகிறது. இது தொடர்பாக எண்ணற்ற ஆய்வுகளும் நடந்துள்ளன. இதுவெல்லாம் சரிதான். இதனை எப்படி நம் தினசரி வாழ்வில் பொர…
-
- 0 replies
- 952 views
-
-
மனிதர்கள் ஒருவரை ஒருவர் தொட முடியாமல் போனால் என்னாகும்? - தொடுதல் மனித வாழ்வுக்கு ஏன் அவசியம்? 3 மணி நேரங்களுக்கு முன்னர் பட மூலாதாரம்,GETTY IMAGES மனிதர்கள் நலமுடன் இருக்க தொடுதல் அடிப்படையான ஒன்று. ஆனால், மனிதர்கள் ஒருவருக்கொருவர் தொட முடியாமல் போனால், அவர்களுக்கு என்ன நடக்கும்? விளக்குகிறார்கள் நிபுணர்கள். மனிதர்களுக்கு இடையே தொடுதல் மிகவும் முக்கியமானது. இது சமூகத்தை ஒன்றிணைக்கும் பிணைப்பு என்று "யுனிக்: தி நியூ சயின்ஸ் ஆஃப் ஹுமன் ஆஃப் இண்டிவிஜுவலிடி (Unique: The NewScience of Human Individuality) என்ற புத்தக்கத்தின் எழுத்தாளர் டெவிட் லிண்டேன் கூறுகிறார். சமூகத்துடன் நாம் பழகும் போ…
-
- 5 replies
- 639 views
- 1 follower
-
-
பெண்களுக்கு இரவு சொந்தமில்லையா...? தவிக்கும் இரவு இது. 23 வயதேயான ஓர் இளம்பெண், பாலியல் வன்முறைக்கு உள்ளாக்கப்பட்டு, கொன்று தூக்கியெறியப்பட்டிருக்கிறார். ஒன்பது நாட்கள் ஒரு மிகப் பெரிய தகவல் தொழில்நுட்பப் பூங்காவின் எல்லைக்குள் சென்னையின் தகவல் பெருஞ்சாலையான பழைய மகாபலிபுரம் சாலையிலிருந்து (OMR சாலை ) 200 அடிக்கு அருகில் ஒரு புதரில் பிணமாகக் கிடந்து, கடந்த ஞாயிறன்று செய்தியாகி, காவல் துறை துப்புத்துலக்கியதால் தமிழகத்தின் நிர்பயாவாக மாறிய இரவு இது. பெரும்பாலும், ஊருக்கு வெளியே பிரமாண்டமான கட்டிடங்களில் இயங்கும் தகவல் தொழில்நுட்ப வளாகங்களின் பாதுகாப்புகுறித்தும் அவற்றில் பணிபுரியும் பெண்களின் நிலைகுறித்தும் இரு தினங்களாக விவாதங்கள் நடைபெற்றுவருகின்றன.…
-
- 5 replies
- 1k views
-
-
தாம்பத்ய சவால்கள்: இலங்கையில் ஊற்றெடுத்து ஜெர்மனியில் ஓடும் காதல் நதி இதை பகிர ஃபேஸ்புக்கில் இதை பகிர டுவிட்டரில் இதை பகிர Messenger இதை பகிர மின்னஞ்சல் பகிர்க இலங்கையில் இருந்து புலம்பெயர்ந்து ஜெர்மனியில் வாழும் குடும்பத்தை சேர்ந்த பெண் ஒருவர், இலங்கையில் வாழ்பவரை திருமணம் செய்து கொண்ட காதல் கதை இது. படத்தின் காப்புரிமைGETTY IMAGES எப்படி எல்லாம் தொடங்கியது ... 2011ஆம் ஆண்டில் பள்ளிப் படிப்பை முடித்தபோது, கோடை…
-
- 4 replies
- 1.9k views
-
-
எனக்குப்புரியவில்லை... இந்த மனிதர்கள்..உலகில் எவ்வளவு அசிங்கம்.. அக்கிரமம் பண்ணுபவர்கள் உள்ளனர்கள் .. அவர்களையெல்லாம் விட்டு நல்ல மனசுள்ள சில மனிதர் மனதை ஏன் காயப்படுத்துகின்றனர் என்று சிலர் வேலை அடுத்தவர் விடயங்களில் தலையிடுவதும் அவர்கள் மனதில் ரணம் ஏற்படுத்துவதுமாக இருக்கிறது.. அஜீவன் அண்ணா எனக்குத்தெரிந்த நல்ல மனிதர் அவரைக்கூட ஒருவர் அவதூறு பேசி இருக்கிறார்.. அது பொய்யான கருத்து என்பதே உண்மை.. சில ஜீவன்களுடைய வேலைப்பளு..வீட்டின் நிலவரம்..என்பன காரணமாக இங்கே அன்பாக உரையாடுகிறார்கள்.. ஏன் அவர்கள் மனதை புண்செய்கிறீர்கள்.. கண்டு கொள்ளாமல் செல்வது அவ்வளவு கடினமா.. கருத்துக்கள்.. அரட்டையாவதில் அவ்வளவு குற்றம் ஏன் காண்கிறீர்கள்..
-
- 6 replies
- 1.7k views
-
-
காற்றில் விபூதி, காற்றில் தங்கச்சங்கிலி, தங்கலிங்க வாந்தி. இவ்வளவு தங்கம் சாய்பாபவிடமிருந்து வந்தாலும் இந்தியாவில் இன்னும் நிறைய பேர் வறுமைக்கோட்டிட்டின் கீழே. ஏன்? "சாய்பாபாவும் மேஜிக் ஷோவும்" பார்க்க இங்கே அழுத்தவும்.
-
- 29 replies
- 5.4k views
-
-
கனடா நாட்டில் உயிரியலாளர்களாக College of Applied Biology இல் பதிவு செய்துள்ளவர்கள்.. பிரித்தானிய உயிரியலாளர்களுக்கான அங்கீகாரம் அளிக்கும்.. Society of Biology இல் எனி அங்கத்துவம் பெற முடியும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது. அப்போ எங்களுக்கும் கனடாவில மதிப்பு அளிப்பாங்க போல..! ம்ம்.. Mutual Recognition Agreement between the Society of Biology and the College of Applied Biology. We have a Mutual Recognition Agreement (MRA) in place with the College of Applied Biology, based in British Columbia, Canada, whereby Registered Professional Biologists (R.P.Bio.) in Canada can be recognised as Chartered Biologists in the UK, and Chartered Biologists can be recognised in Canad…
-
- 2 replies
- 1.1k views
-
-
ஒரு குழந்தையின் அப்பாவை அறிமுகம் செய்வது அம்மா. ஆனால் அப்பா யார் என்று தெரிந்து கொள்ள ஆசைப்படுபவர்கள் மரபணு சோதனை செய்து கொள்ளுங்கள் என்ற அறிவிப்புடன் நியூயார்க் நகரை வலம் வந்து கொண்டிருக்கிறது ஒரு வாகனம். இந்த வாகனத்தில் மரபணு சோதனை நடத்த ுவதற்கான அனைத்து பரிசோதனை வசதிகளும் உள்ளன. நிபுணர்களும் தயாராக உள்ளனர். மரபணு சோதனை நடத்துவதற்காக, ஒரு நபருக்கு 32 ஆயிரம் ரூபாய் வசூலிக்கப்படுகிறது. தினமும் நியூயார்க் நகரின் முக்கிய சாலைகளை சுற்றி வரும்போது மக்கள் நடமாட்டம் அதிகம் உள்ள ஏதாவது ஒரு இடத்தில் இந்த வாகனம் நிறுத்தப்படுகிறது. ஏராளமான ஆண்கள், தங்கள் குழந்தைகளை அழைத்து வந்து இந்த குழந்தை தங்களுக்குப் பிறந்தது தானா? என்று பரிசோதனை செய்கின்றனர். அந்த ஆய…
-
- 10 replies
- 2.3k views
-
-
கல்லானாலும் கணவன்…: தேவ அபிரா அண்மையில் ஊடகமொன்றில் வந்த செய்தியை வாசித்தபோது என்னுட் சில நாட்களாகக் குமைந்து கொண்டிருந்த ஒரு சம்பவத்தையும் பகிர்ந்து கொள்ளலாமே என்று தோன்றியது மனதில் தோன்றுகிற எல்லா உணர்வுகளையும் பொதுவெளியிற் பகிருகிற ட்ருவிற்றர் காலத்தில் வாழ்கிற போது எனது அனுபவத்தையும் பொதுவெளியில் முன்வைப்பது பிரயோசனமாக இருக்கும் என்று தோன்றியது. ஆனால் எனது அனுபவத்தைப் பகிர முன்னர் நான் வாசித்த செய்தியையும் பகிர்ந்து கொள்ள விரும்புகிறேன். வீரமரணங்களும் போரும் அரசாட்சி செய்த காலத்திலும் தனிமனிதப்பிரச்சனைகளும் சமூகப் பிரச்சனைகளும் தமிழ்ச் சமூகத்துள் நிலவவே செய்தன. ஆனால் அப்பொழுது இத்தகைய சம்பவங்கள் எங்களின் ஊடகங்களின் கண்களுக்குப் படவில்லை. இப்பொழுது தன…
-
- 14 replies
- 1.9k views
-
-
பதின்மத்தின் பரிதவிப்பில்…………. பவள சங்கரி குழந்தைப் பருவம் மற்றும் காளப் பருவம், ஆகிய இரண்டிற்கும் இடைப்பட்ட ஒரு அழகிய, நுண்ணிழைகளால் நெய்யப்பட்டதொரு மெல்லிய பருவம் இந்த ‘டீன் ஏஜ்’ என்கிற பதின்மப் பருவம்! ஆம் அதிகமாக உணர்ச்சிவயப்படுதலும், அச்சம் கொள்ளுதலும், ஊசலாடும் உள்ளமும், கோபம் கொள்ளுதலும், கை வந்த கலை இந்தப் பருவத்தினருக்கு. பெற்றோராகிய நாமும் சில காலம் முன்புதான் இப்பருவத்தைக் கடந்து வந்தவர்களாக இருப்பினும், ஏனோ பல சமயங்களில் இன்று நம் குழந்தைகளின் அப்பருவத்திற்கேயுரிய பிரச்சனைகளைக் கண்டு, அச்சம் கொண்டு, அதனை விட்டுப் பிடிக்காமல், அவர்கள் மீது மேலும் அழுத்தம் ஏற்படுத்த எத்தனிக்கிறோம். பெற்றோர் தம் குழந்தைகளுடன் நல்ல நண்பர்களாகப் பழக முயற்சிக்க வேண்டும். …
-
- 0 replies
- 568 views
-
-
வாட்சப்பில் பாலியல் அவமானத்துக்கு ஆளான பெண் தற்கொலை வாட்சப்பில் பாலியல் அவமானத்துக்கு ஆளான பெண் தற்கொலை (காணொளி) இன்றைய தொழில்நுட்ப வளர்ச்சியில் பல நன்மைகளை அடைந்துள்ள போதும், சம அளவில் தீமைகளும் வளர்ந்து வருகின்றன அதில் பெரும்பாலானவை பெண்களையே பாதிக்கின்றன. குறிப்பாக பாலியல் குற்றங்கள் குறிப்பிடத்தக்க வகையில் அதிகரித்து வருகின்றன;அவ்வாறாக உள்ள பல்வேறு சம்பவங்களை படம் பிடித்து காட்டுகிறது பிபிசியின் அரபிக் பிரிவின் ஷேம் ஆன்லைன் என்ற தொடர். அந்த வரிசையில் இந்தியாவில் நடந்த ஒரு சம்பவம் இந்த காணொளியில். தயாரித்தவர் பிபிசி இந்திப் பிரிவின் திவ்யா ஆர்யா. இந்தியாவின் உத்தர பிரதேச மாநிலத்தில் சுகாதார ஊழியராக பணியாற்றிய 40 வயது பெண், தான் கூட்டு பாலியல் வல்லுறவுக்க…
-
- 0 replies
- 808 views
-
-
மாதவிடாய் விடுப்பும் சாத்தியப்பாடுகளும் - கனகலிங்கம் கோபிகிருஷ்ணா மாதவிடாய்க் காலத்தில், வேலைசெய்யும் பெண்களுக்கான விடுப்பை ஏற்பாடுகளைச் செய்வதற்கான வேண்டுகோள் விடுக்கப்பட்டால், அதை அமைச்சரவைப் பரிந்துரைப்பதற்குத் தயாராக இருப்பதாக, பெண்கள் விவகார அமைச்சர் சந்திராணி பண்டார, ஒரு வாரத்துக்கு முன்னர் தெரிவித்திருந்தார். சீனாவில் சில மாகாணங்களில் இருப்பதைப் போன்று, அதிகபட்சமாக இரண்டு நாள் விடுப்பை வழங்குவதற்கு ஆராய முடியுமெனவும் அவர் தெரிவித்திருந்தார். சில வாரங்களுக்கு முன்னதாக வெளியாகியிருந்த செய்தியின் அடிப்படையில், மாதவிடாய்க் காலத்தில் அதிகபட்சமாக ஒருநாள் விடுப்பை வழங்குவதற்கான முன்மொழிவொன்றை, …
-
- 3 replies
- 763 views
-
-
ஒரு நண்பர், 'கடைக்கு போனேன். இரண்டு லாட்டரி சீட்டுகள் வாங்கினேன். உனக்கு ஒன்று இந்தா. அதிஷ்டம் இருந்தால் வெல்லு' என்று சொல்கிறார். நீங்கள் காலைல சாப்பாடு வாங்கிக் கொடுத்தபடியால்.... லாட்டரி சீட்டுக்கான பணம் கொடுக்க வேண்டிய தேவை இருக்கவில்லை. உங்களுக்கு அதிஷ்டம் இருந்தது. ஒரு இலட்ச்சம் விழுந்து விட்டது. சும்மா இரகசியமா வைச்சிருக்காம, உடனே போனைப் போட்டு மச்சி விழுந்திடுது மச்சான்... வா... தண்ணி அடிச்சு கொண்டாடலாம் என்கிறீர்கள்.. ஒரு 5,000 நண்பருக்கு கொடுத்துவிடலாம் என்று மனதில் நினைக்கிறீர்கள். நல்ல தண்ணீல, மச்சான், நீ 5,000 எடு, மிகுதியை எனது பாங்குக்கு மாத்து என்று நண்பர் உறுதியாக, தெளிவாக சொல்கிறார். இப்ப என்ன செய்வது ? ( ஓ, கொஞ்சம் பொறுங்கோ…
-
- 10 replies
- 1.7k views
-
-
குழந்தை வளர்ப்பு மன அழுத்தம் தருகிறதா? பரிணாமவியல் சொல்வது என்ன? 7 மணி நேரங்களுக்கு முன்னர் பட மூலாதாரம்,GETTY IMAGES எறும்புகளும் கீரிப்பூனைகளும் நமக்கு குழந்தை வளர்ப்பு குறித்துக் கற்றுத்தருவது என்ன? தொன்மையான சமூக உள்ளுணர்வுகள் இன்றும் நம் குடும்பங்களை எப்படி வடிவமைக்கிறது என்பதைப் பற்றி வெளிக்கொண்டு வந்துள்ளார், பரிணாமவியல் உயிரியலாளர் நிகோலா ரைஹானி. என்னுடைய குழந்தைகளிடமிருந்து போராடி ரிமோட்டை வாங்கிக்கொண்டு, சோபாவில் சாய்ந்து, வரப்போவதை எதிர்கொள்ளத் தயாரானேன். இது மார்ச் 2020-ல் நடந்தது. ஆபத்தான கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை உலகம் முழுக்க வேகமாக உயர்ந்துகொண்டிருந்தது. ஊரடங்கு குறித…
-
- 0 replies
- 499 views
- 1 follower
-
-
http://www.tubetamil.com/tamil-tv-shows/watch-zee-tamil-tv-shows/solvathellam-unmai-09-01-2014-zee-tamil-tv-show-solvathu-ellaam-unmai.html
-
- 3 replies
- 1.5k views
-
-
தமிழகத்தின் மதுரை மாவட்டத்தைச் சேர்ந்த தனது பெற்றோருக்கு காவல்துறையினரால் நிகழ்ந்த கொடுமைகளுக்கு தீர்வு தேடி வழக்காட முன்வந்துள்ளார் பாதிக்கப்பட்டோரின் முதல் மகனான மலைச்சாமி. மதுரை மாவட்டத்தைச் சேர்ந்த குருவையா என்ற விவசாயியையும் அங்கம்மாள் என்ற அவரது மனைவியையும் 13 ஆண்டுகளுக்கு முன்பு காவல்துறையினர் ஒரு திருட்டு சம்பவம் தொடர்பாக விசாரணைக்காக காவல் நிலையத்துக்கு அழைத்துச் சென்று அங்கு 7 நாட்கள் சித்ரவதை செய்து விசாரித்ததாக கூறப்படுகிறது. சித்ரவதை தாங்காமல் சிறு விவசாயியான குருவையா இறந்து விட்டார். காவல்துறையின் பிடியில் இருந்த போது தனது கணவர் கண் முன்னே அங்கம்மாள் பாலியல் பலாத்காரம் செய்யப்பட்டுள்ளார். இந்நிலையில் பாதிக்கப்பட்ட அங்கம்மாளின் மகனான மலைச்சாமி தற்…
-
- 0 replies
- 736 views
-
-
சாதிப்பதை சாத்தியப்படுத்தும் 6 விஷயங்கள் இதை பகிர ஃபேஸ்புக்கில் இதை பகிர டுவிட்டரில் இதை பகிர Messenger இதை பகிர மின்னஞ்சல் பகிர்க நமக்கு நாலு பேரு சலாம் அடிக்கிற மாதிரி எப்போது வளரப்போகிறோம்னு கனவு காண்பவர்களா நீங்கள்...அப்படியானால் உங்களுக்கானதுதான் இந்தக் கட்டுரை எதிலும் ஓர் ஆர்வம், மனசாட்சியுடன் கூடிய நேர்மை, போட்டியில் ஜெயித்தாக வேண்டும் என்ற துடிப்பு, எந்த சூழலுக்கும் ஏற்ப தம்மை மாற்றிக்கொள்ளும் தன்மை, குழப்பமான சூழலிலு…
-
- 0 replies
- 929 views
-
-
மனிதர்களை நான் நல்லவர்கள், கெட்டவர்கள் என்று பிரிப்பதில்லை. மாறாக, கருத்துமுதல்வாதிகள் / லட்சியவாதிகள், பௌதீகவாதிகள் / நடைமுறைவாதிகள் எனப் பிரிக்கிறேன். அரசியல் அடிப்படையில் வெளியில் இருப்பவர்களுக்கு லட்சியவாதமாகவும் உள்ளே இருப்பவர்களுக்கு நடைமுறைவாதமாகவும் உள்ளது. அரசியலில் வெளியே இருப்பவர்கள் ஏழைகளாகவும், அதிகாரமற்றவர்களாகவும், துயருறுபவர்களாகவும், உள்ளே அதிகார மையத்தில் இருப்பவர்கள் பணமும் அதிகாரமும் படைத்தவர்களாகவும் இருக்கிறார்கள். மீண்டும் சொல்கிறேன் - இதில் நல்ல அரசியல்வாதி, மக்கள் தலைவர், கெட்ட அரசியல்வாதி, ஊழல்வாதி எனும் பாகுபாடுகள் அபத்தமானது. காந்தியின் காலத்திலேயே அரசியலை நடத்தியவர்கள் எந்த கலவரத்திலும் சாகவில்லை, மந்திரிகள் பட்டினி கிடக்கவில்லை. இன்னொரு விசயம…
-
- 0 replies
- 686 views
- 1 follower
-
-
எப்படியான ஆண்களை பெண்களுக்கு பிடிக்கும்? ஆர். அபிலாஷ் ஒரு நண்பர் தனக்கு உரையாட தோழிகளே இல்லை. நெருங்கிப் பழக நினைக்கும் பெண்கள் ஏதாவது காரணம் சொல்லி விலகி விடுகிறார்கள். ஏன் அப்படி என கேட்டிருந்தார். அவருக்கான என் பதில் கீழ் வருவது: அன்புள்ள நண்பருக்கு ஒரு ஆண் தன் சமவயது பெண்ணுடன் தோழியாய் இருப்பது சிரமமான காரியமே. எந்த வகை நட்பிலும் ஒரு பாலியல் கோணம் இருந்தே தீரும். அதனால் தான் ஏற்கனவே காதலன் உள்ள பெண்கள் ஒரு புது ஆணின் நட்பு கோரலை ஏற்க தயங்குவார்கள். உங்களை விட வயது அதிகமான பெண்களிடம் இது சாத்தியமாகலாம். இன்றைய அலுவலகங்களில் ஆண் பெண் இணைந்து பணியாற்றும் வாய்ப்பு இருக்கும் போது நீங்கள் எதிர்பார்க்கும் காஷுவல் நட்புறவுகள் இரு சாராருக்கும் இடையே…
-
- 6 replies
- 1.4k views
-
-
தீபாவளியின் அரசியல் 1 தீபாவளிப் பண்டிகையின் வேட்டு முழக்கங்கள் ஆரவாரமாய் ஒலிக்கின்றன. நரகாசுரன் என்ற அசுரகுலத் தலைவனை ஸ்ரீ மஹாவிஷ்ணு அழித்தொழித்த நாள் என்று ஒரு சாராரும், திராவிடத் தலைவனை அழித்து ஆரிய வெற்றியைப் பறை சாற்றிய நாள் என்று மறு சாராரும் தங்கள் தங்கள் அரசியலைச் செவ்வனே முன்வைத்துக் கட்டமைத்துக் கொண்டிருக்கும் அரசியல் ஓடிக்கொண்டிருக்கிறது. நூற்றாண்டுகளாக மிகவும் வெற்றிகரமாக இயங்கும் இந்தத் தொன்மத்தை, ஒட்டியும் வெட்டியும் ஆய்வு செய்யும் போக்குதான் இது. ஒரு சீரிய ஆய்வாளனை ஆய்வின் நுட்பமான தளங்களை நோக்கி நகரவிடாமல், தாங்கள் ஏற்கனவே முன்வைத்துள்ள ஆய்வுப் போக்கிலேயே, ஒட்டி அல்லது வெட்டி யோசிக்க வை…
-
- 0 replies
- 1.3k views
-