உலக நடப்பு
உலகச் செய்திகள் | காலநிலை
உலக நடப்பு பகுதியில் உலகச் செய்திகள், காலநிலை செய்திகள் இணைக்கப்படலாம்.
முக்கியமான/அவசியமான தூரகிழக்காசிய, ஐரோப்பிய, அமெரிக்க, ஆபிரிக்க, அவுஸ்திரேலிய செய்திகள், உலகக் காலநிலை பற்றிய செய்திகள் மாத்திரம் இணைக்கப்படல் வேண்டும். இந்தியச் செய்திகளை புதிய பிரிவான அயலகச் செய்திகள் பகுதியில் இணைக்கலாம். நாணயமாற்று சம்பந்தமான செய்திகளை வாணிப உலகம் பகுதியில் இணைக்கலாம்.
26861 topics in this forum
-
ரஷ்ய நாட்டின் சைபீரியா பகுதியில் கடந்த வாரம் ஆரஞ்சு வண்ண பனிமழை பொழிந்தது. சில இடங்களில் மழை சிகப்பு நிறத்திலும், சில இடத்தில் மஞ்சள் நிறத்திலும் பனி மழை பொழிந்துள்ளது. இதற்கான காரணத்தை கண்டு பிடிக்க இயலவில்லை. பக்கத்தில் உள்ள கஸகிஸ்தான் வீசிய சூறாவளியுடன் பறந்த செம்மண் தூசி தான் காரணம் என்றும் , அவ்விடத்தில் ரஷ்யா முன்பு நடத்திய அணு சோதனை என்றும், சுற்று சூழல் மாசு என்றும்சொல்லப்படுகின்றன. உண்மையான காரணம் அந்த நாட்டு மக்களுக்கு தான் தெரியும். -வே..பிச்சுமணி
-
- 3 replies
- 1.2k views
-
-
22ஆவது பிரதமராக இம்ரான் பதவியேற்பது உறுதியாகியது!!! பாகிஸ்தானின் 22ஆவது பிரதமராக நாளை பதவியேற்கவுள்ள இம்ரான் கான் மீதான வாக்கெடுப்பில் 176 ஆதரவு வாக்குடன் வெற்றிப்பெற்றுள்ளார். பாகிஸ்தானில் 270 பாராளுமன்ற தொகுதிகள் மற்றும் பஞ்சாப், சிந்து, பலுசிஸ்தான், கைபர் பக்துன்வா ஆகிய மாகாண சட்ட சபைகளுக்கும் தேர்தல் நடந்தது. தேர்தல் முடிவில் இம்ரான் கானின் கட்சி 116 இடங்களிலும், ஆளும் கட்சியாக இருந்த நவாஸ் ஷெரீப்பின் கட்சி 64 இடங்களிலும், பாக்கிஸ்தான் மக்கள் கட்சி 43 இடங்களிலும் வெற்றி பெற்றன. ஆட்சி அமைக்க 137 தொகுதிகள் அவசியம் என்பதால் சிறிய மற்றும் சுயேட்சை கட்சிகளின் ஆதரவை இம்ரான் கான் நாடினார். கூட்டணி அமைக்கும் பண…
-
- 1 reply
- 616 views
-
-
பிரிட்டிஷ் அரசாங்கத்தின் ஆணைக்குஎதிராக தடை உத்தரவு பெற்ற இந்திய மருத்துவர்கள் ஆகஸ்ட் முதல் திகதிக்குப் பிறகு பிரிட்டனில் தங்க `விசா' இல்லாத ஐரோப்பியர் அல்லாத டாக்டர்களை வேலைக்கு எடுக்க வேண்டாம் என்று பிரிட்டிஷ் அரசின் சுகாதாரத்துறை பிறப்பித்த ஆணைக்கு தடை உத்தரவு பெற்றுவிட்டனர் அங்கு சென்றுள்ள இந்திய வம்சாவளி டாக்டர்கள். எத்தனை சோதனைகள் வந்தாலும் பிரிட்டனில் டாக்டராகப் பணிபுரிந்தே தீருவது என்ற முடிவோடு உள்ள டாக்டர்கள், அந் நாட்டு அரசு அடுத்தடுத்து ஏற்படுத்திவரும் சட்டத்தடைகளை மனம் தளராமல் உடைத்துக் கொண்டே வருகின்றனர். பிரிட்டனில் வேலைபார்த்தால் கௌரவம், பணம் அதிகம் கிடைக்கும் என்பதையெல்லாம்விட தங்களுடைய படிப்புக்கும் திறமைக்கும் அது பெருத்த அங்கீகாரம் …
-
- 0 replies
- 496 views
-
-
ஐ.நா. பாதுகாப்பு சபையின் நிரந்தர நாடுகளை ஆயுதக் கட்டுப்பாட்டுப் பேச்சுவார்த்தைக்குள் கொண்டுவர அமெரிக்கா முயற்சி புதியதாக பலதரப்பு ஆயுத கட்டுப்பாட்டு முயற்சிகளில் ஈடுபட அமெரிக்கா தயாராக உள்ளதாக அமெரிக்க ஜனாதிபதியின் தேசிய பாதுகாப்பு ஆலோசகர் ஜேக் சல்லிவன் தெரிவித்துள்ளார். ஐக்கிய நாடுகளின் பாதுகாப்பு சபையில் அமெரிக்கா, ரஷ்யா, சீனா, பிரித்தானியா மற்றும் பிரான்ஸ் ஆகிய 5 நாடுகளும் நிரந்தர உறுப்பினர்களாக உள்ளன. இந்த நாடுகளுக்கு இடையே அமெரிக்கா-ரஷ்யா பாலிஸ்டிக் ஏவுகணை அறிவிப்பு ஒப்பந்தம் உள்ளிட்ட பல்வேறு ஒப்பந்தங்கள் உள்ளன. இந்நிலையில் இந்த அறிவிப்பை வெளியிட்டுள்ள ஜேக் சல்லிவன், இந்த விவகாரத்தில் அதிக முயற்சிகள் செய்யப்பட வேண்டும் எனவு…
-
- 1 reply
- 358 views
-
-
அமெரிக்காவும் வட கொரியாவும் முட்டிக்கிட்டு இருக்கிற விஷயம் எல்லாருக்கும் தெரியும். அது பத்தி ஒரு சின்ன முன்னோட்டம் பாப்போம். அமெரிக்க நிறுவனமான சோனி, ”தி இண்டர்வியூ” அப்படீங்கிற திரைப்படத்தை வெளியிடக் கூடாது என்று தடை வித்திச்சுது வட கொரியா. காரணம், வட கொரிய அதிபர் கிம் ஜாங் உன்னை இண்டர்வியூ எடுக்கிற மாதிரி போய் கொலை பன்றது தான் அந்தப் படத்தோட கதை. இந்த படத்தை வெளியாகிறதுக்கு கொஞ்சம் முன்னாடி, சோனியோட கம்பியூடர்ஸ்லாம் ஹேக் செய்யப்பட்டுச்சு. இதுக்கு காரணம், வட கொரியா தான்னு அமெரிக்கா குற்றம் சொல்லுச்சு. இத வட கொரியா மறுத்ததோட அமெரிக்காவோட ரெட்டை கோபுரம் உள்ளிட்ட கட்டிடத்தை எல்லாம் தரைமட்டாமாக்குவோம் அப்படின்னு மிரட்டலும் விட்டுச்சு. ஆனா அதை எல்லாம் கண்டுகாம…
-
- 1 reply
- 617 views
-
-
நியூயார்க்: உலக அழகிப் போட்டியில் கொலம்பியா அழகி பௌலீனா வேகா பட்டம் வென்றார். 2015–ம் ஆண்டுக்கான மிஸ் யுனிவர்ஸ் (பிரபஞ்ச அழகி) போட்டி அமெரிக்காவில் உள்ள மியாமி நகரில் நடந்தது. அதில் இந்தியா, அமெரிக்கா, கொலம்பியா, உக்ரைன் உள்ளிட்ட 88 நாடுகளை சேர்ந்த அழகிகள் கலந்து கொண்டனர். உடை அலங்காரம், அறிவுத்திறன், உடல் அழகு உள்ளிட்ட பல்வேறு பிரிவு களில் போட்டி நடந்தது. நேற்று இறுதிப் போட்டி நடைபெற்றது. அதில் கொலம்பியாவை சேர்ந்த பவுலினா வேகா மிஸ் யுனிவர்ஸ் பட்டம் வென்றார். அவருக்கு கடந்த ஆண்டு பட்டம் வென்ற வெனிசுலா அழகி காபிரியலா இஸ்லர் கிரீடம் அணிவித்தார். 22 வயதாகும் வேகா தொழில் நிர்வாகம் படித்து வருகிறார். தான் பங்கேற்ற முதல் சர்வதேச அழகிப் போட்டி இதுதான் என்றும், இதில் பட்டம் …
-
- 2 replies
- 314 views
-
-
பிரித்தானியாவை சேர்ந்த தந்தை ஒருவர் தன் மகளை ஆபாசமாக படம்பிடித்த நபரை கொலை செய்துள்ள சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. பிரித்தானியாவை சேர்ந்த Devinder Kainth(Age 40) என்ற நபர் ஸ்பெயின் நாட்டிற்கு தனது குடும்பத்துடன் சுற்றுலா சென்றுள்ளார். இவர் அங்குள்ள ஹொட்டல் ஒன்றில் உணவருந்தி கொண்டு இருந்த போது, இவருடைய மகளை நபர் ஒருவர் ஐபேட்டில்(IPad) படம் பிடிப்பதை பார்த்து கோபமடைந்துள்ளார். அப்போது அந்நபரிடமிருந்து ஐபேடை பறித்த Kainth, அதில் தனது மகளை பல கோணங்களில் படம் பிடித்திருப்பதை பார்த்ததும், ஐபேடை கீழே போட்டு உடைத்துள்ளார். இதனால் இருவருக்கும் எழுந்த வாக்குவாதத்தில், அந்நபரின் முகத்தில் Kainth பலமாக அடித்து தாக்கிவிட்டு ஹொட்டலை விட்டு வெளியேறியுள்ளார். இதனையடுத்து மயங்க…
-
- 2 replies
- 874 views
-
-
அமெரிக்கா, ஐரோப்பிய நாடுகளில் கடந்த ஆண்டே விற்பனையை ஆரம்பித்த இ-சிகரெட், தற்போது இந்தியாவில் அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது. குர்கானைச் சேர்ந்த இணையத் தள நிறுவனமான வின்ட்பைட் டாட்டின் அதனை சீனாவிலிருந்து இறக்குமதி செய்து 'ஜாய் 510" என்ற பெயரில் விற்பனைக்குக் கொண்டு வந்துள்ளது. ஒருசில தடவைகள் பயன்படுத்தி தூக்கி எறியக் கூடிய இதன் விலை 300 இந்திய ரூபா. இதிலேயே நீண்ட காலம் 'ரீ-சாhஜ்'; செய்து பயன்படுத்தக் கூடியதும் உள்ளது. அதன் விலை ரூபா 1,650. இதன் பாரிய நன்மை என்ன தெரியுமா? புற்றுநோய் பாதிப்பு இதனால் இல்லை என்பதுதான். இந்தியாவில் தற்போது இ-சிகரெட் விற்பனையாகிறது. http://www.virakesari.lk/news/head_view.asp?key_c=32557
-
- 5 replies
- 675 views
-
-
ஜூலை 18,2011,15:10 IST கடந்த பத்தாண்டுகளில், இந்தியாவில் 15.5 லட்சம் கோடி ரூபாய் அளவுக்கு ஊழல் நடந்துள்ளது என, ஆய்வில் தெரிவிக்கப்பட்டுள்ளது. புனேயைச் சேர்ந்த "இந்தியா போரன்சிக்'என்ற நிறுவனம், இந்தியாவில் நடந்த ஊழல் அளவு குறித்த ஆய்வை நடத்தியது. மொத்த உள்நாட்டு உற்பத்தியை அடிப்படையாக வைத்து மதிப்பிடப்பட்ட ஆய்வில், இந்தியாவில் கடந்த பத்தாண்டுகளில் மட்டும், 15.5 லட்சம் கோடி ரூபாய் அளவுக்கு ஊழல் நடந்துள்ளதாக மதிப்பிடப்பட்டுள்ளது. இவற்றில் பெரும்பாலானவை, இந்தியாவுக்கு வெளியில் நடந்த சட்ட விரோத நிதி பரிமாற்றங்கள் தொடர்பானவை. இந்த ஆய்வின் அடிப்படையில், ஊழல் என்ற பெயரில், தனிப்பட்ட நபர் ஒவ்வொருவரும், 2,000 ரூபாய் வரை செலவிடுவதாக தெரியவந்துள்ளது. ஆனால், கடந்த 2000…
-
- 0 replies
- 731 views
-
-
ஷிரோமணி குருத்வாரா பர்பந்தக் குழுவால் வெளியிடப்பட்டுள்ள நானாக்சகி நாட்காட்டியில், இந்திரா காந்தியை கொன்ற கொலையாளிகள் தியாகிகள் என்று குறிப்பிடப்பட்டுள்ளது புதிய சர்ச்சையைக் கிளப்பியுள்ளது. பஞ்சாபில் வெளியாகியுள்ள இந்த நாட்காட்டிக்கு பாஜகவிடம், காங்கிரஸ் கட்சி விளக்கம் கோரியுள்ளது. தியாகிகள் தினத்தை முன்னிட்டு வெளியிடப்பட்டுள்ள அந்த நாட்காட்டியில், முன்னாள் பிரதமர் இந்திரா காந்தியை சுட்டுக் கொன்ற கொலையாளிகளும், ராணுவ முன்னாள் தளபதி வைத்யாவைக் கொன்றவர்களும் தியாகிகளாகக் குறிப்பிடப்பட்டுள்ளது. இந்த செயலுக்கு காங்கிரஸ் கட்சி சார்பில் கடுமையான கண்டனமும் தெரிவிக்கப்பட்டுள்ளது. http://seithy.com/breifNews.php?newsID=128423&category=IndianNews&language=tamil
-
- 3 replies
- 490 views
-
-
விபத்துக்குள்ளான ஜேர்மன்விங்ஸ் விமானத்தினுள் பதிவு செய்யப்பட்ட காணொளி? அலறும் பயணிகள் பிரான்ஸ் நாட்டு அல்ப்ஸ் மலையில் மோதி அண்மையில் விபத்துக்குள்ளான ஜேர்மன்விங்ஸ் விமானத்திற்குள்ளிருந்து பதிவு செய்யப்பட்டதாகக் கூறப்படும் காணொளியொன்று கிடைக்கப் பெற்றுள்ளதாகத் தெரிவிக்கப்படுகிறது. கையடக்கத் தொலைபேசி ஊடாக பதிவு செய்யப்பட்டதாகக் கூறப்படும் இந்தக் காணொளி தம்மிடம் உள்ளதாக பிரான்ஸ் நாட்டு ஊடகமான பெரிஸ் மட்ச் மற்றும் ஜெர்மன் ஊடகமான பெல்ட் என்பவைகளே இந்த அறிவிப்பை வெளியிட்டுள்ளன. குறித்த காணொளியை தாம் பார்வையிட்டதாகவும் விபத்து நடந்த இடத்தில் இருந்த ஒருவரின் ஊடாக இதனை பெற்றுக் கொண்டதாக பெரிஸ் மெட்ச் ஊடகம்ட தெரிவித்துள்ளது. விமானத்தில் பயணித்தோர் பயத்தில் அலறுவதும், அவர்க…
-
- 0 replies
- 322 views
-
-
உலக ஒற்றுமையின் சின்னம் ஐ.நா தினம் இன்றாகும். ஐ.நா தினம் ஆண்டுதோறும் அக்டோபர் 24ல் கொண்டாடப்படுகிறது. ஐ.நா அமைப்பின் நோக்கம், சாதனை, எதிர்காலத் திட்டம் போன்றவற்றை மக்களிடம் சேர்ப்பது இத்திட்டத்தின் நோக்கம். முதல் உலகப் போர் நடந்த போது அது போல் மீண்டும் ஒரு பயங்கரம் நடக்கக் கூடாது என உலக நாடுகள் எண்ணின. அதற்காக உலக நாடுகளின் ஒருங்கிணைந்த அமைப்பை உருவாக்க முயற்சித்தனர். அது தோல்வியில் முடிந்தது. அதன் பின் இரண்டாம் உலகப் போர் ஏற்பட்டு உலகில் பேரழிவை ஏற்படுத்தியது. இனி இன்னொரு போர் உலக நாடுகளிடையே ஏற்பட்டுவிடக் கூடாது. உலகில் அமைதியும் சமநிலையும் ஏற்பட வேண்டும் என்பதற்காக 1945 ஏப்ரல் 25 மற்றும் ஜூன் 26ல் சான்பிரான்சிஸ்கோ நகரில் உலக நாடுகளின் கூட்டம் நடந்தது. அ…
-
- 1 reply
- 1k views
-
-
இந்திய அரசு எவ்வளவு சகிப்புத்தன்மையற்று இருக்கிறது என்பதை வெளிப்படுத்தியிருப்பதோடு, வரவர நாம் எவ்வளவு மோசமாகப் போய்க்கொண்டிருக்கிறோம் என்பதையும் நமக்கே சுட்டிக்காட்டியிருக்கிறது கிறிஸ்டினா மேத்தா விவகாரம். அமெரிக்கக் குடியுரிமை பெற்ற இந்தியரான கிறிஸ்டினா மேத்தா, ‘ஆம்னஸ்டி இண்டர்நேஷனல்’ அமைப்புக்கான ஆய்வில் ஈடுபட்டுவந்தவர். காஷ்மீரில் மனித உரிமைகள் எந்த அளவுக்கு மதிக்கப்படுகின்றன, அங்குள்ள குடிமைச் சமூகம் என்னென்ன பிரச்சினைகளையெல்லாம் எதிர்கொள்ள வேண்டியிருக்கிறது என்ற ஆய்வில் இறங்கியதன் தொடர்ச்சியாக, அவசர அவசரமாக, வலுக்கட்டாயமாக அவரை நாட்டைவிட்டு வெளியேற்றியிருக்கிறது இந்திய அரசு. கிறிஸ்டினா மேத்தா ஏதோ வெளிநாட்டைச் சேர்ந்தவர் என்பதாலோ, காஷ்மீர் விவகாரம் சர்வதேசக் கவனம் ப…
-
- 0 replies
- 208 views
-
-
இம்பால்: 200 ஆண்டுகளுக்கு பிறகு மணிப்பூர் மாநிலத்தில் வரலாறு காணாத அளவிற்கு மழை பெய்துள்ளது. கடுமையாக பாதிக்கப்பட்டுள்ள அம்மாநிலத்துக்கு 8.5 கோடி ரூபாய் நிதியுதவியை மத்திய அரசு வழங்கியுள்ளது. மணிப்பூர் மாநிலத்தில் கடந்த சில நாட்களாக பலத்த மழை பெய்து வருகிறது. தொடர் மழை காரணமாக மணிப்பூர் மாநிலமே வெள்ளத்தால் பாதிக்கப்பட்டுள்ளது. பல இடங்களில் வீடுகள் மழை நீரில் மிதக்கின்றன. பயிர்கள் தண்ணீரில் மூழ்கி கிடக்கின்றன. பல இடங்களில் சாலைகள் தூண்டிக்கப்பட்டுள்ளன. நிலச்சரிவு ஏற்பட்டுள்ளன. 60 சதவீதம் மக்கள் மழையால் பாதிக்கப்பட்டுள்ளனர். மழை வெள்ளத்தால் பாதிக்கப்பட்டுள்ள அம்மாநிலத்திற்கு மத்திய அரசு முதல் கட்டமாக 8.5 கோடி ரூபாய் நிதியுதவி அளித்துள்ளது. சுமார் 200 ஆண்டுகளுக்கு…
-
- 0 replies
- 651 views
-
-
16ம் தேதி சுனாமி வருமாம்-சொல்கிறார் 'நிபுணர்'! மார்த்தாண்டம்: ஆசிய கண்டம் மற்றும் பசிபிக் பிராந்திய நாடுகளில் வருகிற 16ம் தேதி சுனாமி அலைகள் தாக்கலாம், பூகம்பம் ஏற்படலாம் என கேரளாவைச் சேர்ந்த 'நிபுணர்' பாபுகலாயில் என்பவர் தெரிவித்துள்ளார். திருவனந்தபுரத்தை தலைமையிடமாக கொண்டு பி.கே. ஆய்வு கழகம் மற்றும் ஈ.எஸ்.பி என்ற அமைப்பின் இயக்குனர் பாபுகலாயில் இது தொடர்பாக அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளார். அதில், கடந்த 2004 டிசம்பர் 26ல் உலகத்தையே உலுக்கிய சுனாமியின் வடு இன்னும் மறையவில்லை. ஆயிரக்கனக்கான உயிர்களை பலி வாங்கி மக்களின் பொருளாதாரத்தை தகர்த்தெறிந்த இந்த கோர சம்பவம் நடந்து 3 ஆண்டுகள் முடிவடைவதற்குள் மீண்டும் ஆசியா மற்றும் பசிபிக் கண்டங்களில் பூகம்பம் மற்றும்…
-
- 2 replies
- 1.6k views
-
-
பட மூலாதாரம்,GETTY IMAGES கட்டுரை தகவல் எழுதியவர், ஜெஸ் பார்க்கர் மற்றும் ஜேம்ஸ் வாட்டர்ஹவுஸ் பதவி, பிபிசி செய்தியாளர்கள், பெர்லின், கீவ் நகரங்களில் இருந்து 3 மணி நேரங்களுக்கு முன்னர் டொனால்ட் டிரம்ப் மீண்டும் அமெரிக்க அதிபரானால் அது ஐரோப்பாவில் என்ன விளைவை ஏற்படுத்தும்? அமெரிக்காவில் அதிகார மாற்றம் ஏற்பட்டால் இந்த சவாலை எதிர்கொள்ள ஐரோப்பிய தலைவர்கள் மற்றும் வியூக வகுப்பாளர்கள் ஏற்கனவே தயாராகி வருகின்றனர். டொனால்ட் டிரம்ப் ஓஹியோவைச் சேர்ந்த செனட்டர் ஜே.டி.வான்ஸை துணை அதிபர் வேட்பாளராக தேர்ந்தெடுத்தபோது, அதிபரான பிறகு டிரம்பின் நிலைப்பாடு என்னவாக இருக்கும் என்பது குறித்த தெளிவான செய்தி ஐரோப்பாவுக…
-
- 0 replies
- 311 views
- 1 follower
-
-
பட மூலாதாரம்,GETTY IMAGES 4 மணி நேரங்களுக்கு முன்னர் பிரதமர் நரேந்திர மோதி ஆகஸ்ட் மாதம் யுக்ரேனுக்கு மேற்கொள்ளும் பயணத்தின் போது ரஷ்யா மற்றும் யுக்ரேன் இடையே மத்தியஸ்தம் செய்ய வாய்ப்பிருப்பதாக ரஷ்ய ஊடகங்கள் செய்தி வெளியிட்டு வருகின்றன. இந்திய நாடாளுமன்றத்துடன் தொடர்புடைய ஒரு வட்டாரம் இந்தத் தகவலைத் தெரிவித்துள்ளதாக ரஷ்ய செய்தி நிறுவனமான டாஸ் தெரிவித்துள்ளது. ஆகஸ்ட் மாதம் பிரதமர் மோதி யுக்ரேன் செல்லக்கூடும் என்று தூதரக வட்டாரங்களை குறிப்பிட்டு இந்திய ஊடகங்களில் வெளியான செய்தியை மேற்கோள் காட்டி, ரஷ்ய அரசு ஊடகமான ஆர்டி (RT) செய்தி வெளியிட்டுள்ளது. “ யுக்ரேன் பிரச்னையில் இந்தியா மத்தியஸ்தம் செய்ய வாய்ப்புள்ளது. பிரதமர் மோதியின் ய…
-
- 1 reply
- 314 views
- 1 follower
-
-
கிழக்கு மற்றும் மத்திய ஐரோப்பிய நாடுகளில் கடந்த மூன்று தினங்களாக இடம்பெற்ற கடும் பனிப்பொழிவு காரணமாக 60பேர் உயிரிழந்துள்ளனர். உக்ரையன், போலந்து, ரோமானியா, பல்கேரியா ஆகிய நாடுகள் இந்த பனிப்பொழிவினால் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளன. 600பேர் மருத்து சிகிச்சைக்கு உட்படுத்தப்பட்டுள்ளனர். 24ஆயிரம் பேர் பனிப்பொழிவினால் பாதிக்கப்பட்டு அகதிகளாக உள்ளனர் என்றும், 1590பேர் இருப்பிடங்களை முற்றாக இழந்துள்ளனர் என்றும் உக்ரையன் அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். 150 நிலையங்களில் இவர்கள் தங்க வைக்கப்பட்டுள்ளதாக அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். போலந்து நாட்டில் இறந்தவர்களின் எண்ணிக்கை 21ஆக உயர்ந்துள்ளதாக அந்நாட்டு அதிகாரிகள் இன்று தெரிவித்துள்ளனர். thanks /www.thinakkathir.com
-
- 2 replies
- 733 views
-
-
தீராத நோய் தாக்கியவர்கள் தங்கள் உயிரை சட்டப்பூர்வமாக மாய்த்துக்கொள்வதற்கு அனுமதி அளிக்கும் சட்ட மசோதா, அமெரிக்காவின் கலிபோர்னியா மாகாணத்தில் தாக்கல் செய்யப்பட்டிருந்தது. இந்த மசோதாவின் மீது உணர்ச்சிப்பூர்வமான விவாதம் நடந்தது. அதன் முடிவில் மசோதாவுக்கு ஆதரவாக 23 பேரும் எதிராக 14 பேரும் ஓட்டு போட்டனர். இதையடுத்து மசோதா நிறைவேறியது. இதன்மூலம் குணப்படுத்த முடியாத நோயாளிகள், தங்கள் வாழ்வை முடித்துக்கொள்ள விரும்பினால் அவர்களுக்கு அதற்கான மருந்தினை மருத்துவர்கள் எழுதித்தரலாம். ஆனால் இந்த சட்டத்துக்கு எதிரானவர்கள், இதன் மூலம் பலர் உரிய காலத்துக்கு முன்பாகவே தற்கொலை செய்துகொள்வர் என கருத்து தெரிவித்துள்ளனர். அமெரிக்காவில் ஆரிகான், வாஷிங்டன், வெர்மாண்ட், மான்டனா மாகாணங்களில் ஏற…
-
- 2 replies
- 483 views
-
-
வட மற்றும் தென் கொரியாவின் எல்லையில் இருக்கும் ராணுவம் விலக்கப்பட்ட பகுதியில் அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப் வடகொரிய அதிபர் கிம்மை சந்தித்துள்ளார். ராணுவம் விலக்கப்பட்ட இந்த பகுதியில் நடைபெறும் சந்திப்புக்கு, ட்விட்டரில் திடீரென கிம்மை சந்திக்க டிரம்ப் அழைப்பு விடுத்தமையே காரணம். "அமைதிக்காக அவர்கள் இருவரும் கைக்குலுக்குவர்," என தென் கொரிய அதிபர் தெரிவித்துள்ளார். இதுகுறித்து வடகொரியா எந்த ஒரு கருத்தும் முன்னதாக தெரிவிக்கவில்லை. வடகொரியா அணு ஆயுத பயன்பாட்டை கைவிடுத்தல் குறித்தான நின்று போன பேச்சுவார்த்தை இந்த சந்திப்பின் மூலமாக மீண்டும் தொடரும் என நம்பப்படுகிறது. ஒரே வருடத்தில் டிரம்பும் கிம்மும் மூன்றாவது முறையாக சந்தித்துக் கொள்கின்றனர். ட்விட…
-
- 0 replies
- 444 views
-
-
அமெரிக்கா, ஐரோப்பிய கூட்டமைப்பு நாடுகள் உட்பட பல்வேறு நாடுகளின் எதிர்ப்புகளுக்கு மத்தியில் இன்று ஈரானில் நாடாளுமன்ற தேர்தல் நடைபெறுகிறது. ஈரானின் சட்டம் இயற்றும் அமைப்பான மஜிலிஸ் என அழைகப்படும் நாடாளுமன்றத்திற்கு 290 உறுப்பினர்கள் தெரிவு செய்யப்படவுள்ளனர், மொத்தம் 3,400 வேட்பாளர்கள் போட்டியிடுகின்றனர். கடந்த 2009ம் ஆண்டு நடந்த நாடாளுமன்ற தேர்தலில் பல்வேறு முறைகேடு நடந்ததாக புகார் எழுந்தது. இதனால் அந்நாட்டின் சில சீர்திருத்த மற்றும் பசுமை இயக்க அமைப்புகள் தேர்தலை புறக்கணித்துள்ளனர். இதனால் ஜனாதிபதி நிஜாத்துக்கு ஆதரவு அதிகரிக்கும் என செய்திகள் வெளியாகி வருகின்றன. எனினும் அந்நாட்டு தலைமை மதகுருவான அயோத்துல்லா அலி கோமெனி கூறுகையில், வாக்களிப்பதன் மூலம் நேர்மையான தலைவர…
-
- 0 replies
- 403 views
-
-
27 SEP, 2024 | 03:08 PM சீனாவின் அணுசக்தியில் இயங்கும் புதிய தாக்குதல் நீர்மூழ்கி அந்த நாட்டின் துறைமுகத்தில் தரித்து நின்றவேளை கடலில் மூழ்கியது என அமெரிக்க அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். மே ஜூன் மாதத்திற்குள் இந்த சம்பவம் இடம்பெற்றது என தெரிவித்துள்ள அமெரிக்க இராணுவ அதிகாரியொருவர் துறைமுகத்திலேயே இந்த சம்பவம் இடம்பெற்றது என தெரிவித்துள்ளார். புதிய அணுசக்தி தாக்குதல் எதன் காரணமாக மூழ்கியது என்பது தெரியவில்லை. மூழ்கிய வேளை அதில் அணுஎரிபொருள் காணப்பட்டதா என்பதும் தெரியவில்லை என அமெரிக்க அதிகாரி தெரிவித்துள்ளார். தனது நீர்மூழ்கி மூழ்கியதை சீன கடற்படை மறைக்க முயன்றுள்ளமை ஆச்சரியமளிக்கவில்லை என தெரிவித்துள்ள அமெரிக்க அதிகா…
-
- 2 replies
- 361 views
- 1 follower
-
-
நிழலுலக தாதா 'சோட்டா ராஜன்' பாலியில் கைது சோட்டா ராஜன். | கோப்புப் படம். இந்தியாவில் பல கொலை வழக்குகளில் தேடப்பட்டு வரும் நிழலுலக தாதா சோட்டா ராஜன் இந்தோனேசியாவின் பாலியில் கைது செய்யப்பட்டார். ஆஸ்திரேலிய போலீஸ் அளித்த துப்புத் தகவலின் அடிப்படையில், இந்தோனேசிய அதிகாரிகள் சோட்டா ராஜன் என்று அழைக்கப்படும் ராஜேந்திர சதாசிவ் நிகல்ஜியைக் கைது செய்தனர். இத்தகவலை மத்திய உள்துறை அமைச்சகம் உறுதி செய்துள்ளது. பல்வேறு கொலை வழக்குகள் தொடர்பாக தேடப்பட்டு வரும் குற்றவாளியான சோட்டா ராஜன் கடந்த 20 ஆண்டுகளாக தலைமறைவாக இருந்தது குறிப்பிடத்தக்கது. மும்பை குண்டுவெடிப்பு, மற்றும் பல கடத்தல் கொலை வழக்குகளில் இவர் தேடப்பட்டு வந்தார். இதனையடுத்து, இந்தியா கோரிக்கை வைத்தால் சோட்டா ராஜன் இந…
-
- 19 replies
- 3.8k views
-
-
சென்னை: முதல்வர் ஜெயலலிதா தலைமையில் இன்று கூடிய அமைச்சரவைக் கூட்டத்தில் கூடங்குளம் அணு மின் நிலையத்தை உடனடியாக செயல்படுத்த வேண்டும் என்று தீர்மானம் நிறைவேற்றப்பட்டது. சங்கரன்கோவில் இடைத்தேர்தல் பணியில் ஈடுபட்டிருந்த 32 அமைச்சர்களும் தேர்தலை முடிந்ததையடுத்து தங்கள் வழக்கமான பணிகளுக்கு திரும்பியுள்ளனர். இந்த நிலையில் இன்று பிற்பகல் அமைச்சரவைக் கூட்டம் கூடியது. இதில் கூடங்குளம் அணு மின் நிலையம் குறித்து முக்கியமாக விவாதிக்கப்பட்டது. இந்த கூட்டத்தில், கூடங்குளம் அணு மின் நிலையத்தால் உயிர்களுக்கும், விவசாயத்திற்கும், மீன்பிடி தொழிலுக்கும் எந்தவித பாதிப்பும் இல்லை என்று நிபுணர் குழு அறிக்கை அளித்துள்ளதால், கூடங்குளம் மின் நிலையத்தை உடனடியாக செயல்படுத்த மத்…
-
- 1 reply
- 885 views
-
-
பிரதமர் மோடிக்கு விருந்தளித்தார் இங்கிலாந்து ராணி எலிசபெத்! லண்டன்: இங்கிலாந்து சென்றுள்ள பிரதமர் நரேந்திர மோடிக்கு அந்நாட்டு ராணி எலிசபெத் மதிய விருந்து அளித்தார். பிரதமர் நரேந்திர மோடி 3 நாள் அரசு பயணமாக நேற்று முன்தினம் இரவு இங்கிலாந்துக்கு புறப்பட்டுச் சென்றார். நேற்று மதியம் லண்டன் சென்றடைந்த அவருக்கு, விமான நிலையத்தில் இந்திய வம்சாவளியினர் சிறப்பான வரவேற்பு அளித்தனர். இதையடுத்து, லண்டன் டவுனிங் தெருவில் உள்ள இங்கிலாந்து பிரதமர் டேவிட் கேமரூன் இல்லத்துக்கு பிரதமர் மோடி சென்றார். அப்போது பிரதமர் மோடிக்கு ராணுவ வரவேற்பு அளிக்கப்பட்டது. பின்னர், இருநாட்டு பிரதமர் மற்றும் அதிகாரிகள் பேச்சு வார்த்தை நடத்தினர். அப்போது, இருதரப்பு ஒத்துழைப்புகள்…
-
- 1 reply
- 624 views
-