Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

உலக நடப்பு

உலகச் செய்திகள் | காலநிலை

செய்திகள் இணைப்போர் கவனத்துக்கு!

உலக நடப்பு பகுதியில் உலகச் செய்திகள், காலநிலை செய்திகள் இணைக்கப்படலாம்.

முக்கியமான/அவசியமான தூரகிழக்காசிய, ஐரோப்பிய, அமெரிக்க, ஆபிரிக்க, அவுஸ்திரேலிய செய்திகள், உலகக் காலநிலை பற்றிய செய்திகள் மாத்திரம் இணைக்கப்படல் வேண்டும். இந்தியச் செய்திகளை புதிய பிரிவான அயலகச் செய்திகள் பகுதியில் இணைக்கலாம். நாணயமாற்று சம்பந்தமான செய்திகளை வாணிப உலகம் பகுதியில் இணைக்கலாம்.

  1. காசா மீது இஸ்ரேல் மேற்கொண்ட தாக்குதலில் சுமார் 91 பேர் 21 Sep, 2025 | 11:22 AM இஸ்ரேலியப் படைகள் நேற்றையதினம் காசாவில் 91 பாலஸ்தீனியர்களைக் கொன்றதாக சர்வதேச ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன. இதில் பிரபல வைத்தியரின் குடும்ப உறுப்பினர்கள் மற்றும் வடக்கு காசா நகரத்திலிருந்து தப்பிச் செல்லும் லொறியில் இருந்த நான்கு பேர் உள்ளிட்டோரும் அடங்குவதாக அந்த நாட்டு அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். சனிக்கிழமை (நேற்று) நடந்த கொலைகள், இஸ்ரேலியப் படைகள் காசா நகரத்தைக் கைப்பற்றவும், தெற்கில் உள்ள செறிவு மண்டலங்களுக்குள் மக்களைத் தள்ளவும் இடைவிடாத வான்வழி மற்றும் தரைவழித் தாக்குதலைத் தொடர்ந்தும் மேற்கொண்டனர். இஸ்ரேலியப் படைகள் குடியிருப்பு வீடுகள், பாடசாலைகள் தங்குமிடங்களாக மாற்றப்பட்ட கூடாரங்க…

  2.  பிலிப்பைன்ஸ் ஜனாதிபதியானார் 'கிழக்கின் ட்ரம்ப்' கிழக்கின் ட்ரம்ப் (Trump of the East) என விமர்சகர்களால் அழைக்கப்படும் சர்ச்சைக்குரிய அரசியல்வாதியான றொட்ரிகோ டிட்டேர்ட்டே, அந்நாட்டின் அடுத்த ஜனாதிபதியாகத் தெரிவுசெய்யப்பட்டுள்ளார். நேற்று இடம்பெற்ற ஜனாதிபதித் தேர்தலில், அதிகமான வாக்குகளைப் பெற்றதையடுத்தே, இந்த வெற்றியை அவர் பெற்றுள்ளார். அந்நாட்டின் அரசியலமைப்பின்படி, ஜனாதிபதியாக 4 ஆண்டுகள் பதவி வகித்த ஒருவர், அப்பதவிக்கு மீளப் போட்டியிட முடியாது என்பததால், தற்போதைய ஜனாதிபதியான பெனிக்னோ அக்கினோ, ஜனாதிபதித் தேர்தலில் போட்டியிட்டிருக்கவில்லை. இந்நிலையில் தேர்தலில் போட்டியிட்ட 71 வயதான றொட்ரிகோ டிட்டேர்ட்…

  3. நியூயார்க் இரட்டைக் கோபுர தகர்ப்பு சம்பவத்தில் பாதிக்கப்பட்டவர்களுக்கு, 600 கோடி அமெரிக்க டாலர்கள் இழப்பீடாக வழங்க வேண்டும் என ஈரான் மற்றும் அல் காய்தா, தலிபான் உள்ளிட்ட அமைப்புகளுக்கு அமெரிக்க நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. நியூயார்க் நகரில் இரட்டைக் கோபுர தாக்குதலில் மூவாயிரத்துக்கும் மேற்பட்டோர் உயிரிழந்தனர். பாதிப்புக்குள்ளானவர்களில் 47 பேரின் குடும்பத்தினர், இழப்பீடு கோரி அமெரிக்க நீதிமன்றத்தில் வழக்குத் தொடர்ந்தனர். வழக்கை விசாரித்த நீதிபதி, ஜார்ஜ் டேனியல்ஸ் புதன்கிழமை தீர்ப்பு வழங்கினார். இதில், ஈரான் மற்றும் தலிபான், அல் காய்தா, லெபானன் பயங்கரவாத அமைப்பான ஹிஸ்புல்லா ஆகியவை, இரட்டைக் கோபுர தாக்குதலில் பாதிக்கப்பட்டவர்களின் குடும்பத்திற்கு 600 கோடி அமெரிக்க டாலர்கள் (…

  4. ஜெர்மனியில் கரோனா வைரஸ் தொற்று பாதித்தவர்கள் எண்ணிக்கை 90,000 - ஐ கடந்துள்ளது. இதுகுறித்து ஜெர்மனியின் சுகாதாரத் துறை அமைச்சகம் கூறும்போது, “ஜெர்மனியில் கரோனா வைரஸால் பாதிக்கப்பட்டவர்கள் எண்ணிக்கை 90,000 - ஐ கடந்துள்ளது. சனிக்கிழமை மட்டும் சுமார் 5,600 பேருக்கு கரோனா தொற்று உறுதிப்படுத்தப்பட்டுள்ளது. மேலும் கடந்த 24 மணி நேரத்தில் 147 பேர் பலியாகி உள்ளனர். ஜெர்மனியில் இதுவரை கரோனா வைரஸ் தொற்றுக்கு 1,444 பேர் பலியாகி உள்ளனர். 26,000க்கும் அதிகமானவர்கள் கரோனா தொற்றிலிருந்து குணமடைந்துள்ளனர்” என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. ஜெர்மனியில் கரோனா வைரஸ் வேகமாகப் பரவி வந்தாலும் நோயாளிகளின் உயிரிழப்பை ஜெர்மனி வெற்றிக்கரமாக தடுத்து வருகிறது. மேலும் அந்நாட்டைச் சேர்ந்…

  5. நிலைமைகள் மெதுமெதுவாக முன்னேற்றம் கண்டுவந்தாலும், நெருக்கடியில் இருந்து வெளியேறவில்லை எனத் தெரிவித்துள்ள பிரதமர் எடுவார்ட் பிலிப், வைரசுடன் நீண்டகாலத்துக்கு வாழப்பழகிக் கொள்ள வேண்டிய கட்டத்துக்கு நாம் வந்துள்ளோம் என மே11க்கு பின்னராக கடைப்பிடிக்க வேண்டிய செயற்பாடுகள், அரசாங்கத்தின் நிலைப்பாடுகள் தொடர்பில் நாட்டு மக்களுக்கான முக்கிய செய்திகளை சுகாதாரத்துறை அமைச்சர் ஒலிவியே வெறான்வுடன் இணைந்து ஊடகங்களுக்கான சந்திப்பில் தெரிவித்துள்ளார்.தடுப்பமருத்து கண்டுபிடிக்க நிலையிலும், முறையான சிகிச்சைமுறை இனங்காணப்படாத நிலையிலும், முன்னரைப் போன்றதொரு நிலைமை உடனடிச்சாத்தியம் இல்லை எனத் தெரிவித்துள்ள பிரதமர், 2 இருந்து 6 மில்லியன் பிரென்சு குடிமக்களில் வைரஸ் தொற்று உள்ளதென்ற மதிப்பீட்டி…

    • 0 replies
    • 892 views
  6. துப்பாக்கிச் சூட்டில் பிரிட்டன் தொழிற்கட்சி எம்.பி. மரணம் பிரிட்டனின் தொழிற்கட்சியைச் சேர்ந்த நாடாளுமன்ற உறுப்பினரான ஜோ காக்ஸ் துப்பாக்கியால் சுடப்பட்டு பலியானதாக போலீசார் தெரிவித்துள்ளனர். இந்த துப்பாக்கிச் சூட்டிற்கான காரணம் என்ன என்பது இன்னும் தெளிவாக தெரியவில்லை. இந்த சம்பவத்தை தொடர்ந்து ஐரோப்பிய ஒன்றியத்தில் பிரிட்டன் தொடர்வதா வேண்டாமா என்பதற்கான கருத்தறியும் வாக்கெடுப்புக்கான பிரசாரங்களை இரு தரப்பினரும் ரத்து செய்துள்ளனர். நாடாளுமன்றத்தின் தொழிற்கட்சி உறுப்பினரான ஜோ காக்ஸ், தான் ஒரு கூட்டம் நடத்திக் கொண்டிருந்த நூலகத்தின் வெளியே, சண்டை போட்டுக் கொண்டிருந்த இருவரிடையே தலையிட்டார் என்று சம்பவத்தை நேரில் பார்த்த ஒருவர் தெரிவித்துள்ளார்…

  7. ஐரோப்பா கண்டத்தில் உள்ள நாடுகள் தங்கள் சமூக, பொருளாதார வளர்ச்சியை கருத்தில் கொண்டு ‘ஐரோப்பிய யூனியன்’ என்ற கூட்டமைப்பை உருவாக்கின. 1993-ம் ஆண்டில் உருவாக்கப்பட்ட ஐரோப்பிய யூனியனில் பிரான்சு, ஜெர்மனி, பெல்ஜியம், பிரிட்டன், இத்தாலி, டென்மார்க், போர்ச்சுக்கல் உள்ளிட்ட 28 நாடுகள் இடம்பெற்று உள்ளன.ஐரோப்பிய யூனியனில் அங்கம் வகிக்கும் நாடுகளில் வசிப்பவர்கள் அந்த அமைப்பில் உள்ள எந்தவொரு நாட்டுக்கும் சென்று வாழலாம்; வேலைவாய்ப்புகளை பெறலாம்; கல்வி கற்கலாம்; தொழில் தொடங்கலாம். இதன் காரணமாக ஐரோப்பா கண்டத்தில் உள்ள பல நாடுகளைச் சேர்ந்தவர்கள் பிரிட்டனில் அதிக அளவில் குடியேற தொடங்கினார்கள். இதனால் தங்களுக்கு பாதிப்பு ஏற்படுவதாக, குறிப்பாக வேலைவாய்ப்பு பறிப…

  8. `உலகின் உயரமான நிதியுதவிப் பெட்டி!’ - உணவு தேவைக்காக விற்கப்பட்ட புர்ஜ் கலீஃபா விளக்குகள் புர்ஜ் கலீஃபா கட்டடத்தின் வெளிப்புறத்தில் இருக்கும் வண்ண விளக்குகள் ஒவ்வொன்றும் விற்பனைக்கு என அறிவிக்கப்பட்டது. இதன்மூலம் 1.2 மில்லியனுக்கும் அதிகமான மக்களுக்குத் தேவையான நிதியைத் திரட்ட முடிவு செய்துள்ளனர். கொரோனா வைரஸ்... கடந்த சில மாதங்களாக உலக மக்கள் உச்சரிக்கும் ஒரு பெயராகிவிட்டது. கொரோனா வைரஸ் காரணமாகக் கொண்டு வரப்பட்ட ஊரடங்கு உத்தரவுகள் உலக நாடுகளின் பெருளாதாரத்தை மிகப்பெரிய அளவில் அசைத்து பார்த்திருக்கிறது. பொருளாதாரத்தை மீண்டும் உயர்த்த உலக நாடுகள் பல்வேறு முயற்சிகளை எடுத்து வருகின்றன. அதன் ஒருபகுதியாகத்தான் தளர்வுகளுடன்கூடிய ஊரடங்கு தற்போத…

    • 1 reply
    • 991 views
  9. கிரீன்லாந்து விவகாரம்: உலக நாடுகளுக்கு டிரம்ப் புதிய மிரட்டல் டேனியல் புஷ் மற்றும் பவுலின் கோலா பட மூலாதாரம்,Chip Somodevilla/Getty கிரீன்லாந்தை இணைக்கும் தனது லட்சியங்களுக்கு ஆதரவளிக்காத நாடுகள் மீது வரிகளை விதிக்கப் போவதாக அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப் மிரட்டியுள்ளார். வெள்ளை மாளிகையில் நடைபெற்ற ஒரு கூட்டத்தில், கிரீன்லாந்து விவகாரத்தில் மற்ற நாடுகள் தனக்கு ஆதரவளிக்கவில்லை என்றால், அவர்கள் மீது வரிகளை விதிக்க முடியும் என்று டிரம்ப் கூறினார். எந்தெந்த நாடுகள் மீது புதிய வரிகள் விதிக்கப்படக்கூடும் என்றோ அல்லது தனது இலக்கை அடைய எந்த அதிகாரத்தைப் பயன்படுத்தப் போகிறார் என்றோ டிரம்ப் குறிப்பிடவில்லை. கிரீன்லாந்து டென்மார்க்கின் கட்டுப்பாட்டில் இருந்தாலும், அதற்குச் சொந்தம…

  10. [size=3][size=4]“பிரான்சை மதிக்காத லஷ்மி மிட்டல் எங்களுக்குத் தேவையில்லை. 2006-ம் ஆண்டு முதல் மிட்டல் சொன்ன பொய்கள் கேவலமானவை. இந்த நாட்டுக்கு கொடுத்த வாக்குறுதிகளை அவர்கள் ஒரு போதும் மதித்ததில்லை” என்கிறார் பிரான்ஸ் நாட்டின் தொழில்துறை புத்துயிர்ப்பு அமைச்சர் அர்னால்ட் மோன்ட்பர்க்.[/size][/size] [size=3][size=4]இந்தியாவில் பிறந்து இங்கிலாந்தில் செட்டில் ஆகியிருக்கும் தொழிலதிபர் லஷ்மி மிட்டல் போர்ப்ஸ் பணக்காரர்களின் பட்டியலில் 21-ம் இடத்தை பிடித்திருப்பவர். மிட்டல் குழுமம் 2006-ம் ஆண்டில் பிரெஞ்சு ஸ்டீல் நிறுவனமான ஆர்சிலரை வாங்கியது. வாங்கும் போது ‘ஆர்சிலர் நிறுவனத்தின் எந்த தொழிற்சாலையையும் மூட மாட்டோம்’ என்றும் ‘தொழிலாளர்களை வேலை நீக்கம் செய்ய மாட்டோம்’ என்றும் பி…

  11. பிலிப்பைன்ஸ் சூறாவளி: உயிரிழந்தோரின் எண்ணிக்கை 475 ஆக உயர்வு பிலிப்பைன்ஸ் நாட்டில் வீசிய சூறாவளியால் உயிரிழந்தோரின் எண்ணிக்கை 475 ஆக உயர்ந்துள்ளது. புயலை தொடர்ந்து ஏற்பட்ட கடும் மழையால், பல இடங்கள் வெள்ளத்தில் மூழ்கியுள்ளன.இந்த புயலால்,மிண்டானோ என்ற தீவு மோசமாகப் பாதிக்கப்பட்டுள்ளது. பிலிப்பைன்ஸ் நாட்டின் தெற்கு பகுதியில் செவ்வாய்க்கிழமை பூபா என்ற சூறாவளி பயங்கரமாக தாக்கியது. அதன்போது மணிக்கு 210 கிலோ மீற்றர் வேகத்தில் காற்று வீசியதுடன் கனமழையும் பெய்ததால் பேரழிவு ஏற்பட்டுள்ளது சுரங்கங்களுக்காக தோண்டப்பட்ட பள்ளங்களில் மழை நீர் பாய்ந்தோடியதால் கடுமையான வெள்ளப்பெருக்கு ஏற்பட்டது. பாதுகாப்புக்காக மக்கள் தங்கியிருந்த பாடசாலை ஒன்றில் வெள்ளம் ஏற்பட்டதால் இதில் சி…

  12. சோமாலிய கடற்கொள்ளையர்களால் கடத்தப்பட்ட மீன்பிடிக் கப்பலே இந்திய கடற்படையால் மூழ்கடிக்கப்பட்டது சோமாலிய கடற்கொள்ளையர்களால் கடத்தப்பட்ட தாய்லாந்து மீன்பிடிக்கப்பல் ஒன்றை மூழ்கடித்ததற்கான தமது முடிவுக்கு ஆதரவாக இந்திய கடற்படை வாதிட்டுள்ளது. அந்த மீன்பிடிக் கப்பலில் இருந்து கடற்கொள்ளையர்கள் தம்மை நோக்கி சுட்டதை அடுத்தே அந்த கப்பலை மூழ்கடிப்பதற்கான முடிவு எடுக்கப்பட்டதாக இந்திய கடற்படை தெரிவித்துள்ளது. அந்தக் கப்பல் மூழ்கடிக்கப்பட்ட போது, அந்தக் கப்பலின் 14 சிப்பந்திகளை கொள்ளையர்கள் அந்தக் கப்பலில் சிறைப்பிடித்து வைத்திருந்ததாக அந்தக் கப்பலின் உரிமையாளர் தெரிவித்துள்ளார். அதிலிருந்தவர்களில் பெரும்பாலானோர் கொள்ளையர்களால் கப்பலில் கட்டி வைக்கப்பட்டிருந்தனர். ஒருவர் ம…

  13. கொரோனா வைரஸ் இன்னும் இங்கிலாந்தில் அழியவில்லை - பிரதமர் போரிஸ் ஜான்சன் கொரோனா வைரஸ் இன்னும் இங்கிலாந்தில் அழியவில்லை என்பதை மக்கள் உணர வேண்டும் என்று பிரதமர் போரிஸ் ஜோன்சன் தெரிவித்துள்ளார். பதிவு: ஜூன் 29, 2020 06:43 AM லண்டன் உலகை தொடர் அச்சத்தில் வைத்திருக்கும் கொரோனாவால் பல்வேறு நாடுகளில் ஊரடங்கு அமலில் உள்ளது. இங்கிலாந்திலும் ஊரடங்கு நடைமுறையில் உள்ள நிலையில், அங்குள்ள மக்கள் சமூக இடைவெளியை கடைப்பிடிக்காமல் கடற்கரைகளிலும், தெருவோர கேளிக்கைகளிலும் ஈடுபடுவதாக புகார் எழுந்துள்ளது. தெற்கு இங்கிலாந்தில் உள்ள போர்ன்மவுத் மற்றும் அதனைச் சுற்றியுள்ள கடற்கரைகளில் நேற்று குவிந்த ஆயிரக்கணக்கான மக்களே இதற்கு சான்றாக அமைந்துள்ளது.இந்நிலையில் வரும் 4-ஆம் த…

  14. உலகின் இளம் பிரதமர் சன்னா மரினுக்கு திடீர் திருமணம்! உலகின் இளம் பிரதமரான பின்லாந்து பிரதமர் சன்னா மரின், அவரது நெருங்கிய நண்பரும், கால்பந்து வீரருமான மார்கஸ் ரெய்கோனனை திருமணம் செய்துள்ளார். 34வயதான சன்னா மரின், மார்கஸ் ரெய்கோனனை உத்தியோகபூர்வ பிரதமரின் இல்லமான கெசராண்டாவில் மணந்ததாக பின்லாந்து அரசாங்கம் ட்வீட் செய்துள்ளது. 16 ஆண்டுகளாக இணைந்து வாழ்ந்து வந்த இவர்களுக்கு, இரண்டரை வயது மகள் உள்ளார் என தெரிவிக்கப்பட்டுள்ளது. அரசாங்கத்தின் வலைத்தளத்தின்படி, தம்பதியரின் குடும்ப நெருங்கிய நண்பர்கள் மற்றும் குடும்பத்தினர் கலந்து கொண்டதாக அசோசியேட்டட் பிரஸ் தெரிவித்துள்ளது. மகிழ்ச்சியான தம்பதியரின் புகைப்படத்தை இன்ஸ்டாகிராமில் பகிர்ந்த மரின், தான் விரும்ப…

  15. புதுடில்லி; பாலியல் வன்கொடுமை தடுப்புச் சட்டத்தில் திருத்தம் செய்வது தொடர்பான கருத்தை தெரிவிப்பதில் காங்கிரஸ் கட்சியினர் காட்டிய அலட்சியத்துக்காக அந்தக் கட்சியின் தலைவர் சோனியா காந்தி தன்னிடம் மன்னிப்பு கேட்டார் என உச்ச நீதிமன்ற முன்னாள் தலைமை நீதிபதி ஜே.எஸ்.வர்மா கூறினார். வர்மா தலைமையிலான மூன்று பேர் குழு பாலியல் வன்கொடுமை தடுப்புச் சட்டத்தில் திருத்தம் செய்வது தொடர்பான பரிந்துரைகளை அண்மையில் மத்திய அரசுக்கு வழங்கியது. சுமார் 630 பக்கங்கள் கொண்ட அவரது அறிக்கையைத் தயாரிக்கும் போது காங்கிரஸ் கட்சியினர் மிகவும் தாமதமாகவும் அலட்சியமாகவும் செயல்பட்டதாக செய்தியாளர்களிடம் கடந்த வாரம் வர்மா கூறியிருந்தார். இது தொடர்பாக தனியார் தொலைக்காட்சிக்கு அளித்த பேட்டியில் காங்கிர…

  16. பிராம்டன் நகரில் உள்ள இரவு விடுதியில் இன்று புதன்கிழமை அதிகாலையில் மூன்று பெண்கள் துப்பாக்கியால் சுடப்பட்ட சம்பவம் அப்பகுதியை மிகுந்த பரபரப்பாக்கியுள்ளது. இந்த துப்பாக்கி சூடு அந்த பெண்களை குறிவைத்து சுடப்பட்டதா? அல்லது வேறு யாரேனும் வைத்து குறிக்கு இவர்கள் தாக்கப்பட்டார்களா? என்பது குறித்து தீவிர விசாரணை நடந்து வருகின்றது. பிராம்டன் நகரில் மிகவும் புகழ்பெற்ற இரவு கிளப் The Office Gentleman Club ஆகும். இங்கு வழக்கமாக ஒவ்வொரு செவ்வாய்க்கிழமை இரவு நேரத்தில் நடைபெறும் Twerk it Tuesdays என்ற நிகழ்ச்சி மிகவும் பிரபலமானது. இந்த நிகழ்ச்சியில் பலர் பங்கேற்று விழா நடந்துகொண்டிருந்தபோது அதிகாலை 1.30 மணியளவில் திடீரென துப்பாக்கி சூடு சத்தம் கேட்டதால் விடுதி பரபரப்புக்கு…

    • 0 replies
    • 497 views
  17. "இலங்கைக்கு எதிரான அமெரிக்க தீர்மானத்தை, மத்திய அரசு ஆதரிக்கா விட்டால், ஐக்கிய முற்போக்கு கூட்டணி அரசில்இருந்து, தி.மு.க., விலகும் சூழ்நிலை உருவாகலாம்' என, அந்தக் கட்சியின் தலைவர் கருணாநிதி விடுத்த மிரட்டலை, காங்கிரஸ் பெரிதாக எடுத்துக் கொள்ளவில்லை. தி.மு.க., ஆதரவை வாபஸ் பெற்றாலும், முலாயம் சிங்கின் சமாஜ்வாதி மற்றும் மாயாவதியின் பகுஜன் சமாஜ் ஆதரவு தொடரும் வரை, அரசுக்கு ஆபத்தில்லை என்பதால், மிகுந்த நம்பிக்கையுடன், காங்., உள்ளது. போர் குற்றங்கள்: இலங்கையில், விடுதலை புலிகளுடன் நடந்த கடைசி கட்ட போரின் போது, பெருமளவில் போர்க் குற்றங்கள் நிகழ்ந்ததாக குற்றம் சாட்டப்படுகிறது. இந்த போர்க் குற்றங்கள் தொடர்பாக, ஐக்கிய நாடுகள் சபையின், மனித உரிமை கமிஷனில், இலங்கைக்கு எதிராக, அமெரிக…

    • 4 replies
    • 580 views
  18. சென்னை: அதிமுகவில் சேர முடிவெடுத்து விட்டதைத் தொடர்ந்து அக்கட்சியின் பொதுச் செயலாளர் ஜெயலலிதாவை பாமக நிறுவனர் டாக்டர் ராமதாஸ் நாளை சந்திப்பார் என்று தெரிகிறது. அதிமுக கூட்டணியில் இணைய நேற்று பாமக பொதுக்குழுக் கூட்டம் சம்மதம் தெரிவித்தது. இதையடுத்து அதிமுக கூட்டணிக்கு வருகிறது பாமக. பொதுக்குழுக் கூட்டம் முடிந்ததும், ஜெயலலிதாவை, ராமதாஸ் சென்று சந்திப்பார் என எதிர்பார்க்கப்பட்டது. மாலை 4 மணிக்கு அப்பாயின்ட்மென்ட் வாங்கப்பட்டிருந்தது. ஆனால் அப்படி எந்த சந்திப்பும் நேற்று நடைபெறவில்லை. அதேசமயம், அதிமுக தரப்பிலிருந்தும் பாமக முடிவு குறித்து எந்தவித ரியாக்ஷனும் வெளியாகவில்லை. இதனால் பாமக தரப்பில் லேசான பீதி பரவியது. ஜெ. போட்ட நிபந்தனை: மத்திய அமைச்சர்கள…

  19. உலகிலேயே முதல் முறையாக கொரோனா வைரஸ் எதிர்ப்பு மருந்தாக கண்டறியப்பட்ட ஃபைசர் தடுப்பூசி, அடுத்த வாரம் 91 வயதை எட்டவிருக்கும் பிரிட்டன் மூதாட்டி மார்கரெட் கீனானுக்கு போடப்பட்டுள்ளது. இது தனக்கு முன்கூட்டியே கிடைத்த பிறந்த நாள் பரிசு போல உள்ளது என்று அவர் தெரிவித்தார். பிரிட்டன் உள்ளூர் நேரப்படி காலை 6.30 மணியளவில் அவருக்கு வைரஸ் தடுப்பூசி போடப்பட்டது. "இந்த தடுப்பூசியை எல்லோரும் போட்டுக் கொள்ள வேண்டும். 90 வயதி் என்னால் இதை போட்டுக் கொள்ள முடியும் என்றால் இது உங்களாலும் முடியும்," என்று கீனான் தெரிவித்தார். பட மூலாதாரம்,PA MEDIA இவரைத…

  20. சுவிட்சர்லாந்து வங்கிகள் இனி பாதுகாத்து வருகின்ற வாடிக்கையாளர்களின் ரகசியக் கொள்கைகளை கைவிட வேண்டும் என்று நிதி ஆலோசகர் லுக் தெவெனோஸ் (Luc Thevenoz) கூறியுள்ளார். இது குறித்து மேலும் அவர் கூறுகையில், வரி ஏய்ப்புக்கு எதிராகப் பல நாடுகள் கடுமையான நடவடிக்கைகளை எடுத்து வருகின்ற நிலையில் இனி வங்கிகள் ரகசியத்தைக் காப்பாற்றுவது இயலாத காரியம். தற்பொழுது காலச்சூழ்நிலை மாறிவிட்டதால் வங்கிகள் தாமாகவே தமது வாடிக்கையாளர் பெயர் மற்றும் வங்கியின் இருப்பு பற்றிய தகவல்களை அரசுக்கு வழங்கிவிட வேண்டும் என்று தெரிவித்துள்ளார். இருபது நாடுகள் ஒரு குழுவாக இணைந்து, வரி ஏய்ப்பைத் தடுக்க வங்கியிருப்பு குறித்து பரிமாறிக் கொள்ள கூட்டம் ஒன்றை நடத்தினர். இந்தக் கூட்டம் நடந்த மறுநாள் தெவனோஸ் இன…

  21. தற்போது சூடுபிடித்துள்ள இந்திய தேர்தல் நிலைகளின்படி தி மு க, அ தி மு க ஆதரவாளர்கள் பலர் தமது வேரூன்றிய கட்சி விசுவாசத்திற்கு எதிராக செயற்பட முடிவெடுத்துவிட்டனர் இதன் ஒரு கட்டமாக தி மு க ப்ரமுகரை அடித்தே கொன்றுவிட்டதாக செய்திகள் கூறுகின்றன. ஆகவே கருத்து கணிப்புகளிற்கு மக்கள் ஆப்பு வைக்க முடிவெடுத்துவிட்டனராம். தி மு க 40% ஆதரவிலிருந்து 20% ஆகவும் குறைய முடியுமாம் அதாவது ஒரு தொகுதியே கிடைக்காத நிலை???? அதிமுக க்கும் ....... நிலை இப்போது உள்ள கேள்வி தமிழ் நாட்டின் தலைவர் யார் ஆனால் நிலமைகள் மாறி வருவதாக செய்திகள் கூறுகின்றன. தி மு க வுக்கு இறங்கு முகமேதான் அதனால்தால் பட்டினி கிடந்து சாக துணிந்தான் கயவனான கருணானிதி ???????????????????

    • 8 replies
    • 7.1k views
  22. பங்களாதேஷில் ஷரியா சட்டத்தை கொண்டு வரவேண்டும் என வலியுறுத்தி இடம்பெற்ற போராட்டத்தில் இடம்பெற்ற மோதலில் இதுவரை 37 பேர் உயிரிழந்துள்ளனர். இது குறித்து மேலும் தெரியவருவது, பங்களாதேஷில் அவாமி லீக் கட்சியின் ஷேக் ஹசீனா தலைமையில் மதசார்பற்ற ஆட்சி நடைபெற்று வருகிறது. ஆனால், முஸ்லீம்கள் பெரும்பான்மையாக வாழும் இங்கு இஸ்லாமிய சட்டமான ஷரியா சட்டத்தை கொண்டு வரவேண்டும் என்று ஹிபாசத்-இ-இஸ்லாம் என்று புதிய அமைப்பு போராட்டம் நடத்தி வருகிறது. மதத்தை அவதிக்கும் நாத்திகர்களை தூக்கில் போட வேண்டும். அதற்கு வகை செய்யும் மத அவமதிப்பு சட்டம் கொண்டு வர வேண்டும் என வலியுறுத்தி ”டாக்கா முற்றுகை” என்ற போராட்டத்தில் அவர்கள் ஈடுபட்டுள்ளனர். தலைநகர் டாக்காவில் 5 லட்சம் ஆதரவாளர்கள் குவி…

  23. அக்னி நட்சத்திர வெயில் வடமாநிலங்களில் வாட்டி வதைத்து வருகிறது. தமிழ்நாட்டில் கடந்த சில நாட்களாக அக்னி வெயில் அனல் காற்றை கக்கி வருகிறது. தமிழகத்தின் பல மாவட்டங்களில் 108 டிகிரியை கடந்து வெயில் கொளுத்தியது. ஆனால் ஆந்திராவில் குறைந்த பட்சமாக 115 டிகிரி வெயில் அடிக்கிறது. கம்மம் மாவட்டத்தில் நேற்று முன்தினம் 122 டிகிரி வெயில் கொளுத்தியது. நேற்று 118 டிகிரி வெயில் பதிவானது. இதற்கு அடுத்தப்படியாக விசாகப்பட்டினத்தில் 116 டிகிரி வெயில் அடித்தது. மாநிலத்தின் பல மாவட்டங்களில் காலை முதலே அனல் காற்று வீசுகிறது. இரவு வரை வெப்பம் குறையவில்லை. வெயிலின் கொடூர தாக்குதலுக்கு 3 நாளில் 443 பேர் பலியானார்கள். நேற்று ஒரே நாளில் மட்டும் 544 பேர் சுருண்டு விழுந்து இறந்தனர். அதிகப…

  24. சீனா உய்குர் இனத்தவர்களை இனப்படுகொலை செய்கின்றது- தீர்மானம் நிறைவேற்றியது கனடா சீனா தனது நாடடின் உய்குர் சிறுபான்மை இனத்தவர்களை இனப்படுகொலை செய்கின்றது என தெரிவிக்கும் தீர்மானமொன்றை கனடாவின் நாடாளுமன்றம் நிறைவேற்றியுள்ளது. கனடாவின் கென்சவேர்ட்டிவ் கட்சி பொதுச்சபையில் கொண்டுவந்த தீர்மானத்திற்கு 266 நாடாளுமன்ற உறுப்பினர்கள் ஆதரவளித்துள்ளனர் எவரும் இதற்கு எதிர்ப்பு தெரிவிக்கவில்லை. சீனாவில் ஒரு மில்லியன் உய்குர் இனத்தவர்களும் டேர்கிக் முஸ்லீம்களும் முகாம்களில் அடைக்கப்பட்டுள்ளனர் என செய்தியாளர்களிடம் தெரிவித்துள்ள கென்சவேர்ட்டிவ் கட்சியின் தலைவர் எரின் ஓ டுல் அவர்களிடமிருந்தும் நேரில் பார்த்தவர்களிடமிர…

    • 2 replies
    • 626 views
  25. தமிழக அரசின் நீண்ட சட்டப் போராட்டத்திற்குப் பிறகு வழங்கப்பட்ட காவிரி நடுவர் மன்ற இறுதித் தீர்ப்பை அமல்படுத்துவதற்கான தற்காலிக கண்காணிப்புக் குழுவின் முதல் கூட்டம் எந்த வித முடிவும் எட்டப்படாமல் முடிந்தது. இதன் அடுத்த கூட்டம் வரும் ஜூன் 12ல் மீண்டும் நடைபெற உள்ளதாக மத்திய நீர்வளத்துறை செயலாளர் சர்க்கார் தெரிவித்துள்ளார். ஆண்டு தோறும் ஜூன் 12 ஆம் தேதி மேட்டூர் அணையில் இருந்து குறுவை சாகுபடிக்காக நீர் திறந்துவிட வேண்டும். அதற்கு இன்னும் 11 நாட்களே உள்ள நிலையில் இன்றைய கூட்டம் மிகுந்த முக்கியத்துவம் வாய்ந்ததாகக் கருதப்பட்டது. காவிரி நடுவர் மன்றத்தின் இறுதித் தீர்ப்பு, கடந்த பிப்ரவரி 19 ஆம் தேதி மத்திய அரசின் இதழில் வெளியிடப்பட்டது. இதனால் ஏற்கனவே இருந்த காவிரி நதிநீர் ஆணையம…

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Account

Navigation

Search

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.