உலக நடப்பு
உலகச் செய்திகள் | காலநிலை
உலக நடப்பு பகுதியில் உலகச் செய்திகள், காலநிலை செய்திகள் இணைக்கப்படலாம்.
முக்கியமான/அவசியமான தூரகிழக்காசிய, ஐரோப்பிய, அமெரிக்க, ஆபிரிக்க, அவுஸ்திரேலிய செய்திகள், உலகக் காலநிலை பற்றிய செய்திகள் மாத்திரம் இணைக்கப்படல் வேண்டும். இந்தியச் செய்திகளை புதிய பிரிவான அயலகச் செய்திகள் பகுதியில் இணைக்கலாம். நாணயமாற்று சம்பந்தமான செய்திகளை வாணிப உலகம் பகுதியில் இணைக்கலாம்.
26876 topics in this forum
-
இஸ்ரேலிற்கும் ஹமாசிற்கும் இடையில் பணயக்கைதிகள் விடுதலை, யுத்த நிறுத்த பேச்சுவார்த்தைகள் போன்றவற்றில் அனுசரணையாளராக செயற்படுவதை கத்தார் இடைநிறுத்தியுள்ளது. இரு தரப்பினரும் பேச்சுவார்த்தைகளில் ஈடுபடுவதற்கான விருப்பத்தை வெளிப்படுத்தினால் மாத்திரமே மீண்டும் பேச்சுவார்த்தைகளில் ஈடுபடப்போவதாக கத்தார் தெரிவித்துள்ளது. கத்தாரில் ஹமாஸ் அமைப்பின் பிரதிநிதிகள் செயற்படுவதை ஏற்றுக்கொள்ளப்போவதில்லை என அமெரிக்க அதிகாரிகள் தெரிவித்துள்ள நிலையிலேயே கத்தாரின் இந்த அறிவிப்பு வெளியாகியுள்ளது. ஹமாசினை தனது அரசியல் அலுவலகத்தினை மூடுமாறு கத்தார் கேட்டுக்கொள்ளவேண்டும் என அமெரிக்கா கேட்டுக்கொண்டுள்ளதாகவும் கத்தார் அதற்கு இணங்கியுள்ளதாகவும் தகவல்கள் வெளியாகியுள்ள…
-
- 0 replies
- 484 views
- 1 follower
-
-
ரஷ்ய – உக்ரைன் போர் 1,000 நாட்களை எட்டும் நிலையிலும், தீவிரமாக யுத்தம் நடைபெற்று வருகிறது. ‘இந்தப் போரில் இதுவரை 2,406 குழந்தைகள் பாதிக்கப்பட்டுள்ளனர். அதாவது, 659 குழந்தைகள் உயிரிழந்துள்ளனர்; 1,747 குழந்தைகள் காயமடைந்துள்ளனர்’ என யுனிசெஃப் அமைப்பு தெரிவித்துள்ளது. நேட்டோ அமைப்பு நாடுகளில் உக்ரைன் இணையக் கூடாது என்பதற்காக, ரஷ்யா கடந்த 2022-ஆம் ஆண்டு பிப்ரவரி 24-ஆம் தேதி முதல் அந்நாட்டின் மீது கண்மூடித் தனமாக போர் தொடுத்து வருகிறது. உக்ரைனுக்கு அமெரிக்கா, ஐரோப்பிய நாடுகள் நிதி மற்றும் ஆயுத உதவி அளித்து வருவதால், உக்ரைனும், ரஷ்யாவுக்கு பதிலடி கொடுத்து வருகிறது. இந்தப் போர் இரண்டு ஆண்டுகளை கடந்திருக்கும் நிலையில், உக்ரைனுக்கு ஆதரவாக சில நாடுகளும், ரஷ்யாவுக்கு ஆதரவாக சில…
-
- 1 reply
- 370 views
- 1 follower
-
-
04 DEC, 2024 | 01:50 PM இஸ்ரேல் இனப்படுகொலையிலும் இனச்சுத்திகரிப்பிலும் ஈடுபடுகின்றது என இஸ்ரேலின் முன்னாள் பாதுகாப்பு அமைச்சர் மோசே யலூன் குற்றம்சாட்டியுள்ளார். ரெசெட் பெட் வானொலி நிலையத்திற்கான பேட்டியில் அவர் இதனை தெரிவித்துள்ளார். இஸ்ரேலிய அரசாங்கம் தனது படையினரிற்கு உயிராபத்தை ஏற்படுத்துகின்றது. சர்வதேச குற்றவியல் நீதிமன்றத்தின் வழக்குகளை அவர்கள் எதிர்கொள்ளும் நிலையை ஏற்படுத்துகின்றது என அவர் தெரிவித்துள்ளார். வடகாசாவில் நடவடிக்கையில் ஈடுபட்டுள்ள கொமாண்டோக்கள் சார்பில் நான் பேசுகின்றேன், அங்கு யுத்த குற்றங்கள் இழைக்கப்படுகின்றன என இஸ்ரேலின் முன்னாள் பாதுகாப்பு அமைச்சர் தெரிவித்துள்ளார். இதேவேளை …
-
- 1 reply
- 251 views
- 1 follower
-
-
தமிழர்களின் தன்மானத்திற்கு அறைகூவல் இனியும் தயக்கம் ஏன்? - பூங்குழலி தமிழகத்தின் மய்யத்தில் இருக்கும் தமிழர்களின் பாரம்பரியம் மிக்க சிதம்பரம் நடராசர் கோயிலில் மாபெரும் போராட்டத்திற்கு பின் ஒரு வழியாக தேவாரம் பாடப்பட்டது. உண்மை.. சிற்றம்பல மேடையில் தேவாரம் முழங்கியது. ஆனால் இது உண்மையிலேயே தமிழ் வழிபாட்டு ரிமைக்குக் கிடைத்த வெற்றியா? சிதம்பரம் நடராசர் கோவில் பல நூற்றாண்டு பழமையானது. பன்னெடுங் காலமாக சைவர்களுக்கு (சிவனை வழிபடுபவர்கள்) இதுதான் முக்கிய வழிபாட்டு தலமாக இருக்கிறது. வரலாற்று ரீதியாகவும் சிதம்பரம் கோயில் முக்கியத்துவம் வாய்ந்தே இருந்தது. சோழ மன்னர்களின் முடி சூட்டு விழா சிதம்பரம் கோயிலிலேயே நடந்ததாக வரலாற்று ஆவணங்கள் கூறுகின்றன. பிற…
-
- 7 replies
- 3.9k views
-
-
இன்றைய நிகழ்ச்சியில்… - ஒரு வருடத்துக்கு முன்னதாக பெஷாவர் பள்ளிக்கூடத்தில் படுகொலை செய்யப்பட்ட சுமார் நூற்று ஐம்பது பேரை பாகிஸ்தான் நினைவு கூருகிறது. - முஸ்லிம்கள் தொடர்பான தமது நிலைபாட்டை நியாயப்படுத்துகிறார் டோனல்ட் டிரம்ப். ஆனால் அவரது வாதத்தால் கஷ்டங்களைச் சந்திப்பதாக முறையிடுகின்றனர் முஸ்லிம்கள்! - கொரிய நிறுவனம் ஊழியர்களுக்கு நடத்தும் சவப்பெட்டி சடங்கு குறித்த காணொளி.
-
- 0 replies
- 367 views
-
-
‘SUZUKI மோட்டர்ஸ்’ நிறுவனத்தின் ஒசாமு சுசுகி காலமானார்! சுசுகி மோட்டர்ஸ் நிறுவனத்தின் முன்னாள் தலைவரும் இந்திய கார் சந்தையில் பெரும் தாக்கத்தை ஏற்படுத்திய தொழிலதிபருமான ஒசாமு சுசுகி, தனது 94ஆவது வயதில் காலமானார். லிம்போமா நோயால் பாதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வந்த அவர், கடந்த டிசம்பர் 25ஆம் திகதி உயிரிழந்ததாக அந்நிறுவனம் தரப்பில் தெரிவித்துள்ளது. ஜப்பான் நாட்டின் கெய்ரோவில் பிறந்த ஒசாமு, உலகப் புகழ் பெற்ற சுசுகி மோட்டார்ஸ் குழுமத்தின் நிறுவனர் குடும்பத்துடன் திருமணம் செய்த பின், அந்த தொழிலில் முன்னணி நபராக செயலாற்ற தொடங்கினார். 1958ஆம் ஆண்டு சுசுகி குழும தொழிலில் சேர்ந்த அவர், 1978இல் நிறுவனத்தின் தலைவரானார். 1982ஆம் ஆண்டு அவர் இந்திய ஓட்டோமொபைல் சந்தைய…
-
- 0 replies
- 270 views
-
-
நியூஸிலாந்திலிருந்து புறப்பட்டபோது 8 நிமிட நேரம் தவறான திசையில் பறந்த மலேஷிய எயார்லைன்ஸ் விமானம் நியூஸிலாந்திலிருந்து மலேஷியாவுக்குப் புறப்பட்ட மலேஷிய எயார்லைன்ஸ் விமானமொன்று 8 நிமிட நேரம் தவறான திசையில் சென்றுகொண்டிருந்த சம்பவம் கடந்த வியாழக்கிழமை இடம்பெற்றுள்ளது. விமானப் போக்குவரத்து கட்டுப்பாட்டாளர்களுக்கு மலேஷிய எயார்லைன்ஸ் நிறுவனம் தவறான பயணத்திட்டத்தை வழங்கியமையே இதற்குக் காரணமாகும். மலேஷிய எயார்லைன்ஸின் பிளைட் எம்.எச். 132 எனும் விமானம், கடந்த வியாழக்கிழமை காலை நியூஸிலாந்தின் ஆக்லாந்து நகரிலிருந்து மலேஷியாவின் கோலாலம்பூர் …
-
- 0 replies
- 461 views
-
-
ரஷ்யாவுடனான 30 நாள் போர் நிறுத்தத்திற்கு தயார் – உக்ரேன் இணக்கம்! சவுதி அரேபியாவில் அமெரிக்கா-உக்ரேன் இடையே நடந்த ஒரு நாள் பேச்சுவார்த்தைக்குப் பின்னர், அமெரிக்கா முன்மொழிந்த ரஷ்யாவுடன் உடனடியான 30 நாள் போர் நிறுத்தத்தை ஏற்கத் தயாராக இருப்பதாக கெய்வ் தெரிவித்துள்ளது. அமெரிக்க வெளிவிகாரச் செயலாளர் மார்கோ ரூபியோ, இந்த வாய்ப்பை ரஷ்யாவிடம் முன்வைக்கவுள்ளதாக குறிப்பிட்டுள்ளார். அதேநேரம், “நேர்மறையான” திட்டத்திற்கு ரஷ்யாவை ஒப்புக்கொள்ள வைப்பது இப்போது அமெரிக்காவின் பொறுப்பாகும் என்று உக்ரேன் ஜனாதிபதி வோலோடோமிர் ஜெலென்ஸ்கி கூறியுள்ளார். ஜெட்டாவில் செவ்வாயன்று (11) நடந்த பேச்சுவார்த்தை, ஓவல் அலுவலகத்தில் ஜெலென்ஸ்கிக்கும் அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்பிற்கும் இடையிலான முன்னதாக …
-
-
- 5 replies
- 495 views
- 1 follower
-
-
டெசோ மாநாடு ஒத்திவைப்பு .. மேனன் மூலமாக இந்தியாவுக்கு ராஜபக்சே கொடுத்த நெருக்குதல் காரணமா? சென்னை: விழுப்புரத்தில் நடப்பதாக முன்பு அறிவிக்கப்பட்டிருந்த டெசோ மாநாட்டை ஒத்தி வைத்து விட்டது திமுக. இதற்கு சமீபத்தில் இலங்கை சென்றிருந்த சிவசங்கர மேனனிடம், ராஜபக்சே செய்த எச்சரிக்கை அல்லது கொடுத்த நெருக்கடியே காரணமாக இருக்கலாம் என்று கருதப்படுகிறது. விழுப்புரத்தில் ஆகஸ்ட் 5ம் தேதி டெசோ மாநாடு நடைபெறும் என்று திமுக அறிவித்திருந்தது. இதற்கான ஏற்பாடுகளும் முடுக்கி விடப்பட்டிருந்தன. வரவேற்புக் குழுவும் ஸ்டாலி்ன் தலைமையில் அமைக்கப்பட்டிருந்தது. அத்தனை ஏற்பாடுகளும் பிரமாண்டமாக நடந்து வந்த நிலையில் திடீரென அதை சில வாரங்களுக்கு ஒத்தி வைத்து விட்டது திமுக. அதாவது மாநாடு…
-
- 3 replies
- 746 views
-
-
மெக்ஸிக்கோவின் மத்திய மாநிலமான குவானாஜுவாடோவில் (Guanajuato) கடந்த ஒரு வார காலப் பகுதியில் 12 பொலிஸ் அதிகாரிகள் பாதாள உலக குழுவினரால் கொலை செய்யப்பட்டுள்ளதாக சர்வதேச ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன. கொல்லப்பட்டவர்களில் ஒருவரான மரியா சோனியா அரேலானோ என்ற 47 வயதுடைய பெண் பொலிஸ் அதிகாரி, அவரது கணவர் மற்றும் மகனுடன் இராபுவாடோ என்ற நகரில் அவரது வீட்டில் வைத்து ஆயுதமேந்தியவர்களால் கடந்த செவ்வாய்க்கிழமை கடத்தப்பட்டார். அவரது 27 வயதுடைய மகன் மற்றும் கணவர் விடுவிக்கப்பட்ட நிலைலயில் அவர் உயிரிழந்த நிலையில் வீதியோரத்தில் சடலமாக மீட்க்கப்பட்டுள்ளார். https://www.virakesari.lk/article/71170
-
- 1 reply
- 573 views
-
-
நாட்டை விட்டு தப்பினார் விஜய் மல்லையா! விஜய் மல்லையா இந்தியாவில் இல்லை என்றும், கடந்த மார்ச் 2-ம் தேதியன்றே நாட்டை விட்டு வெளியேறி விட்டதாகவும் மத்திய அரசு, உச்ச நீதிமன்றத்திடம் தெரிவித்துள்ளது. நாட்டை விட்டு தப்பியுள்ள விஜய் மல்லையா, ரூ. 7 ஆயிரம் கோடிக்கு மேல், இந்தியாவின் 17 க்கும் மேற்பட்ட பொதுத்துறை வங்கிகளுக்கு கடன் பாக்கி வைத்துள்ளார். கடன் வழங்கிய வங்கிகள் இணைந்து, உச்ச நீதிமன்றத்தில் மனு ஒன்றைத் தாக்கல் செய்திருந்தன. அதில், விஜய் மல்லையாவின் பாஸ்போர்ட்டை பறிக்க வேண்டுமென்று கூறப்பட்டிருந்தது. இந்த மனு இன்று உச்ச நீதிமன்றத்தில் விசாரணைக்கு வந்தது. வழக்கு விசாரணையின் போது, மத்திய அரசின் வழக்கறிஞர் முகுல் ரோகத்கி, விஜய் மல்லையா கட…
-
- 23 replies
- 2.9k views
-
-
Published By: RAJEEBAN 31 MAY, 2025 | 02:46 PM இலங்கை ருவாண்டா ஸ்ரெப்ரெனிகாவில் நாங்கள் (ஐநா) உரிய தருணத்தில் செயற்படவில்லை உரிய தருணத்தில் எச்சரிக்கை விடுக்கவில்லை என உலகம் பின்னர் தெரிவித்தது என ஐக்கியநாடுகளின் மனிதாபிமான விவகாரங்களிற்கான தலைவர் டொம் பிளெச்சர் பிபிசியிடம் தெரிவித்துள்ளார். ஐக்கிய நாடுகள் பாதுகாப்பு சபைக்கான மே 14ம் திகதி உரையில் பிளெச்சர் காசாவில் இனப்படுகொலையை தடுத்து நிறுத்துவதற்கு பாதுகாப்பு சபை முன்வரவேண்டும் என வேண்டுகோள் விடுத்திருந்தார். அவர் ஏன் இவ்வாறான வேண்டுகோளை விடுத்தார் என்ற பிபிசி செய்தியாளரின் கேள்விக்கு பதிலளித்துள்ள பிளெச்சர் காசாவில் பலவந்தமாக இடம்பெயரச்செய்தல் குறித்து தகவல்கள் கிடைக்கின்றன பட்டினி குறித்து தகவல்கள் கிடைக்கின்றன சி…
-
- 1 reply
- 255 views
- 1 follower
-
-
சென்னை, தமிழ்த்திரைப்பட தயாரிப்பாளர் சங்கத் தேர்தலில் போட்டியிடும் நடிகை ராதிகாவுக்கும் மற்றொரு தயாரிப்பாளருக்கும் இடையே ஏற்பட்ட வாக்குவாதம் முற்றி கைகலப்பு ஏற்படும் சூழ்நிலை உருவானதால் பெரும் பதற்றம் ஏற்பட்டது. தக்க நேரத்தில் பொலிஸார் தலையிட்டு தடுத்ததை அடுத்து பெரும் மோதல் தவிர்க்கப்பட்டது. தமிழ் திரைப்பட தயாரிப்பாளர்கள் சங்கத்தின் நிர்வாகிகளை தேர்ந்தெடுப்பதற்கான தேர்தல் பிலிம் சேம்பரில் நேற்று நடைபெற்றது. செயலாளர் பதவிக்கு போட்டிடும் கேயார், நடிகை ராதிகா ஆகியோர் அதன் பின்னர் வாக்களித்தனர். நடிகை ராதிகா வாக்களித்து விட்டு வெளியே வந்தபோது, ராம நாராயணன் அணியை சேர்ந்த கே.பி. பிலிம்ஸ் பாலு வாக்களிக்க உள்ளே வந்தார். கடந்த ஒருவார காலமாக தேர்தல் பிரசார மேடைகளில் பாலு…
-
- 9 replies
- 3.5k views
-
-
சர்வதேச கடல் எல்லை விதிமுறைகளை மீறி மீன்பிடித்த குற்றத்துக்காக, 86 இந்திய மீனவர்களை பாகிஸ்தான் கடல் பாதுகாப்பு முகமை கைது செய்தது. இவர்கள் கராச்சியில் கடந்த ஓராண்டாக சிறையில் அடைக்கப்பட்டுள்ளனர்.இவர்களை தற்போது விடுதலை பாகிஸ்தான் அரசு விடுதலை செய்துள்ளது. விடுதலை செய்யப்படும் 86 இந்திய மீனவர்களும் நாளை வாகா எல்லைக்குள் வருவார்கள் என்று எதிர்ப்பார்க்கப்படுகிறது. அதன்பிறகு ஓரிரு நாட்களில் வீடுகளுக்கு அனுப்பி வைக்கப்படுவார்கள்.இது குறித்து கராச்சி போலீஸ் அதிகாரி ராஜா மும்தாஜ் கூறுகையில், 86 இந்திய மீனவர்களை இன்று விடுதலை செய்துள்ளோம். மேற்கொண்டு 363 இந்திய மீனவர்கள் பாகிஸ்தான் சிறைகளில் உள்ளனர் என்று தெரிவித்தார்.முன்னதாக இம்மாதம் 6-ம் தேதி 86 இந்திய மீனவர்கள் மற்றும் ஒரு கை…
-
- 0 replies
- 263 views
-
-
மனிதனால் உருவாக்கப்பட்ட பட்டினியால் பெரும் துன்பத்தில் காசா - உலக சுகாதார ஸ்தாபனத்தின் தலைவர் Published By: Rajeeban 24 Jul, 2025 | 10:54 AM மனிதனால் உருவாக்கப்பட்ட பட்டினி நிலையால் காசா துன்பத்தில் சிக்குண்டுள்ளது என உலக சுகாதாரஸ்தாபனத்தின் தலைவர் டெட்ரோல் அதனோம் கெப்ரயேசஸ் தெரிவித்துள்ளார். காசாவிற்குள் உணவுப்பொருட்கள் செல்வதை தடுக்கும் மனித செயலால் உருவாக்கப்பட்ட பட்டினியால் காசா துன்பத்தில் சிக்குண்டுள்ளது என அவர் தெரிவித்துள்ளார். பெரும்பட்டினி நிலை என இதனை அழைப்பதை தவிர வேறு எப்படி இதனை அழைப்பீர்கள் என எனக்கு தெரியாது,ஆனால் இது மனிதனால் உருவாக்கப்பட்டது அது மிகத்தெளிவான விடயம் என அவர் தெரிவித்துள்ளார். போரினால் பாதிக்கப்பட்ட பகுதிக்கான உணவுவிநியோகம் மக்கள் உயிர்வாழ…
-
- 1 reply
- 161 views
- 1 follower
-
-
கேரளா... கோவில் தீ விபத்தில், 100 பேர் பலி - காணொளி. திருவனந்தபுரம்: கேரள மாநிலம் கொல்லம் அருகே நடைபெற்ற கோயில் வான வேடிக்கை நிகழ்ச்சியின்போது தீ விபத்து ஏற்பட்டு நூற்றுக்கும் மேற்பட்டோர் பரிதாபமாக உயிரிழந்தனர். இந்த சம்பவம் கேரளாவில் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. விபத்தில் உயிரிழந்தோர் குடும்பத்திற்கு மத்திய அரசு தலா ரூ.2 லட்சமும், மாநில அரசு ரூ.10 லட்சமும் வழங்க உத்தரவிட்டுள்ளது. -தற்ஸ் தமிழ்-
-
- 1 reply
- 449 views
-
-
மருந்து வாங்குவதற்கான தடைகளை அமெரிக்கா நீக்க வேண்டும்: கொரோனாவால் சிக்கித் தவிக்கும் ஈரான்! ஈரானுக்கு தேவையான பொருட்களை வாங்க, மருந்து வாங்குவதற்கான தடைகளை அமெரிக்கா நீக்க வேண்டும் என ஈரான் ஜனாதிபதி ஹசன் ரவ்ஹானி கோரியுள்ளார். உலகையே அச்சுறுத்திவரும் கொரோனா வைரஸ் தற்போது ஈரானிலும் மிக வேகமாக பரவி உயிரிழப்புக்களை ஏற்படுத்தி வருகின்றது. இதனால், பொருளாதார தடைக்கு உள்ளாகியுள்ள ஈரான், மருந்து உள்ளிட்ட பொருட்களை வாங்குவதில் கடும் நெருக்கடிகளை எதிர்கொண்டுள்ளது. இந்நிலையில், தேவையான பொருட்களை வாங்க, மருந்து வாங்குவதற்கான தடைகளை நீக்க வேண்டுமென அமெரிக்காவிடம் ஈரான் ஜனாதிபதி ஹசன் ரவ்ஹானி கோரிக்கை விடுத்துள்ளார். இதுகுறித்து அவர் கூறுகையில், ‘கொரோனா நாட்டின் அ…
-
- 0 replies
- 476 views
-
-
உலகின் செல்வாக்குமிக்க 100 பேர் : டைம் இதழ் வௌியிட்டது (Full List) inShare அமெரிக்காவின் புகழ்பெற்ற டைம் இதழ் உலகின் செல்வாக்குமிக்க 100 பேர் கொண்ட பட்டியலை வெளியிட்டுள்ளது. இந்தப் பட்டியலில் பேஸ்புக் நிறுவனர் மார்க் ஷக்கர்பர்க் மற்றும் அவரது மனைவி ப்ரிசில்லா ச்சான், ஒஸ்கார் விருது வென்ற லியனார்டோ டிகாப்ரியோ, போப் பிரான்ஸிஸ், ஹிலரி கிளின்டன், ஆங் சான் சூ கி, பராக் ஒபாமா ஆகியோர் பெயரிடப்பட்டுள்ளனர். இந்திய நடிகை பிரியங்கா சோப்ராவும் இந்தப் பட்டியலில் இடம்பிடித்துள்ளார் என்பதுடன், டைம் இதழின் ஆறு அட்டைப் படங்களின் ஒன்றில் பிரியங்கா ச…
-
- 1 reply
- 672 views
-
-
இன்றைய நிகழ்ச்சியில் - ஐந்து அமெரிக்க மாநிலங்களில் பெருவெற்றி பெற்ற டொனால்ட் ட்ரம்ப், இதன் மூலம் குடியரசுக் கட்சி வேட்பாளராக தான் தேர்வாகிவிட்டதாகக் கூறுகிறார். - ஆசியாவில் கடும் வறட்சி. தாய்லாந்தில் பாதிக்கப்பட்ட பகுதிகளுக்கு சென்றுவந்த பிபிசி குழு தரும் தகவல்கள். - தான்சானியாவில் அவமானமாக பார்க்கப்படும் ஆட்டிசம் நோயாளிகள். பாதிக்கப்பட்டவர்களுக்கு கல்வி மற்றும் பராமரிப்பு வழங்க போதுமான வசதிகள் கிடையாது.
-
- 0 replies
- 519 views
-
-
அமெரிக்க மக்களை அழிக்க முடிவெடுத்து விட்டாரா? - லாக்-டவுனை நீக்க அதிபர் ட்ரம்ப் திட்டம்: காற்றில் பறந்த உலக சுகாதார அமைப்பின் எச்சரிக்கை அமெரிக்க அதிபர் டொனால்ட் ட்ரம்ப் : கோப்புப்படம் வாஷி்ங்டன், அமெரிக்காவில் பல்வேறு மாகாணங்களில் அமல்படுத்தப்பட்டுள்ள லாக்டவுனை விரைவில் நீக்கும் வகையில் முழுமையான திட்டம் ஆலோசிக்கப்பட்டு வருகிறது என்று அதிபர் டொனால்ட் ட்ரம்ப் தெரிவித்துள்ளார். கரோனா வைரஸின் மையப் பிடிக்குள் சிக்கி அமெரிக்கா நாள்தோறும் ஆயிரக்கணக்கான உயிர்களை இழந்து வருகிறது, லட்சக்கணக்கானோர் பாதிக்கப்பட்டு வருகின்றனர். கரோனா பாதிப்பிலிருந்து அந்த நாடுமுழுமையாக மீளவில்லை.இதுபோன்ற நேரங்களில் லாக்டவுனை நீக்குவதே ஆபத்தானது, அதிலும் பாதிப்பி…
-
- 3 replies
- 556 views
-
-
பெண் அரசியல்வாதி இல்ஹான் ஓமர் குறித்து பரவும் சர்ச்சைக்குரிய விவகாரம் உண்மையானால், சிறை அல்லது நாடுகடத்தப்படும் சூழலை அவர் எதிர்கொள்ள நேரிடும் என செனட்டர் டெட் க்ரூஸ் எச்சரிக்கை விடுத்துள்ளார். வெவ்வேறு சட்டங்களின் கீழ் முற்போக்கு பெண் நாடாளுமன்ற உறுப்பினரான இல்ஹான் ஓமர், தனது சகோதரர் அமெரிக்கக் குடியுரிமை பெறும் பொருட்டு அவரைத் திருமணம் செய்துகொண்டார் என்ற குற்றச்சாட்டுகள் பரவலாக எழுந்துள்ள நிலையிலேயே செனட்டர் டெட் க்ரூஸ் கடுமையாக விமர்சனம் முன்வைத்துள்ளதுடன் எச்சரிக்கையும் விடுத்துள்ளார். சமூக ஊடகத்தில் ஒரு கட்டுரையைப் பகிர்ந்துள்ள க்ரூஸ், கூறப்படும் போலித் திருமணத்திற்காக ஓமரை குற்றம் சாட்டியுள்ளார். மேலும், வெளிவரும் குற்றச்சாட்டுகள் உண்மையாக இருந்தால், ஓமர் மூன்று…
-
- 0 replies
- 331 views
-
-
சந்தைகளும் பொருளாதார யதார்த்தங்களும் கொந்தளிப்பான 2025 ஐ உருவாக்கியதால் ஒரு குழப்பமான 'அதிக வீழ்ச்சி' வணிக நிருபர் டேனியல் ஜிஃபர் எழுதியது வணிகம் தலைப்பு:ஆஸ்திரேலியா ரிசர்வ் வங்கி செவ்வாய் 23 டிசம்பர்டிசம்பர் 23 செவ்வாய் வட்டி விகிதங்கள் குறைந்தன, பணவீக்கம் ஆச்சரியப்படத்தக்க வகையில் தொடர்ந்தது, AI பில்லியன்கள் மற்றும் டிரில்லியன்கள் தொடர்ந்து பாய்ந்தன: உலக பங்குச் சந்தைகளில் ஒரு விருந்து இருந்தது. ( Unsplash : Krys Amon / உரிமம் ) இணைப்பு நகலெடுக்கப்பட்டது கட்டுரையைப் பகிரவும் AI. சந்தை பதிவுகள். கட்டணங்கள். பெங்குவின். TACO. உலகளாவிய வர்த்தகத்தின் சர்வதேச கட்டமைப்பு துண்டிக்கப்பட்டதால், இது பொருளாதார அதிர்ச்சிகள் மற்றும் ஏற்ற இறக்கங்களின் ஒரு பெரிய ஆண்டாகும். மற்ற முக்க…
-
- 2 replies
- 249 views
-
-
கிரீன்லாந்தை கைப்பற்றுவதற்கு அமெரிக்காவுக்கு எந்த உரிமையும் இல்லை – டென்மார்க் பிரதமர் 05 January 2026 "கிரீன்லாந்தை கைப்பற்றுவது தொடர்பான அச்சுறுத்தல்களை நிறுத்துங்கள்" என்று டென்மார்க் பிரதமர் டொனால்ட் ட்ரம்பிடம் கூறியுள்ளார். மேலும் "அமெரிக்கா கிரீன்லாந்தை கைப்பற்ற வேண்டிய அவசியம் பற்றி பேசுவதில் எந்த அர்த்தமும் இல்லை" என்றும் , டென்மார்க் இராச்சியத்தில் உள்ள மூன்று நாடுகளில் எதையும் இணைக்க அமெரிக்காவிற்கு எந்த உரிமையும் இல்லை" என்றும் டென்மார்க் பிரதமர் தெரிவித்துள்ளார். கிரீன்லாந்தின் இயற்கை வளங்கள் மற்றும் அதன் முக்கியமான புவியியல் இருப்பிடம் காரணமாக அமெரிக்கா அதன் மீது ஆர்வம் காட்டினாலும், அங்குள்ள மக்கள் அமெரிக்காவுடன் இணைவதை விரும்பவில்லை. அமெரிக்காவின் இத்தக…
-
-
- 9 replies
- 783 views
- 1 follower
-
-
வங்கதேசத் தலைநகர் டாக்காவில் உள்ள ஒரு கஃபேயில், இஸ்லாமியவாதிகள் என்று சந்தேகிக்கப்படுபவர்கள் நடத்தியதாக சந்தேகிக்கப்படும் தாக்குதலில் பலியான 20 பேருமே வெளிநாட்டினர் என்று வங்கதேச அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். நேற்றிரவு டாக்காவில் உள்ள ஹோலே ஆர்டிசன் பேக்கரி கஃபேயில் ஆயுதம் தாங்கிய நபர்கள் முற்றுகையிட்ட 12 மணி நேரத்துக்கு பிறகு, பாதுகாப்பு படையினர் அந்த கஃபேயில் நுழைந்தனர். தாக்குதல் நடத்திய ஆறு பேர் கொல்லப்பட்டதாகவும், ஒருவர் கைது செய்யப்பட்டதாகவும் ஒரு அரசாங்க பேச்சாளர் தெரிவித்தார். உயிரிழந்தவர்களில் பெரும்பாலானோர் இத்தாலி மற்றும் ஜப்பான் ஆகிய நாடுகளை சேர்ந்தவர்கள் ஆவர். இது குறித்து பிரதமர் ஷேக் ஹசீனா தொலைக்காட்சியில் வெளியிட்டுள்ள அறிக்கையில் ''இது ஒ…
-
- 1 reply
- 442 views
-
-
தமிழகத்துக்கு காவிரி நதியிலிருந்து 10,000 கன அடி நீரை கர்நாடகம் திறந்து விட வேண்டும் என்று இந்திய உச்சநீதிமன்றம் புதன்கிழமை தீர்ப்பளித்தும், வியாழக்கிழமை வரை கர்நாடகம் தண்ணீர் திறந்து விடவில்லை. உச்சநீதிமன்றத் தீர்ப்பு குறித்து வியாழனன்று அம்மாநில சட்டசபையிலும் விவாதிக்கப்பட்டது. அந்த விவாதத்தின்போது தமிழ்நாட்டுக்கு தண்ணீர் திறந்துவிடக் கூடாது என்று காங்கிரஸைச் சேர்ந்த எதிர்கட்சித் தலைவர் சித்தராமைய்யா உட்பட எதிர்கட்சியின் உறுப்பினர்கள் வாதிட்டனர். ஆனால் தமிழ்நாட்டுக்கு தண்ணீரை திறந்துவிடுவது அல்லது இல்லை என்று எந்தவிதமான முடிவையும் முதலமைச்சர் ஜெகதீஷ் ஷெட்டர் சட்டசபையில் வெளிப்படையாக அறிவிக்கவில்லை. தமிழகத்துக்கு கர்நாடகம் காவிரி தண்ணீரை அளிக்காது என்று முதலமைச்சர…
-
- 2 replies
- 439 views
-